ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
31 January, 2013
வரைமுறையைக் கடைபிடிக்காமல், உடற்பயிற்சியை செய்தால் பலன்?
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலை பராமரித்துக் கொள்ளுதல் மிக அவசியம்.
சிலர் உடல் கட்டுமானத்துடன் வைத்து கொள்ள விரும்புவர். அப்படி உடல்
கட்டுமானத்துடன் இருக்கையில், எத்தகைய உணவுகளை உண்ண வேண்டும் என்று ஒரு
வரைமுறை உள்ளது. அந்த வரைமுறையைக் கடைபிடிக்காமல், எந்த ஒரு உடற்பயிற்சியை
செய்தாலும் அது பலன் தராது.
இவ்வாறு மேற்கொள்வதால் நம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை நீக்கி, உடலுக்கு
ஏற்ற எடையை தயார் செய்து, ஆரோக்கியமான உடலமைப்பைக் கொடுக்கும். இப்போது
எதை சாப்பிடலாம், எதை சாப்பிடகூடாது மற்றும் எந்த வகையான உணவுகள் உடல்
கட்டுமானத்திற்கு ஏற்றது
1. நம் உடலை கட்டுமானத்துடன் வைக்க அடிப்படைத் தேவை புரதம் மற்றும்
நார்ச்சத்து உள்ள உணவுகள், குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புள்ள
உணவை சாப்பிட வேண்டும். அதற்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ள உணவு திட்டத்தை
பின்பற்றவும். மசாலா அதிகமுள்ள உணவை தவிர்க்கவும். சர்க்கரை அதிகம்
சேர்த்துக் கொள்ள வேண்டாம். காலைளில் குடிக்கும் டீ அல்லது காப்பியில்,
சர்க்கரை அல்லது கிரீம் சேர்த்து கொள்ள விரும்பினால், ஆடை இல்லாத பால்
பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு நல்லது.
2. ஒவ்வொரு 2-3 மணிநேர இடைவெளியில் உணவு சாப்பிட வேண்டும். உடல்
கட்டுமானத்தை வலியுறுத்த புரதங்கள் கொண்ட உணவினையும், உங்கள் உணவில் அதிக
காய்கறிகளை சேர்த்து கொள்வதும் அவசியம். மேலும் நார்சத்து நிறைந்த உணவை
சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலானது சரியான நிலையில் இருக்க உதவும்.
ஒருவேளை ஒரு நேரம் உணவை சாப்பிடவில்லை எனில், அதை ஈடு செய்ய அடுத்த உணவு
நேரத்தில் சேர்த்து சாப்பிடக்கூடாது.
3. காலையில் ஆளிவிதை 1 டீஸ்பூன் அப்படியே எடுத்து கொள்ள வேண்டும் அல்லது
பாலில் ஆளிவிதை தூள் சேர்த்து குடிக்க வேண்டும். சில சமயங்களில் அதை
சமையலில் சீரகத்தை பயன்படுத்துவது போல், சப்பாத்தி, சாலட், மோர், பொரியல்
ஆகியவற்றில் தூவி பயன்படுத்தலாம். ஆளிவிதை எண்ணெய்கள் பல கடைகளில்
கிடைக்கும். எனவே அந்த எண்ணெய்களை பயன்படுத்தி கூட சமைத்து சாப்பிடலாம்.
இதனால் மூட்டுகளில் வலி ஏற்படாமல் தடுக்கும்.
4. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஏனெனில் சிலர் நீர்ப்போக்கு இருப்பதை
அறியாமல் பசிக்குது என்று குழப்பத்தில் இருப்பர். எனவே எடையை இரண்டாக
பிரித்து பார்த்து, அதன் வழியில் நாம் தண்ணீர் குடிப்பது ஒரு பொதுவான வழி.
எடுத்துக்காட்டாக, நீங்கள் 150 பவுண்ட் எடை என்றால், நீங்கள் தினமும் 75
அவுன்ஸ் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யவும். மெட்ரிக் முறையில்
பயன்படுத்துவோர், உங்கள் எடையை (கிலோகிராம்) முறையில் 30 ஆல் வகுத்து
கொள்ளவும். உதாரணமாக, 70 கிலோ எடையுள்ளவர், ஒரு நாளைக்கு 2.3 லிட்டர்
தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி செய்பவராக இருந்தால்,
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
குறிப்புகள்:
குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்தது 23 கிராம் புரதச்சத்து கொண்ட உணவை
எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை அளவு 3 கிராமிற்கு குறைந்து இருக்க
வேண்டும். பல கடைகளில் சர்க்கரை இல்லாத பண்டங்கள் கிடைக்கின்றன. அவற்றை
வாங்கும் முன் ஒருமுறை அதனை பற்றி நன்கு தெரிந்துகொண்டு உபயோகித்தல் நல்லது
இடப் பெயர்வினால் எச்ஐவி இந்தியாவில் அதிகரித்து?
பெரிய அளவில் நடைபெறும் இடப் பெயர்வினால் எச்ஐவி பாதிப்பு இந்தியாவில்
வேகமாக அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில்
தெரியவந்துள்ளது.
இன்றைக்கு கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாடு முழுவதும்
உள்ள மக்கள் பல்வேறு ஊர்களுக்கும் பெருமளவில் மக்கள் இடம் பெயர்கின்றனர்.
இவ்வாறு கூட்டம் கூடடமாக இடம் பெயர்ந்து போவதன் காரணமாக எச்ஐவி பரவலும்,
எய்ட்ஸ் பரவலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாம்.இது அபாயகரமான நிலையை
நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு!
2001 இந்தியமக்கள் தொகைக் கணக்குப்படி இந்திய மக்கள் தொகையில்
மூன்றில் ஒரு பங்குப் பேர் இடம் பெயர்ந்தோர் ஆவர். அதாவது 27.4 சதவிகிதம்
பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.பொது மக்கள் தொகையை விட இந்த இடம் பெயர்ந்தோர் மத்தியில் எச்ஐவி பரவல்
கூடுதலாக இருப்பதாக, அதாவது 10 மடங்கு அதிகமாக இருப்பதாக தேசிய எய்ட்ஸ்
கட்டுப்பாட்டு கழகம்,மகாராஷ்டிரவில் 2009 கணக்குப்படி 18..6 சதவீதம் பேருக்கு பாலியல்
வியாதிகள் இருந்ததாம். இவர்களில் 45 சதவீதம் பேர் முறையான சிகிச்சை
பெறவில்லை. 76 சதவீதம் பேர் எய்ட்ஸ், எச்ஐவியின் சீரியஸ் தன்மை குறித்து
தெரிந்திருக்கவில்லை. 13 சதவீதம் பேர்தான முறையான சிகிச்சை பெற்றனர் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் சுமார் 21 லட்சம் பேர் இந்த
நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 சதவிகிதம் 15 வயதுக்
குட்டபட்டவர்களும், 86 சதவிகிதம் 15 முதல் 49 வயதுக் குட்பட்டோரும்
அடங்கும். இதில் 39 சதவிகிதம் அதாவது 8 லட்சத்து 16 ஆயிரம் குடும்பப்
பெண்கள் எய்ட்ஸ் நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது வருந்தத்தக்க
விஷயம்.நாடு முழுவதிலும் உள்ள செக்ஸ் தொழிலாளர்களிடையே குறிப்பாக பெண்களிடையே
எய்ட்ஸ் நோய் கணிசமாகக் குறைந் துள்ளதாக ஒரு ஆய்வு தெரி விக்கிறது. இந்த
ஆய்வின்படி கடந்த 2007-ல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் செக்ஸ்
தொழிலாளர்களின் சதவிகிதம் 5.06 ஆக இருந்தது. ஆனால் கடந்த வருடம் இது 2.67
ஆகக் குறைந்துள்ளது. விழிப்புணர்வு காரணமாகவே இது தடுக்கப்பட்டுள்ளது
என்கின்றனர்.
அரசியல் பழிவாங்கல்களை முடிவுக்கு கொண்டுவர விஸ்வரூபமெடுக்க வேண்டும்!
கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தடையின் பின்னணி தொடர்பாக
எராளமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் நிஜம்
என்ன என்பதை கற்பனை கதைகளால் மறைத்துவிட முடியாது.
விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தடை என்பது இந்த நாட்டின் சகிப்புத் தன்மை
எப்படி குறைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அண்மைக்காலமாக
நடிகர்கள், எழுத்தாளர்கள் என பலரும் இலக்கு வைக்கப்பட்டு கருத்து
சுதந்திரத்தை கேள்விக்குள்ளாகி வருவது அதிகரித்து வருகிறது. மதச்சார்பற்ற
மாண்புகள் கொண்ட ஒரு ஜனநாயக குடியரசில் இத்தகைய போக்குகள் ஆரோக்கியமானது
அல்ல.
தமிழகத்தில் பல ஆண்டுகாலமாக கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அரசியல்
பழிவாங்கல் சம்பவங்கள் மிகவும் அதிகரித்தே இருக்கின்றன.
தமிழகத்தில் திரை
உலகத்தை சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகளாக உருவெடுப்பதும் ஏன் முதல்வர்
பதவியில் அமருவதும் நடந்து கொண்டு இருக்கிறது. 1960களுக்குப் பிந்தைய
காலத்தில் திமுகவும் அதிமுகவும் ஏராளமான கதாநாயன்கள், வில்லன்கள்,
நகைச்சுவை நடிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி கட்சி
சார்ந்து அரசியல் இருக்கும் திரை உலகத்தினர் எதிர்க்கட்சி ஆட்சிக்கு
வரும்போது வேட்டையாடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுதான் கடந்த
காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி ஏன் எதிர்காலத்திலும்கூட இது தொடரவே
செய்யப் போகிறது. தற்போது பிரபல நடிகரான கமல்ஹாசன் இப்படி புதிய
பலிகடாவாகியிருக்கிறார்.
ரசிகர்களின் மனோநிலை என்ன என்பதை உணர்ந்து அதை திரையில் படைக்கக்
கூடியவர் கமல்ஹாசன். தமிழ்த் திரை உலகில் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டவர்
வேறு யாரும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரத்துக்கு அரசியலின் பெயரால்
நெருக்கடியை கொடுத்திருப்பது தமிழகத்துக்கு மாபெரும் அவமானம். கமல்ஹாசனே
சொல்வதைப் போல தனது சொத்து முழுவதையும் விற்று ரூ100 கோடி அளவில் முதலீடு
செய்து விஸ்வரூபத்தை உருவாக்கியுள்ளார். தற்போது அவரது திரை உலக சகாக்கள்
பலரும் கூட அவரிடமிருந்து விலகி இருக்கவே செய்கின்றனர். எங்கே தாங்களும்
இலக்கு வைக்கப்பட்டு விடுவோமோ என்று அவர்கள் அச்சப்படுகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டி
எழுப்பினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமமான உரிமைகள் இருக்கின்றன
என்பதை நிலைநாட்டினார் அவர். அவரது அரசியல்தான் தமிழகத்து அரசியலை
ஒழுங்கமைத்தது. அத்தகைய ஒரு தேவை தற்போது உருவாகியுள்ளது. தமிழகத்தில்
அதிகரிக்கும் அரசியல் பழிவாங்கல்கள், வேட்டையாடுதல்களை முடிவுக்குக் கொண்டு
வர அத்தகைய ஒரு இயக்கம் தற்போது அவசியம்!
30 January, 2013
மதத்தைவிட மனிதநேயம் முக்கியம் கமல்
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து, நீதிமன்றம்
அளித்த தீர்ப்புக்கு அடுத்து படம் வெளியிட பல்வேறு பிரச்சினைகள்
ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை தமிழக அரசு படத்தை தடை செய்ய
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி
சட்டம்- ஒழுங்கு கருதி படத்தை தடை செய்தது. இதுகுறித்து கமலஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-இது நான் சிறுவயதில் இருந்து ஓடி விளையாடி வளர்ந்த வீடு இது. இங்கு
இருந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். இது எனது சொந்த வீடு. இதில் எனது
சகோதரர்களுக்கும் உரிமை உண்டு. அவர்களிடம் இருந்து நான் விலைக்கு வாங்கி
விட்டேன். நான் கொடுத்த பணத்தை என் தந்தை எல்லா சகோதரர்களுக்கும் பிரித்து
கொடுத்து விட்டார்.
நான் எடுக்கும் படத்தில் எனது சகோதரர் சந்திரஹாசன் பங்குதாரர் என்று
வரும். அவர் சம்பளமாக பணம் எதுவும் வாங்கியது இல்லை. சிறுவயதில் இருந்து
இன்று வரை என்னை தன் பொறுப்பில் வளர்த்து வருகிறார். தற்போது என்ன
நடக்கிறது என்று எனக்கு தெரிய வில்லை. அது தெரிந்தால் நான் அரசியல்
வாதியாகி விடுவேன் என்ற பயம் இருக்கிறது.
இன்று காலை படம் வெளிவரும் என்று எதிர்பார்த்தேன். தியேட்டர்களில் எனது
ரசிகர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். என் ரசிகர்களில் இஸ்லாமியரும்
இருக்கிறார்கள். சினிமாதான் என் தொழில். நான் நேர்மையை மட்டுமே கற்று
இருக்கிறேன். இந்த படத்தில் நிறைய முதலீடு செய்து இருக்கிறேன். ரசிகர்களின்
திறமையையும், நம்பி படத்திற்கு முதலீடு செய்து இருக்கிறேன். இருக்கிற
சொத்துக்களை விட அதிகம் கடன் வாங்கி முதலீடு செய்து இருக்கிறேன். எனக்கு
மதம் முக்கியம் இல்லை. மனிதநேயம் தான் முக்கியம். ரசிகர்கள் மீதும் படத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையில் சொத்துக்களை
அடகு வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். சரியான நேரத்தில் பணத்தை
கட்டவில்லை என்றால் சொத்துக்களை தனதாக்கி கொள்ளலாம் என பணம் கொடுத்தவருக்கு
எழுதி கொடுத்துள்ளேன்.
இதுபோல் பல இடையூறுகளை ஏற்கனவே சந்தித்து உள்ளேன்.
ராஜபார்வை படத்தில் நிறைய இழந்தேன். அதில் இருந்து மீள 7, 8 வருடங்கள்
வேலை செய்ய வேண்டி இருக்கிறது.1986-ல் மறுபடியும் ஜ்ஜியம் நிலைக்கு தள்ளப்பட்டேன். அதில் இருந்து
மீண்டு இப்போது ரூ.100 கோடி செலவில் படத்தை எடுத்துள்ளேன். அதற்கும் நிறைய
தடங்கல்கள். தமிழகத்தில் நான் இருக்க வேண்டியது இல்லை என்று
நினைக்கிறார்களோ என தெரியவில்லை. எனக்கு சிறு ஆசை வந்துள்ளது. மதசார்பற்ற
மாநிலத்தில் தான் நாம் இருக்கிறோமா என்று எண்ண தோன்றுகிறது. தமிழ்நாடு
மதசார்பற்ற மாநிலம். இப்போது இங்கேயும் அந்த நிலை உருவாகி இருக்கிறது.
காஷ்மீரில் இருந்து கேரளா வரை மதசார்பற்ற இடம் கிடைக்குமா என்று தேடுவேன்.
இங்கு கிடைக்கா விட்டால் வேறு நாடுகளில் மதசார்பற்ற மாநிலம் இருக்கிறதா
என்று தேடுவேன். கோபத்தில் இதை நான் சொல்லவில்லை. புண்பட்டது போதும்,
உனக்கு தமிழர்களை பிடிக்கவில்லையா என்று கேட்கலாம். தமிழர்கள் என் உயிர். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று என் உடலையும், இந்த
மக்களுக்குத்தான் கொடுத்து இருக்கிறேன். நடந்துள்ள சம்பவங்கள் என் மனதை
உருக்கிவிட்டன. என் சொத்துக்களை எடுத்தால்தான் தேசத்துக்கு ஒற்றுமை
கிடைக்கும் என்றால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் குழந்தையாக
நடிகையர் திலகம் (சாவித்திரி) கையில் இருந்தவன். ஜெமினி கணேசன் கையைப்
பிடித்து நடை பயின்றவன். நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்தவன்.
எம்.ஜி.ஆரின் தோளில் ஏறி நிமிர்ந்து நின்றவன் அப்படி வளர்ந்த பிள்ளை நான்.
எனக்கு பயம் இல்லை. திறமை இருக்கிறது. இந்த படத்தின் கதை களம்
ஆப்கானிஸ்தானில் நடக்கிறது. இங்கே இந்திய முஸ்லிம்களை கேலி செய்வதாக எப்படி
எடுத்துக் கொள்ள முடியும். இந்த படத்தின் தீர்ப்பு எனக்கு சாதகமாக இல்லை.
தற்போது கிடைத்திருக்கும் நீதியை நான் வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் 5 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கமல்ஹாசனை
சந்தித்தனர். அவர்களுடன் சேர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:- என்னை சந்தித்த முஸ்லிம் அமைப்புகள் கேட்டுக்கொண்டபடி சர்ச்சைக்குரிய
குரான் பற்றிய காட்சிகளை மக்களின் ஒற்றுமையை கருதி நீக்குகிறேன் என்று
கூறினார். இதையடுத்து நேற்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின்
சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது விசாரணையில் தனி நீதிமன்ற
நீதிபதியின் தீர்ப்பை நிறுத்தி வைத்தும், தமிழக அரசு விதித்த தடையை
நீட்டித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை
அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடினர். இதனால்
ஆழ்வார்பேட்டை பகுதி நாள் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
பத்திரிகை சுதந்திரம் 140வது இடத்தில் இந்தியா?
பத்திரிகை சுதந்திரம் குறித்த 179
நாடுகளின் பட்டியலில் இந்தியா 9 இடங்கள் கீழிறங்கி 140வது இடத்தில் உள்ளது.
இது, கடந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரும் வீழ்ச்சி என்பது
குறிப்பிடத்தக்கது. இவ்வளவுக்கும் இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு
என்று பெயர் பெற்றுள்ளது. உலக அளவிலான 2013ம் வருட
பத்திரிகை சுதந்திர குறியீட்டு எண் அடிப்படையில் இந்தியா 140வது இடத்தில்
உள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 இடங்கள் வீழ்ச்சி என்பது குறிப்
பிடத்தக்கது. ஊடகவிய லாளர்கள் மீதான தாக்குதல்கள், இணையதள கருத்துச்
சுதந்திரம் பறிப்பு, கருத்துகளுக்கு தணிக்கை உள்ளிட்ட காரணிகள் கடந்த
வருடம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாம்.
சீனா ஒரு இடம் மேலேறி 173வது இடத்தில் உள்ளது. பத்திரி கை சுதந்திரம் விவகாரத்தில் வேறு எந்த முன்னேற்றமும் சீனாவில் ஏற்படவில்லை. கடந்த
வருடத்தில் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த நாடுகள்
மூன்றுமே ஐரோப்பிய நாடுகளே. பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே ஆகியவை
பத்திரிகை சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் உலகின் மிகச் சிறந்த நாடுகள்
பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.துர்க்மேனிஸ்தான், வட கொரியா, எரித்ரியா நாடுகள் தொடர்ந்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. இந்தியாவைப்
பொறுத்தவரை, இணையதளக் கட்டுப்பாடுகள், கருத்து தணிக்கை, காஷ்மீர் மற்றும்
சட்டீஸ்கரில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், பொதுவாக
பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப் படுதல் போன்றவை இந்தப் பட்டியலில்
வரிசைப்படுத்தப் படும்போது கணக்கில் கொள்ளப் பட்டுள்ளன.
இது வேரையா? கமல் என்ன ஏசுபிரானா?
கமலின் விஸ்வரூபம் படம் குறித்த சர்ச்சை நாடு முழுவதும் பேசப்படும் ஒன்றாகிவிட்டது. கமல் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துவிட்டதாகக் கூறி வழக்கு நடந்துவருகிறது. இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் விஸ்வரூபம் படத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றன.இந்நிலையில் கிறித்துவ மதத்தைச் சார்ந்த வசீகரன் என்ற நபர் தலைமைச் செயலாளரை சந்தித்து கமல்ஹாசன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் ” கமல்ஹாஸன் இனி ‘உலகநாயகன்’ என்ற பெயரை உபயோகப்படுத்தக்கூடாது. ‘உலக நாயகன்’ என்ற பெயர் பிரபஞ்சத்தைக் காக்கும் ஏசு கிறிஸ்துவின் பெயர்.கமல் ஏசு பிரானின் பெயரை தனக்கு வைத்துக்கொள்வது ஏசு நாதரை இழிவுபடுத்துவது போல் உள்ளது” என்று கூறியிருக்கிறார். மேலும் இதை தலைப்புச் செய்தியாக போடும்படி அவரே பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டது மேலும் சிறப்பான விஷயம்.
அரசு விளக்கியே தீர வேண்டும் விஜயகாந்த்.
விஸ்வரூபம் விவகாரம் முஸ்லிம்கள் பிரச்சினையாக மட்டுமே இருந்தவரை
அமைதி காத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இப்போது பிரச்சினையில் அரசு
தீவிரமாகத் தலையிட்டுள்ளதால் விஜய்காந்த் களமிறங்கியுள்ளார்.படத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தமிழகத்தை விட்டே வெளியேறப் போவதாகக் கமல் கூறியுள்ளது என் மனதை வருத்தப்பட வைத்துள்ளது.
சினிமாவுக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட மகா கலைஞனை தமிழக அரசு புண்படுத்திவிட்டது.
அவர் எங்கும் போகக் கூடாது. இந்த நெருக்கடிக்கெல்லாம் என்ன காரணம் என்பதை இந்த அரசு விளக்கியே தீர வேண்டும்.
கமல் ஹாஸன் தன் படத்தை ஆளுங்கட்சி தொலைக்காட்சிக்கு விற்க மறுத்தது காரணமா?
ஒரு விழாவில் வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக அமர்வதை விரைவில் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னது காரணமா?
அல்லது அரசின் நெருக்கடிக்கு பணியாமல் சட்டத்தை நாடியது காரணமா?
இதனை விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்த அரசு," என்றார்.
மேலும், கமலை நேரில் சந்தித்து அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.
கலைஞனை காயப்படுத்திப் பார்ப்பது அரசுக்கு நல்லதல்ல!
விஸ்வரூபம் படம் இந்த அளவுக்கு சர்ச்சையில் சிக்க தமிழக அரசே முழுக்
காரணம் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஞானி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கமல்ஹாசன்
தனது நிலைப்பாட்டை கூறியிருப்பது மிகவும் வருத்தமான ஒன்றாகும். இந்தப்
பிரச்சினைக்கு முழுக் காரணமும் தமிழக அரசுதான்.
தமிழக அரசு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்ததால்தான் இந்த நிலை.
சர்ச்சைக்குரிய படம் என்றால் அதுகுறித்து இஸ்லாமியர்கள் கோர்ட்டுக்குப்
போயிருக்க வேண்டும். ஆனால் கமலிடம் அவர்கள் போனால் அரசு கோபப்பட்டு
பிரச்சினையை அது தனது கையில் எடுத்துக் கொண்டது.
மிகவும் நொந்து போய்தான் கமல் ஹாசன் பேசியுள்ளார். இது வருத்தம் தருகிறது.
ஒரு கலைஞனை இப்படிக் காயப்படுத்திப் பார்ப்பது எந்த அரசுக்கும் நல்லதல்ல,
சரியல்ல. நீதிமன்றம் மீது நிறைய நம்பிக்கை உள்ளது. இந்தத் தடையை நீதிமன்றம்
நீடிக்காது, நீக்கும் என்றே நம்புகிறேன். அதேபோல தமிழக அரசும் பொறுப்புடன்
நடந்து கொண்டு கோர்ட் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும்.
தியேட்டர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை தடுக்க வேண்டியது தமிழக அரசின்
பொறுப்பு. சட்டம் ஒழுங்கை தமிழக அரசு தான் பராமரிக்க வேண்டும் என்றார்
ஞானி.
29 January, 2013
இப்படியும் ஒரு முதலமைச்சர்!
கையிருப்புத் தொகை ரூபாய் 1,080.00
வங்கி இருப்பு ரூபாய் 9,720.00
மொத்தச் சொத்து மதிப்பு - ரூபாய் 2,20,000.00
இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வந்த சொத்து!
'ம்க்கும்... மத்ததெல்லாம் பொண்டாட்டி பேர்ல, பினாமி பேர்ல இருக்கும்' என்று அவசரப்பட்டுவிடாதீர்கள்..!மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் இவருடைய மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா, ஓய்வூதிய பலன்களாக பெற்ற வகையில் நிலையான வைப்புத் தொகையாக 23 லட்சத்து 58 ஆயிரத்து 380 ரூபாய் வைத்திருக்கிறார். கையிருப்பு தங்கம் 20 கிராம். இதன் மதிப்பு, ரூபாய் 72, 000. கையிருப்பு ரொக்கம் 22 ஆயிரத்து 15 ரூபாய். ஆக மொத்த மதிப்பு 24 லட்சத்தி 52 ஆயிரத்தி 395 ரூபாய்.
இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. எல்லாருக்குமே ஐந்து இலக்கங்களை தாண்டிய சம்பளம்தான். நாட்டிலேயே மிக மிக குறைவாக சம்பளம் வழங்கப்படுவது திரிபுராவில்தான். மாதச் சம்பளம் 9,200 ரூபாய். இதை அப்படியே கட்சியிடம் கொடுத்து விடுவார் மாணிக் சர்க்கார். கட்சிக்கு தன் உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு, கட்சியிலிருந்து வழங்கப்படும் உபகாரச் சம்பளம் மட்டுமே இவருக்கு உண்டு. அந்த வகையில் மாணிக் சர்க்காருக்கு மாதம் 5,000 ரூபாய் தரப்படுகிறது.
என்னதான் முட்டி மோதிக் கணக்குப் போட்டாலும்... முதல்வர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 27 லட்ச ரூபாயைத் தாண்டவில்லை. அடச்சே... நம்ம ஊரில், சும்மா நான்கு தெருவுகளை உள்ளடக்கிய கவுன்சிலர் பதவியில் உட்கார்ந்திருப்பவர்களில் பலருக்கும் பல கோடிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. மாத வருமானமே பல லட்சங்களில். ஓயாமல் பறப்பது டாடா சுமோ, இன்னோவா, சைலோ... போன்ற சொகுசு கார்களில்தான். இந்த மனுஷன் என்னடாவென்றால், சொந்தமாக ஒரு கார் கூட இல்லாமல், முதல்வர் பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கெனவே மூன்று முறை தொடர்ந்து முதல்வராக அமர்ந்திருக்கும் இவர், நான்காவது முறையாகவும் போட்டியிடுகிறார்.
வங்கி இருப்பு ரூபாய் 9,720.00
மொத்தச் சொத்து மதிப்பு - ரூபாய் 2,20,000.00
இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வந்த சொத்து!
'ம்க்கும்... மத்ததெல்லாம் பொண்டாட்டி பேர்ல, பினாமி பேர்ல இருக்கும்' என்று அவசரப்பட்டுவிடாதீர்கள்..!மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் இவருடைய மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா, ஓய்வூதிய பலன்களாக பெற்ற வகையில் நிலையான வைப்புத் தொகையாக 23 லட்சத்து 58 ஆயிரத்து 380 ரூபாய் வைத்திருக்கிறார். கையிருப்பு தங்கம் 20 கிராம். இதன் மதிப்பு, ரூபாய் 72, 000. கையிருப்பு ரொக்கம் 22 ஆயிரத்து 15 ரூபாய். ஆக மொத்த மதிப்பு 24 லட்சத்தி 52 ஆயிரத்தி 395 ரூபாய்.
இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. எல்லாருக்குமே ஐந்து இலக்கங்களை தாண்டிய சம்பளம்தான். நாட்டிலேயே மிக மிக குறைவாக சம்பளம் வழங்கப்படுவது திரிபுராவில்தான். மாதச் சம்பளம் 9,200 ரூபாய். இதை அப்படியே கட்சியிடம் கொடுத்து விடுவார் மாணிக் சர்க்கார். கட்சிக்கு தன் உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு, கட்சியிலிருந்து வழங்கப்படும் உபகாரச் சம்பளம் மட்டுமே இவருக்கு உண்டு. அந்த வகையில் மாணிக் சர்க்காருக்கு மாதம் 5,000 ரூபாய் தரப்படுகிறது.
என்னதான் முட்டி மோதிக் கணக்குப் போட்டாலும்... முதல்வர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 27 லட்ச ரூபாயைத் தாண்டவில்லை. அடச்சே... நம்ம ஊரில், சும்மா நான்கு தெருவுகளை உள்ளடக்கிய கவுன்சிலர் பதவியில் உட்கார்ந்திருப்பவர்களில் பலருக்கும் பல கோடிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. மாத வருமானமே பல லட்சங்களில். ஓயாமல் பறப்பது டாடா சுமோ, இன்னோவா, சைலோ... போன்ற சொகுசு கார்களில்தான். இந்த மனுஷன் என்னடாவென்றால், சொந்தமாக ஒரு கார் கூட இல்லாமல், முதல்வர் பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கெனவே மூன்று முறை தொடர்ந்து முதல்வராக அமர்ந்திருக்கும் இவர், நான்காவது முறையாகவும் போட்டியிடுகிறார்.
ஹாலிவுட் படங்களை முறியடித்த விஸ்வரூபம்!
கமல் இயக்கத்தில் உருவாகி பல பிரச்சனைகளை சந்தித்த விஸ்வரூபம் படத்தின் மீதான தடை குறித்த வாதம் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. ஒரே மாதிரியான பிரச்சனையை எதிர்கொண்ட துப்பாக்கி படத்திற்கு இன்று(29.01.13) வழங்கப்பட்ட தீர்ப்பு மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. நீதிமன்றத்தில் நடந்த வாதத்தின் போது ‘மற்ற மாநிலங்களில் வெளியாகியுள்ள விஸ்வரூபம் படத்தினால் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் ஏன் தடை விதிக்கக் கோருகிறீர்கள்’ என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மற்ற மாநிலங்களில் வெளியான விஸ்வரூபம் வசூலைக் குவிப்பதோடு, அமெரிக்காவிலும் மற்ற ஹாலிவுட் படங்களை விட அதிக வசூலைக் குவித்துள்ளது. US - BOX OFFICE-ஐ பொருத்த வரையில் விஸ்வரூபம் படம் சென்ற வார இறுதியில் மட்டும் இந்திய மதிப்பீட்டின்படி 3 கோடியே 43 லட்ச ரூபாய் வசூலித்திருக்கிறது. ஹாலிவுட் தயாரிப்பாளரை ஆச்சர்யப் படுத்திய கமல் இப்போது ஹாலிவுட் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். அமெரிக்காவில் நடைபெற்ற விஸ்வரூபம் பிரீமியர் ஷோவிற்கு ஹாலிவுட்டின் முக்கிய பிரபலங்களும் வந்து கலந்துகொண்டது விஸ்வரூபம் படத்திற்கு ஹாலிவுட்டில் கிடைத்திருக்கும் வரவேற்பை வெளிப்படுத்தியது.
இலங்கை ராணுவத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அமெரிக்கா!
2009ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு சில நாட்களிலேயே லட்சத்திற்கும்
மேற்பட்ட தமிழர்களைக் கொடூரமாக கொன்று குவித்து போரை முடித்து
விட்டதாகவும், விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டதாகவும், புலிகள் இயக்கத்
தலைவர் பிரபாகரனைக் கொன்று விட்டதாகவும் பிரகடனம் செய்தது இலங்கை அரசு.
அன்று முதல் இன்று வரை தங்களது தாயகத்தில், சிங்களர்களின் ஆதிக்கத்தின்
கீழ் அவஸ்தைப்பட்டு வருகின்றனர் ஈழத் தமிழர்கள். ஈழப் போரின் கடைசிக்
கட்டத்தில் நடந்த படுகொலைகளுக்கு இலங்கே ராணுவமே பொறுப்பு என்று அனைத்துத்
தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அமெரிக்கா, போர் குற்றம் புரிந்த இலங்கை அரசு மீது விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரச்சினை எழுப்பியது. இதற்கு
இலங்கை எதிர்ப்பு தெரிவித்ததுடன் போர் குற்ற விசாரணைக்கும் மறுப்பு
தெரிவித்தது.
இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தீர்மானத்தையும் கொண்டு
வந்தது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து
இந்தியா ஓட்டுப் போட்டது,தீர்மானமும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இதேபோல
இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜேம்ஸ் முர்ரே
கூறுகையில், போர்குற்றம் புரிந்த இலங்கை ராணுவத்தின் மீது விசாரணை
நடத்தப்பட வேண்டும். அதை வலியுறுத்தி மீண்டும் ஒரு நடைமுறை தீர்மானம் ஒன்றை
அமெரிக்கா கொண்டு வருகிறது. வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை
கமிஷன் கூட்டத்தில் அந்த தீர்மானம் சமர்பிக்கப்படும்.
இலங்கையில் மனித உரிமை, பொறுப்பு மற்றும் சமரசம் குறித்த விஷயங்களில் அரசு
நடவடிக்கை எடுப்பதாக காட்டிக்கொண்டாலும், அது முழுமையாக நடைபெறவில்லை.
இலங்கை தன் மக்கள் மீதான வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அவசியம் ஆகிறது.
அமெரிக்காவும் மற்ற ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 23 உறுப்பு நாடுகளும் இதையே
நம்புகிறது என்றார்.
இந்தத் தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதே
எழுந்துள்ளது.
கண்ணகி சிலம்பும், மனோகரன் விலங்கும் வீழ்ந்ததா? வீழ்த்தியதா?
சென்னை நகர் முழுவதும் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி அவரது
ஆதரவாளர் ஒருவர் ஒட்டியிருந்த போஸ்டரைக் கண்டு திமுக தலைவர் கருணாநிதி
கடும் கோபம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஜி.வெங்கட் என்கிற ஜி.வி.ரமணா (இருவரும்
திமுகவினர் அல்ல) வரும் 30-ந் தேதி அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி சென்னை
நகர் முழுவதும் குறிப்பாக கருணாநிதியின் வீடு உள்ள கோபாலபுரம் பகுதியில்
ஒருசுவர் கூட விடாமல் 3 வித போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில் அழகிரியின் படம் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது. திமுகவினர் எப்போதும்
பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படத்தை சேர்த்து அச்சிடுவதே வழக்கம்.
இப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில்.
சுவரொட்டி வாசகங்கள்: கண்ணகி சிலம்பும், மனோகரன் விலங்கும் வீழ்ந்ததா
வீழ்த்தியதா.?
அதுக்கும் மேல.. அதுக்கும் மேல... அதுக்கும் மேலே.. அண்ணன் உசுருலே.
இங்கே பரமசிவனும் இல்லை. நாங்கள் கருடனும் இல்லை. நடப்பது ராம நாடகமே
என கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று கருணாநிதி அறிவித்துவிட்ட நிலையில்
அழகிரியின் சார்பாக கருணாநிதியை கடுப்பேற்றும் வகையில்தான் இந்த
போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதைப் பார்த்த கருணாநிதியும் அனைத்து
போஸ்டர்களையும் எப்படியாவது கிழித்து எறியுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
ஆசியா நோபல் பரிசு!
உலக அளவில் பல்வேறு துறைகளில் சேவை, சாதனை புரிந்தவர்களுக்காக
வழங்கப்படும் நோபல் பரிசைப் போன்று ஆசியாவிலும் பரிசு வழங்குவதற்காக பிரபல
தைவான் தொழிலதிபர் ஒருவர் 550 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளார்.
பிரபல தொழில் அதிபர் சாமுவேல்யின் தைவான் நாட்டை சேர்ந்தவர். இவர் சீனாவில்
பெருமளவு முதலீடு செய்துள்ளார். உலக நன்மைக்காக பாடுபடுவர்களுக்கு உலகில்
வழங்கப்படும் நோபல் பரிசை போன்று ஆசியாவிலும் பரிசு வழங்கவேண்டும் என்று
அவரின் டேங் பரிசு நிறுவனம் முடிவு செய்தது. அதற்காக சுமார் 550 கோடி
ரூபாய் வழங்க சாமுவேல் முன்வந்துள்ளார்.
நோபல் பரிசை விட அதிகம்
இந்த டேங் பரிசானது வரும் 2014-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
வழங்கப்படவுள்ளது. உலக நாடுகளில் உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.
பரிசு பெறுபவர்களுக்கு 3 பில்லியன் தைவான் டாலர் வழங்கப்படும்.
உலகின் மிகப்பெரிய பரிசான நோபல் பரிசின் தொகையானது ரூ. 6 கோடிக்கு மேல்
உள்ளது. ஆனால் சாமுவேல் யின்னின் இந்த டேங் - பரிசுத்தொகை அதைவிட அதிகமாக 9
கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
28 January, 2013
புற்றுநோயை கட்டுப்படுத்தும் மஞ்சள்!
மெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மையத்தைச்
சேர்ந்த மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறியதாவது:இந்தியாவில், பல
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உணவில் மஞ்சள் சேர்க்கப்பட்டு வருகிறது. மஞ்சளை
உணவில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக, 20 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள்
நடத்தப்பட்டு உள்ளன.இதில், மூட்டுவலியை குறைப்பதில், மஞ்சள் பெரும் பங்கு
வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், புற்றுநோய், நீரிழிவு நோய்,
சரும நோய் போன்றவற்றிலிருந்தும், மனிதர்களை காப்பதில் மஞ்சள் முக்கியப்
பங்கு வகிக்கிறது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும்
கதிர்வீச்சு சிகிச்சையால், சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை மஞ்சள் சரி
செய்து விடுகிறது.
மாத்திரை வடிவில்:மஞ்சளை
அப்படியே சாப்பிடும் வகையில் நம் உடல் அமைப்பு இல்லை என்பதால், இப்போது,
மாத்திரை வடிவிலும் மஞ்சள் கிடைக்கிறது. நாம் சமைக்கும் உணவுடன் மஞ்சளையும்
சேர்த்துவிட்டால், அது நல்லதொரு பலனை அளிக்கும். மஞ்சளை சேர்த்துக்
கொள்வதால் கூடுதலான ருசி கிடைக்காது; மாறாக, உணவுப் பொருளுக்கு நிறத்தை
அளிக்கும். மஞ்சளின் முழு பலனையும் பெற, சமையல் எண்ணெயை சூடு படுத்தி,
அதில் மஞ்சள் தூளைக் கலந்து உணவுப் பொருளுடன் சேர்க்கலாம்.
பிள்ளைய பார்த்தீங்களா?
குரோம்பேட்டையைச் சேர்ந்த தெரு நாய் ஒன்று இரண்டு குட்டிகளை போட்டது. தனது
குழந்தைகளை கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டு அதற்கு சாப்பாடு கொடுப்பதற்காக வெளியே
போய் கிடைத்த இரையோடு திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. அங்கு இருந்த
இரண்டு குட்டிகளையும் காணவில்லை. அந்த இடத்தை சுற்றி,சுற்றி வந்த அதன்
கண்களில் கண்ணீர். இந்த காட்சியை எல்லாம் மாடியில் இருந்து பார்த்த சுரேஷ்
என்பவர் நாயின் கவலையை எழுதி நோட்டீசாக ஒட்டிவிட்டார்.
இந்திய பிரபலங்கள் 100...
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட இந்திய பிரபலங்கள் 100 பேரின்
பட்டியலில் விஜய்க்கு 28வது இடமும், சூர்யாவுக்கு 43, அஜீத்துக்கு 61
மற்றும் விக்ரமுக்கு 67வது இடமும் கிடைத்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை இந்திய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை
வெளியிட்டுள்ளது. பிரபலம் மற்றும் வருமானத்தின் அடிப்படையில்
தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் பாலிவுட் நடிகர்
ஷாருக்கான். அவர் கடந்த 2011-2012ம் ஆண்டில் ரூ.202.83 கோடி
சம்பாதித்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சல்மான் கான்.
எனது வாயில் தனது ஆணுறுப்பை எடுத்து அவர்...?
41வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் டாக்டர் செய்த பாலியல்
சேஷ்டைகள் குறித்து கோர்ட்டில் விவரித்தபோது கடும் வேதனையுடன் அதைக்
குறிப்பிட்டார். அவர் சொல்லச் சொல்ல கோர்ட் ஹாலே அதிர்ச்சியுடன் அதைக்
கவனித்தது.
சர்ச்சையில் சிக்கியுள்ள டாக்டரின் பெயர் ஜார்ஜ் டூட்நாட். டோரண்டோவைச்
சேர்ந்தவர். இவர் மீதுதான் இப்போது வழக்கு பாய்ந்துள்ளது. மொத்தம் 21
வழக்குகள். அதாவது 21 பெண்களை, இவர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தது,
சில்மிஷம் செய்தது, அவமரியாதை செய்தது என்று வழக்குப் போட்டுக் கைது
செய்துள்ளனர்.
இவரால் பாதிக்கப்பட்ட 41 வயதுப் பெண் டோரண்டோ கோர்ட்டில் பரபரப்பான
வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் திகிலுடன்
விவரித்தார். கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் இவருக்கு இந்தக்
கொடுமை நடந்தது.
அப்போது அவருக்கு ஹிஸ்டரெக்டமி அறுவைச் சிகிச்சை நடந்தது.
வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர்
விவரித்துள்ளார்.. அது இதோ...
எனக்கு மயக்க மருந்து கொடுத்திருந்தனர். ஆனாலும் எனக்கு நினைவு இருந்தது.
என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை என்னால் உணரவும் முடிந்தது.
அப்போது டாக்டர் ஜார்ஜ், எனது கவுனுக்குள் கையை விட்டு எனது வலது
மார்பகத்தை பிடித்து நிமிண்டினார். இதை உணர்ந்து நான் அதிர்ச்சி அடைந்து
கண்களைத் திறந்து பார்த்தேன். அப்போது டாக்டரின் முகம் எனது முகத்திற்கு
வெகு அருகே இருந்தது. அவர் என்னை முத்தமிட்டார். மேலும் அவரது நாக்கு எனது
வாய் மீது இருந்தது.
என்னால் நகரக் கூட முடியவில்லை. மற்ற டாக்டர்கள் எங்கே என்று நான்
கேட்டபோது, முன்னெச்சரிக்கையுடன் நடக்க எனக்குத் தெரியாதா என்ன என்று
என்னிடம் கேட்டார் ஜார்ஜ்.
அடுத்து அவர் செய்த செயல்தான் மிகக் கொடுமையானது. எனது வாயில் தனது
ஆணுறுப்பை எடுத்து அவர் வைத்தார். நான் மிகவும் கொடுமையாக உணர்ந்தேன்.
எனக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது என்று அவர் கூறியபோது அப்பெண்
கடும் கோபத்துடன் காணப்பட்டார்.
64 வயதான டாக்டர் ஜார்ஜ் மீது 2006 முதல் 2010 வரை 25 முதல் 75 வயது
வரையிலான பெண்களை பாலியல் ரீதியாக இப்படிச் சீரழித்ததாக புகார்கள்
பதிவாகியுள்ளன. அவர் மீது 21 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டாக்டர் ஜார்ஜ் 1981ம் ஆண்டு முதல் நார்த் யார்க் ஜெனரல் மருத்துவமனையில்
பணியாற்றி வந்தார்.
ரேப் அதிகரிக்க காரணம் குட்டைப் பாவடையும், ஹை ஹீல்ஸ்ம்தான்?
உலகம் முழுவமும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து
வருகின்றன. பாலியல் வன் கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை
கொடுக்கலாம் என்ற பேச்சு ஒரு புறம் இருக்க பெண்களின் அணியும் உடைதான்
அவர்களை பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்குகிறது என்று கருத்து கூறி
வருகின்றனர் சில அதிசய பிறவிகள்.
கவர்ச்சிகரமான உடை அணிவதும், நள்ளிரவில் பெண்கள் தனியாக போவதும்தான்
அவர்கள் கற்பழிப்புக்கு ஆளாகின்றனர் என்று இந்தியாவில் சில நாடாளுமன்ற
உறுப்பினர்கள் கருத்து கூறி நாடு முழுவதும் எதிர்ப்பை வாங்கி
கட்டிக்கொண்டனர். இதேபோல் இங்கிலாந்திலும் ஒரு எம்.பி பேசியுள்ளார்.
டோரி கட்சியைச் சேர்ந்த அந்த எம்.பியின் பெயர் ரிச்சர்டு கிரஹாம்.
கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டும், ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டும் ராத்திரி
நேரத்தில் பாருக்குப் போய் மது அருந்துவதும் பெண்களுக்கு ஆபத்தானது. அதை
அவர்கள் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் கற்பழிப்பு போன்றவை நடக்கத்தான்
செய்யும் என்றும் அவர் பேசியுள்ளார்.
எம்.பியின் இந்தப் பேச்சுக்கு கற்பழிப்புக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த ஜோ
உட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.பியின் பேச்சு நம்மை 100
ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு போய் விடும் என்று அவர் சாடியுள்ளார்.
அது சரி கவர்ச்சியான உடை அணிந்தால்தான் பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கப்படுகின்றனர் என்றால் 13 வயது பள்ளிச் சிறுமிகள் சுடிதார் அணிந்து
கொண்டுதானே பள்ளிக்குச் செல்கின்றனர். அவர்களை ஏன் கற்பழிக்கின்றனர்.
5 வயது சிறுமிகள் முதல் 60 வயது முதிய பெண்கள் வரை ஆண்களின் வக்கிரப்
பார்வைக்கு தப்ப முடியவில்லையே இதை என்ன சொல்வது?. புடவை அணிந்து கொண்டோ
அல்லது உடல் முழுக்க மறைக்கும் ஆடை அணிந்து கொண்டோ செல்லும் பெண்களை
மட்டும் எதுவும் செய்யாமல் விட்டுவிடுவார்களா என்ன?
போப் பறக்க விட்ட புறா கடித்துக் குதறிய சீகல்!
வாடிகன் சிட்டியில், போப்பாண்டவர் பறக்க விட்ட புறாவை, சீகல்
எனப்படும் கடற்பறவை படு வேகமாக பாய்ந்து வந்து கடித்துக் குதறி ரத்தக்
களறியாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் இதை அதிர்ச்சியுடன்
பார்த்து விக்கித்து நின்றனர்.
சமாதானத்தின் அடையாளமாக பார்க்கப்படுவது புறா. ஆனால் இந்த சமாதானப் புறாவை
கடித்துக் குதறி அனைவரையும் பதற வைத்து விட்டது சீகல் பறவை ஒன்று.
போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நேற்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை
உரையை நிகழ்த்தினார். அதற்கு முன்பாக அவர் புறா ஒன்றை பறக்க விட்டார்.
அப்போது வாடிகன் சிட்டி வளாகத்தில் வசித்து வரும் சீகல் பறவை ஒன்று படு
வேகமாக புறாவை நோக்கி ஓடி வந்து அதைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்து
போப்பாண்டவர் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடும் வேதனையில் துடித்தபடி புறா சீகல்லிடமிருந்து தப்பித்து ஓடிப்
பறந்ததைப்பார்த்து கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரும் வேதனையும்,
அதிர்ச்சியும் அடைந்தனர். புறாவை சரமாரியாக கடித்துக் குதறிய பின்னர் அந்த
சீகல் பறவை அங்கிருந்து பறந்தோடி விட்டது.
இத்தனைக்கும் ரோம் நகரிலிருந்து வந்த 2000 இளைஞர்கள் நடத்திய அமைதிப் பேரணி
போப்பாண்டவர் உரை நிகழ்த்திய செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில்
நேற்று முடிவடைந்தது. இதன் அறிகுறியாகவே புறாவைப் பறக்க விட்டார்
புலிகள் மீதான தடையை நீக்க கோரும் மனு ஏற்பு!
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வைகோவின்
ரிட்மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த ரிட் மனு
தலைமை நீதிபதி (பொறுப்பு) நீதியரசர் எலிப்பி தர்மாராவ், நீதியரசர் அருணா
ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு
வந்தது.
அப்போது வைகோ கூறியதாவது:
"விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு 2012 மே 14 இல்
பிறப்பித்த ஆணையை, மத்திய அரசு நியமித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி
வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைத்தது. அந்தத்
தீர்ப்பாயத்தில் நான் நேரில் சென்று, புலிகள் மீதான தடையை இரத்து செய்ய
வேண்டும் என்று மனுதாக்கல் செய்தேன். தீர்ப்பாயம் நடத்திய விசாரணைகளிலும்
பங்கேற்றேன். ஆனால், அந்தத் தீர்ப்பாயத்தில் பதிவு செய்யப்பட்ட
சாட்சியங்களின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆவணங்களின் பிரதிகள் எனக்கு
வழங்கப்படவில்லை.
புலிகள் மீதான தடையை, உறுதி செய்து தீர்ப்பாயம் 2012 நவம்பர் 27 ஆம் தேதி
பிறப்பித்த ஆணை நீதிக்கு எதிரானதும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)
சட்டத்தின் விதிகளுக்கு முரணாகவும் உண்மைக்கு மாறான வாதங்களின்
அடிப்படையிலும் தரப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும்
இறையாண்மைக்கும் எதிராகவோ ஆபத்து ஏற்படும் விதமாகவோ செயல்பட்டால்தான்
சட்டப்படி குற்றமாகும்.
விடுதலைப்புலிகள் இயக்கம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படவில்லை.
ஆனால் மத்திய அரசு, விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டையும் தமிழ் ஈழத்தில்
சேர்க்க திட்டமிட்டுள்ளதாக எள்ளவும் உண்மை இல்லாத, முழுக்க முழுக்க
அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் மீது சுமத்தி இந்தத்
தடையை நீடித்துள்ளது.
எது தமிழ் ஈழம்?
தமிழ் ஈழம் என்பது இலங்கைத் தீவில், ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான
வடக்கு-கிழக்கு பகுதிகளைக் குறிப்பதாகும். இதற்கு ஆதாரமாக 1976 மே 14 இல்
வட்டுக்கோட்டையில் தமிழர் அமைப்புகள் தந்தை செல்வா தலைமையில் கூடி
நிறைவேற்றிய பிரகடனத்தை நான் தீர்ப்பாயத்தில் ஆவணமாக தாக்கல்
செய்திருந்தேன். ஆனால், தீர்ப்பாய நீதிபதி அந்தப் பிரகடனத்தின் வாசகத்தையே
புரிந்து கொள்ளாமல், இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள தமிழர்கள், தமிழ்
ஈழத்தின் குடிமக்கள் ஆகலாம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஈழத்தின் பூர்வீகக் குடிமக்கள், புலம்பெயர்ந்த நாடுகளில்
வாழ்பவர்கள், குடி உரிமை பெறலாம் என்றுதான் அப்பிரகடனம் கூறுகிறது.
அடிப்படையையே நீதிபதி மாற்றிச் சொல்கிறார். வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு
விடுதலைப்புலிகள் அங்கீகரித்ததற்கு ஆதாரம் இல்லை என்று தீர்ப்பாய நீதிபதி
கூறுகிறார். ஆனால், நான் பதிவு செய்த ஆவணங்களில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்
27 ஆம் தேதி மாவீரர் நாள் உரையின்போது, தேசியத் தலைவர் பிரபாகரன்
உரையாற்றும் மேடையில், தமிழ் ஈழ வரைபடம் துல்லியமாக
சித்தரிக்கப்பட்டுள்ளது. அது இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு பகுதிகளை
மாத்திரமே காட்டுகிறது. இது தான் வட்டுக்கோட்டை பிரகடனத்திற்கு புலிகள்
தந்துள்ள அங்கீகாரமாகும்."
இலங்கையில் இருந்து ஈழத் தமிழர் யார் வந்தாலும் இந்தத் தடையைக் காரணம்
காட்டி அவர்களை அச்சுறுத்துவதும், பொய்வழக்கு போடுவதும், சிறப்பு முகாமில்
அடைப்பதும் வழக்கமாகிவிட்டது. எனவே, தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்து,
புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுகிறேன்.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் மீதான தடையை எதிர்த்து, நான்
தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தங்கள்
முன்னிலையில் விசாரணை நடைபெற்று அதன் மீதான தீர்ப்பையும் எதிர்பார்த்து
இருக்கிறோம்" என்றார்.
உடனே நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்கள், வைகோவின் ரிட் மனுவை
அனுமதித்ததோடு, நான்கு வார காலத்திற்குள் அரசு தரப்பு பதில் தாக்கல் செய்ய
உத்தரவிட்டார்.
ப.சிதம்பரம் மீது 'ஐபிசி 420' வழக்கு!
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து
ஏமாற்றிய மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே
ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசாருக்கு ஆந்திர மாநில
ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆந்திர பிரதேச இளநிலை வழக்கறிஞர்கள்
சங்கத்தின் சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில்,
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை தாமதிக்கும் வகையில் பொய்யான
வாக்குறுதிகளை அளித்து முன்னாள் உள்துறை அமைச்சரும் தற்போதைய நிதி
அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சர் சுஷில்குமார்
ஷிண்டே ஆகியோர் ஏமாற்றியுள்ளனர் என்றும் இருவர் மீதும் நடவடிக்கை தேவை
என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம், மத்திய அமைச்சர்கள்
ப.சிதம்பரம் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் மீது போலீசார் வழக்குப்
பதிவு செய்ய அனுமதி அளித்தது. இவர்கள் இருவர் மீது இ.பி.கோ. 420-வது கீழ்
மோசடி வழக்குப் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தெலுங்கானா விவகாரம் 'விஸ்வரூபம்' எடுத்து ஆந்திராவை கொந்தளிப்பாக்கியுள்ள
சூழலில் ஆந்திர நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பை மதித்து செயல்படுத்தவில்லை?
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்து செயல்படாத கர்நாடகாவுக்கு
உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்தது.
தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பற்ற 12 டி.எம்.சி. நீரையாவது
தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மையில்
தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ஜெயின் ஓய்வு பெறுவதால் இன்று அது
விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் 12 டி.எம். நீர். கோரி வாதிடப்பட்டது. ஆனால்
கர்நாடகா இதை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து 6 டி.எம்.சி. நீரையாவது
தமிழகத்துக்கு திறந்துவிட முடியுமா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்
கேட்டனர்.
ஆனால் கர்நாடகாவோ தங்களது குடிநீர் தேவைக்கே 15 டி.எம்.சி.நீர்
தேவை என்று கூறியது. இதனால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், காவிரி
நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா மதித்து செயல்படுத்தவில்லை என்று கண்டனம்
தெரிவித்தனர்.
மேலும் 1992ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவின் குடிநீர் தேவை என்ன என்பதை
அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் காவிரி
கண்காணிப்புக் குழுவின் செயல்பாடும் திருப்தி இல்லை என்றும் உச்சநீதிமன்ற
நீதிபதிகள் கூறினர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் மனு மீது நாளை பிற்பகல் விசாரணை நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 January, 2013
விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும்
விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் முஸ்லிம் அமைப்புகள்.......... விஸ்வரூபம் படத்தை பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்ததே ஒரு முஸ்லிம் தான்.......ஹாசன் முகமது ஜின்னான்னு இருக்கே அவரு முஸ்லிம் தான? படம் பார்த்து இருப்பார்ல?? போங்கப்பா ரெண்டு பேரும் சேர்ந்து எல்லாருக்கும் மெல்லுறதுக்கு அவல் கொடுத்தாச்சு so start music...
ஏன் தைப்பூசம்?
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன்
வடதிசைப்பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர்
இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார். சக்தியின் அம்சமாக திகழ்பவர்
சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில்
சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில்
இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இதற்கு
என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன்,
நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து
ஆடுகிறார். தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர்.
நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம்
நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக
நிர்ணயித்தனர். இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை.
அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை
முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான
நாளாக அமைந்தது. தைப்பூசநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து
வேண்டிய வரம் பெறுவோம்.
Subscribe to:
Posts (Atom)