|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 May, 2011

இதே நாள்

  • லிபியா, தேசிய ஒருமைப்பாட்டு தினம்

  •  எட்வர்ட் ஜென்னர், பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்(1796)

  •  பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது(1811)

  •  குவைத், ஐ.நா.,வில் இணைந்தது(1963)

  •  அமெரிக்காவில் முதல் விண்வெளி ஆய்வு மையமான ஸ்கைலேப் துவங்கப்பட்டது(1973)

  • இதே நாள்



  • டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது(1648)

  •  எக்குவாடோர் விடுதலை அடைந்தது(1830)

  •  பிரேசில் அடிமைமுறையை ஒழித்தது(1888)

  •  நான்கு இயந்திரங்களால் ஆன முதல் விமானத்தை ஈகர் சிபோர்ஸ்கி என்பவர் இயக்கினார்(1913)

  •  இந்திய நாவலாசிரியர் ஆர்.கே.நாராயண் இறந்த தினம்(2001)

  • Top 10 Al-Qaeda "Leaders"


    Rashid Rauf: NO 10.

    Abu Ayyub al-Masri: NO 9.

    Sayeed al-Masri: NO 8.


    Mohammad Hasan Khalil al-Hakim: NO 7.


    fight against - HIV



    Jayalalithaa - victory speech





    மஞ்சள்காமாலை நோய்க்கு அருமருந்தாக விளங்கும் கீழாநெல்லி



    இன்றும் கிராமங்களில் மூலிகை மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கீழ்காய்நெல்லியில் பைல் நிரூலின், நார் செக்குரினின், நிர் பைலின், தேலிக் ஆஸிட், எல்லாஜிக் ஆசிட், ஹேலிக் ஆஸிட் போன்ற 50-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன மருத்துவகுணம்:

    கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.

    மஞ்சள் காமாலை, மட்டுமல்லாது குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. 





    கீழ்காய் நெல்லி என்ற பெயரே பேச்சுவழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிடப்பட்டது. மஞ்சள்காமலை நோய்: கீழாநெல்லி சமூலம் - கரிசலாங்கண்ணி, தும்பை - சீரகம் - பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும். 
    வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும். 
    ரத்தசோகை: கீழா நெல்லியும் - கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும். கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

    மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.

    தோல்நோய்கள் தீரும்: கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும். கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும். கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

    கட்சி தாவிய கோவிந்தசாமிக்கு மரண அடி! AIADMK ஆனந்தன் தமிழகத்திலேயே மிக அதிகமாக 73,271 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


    திருப்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கோவிந்தசாமி. கட்சி விரோத நடவடிக்கை காரணமாக இவரை மார்க்சிஸ்ட் கட்சி தலைமை நீக்கியது. எம்.எல்.ஏ. பதவியில் இருக்கும்போதே திமுகவுக்கு தாவினால், கட்சித்தாவல் தடை சட்டத்தில் பதவி பறிபோகும் என்பதால், எம்.எல்.ஏ. பதவியின் கடைசி காலத்தில் திமுகவுக்கு தாவினார். தமிழக சட்டசபை தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார்.

    வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் தமிழகத்திலேயே மிக அதிகமாக 73,271 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அதிமுக வேட்பாளர் ஆனந்த் 1,13,640 ஓட்டுக்களும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கோவிந்தசாமி 40,369 ஓட்டுக்களும் பெற்றனர். கட்சி தாவிய கோவிந்தசாமிக்கு மக்கள் மரணஅடி கொடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள்

    முதல் பழிவாங்கத் தாக்குதல் பாகிஸ்தானில் பலி 80

    First revenge for Osama Bin Laden's killing

    When Osama bin Laden's Pakistani supporters strike back, this is what it looks like: twisted metal, scattered suitcases and body parts; blood and savagery.The Taliban said the vicious double suicide bombing in Shabqadar, a trading town on the edge of the tribal belt in Charsadda district in north-western Pakistan, claimed the first part of the blood price they had promised to extract for the American killing of Bin Laden on 2 May. It was conducted with ruthless efficiency.

    Abid Khan, 24, cowered in his sweetshop when he heard the first blast and then, eight minutes later, a second. Rushing to the scene, he found some 200 trainee soldiers strewn on the road among mangled vans and a pile of bags.

    "It was very bad," he said in slow, precise English. "Some people had no hand. Some people had no foot. Some heads were far away [from] the people." He repeated himself. "It was very bad."
    The dead and injured had been among 800 trainee soldiers partying just hours earlier with songs and music, having graduated into the ranks of the Frontier Corps, a poorly equipped paramilitary force drawn from the tribes of north-western Pakistan.


    ஆப்கன் எல்லைப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில், சரஸ்ஸடா மாவட்டத்தில் உள்ள ஷப்கதார் என்ற இடத்தில் துணைநிலை ராணுவப் படையின் பயிற்சி வளாகம் அமைந்துள்ளது. கைபர் பக்துன்வா மாகாணத் தலைநகர் பெஷாவரில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ளது ஷப்கதார். எல்லை ஊர்க்காவல் படையில் பயிற்சி பெற்ற துணை நிலை ராணுவப் படை வீரர்கள் பலர், நேற்று தங்கள் பயிற்சியை முடித்து விட்டு, விடுமுறையைக் கழிக்க தங்கள் ஊருக்குப் புறப்படுவதற்காக, ஒரு பஸ்சில் ஏறிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, வளாகத்தின் வாசற் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மனித வெடிகுண்டு நபர் ஒருவர், தன் உடலில் கட்டப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். எட்டு நிமிடங்கள் கழித்து, மற்றொரு மனிதவெடிகுண்டு நபர் மோட்டார் சைக்கிளில் வந்து குண்டுகளை வெடிக்கச் செய்தார். இச் சம்பவத்தில் பஸ்சில் இருந்த 65 துணை நிலை ராணுவப் படை வீரர்கள் உள்ளிட்ட 80 பேர் பலியாயினர். 115 பேர் காயம் அடைந்தனர். தாரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அஹ்சனுல்லா அஹ்சான் வெளியிட்ட அறிக்கையில்,"ஒசாமா பின்லாடன் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் இது முதல் தாக்குதல். தொடர்ந்து, இதை விடப் பெரிய அளவில் தாக்குதல் நடக்கும்' என்று எச்சரித்துள்ளார்.




    திமுக தோல்வியடைய என்ன காரணம்?

    அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது.

    திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர்.

    திமுகவின் தோல்விக்கு :
     
    1. மின்வெட்டு: தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான்.

    கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் மின்வெட்டு கடுமையாகவே இருந்தது. தினசரி பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தொழில் உற்பத்தி முடங்கிப் போனது. குறிப்பாக சிறு தொழில் செய்வோர் கடும் பாதிப்பை சந்தித்தனர். கொங்கு மண்டலத்திலோ தொழில் வளர்ச்சியும், உற்பத்தியும் சுத்தமாக நசிந்து போனது. பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்தனர்.

    கச்சாப் பொருட்களின் விலையேற்றம் ஒருபக்கம், மின்வெட்டு மறுபக்கம் என பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர் அவர்கள்.

    அதேபோல சாதாரண மின் நுகர்வோர்களும் மின்வெட்டால் கடும் பாதிப்பை சந்தித்தனர். தொடர் மின்வெட்டால், மக்கள் பட்ட அவதி சொல்லொணாதது.

    அதை விட மக்களை அதிகம் கோபத்துக்குள்ளாக்கிய விஷயம், சென்னைக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரத்தை வழங்கிய அரசின் செயல்தான்.

    2. விலைவாசி உயர்வு:  மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய, கோபத்திற்குள்ளாக்கிய விஷயம் விலைவாசி உயர்வுப் பிரச்சினை. குறிப்பாக வெங்காய விலை உயர்வும், காய்கறிகளின் விலையும், தக்காளி விலை உயர்வும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.

    விலைவாசி உயர்வைத் தடுக்காமல், அந்த மாநிலத்தில் இல்லையா, இந்த மாநிலத்தில் இல்லையா என்று முதல்வர் கருணாநிதி பட்டியலைக் காட்டி விலைவாசி உயர்வு நியாயமானதுதான என்பது போலப் பேசியதும் மக்களை கோபத்திக்குள்ளாக்கி விட்டது.

    3. குடும்பத்தினரின் ஆதிக்கம்: முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் இதுவரை இல்லாத அளவு, வரலாறு காணாத வகையில், இந்த ஆட்சியின்போது மிகப் பெரிய அளவில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

    முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த, மு.க.அழகரி மறுபக்கம் ஆதிக்கம் செலுத்த, கனிமொழியின் ஆதிக்கம் ஒரு பக்கம் என குடும்ப அங்கத்தினரின் ஆதிக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொடி கட்டிப் பறந்தது.

    மதுரையில் ஒரு தூசி நகர்ந்தாலும் கூட அது அழகிரிக்குத் தெரிந்தாக வேண்டும் என்ற அளவுக்கு அங்கு அவரது ஆதிக்கமும், அதிகாரமும் கொடி கட்டிப் பறந்தது.

    4. திரைத்துறையில் கருணாநிதி குடும்ப ஆதிக்கம்: அதேபோல திரைப்படத் துறையிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் இதுவரை இல்லாத அளவு மிக மிக அதிகமாகவே இருந்தது.

    கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை விழுங்கி விட்டது என்றே கூறலாம். பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் வற்புறுத்தியும், மிரட்டியும் இவர்கள் தங்களது படங்களில் நடிக்க வைத்தார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. இதை வெளியில் கூற முடியாமல் அந்த நடிகர்களெல்லாம் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.

    அதேபோல அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தமிழரசுவின் தயாரிப்பு நிறுவனம், அவரது மகன் அருள் நிதி நடிகராக்கப்பட்டது, கருணாநிதியின் இன்னொரு பேரன் குணாநிதி திரைத்துறையில் தயாரிப்பில் இறங்கியது என எங்கு பார்த்தாலும் கருணாநிதி குடும்பத்தாரின் முகங்களாகவே தெரிந்தது. இவர்களைத் தாண்டி யாரும் படம் எடுக்க முடியாது, நடிக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது.

    கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தை மனதில் வைத்தே நடிகர் அஜீத், முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே தங்களை மிரட்டுவதாக குமுறியது நினைவிருக்கலாம்.

    அதேபோல கருணாநிதிக்காக தொடர்ந்து விழாக்களை எடுக்க திரைத்துறையினர் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்களை வலுக்கட்டாயமாக கலந்து கொள்ள நிர்ப்பந்தித்தனர்.

    ரஜினிக்கு அடுத்து பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள நடிகர் விஜய்க்கு, திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியும் அனைவரும் அறிந்ததே. அவரது படங்களுக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்தது, மிரட்டியது, வழக்குகளைக் காட்டி பணிய வைக்க முயன்றது என நிறைய விஷயங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்தது.

    5. ஈழத் தமிழர் பிரச்சினை: ஈழத் தமிழர் பிரச்சினையும் திமுகவின் அஸ்தமனத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

    ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் உயிர்களை சிங்களக் காடையர்கள் கொத்திக் குதறிப் போட்டபோதெல்லாம் அவர்களுக்காக திமுக குரல் கொடுக்கவில்லை என்பது, கண்மூடித்தனமாக காங்கிரஸை ஆதரித்தது, எதிர்த்துக் குரல் கொடுக்க தயங்கியது என திமுக மீது சரமாரியான புகார்கள் உள்ளன.

    உலகத் தமிழர்கள் எல்லாம், கலைஞர் இப்படி அமைதி காத்து விட்டாரே, அவர் நினைத்திருந்தால் ஒட்டுமொத்த உயிர்ப்பலியையும் தடுத்திருக்கலாமே, தமிழர்களின் தலைவர் என்று அவரை அன்போடு அழைத்ததெல்லாம் வீணாகி விட்டதே என்று வெம்பிப் புலம்பி வேதனையில் மூழ்கும் அளவுக்கு அமைதி காத்தார் கருணாநிதி.

    ஈழத்தில் கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய உயிர்ப் பலியின்போதும் கூட திமுக சற்றும் கலங்காமல், காங்கிரஸுக்கு சாதமாகவும், சோனியாவின் மனம் நோகக் கூடாது என்ற நோக்கிலும், பேசி வந்ததும், உண்ணாவிரதம் என்ற பெயரில் அவர் நடத்திய மிகக் குறுகிய போராட்டமும் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அவப்பெயரையே ஏற்படுத்தியது.

    6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:  திமுக அரசின் மீதான பல முக்கியக் குற்றச்சாட்டுக்களில் ஒன்று ஸ்பெக்ட்ரம் ஊழல். அதாவது திமுகவின் ஊழலாக மட்டும் இதை மக்கள் பார்க்கவில்லை. மாறாக கருணாநிதி குடும்பத்தினர் மொத்தமாக அரங்கேற்றிய மிகப் பெரிய ஊழலாக இது மக்கள் மனதில் பதிந்து போய் விட்டது.

    இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1,76,000 கோடி அளவிலான இந்த ஊழல் மக்கள் மனதில் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், படித்தவர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

    குற்றச்சாட்டுக்களில் கரைந்து போன நலத் திட்டங்கள்: முதல்வர் கருணாநிதியின் பிடியில் இந்த ஆட்சியின்போது திமுகவும் இல்லை, அவரது குடும்பத்தினரும் இல்லை என்பதே பொதுவான திமுகவினரின் வருத்தமாக உள்ளது. ஆளாளுக்கு நாட்டாமை செய்ததும், ஆடியதுமே இன்று ஆட்சியைப் பறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய தோல்வியையும் சந்திக்க நேரிட்டு விட்டதாக உண்மையான திமுகவினர் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

    இதுவரை எந்த தமிழக அரசும் செய்யாத பல அற்புதமான திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசுதான் என்று கூறும் அவர்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்த ஏழைகள் எத்தனையோ பேர் உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை பாராட்டாத வாய்களே இல்லை, இலவச டிவி திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஒன்று, அதேபோல கான்க்ரீட் வீடு கட்டி்த தரும் திட்டம் மிக அற்புதமான திட்டம். இப்படி பல நலத் திட்டங்களை திமுக அரசு அறிமுகப்படுத்தி, அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்திக் காட்டியது.

    ஆனால் இந்த நலத் திட்டங்களையெல்லாம் மறைக்கும் அளவுக்கு ஊழல் புகார்களும், குடும்பத்தினரின் ஆதிக்கமும் அதிகரித்துப் போனதால் திமுகவின் ஆட்சிக்கு முடிவு ஏற்பட்டு விட்டதாக திமுகவினர் வருத்தம் 

    எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்!

    திமுகவை விட அதிகமாக இரு இடங்களைப் பிடிக்கும் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவுள்ளார். கடந்த தேர்தலில் ஒரேயொரு எம்எல்ஏவாக சட்டசபைக்குச் சென்ற விஜயகாந்த், இந்த முறை 29 எம்எல்ஏக்களுடன் சட்டமன்றம் செல்கிறார்.

    கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக, இந்தமுறை எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் மகா மோசமான தோல்வியை அடைந்துளளது

    ஆழிப்பேரலையாய் மக்கள் சக்தி எழுந்து ஆளுங்கட்சியை வாரிச் சுருட்டி எறிந்துவிட்டது: வைகோ

    கடந்த ஐந்து ஆண்டுகளில், தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், அராஜகம், திரைப்படத் துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்ப ஆதிக்கம்,

    பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளுக்குத் தடையற்ற மின்சாரம் தந்துவிட்டு, நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகத்தை இருளில் தள்ளிய கடுமையான மின்வெட்டு, தாங்க முடியாத விலைவாசி ஏற்றம், தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கும் கடமையில் தவறிய குற்றம், அனைத்துக்கும் மேலாக ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு, காங்கிரஸ் அரசுக்குத் துணைநின்ற துரோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை இழந்த அபாயம்,

    இவை அனைத்தையும் எதிர்த்து ஆழிப்பேரலையாய்  மக்கள் சக்தி எழுந்து, ஆளுங்கட்சியின் ஊழல் பணநாயகத்தையும், அதிகார வன்முறையையும் வாரிச் சுருட்டி எறிந்துவிட்டது.

    நடைபெற்று முடிந்த தேர்தல் களத்தில் மதிமுக பங்கு ஏற்காவிடினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் இடையறாத பிரச்சாரத்திலும் அறப்போரிலும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டது. 

    இனி அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் எச்சரிக்கை தரும் சரியான பாடத்தை, வாக்காளர்கள் கற்பித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்று உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வராகிறார் ரெங்கசாமி

    காங்கிரசில் இருந்து ஒதுங்கி இருந்த ரெங்கசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். பின்னர் அ.தி.மு.க,.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இதில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களிலும், அ.தி.மு.க., 5 இடங்களிலும் மொத்தம் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    காஙகிரஸ் 7 இடங்களிலும் , தி.மு.க., 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயயேச்ச‌ை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். கதர்காமம், இந்திரா நகர் என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ரெங்கசாமி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். மக்கள் இடையே எளிமையானவர் என்று பெயர் எடுத்த ரெங்கசாமி புதுச்சேரியில் முதல்வராகிறார்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...