|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 April, 2012

இந்திய சட்டமைப்புகளுடன் இத்தாலி விளையாட வேண்டாம் !


கேரளா அருகே 2 மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு கோடி நிவாரணமாக கொடுத்து சட்டத்தை வளைக்க இத்தாலி நாட்டினர் பார்க்கின்றனர். இது பெரும் கண்டனத்திற்குரியது, இந்திய அரசியல் சட்டமைப்புடன் விளையாட வேண்டாம் என இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியுள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொல்லம் அருகே கடல் பகுதியில் 2 மீனவர்களை இத்தாலி கப்பலில் வந்த படையினர் சுட்டு கொன்றனர். கடற்கொள்ளையர்கள் என நினைத்து சுட்டதாக கூறினர். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து இரு இத்தாலியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தாலியர்களை மீட்க அந்நாட்டு அரசு அதிகாரிகள் இந்தியா வந்து கடும் முயற்சி மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக பலியான மீனவர் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி வழங்குவதாக பேரம் பேசி முடிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 30 லட்சம் வரை வழங்கப்பட்டு விட்டது. இதனை வைத்து கோர்ட்டிற்கு வெளியே சமரசம் மூலம் நாங்கள் பேசி முடித்து கொள்கிறோம். என மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

கப்பல் மற்றும் 2 இத்தாலியர்களை விடுவிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தங்களுக்கு மன வேதனையை தருவதாகவும், இது அனுமதிக்க முடியாது என்றும், இது போன்ற புதிய ஒரு நடைமுறை நிறைவேற்றுவது தவறானது. இந்திய சட்டமைப்புகளுடன் இத்தாலி விளையாட வேண்டாம் என்றும் கூறினர். கேரள அரசு எப்படி இதனை ஏற்றுக்கொண்டது என்றும் கேள்வி எழுப்பினர். இந்த மனு மீதான உத்தரவு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் இத்தாலியினர் விடுதலைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது

இதே நாள்...


  • ஜெர்மனி தந்தையர் தினம்
  • வியட்நாம் விடுதலை தினம்(1975)
  • இந்திய திரைப்படத் துறையின் முன்னோடியான தாதாசாஹிப் பால்கே பிறந்த தினம்(1870)
  • திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1982)
  • ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்தது(1999)

உழைக்கும் மக்களே....



மனித குலம் வாழ உழைப்பும், உழைப்பினால் உற்பத்தியும் தேவையாகிறது. உழைப்பவர்களால் தான் உணவுப் பொருட்கள் உயிரினம் வாழ உதவுகிறது. தொழிலாளர்களின் உழைப்பால் தேவைப்படும் பண்டங்கள் சரக்குகள் உற்பத்தியாகின்றன. இவற்றைக் கொண்டே மனிதகுலம் வாழ்ந்து, முன்னேறிவருகிறது. மனிதகுலத்தையே வாழ்வித்தும், வளர்த்தும் வரும் உற்பத்தியாளர்களான உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பு, உலகம் முழுவதிலும் சுரண்டப்படுகிறது. உரிமைகள் மறுக்கப்படுகிறது.மனித குலத்தையே வாழ்வித்துவரும் தொழிலாளர்கள், வாழ்வாதாரத்துக்காகவே போராடுகிறார்கள் உரிமைகள் மறுக்கப்படுவதால், போராடுவதற்காகவே வாழ்ந்து வருகிறார்கள்.
உரிமைப் போராட்டத்தின் முதல் பெரும் எழுச்சியாக அமெரிக்கக்கண்டத்தில், சிகாகோவில் 1886-ம் ஆண்டு மே முதல் நாளன்று திரண்டு உரிமைக் குரல் எழுப்பிய நாளாகும். தொழிலாளர்கள் காலை முதல் நள்ளிரவு வரை கால வரம்பின்றி உழைக்க அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலம் அது.


- எனவே எட்டு மணிநேர வேலை
- இழந்த சக்தியை மீட்டுப்பெற எட்டு மணிநேர ஓய்வு
- சமுதாயத்திதோடு வாழ எட்டு மணிநேரம்
- என்ற அடிப்படை கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது.


அது ராணுவமும், காவல்துறையும் கட்டவிழ்த்து விட்டு துப்பாக்கிப் பிரயோகத்தால் பலரது உயிரைப் பறித்தது. ரத்தக்காடாயிற்று, மைதானம். தலைமை தாங்கியோர் கைது செய்யப்பட்டு, பொய்க் குற்றச்சாட்டுக்களால் ஜோடிக்கப்பட்ட வழக்கில் - இறுதியில் தூக்கிலிடப்பட்டனர். இது நிகழ்ந்தது 1886-ல், 1890-ல் பாரிஸ் மாநகரில் திரண்ட உழைப்பாளர் மாநாட்டில், காரல் மார்க்சும், ஏங்கல்சும், இனி ஆண்டுதோறும் மே முதல் நாளை, உலகத் தொழிலாளர்கள், உலகத் தொழிலாளர்களின் உரிமை போர் முழக்க நாளாகக் கடைப்பிடிக்க அறைகூவல் விட்டனர்.இப்போது உலகம் முழுவதிலும் மே தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் எட்டு மணி நேர வேலை என்பது சட்டமாக்கப்பட்டு, நடைமுறைக்கும் வந்துள்ளது.தொழிலாளர் எழுப்பி, ரத்தம் சிந்திய முதல் கோரிக்கை வென்று தொடர்ந்து முன்னேறி வருகிறது.இதைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் பல உரிமைப் போராட்டங்களை நடத்தி, பல அரசுகளிடம் பல உரிமைகளைப் பெற்றுள்ளனர்.
சட்டம் இருந்தாலும் அது மீறப்படுவது நடக்கிறது.


தொழிலாளர்கள், சங்கம் அமைத்துப் போராடும் உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது.
தொழிலாளி வர்க்கம் ஊதிய உயர்வு பசஞ்ப்படி, போனஸ், என சில உரிமைகளைப் பெற்று இருந்தாலும், விலையேற்றம், பணி நீக்கம், ஆலை மூடல் என்பதோடு, அவர்கள் எந்தத்துறையில் எவ்வளவு பாதுகாப்புடன் பணிபுரிந்தாலும், அனைவருமே சுரண்டப்படுவதிலிருந்து விடுதலை பெறவே இல்லை.
தன்னையும் விடுவித்துக் கொண்டு மனித குலத்தையும் விடுவிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உலகத் தொழிலாளி வர்க்கம் நிறைவேற்ற, தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
முதலாளித்துவம் அசுர வளர்ச்சியைக் கண்டதால், பலத்தையும் பெற்று, உலகத்தையே ஒரு சந்தையாக ஆக்கி, தன் ஆதிக்கத்திற்குள் பிடித்து வைப்பதில் முன்னேறியிருப்பதோடு, உச்ச வரம்பே இல்லாத லாப வெறிகாரணமாக உலக முதலாளித்துவம் இயற்கைச் செல்வங்களைச் சிதைத்து சீரழித்து வருகிறது. இதனால் பூமண்டலமே வெப்பமனடந்து வெடிப்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.
லாபப் பேராசைக்கு ஒரு கடிவாளம் போடும் மக்கள் நல அரசுகள் மலர வேண்டும். இயற்கைச் சூழல் காக்கப்பட வேண்டும் இயற்கை அழிவைத் தடுப்பதன் மூலமே பூமண்டல அழிவையும் தடுக்க இயலும் ஆதலால், சமதர்ம சமூதாயம் மலர, தொழிலாளவர்க்கம் அரசியல் தலைமை ஏற்க முன்னேற வேண்டும்.உயிரினம் வாழ உதவி வந்த தொழிலாளி வர்க்கம், இப்பூமண்டலத்தை அழிவிலிருந்து தடுத்து உயிரினத்தைக் காத்திட இந்த மேதின நாளில் உறுதி வேண்டுகிறேன். மே தின புரட்சிகர வாழ்த்துக்களை...

ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை !

ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்வது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.பொருளாதார நெருக்கடி, தனிப்பட்ட விவகாரங்கள் காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 23 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஜனவரி, பிப்ரவரியில் தலா 8 இந்தியர்களும், மார்ச்சில் 4 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2010-ம் ஆண்டில் 50 இந்தியர்களும், 2011-ம் ஆண்டில் 54 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

டவர்களால் ஆண்டுக்கு 70 லட்சம் பறவைகள் உயிரிழப்பு!

செல்போன் டவர்களால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பறவைகள் உயிரிழப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.ஏறக்குறைய 2 ஆயிரம் அடி உயரத்தில் 84 ஆயிரம் டவர்கள் உள்ளன. இதனால் பறவைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. எனினும் இந்த டவர்களால் மட்டும் அந்த பறவைகள் உயிரிழப்பதில்லை. கேபிள் வயர்களாலும் அவைகள் உயிரிழப்பது தெரியவந்துள்ளது.

நிலத்துக்கு காவலாளி உரிமை கோர முடியாது சுப்ரீம் கோர்ட்டு !

தனது முதலாளியின் நிலத்தில் காவலாளியாக தங்கி இருக்கும் ஒருவர், அந்த நிலம் தனக்குதான் சொந்தம் என்றும், இதை கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்; குறிப்பிட்ட அந்த நிலத்தில் தனது குடும்பம் இரு தலைமுறைகளாக வசித்து வருவதோடு, அதை பாராமரித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கி பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தது.நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், '’ஒரு குறிப்பிட்ட நிலத்தில் காவலாளியாக இருப்பவரோ அல்லது அந்த நிலத்தை கவனித்துக்கொள்பவரோ,அல்லது அந்த நிலத்தில் வேலைசெய்பவரோ யாராக இருந்தாலும் அவர்கள் எவ்வளவு காலம் அந்த பணியை செய்து கொண்டு இருந்தாலும் அந்த நிலத்துக்கு ஒரு போதும் உரிமை கோர முடியாது. அவர்கள் அந்த நிலத்துக்கு உரிமையானவரின் சார்பில், அந்த நிலத்தை கவனித்துக்கொள்கிறார்கள் அவ்வளவுதான்.குறிப்பிட்ட அந்த நிலத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே அவர்கள் அந்த நிலத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் காவலாளியின் கோரிக்கையை ஏற்க முடியாது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.மேலும் தனது முதலாளியின் நிலத்துக்கு உரிமை கோரிய காவலாளி, வழக்கு செலவாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த தொகையை அவர் 2 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும். மேலும் அந்த இடத்தையும் 2 மாதங்களுக்குள் காலி செய்யவேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.

ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற இலங்கைத் தமிழ் மாணவர்!

லண்டன் ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் போட்டிக்கான தீபத்தை ஏந்துவதற்காக இலங்கையைத் சேர்ந்த தமிழ் மாணவர் ஒருவர் தேர்வாகியுள்ளார்.மல்லாவியைச் சேர்ந்த முருகேசப்பிள்ளை கோபிநாத்(21), நியுகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவம் பயின்று வருகிறார்.இந்த தீபத்தை ஏந்த தேர்வு செய்யப்பட்டுள்ள 8 ஆயிரம் வீரர்களில் முருகேசப்பிள்ளையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படமாக பாலை தேர்வு!


நல்ல தராமான தமிழ்த் திரைப்படங்களை நார்வேயில் வாழும் தமிழர்களுக்கும் நார்வே நாட்டு குடிமக்கள் மற்றும் சர்வதேச மக்களின் பார்வைக்கும் எடுத்துச் செல்லும் நோக்குடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படும் நார்வே சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா மூன்றாவது ஆண்டாக இம்முறை ஏப்ரல் 25 முதல் 29 வரை நடைபெற்றது. தமிழ்த் திரைப்படங்களுக்காக மட்டும் சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒரே திரைத்திருவிழா இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அழகர்சாமியின் குதிரை, வெங்காயம், வாகைசூடவா, கோ, ஆரண்ய காண்டம், தீராநதி(பிரான்சு), எங்கேயும் எப்போதும், போராளி, மயக்கம் என்ன, பாலை, உச்சிதனை முகர்ந்தால், வர்ணம், ஸ்டார் 67(கனடா), மகான்கணக்கு, நர்த்தகி ஆகிய 15 படங்கள் இந்த விழாவில் திரையிடத் தேர்வாகியிருந்தன. 

விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலை படத்தின் இயக்குநர் ம. செந்தமிழனுக்கு கடந்த வருடத்தின் சிறந்த சமூக விழிப்புணர்வுத் திரைப்பட இயக்குநர் விருது வழங்கப்பட்டுள்ளது. தனது அடுத்த பட வேலைகளின் காரணமாக இயக்குநர் செந்தமிழன் நார்வே செல்லாத காரணத்தால் பாலை படத்தின் கதாநாயகன் சுனில் இந்த விருதை இயக்குநர் சார்பில் பெற்றுக்கொண்டுள்ளார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக 2300 வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்வியலைத் திரைப்படமாக்கிய பெருமைக்குரிய பாலை திரைப்படம் தமிழகத்தில் கடந்த நவம்பரில் வெளியானது. தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் பாலை திரைப்படத்திற்கு சிறப்பான விமர்சனம் எழுதி வெகுவாகப் பாராட்டின. 

தமிழ் உணர்வாளர்களுக்கும், உண்மையான திரைப்படக் காதலர்களுக்கும் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவருக்குமே தமிழரின் வரலாற்றுப் பெருமிதத்தை முதன்முறையாக திரைமொழியில் உணர்த்திய பெருமையைப் பெற்ற படம் பாலை. சங்க காலத் தமிழரின் வாழ்க்கைப் போராட்டத்தை நிகழ்காலத் தமிழரின் வாழ்க்கைப் போராட்டத்தோடு ஒப்பிட்டு துணிச்சலான பல கருத்துகளை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ம. செந்தமிழன். சர்வதேச அளவில் தமிழ்த் திரைப்படங்களுக்காக நடைபெற்ற திரைப்படவிழாவில் “சிறந்த சமூகவிழிப்புணர்வுத் திரைப்படம்” என்ற சிறப்புப் பிரிவில் பாலை திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் இயக்குநருக்கு சிறந்த சமூகவிழிப்புணர்வுத் திரைப்பட இயக்குநர் விருது வழங்கப்பட்டுள்ளது

போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.


திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (30.04.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. டெசோ கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கலைஞர், 

கேள்வி: நீங்கள் ஆட்சியில் இல்லாத போதுதான் இலங்கை பிரச்சினையை தீவிரமாக கையில் எடுப்பதாக சிலர் கூறுகிறார்களே?

பதில்:
 ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் வாதாடி இருக்கிறோம். போராடி இருக்கிறோம். அமைதிப்படை என்ற பெயரால் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். அந்த அமைதிப்படை இந்தியா வந்தபோது அன்று முதல்  அமைச்சராக இருந்த நான் வரவேற்க செல்லவில்லை. அதனால் ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தவர்கள் நாங்கள்.

கேள்வி: இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதை நீங்கள் தடுக்க தவறியதாகவும், இப்போது 'டெசோ' அமைப்பை கையில் எடுத்திருப்பதாகவும் விமர்சிக்கிறார்களே?

பதில்:
 விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை. என்னையோ, டெசோ அமைப்பையோ விமர்சிப்பது அவர்களாகவே இந்த அமைப்புக்கு தரும் விளம்பரமாகவே கருதுகிறேன். ஆட்சியை இழந்ததால் இதை உருவாக்கவில்லை.

கேள்வி: போர் முடிந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பால் ஈழ தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும்.

பதில்:
 முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அறவழியில் அனைத்து நாட்டு ஆதரவையும் திரட்ட இருக்கிறோம். இதற்கு அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும்.

கேள்வி: பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

பதில்:
 போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.

கேள்வி: மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவீர்களா?

பதில்:
 உதவி பெற முயற்சிக்கிறேன். முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது தி.மு.க.வால் என்பதை மறந்து விடக்கூடாது.

கேள்வி: புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா?

பதில்:
 ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்.

கேள்வி: இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்:
 இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது. இவ்வாறு கலைஞர்

பார்த்ததில் பிடித்தது!

.பயபுள்ளைகளுக்கு எவ்வளவு பர்பெக்ட்டா பொருந்துது பாருங்க.....
எதனைகோடிகள் கைமாரியதோ...கேடிகள் எல்லாம் ஆதீனமாக மார. மிக 


விரைவில் கொடுத்தவர்களும் வாங்கிவர்களும் தொலைக்காட்சியில் 


வரத்தான் போய்கிறார்கள் நாம் பார்க்தான் போகிறோம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...