|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

ஸ்டாலின் மீது நிலமோசடி புகார்...

அதிகாரத்தை பயன்படுத்தி, தன் வீட்டை அபகரித்துக் கொண்டதாக, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் ராஜாசங்கர், வேணுகோபால் ரெட்டி, சுப்பாரெட்டி உள்ளிட்டோர் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார் பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி என்பவர் போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், “ சென்னை சித்தரஞ்சன் சாலையில், எனது வீட்டிற்கு அருகிலுள்ள இடத்தை வாங்கிய முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எனது வீட்டையும் வாங்குவதற்கு முயற்சி செய்து, அதற்காக சீப்ராஸ் மற்றும் ரெயின்ட்ரீ ஓட்டல்கள் அதிபர் சுப்பா ரெட்டி, ராஜா சங்கர் (ஸ்டாலின் நண்பர்), ஸ்ரீனிவாசன் ஆகியோர், என் வீட்டிற்கு வந்து, சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை, ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இல்லையென்றால், எனக்கு பல பிரச்னைகள் வரும் என்று மிரட்டினர், அவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்து, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், கடந்தாண்டு ஜூலை 16ம் தேதி புகார் செய்ய சென்றேன். என் மனுவை வாங்க மறுத்து விட்டனர். அதன் பின், பத்திர பதிவாளரை என் வீட்டிற்கு அழைத்து வந்து, வேணுகோபால் ரெட்டி பெயரில், என் வீட்டை கிரையம் செய்து கொண்டனர். தற்போது, இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயரில், 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு, ஸ்டாலினின் மகள் செந்தாமரை குடியிருந்து வருகிறார். எனவே, என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி, தன் பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும், வேணுகோபால் ரெட்டி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது, தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், என் குடும்பத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இம்மனுவை விசாரித்த போலீசார், வேணுகோபால் ரெட்டி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தியா மீண்டும் அடிமைநாடாக மாறவிடலாமா அன்னா ஹசாரே?


சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு முறை அமல்படுத்தப்படும் பட்சத்தில், இந்தியா மீண்டும் அடிமைநாடாக மாறும் வாய்ப்பு உள்ளதாக காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ரா‌லேகான் சித்தியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது, இந்த முறையின் மூலம், நாடு மீண்டும் அந்நிய சக்திகளிடம் அ‌டிமையாகும் நிலை வருமே தவிர, நாட்டின் வளர்ச்சிக்கு ஒருபோதும் இம்முறை வழிவகுக்காது. விவசாயிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டமாக இந்த திட்டம் அமையும் என்று மத்திய அரசு கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

இம்முறையை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள், 150 ஆண்டுகளாக அடிமையில் திளைத்த இந்திய நாடு, மீண்டும் அடிமைநாடாக மாற விரும்புகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே, இங்கு செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் குடிநீர் ஆதாரம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளை பாழ்படுத்திவிட்டன. இதனால், நாட்டின் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சியை காரணம் காட்டி, அந்நிய முதலீட்டை சில்லரை வணிகத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. முதலில், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திய பின், நாட்டின் வளர்ச்சி குறித்து மத்திய அரசு கவலைப்படட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்வை தடுத்து நிறுத்தாத மத்திய அரசு, சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்‌டை அனுமதிப்பதன் மூலம், விவசாயிகள் வளமான வாழ்வை பெறுவார்கள் என்று எண்ணுவது மற்றும் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. மத்திய அரசு, வலிமை குறைந்த லோக்பால் மசோதாவை இக்கூட்டத்தொடரில் கொண்டுவர உள்ளதாக தெரிகிறது. தாங்கள் வலியுறுத்தியுள்ள வலுவான ஜன்‌லோக்பால் மசோதா கொண்டுவராதபட்சத்தில், டிசம்பர் 11ம் மீண்டும் போராட்டம் நடைபெற உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் வசிக்க சிறந்த நகரம் பெங்களூர்– பாதுகாப்பில் சென்னை!


இந்தியாவில் மக்கள் வசிக்க சிறந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. அதேசமயம், பாதுகாப்பில் சென்னைக்குதான் முதலிடம் கிடைத்துள்ளது. உலகில் வாழ தகுதியான நாடு மற்றும் நகரங்களின் வரிசை குறித்து மெர்சர் என்னும் நிறுவனம் நடுத்திய கருத்துகணிப்பில் இது வெளியிடப்பட்டுள்ளது.

2011 ஆம் நடைபெற்ற குற்ற நடவடிக்கைகள், பாதுகாப்பு சூழல், சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் உலக அளவில் மக்கள் வசிக்க சிறந்த நகரமாக ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னா நகரம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூரிச், ஆக்லாந்து போன்ற நகரங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

பெங்களூர் சிறந்த நகரம் இந்தியாவில் மக்கள் வசிக்க ஏற்ற மிகச்சிறந்த நகரமாக பெங்களூர் முதன்மை இடத்தை பெற்றுள்ளது. இது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதன்மை இடத்தை பெற்றுள்ளது. உலக அளவில் பெங்களூர் 141 இடத்தை பெற்றுள்ளது. டெல்லி 143 வது இடத்தையும், மும்பை 144 வது இடத்தையும், சென்னை 150 வது இடத்தையும், கொல்கத்தா 151 வது இடத்தையும் பெற்றுள்ளது.

பாதுகாப்பான நகரம் உலகிலேயே பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் ஐரோப்பாவில் உள்ள லுக்கம்பர்க் நகரம் முதன்மையிடத்தை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெர்ன்,ஹெல்சின்கி ஜூரிச்,வியன்னா,ஜெனிவா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. சென்னை 108 வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூர் 117 இடத்தையும், டெல்லியும், கொல்கத்தாவும், 127 வது இடத்தை பிடித்துள்ளன. மும்பை 142 வது இடத்தை பிடித்துள்ளது. 

‌‌பெங்களூரூவில் அமைந்துள்ள ஐ,டிதுறையி்ன் வளர்ச்சிமற்றும் பாதுகாப்பான வாழக்‌கை தரம் போன்வற்றால் இந்திய நகரங்களின் வரிசையிலும் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் டெல்‌லியை ப‌ொறுத்தவரையில் அரசியல் பரபரப்பும் மும்பை வர்த்தகத்துறையில் முதலிடம் பிடித்திருப்பதாலும், சென்னை, ‌கொல்கத்தா ஆகிய நகரங்கள் வளர்ந்து வரும் தொழில் துறையாலும் முக்‌கிய இடத்தை பிடித்துள்ளன.

எய்ட்ஸ் இல்லா சமூதாயம் 'ஹூ'வின் புதிய திட்டம்!



எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் உலக அளவில் எய்ட்ஸ் நோய் தாக்குதலை பூஜ்ய நிலைக்கு கொண்டு வர உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. 2011-2015 ஆண்டிற்குள் எய்ட்ஸ் நோய் தாக்குதல் இல்லாத உலகமாக மாற்றும் கருவை கொண்ட திட்டத்தை உருவாக்கியுள்ளது.

உலக அளவில் உள்ள எய்ட்ஸ் நோயளிகள் எண்ணிக்கை எய்ட்ஸ் என்னும் உயிர் கொல்லி நோயினால் உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிது புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தீவிரமாகி ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

பூஜ்ய இலக்கு நிர்ணயம் ஆண்டு தோறும் ஒரு கருவை மையமாக வைத்து எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு அதாவது 2011 – 2015 ஆண்டின் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரமாக ‘கெட்டிங் டூ ஜீரோ’ என்ற இலக்குடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது எய்ட்ஸ் நோய் தாக்குதலில் பூஜ்யம், எய்ட்ஸ் நோயினால் மரணமடைவடைகள் பூஜ்யம், ஹெச்ஐவி பாதிப்பில்லா சமுதாயத்தை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மருந்து கண்டுபிடிப்பு எய்ட்ஸ் நோயை முற்றிலும் அழிக்க அதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்பட வில்லை. அதைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் மட்டுமே கட்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலை, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து சமீபத்தில் ஆய்வில் உடலில் எச்ஐவி கிருமிகள் பரவுவதை நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன் பொருள் ஒன்றே தடுத்து நிறுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புதிய மைல் கல் இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது : நம் உடலிலேயே இருக்கும் எஸ்ஏஎம்எச்டி1 எனப்படும் புரோட்டீன், எச்ஐவி கிருமிகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுப்பதாக அமெரிக்க, பிரான்ஸ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். எச்ஐவிக்கு சங்கிலி இணைப்பு போன்ற இணைப்பை தந்து அதை பலப்படுத்தும் டீஆக்ஸி நியூக்ளியோடைட் பொருளை எஸ்ஏஎம்எச்டி1 புரோட்டீன் தகர்த்து செயலிழக்க செய்வதை தற்போது கண்டுபிடித்துள்ளோம். இதை மருந்தாக பயன்படுத்தினால், எச்ஐவி பரவாமல் தடுத்துவிடலாம். அதுபற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.

அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 28 ஆயிரத்து 596 பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவு!



 மாநிலம் முழுவதும் சத்துணவு மையம், குழந்தைகள் நல மையம், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 28 ஆயிரத்து 596 பணியிடங்களை உடனடியாக நிரப்ப முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் குழந்தைகள் மையங்களில் மின் விசிறி மற்றும் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள, 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் வளரிளம் பெண்கள் ஆகியோர் இடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதனை அகற்றி, ஊட்டச்சத்து குறைபாடற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணி திட்டத்தின்கீழ் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள 2002ம் ஆண்டு செயல்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு, ஊட்டச்சத்து குறைபாடற்ற தமிழகத்தை உருவாக்கும் வகையில், ஒரு புதிய கொள்கை வெளியிடப்பட்டது.

பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஒய்வூதியம் பெறும் முதியோர் உள்ளிட்ட 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறும் குழந்தைகள் மையங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும்; மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்; பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

கட்டமைப்பு மேம்பாடு அந்த வகையில், சொந்தக் கட்டடங்களில் செயல்படும் சிறிய பழுதுகள் உள்ள 10,372 மையங்கள் மற்றும் பெரிய பழுதுகள் உள்ள 7,449 மையங்கள், ஆக பழுதுபட்டுள்ள மொத்தம் 17,821 மையங்களை 47 கோடியே, 61 லட்சம் ரூபாய் செலவில் பழுது நீக்கி சீரமைக்க முதலமைச்சர் நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், இம் மையங்களில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக, அவர்கள் கோடைக் காலத்தில் வெப்பத்தினாலும், குளிர் காலத்தில் போதிய வெளிச்சமின்மையாலும் அவதிப்படாமல் இருக்கும் வகையில் 27 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் 45,345 குழந்தைகள் மையங்களில் உட்புற மின் கட்டமைப்பு வசதியினை ஏற்படுத்துவதுடன் மின்விசிறி மற்றும் மின் விளக்கு ஆகியவைகளை பொருத்துவதற்கும் முதலமைச்சர் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

குழந்தைகள் கழிப்பறை இது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மாசு காரணமாக குழந்தைகளுக்கு நோய் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், சுற்றுப்புறச் சுகாதாரத்தை பேணும் வண்ணம், குழந்தைகள் இளம் வயதிலேயே கழிப்பறைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், 23 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பில் 29,727 குழந்தை மையங்களில் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான கழிப்பிடங்களை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட மையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில் குழந்தைகளுக்கு புரதச் சத்துமிக்க சத்துணவு வழங்கும் பணி சிறப்பாக நடைபெறவும், தாய், சேய் நலம் காக்கும் பணிகள் செம்மையாக நடைபெறவும், பணியாளர் நியமனம் மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள 4,373 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள், 5,717 சத்துணவு சமையலர் பணியிடங்கள் மற்றும் 6,703 சமையல் உதவியாளர் பணியிடங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 4,689 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், 1,168 குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் மற்றும் 5,946 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள், ஆக மொத்தம் 28,596 பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மன்னிக்கும் மனப்பான்மை மன அழுத்தத்தை போக்கும்...


மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ள மனஅழுத்தம் மண வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தினால் எற்படும் பிரச்சினைகள் உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிடும் எனவே மன அழுத்தத்தில் இருந்து வாழ்க்கையை பாதுகாக்க சில வழிமுறைகள் 

தேவையற்ற விவாதம் வேண்டாம் மன அழுத்தம் ஏற்படுத்தும் சில சூழல்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து ஏற்படுகிறது. அதனை அப்படியே வெளியே விட்டு விட வேண்டும். வீட்டிற்குள் கொண்டு வந்து தேவையில்லாமல் அதை விவாதிக்க கூடாது. மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழல்களை சமாளிக்கப் பழகவேண்டும். தேவையில்லாமல் காட்டு கத்தல் கத்தி துணையை அச்சுறுத்தக்கூடாது.

தனிமையை நாடுங்கள் மனஅழுத்தமான சூழலில் தனிமையை நாடுவது நல்லது. அது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும். உங்கள் துணைக்கும் நீங்கள் ஏன் டிஸ்டென்ஸ் மெய்ன்டெய்ன் செய்கிறீர்கள் என்று தெரியும்.வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

உறவுகளிடம் கேளுங்கள் உங்கள் உறவுகளுடன் இனிய சூழலை கடைபிடியுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை உறவுகள் மீது திணிக்காதீர்கள். உங்களின் மன அழுத்தம் உறவுகளுக்கும் பாதிப்பபை ஏற்படுத்தும் எனவே மனதை லேசாக்கி உறவுகளை உற்சாகப்படுத்துங்கள். மன அழுத்தமான சூழ்நிலையில் உங்களின் நடவடிக்கைகள் உங்கள் உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்று கேளுங்கள்.

கவலைக்கு முற்றுப்புள்ளி கவலைதான் மன அழுத்தத்தின் ஊற்றுக்கண். எனவே கவலைக்கு கட்டுப்பாடு போடுங்கள். கவலை ஏற்படுவதை கட்டுப்படுத்துவது உங்கள் கையில்தான் இருக்கிறது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அது தானாக உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

வளைந்து கொடுங்கள் எதற்குமே வளைந்து கொடுக்காமல் இருப்பதுதான் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு சில விசயங்களில் நாணலைப்போல வளைந்து கொடுத்தால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் உளவியலாளர்கள். 

மன்னிக்கும் மனப்பான்மை என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

உலகின் முதல் பாலியல் கல்வி பள்ளி வியன்னாவில்...




பாலியல் கல்வி குறித்து இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க முதல் செக்ஸ் பள்ளி ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் தொடங்கப்பட்டுள்ளது. 16 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இங்கு மாணவர்களாக சேர்ந்து செக்ஸ் கல்வி கற்றுக் கொள்ளலாம் என்று பள்ளியின் நிறுவனரான பெண் தெரிவித்துள்ளார். செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினால் எண்ணற்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இளைய தலைமுறையினருக்கு பாலியல் கல்வியை பயிற்றுவிக்க உலகிலேயே முதல் பாலியல் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் தொடங்கப்பட்டுள்ள இந்த செக்ஸ் பள்ளியை யுவாமரியா தாம்சன் என்ற பெண் தொடங்கியுள்ளார். பாலியல் தொடர்பான பாடங்கள் இங்கு நடத்தப்படும் தியரி, பிராக்டிக்கல் என இரண்டு வகைகளில் பயிற்றுவிக்கப்படும் இந்த பள்ளியில் இதில் வீட்டுப் பாடமும் உண்டு என்று கூறியுள்ளார் பள்ளியின் நிறுவனர் யுவாமரியா தாம்சன். 

பள்ளி தொடங்கப்பட்டதன் காரணம் குறித்து யுவாமரியா கூறியதாவது:-  செக்ஸ் மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்று. அதில் அவர்கள் திருப்தி அடையாவிட்டால் பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படும். பலருக்கு செக்ஸ் பற்றி முழுமையான அறிவு இல்லை. இதனால் அவர்கள் கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே தான் செக்ஸை கற்றுக் கொடுப்பதற்காக இந்த பள்ளியை தொடங்கியுள்ளேன்.

பயிற்சி கட்டணம் எந்தெந்த முறைகளில் செக்சில் ஈடுபட வேண்டும், இதில் என்னென்ன நுட்பங்கள் உள்ளன? என்பது பற்றி முழுமையாக சொல்லி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பள்ளியில் செக்ஸ் கல்வியை முடிப்பதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஒஸ்திக்கு ரெட் கார்டு...

சன் டிவிக்கு சேட்டிலைட் உரிமையை விற்றதால் சிம்பு நடிப்பில் தரணி இயக்கியுள்ள ஒஸ்தி படத்தை வரும் 8-ம் தேதி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒஸ்தி படத்தை வரும் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமை சன் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை திரையிட தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்து, ஒஸ்திக்கு ரெட் கார்டு போடுவதாக அறிவித்துள்ளது. தங்களின் டெபாசிட் தொகையை திருப்பித் தரும் வரை சன் குழுமத்துடன் தொடர்புள்ள படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று சமீபத்தில்தான் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தது நினைவிருக்கலாம். இந்த நிலையில் ஒஸ்திக்காக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய விநியோகஸ்தர்கள் முயன்றபோது, சன் டிவி பிரச்சினையைக் காட்டி தியேட்டர் தரமறுத்துள்ளனர் உரிமையாளர்கள். சன் டிவி ரூ 2.4 கோடியை கொடுத்து தியேட்டர் உரிமையாளர்களை செட்டில் செய்தால் மட்டுமே ஒஸ்தி ரிலீசாக முடியும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

மீண்டும் கமல் தொடங்கிய மய்யம் இணைய இதழ்!



ரசிகர்களுக்காக முன்பு கமல்ஹாஸன் மய்யம் என்ற பத்திரிகையை தொடங்கி சில காலம் நடத்தினார். பின்னர் பத்திரிகை நின்றுவிட்டது. கடந்த ஆண்டு மீண்டும் மய்யம் பத்திரிகையை டேப்ளாய்டு வடிவில் நடத்த ஆரம்பித்தார். இலக்கிய அறிஞர்களை இதற்காக பிரத்தியேகமாக சந்தித்து பேட்டிகளும் எடுக்கப்பட்டன. இப்போது மய்யம் பத்திரிகை முழுமையான இணைய இதழாகிறது. ரசிகர்மன்ற நிகழ்ச்சிகள், தனது படங்கள் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள், இலக்கிய கட்டுரைகள் போன்றவற்றை இந்த இணைய தளத்தில் அப்டேட் செய்து வைக்கப்படும். இந்த தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் முடிவு செய்துள்ளார் கமல். அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது பார்வை பற்றிய கருத்துக்களையும் இதில் பதிவு செய்கிறார். மய்யம் இணையதளத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த தகவல்களை சமீபத்தில் நடந்த ஃபிக்கி மாநாட்டு செய்தியாளர் சந்திப்பில் கமல் தெரிவித்தார்.

ரூ 20 லட்சம் கடனுக்காக ரூ 1.5 கோடி சொத்துக்களை மிரட்டிப் பறித்ததாக தயாரிப்பாளர் மதுரை அன்பு!


ரூ 20 லட்சம் கடனுக்காக ரூ 1.5 கோடி சொத்துக்களை மிரட்டிப் பறித்ததாக தயாரிப்பாளர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில், பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிச்சான்குளத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். சுந்தரா டிராவல்ஸ், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க்கிடம் இன்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், "நான் கடந்த 10 வருடங்களாக படதயாரிப்பு தொழில் செய்து வருகிறேன். கடந்த 2004-ல் பட தயாரிப்புக்காக மதுரை தெற்கு மாசிவீதியை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியனிடம் ரூ.20 லட்சம் கடனாக வாங்கினேன். அப்போது அவர் ரூ.3 லட்சத்தை வட்டியாக எடுத்துக்கொண்டு ரூ.17 லட்சம் என்னிடம் கொடுத்தார். இந்த கடனை வாங்குவதற்காக எனது பெயரிலும், எனது மனைவி பெயரிலும் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் காசோலைகளையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து லட்சக்கணக்கில் பணம் செலுத்தி வந்தேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்திருந்த சொத்து ஆவணங்களை பவர் எழுதி தரும்படி அன்புசெழியன் மிரட்டினார்.  அப்போது வாங்கிய கடனுக்கு உரிய தொகையை நான் செலுத்தி விட்டதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் நீ செலுத்தியது வட்டிதான், இன்னும் அசல் வரவில்லை என்று கூறி சொத்துக்குரிய பவரை எழுதி தரும்படி மீண்டும் மிரட்டினார்.

இதையடுத்து மதுரை துரைசாமி நகரைச் சேர்ந்த முரளி என்பவரது பெயரில் பவர் எழுதி மதுரை பீ.பி.குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்து விட்டனர். இதனால் வாங்கிய கடன் ரூ.20 லட்சத்துக்கு, ரூ.1.5 கோடி தொகை கந்துவட்டி மூலம் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்காக நேற்று மாலை அன்புசெழியன் மற்றும் முரளி, ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் அழைக்கப்பட்டனர். அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து சொத்து அபகரிப்பு மற்றும் கந்து வட்டி கேட்டு மிரட்டல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியன், அவரது நண்பர்கள் முரளி, ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். நள்ளிரவு 1 மணிக்கு மாஜிஸ்திரேட்டு உமா மகேஸ்வரி வீட்டுக்கு 3 பேரையும் அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உமாமகேஸ்வரி 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை அன்பு திரையுலகில் மிகப் பெரிய சக்தியாக வலம் வந்தவர். மதுரை நகர முக்கிய பிரமுகர். கந்துவட்டி புகாரில் ஏற்கெனவே பலமுறை இவர் பெயர் அடிபட்ட நிலையில், இப்போது கைதாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகப்பட்ட காதலன் நடிகை சவுமியாவை 13 முறை கத்தியால் குத்தி...




கன்னட நடிகை சவுமியாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது காதலன் அனில்குமார் அவரை 13 முறை உடல் முழுக்க கத்தியால் குத்தினார். சவுமியாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஹுடுகா ஹுடுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சவுமியா. பெங்களூரைச் சேர்ந்த அனில் குமாரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.ஆனால் அனில்குமார் ஏற்கெனவே ரஜனி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. ரஜனியை விவாகரத்து பெற முயற்சித்து வருகிறார். இந்த விவாகரத்துக்கான வழக்குச் செலவைக்கூட சவுமியாதான் கொடுத்து வந்தாராம். 


இந்த நிலையில் சவுமியா நடத்தையில் அனில்குமாருக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது. சினிமா உலகில் வேறு சிலருடன் சவுமியா தொடர்பு வைத்து இருப்பதாக கருதினார். இதனால் அவரை பின் தொடர்ந்து சென்று கண்காணித்து வந்தார். சவுமியா சில இளைஞர்களுடன் நெருக்கமாக சிரித்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் ஏற்பட்டது. பாய்ந்து சென்று சவுமியாவை கத்தியால் குத்தினார். கழுத்து, வயிறு, வலதுகை போன்ற பகுதிகளில் பலமுறை சர மாரியாகக் குத்தினார். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சவுமியாவை யலஹங்காவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தகவல் அறிந்ததும் போலீசார் அனில்குமார் வீட்டுக்குச் சென்றனர். போலீசை பார்த்ததும் அனில்குமார் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். ஆனால் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.சில தினங்களுக்கு முன் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மனைவியைக் குத்திக் கொல்ல முயன்றது நினைவிருக்கலாம்.

வை-கியர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்!


உலக கணினி சந்தையில் ஆன்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் ஆப்பிள் நிறுவனம் தனக்கென்று தனி முத்திரையை பதித்து வருகிறது. தற்போது வை-கியர் என்ற ப்ளூடூத் ஹெட்செட் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துகிறது. மேக், மேக்புக், ஐபோன் மற்றும் ஐபாட் ஆகியவை ஆப்பிள் நிறுவனத்துக்கு அபாரமான வெற்றியைத் தேடித் தந்துள்ளன. ஆனால் ஆப்பிள் தனது பிரபல ஐஒஎஸ் இயங்கு தளத்திற்கு தேவையான சரியான புளூடூத் ஹெட்செட்டுகளை கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.
வை-கியர் நிறுவனம் தரமான புளூடுத் ஹெட்செட்டுகளை வழங்கி வந்தது. குறிப்பாக ஐஒஎஸ் இயங்கு தளத்திற்கு தேவையான ஹெட்செட்டுகளை வை-கியர் வழங்கி வந்தது. தற்போது இந்த நிறுவனம் ஆப்பிளுக்கு சொந்தமாகிவிட்டது. தனது புளூடூத் ஹெட்போன்களை வழங்குவதற்காகவே இந்த நிறுவனத்தை ஆப்பிள் வாங்கி இருக்கிறது.
வை-கியர் வழங்கும் இந்த ஸ்டீரியோ புளூடூத் ஹெட்போன்கள் ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் சாதனங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே ஆப்பிள் ஒரு புளூடூத் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த ஹெட்செட் தரமாக இல்லாததால் ஆப்பிள் அதை கைவிட்டு விட்டது.
இப்போது ஆப்பிள் ஏ2டிபி தொழில் நுட்பத்துடன் கூடிய உயர்தர புளூடூத் ஸ்டீரியோ ஹெட்போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஹெட்போன்கள் ஐமஃப்ஸ் என்று அழைக்கப்படும். இந்த ஐமஃப் ஹெட்போன்கள் மிகத் துல்லியமான இசையை வழங்குவதோடு வெளிப்புறத்திலிருந்து வரும் இரைச்சலை தடுத்துவிடும். மேலும் மிக மென்மையான இயர் பட்சுக்களைக் கொண்டிருக்கும். இதன் இசை 40 அடி தொலைவிற்கு அருமையாக கேட்கும்.
இந்த புதிய ஹெட்போன் உரையாடலை மிகத் தெளிவாக வழங்கும். அதுபோல் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே இந்த ஹெட்போனில் போன் அழைப்புகளையும் எளிதாக பேச முடியும். உரையாடல் முடிந்தவுடன் இந்த ஹெட்போன் மியூசிக் மோடுக்கு மாறிவிடும். மேலும் இந்த ஐமஃப்ஸ் ஹெட்போனைப் பற்றி வேறு தகவல்கள் இன்னும் வரவில்லை.

ரஜினி பிறந்த நாள் ஆரம்பம்!

 ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பும் ரசிகர்களுக்காக 'ரசிகன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் வாகனத்தை இயக்குகிறது விஜய் டிவி. திங்கள்கிழமை காலை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவிலிருந்து புறப்பட்ட இந்த வாகனம் தமிழகமெங்கும் ஒரு ரவுண்ட் அடித்து ரசிகர்களின் வாழ்த்துக்களைச் சுமந்துகொண்டு மீண்டும் வரும் டிசம்பர் 10-ம் தேதி சென்னை வந்து சேர்கிறது. எதற்காக இந்த எக்ஸ்பிரஸ்? "ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே உண்டு. நேரில் சொல்ல முடியாதவர்களின் வசதிக்காக இந்த வாகனம் அவர்கள் இருக்குமிடத்துக்கே சென்று ரஜினிக்கு ரசிகனின் வாழ்த்துக்களைச் சேகரித்துக் கொண்டு வருகிறது. அனைத்து ரசிகர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாழ்த்துக்கள் பின்னர் தலைவருக்கு சேர்க்கப்படும்," என்றார் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் என் ராமதாஸ்.

இந்தப் பேருந்தை ஏவி எம் சரவணன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 62 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைத்து பேருந்தை வழியனுப்பி வைத்தனர் சென்னை மற்றும் சுற்றுப் புறங்களிலிருந்து வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள். சைதை பகுதி தலைமை மன்றத்திலிருந்து சைதை ரவி, ரசிகர்களுடன் வந்து பேனர் வைத்து கலக்கியிருந்தார். அவருடன் சைதை முருகன், தாம்பரம் கேசவன், தி நகர் பழனி, பிஆர்ஓ ரியாஸ் உள்பட பலரும் பங்கேற்றனர். இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், ஏற்கெனவே சேலம், நாமக்கல் மாவடங்களைக் கடந்து, நாளை ஈரோடு செல்கிறது. டிசம்பர் 2-ம் தேதி கோவை, டிசம்பர் 3-ல் திருப்பூர், கரூர், காங்கேயம், டிசம்பர் 4 -ம் தேதி மதுரை, டிசம்பர் 5-ம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, டிசம்பர் 6-ம் தேதி திருச்சி, டிசம்பர் 7-ம் தேதி கும்பகோணம், சிதம்பரம், டிசம்பர் 8-ம் தேதி கடலூர், பாண்டி, டிசம்பர் 9-ம் தேதி வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் பயணிக்கிறது. டிசம்பர் 10-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறது.

ஐஎம் தீவிரவாதிகள் பட்டியலில் சென்னை ரங்கநாதன் தெரு, ரிச்சி தெரு!



இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் சென்னையில் உள்ள சில முக்கிய இடங்களைத் தகர்க்க திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் அப்துல் ரஹ்மான், முகமது இர்ஷாத் கான்(52) ஆகிய 2 பேரும் சென்னையில் சிக்கினர்.

அப்துல் ரஹ்மான் சேலையூர் சந்தோஷபுரத்தில் தங்கி ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தான். டெல்லியில் இருந்து வந்த அவனுடைய மாமா இர்ஷாத்கான் அவனுடன் தங்கி இருந்தான். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இம்ரான் என்ற ஆசிப் கடந்த வாரம் சென்னைக்கு வந்து ரஹ்மானுடன் தங்கியுள்ளான். அவர்கள் 3 பேரும் சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரங்கநாதன் தெரு,ரிச்சி தெரு, பாரி முனை, பர்மா பஜார் உள்ளிட்ட பல இடங்களில் 2 நாட்கள் நோட்டமிட்டுள்ளனர். அதுவும் எந்த நேரத்தில் கூட்டம் அதிகம் உள்ளது. எப்பொழுது குண்டு வைத்தால் உயிர் இழப்பு அதிகம் இருக்கும் என்று நோட்டமிட்டுள்ளனர்.

இம்ரான் அப்துல் ரஹ்மானுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்ரானுடன் தொடர்புடைய 25 பேர் சென்னையில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சென்னையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ரகசிய தளம் அமைக்கப் போட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. ரிச்சி தெருவுக்கு சென்றிருந்தபோது இம்ரான் ஒரு லேப்டாப் வாங்கி அப்துல் ரஹ்மானுக்கு பரிசாகக் கொடுத்துள்ளான். சனிக்கிழமை இம்ரான் ரிச்சி தெருவுக்கு சென்றுள்ளான் மறுநாள் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டான். இம்ரான் சென்னையில் பதுங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ரிச்சி தெருவில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் கடந்த வாரம் பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று சந்தேகப்படும் 100 இடங்களில் சாதாரண உடை அணிந்த போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் சென்னையைத் தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய ஹோட்டல்கள், விடுதிகள் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே வாகனச் சோதனையும் நடத்தப்படுகிறது.

48 மணி நேரத்தில் ஈரானிய தூதரகத்தை மூட இங்கிலாந்து உத்தரவு!


பிரிட்டனில் உள்ள ஈரானிய தூதரகத்தை 48 மணி நேரத்துக்குள் மூட இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது.மேலும் ஈரானின் தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரும் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 5வது இடத்தில் உள்ள ஈரான், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட பல ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இங்கிலாந்தும் பொருளாதாரத் தடையை விதித்தது. இதை எதிர்த்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது.

அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துக்குள் புகுந்து சூறையாடினர். மேலும், இங்கிலாந்தின் யூனியன் ஜேக் கொடியை இறக்கி தீ வைத்து எரித்ததோடு இமாம் ஹூசேனின் கொடியை ஏற்றினர். தூதரகத்தில் இருந்த இங்கிலாந்து ராணியின் படம் மற்றும் அரச கிரீடம் போன்றவற்றையும் வெளியே தூக்கி வந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஈரான் வருத்தம் தெரிவித்த போதிலும், இங்கிலாந்து அரசு அதை ஏற்கவில்லை. இதுபோன்ற செயல்கள் நீடித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான உறவில் கடுமையான சிக்கல்கள் ஏற்படும் என்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரித்திருந்தார். இந் நிலையில், ஈரான் நாட்டில் உள்ள அனைத்து இங்கிலாந்து தூதரகங்களையும் மூடவும் கேமரூன் உத்தரவிட்டார். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இங்கிலாந்து திரும்பி வருகின்றனர்

இதைத் தொடர்ந்து லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்தையும் மூட இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது. ஈரானின் தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரும் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தூதரகத்தில் 18 ஈரானிய அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைத் தொடர்ந்து நார்வேயும் ஈரான் நாட்டில் உள்ள தனது தூதரகத்தை தாற்காலிகமாக மூடியுள்ளது. ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகியவை தங்களது தூதர்களை திரும்ப அழைத்துள்ளன. இந் நிலையில் ஈரான் மீது மேலும் புதிய தடைகளை விதிப்பது குறித்து ஆலோசிக்க இன்று ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடி விவாதிக்கவுள்ளனர். ஈரானிய கச்சா எண்ணெய்யை வாங்குவதை முழுமையாக தவிர்ப்பது குறித்து இவர்கள் விவாதிக்க உள்ளனர். இதன்மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்க திட்டமிட்டுள்ளனர்.

விபச்சாரியை மேயர் ஆக்கினால் இப்படித்தான்...!

தேர்தலுக்கு முன்னாடியே வாக்காளர் சிந்திக்க... இம் இப்ப இப்படிதான்!
ஈரோட்டில் காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து மேயர் மல்லிகா பரமசிவம் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் போட்டோகிராபர் காயமடைந்தார். மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஈரோடு நகர பத்திரிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

ஈரோடு மாநகர மேயராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவர் அதிமுக அமைச்சர் ராமலிங்கத்தின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. துணை மேயராக இருக்கும் கே.சி.பழனிச்சாமி அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர் என்பதால் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் திங்கட்கிழமையன்று மாநகராட்சி கட்டடங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயரை அதிமுகவினர் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று காலைக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மேயர் மல்லிகா பரமசிவம், செவ்வாய்கிழமையன்று ஈரோடில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்தில் புகுந்து, அங்கிருந்த பொருட்களை தள்ளியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்த காலைக்கதிர் புகைப்படக்காரர் சண்முகத்தை அடித்து கீழே தள்ளியுள்ளனர். தடுக்க வந்த செய்தியாளர் கணேசன் என்பவரும் தாக்கப்பட்டார். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேயரும், அவருடன் வந்தவர்களும் அலுவலகத்தில் இருந்தவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பத்திரிக்கையாளர்கள் ஆவேசம் இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, காலைக்கதிர் நிர்வாகத்தினர் தங்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து செய்தியாளர், புகைப்படக்காரர், அலுவலக உதவியாளர்களை அடித்து பொருட்களை சூறையாடியதாக ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், அவரது உதவியாளர் விஜயா, மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர். மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு நகர பத்திரிக்கையாளர்களும் புகார் மனு அளித்துள்ளனர்.  

இன்னும் ஒரு முறை இந்தியாவை பாகிஸ்தான் தாக்கினால்... அமெரிக்கா எச்சரிக்கை!


இன்னொரு முறை பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த தீவிரவாத அமைப்பாவது இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கீழ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஓய்வு பெற்ற ஜெனரல் ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறியதாவது, இன்னொரு முறை பாகிஸ்தானைச் சேர்ந்த யாராவது இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அந்நாடு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு தலைவர்களிடம் அமெரிக்க உயர் அதிகாரிகள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். 


நானும், எனக்கு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாக இருந்தவர்களும், அமெரிக்க அரசும் பல முறை பாகிஸ்தானை எச்சரித்தாகிவிட்டது. ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்வதாகவே இல்லை. இன்னும் ஒரு முறை பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இனியும் பொறுமையாக இருக்க மாட்டார். பாகிஸ்தான் மட்டும் தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்பதை நிறுத்தினால் அந்நாட்டிற்குத் தேவையான உதவிகளை செய்ய உலகத் தலைவர்கள் தயாராக உள்ளனர்.  கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகும் பிரதமர் மன்மோகன் சிங் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பதை பாராட்டுகிறேன் என்றார்.

ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 95வது இடம்!


உலக அளவில் ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் இந்தியா 95 இடத்தை பிடித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானை விட இது பரவாயில்லை ரகம் என்றாலும் சீனாவிட நமது நாடு ஊழலில் மோசமாக உள்ளது. ஊழலுக்கு எதிராக சர்வதேச அளவில் போராடி வரும் டிரான்பரன்சி இண்டர்நேசனல் என்ற சர்வதேச அமைப்பு, ஊழல்குறைந்த நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பை சமீபத்தில் நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து முதலிடம் 183 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்கள் முறையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, சர்வதேச அளவில் ஊழல் குறைந்த நாடாக நியூசிலாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நாடு 9.5 சதவிகித மதிப்பெண்களை பெற்றுள்ளது.

இந்தியா 95: இதனைத் தொடர்ந்து மற்ற இடங்களில் டென்மார்க், பின்லாந்து, சுவீடன், சிங்கப்பூர், நார்வே, நெதர்லாந்து ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து , கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. இதில், 8வது இடத்தை ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன. மொத்தமுள்ள 183 நாடுகளில், மூ்னறில் 2 பங்கு நாடுகள் 5 சதவீதத்திற்கு குறைவான கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்ணை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. இந்தியா 3.1 கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்களுடன் 95வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் சீனா 75வது இடத்திலும், பாகிஸ்தான், 134 இடத்தில் உள்ளது

பின்னுக்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலியா: கடந்தாண்டு வெளியான ஊழல்குறைந்த நாடுகள் பட்டியலில், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, தற்போது 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பட்டியலின் இறுதியில் உள்ள சோமாலியா நாடு, வடகொரியா போன்ற நாடுகள் 1 சதவீத கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்‌ணை பெற்று மிகமோசமான இடத்தை பிடித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சி 8.4%லிருந்து 6.9% ஆக சரிந்தது!


இந்தியப் பொருளாதார கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெரும் பண வீக்கமும், மிக அதிகமான வட்டி விகிதங்களும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை பெருமளவில் சரியச் செய்துள்ளன. செப்டம்பர் வரையிலான கடந்த 3 மாத காலத்தில், நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் (GDP) வளர்ச்சி 6.9 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 8.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இரும்பு, சிமெண்ட், நிலக்கரி உள்ளிட்ட 8 முக்கிய உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி மாபெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு 7.2 சதவீதமாக இருந்த இந்தத் துறையின் வளர்ச்சி 2.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 16 சதவீதத்தை இந்தத் துறை தான் பூர்த்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, சந்தையில் உள்ள நிதியைக் குறைக்க வங்கிகளின் வட்டி விகிதங்களை அதிகரித்தது. ஆனால், வட்டி விகிதங்கள் மிகவும் அதிகரித்துவிட்டதால், வீடுகள் கட்டுவதும், வாகனங்கள் வாகனங்குவதும் குறைந்துவிட்டது. கட்டுமானப் பணிகள் குறைந்துவிட்டதால் இரும்பு, சிமெண்ட் உற்பத்தியும் குறைக்கப்பட்டுவிட்டது. அதே போல வாகனங்களின் விற்பனை குறைந்துவிட்டதால், இரும்பு உற்பத்தியும் குறைக்கப்பட்டுவிட்டது.

கடந்த 2010-11ம் ஆண்டில் 8.5 சதவீத வளர்ச்சியைக் காட்டிய இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 3 மாதங்களில் 6.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், இந்தியப் பொருளாதாரத்தையும் தாக்கும் என்பதால், அடுத்த சில ஆண்டுகள் இந்தியாவுக்கு பெரும் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முன்னதாக 2012ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக தாக்குப் பிடிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், இது 6.9 சதவீதமாக சரியும் என்று மோர்கன் ஸ்டான்லி சர்வதேச நிதி ஆலோசனை அமைப்பு எச்சரித்துள்ளது.

அன்னிய முதலீடு மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க திமுக முடிவு?!


சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிர்க் கட்சிகளோடு சேர்த்து காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு வலுத்து வருவதையடுத்து, இந்த விவகாரத்தில் திமுக மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக முயன்று வருகிறார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக, இரு அவைகளிலும் ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ள காங்கிரஸ், அதற்கான நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது. அரசின் மீது ஓட்டெடுப்பு நடந்தால், ஆதரித்து வாக்களிக்க திமுக ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் இன்று நாடாளுமன்றம் 5வது நாளாக முடங்கியது. இந்த பிரச்சினை குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மான விவாதத்தை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக கோரி வருகிறது. இதையடுத்து திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் கட்சி இன்று நாடியது. இதில் திமுகவின் ஆதரவு மத்திய அரசுக்குக் கிடைத்துவிட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மூத்த எம்பிக்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பண்டோபாத்யாயா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, முஸ்லீம் லீக் கட்சியின் இ.அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களிடம் அன்னிய முதலீடு குறித்து வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா விளக்கினார். 
அப்போது நாடாளுமன்றத்தை இயங்க வைக்க உதவுமாறும், ஓட்டெடுப்பு நடந்தால் அரசை ஆதரித்து வாக்களிக்குமாறும் அவர்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும் இந்தச் சந்திப்பின்போது, அன்னிய முதலீடு முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று அவர்களிடம் பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அப்போது, அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று கோரிய டி.ஆர்.பாலு, அரசை ஆதரித்து வாக்களிப்போம் என்று உறுதிமொழியும் தந்ததாகத் தெரிகிறது.

இக் கூட்டத்தையடுத்து நி்ருபர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்பதை திமுக எதிர்க்கிறது. இதனால் சில்லறை வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவர். ஆனாலும், நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளோம். அதனால் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடந்தால், அரசை ஆதரித்து வாக்களிப்போம். இந்தப் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், ஒருமித்த கருத்தை எட்ட முயல வேண்டும் என்றார். அதே போல அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் 

இதனால் திமுகவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, அரசுக்கு எதிராக ஓட்டளிக்க மாட்டோம் என்று திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரதமரிடம் தனது நிலையைத் தெளிவாக்கவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அன்னிய முதலீடு திட்டத்தை திரிணமூல் வெளியில் எதிர்ப்பதாகவும், தேர்தலுக்குப் பின் மத்திய அரசின் முடிவை அந்தக் கட்சி ஆதரிக்கும் என்று தெரிகிறது. அதுவரை அந்தக் கட்சி அன்னிய முதலீட்டுக்கு எதிராக சும்மா சத்தம் போடும் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே நேற்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பாஜக தலைவர் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து இந்த விஷயத்தில் பாஜக தனது எதிர்ப்பு நிலையை கொஞ்சம் கைவிட்டு நாடாளுமன்றத்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், அன்னிய முதலீடு என்ற திட்டத்தையே மத்திய அரசு வாபஸ் பெற்றால் தான் நாடாளுமன்றத்தை செயல்பட விடுவோம் என்று அத்வானி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மேலிட குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் அகமது பட்டேல் ஆகியோர் பங்கேற்றனர்.மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, அன்னிய நேரடி முதலீடு முடிவு குறித்து விளக்கம் தந்தார். இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனையில் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டு வரும் ஓட்டெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மான விவாதத்தை ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டும் என்றால் முதலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தான் இன்று திமுக, திரிணமூல் காங்கிரசுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவும், திரிணமூல் காங்கிரசும் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் மக்களவையில் 282 வாக்குகள் கிடைக்கும். இவர்களின் வாக்கு கிடைக்காவிட்டால் 264 வாக்குகள் தான் கிடைக்கும், இது பெரும்பான்மையைவிட 8 ஓட்டுகள் குறைவாகும். இதனால் அரசே கவிழும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு கட்சிகளுக்கும் தலா 18 எம்பிக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலசிங்கத்தை ஓரங்கட்ட நினைத்ததா விடுதலைப் புலி விக்கிலீக்ஸ்!



விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான ஆன்டன் பாலசிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமாதான நகர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன என்று இலங்கை அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார் என்று 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய அமெரிக்கத் தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பியுள்ள கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அச்செய்திக் குறிப்பில் சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாக ஆன்டன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதுகின்றனர். கிழக்கில் கடும் போக்குடைய கருணா, கரிகாலன் ஆகியோருக்கும் வடக்கில் இருந்த புலிகளுக்கும் இடையேயான உறவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தத் தகவலை புலிகளின் தொடர்பாடலை ஊடறுத்துக் கேட்ட போது தெரியவந்துள்ளதாக மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். எனினும் அத்தகவலின் உறுதித் தன்மை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. சமாதான நடவடிக்கைகள் புலிகளின் ராணுவ தயார் நிலையை மோசமாகப் பாதித்திருப்பதாக புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் பானு உட்பட பலர் கருதினர். எந்த முடிவுகளையும் இறுதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனே எடுப்பார். எனினும் அவரின் முடிவுகளில் அதிக தாக்கம் செலுத்துவோராக கடும் போக்குடைய புலித்தலைவர்களே இருந்தனர். அத்தகைய கடும்போக்குடைய புலிகள் சமாதான நடவடிக்கைகளில் இருந்து பாலசிங்கத்தை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறு அமெரிக்கத் தூதர் கேபிள் தகவல் அனுப்பியதை விக்கிலீக்ஸ் இப்போது வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மாணவன் 85 சதவீத மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி !

இலங்கையில் தமிழ் மாணவர்கள் 85 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும் நிலை உள்ளதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார். நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நளா அரங்கில் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜசோழன் கட்டினார். கரிகாலன் கல்லணையை கட்டினார். திருவள்ளூவர் திருக்குறளை இயற்றினார். இதுபோன்று தமிழர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினர். இலங்கை ராணுவத்தில் ஒரு தமிழர்கூட இல்லை. அப்படியானால் அவர்கள் தமிழர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இலங்கையில் சிங்கள மாணவர்கள் 35 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வில் வெற்றி பெறலாம். ஆனால் தமிழ் சமுதாயத்தை சேர்ந்த மாணவன் 85 சதவீத மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும்.

பெரியாறைக் காக்க உண்ணாவிரதம் வைகோ...


தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் நாம், எல்லை மீறிய பொறுமையை கடைபிடித்து வருகிறோம். குட்டக் குட்டக் குனியும் நிலைக்கு நாம் ஆளாகிவிடக்கூடாது. நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்தும், உண்மை நிலை குறித்தும்  தமிழ் நாட்டின் பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் தயாரித்துள்ள குறுந்தட்டுகள் தமிழகம் முழுவதிலும் விநியோகிக்கப்பட வேண்டும். 

முல்லைப் பெரியாறு அணையைக் காக்கும் பிரச்சாரப் பயணத்தை நானும், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் அவர்களும் டிசம்பர்  7 தேதி, மதுரையில் இருந்து கூடலூர் வரை மேற்கொள்கிறோம். டிசம்பர் 8 ஆம் தேதி அன்று முல்லைப் பெரியாரைக் காக்க கம்பம் நகரில் என்னுடைய தலைமையில், கம்பம் அப்பாஸ் முன்னிலையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைப்பார். விவசாய சங்கத் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் போராட்டத்தை ஆதரித்துப் பேசுவார்கள். பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை நிறைவு செய்வார். 

கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துகின்ற முற்றுகைப் போராட்டம் ஜனவரி 21 ஆம் தேதி நடத்துவதாக திருச்சியில் அறிவித்து இருந்தோம். தற்போது அந்தப் போராட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகள், அமைப்புகள்  அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், தமிழ் நாட்டின் உரிமையைக் காக்க இந்தப் போராட்டங்களுக்கு விவசாயிகளும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்

முதல்வரையும் விசாரிக்கும் லோக்ஆயுக்த மசோதா பீகாரில் அறிமுகம்!

பீகார் அரசு லோக் ஆயுக்த மசோதாவை வியாழன் அறிமுகப் படுத்தியது. மாநில முதல்வரையும் விசாரிக்கும் வண்ணம் லோக் ஆயுக்த வரம்புக்குள் கொண்டுவந்து, இந்த மசோதா கொணரப்படும். வெள்ளிக்கிழமை தொடங்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாநிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய முஜாஹிதீன் பற்றி துப்பு தருவோருக்கு ரூ. 15 லட்சம் தில்லி போலீஸ்!


 இந்திய முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய நபரான யாசின் பக்தல் என்கிற இம்ரான் பற்றி தகவல் தருவோருக்கு ரூ. 15 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தில்லி போலீசார் அறிவித்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 பாகிஸ்தானியர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான இம்ரான் தப்பியோடிவிட்டார். இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு வெகுமதி அளிக்கப்படும் என தில்லி போலீசார் அறிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இவரைப் பற்றி துப்பு தருவோருக்கு ரூ. 3 லட்சம் வெகுமதி அளிக்கப்டும் என அறிவிக்கப்பட்டது. 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட பிறகு, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத செயல்களுக்கு இம்ரான்தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் பத்கல் என்ற இடத்தைச் சேர்ந்தயவ் யாசின். 2007-ம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகள் வெளிநாடுகளில் தங்கி பயிற்சி பெற்றுள்ளார் யாசின். தனது சகோதரர் இக்பால்,ரியாஸ் ஆகியோருடன் சேர்ந்து கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் சுற்றியுள்ளார். பின்னர் அங்கிருந்து புணேக்குச் சென்று, அங்கிருந்து செயல்பட்டுள்ளனர். 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி சித்திக், யாசின் ஆகியோர் குண்டு வைத்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். 

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக யாசின் மீது 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தவிர, இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மகாராஷ்டிரத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு  போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 2010-ல் ஜெர்மன் பேக்கரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இவருக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கின்றனர். தில்லியில் ஜும்மா மஸ்ஜித்துக்கு வெளியே செப்டம்பர் 19, 2010-ல் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு மற்றும் தைவான் ஊடகத்தின் மீது நடத்திய தாக்குதலில் இவருக்கு தொடர்பிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்திய முஜாஹிதீன்கள் செயல்பாடுகளுக்குத் தேவையான நிதி, பொருள்கள் விநியோகம் உள்ளிட்டவற்றை யாசின் மேற்கொண்டதாக போலீசார் கருதுகின்றனர். 2008-ம் ஆண்டு தில்லியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்குப் பிறகுதான் யாசினின் பெயர் போலீசாரின் குற்றப் பட்டியலில் அதிகம் பதிவானது. 

விசாரணை: இதனிடையே கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடத்த மும்பை பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) போலீசார் முடிவு செய்துள்ளனர். ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக ஏடிஎஸ் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் தில்லிக்குச் சென்றுள்ளனர். புணே, பெங்களூர், தில்லி ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் இவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

யோசிக்கதெரியாத கோழைப்பெண்கள்!



பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், பழக்கம்  ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறி.  செல்போன் மூலமாக தங்களது காதலை வளர்ந்து வந்தனர். இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரியாது.

இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஒருவருக்கும், மாணவிக்கும் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் தான் இன்னொருவரை காதலிப்பதை மாணவி பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்தார். நேற்று காலை திருமணத்தையொட்டி மண்டபம் உறவினர்களால் களை கட்டியது. முகூர்த்த நேரம் நெருங்கியதும், மாணவி திடீரென்று மணமகன் கட்ட வந்த தாலியை தட்டி விட்டார். தான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாகவும், எனவே எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்றும் கூறினார். இதனால் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும், திரு மணத்திற்கு வந்திருந்த உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தால் பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருமண மண்டபம் போர்க்களமானது. இதற்கிடையே மணப்பெண் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரது உறவினர்கள் மணப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் மாப்பிள்ளை, பெண் வீட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் அடைந்து திரும்பி சென்றனர். தற்கொலை செய்ய முயன்றதால், மணப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பெண்னின் முடிவால் இரு வீட்டாரும் இப்பழுது அசிங்கப்பட்டு சரியான காலத்தில் எடுக்காத முடிவு...? 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...