|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 July, 2011

இதே நாள்...


  • முதலாவது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாகின(1930)
  •  இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன(1844)
  •  லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது(1923)
  •  லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாக பெண்கள் பங்கேற்றனர்(1908)
  • வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வெளிநாட்டு அழைப்பு!


    வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வகையில் மொபைல் போனில் வெளிநாட்டு அழைப்புகள் வருகின்றன என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட சில எண்களில் துவங்கும் அழைப்புகளை தொடர்பு கொண்டால், தொடர்பு கொள்பவரின் கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாகிறது. அவை அனைத்தும் வெளிநாட்டு அழைப்புகளாக உள்ளன. ப்ரீபெய்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதில் இந்த அழைப்பு கிடைப்பதால், அவர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகை முழுவதையும் இழக்கின்றனர். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கு வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    எச்சரிக்கை: 239 287, 9051, 9052, 9062, 9106 என்ற எண்களில் தொடங்கும் அழைப்புகள் வந்தால் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். கால் ரிசீவ் செய்தால் வினாடிக்கு 10 ரூபாய் வீதம் காலியாகிவிடும் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    சன் 'டிவி' மிரட்டல் ரஞ்சிதா ???

    இந்த வீடியோக்கள் போலி என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? இந்த வீடியோ போலியானது அல்ல என தமிழக தடய அறிவியல் துறை மற்றும் பெங்களூர் சிபிசிஐடி போலீசார் உறுதிப்படுத்தியுள்ளார்களே?

    வீடியோவில் இருப்பது ரஞ்சிதாவும் நானும்தான் என நித்யானந்தா சிபிசிஐடிக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருக்கிறாரே, அது பொய்யா?

    வீடியோ வெளியான உடன் தமிழக போலீசாரிடம் புகார் கூற முன்வராத நீங்கள், கர்நாடக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தீர்களே, ஏன்?

    'தினகரன் பத்திரிகை வழக்கு எரிப்பு வீடியோ உண்மைதான், ஆனால் அதை ஒரு சாட்சியாக கோர்ட் ஏற்க மறுத்தது. அதுதான் உங்கள் சம்பந்தப்பட்ட வீடியோவின் நிலையும் என கூற வருகிறீர்களா?

    -இந்தக் கேள்விகளுக்கு சரிவர பதில் சொல்லாமல், பாதியிலேயே பிரஸ்மீட்டிலிருந்து வெளியேறினார் ரஞ்சிதா.

    சாபத்தால் அழிந்த சாம்ராஜ்யம்!

    இந்தியாவில் மக்களாட்சி முறை தோன்றுவதற்கு முன் மன்னராட்சிகளே கோலோச்சிக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்தது. பேரரசுகளும், சிற்றரசுகளும் அன்று தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளை போல் வேரூன்றி விழுதுகளை பரவ விட்டிருந்தது. சூழ்ச்சிகளூம், தந்திரங்களும் மக்களாட்சிகளை போல் அன்றைய மன்னராட்சி காலங்களிலும் இருந்து வந்துள்ளன. சேரனும், பாண்டியனும் உறவு பாலம் அமைத்து திருமண பந்தங்களை ஏற்படுத்தி கொண்டிருந்த காலங்களை போல் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. 

    தமிழகத்தின் தென்பகுதிகளில் திருவாங்கூர் சமஸ்தானம், கொச்சி சமஸ்தானம் உள்ளிட்ட சமஸ்தானங்களின் எல்கை காலப்போக்கில் மொழி வாரி மாநிலங்கள் பங்கீட்டில் தமிழகத்தின் தென்பகுதியை சார்ந்துள்ளது. தமிழகத்தின் எல்லையோரத்தில் பாண்டிய மன்னனும், கேரளத்தின் எல்கை பகுதிகளில் ஆட்சி செய்த சிற்றரசர்களும் உறவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் தங்கள் ஆட்சி செய்த பகுதியினை வளப்படுத்தியுள்ளனர்.

    விட்டு சென்ற வரலாற்று சுவடுகளை இன்று நாம் திரும்பி பார்க்கவும், நினைவு படுத்தி கேட்கவும் மறந்து அசுர வேகத்தில் செல்லும் வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி கொண்டு திரும்பி பார்க்க முடியாமல் வேகமாய் கால ஓட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். நேற்றைய வரலாறுகளையும், இன்றைய வாழ்க்கை உறவுகளையும் மறந்து கடந்து போகும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான் என்ற நிலையும் இப்போது ஏற்பட்டுள்ளது வேறு விசயம்.

    சரித்திரம் வாய்ந்த சம்பவங்களையும் நினைவு சுவடுகளையும், காலம் கடந்தாலும் அவை எங்கோ ஓரிடத்தில் தன் வரலாற்று நினைவுகளை பாறைசாற்றும் விதமாக சான்றுகளை கடந்த காலங்களில் விட்டு சென்றுள்ளன. உலக வரலாற்றில் கடந்த கால வரலாறுகள் இன்னும் சில பகுதிகளில் புனரமைக்கப்படாமல் புதைந்த போய் கொண்டிருக்கின்றன. அப்படி புதைந்து போன ஓரு வரலாற்று சம்பவம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. 

    ஆம், அதுதான் கலங்காதகண்டி கிராமத்தை பற்றியது...

    சேர மன்னர்களான பந்தள மன்னர் வாரிசுகளில் ஒருவர் கலங்காத கண்டி ராஜா. அவர் ஆட்சி புரிந்த நாட்டின் எல்கை அச்சன்கோவில், அரசடிதாவு, குளத்துப்புழா என சுமார் 100 கிமீ சுற்றளவு கொண்ட குக்கிராமங்களை கொண்ட பகுதிகளை கலங்காதகண்டி ராஜா முதலில் அச்சன்கோவிலில் ஐயப்பன் கோவிலை பிரதிஷ்டை செய்த பிறகு திருமலை கோவில் முருகனை வழிபட்டு பிரதிஷ்டை செய்ய நினைத்தார்.

    அதற்கு முன்னதாக தற்போதைய அரிவாள்தட்டி ஓடை என்றழைக்கப்படும் இடத்தில் கருப்பசாமி சிலையை செய்து வைத்து அரசடித்தாவு ஐயப்பன் சிலையை (அரசடிக் காவு என இப்போது அழைக்கப்படுகிறது), இங்கும் ஐயப்பனை பிரதிஷ்டை செய்து பின் 20 காவல் தெய்வங்களும் பிரிதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஐயப்பனை சேர்த்து 21 கூட்டுறவு ஆகும். 

    இதற்கு பின் திருமலை கோவில் முருகனை பிரதிஷ்டை செய்தார். கோட்டைக்குள் கோட்டையை காவல் காக்க சங்கிலி பூதத்தாரும், தனது குலதெய்வமான பகவதி அம்மனையும் பிரதிஷ்டை செய்தார். பகவதியம்மனை கொட்டாக்கரையில் இருந்து பிடிமண் கொண்டு வந்து கோட்டைக்குள் பிரதிஷ்டை செய்தார். தன்னுடைய இஸ்லாமிய நண்பரும், மன்னருமான நவாப்பிற்காக பள்ளிவாசலையும் கோட்டைக்குள்ளேயே நிறுவினார். கோட்டைக்குள் பள்ளிவாசலும், பகவதியம்மன் கோவிலும் இருந்தன. 

    கலங்காதகண்டி மன்னன் தனது மகளை தென்காசியை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டியனுக்கு மணம் முடித்து கொடுத்தார். மன்னன் ஒருநாள் மகளை காண தென்காசி பட்டணத்துக்கு வருவதாக மகளுக்கு தகவல் அனுப்பியுள்ளார். தன் தந்தை வரும் தகவலை கணவனிடம் இளவரசி சொல்லியுள்ளார். அப்போது மன்னர் பராக்கிரமபாண்டியன் உன் தந்தை மட்டும்தானே வருகிறார். ஓடைத்தண்ணீருமா கொண்டு வருகிறார் என்று கேட்கவே இளவரசி தந்தைக்கு தகவல் அனுப்பினார். 

    மகளின் வேண்டுகோளை ஏற்று கலங்காதகண்டி ராஜா அரிகர ஆற்றின் குறுக்கே உடனடியாக அணை கட்டி ஓடை மூலம் தண்ணீர் கொண்டு செல்ல பணிகளை தொடங்கினார். ஆனால் பணிகள் கொஞ்சம் கூட முன்னேற முடியவில்லை.

    மகளை வேண்டுகோளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிய கலங்காதகண்டி ராஜா அரசவை நம்பூதரியிடம் ஆலோசனை கேட்க நம் படையிலுள்ள ஒரு தூய வீரனை உயிரோடு பலியாக்கினால்தான் கட்டும் அணை காலகாலத்திற்கு நிற்கும் என்று கூற மனக்குழப்பத்தில் இருந்த மன்னன் கலங்காதகண்டி ராஜா மனக்குழப்பத்திலிருந்த தெளிவு பெற்றார். அந்த சமயம் மன்னனுக்கு மற்றொரு செய்தி இடியாய் இறங்கியது. தன்னுடைய இளைய மகள் தன்னுடைய படை தளபதி ஒருவருடன் காதல் கொண்டுள்ளாள் என்று ஓற்றன் தகவல் கூறவே அவரை உசுப்பேற்றியது. 

    ஓலை கொண்டு வந்த ஓற்றனை ஒய்வெடுக்க அனுப்பி விட்டு உடனடியாக அமைச்சருடன் ஆலோனை நடத்தினார் மன்னர். அப்போது அரசவை மந்திரவாதி கூறியதையும் அமைச்சரிடம் கூற அங்கே உயிர் பலி திட்டம் உடனடியாக நிறைவேறியது. திறமை மிக்க படை தளபதி அரசு துரோகியாகி விட்டான். படை தளபதியை பலி கொடுக்கும் திட்டம் மன்னருக்கும்- அமைச்சருக்கும் மட்டுமே தெரியும். 

    ஓரே கல்லில் இரு மாங்காய் அடிக்கலாம், மகளை மணமுடித்து கொடுத்த பகுதிக்கு தண்ணீரும் கொடுக்கலாம். தன் மகளை காதலித்தவனையும் சிரச் சேதம் செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள். உத்தரவை செயல்படுத்த தொடங்கினார் அமைச்சர்.

    படை தளபதியை அவரசமாக அணை கட்டும் பகுதிக்கு அழைத்தார் அமைச்சர். அணைத்திரயனும் அங்கு கொண்டுவரப்பட்டான். மன்னர் கலாங்காதகண்டி ராஜாவும் அணைக்கட்டு பகுதிக்கு வந்தார். அங்கு படைத்தளபதி மீது ராஜ துரோக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அதற்கு தண்டனையாக உயிரோடு சமாதி வைக்க உத்தரவிடப்பட்டது. படைத்தளபதி அணைத்திரையன் மன்னரின் தண்டனையே ஏற்றான். 

    என்னால் ஒரு நாடு வளம் பெருகும் என்றால் அதற்காக நான் என் உயிரை இழக்க தயார், அதே சமயம் உங்கள் மகளை காதலித்த குற்றத்திற்காக எனக்கு உயிரோடு சாமதியாகும் மரண தண்டனை கொடுத்தால் இன்னொரு உயிரையும் இழக்க நேரிடும் என்று மன்னரிடம் அணைத்திரயன் கூறினான்.

    உடனே மன்னரோ நீ இன்னாட்டின் படைதளபதி மட்டுமல்ல, என்னுடைய மெய்காப்பாளும் நீ, என்பது எனக்கு தெரியும். என் நாட்டின் உயிர் நாடி நீ, ஆனால் நாட்டின் இளவரசியை பாதுகாக்க வேண்டிய நீயே அவளை காதலித்தது ராஜ துரோகம். அதற்காக இந்த தண்டணையை உடனே நிறைவேற்றுங்கள் என்று கூறவே. 

    அணைத்திரயனோ என்னை யாரும் நெருங்க கூடாது, அப்படி நெருங்கினால் உங்கள் உயிர் இங்கேயே போய் விடும், எனக்கு கொடுத்த தண்டனையை நானே நிறைவேற்றிக் கொள்கிறேன் என்று கூறி நம்பூதரி கூறிய அணைக்கட்ட போடப்பட்ட பெரும் குழியில் குதித்து அணைத்திரையன் தலைசாய்த்து படுத்தான். தன்னை மறந்து தியானத்தில் படுத்த அவன் சமாதி நிலைக்கு மாறினான். அவனை அப்படியே உயிரோடு வைத்து அந்த அணையை கட்டி முடித்தான். 

    கட்ட, கட்ட உடைந்த அணையின் சுவர்கள் மீண்டும் புத்துயிர் பெற்றது. அணையும் கட்டி முடிக்கப்பட்டது. மன்னர் கலங்காதகண்டி ராஜா அணை கட்டிய இடத்தில் படைத்தளபதி அணைத்திரையனுக்கு சிலைவைக்க உத்தரவிட்டார். (அணைக்காக தலை சாய்த்ததால் அணைத்தலை வீரன் என்று பெயர்). 

    அடுத்த சில நாட்களில் இளவரசி அங்கே வந்தாள். மதிகெட்ட மந்திரியின் வஞ்சகத்தால் நாட்டை இழக்க போகிறாய். உன்னுடைய மந்திரிக்கு நவாப் ராஜா நண்பன். அவன் மூலம் உனக்கு ஆபத்து வரும். 

    நம்மை இதுநாள் வரை காத்து வந்தவர்கள் இரண்டு பேர். ஓன்று படைத்தளபதி அணைதிரையன். மற்றொன்று அன்னை பகவதியம்மன், ஓன்றை நீ இழந்து விட்டாய். மந்திரியின் வஞ்சகத்தால் உள்ளதையும் இழந்து விடாதே. படைத்தளபதியை நான் கணவனாக ஏற்றுக் கொண்டு விட்டேன். அவர் இறந்த பின் என்னால் வாழ முடியாது என்ற அவள், தனது மூத்த சகோதரியின் வேண்டுகோளை ஏற்று தன் காதலனை உயிரோடு சமாதியாக்கி கட்டிய அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

    இளைய மகளின் தற்கொலை பற்றி கவலைப்படாத மன்னன் அணையில் இருந்து கால்வாய் வெட்டி பராக்கிரம பாண்டியனாகிய தன் மருமகன் ஆட்சி செய்த தென்காசிக்கு விசுவநாதபுரம், அழக்கப்புரம், அய்யாபுரம் தென்காசியில் இன்றுள்ள தெப்பகுளத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றான். அந்த தெப்பக்குளத் தண்ணீர் சுந்தரபாண்டியபுரம் வரை செல்கிறது.

    மரண தருவாயில் இளைய மகள் கூறியது போல் மந்திரியின் நண்பன் ஆற்காடு நவாப் கலங்காதகண்டிக்கு படையெடுத்து வந்தான். கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. குதிரையின் கால் குழப்புதான் தேய்ந்தது. ஓற்றனை அனுப்பி மந்திரியிடம் ஆலோசனை நடத்த உத்தரவிட்டான். 

    ஓற்றனிடம் படைதளபதியை சமாதியாக்கியதையும், கோட்டை வாளகத்தில் உள்ள சக்தி வாய்ந்த பகவதி அம்மன் ஆலயம் உள்ள கதையையும், ஆலயத்தை அப்புறப்படுத்தினால் மட்டும் கோட்டைக்குள் நுழைய முடியும் என்றும் கூறி அதை ஆற்காடு நவாப்பிடம் கூறுமாறு சொல்லி அனுப்பிய அமைச்சர் உடனடியாக மன்னனை சந்தித்து பகவதியம்மன் கோவிலை கோட்டையில் இருந்து வெளியே கொண்டு போய் கோவில் கட்டுவோம், கோட்டைக்குள் கோவில் இருப்பதால்தான் குழப்பங்கலும், பிரச்சனைகளும் உருவாகிறது என்று சூழ்ச்சியோடு தகவல் சொன்னான்.

    இவ்வாறு பேசி கலங்காதகண்டி மன்னரின் மனதை கரைய வைத்து கோட்டை கொத்தளத்துக்கு வெளியே உள்ள ஆலமரத்தடியை தேர்ந்தெடுத்து அங்கே சிறு ஆலயம் கட்டி உடனடியாக பகவதியம்மனை அங்கே கொண்டு போய் வைத்து பிரதிஷ்டை செய்தனர். கலங்காதகண்டிக்கு மன்னராகும் ஆசையில் ராஜதந்திரத்துடன் மந்திரி செயல்பட்டுள்ளார் என்பது மன்னனுக்கு காலம் கடந்து தெரிய வரவே கொதித்தெழுத்தவன் உடனடியாக அமைச்சரை கோட்டைக்குள்ளேயே ரகசிய சிறையில் யாருக்கும் தெரியாமல் சிறை வைத்து விடுகிறான். 

    இதற்கிடையே ஆற்காடு நவாப் கலங்காதகண்டிக்கு படையெடுத்து கோட்டையை நெருங்கி வர கலங்காதகண்டி ராஜா தன் மனைவி மற்றும் படையோடு பாதாள சுரங்கம் வழியாக கேரளாவுக்கு தப்பி விடுகிறான். ஆற்காடு நவாப்பின் பீரங்கி தாக்குதலில் செம்மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட கோட்டை சின்னபிண்ணமாகி சிதைந்தது. சூழ்ச்சி செய்த மந்திரியும் பாதாள சிறையில் மண்ணோடு மண்ணாகியதாக வரலாறுகள் செவி வழி செய்தியாக உள்ளது.

    இவ்வூருக்கு நுழைவில் இன்றும் ஆலமரத்தடியில் பகவதியம்மன் கோவில் உள்ளது. அரிகரநதியின் குறுக்கே சுமார் 100 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட அணைக்கட்டும் உள்ளது. வடக்கு பகுதியில் அணைத்திரையன் சிலையும் உள்ளது. 

    கோட்டை முன் அமைக்கப்பட்ட ஆலடி ஊற்று, 3 கிணறு தூர்த்த நிலையில் உள்ளது. பள்ளிவாசல் உள்ளது. பகவதியம்மன் ஆலயம் ஊரின் நுழைவுவாயிலில் உள்ளது. சிதைந்த நிலையில் கோட்டையின் மதில் சுவர்கள் தனியார் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளது. ஐயப்பன் கோவில், அரிவாள்தட்டி ஓடையில் கருப்பசாமி சிலை. சிவலிங்கம் இருந்ததற்கான நந்தி சிலை. இளவரசி தற்கொலை செய்த இடத்தில் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. இந்த பகுதி நிலங்கள் அனைத்தும் தென்காசி காசிவிஸ்வநாதர், உலகம்மன் கோவிலுக்கு சொந்தமானது. 

    இயற்கையாகவே இந்த கிராமத்தின் கிழக்கு, வடக்கு திசையை சுற்றி சிறு, சிறு மலைக்குன்றுகளும், அதிலிருந்து சுமார் 30 அடி தாழ்வான பகுதியில் கோட்டை அமைந்திருத்ததும், தென்பகுதியில் 100 அடி அகலம் கொண்ட காற்றாற்று வெள்ளம் பாய்ந்து வரும் ஹரிகரா நதியும் அமைந்திருக்கின்றன.

    அரவணைப்புகளையும், முத்தங்களையும் விரும்பும் ஆண்கள்!

    செக்ஸ் உறவை விட நிறைய முத்தமும், அரவணைப்புகளும், தழுவுதல்களும்தான் ஆண்களின் முக்கிய விருப்பமாக இருக்கிறதாம். அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவில்தான் அதிக நாட்டம் இருக்கிறதாம்.

    இந்த வித்தியாசமான தகவலை ஒரு ஆய்வு முடிவு சொல்லியுள்ளது. இதுவரை இதை உல்டாவாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு செக்ஸ் உறவை விட தங்களது காதலி அல்லது மனைவி தங்களுக்கு அதிக அளவில் முத்தமிடுவதையும், கட்டித் தழுவுவதையும்தான் அதிகம் விரும்புகிறார்களாம்.அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவிலான செக்ஸ் உறவையே தங்களது பார்ட்னர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்களாம்.

    ஒன்று முதல் 51 ஆண்டு காலம் இணைந்து வாழும் 5 நாடுகளைச் சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வுக்காக பேட்டி கண்டு அவர்கள் மூலம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.ஆய்வு முடிவுகளின்படி, திருமணமாகி 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து விட்ட பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த நல்ல அறிவும், ஞானமும் ஏற்படுகிறதாம். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் செக்ஸ் குறித்த முழுமையான ஞானம் இருப்பதாக தகவல் கூறுகிறது.

    செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். 

    அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக, செக்ஸ் உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். என்னதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

    இந்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும், நீடித்த மகிழ்ச்சிக்கும், அளவில்லாத நிம்மதிக்கும், செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பது முக்கியமானது.

    கொல்கத்தா போலி நிறுவனங்கள் பெயரில் கலைஞர் டி.வி.க்கு வந்த ரூ 214 கோடி!

     2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரத்தில் 19 கொல்கத்தா நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாக, வருமான வரித்துறை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கலைஞர் டி.வி. பங்குதாரரான கனிமொழி எம்.பி., அந்த டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சினியுக் மீடியா நிறுவனம் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கும் இடையே இந்த பணம் கைமாறி இருக்கிறது.

    2 ஜி ஆதாயத்துக்காக கிடைத்த லஞ்சப் பணம்: ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் அடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் உரிமையாளரான சாகித் பல்வாவின் மற்றொரு நிறுவனமான டி.பி. குழுமம் 'லஞ்சமாக' இந்த பணத்தை கலைஞர் டிவிக்கு வழங்கியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது.

    சினியுக் நிறுவனம் மூலமாக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும், ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணை தொடங்கியதும், வணிக பரிமாற்றத்துக்காக கடனாக இந்த பணத்தை பெற்றதுபோல் காட்டி கலைஞர் டி.வி. திருப்பிச் செலுத்தத் தொடங்கியதாகவும் சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    கொல்கத்தா போலி நிறுவனங்கள்: இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் 19 நிறுவனங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளன. வருமான வரித்துறை அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவில் உள்ள இந்த நிறுவனங்களில் இருந்த பணம் சபையர் மீடியா மற்றும் கட்டமைப்பு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டு, பின்னர் அந்த நிறுவனம் சார்பில் அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.83 கோடி ரூபாய் மாற்றப்பட்டு இருக்கிறது.

    அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனம், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட 'கடன்' தொகையான 230.31 கோடியை கரீம் மொரானியின் சினியுக் நிறுவனத்துக்கு திருப்பிச் செலுத்துவதற்காக 69.61 கோடி கடனாக வழங்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வருமான வரித்துறை விசாரணையில், கொல்கத்தாவில் செயல்படுவதாக கூறப்படும் அந்த 19 நிறுவனங்களும் போலியானவை என்று தெரியவந்துள்ளது.

    ரேஷன் கார்டில் காஸ் இணைப்பு பதிவு ரத்து !

    காஸ் இணைப்பு உள்ளவர்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யும் முறை இன்று முதல் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    காஸ் இணைப்பு உள்ளவர்கள் மண்ணெண்ணெய் முறைகேடாக பெறுவதை தடுக்கும் வகையில் ரேஷன் கார்டில் பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதற்காக ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. 
    ரேஷன் கார்டில் பதிவு செய்யாதவர்களுக்கு காஸ் சிலிண்டர் புக்கிங் செய்யமாட்டோம் என காஸ் ஏஜென்சியினர் தெரிவித்தனர். 


    இதனால் தினமும் அதிகாலை முதல் காஸ் ஏஜென்சி முன்பு வாடிக்கையாளர்கள் ரேஷன்கார்டு, காஸ் இணைப்பு புத்தகத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இப்பணியில் தாலுகா அலுவலக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். காலதாமதம் ஏற்பட்டதால் ஒருசில இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.

    இந்நிலையில் ரேஷன் கார்டில் பதிவு செய்யும் பணியை இன்று முதல் நிறுத்தி வைக்கப்படும்படி உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பதிவு செய்யும் பணி இன்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் காஸ் இணைப்பு பெற்றவர்கள் விவரம் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தா தெரிவித்துள்ளார். 

    உலகின் செலவு மிகுந்த நகரம் லுவான்டா...

    அங்கோலா நாட்டின் தலைநகர் லுவான்டா உலகின் மிகவும் செலவு மிகுந்த நகரம் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மெர்சர் நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் செலவு மிகுந்த மற்றும் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வுப் பட்டியலில் மொத்தம் 214 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.


    இதில், உலகின் மிகவும் செலவு மிகுந்த நகரமாக அங்கோலா நாட்டின் தலைநகர் லுவான்டா தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி உலகின் மிகவும் செலவு குறைந்த நகரமாக பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. மாஸ்கோ 4-வது இடத்திலும், ஜெனீவா 5-வது இடத்திலும், லண்டன் 18-வது இடத்திலும், பாரீஸ் 27-வது இடத்திலும், நியூயார்க் 32-வது இடத்திலும் உள்ளன.
    வீட்டு வசதி, உணவு, போக்குவரத்து செலவு உட்பட மொத்தம் 200 பிரிவுகளின் கீழ் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    வர்த்தக, முதலீட்டு மையமாகியுள்ளது சென்னை அமெரிக்கா கருத்து!

     சமீப ஆண்டுகளில் சென்னை மாநகரம் வர்த்தக, முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.


    அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அடுத்த வாரம் சென்னை வருகிறார்.
    அவரின் இந்திய வருகையின்போது தில்லியில் அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் சென்னைக்கும் அவர் வருகிறார் என்று அமெரிக்காவின் பொருளாதார, எரிசக்தி மற்றும் வேளாண் துறை இணை அமைச்சர் ராபர்ட் டி ஹார்மட்ஸ் தெரிவித்தார்.


    வர்த்தக, பொருளாதார மையமாக உருவெடுத்துள்ள சென்னைக்கு கிளிண்டன் வருவது இதுவே முதல் முறை என ஹார்மட்ஸ் குறிப்பிட்டார். 1960-ல் பட்டதாரி மாணவராக இருந்தபோது தான் சென்னைக்கு வந்திருந்ததாகவும், மீண்டும் இங்கு வருவதற்கு ஆர்வமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.


    ஹிலாரி சென்னைக்கு வரும்போது மாமல்லபுரம் செல்ல வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்த ராபர்ட், அப்படி அவர் அங்கு செல்லவில்லை எனில் அவருக்கு முன்னதாக நான் சீக்கிரம் எழுந்து அங்கு செல்வேன். அந்த இடம் இந்தியா மட்டுமல்ல, உலகமே காண வேண்டிய இடங்களில் ஒன்று என ராபர்ட் ஹார்மட்ஸ் குறிப்பிட்டார்.

    மத்திய அமைச்சரவை மாற்றம்!



    புதிய அமைச்சர்களின் விவரம்:
    கேபினட் அந்தஸ்து
    கிஷோர் சந்திர தேவ்- பழங்குடியினர் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்யம்
    பேனி பிரசாத் வர்மா- உருக்கு
    தினேஷ் திவிவேதி- ரயில்வே
    ஜெய்ராம் ரமேஷ்- ஊரக மேம்பாடு
    இணை அமைச்சர்கள்(தனி அதிகாரம்)
    ஜெயந்தி நடராஜன்- சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள்
    ஸ்ரீபபான் சிங் கவ்டோவர்- வடகிழக்கு மேம்பாட்டுத் துறை
    ஸ்ரீகாந்தி ஜேனா- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறைகுருதாஸ் காமத்- குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் துறை 
    இணை அமைச்சர்கள்
    சுதிப் பந்தோபாத்யாயா- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
    சரண் தாஸ் மஹந்த்- வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை
    ஜிதேந்திர சிங்- உள்துறை
    மிலிந்த் தியோரா- தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
    ராஜிவ் சுக்லா- நாடாளுமன்ற விவகாரங்கள்
    அமைச்சர்கள் சிலருக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த துறை மாற்றப்பட்டு புதிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்
    கேபினட் அந்தஸ்து
    விலாஸ்ராவ் தேஷ்முக்- அறிவியல் மற்றும் தொழில்நுட்ம் மற்றும் பூகோள அறிவியல்
    வீரப்ப மொய்லி-கம்பெனி விவகாரங்கள்
    ஆனந்த் சர்மா- தொழில் மற்றும் வணிகத்துறை; ஜவுளித்துறை கூடுதல் பொறுப்பு
    பவன் குமார் பன்சால்- நாடாளுமன்ற விவகாரங்கள்; நீர்வளத்துறை கூடுதல் பொறுப்பு
    சல்மான் குர்ஷீத்: சட்டம் மற்றும் நீதித்துறை ;  சிறுபான்மை விவகாரங்கள் கூடுதல் பொறுப்பு
    இணை அமைச்சர்கள்
    இ.அகமது: வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாடு
    வி.நாராயணசாமி: பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியம்; மற்றும் பிரதமர் அலுவலகம்
    ஹரீஷ் ராவத்: வேளாண் மற்றும் உணவு படுத்துதல் துறை; மற்றும் நாடாளுமன்ற விவகாரம்
    முகுல் ராய்: ஷிப்பிங்
    அஷ்வனி குமார்: திட்டமிடல்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பூகோள அறிவியல்
    அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர்கள்
    தயாநிதி மாறன்
    முரளி தியோரா
    பி.கே.பண்டிக்
    எம்.எஸ்.கில்
    காந்திலால் புரியா
    ஏ.சாய் பிரதாப்
    அருண் யாதவ்

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...