|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 March, 2012

200 ஆண்டுகளாக இறைச்சி சாப்பிடாத மக்கள்.

ஓசூர் அருகே, தமிழக எல்லையில், இரண்டு கிராமங்களில் பன்றி, கோழி மற்றும் எருமை வளர்த்தாலும், சாப்பிட்டாலும் ஊருக்கு கேடு என பீதியடைந்துள்ளனர். 200 ஆண்டாக இறைச்சியை சாப்பிடாமலும், வளர்க்காமலும் கட்டுப்பாட்டுடன் இருந்து வருகின்றனர்.ஓசூர் அடுத்த முத்தூலி ஊராட்சியில், தாசரப்பள்ளி தின்னா, சின்ன தின்னா ஆகிய கிராமங்கள் உள்ளன. தாசரப்பள்ளி தின்னா கிராமத்தில், 160 குடும்பத்தினரும், சின்ன தின்னா கிராமத்தில், 50 குடும்பத்தினரும் வசிக்கின்றனர்.விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இக்கிராமத்தில், 200 ஆண்டுக்கு முன், திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டு, பலர் அடுத்தடுத்து இறந்தனர். பிறக்கும் குழந்தைகளும் ஊனமாக பிறந்தன. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், ஊர் பஞ்சாயத்தை கூட்டினர்.பஞ்சாயத்தில், கோழி, மாடு மற்றும் பன்றி போன்றவற்றை சாப்பிடுவதால், அப்பகுதியில் உள்ள காவல் தெய்வமான, "நந்தியால எல்லம்மா தேவி மற்றும் "கங்கம்மா சுவாமி கோபமடைந்து, ஊருக்கு கேடு வந்துள்ளதாகவும், அதனால், இனி எந்த காலத்திலும் கோழி, மாடு மற்றும் பன்றி இறைச்சியை சாப்பிடக் கூடாது. அவற்றை ஊரில் யார் வீட்டிலும் வளர்க்க கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்தனர். 

கட்டுப்பாட்டை மீறாமல், 200 ஆண்டாக தாசரப்பள்ளி தின்னா, சின்ன தின்னா கிராம மக்கள் இருந்து வருகின்றனர்.இந்த இரண்டு கிராமத்திலும் பெண் குழந்தைகளை வெளியூரில் திருமணம் செய்து கொடுத்தால் அவர்கள், கோழி, பன்றி மற்றும் மாடு சாப்பிடவும், வளர்க்கவும் வாய்ப்புள்ளதால், இரு கிராமத்திலும் பெண் குழந்தைகளை வெளியூரில் திருமணம் செய்து கொடுப்பதில்லை. உள்ளூரில் உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொடுக்கின்றனர்.இவ்விரு கிராமத்திலும் போயர் சமூகத்தை சேர்ந்த மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள், இந்த இரு ஊர் கட்டுப்பாட்டால் புதிதாக குடியேறுவதில்லை. பெண் குழந்தைகளை திருமணம் செய்தும் கொடுப்பதில்லை.அக்கிராமத்தை சேர்ந்த முதியவர் நந்தாலப்பா கூறுகையில், ""மூதாதையர் காலத்தில் இருந்தே பரம்பரை, பரம்பரையாக கோழி, மாடு மற்றும் பன்றி கறி சாப்பிடுவதில்லை. மேலும், அவற்றை வளர்க்கவும் கூடாது என்ற சம்பிராதயத்துடன் வசிக்கிறோம். நடக்கும் பூமியை கூட வணங்கி, 10 ஆண்டுக்கு முன் செருப்பு கூட ஊரில் யாரும் போட்டு நடக்க மாட்டோம். தற்போது படித்த இளைஞர்கள் செருப்பு போட துவங்கியுள்ளனர். இவற்றை செய்யாமல் இருப்பதால் ஊருக்கு நல்லது என நினைத்து கடைபிடிக்கிறோம், என்றார்.

வறுமை ஒழிந்த தமிழகத்தை உருவாக்க மார்ட்டின்லூதர் கிங்கைப் போல் நானும் கனவு காண்கிறேன்!

வறுமை இல்லாத, குடிசைகளே இல்லாத, வேலையில்லா திண்டாட்டம் இல்லாத தமிழகத்தை உருவாக்கும்வரை ஓயப்போவது இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியேற்றுள்ளார்..அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் எதிர்கால திட்டங்களை உள்ளடக்கி `தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023' என்ற புதிய செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கு திட்டத்தின் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு `தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023' செயல்திட்டத்தை வெளியிட்டார். முதல் பிரதியை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023 
இந்த விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:
தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023 வெளியிடப்படும் இந்த தினத்தை தமிழ்நாட்டின் பொருளாதார வரலாற்றில் மிக முக்கிய நிகழ்ச்சியாக கருதுகிறேன். கடந்த 2011-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழகம் ``நம்பர் ஒன்'' மாநிலமாக திகழ வேண்டும் என்ற லட்சியத்தை உருவாக்கி இருந்தேன்.

எப்படி அமெரிக்காவைப் பற்றி மார்ட்டின் லூதர் கிங் மிகப்பெரிய கனவு கண்டாரோ, அதேபோல் நானும் தமிழகத்தைப் பற்றி மிகப்பெரிய கனவு காண்கிறேன். அந்த கனவில், வேலையில்லா திண்டாட்டம் இல்லாத ஒரு தமிழகத்தை, வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஒரு தமிழகத்தை கல்வி, சுகாதாரம், குடிநீர், சுகாதாரம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் அனைத்து மக்களும் பெற்றுள்ள ஒரு தமிழகத்தை, எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்து மக்களும் செல்வச்செழிப்பாக, பாதுகாப்பாக, அமைதியுடன் வாழ்கின்ற ஒரு தமிழகத்தை பார்க்கிறேன்.

நம்பர் ஒன் மாநிலம் இந்த 21-ம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சியிலும் தமிழகம் `நம்பர் ஒன்' மாநிலமாக மாற வேண்டும், அறிவுசார் பொருளாதார மையமாக திகழ வேண்டும் என்றும் நான் கனவு காண்கிறேன். அந்த வகையில், தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023 செயல்திட்ட அறிக்கை, எனது கனவை தெளிவாக்குவதுடன் அந்த கனவை நிறைவேற்றுவதற்கான குறிப்பிட்ட செயல்திட்டங்களையும் எடுத்துச்சொல்கிறது.

சிறந்த தலைவர்கள் ஒரு தொலைநோக்கு திட்டத்தை உருவாக்குகிறார்கள். அதை தெளிவுபடுத்துகின்றனர். அந்த கனவை நிறைவேற்ற பாடுபடுகிறார்கள். தொலைநோக்கு திட்டம் ஒரு செயலை செய்து முடிக்க துணை செய்கிறது. ஒரு கனவை எவ்வாறு நனவாக்குகிறார்கள் என்பதில்தான் தலைமைப் பண்பு அடங்கி உள்ளது. எங்கே தொலைநோக்கு இல்லையோ, அங்கே நிச்சயம் நம்பிக்கை இருக்காது.

தமிழக வரலாற்றில் முதல் முறை... தமிழகம் தொழில்துறையில் முதன்மை மாநிலமாக ஆக வேண்டும். மிக வேகமாக நடந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் பயன்பாடுகள் ஒட்டு மொத்தமாக அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது தொலைநோக்கு திட்டம். அந்த வகையில், ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் முதல்முறையாக தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொலைநோக்கு செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்குகள் மூலம் பலன்கள் ஏற்பட்டு அவற்றால் சாதாரண மக்களின் வாழ்விலும் வளர்ச்சி ஏற்படும். அடுத்த 10 ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

நவீன சமுதாயம் இந்த தொலைநோக்கு திட்டத்தின் தலையாய நோக்கம் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2023-ம் ஆண்டு வறுமை இல்லாத, வளர்ச்சிகள் மிகுந்த முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும், ஒரு நவீன சமுதாயத்தில் மக்களுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் கிடைக்குமோ, அவற்றை எல்லாம் தமிழக மக்களும் அனுபவிக்க வேண்டும், உலகில் மற்ற இடங்களில் உள்ள மக்கள் எப்படி அமைதியாக வாழ்கிறார்களோ அதைப்போன்று தமிழக மக்களும் எல்லா வளங்களும் பெற்று அமைதியான வாழ்க்கை நடத்த வேண்டும். உலகின் வளர்ந்த பிராந்தியங்களுக்கு நிகராக தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான்.

பிரெஞ்ச் கவிஞர் விக்டர் ஹூகோ உலக அளவில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. வளர்ந்த நாடுகள் பொருளாதார சீர்குலைவு காரணமாக நலிவடைந்து வருகின்றன. வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. பிராந்திய அளவில் இந்திய நாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது. ``ஒரு திட்டம் உதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால் அதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது'' என்று பிரெஞ்சு கவிஞர் விக்டர் ஹூகோ சொல்லி இருக்கிறார். அந்த வகையில், தமிழ்நாடு மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பார்க்கும்போது, அடுத்த 11 ஆண்டுகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 11 சதவீதமாகவும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதத்தை விடவும் வளர்ச்சி வீதம் 20 சதவீதம் அதிகரிக்கக்கூடும். அதேபோல், மக்கள்தொகை 15 சதவீதம் அதிகரித்து தனிநபர் வருமானம் 6 மடங்கு அதிகரிக்கும்.

அதிகரிக்கும் தனிநபர் வருமானம் கடந்த 1980-க்கும் 2000-க்கும் இடைப்பட்ட 20 ஆண்டு காலத்தில் சீனா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை என்ற அளவில்தான் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்கள் தொடர்ந்து வளர்ந்து ஆண்டுக்கு 11 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியை எட்டியிருப்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது அடுத்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி வீதம் 11 சதவீதமாக உயரும் என்பது எளிதாக அடையக்கூடிய இலக்குதான்.

கடந்த 2005-2006-ம் ஆண்டு நமது வளர்ச்சி வீதம் 13.95 சதவீதமாக இருந்தது. 2023-ம் ஆண்டில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் இப்போதைய வருமானத்தை விட 6 மடங்கு அதிகரித்து 41/2 லட்சமாக உயரும் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023-ல் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், அதேநேரத்தில் மாநிலத்தில் இருக்கும் வருவாய் வேறுபாடுகளை குறைப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

2023-ல் வறுமை இருக்காது குறைந்த வருவாய் பிரிவினர் உயர்வது உள்பட அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு வறுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க இந்த தொலைநோக்கு திட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2023-ம் ஆண்டு யாரும் பின்தங்கி இருக்கக்கூடிய நிலை இருக்காது.

2023-ம் ஆண்டிற்குள் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், அனைவருக்கும் 100 சுகாதார வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும் என்பது எனது தொலைநோக்கு பார்வை. திறந்தவெளியில் மலம்கழிக்கும் நிலை முற்றிலுமாக நீக்கப்படும். ஏழை எளியவர்களுக்கு 25 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுத்து குடிசையே இல்லாத தமிழகத்தை உருவாக்குவதும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி, தொழிற்கல்வி உள்பட உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்துவதும் எனது கனவு.

தரமான, மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் குறுக்காகவும், நெடுக்காகவும் இணைக்கக்கூடிய வகையில் பாதுகாப்பான பலவழி நெடுஞ்சாலைகளும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்தரத்தில் சாலைகளும் அமைக்கப்படும். அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான வாய்ப்புகளும், வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வெளிப்படையான, பொறுப்பான நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்பதை எனது தலைமையிலான அரசின் நோக்கம். சேவை துறையில் தனியாரின் பங்கினை பெரிதும் வரவேற்கிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாடுகளை அரசு முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளும்.

பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய உண்மையான வளர்ச்சி, கலாசார பன்முகத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்து வளர்ச்சிகளுடன் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் வழிநடத்துவதற்கு தொலைநோக்கு திட்டம் பெரிதும் உதவும். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கூறப்பட்ட அனைத்து இலக்குகளையும் அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஓயமாட்டேன் எனது கனவுகள் நனவாகும் வரை, தமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேறும் வரை நான் ஓய்வுபெற மாட்டேன், இடையில் நிறுத்திவிட மாட்டேன் என்பதை இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமையான, சக்திவாய்ந்த, வளர்ச்சியான, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவோம். அத்தகைய புதிய தமிழகத்தில் நமது மக்கள் மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்கள் என்றர் அவர்.

விழாவில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயற்கை எரிவாயு இறக்குமதி முனையம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் `டிட்கோ' நிறுவனம் சார்பில் தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.சுந்தரதேவனும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.பூட்டோலாவும் கையெழுத்திட்டனர். இதேபோல், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் `கெமிக்கல் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் முதலீட்டு மண்டலம்' அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தமிழக அரசு சார்பில் சுந்தரதேவனும், என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.பூர்வகாவும் கையெழுத்திட்டு ஆவணங்களைப் பரிமாறிக்கொண்டனர். 

இதே நாள்...


  • உலக வானிலை தினம்
  •  பாகிஸ்தான் குடியரசு தினம்(1956)
  •  தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(1893)
  •  இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் இறந்த தினம்(1931)
  •  கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது(1868)

""இலங்கையில் தனிஈழம் உருவாவதே எனது கனவு,''


 தமிழ் ஈழம் வென்றெடுக்க இந்த வென்று என்ன செய்தது என்று உலகுக்கு தெரியும்.  

ஐ.நா. தீர்மானம் இறுதி மரியாதை!


கூறு கெட்ட கோமாளிகள் தானே நாம்!

சரியாக படவில்லை!
உள்நாட்டு போரா இங்கு??
இல்லை ... முள்ளி வாய்கால் முன்னோட்டமா??
யார் உங்களை ஆயுதம் தாங்கி
இங்கு எதிர்த்தார்கள்??

கூடன் குளத்தை ,தமிழக பத்து மாவட்ட
போலீஸ் படை, தரை படை , கடற்படை
சூழ்வதும் , மாநில அரசின் உரிமையை காவு கொடுத்து
வேடிக்கை பார்க்கும் செல்வி .ஜெயலலிதா
திராணியும் சரியாக படவில்லை...

எதிர்பார்க்கும் மின்சாரமும் கையில் கிடைக்க போவதும் : TN Expected Electricity Vrs Actual

கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2100MW .
அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும் = 1260 MW.
( கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது என்பதனை கவனத்தில் கொள்க)
(A) HOWEVER ASSUMING KK ACHEIVES 60% PRODUCTION TARGET= 1260 MW

இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் : 157.5 MW தேவை
(b) LESS : 157 .5 MW

தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50%(என்று ஊடகங்கள் சொல்வது ) 551.25 MW (ஆனால் நடைமுறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே தரபடுகிறது )
(c ) LESS HOWEVER ASSUMING 50% = 551 .25MW

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 27% இழப்பிற்கு 149 MW
(d) LESS 149 MW

தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் = 402MW.
(A) - (b)- (c) -(d) = 402MW.

இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு=322 MW .

இதுவே கல்பாக்கம் போலவே கூடன்குளமும் 40% உற்பத்தி மட்டுமே செய்தால் மாநிலத்துக்கு 30% மட்டுமே கிடத்தால் வெறும் 40 MW தான்!!

அணு உலை அமைக்கும் 13000 crores INR. & Running cost 5000 Crores INR செலவில் அதிகபட்சம் கிடக்கப்போகும் 324 MW , அல்லது குறைந்த பட்சம் கிடக்கப்போகும் 40 MW காட்டிலும் வேறு என்னதான் செய்யலாம்* ? :

1)மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு=500mw +++ .இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2)மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 27% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு=1575 mw.

3)உயிர்ம எரிபொருள்= 900 மெகாவாட்.உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .

4)வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்=5,000 மெகாவாட்.
(தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.)

இங்கு ஒரு விஷயம் கவனத்தில் கொள்க நான் அணு உலையின் பாதுகாப்பு ** என்னும் விஷயத்திற்கு போகவே இல்லை !!

மண்ணில் முழங்கால் இட்டு 25,000
மக்கள் வாழ்வாதாரம் என்னும் ரொட்டிக்கு
இறைஞ்சுகிறார்கள் .., நீங்கள்
அதிகார அணிவகுப்பு காட்டி
அம்மக்களுக்கு உரிமையான அமைதியான போராட்டத்தையும்
பறிப்பதும், தன்னலம் மறந்து தன் நிலம்
காக்க எண்ணிய 25000
கோழிக்குஞ்சுகளை தின்று ஏப்பம் விட மாநில ,மத்திய
அனகோண்ட ராட்சச பாம்புகள் என
வரிசையாய் , வாய் பிளந்து ...சரியாக படவில்லை...

பொருளாதார ரீதியாக இது ஒரு குப்பை திட்டம் என்று சொல்லவே இந்த கட்டுரை . வெறுமனே 40 MW தர போகும் , திட்டத்துக்கு 20000 Crores INR செலவழித்தும், பின் அதனை தூக்கி நிறுத்துவதற்கு முப்படை அணிவகுப்பு செலவுக்கும் , நாளை நமக்குதான் வரியாக போடுவார்கள் !

இந்திய, தமிழக அரசுக்கு வரி கட்டாமல் , அன்டர்டிகாவில் இருந்து சந்தோசமாய் காட்டு கத்து கத்தலாம் . உண்மை என்னமோ இங்கு வரி தொடர்ந்து கட்டும் கூறு கெட்ட கோமாளிகள் நாம் தானே ....




P.N :
1)*Alternative Energy Sources taken from TNEB Research articles
2) ** Author is Not Nuclear Scientist but Distinction holder in Quantitative methods in Business Application (MBA)
 நன்றி: ச. வெ .ரா  

பார்த்ததில் பிடித்தது!



பார்த்ததில் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...