|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2011

துபாயில் சிற‌ப்புச் சொற்பொழிவு

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் 'ம‌ண‌ம் வீசும் ம‌னம்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி மார்ச் 02ம் தேதியன்று மாலை அஸ்கான் ச‌முதாய‌க் கூட‌த்தில் ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்ப‌ட்ட‌து. அத‌னைத் தொட‌ர்ந்து முஹிப்புல் உல‌மா முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். வ‌த்த‌ல‌க்குண்டு மௌல‌வி ச‌ம்சுல் ஹுதா ஹ‌ஜ்ர‌த், இல‌ங்கை த‌மிழ்ச் ச‌ங்க‌ துணைத்த‌லைவ‌ர் டாக்ட‌ர் ஜின்னாஹ் ஷ‌ரீபுத்தீன் ஆகியோர் சிற்றுரை வ‌ழ‌ங்கின‌ர். முனைவ‌ர் சேமுமு குறித்த‌ அறிமுக‌வுரையினை முதுவை ஹிதாய‌த் நிக‌ழ்த்தினார். அத‌னைத் தொட‌ர்ந்து 'ம‌ண‌ம் வீசும் ம‌ன‌ம்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவினை த‌மிழ்நாடு முஸ்லிம் தொண்டு இய‌க்க‌ பொதுச்செய‌லாள‌ரும், இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழ் ஆசிரிய‌ருமான‌ முனைவ‌ர் பேராசிரிய‌ர் சேமுமு முஹ‌ம‌த‌லி நிக‌ழ்த்தினார். கூட்ட‌த்தில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...