|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2011

ரகசிய உறவு...! 81 பேர் கொலை: அதிரும் குடும்பங்கள்

மாறி வரும் சமூக, பொருளாதாரச் சூழல்; தனி மனித ஒழுங்குணர்வு குறைவு; எல்லை மீறும் காமம் உள்ளிட்ட காரணங்களால் "குடும்ப அமைப்பின்' ஆணிவேர் மெல்ல, மெல்ல ஆட்டம் கண்டுவருகிறது. கணவன் - மனைவி என்ற புனித உறவைத் தாண்டிய கள்ள உறவுகள் பெரும்பாலும் கொலை, தற்கொலையில் முடிகின்றன. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 371 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், கள்ள உறவால் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 81.

மாற்றானுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவங்களும், தனது கள்ள உறவை கணவன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, காதலுடன் சேர்ந்து கணவனையே தீர்த்துக்கட்டிய சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்துள்ளன; சில கொலைகள், சந்தேகம் காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கொலை வழக்குகளில் புலன்விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வது போலீசுக்கு பெரும் தலைவலி ஏற்படுத்துகின்றன. கொலைக்குப்பின் தலைமறைவாகும் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் பணி நேரத்தை அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது. திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஆதாயக்கொலை வழக்குகளில் புலன்விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து, திருட்டுச் சொத்துக்களை கைப்பற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக நிவாரணம் வழங்க வேண்டிய நிர்பந்தத்திலுள்ள போலீசார், கள்ள உறவு கொலைகள் அதிகரிப்பால் பணி நெருக்கடிக்கு உள்ளாகி விழிபிதுங்கி நிற்கின்றனர். திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைக்கூட, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி போலீசாரால் கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால், கள்ள உறவு கொலைகள் தனி நபர்களின் ஒழுங்குணர்வு சார்ந்தது என்பதால், கட்டுப்படுத்துவது எப்படி? எனத்தெரியாமல் திணறுகின்றனர்.

கொலை அதிகரிக்க காரணம் என்ன: கள்ள உறவு தொடர்பான பிரச்னைகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பிரதிபலிக்கின்றன. எனினும், இப்பிரச்னையை சரியானபடி எதிர்கொள்வது அல்லது சமாளிப்பது எப்படி? என்பது தொடர்பான விழிப்புணர்வு மிக குறைவாக இருக்கும் குடும்பங்களிலேயே ஆவேச கொலைகள் அதிகளவில் நிகழ்கின்றன. குறிப்பாக கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் கள்ள உறவு கொலைகள் அதிகம் நடப்பதாக தமிழக மேற்கு மண்டல போலீசாரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கணவனோ அல்லது மனைவியோ பிறருடன் கள்ள உறவு வைத்திருப்பது தெரியவந்தால் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் துணைக்கு மனோ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அப்பிரச்னையை எதிர்கொள்ள தெரிவதில்லை. ஆக்ரோஷத்தில் வாக்குவாதம் முற்றி துணையை கொலை செய்து விடுகின்றனர்.இவ்வாறான துயர சம்பவங்களில் மனைவியை கொலை செய்த கணவனோ அல்லது கணவனை கொலை செய்த மனைவியோ கைதாகி சிறையில் அடைபட நேரிடும்போது, பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு விடுகிறது. பெற்றோரை இழந்த பிள்ளைகள் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்து தவறான நபர்களின் சேர்க்கையினால் சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுவே, பெண் பிள்ளைகளாக இருப்பின், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி வாழ்க்கை பாழாகிவிடுகிறது.எனவே, கள்ள உறவு கொலைகளை தடுப்பது அல்லது தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.,அலுவலகம், டி.ஐ.ஜி.,க்கள் மற்றும் எஸ்.பி.,க்களின் கருத்துக்களை கேட்டது. பலரும், இவ்விவகாரம், தனி நபர் ஒழுக்கம் சார்ந்தது என்பதால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சிறந்த வழி என தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கை சீரழியும்!கோவை பெண் வக்கீல்கள் சங்க தலைவி தேன்மொழி கூறியதாவது: திருமண வாழ்க்கை பந்தம் முழுக்க, முழுக்க நம்பிக்கை அடிப்படையிலானது. தம்பதியர் தங்களது துணை மீது முழு நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்வை இனிமையாக தொடர முடியும். கணவனோ அல்லது மனைவியோ வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்ததும், அமைதியான வாழ்வில் புயல் ஆரம்பிக்கும்; ஆவேசத்தில் கொலையும் நிகழும். இதுபோன்ற சமயங்களில் உணர்ச்சிக்கு ஆட்பட்டு எவ்வித குற்றத்திலும் ஈடுபடத் தேவையில்லை. கள்ள உறவை காரணமாக கூறி கோர்ட்டில் விவகாரத்து பெற முடியும். சட்ட ரீதியான நிவாரணத்தை தேடும் போது, குழந்தைகளின் எதிர்காலம் இருண்டுவிடாமல் தடுக்க முடியும். "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற "மந்திரம்' மட்டுமே வாழ்க்கையை வளமுள்ளதாக்கும். ரகசியமான கள்ள உறவுகள் என்றேனும் ஓர்நாள் அம்பலமாகும் போது, வாழ்க்கை நிச்சயம் சீரழிந்துவிடும்.இவ்வாறு, தேன்மொழி தெரிவித்தார்.

கோவை நகரில் 5 பேர் கொலை! கோவை மாநகர போலீஸ் எல்லைக்குள் கடந்த ஆண்டில் 20 கொலைகள் நிகழ்ந் துள்ளன; இவற்றில் ஐந்து கொலைகள் கள்ள உறவு மற்றும் பாலியல் தொடர்பானவை. செல்வபுரம் போலீஸ் எல்லைக்குள் நடந்த ஒரு கொலைச் சம்பவம், போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தது. மனைவியை இழந்த கூலித்தொழிலாளி, தனது மகனுடன் வசித்து வந்தார்.பின்னாளில், இரண்டாம் திருமணம் செய்து அப்பெண்ணுடன் வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தார். இந்நிலையில், "சித்தி' உறவு முறையிலான அந்த பெண்ணுடன், கூலித்தொழிலாளியின் மகன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த தந்தை, தனது மகனை கொலை செய்தார். இதேபோன்று, கள்ள உறவு தொடர்பான மேலும் நான்கு கொலைகளும் நகர எல்லைக்குள் நடந்துள்ளன. அதாவது, கடந்த ஆண்டில் நிகழ்ந்த 20 கொலைகளில், ஐந்து கொலைகள் கள்ள உறவால் நிகழ்ந்துள்ளன.

"ஒழுக்கம் சார்ந்த வாழ்வு குறித்த விழிப்புணர்வு அவசியம்' கோவை மாநகர போலீஸ் தெற்குப்பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் பாலாஜிசரவணன் கூறியதாவது:கள்ள உறவு கொலைகள் அதிகரிக்க சமூகத்தில் பல்வேறு காரணிகள் உள்ளன. சினிமா, "டிவி', இன்டர்நெட் மற்றும் ஊடகங்களும் ஒரு காரணம். வெகுஜன தொடர்பு சாதனங்கள் நல்ல பல விஷயங் களை மக்களுக்கு காட் சிப்படுத்தும் போதிலும், பாலுணர்வை தூண்டக்கூடிய ஆபாச காட்சிகளையும் முன்னிலைப்படுத்துகின்றன. சினிமா, இன்டர்நெட் போன்றவற்றில் ஆபாச காட்சிகளை ரசிப்போர், அதற்கான வடிகாலை தேட துவங்குகின்றனர்.காட்சியை ரசிப்பவர் மணமானவராக இருப்பின் தமது துணையுடன், உணர்வை பகிர்ந்துகொள்கிறார். மணமாகாதவராக இருப்பின் கள்ள உறவு போன்ற ஒழுக்கம் தவறிய செயல்களில் ஈடுபட துணிகின்றனர். ஒருவர், தமது விருப்பம், ஆசையை நிறைவேற்றிக்கொள்வதும் கூட சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் நடக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறும்போது கள்ள உறவு ஏற்படுகிறது; அது அம்பலமாகும் போது கொலை நிகழ்கிறது. நவீன காட்சி ஊடகங்கள் மலிந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் பாலுணர்வு தூண்டலுக்கான வாய்ப்புகள் பரவிக்கிடக்கின்றன. இதனால், இளைய தலைமுறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெற்றோர், தங்களது பிள்ளைகள் மீதான கவனத்தையும், கண்காணிப்பையும் இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கம், சமூக பொறுப்பு, கடமைகள் குறித்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு குடும்பங்களில் எடுத்துரைப்பது வெகுவாக குறைந்துவிட்டது; இந்நிலை அடியோடு மாற வேண்டும். இளைய தலைமுறையினர் மத்தியில் ஒழுக்க வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால், எதிர்காலங்களில் இதுபோன்ற கள்ள உறவு சார்ந்த குற்றங்களை வெகுவாக குறைத்துவிட முடியும். இவ்வாறு, பாலாஜிசரவணன் தெரிவித்தார்.

யுவ்ராஜ் சிங் அபாரம்; இந்தியா வெற்றி பெற்றது

பெங்களூரில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் யுவ்ராஜ் சிங்கின் ஆல்-ரவுண்ட் திறமைகளால் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

41-வது ஓவரில் 167/5 என்று இருந்த இந்தியா 46-வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றிக்கான ரன்களை யூசுப் பவுண்டரி மூலம் பெற்றார்.

41-வது ஓவரில் தோனி 34 ரன்கள் எடுத்து டாக்ரெல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனவுடன் ஆட்டம் லேசா
PTI Photo
FILE
அயர்லாந்து பக்கம் செல்கிறதோ என்ற ஐயம் எழுந்தது. ஆனால் அதே ஓவரில் மீதமிருந்த 5 பந்துகளில் லாங் ஆன் திசையில் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களையும் அதே திசையில் ஒரு பவுண்டரியையும் அடித்து அந்த ஓவரிலேயே அயர்லாந்தின் வெற்றி ஆசைகளைத் தகர்த்தார் அதிரடி மன்னன் யூசுப் பத்தான்.

பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய யுவ்ராஜ் சிங் பேட்டிங்கிலும் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

ஒரே போட்டியில் 50 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் இதுவரை ஒருவரும் எடுத்ததில்லை என்று கூறப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்த பிறகு கோலியும், யுவ்ராஜும் இணைந்து ஸ்கோரை 100 ரன்களுக்கு உயத்தினர், அப்போது யுவ்ராஜ் அடித்த ஷாட்டிற்கு படு வேகமாக ஓடினார் கோலி ஆனால் யுவ்ராஜ் பாதி தூரம் வந்து பின்பு தன் பேட்டிங் முனைக்க்கு திரும்பினார். கோலி ரன் அவுட்டாக 100/4 என்று மைதானத்தில் நிசப்தமும், தோல்வி குறித்த அச்சமும் ரசிகர்களிடையே எழுந்தது.

webdunia photo
FILE
ஆனால் அதன் பிறகு களமிறங்கிய தோனி, யுவ்ராஜுடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 67 ரன்களைச் சேர்த்தனர்.

அப்போதூ 50 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த தோனி டாக்ரெல் பந்தை மேலேறி வந்து வெளுத்து வாங்குவதற்குப் பதிலாக காலைப் போட்டு என்னவோ செய்யப்பார்த்தார், பந்து மட்டையைத் தாண்டி பின்னங்காலில் பட்டது. நடுவர் அவுட் என்றார். தோனிக்கு சிறிய சந்தேகம் மேல்முறையீடு செய்தார். ஆனால் பெரிய திரையில் ரீ-பிளேயைப் பார்த்த அவர் தானே பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்.

அப்போது களமிறங்கிய யூசுப் பத்தான் முதல் பந்தை விட்டார், இரண்டாவது ஷாட் பிட்ச் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்து லேசாக டாக்ரெலால் பிளைட் செய்யப்பட தூக்கி சிக்சருக்கு அடித்தார். மீண்டும் அடுத்த பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்து லேசான பிளைட் மீண்டும் லாங் ஆன் திசையில் ரசிகர்கள் மத்தியில் பந்து போய் விழுந்தது.

அதன் பிறகு ஆஃப் ஸ்பின்னர் ஸ்டர்லிங் பந்து ஒன்றும் லேசாக பிளைட் செய்யப்பட அதனையும் சிக்சருக்குத் தூக்கினார் யூசுப் பத்தான்.

அதன் பிறகு யுவ்ராஜ் சிங் ஃபுல்டாஸ் பந்தை மிட்விக்கெட் பவுண்டரிக்கு விரட்டி அபார அரை சதத்தை எடுத்து முடித்தார்.

கடைசியில் யூசுப் பத்தான் பைன்லெக் திசையில் பவுண்டரி அடித்து வெற்றி பெறச் செய்தார்.

24 பந்துகளைச் சந்தித்த யூசுப் பத்தான் 2 பவுண்டரிகளையும் 3 சிக்சர்களையும் அடித்து 30 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

அயர்லாந்து அணியின் கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் அபாரமாக அணியை வழி நடத்தினார். நல்ல ஃபீல்டிங் வியூகம் அமைத்தார். பந்து வீச்சு குறிப்பாக ஜான்ஸ்டன், ரான்கின், ஸ்பின்னர் டாக்ரெல் ஆகியோர் இந்தியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக 50 ரன்கள் 5 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிக்ழ்த்திய யுவ்ராஜ் சிங் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அயர்லாந்து 8 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினர். இதில் ஜான்ஸ்டன், டாக்ரெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரான்கின் விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் 10 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு கைதேர்ந்த வேகப்பந்து வீச்ச்சளர் போல் வீசினர்.

நெருக்கடியிலிருந்து இந்தியா ஒருவழியாக மீண்டு வந்து வென்றது

நாளை திமுக அமைச்சர்கள் விலகல் கடிதத்ததைக் கொடுக்கிறார்கள்

டெல்லி: மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை, நாளை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளனர்.

இத்தகவலை திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு இன்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீடு தொடர்பாக பெரும் குடைச்சல் கொடுத்து வந்ததால் நேற்று அதிரடியாக ஆட்சியிலிருந்து விலகுவதாக திமுக அறிவித்தது. வெளியிலிருந்து ஆதரவு என்றும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விளக்கிய நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், பிரதமரை திமுக அமைச்சர்கள் நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களைக் கொடுப்பார்கள். பேக்ஸ் மூலம் அனுப்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

முடிவை அறிவித்து விட்ட போதிலும் உடனடியாக திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை. காங்கிரஸ் தரப்பிலிருந்து என்ன ரியாக்ஷன் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, நாளை திமுக அமைச்சர்கள் ஆறு பேரும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தங்களது விலகல் கடிதத்தைத் தருவார்கள் என்று தெரிவித்தார்

காங்கிரஸை தோற்கடிப்பதே இலக்கு - சீமான்

இலங்கையில் தழிர்களைக் கொன்றொழித்து அவர்களுடைய வாழ்க்கை சிதறடிக்கவும், தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் கொல்லப்படுவதை தடுக்கத் தவறிய காங்கிரஸ் கட்சியை தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்கடிப்பதே எங்களது இலக்கு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை நாம் தமிழர் கட்சி எவ்வாறு அணுகுவது என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் ஆன்றோர்ப் பேரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஈழத் தமிழனத்தின் 60 ஆண்டுக்கால விடுதலைப் போராட்டத்தை அழிக்க டெல்லி அரசு துணை போனது. அதற்குப் பாடம் புகட்ட வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, எந்தத் தொகுகளிலெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் செய்து அதனைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களிடம் கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்து போட்டியிட்டாலும் அல்லது தனியே போட்டியிட்டாலும் அதனைத் தோற்கடிப்பதே தங்களது பணியாக இருக்கும் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பரப்புரை செய்யும் போது ஒவ்வொரு தொகுதியிலும் அந்தக் கட்சியைத் தோற்கடிக்கக்கூடிய கட்சியின் சின்னத்தின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் நாம் தமிழர் ஈடுபடும்.

ஈழத் தமிழனம் அழித்தொழிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வு சிதறிடிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பழிவாங்கவே காங்கிரஸை தோற்கடிப்பது என்கின்ற ஒருமித்த முடிவிற்கு நாம் தமிழர் கட்சி வந்துள்ளதாக சீமான் கூறினார்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியின் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்வீர்களா என்று கேட்டதற்கு, எந்தக் கூட்டணிக்கும் ஆதரவாகவும் தங்களது பரப்புரை இருக்காது என்றும், தங்களது பரப்புரையின் ஒரே நோக்கு இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தடுப்பதாகவே இருக்கும் என்று பதிலளித்த சீமான், காங்கிரஸ் போட்டியிடாத தொகுதிகளில் நாங்கள் எந்தப் பரப்புரையையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் அப்பொழுது உங்களுடைய நிலை என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, காங்கிரஸை எதிர்ப்பதில் எந்த மாற்றமும் இருக்காது என்று சீமான் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் சீமானுடன், இயக்குனர் மணிவன்னன், புலவர் கீ.தா.பச்சையப்பன், பேராசிரியர் இறைபுலவனார், பேராசிரியர் தீரன் ஆகியோர் இருந்தனர்.

பரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

சென்னையில் நடைஎற்ற இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டம் பரப்பாக இங்கிலாந்து வெற்றியுடன் முடிந்தது. தென் ஆப்பிரிக்காவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

172 ரன்கள் இலக்கை எதிர்த்து அபாரமாக விளையாடி வந்த தென் ஆப்பிரிக்கா 124/2 என்ற நிலையிலிருந்து கடைசி 8 விக்கெட்டுகளை 41 ரன்களுக்கு இழந்து தோல்வி கண்டது.

துவக்கத்தில் ஹஷிம் அம்லாவும், ஸ்மித்தும் நிதானத்துடன் துவங்கி 14 ஓவர்களில் 63 ரன்களை துவக்க விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

கிரகாம் ஸ்வானுக்கு பந்துகள் அசுரமாகத் திரும்பத் துவங்க தடுமாறிய ஸ்மித் கடைசியில் 22 ரன்கள் எடுத்து பிரையரிடம் கேட்ச் கொடுத்து ஸ்வானிடம் வீழ்ந்தார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் 42 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி வந்த ஆம்லா ஸ்டூவர்ட் பிராடின் எழ்ம்பிய பந்தை மட்டையை நீட்டி தடுத்தாடாமல், மட்டையை உள்ளடக்கி தடுத்தாடி பந்து மட்டையில் பட்டு ஸ்டம்ப்களில் விழுந்தது.

ஜாக் காலிஸ் களமிறங்கி 3 பவுண்டரிகளை விளாசி 15 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார் ஆனால் அவரும் பிராடின் பந்தில் பிரையரின் நல்ல கேட்சிற்கு வீழ்ந்தார்.

அதன் பிறகு டீவிலியர்சும் டூ பிளெச்சிசும் இணைந்து 13 ஓவர்களில் 42 ரன்களையே சேர்க்க முடிந்தது. ஏனெனில் பிட்ஸ் சுழற்பந்துக்கு சாதகாக இருந்தது.

ஸ்கோர் 124 ரன்களை எட்டியபோது டீவிலியற்சுக்கு சிறந்த வேகப்பந்தை வீசினார் ஜேம்ஸ் ஆண்டர்சன் 44 பந்துகளில் பவுண்டரிகளே இல்லாமல் 25 ரன்கள் எடுத்த டீவிலியர்ஸ் பவுல்டு ஆனார்.

அதே ஸ்கோரிலேயே டூ பிளெசிஸ் 17 ரன்களில் இங்கிலாந்தின் நல்ல ஃபீல்டிங்கிற்கு ரன் அவுட் ஆனார். டுமினி களமிறங்கி ரன் எதுவும் எடுக்காமல் ஆண்டர்சன் பந்தில் பவுல்டு ஆனார். இது உண்மையில் இந்த உலகக் கோப்பையின் சிறந்த பவுல்டு ஆகும், நேராக, வேகமாக வந்த பந்தை டுமினி ஒன்றும் செய்ய முடியவில்லை
singam_puli_posters_wallpapers_01_thumb உலகக்கோப்பை கிரிக்கெட் ஜுரத்தில் எல்லா திரையரங்குகளும் மிகக் குறைந்த அளவு ஆடியன்ஸுகளை வைத்து ஏதோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்கள் படமெல்லாம் ஏப்ரலுக்கு தள்ளிப் போனதால், புதிய நடிகர்கள், சின்ன பட்ஜெட் படங்களுக்கு இப்போது தியேட்டர் கிடைக்கிறது. இதன் நடுவில் கோவிற்கு முன்னால் வெகு நாள் தயாரிப்பிலிருந்த ஜீவாவின் சிங்கம் புலி தியேட்டர்களுக்கு ஆக்ஸிஜனைத் தருமா?

சமீப காலங்களில் ஒரு நம்பிக்கைக்குரிய நடிகராக வளர்ந்து வரும் ஹீரோக்களுள் ஜீவாவும் ஒருவர். அதற்கு காரணம் அவரின் டெடிக்கேட்டடான உழைப்பு. இந்த மாஸ் மசாலா படத்திற்கும் அதே உழைப்பை அளித்து படத்தை நிறுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.வழக்கமான இரட்டை வேட படம் தான். அண்ணன், தம்பி இருவருக்கும் உருவத்தில் வித்யாசமேயில்லை, பாடி லேங்குவேஜில் கூட வித்யாசமில்லை. ஆனால் கேரக்டர்களில் வித்யாசம் மலையளவில் உண்டு. அண்ணன் கோபக்காரன், நியாயத்துக்காக எகிறுபவன். தம்பி வக்கீல், ஸ்த்ரிலோலன், தன் சுகத்துக்காக சொந்த அண்ணனையே போட்டு தள்ள முடிவெடுப்பவன். வீட்டில் சின்ன வயதிலிருந்தே அண்ணனைவிட தம்பியின் பால் அன்பும் ஆதரவும் அதிகமாயிருக்க, தம்பி வீட்டில் நல்லவனாகவும், வெளியே எல்லா தில்லாலங்கடியும் செய்பவனாக இருக்கிறான். அண்ணன்காரன் மீன் கடை வைத்துள்ளான். தம்பியால் ப்ரச்சனைக்குள்ளான பெண்ணொருத்தி தற்கொலை செய்து கொள்ள, அதற்கு காரணமான தம்பியின் மீது கேஸ் தொடுக்கிறான். எல்லா விதமான தகிடுதத்தங்களை செய்து கேஸிலிருது வெளிவரும் தம்பி அண்ணனை கூலிப் படையினரை வைத்து போட்டுத் தள்ள முடிவெடுக்கிறான். முடிந்தானா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்.
உருவத்தில், நடையுடை பாவனையில், கொஞ்சம் கூட வித்யாசமில்லாமல் இருப்பது போன்ற கேரக்டர்களை தன் திறமையான நடிப்பைக் கொண்டு, வித்யாசப் படுத்த முயற்சி செய்திருக்கிறார். சமயங்களில் அவர் எவ்வ்ளவு முயன்றும் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அண்ணன் கேரக்டரைவிட, கேஸனோவா தம்பி கேரக்டருக்கு அதிகம் வேலை. அதை சுவாரஸ்யமாய் ரசித்து செய்திருக்கிறார்.கதாநாயகிகள் குத்து ரம்யா, கல்யாணி. இரண்டாம்வருக்கு பெரிதாய் ஏதும் “நடிக்க” சொல்லிக் கொள்கிறார்ப் போலில்லை. ரம்யா ஓகே. ஆனால் ஒரு மாதிரி பரந்து விரிந்து கிடக்கிறார். படத்தின் இன்னொரு இண்ட்ரஸ்டிங் கேரக்டர் சந்தானம். மனுஷனுக்கு இப்போ சுக்ர திசை போலருக்கு, ஸ்கீரினில் தெரிந்தாலே மக்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பழைய ஹீரோ கெட்டப்பில் வந்து கலாய்ப்பது நல்ல காமெடி.
மணிசர்மாவின் இசையில் ஒரே தெலுங்கு வாடை. ஜீவாவும், கல்யாணியும் பாடலைத் தவிர நத்திங் இம்ப்ரசிவ். அதிலும் அந்த பின்னணியிசை அய்யோ.. அப்பா.. முடியலை.

பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். டெக்னாலஜி எவ்வளவோ உயர்ந்திருக்கும் காலத்தில் இவ்வளவு அரத பழசான டபுள் ஆக்‌ஷன் டெக்னிக்குகள் படு அமெச்சூர்தனம். ஜீன்ஸ் காலத்திலேயே இதை விட பிரமாதமான காட்சியமைப்புகளில் பின்னி பெடலெடுத்திருப்பார்கள். முக்கியமாய் இரு ஜீவாக்களில் லுக்குகளில் அநியாயமான ஆங்கிள் வித்யாசங்கள்எழுதி இயக்கியவர் சாய்ரமணி. ஒரே உருவமுள்ள இரண்டு முரணான கேரக்டர்கள், அதிலும் அண்ணன், தம்பி என்று வைத்துக் கொண்டு அட்டகாசமான படத்தை அளித்திருக்க முடியும். அதற்கான எல்லா முஸ்தீப்புகளுள்ள கதையில் திரைக்கதை சொதப்பலினால் வீழ்ந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. அதிலும் இரண்டேமுக்கால் மணி நேரம் ஓடும் படம் நிறைய இடங்களில் கொட்டாவி விட வைக்கிறது. முதல் பாதி செட்டில் ஆவதற்கே இடைவேளை வந்துவிடுகிறது. நிறைய டபுள் மீனிங், ஸ்ட்ரெயிட் மீனீங், வசனங்கள் ஒரு சாராரை திருப்திப் படுத்தும். இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பான திரைக்கதையமைத்திருந்தால் நிச்சயம் ஒரு பரபரப்பான படமாய் அமைந்திருக்கும்.

Ajith Punch In Mankatha



திமுகவில் சீட் கேட்டு திருநங்கை கல்கி மனு!

சென்னை: தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட திரைப்பட கலைஞர் திருநங்கை கல்கி விண்ணப்பித்துள்ளார்.

சகோதரி என்ற அமைப்பின் மூலம் திருநங்கைகளின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர் கல்கி. நர்த்தகி என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

தேர்தலில் சீட் கேட்டு திருநங்கையொருவர் விண்ணப்பிப்பது இதுவே முதல் முறை.

தி.மு.க. சார்பில் போட்டியிட மனு கொடுத்துள்ள கல்கி, இதுகுறித்துக் கூறுகையில், "அரவாணி என்பதை திருநங்கை என மாற்றியவர் கலைஞர்தான். எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த முதல் கட்சி தி.மு.க.தான். தி.மு.க. ஆட்சியில்தான் எங்களுக்கு பல உரிமைகள் கிடைத்தன. எனவே தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பி மனு கொடுத்துள்ளேன்.

நான் தேர்தலில் போட்டி யிட தி.மு.க. தலைவர் சீட் தருவாரா என்று தெரியாது. என்றாலும் என் விருப்பத்தை தலைவருக்கு தெரிவித்துவிட்டேன். பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த எல்லாருக்கும் உரிய பிரதி நிதித்துவம் கிடைக்க வேண்டும். எனக்கு சீட் கேட்டு இதுவரை எந்த தலைவரையும் நான் சந்தித்து பேசவில்லை...", என்றார் அவர்

மங்காத்தாவில் ஒரு 'வரலாறு'

வரலாறு படத்தில் வயதான கெட்டப்பில் கலக்கியதைப் போல மங்காத்தா படத்திலும் ஒரு வயதான பாத்திரத்தில் வருகிறாராம் அஜீத்.

வெங்கட் பிரபு இயக்க, அஜீத் நடிக்கும் முற்றிலும் வித்தியாசமான திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் அஜீத் நடிப்பது தெரியும். ஆனால் ஒரு வயதான பாத்திரத்திலும் அவர் வருகிறார் என்பது புதிய செய்தி.

வரலாறு படத்தில் அஜீத் வித்தியாசமான மூன்று பாத்திரங்களில் அசத்தியிருந்தார். அதில் வயதான கெட்டப்பும் ஒன்று. அதேபோன்ற பாத்திரத்தில் மங்காத்தாவிலும் சில காட்சிகளில் வருகிறாராம் அஜீத். இந்த பாத்திரமும் வரலாறு போல வெகுவாக பேசப்படுமாம்.

அசல் படத்திலும் வயதான கெட்டப்பில் நடித்திருந்தார் அஜீத். ஆனால் வரலாறு படம்தான் அஜீத்துக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

மங்காத்தா படத்தில் அஜீத் ஏற்றுள்ள வயதான பாத்திரம் குறித்த தகவல்களை படு ரகசியமாக வைத்துள்ளனராம். ஆனால் ரகசியம் என்றாலே அது எப்படியாவது கசிந்து விடுவது இயல்புதானே. அந்த அடிப்படையில் இந்த வயதான அஜீத் பாத்திரம் குறித்த தகவலும் கோலிவுட்டை வலம் வர ஆரம்பித்துள்ளது
ஹூஸ்டனில் தமிழ் நாடகம்
மார்ச் 05,2011,09:02  IST
ஹூஸ்டன் : ஹூஸ்டன் மாநகரில்  பிப்ரவரி 27ம் தேதியன்று “சினிமா பைத்தியம்” எனும் நாடகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனந்தாவின் தலைமையில் இயங்கிவரும் ”தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்” எனும் நாடகக் குழுவின் சார்பில் “பாரதி கலை மன்ற” அமைப்பின் மூலமாக இந்நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அனந்தாவின் கதையாக்கத்திலும், அவரது மகள் அறிமுக இயக்குநர் இலக்குமியின் இயக்கத்திலும் உருவான “சினிமா பைத்தியம்” மாநகர் தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இன்றைய காலச் சூழலில் சினிமா தயாரிப்பு, நடிப்பு போன்றவைகள் யார் யாருக்கெல்லாம் ஆசையை வளர்த்துவிடுகிறது என்பதனை கருவாகக்கொண்டு மிக நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சமூக அக்கறையோடும் தெளிவாக வெளிப்படுத்தியது இந்நாடகம்.
இதில் பங்கேற்று நடித்த நடிக நடிகையர் அனைவருமே நடிப்பை தொழிலாக கொண்டவர்கள் இல்லையென்றாலும் வெகுஇயல்பாக தத்தம் பாத்திரத்திற்கேற்ப உணர்ந்து நடித்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக ஆங்கிலச் சூழலில் வாழ்கின்ற தமிழ்க்குழந்தைகள் அனைவரும் குதூகலத்துடன் கண்டுகளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அத்துடன் அனந்தா, அவரது ஒவ்வொரு நாடகத்திலும் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழை மிகச் சாதுர்யமாக கையாள்வதில் கைதேர்ந்தவர் என்பதனை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது. இந்நாடகத்திலும் பல்வேறு நடனங்கள்,செந்தமிழ்ப் பேச்சுக்கள் போன்றவற்றை சற்று தூக்கலாகவே காண முடிந்தது. மாலை நேரத்தில் மாநகர தமிழ் மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது என்றே கூற வேண்டும். இறுதியில் பாரதி கலை மன்றத்தின் சார்பில் அனந்தாவின் நாடகத் தொண்டினை பாராட்டி”வாழ்நாள் சாதனையாளர்”விருது வழங்கி வாழ்த்து நல்கி பெருமைப்படுத்திய

பெர்னில் மகா சிவராத்திரி விழா

பெர்ன் : சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள சைவநெறிக்கூடம் அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் மார்ச் 02ம் தேதியன்று மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மார்ச் 02ம் தேதிய‌ன்று மாலை 5 மணிக்கு துவங்கி மார்ச் 03ம் தேதி காலை வரை சிறப்பு யாகங்கள், பூஜைகள், அபிஷேகங்கள் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது. ருத்ர அபிஷேகம், மகா தீபாராதனை, மகேஸ்வர பூஜை ஆகியவற்றைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக திருமுறைகளும், பாசுரங்களும் இசைக்கப்பட்டது. பல்வேறு இசைக் கச்சேரிகளும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் இடம்பெற்ற ஆனந்த தாண்டவ நடனம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண் விழித்து, சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தனர்

துபாயில் சிற‌ப்புச் சொற்பொழிவு

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் 'ம‌ண‌ம் வீசும் ம‌னம்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி மார்ச் 02ம் தேதியன்று மாலை அஸ்கான் ச‌முதாய‌க் கூட‌த்தில் ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்ப‌ட்ட‌து. அத‌னைத் தொட‌ர்ந்து முஹிப்புல் உல‌மா முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். வ‌த்த‌ல‌க்குண்டு மௌல‌வி ச‌ம்சுல் ஹுதா ஹ‌ஜ்ர‌த், இல‌ங்கை த‌மிழ்ச் ச‌ங்க‌ துணைத்த‌லைவ‌ர் டாக்ட‌ர் ஜின்னாஹ் ஷ‌ரீபுத்தீன் ஆகியோர் சிற்றுரை வ‌ழ‌ங்கின‌ர். முனைவ‌ர் சேமுமு குறித்த‌ அறிமுக‌வுரையினை முதுவை ஹிதாய‌த் நிக‌ழ்த்தினார். அத‌னைத் தொட‌ர்ந்து 'ம‌ண‌ம் வீசும் ம‌ன‌ம்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவினை த‌மிழ்நாடு முஸ்லிம் தொண்டு இய‌க்க‌ பொதுச்செய‌லாள‌ரும், இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழ் ஆசிரிய‌ருமான‌ முனைவ‌ர் பேராசிரிய‌ர் சேமுமு முஹ‌ம‌த‌லி நிக‌ழ்த்தினார். கூட்ட‌த்தில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

நியூஜெர்சியில் மகா சிவராத்திரி விழா

நியூஜெர்சி : நியூஜெர்சி அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயிலில் மார்ச் 02 மற்றும் 03 ஆகிய இரண்டு நாட்களும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்கள், பூஜைகள், கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்களைத் தொடர்ந்து பால், தயிர், பன்னீர், சந்தனம், திருநீரு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பஜனைக் குழுவினர் வழங்கிய சிறப்பு பஜனைகள் இடம்பெற்றது. காய்கறி அலங்காரம், பழ அலங்காரம், மலர் அலங்காரம் ஆகியவற்றில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மகா தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கள் கைகளாலேயே லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து சிவ பெருமானை வழிபட்டனர்.

அபுதாபி அய்மான் ச‌ங்க‌த்தில் க‌ல்வியாள‌ருக்கு வ‌ர‌வேற்பு

அபுதாபி : அபுதாபி அய்மான் ச‌ங்க‌த்தின் சார்பில் த‌மிழ‌க‌த்தில் இருந்து வ‌ருகை புரிந்த‌ பேராசிரிய‌ர் முனைவ‌ர் சேமுமு முக‌ம‌த‌லிக்கு மார்ச் 03ம் தேதியன்று மாலை வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து. முனைவ‌ர் சேமுமு முக‌ம‌த‌லி, அய்மான் ச‌ங்க‌ம் மேற்கொண்ட க‌ல்விச் சேவைக‌ளைப் பாராட்டினார். மேலும் திருச்சியில் பெண்க‌ளுக்காக‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ரும் க‌ல்லூரியின் ப‌ணிக‌ளையும் பாராட்டினார். இதுபோன்ற‌ சேவைக‌ள் ந‌டைபெறுவ‌த‌ற்கு உறுதுணையாக‌ இருந்து வ‌ரும் நிர்வாகிக‌ள் ம‌ற்றும் புர‌வ‌ல‌ர்க‌ளைப் பாராட்டினார். நிக‌ழ்வில் அய்மான் ச‌ங்க‌ த‌லைவ‌ர் அதிரை சாகுல் ஹ‌மீது, பொருளாள‌ர் முஹ‌ம்ம‌து ஜ‌மாலுதீன், ஈமான் ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

திருவொற்றியூர் பாலகிருஷ்ணன் நகர் பகுதியில் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் குண்டு குழியில் வாழ்கை நடத்தி வந்த மக்களுக்கு இனி வசந்தம்தான். சிமென்ட் ரோடு போட இரவோடு இரவாக வந்திறங்கிய காங்ரீட் கலவைகள். தேர்தல் வருதுன்னாதான் இது போன்ற விமோச்சனம் நடக்குது என கூறும் அந்த பகுதி மக்கள்.


இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர்: எதிரிகள் அனுப்பும் ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது ஒரு அருமையாக செயல்படுத்தப்பட்ட திட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுதள மைய இயக்குநர் எஸ்.பி.,தாஸ் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையினர் செயல்பட்டு புதுப்புது யுக்திகளை செயல்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் இன்று இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள் , எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை சோதித்து வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

ஒரிசா மாநிலம் தம்ராபாதக் மாவட்டத்தில் உள்ள வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. காலையில் முன்னதாக 9.35 மணி அளவில் சண்டிப்பூர் கடல்பரப்பில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் 3 நிமிடத்தில் வீலர் தீவில் இருந்து புறப்பட்ட ஏவுகணை வானில் இடைமறித்து தாக்கி அழித்தது. இதில் இருந்து வெண்புகை சீறிக்கிளம்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மைய வட்டாரம் தெரிவிக்கிறது . இது ஒரு சிறப்பாக அமைக்கப்பட்ட , வெற்றிகரமான திட்டம் என ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுதள மைய இயக்குநர் எஸ்.பி.,தாஸ் கூறினார்.

பாதுகாப்பு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சித்தன்சுகார் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் , இது பாராட்டத்தக்க விஷயம் . செ<லுத்தப்பட்ட ஏவுகணையை வானில் 16. கி.மீட்டர் செங்குத்து உயரத்தில் சென்று தாக்கி அழித்ததாக கூறினார்

மனிதநேயத்துடன் உதவியவர் நான்கரை மணிநேரம் அலைக்கழிப்பு

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ரோட்டில் மயங்கி கிடந்த வயதானவரை மனிதநேயத்துடன் காப்பாற்ற சென்றவர் பலமணிநேரம் அல்லல்பட்டார்.

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்., நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். கப்பற்படையில் பணிபுரிந்தவர். தேசிய மனித உயிர் காக்கும் அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று காலை 8.30 மணிக்கு டூவீலரில் விருதுநகருக்கு சென்று கொண்டிருந்தார்.பெரியபுளியம்பட்டி-பாலவநத்தம் இடையே ரோட்டோரம் 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் மயங்கி கிடந்தார். "மதுபோதையில் மயங்கியவர்' என நினைத்து விருதுநகர் சென்று விட்டு, மதியம் 12.30 மணிக்கு திரும்பும் போதும் அதே இடத்தில் கிடந்தார். உடனே "108' ஆம்புலன்”க்கு தகவல் தெரிவித்தார். ஒரு மணிநேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. அரசு ஆஸ்பத்திரியில் முதியவர் சேர்க்க நீங்களும் உடன் வர வேண்டும் என்று ஆம்புலன்சில் வந்தவர்கள் கூறினர்.

தன்னுடன் வந்த தனது மகன் ஜெயசூரியாவை(12) ஆம்புலன்சில் ஏற்றி, இவரும் பின் தொடர்ந்தார். அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போது, "முதியவரை தன் உறவினர்' என கூற வேண்டும் ஜெயசூரியாவிடம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கட்டாயப்படுத்தி சொல்ல வைத்தனர். பரிசோதித்த டாக்டர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியிருக்கலாம் என்றார். சிறிது நேரத்தில் நினைவு திரும்பிய முதியவர் தான், கீழ்க்குடியை சேர்ந்த பொன்னுராம்(70) என்றார். இதன் பின்னர் ஜெயச்சந்திரன், மகனுடன் மாலை 5 மணிக்கு வீடு திரும்பினார்.

இதுபற்றி இவர் கூறியதாவது: "108' ஆம்புலன்ஸ் சேவை நன்கு பயன்படுகிறது. இருந்தாலும் உதவி செய்ய முன் வந்தவர்களிடம் பல கேள்விகள் கேட்டு தர்மசங்கடத்தில் ஆழ்த்துகின்றனர். மேலும், ஆஸ்பத்திரியில் சேர்க்க கண்டிப்பாக ஒருவர்வேண்டும் என்கின்றனர். முதலில் உயிரை காப்பாற்றி விட்டு மற்றவை பற்றி விசாரிக்க அரசு விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும், என்றார்.

தேர்தலில் பணப்பட்டுவாடா தடுத்க தேர்தல் கமிஷன் தீவிரம்



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...