|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 February, 2013

சொன்னதும்! சொல்ல மறந்ததும்!

சொன்னது:
இலங்கையில் போருக்கு பிறகு இந்து கோவில்கள், தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மொழியின் ஆக்கத்தை மறைக்க இப்படி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
இதே போல்தான் தமிழகத்திலும் திருவரங்கம்- ஸ்ரீரங்கம் என்றும், திருவில்லிபுத்தூர்- ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும், திருப்பெரும்புதூர்- ஸ்ரீபெரும்புதூர் என்றும் இங்குள்ள இனப் பகைவர்களால் தமிழ்ப் பகைவர்களால் ஸ்ரீ என்ற வடமொழி புகுத்தப்பட்டது. அதே போல்தான் சிங்கள இனவெறியர்கள் தமிழ்ப் பெயரை அழித்திட தமிழர்களை அழித்திட முனைந்து வருகிறார்கள். அவனுக்கு பாடம் கற்பிக்கத்தான் தமிழகமே திரண்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் வேறு சில பகுதிகளிலும் போராட்டம் நடக்கிறது. அவர்களையும் நான் வாழ்த்துகிறேன். நன்றி கூறுகிறேன். அவர்களும் எங்களை வாழ்த்தும் பெருங்குணம் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிரார்த்திக்கிறேன் என்றால் யாரை? அவர்களைத்தான் பிரார்த்திக்கிறேன்....

சொல்ல மறந்தது:
எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஸ்ரீ என்பது மட்டுமே வடசொல் என்பதுதான்! கருணாவும், நிதியும், அன்பும் செல்வமுமாய் மாறியிருக்க வேண்டும். ஆனால் அவையெல்லாம் 'சுத்த’ தமிழ்ப் பெயர்தான் என்று தமிழர் தலைவனாகிய நான்... நான்... நானேதான் ஏற்றுக் கொண்டதால், அது தமிழ்ப் பெயர்தான் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறேன். தமிழர்களாகிய நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு 'நிதி’ அளித்தீர்களோ... அவ்வளவுக்கு எங்கள் குடும்பத்தில் இருந்து தமிழகத்துக்கு நாங்கள் எத்தனை 'நிதி’களைத் தந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள்!
தயாவும் நிதியும், கலாவும் நிதியும், உதயமும் நிதியும், இவ்வளவு ஏன்... உதயமும் சூரியனும் கூட சுத்த சுத்த தமிழ்ப் பெயர்களே என்பதை எண்ணி எண்ணி நான் பூரிப்படைகிறேன். எத்தகைய இன அழிப்பு, மொழி அழிப்பு வேலைகளை மற்றவர்கள் செய்யாமல் நான் காப்பாற்றியிருக்கிறேன் என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்! பிரார்த்தனை என்கிற 'சுத்த’ தமிழ்ச் சொல்லைக் கூறி, வேண்டுகோள் என்ற 'அசுத்த’ வடமொழிச் சொல்லை நான் தவிர்த்திருக்கிறேன் என்பதை எண்ணிப் பாருங்கள்!
எப்படி எல்லாம் இன அழிப்பு, மொழி அழிப்பு வேலைகளைப் பிறர் செய்திடா வண்ணம் நான் விழித்திருந்து...  விழி திறந்து... மொழிப் பணி ஆற்றியிருக்கிறேன் என்பதை எண்ணி எண்ணிப் பார்த்து பெருமிதம் கொள்ளுங்கள்!

பார்த்ததில் பிடித்தது!



விஸ்வரூபம் ஒரு குப்பையாம் மனுஷ்ய புத்திரன்

# பாஸ் நீங்க விஸ்வரூபம் பாக்குறதுக்கு பதிலா கடல் படத்துக்கு போயிட்டீங்கலாமே அப்படியா
Manushya Puthiran Sir???
அரசு கேபிள் டிவியில் எந்தெந்த சேனல்கள் தெரியும் என்பதை ஜெயலலிதா தான் முடிவு செய்வார்- அமைச்சர் சுப்பிரமணியன்

# எல்லா வீட்டு ரிமோட்டையும் அவுங்களே வைச்சுகிட்டாங்களா?

ஒரு சகோதரி, ஒரு மகள், ஒரு அண்ணி, ஒரு மருமகள் என்ற உறவுடன் பிரச்சனையை அணுகி தீர்வு காண்போம்.

சபாஸ் ராமகோபாலன் இப்பதான் ஒரு நல்ல முடிவு!
காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டியதா? அனுசரிக்கப்பட வேண்டியதா? என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் 'மகத்தான' கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காதலர் தினம் என்பது உலகமயமாக்குதலின் ஒரு அம்சம். நமது மரபில் சந்தோஷ தினங்களை கொண்டாடுவதும், துக்க தினங்களை அனுசரிப்பதும் வழக்கம். அப்படிப்பார்த்தால் காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டியதா? அல்லது அனுசரிக்கப்படவேண்டியதா?. குடும்பம் அன்பு என்று அன்றாட வாழ்க்கையோடு காதலை கலந்து விட்ட இந்த நாட்டில், வருடத்திற்கு ஒரு காதல் என மாறும் நாடுகளின் வழக்கம் ஏன்?. தினந்தோறும் காதலைக் காதலிக்கும், நமக்கு தனியாகக் காதலர் தினம் என்று ஒன்று எதற்கு?. நாட்டின் பல மாநிலங்களிலும் காதலர்கள் தினத்தன்று நடத்தும் வன்முறைத் தாக்குதல் நடத்துவதை நாம் கண்டிக்கிறோம். 

ஆனால், காதல் என்ற பெயரால் காமத்தை வளர்க்கின்ற இந்த வக்ரபுத்திக்கு என்ன தீர்வு?. தேடித்துருவி ஆராய வேண்டும். டெல்லியில் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தமிழ்நாட்டில் வினோதினி என்ற பெண்ணை ஆசிட் வீசி தாக்கி கொலை பண்ணிய சம்பவம், 3 வயது சிறுமியை கசக்கி எறிந்த கொடுமை போன்ற கேவலங்களுக்கு கடுமையிலும் கடுமையான தண்டனைகளை, கொடுத்து, கடைசி மூச்சு உள்ளவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது. மனசாட்சி உள்ள நல்லவர்கள் வல்லவர்களாகி தடுக்க வேண்டும். வழி தேடுவோம், தீர்வு காண்போம். 20 ஆண்டுகள் போற்றிப் பாதுகாத்து வரப்பட்ட நம் சகோதரி ஒரு நொடியில் அழிவதா?. இது மகத்தான கேள்வி, ஒரு சகோதரி, ஒரு மகள், ஒரு அண்ணி, ஒரு மருமகள் என்ற உறவுடன் பிரச்சனையை அணுகி தீர்வு காண்போம் என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.

பெண்கள் எல்லோரும் அழகுதான்.


பெண்கள் எல்லோரும் அழகுதான். 150 வருடம் முன்னாடி பிறந்ததினால் வேண்டுமானால் மிக கோரமான பெண் என்று சொல்ல பட்டிருக்கலாம். இனி உலகில் யாரும் இப்படி கூறமுடியாது. 

 150 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த உலகின் அகோரமான பெண்ணின் உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான வடக்கு மெக்சிகோவில் அடக்கம் செய்யப்பட்டது. 1834ம் ஆண்டு மெக்சிகோவில் பிறந்தவர் ஜூலியா பாஸ்ட்ரானா. ஹைபர்ட்ரைகோசிஸ் மற்றும் ஜின்ஜிவல் ஹைபர்பிளாசியா ஆகிய குறைபாடுகளால் அவதிப்பட்ட அவருக்கு முகம் முழுக்க அடர்த்தியான முடி, தடித்த நாடி இருந்தது. இதனால் அவரை மக்கள் குரங்கு பெண் என்றும், கரடி பெண் என்றும் அழைத்தனர். இந்நிலையில் தியோடர் லென்ட் என்பவர் ஜூலியாவை தான் நடத்தும் சர்க்கஸில் சேர்த்து ஆடிப், பாட வைத்தார். அவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்று சர்க்கஸ் நடத்தினார். பின்னர் அவரே ஜூலியாவை மணந்தார். 1860ம் ஆண்டு ஜூலியா மாஸ்கோவில் ஒரு ஆண் குழந்தையை பெற்றுவிட்டு இறந்தார். அவரது மகனுக்கும் அவரைப் போன்ற குறைபாடு இறந்தது. அந்த குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்தது. அதன் பிறகு தியோடர் தனது மனைவி மற்றும் மகனின் உடல்களை பதப்படுத்தி அவற்றை தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்றார். இப்படி அவர்களின் உடல்கள் பல கைகள் மாறி இறுதியாக நார்வேயில் உள்ள ஆஸ்லோ பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில் ஜூலியாவின் உடல் அவரது சொந்த ஊரான சினாலோ டீ லீவாவில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2012 DA14

நாளை 2012 DA14 என்ற விண்கல் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லப் போகிறது. பூமிக்கும் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களுக்கும் இடையே இந்த விண்கல் கடந்து செல்லப் போகிறது. பூமியிலிருந்து சுமார் 35,000 கி.மீ. உயரத்தில் தான் நமது தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களும் வானிலை ஆய்வு செயற்கைக் கோள்களும் சுற்றிக் கொண்டுள்ளன. இந்த 35,000 கி.மீ. உயர வட்டப் பாதைக்கு geosynchronous orbit என்று பெயர்.. இந்த விண்கல்லை நாஸாவின் Near-Earth Object Program பிரிவு நொடிக்கு நொடி கண்காணித்துக் கொண்டுள்ளது. அதன் பாதையையும் அதன் வேகத்தையும் கண்காணித்து வரும் இந்தப் பிரிவு, இந்த விண்கல் பூமியில் மோத வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. நாளை இந்திய நேரப்படி பகல் 11.55 மணிக்கு இந்த விண்கல் பூமியை மிக நெருக்கமாக வந்து செல்லும். அதாவது பூமியிலிருந்து 27,358 கி.மீ தூரம் அளவுக்கு நெருங்கி வரும்.

அந்த நேரத்தில் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் இந்தேனேஷியா மீது இந்த விண்கல் கடந்து செல்லும். குறிப்பாக இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு மேலே பூமியை இது கடக்கும். இந்த விண்கல்லின் பாதையை நாஸாவின் http://eyes.nasa.gov/index.html என்ற லிங்க்-ல் உள்ள சில இணைப்புகளை பயன்படுத்தி நேரடியாகவே காணலாம். இந்த ஸ்லைடில் உள்ளது போல உங்களுக்கு நேரடியாகவே இந்த விண்கல்லின் தூரம், அது நெருங்கி வரும் வேகம் குறித்த தகவல் கிடைக்கும். நான் இந்தப் பக்கத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்தபோது விண்கல் 478641.4 மைல் தூரத்தில் இருந்தது. அது பூமியை நெருங்க 33 மணி நேரம் 50 நிமிடங்கள் 29 நொடிகள் மிச்சமிருந்தன. 2012 DA14 என்ற இந்த விண்கல் 45.7 மீட்டர் விட்டம் கொண்டது. 


இந்த விண்கல் சூரியனை வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒன்று. இது அடுத்தபடியாக 2046ம் ஆண்டு இதே பிப்ரவரி மாதம் 15ம் தேதி பூமிக்கு அருகே வரும். அப்போது இது 27,358 கி.மீ அளவுக்கு மிக நெருக்கமாக வராது. இதன் பாதை விலகி சுமார் 10 லட்சம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும்.

மீண்டும் தமிழனை கடத்திய சோமாலிய கடல் கொள்ளையர்.

 
சென்னையை சேர்ந்த கப்பல் கேப்டன் வில்லியம்ஸ் உள்பட 18 பேரை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷார்ஜா கப்பல் நிறுவனம் ஒன்றில் கேப்டனாக பணியாற்றி வரும் வில்லியம்ஸ் சில தினங்களுக்கு முன்னர்தான் நைஜீரியா சென்றுள்ளார். பிப்ரவரி 12ம் தேதி வில்லியம்ஸ் உள்ளிட்ட 18 பேரும் நைஜீரிய நாட்டு துறைமுகத்திலிருந்து, 120 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்ட கப்பலுக்கு , சிறிய கப்பல் மூலம் சென்றனர். இரு தினங்கள் ஆகியும் கப்பலில் சென்று சேராததால், அவர்களது கதி என்னவானது என தெரியாத நிலையில், காணாமல்போன 18 பேர்களையும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் நைஜீரிய கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நடுக்கடலில் கொள்ளையர்கள் இவர்களை கடத்திச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட கப்பல் கேப்டன் வில்லியம்ஸின் மனைவி கிளாடிஸ், சென்னை நங்கநல்லூரில் வசிக்கிறார். தமது கணவர் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்த தகவலைத் தொடர்ந்து அவரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமது கணவரை மீட்டுத்தருமாறு மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கும்பமேளாவில் பணத்தை இறைத்துவிட்ட நித்தி...

நாரதர் எங்கிருந்தாலும் கலகம் இருக்கும் என்பது புராணம்.. ஆனால் நிகழ்காலத்தில் நித்தியானந்தா எங்கு போனாலும் கலகமும் களேபரமும்தான் என்பது நிதர்சனம்.. கும்பமேளாவுக்குப் போன நித்தியானந்தா அங்கேயும் சாதுக்களிடையே சண்டையை மூட்டிவிட்டு விட்டு வந்திருக்கிறார். கும்பமேளா என்பது ஆன்மீகத் திருவிழாவாக இருந்தாலும் இந்து மதத்தைக் காக்க தற்கொலைப்படையாக செயல்படும் அகாடாக்களில் இடம்பெற்றுள்ள சாதுக்களின் சங்கமமாகவே இருந்து வருகிறது. இம்முறை கும்பமேளாவில் சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவும் கலந்து கொண்டார். அவர் சாரட் வண்டியில் போய் புனித நீராடியதன் பின்னணி இப்பொழுது அம்பலத்துக்கு வந்துள்ளது. அகாடாக்களில் முக்கியமானது நிர்வாண சாதுக்களின் அமைப்பான மஹாநிர்வாணி என்பது. இந்த அகாடா சார்பில் நித்தியானந்தாவுக்கு 'மஹா மண்டலேஸ்வர்' என்ற கவுரவ பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டத்துடன்தான் சாரட் வண்டியில் வெள்ளி சிம்மாசனத்துடன் போய் புனித நீராடியிருக்கிறார் நித்தியானந்தா. 

ஆனால் மஹா மண்டலேஸ்வர் என்ற பட்டம் கொடுத்ததற்கு பிற அகாடாக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏனெனில் இந்த 'மஹா மண்டலேஸ்வர்' என்ற பட்டம் பொதுவாக 13 அகாடாக்களுக்குமான தலைவர் பதவிக்குரியது. அப்படிப் பட்ட பட்டத்தை ஒரு சர்ச்சைக்குரிய சாமியாருக்கு கொடுப்பதா என்பதுதான் பிற அகாடாக்களின் கேள்வி. ஆனால் நிர்வாண சாதுக்கள் அமைப்போ, தென்னிந்திய சாதுக்களுக்கும் வட இந்திய சாதுக்களுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தவே 'மஹா மண்டலேஸ்வர்' பட்டம் கொடுக்கப்பட்டதாகவும் இப்பட்டம் கொடுக்கப்பட்டதாலேயே அகாடாக்களின் தலைவராகிவிடமாட்டார் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறது. இந்தப் பட்டத்தை என்னைக்கு திரும்பி வாங்குவாங்களோ?

எதை தொட்டாலும் ஊழல்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விமானப் பயணக் கட்டணத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி கவார், மாநிலங்களவை செயலகத்தின் மீது தான் இந்த அதிர்ச்சிகரமான புகார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி கவார், டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த ஒரு வழி பயணத்திற்காக தனியார் விமான நிறுவனத்துக்கு ரூ.99,292 செலுத்தப்பட்டு இருப்பதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. உள்நாட்டில் பயணம் செய்ததற்கு மாநிலங்களவை செயலகம், வெளிநாட்டு கட்டணம் செலுத்தியுள்ளதை அறிந்த கவாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் தமக்காக செலுத்தப்பட்ட விமான கட்டணங்களை ஆய்வு செய்த போது, மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சென்னை-ஐதராபாத் ஒரு வழி பயணத்துக்கு ரூ.35,000, ஐதராபாத்-பெங்களூரு பயணத்துக்கு ரூ.67,000 செலுத்தப்பட்டதாக கணக்கு எழுதப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கவார் புகார் தெரிவித்துள்ளார். டிராவல் ஏஜென்சியின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணத்திற்காக மிகப் பெரிய கட்டணத்தை அரசு கட்டுவதால், மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதில் நடந்துள்ள ஊழலில் அமைச்சர்களுக்கும் பங்கிருக்கலாம் என்று சர்ச்சை 



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...