|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 October, 2012

சாப்பிடுவதற்கு முன் கைகழுவும் பழக்கம் 38 சதவீதத்தினரிடமே!


இந்தியாவில், 53 சதவீதம் மக்கள் மட்டுமே, கழிவறையை பயன்படுத்திய பின், கைகளை கழுவுகின்றனர். சாப்பிடும் முன், கை கழுவும் பழக்கத்தை வெறும், 38 சதவீதத்தினர் வழக்கமாக கொணடுள்ளனர்,'' என, யுனிசெப் சுகாதார சிறப்பியலாளர், அருண் தபோல் தெரிவித்தார்."உலக கை கழுவும் தின'த்தை முன்னிட்டு, யுனிசெப் மற்றும் இந்திய செய்தி நிறுவனத்துடன், பள்ளி குழந்தைகள் இணைந்து, கை கழுவ வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். சோப்பு போட்டு, கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள்; கை கழுவும் பழக்கத்திற்கு மக்களை எப்படி மாற்றுவது, கை கழுவுவதற்கு சரியான வழிமுறை எது; கை கழுவும் பழக்கத்தால், உயிர் பலி வாங்கும் நோய்களிலிருந்து எப்படி காப்பற்றலாம் என்பது குறித்து விளக்கப்பட்டன. இதன் முக்கியத்துவத்தை, பாடல்கள் மூலமாகவும், நாடகங்கள் நடத்தியும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

இதுகுறித்து, யுனிசெப் சுகாதார சிறப்பியலாளர், அருண் கூறியதாவது: இந்தியாவில், 53 சதவீதம் மக்கள் மட்டுமே, கழிவறையை பயன்படுத்திய பின், கைகளை கழுவுகின்றனர். சாப்பிடும் முன், வெறும் 38 சதவீதத்தினர் மட்டுமே கை கழுவுகின்றனர். சமைக்கும் முன் கை கழுவும் பழக்கம், 30 சதவீதம் பேரிடம் உள்ளது என, பொது சுகாதார குழுமம் தெரிவித்துள்ளது. வளரும் நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும், பல லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதற்கு வயிற்று போக்கும், சுவாச கோளாறும் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கையை, வரும், 2015ம் ஆண்டுக்குள் மூன்றில் இரண்டு பங்காக குறைப்பதற்கு, சோப்பு போட்டு கை கழுவும் பழக்கம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். இவ்வாறு அருண் கூறினார்.

World Food Day...


உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. "விவசாயத்துக்கு ஒத்துழைப்பு: "உலக உணவு உற்பத்திக்கு வழி' என்பது, இந்தாண்டு மையக் கருத்து. ஒவ்வொருவருக்கும், போதுமான அளவு உணவு கிடைக்க வேண்டும். வசதி வாய்ப்பற்றோர், உடல் ஊனமுற்றோர், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. இதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. 


உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 கோடிப்பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும், பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இதை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரிக்கின்றன.அனைவருக்கும் தேவையான உணவு இருந்தாலும், அதை பெறும் அளவு பணம் இல்லாததே மரணங்களுக்கு காரணம். 

வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசியால், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது, கடினமான விஷயமாகிறது. உலக வங்கி அறிக்கையின் படி, 2010 - 2011ம் ஆண்டில், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால், உ<லகம் முழுவதும் 7 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

உலகளவில் அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது, 1986 முதல் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, நார்மன் போர்லாக் என்ற அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இவ்விருது பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவின் சார்பில் இதுவரை எம்.எஸ்.சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட ஆறு பேர் இவ்விருதை பெற்றுள்ளனர்

உலகைக் உலுக்கிய புகைப்படங்கள்!

உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !
சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே..  அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின்  தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர்  உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.

போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !
ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்' என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில், அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வர, அப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.   

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு.

1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை' ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே' என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கற்பிழந்த இந்திய ஆர்மி !

மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது.

பிரபாகரன் இல்லை !
"பிரபாகரன் இல்லை..  இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு  காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம்  வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !

செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்' மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன.  அன்று ஆடிப்போன அமெரிக்கா, பின்லேடனை கொன்றதோடு, இன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்தது, ஊனமாக பிறக்க வைத்தது, தோலை கருக்கியது, கதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.

happy dasara



உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில்...?

உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் புனித ஜார்ஜ் கோட்டை, பழவேற்காடு ஏரி, செட்டிநாடு பங்களாக்கள், கழுகுமலைப் பாறைச் சிற்பங்கள், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்டவை தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் குமாரி ஷெல்ஜா...நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயத்தினர் தமிழ்ச் சமுதாயத்திற்கு அளித்த அருமையான பொக்கிஷம்தான் செட்டிநாடு வீடுகள். முற்றிலும் பர்மா தேக்கால் பார்த்துப் பார்த்து இழைத்து கட்டப்பட்ட அருமையான கலைப் பொக்கிஷங்கள்.

இந்தியாவின் முதல் ஆங்கிலேய கோட்டை என்ற பெருமை கொண்டது புனித ஜார்ஜ் கோட்டை. 1644ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டைதான் இன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தையும், சட்டசபையையும் தன்னகத்தே கொண்டு.
இந்தியாவின் 2வது மிகப் பெரிய முகத்துவாரம்தான் இந்த பழவேற்காடு ஏரி. புலிகாட் ஏரி என்று இதற்கு ஆங்கிலத்தில் பெயர். இங்கு அழகான பறவைகள் சரணாலயமும் உள்ளது. 
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஜைன மதம் செழித்தோங்கி வளர்ந்திருந்தது. அப்போது ஏராளமான ஜைன மதக் கோவில்களும், பாறைகளைக் குடைந்து சிற்பங்களும் உருவாக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை அழிந்துவிட்டாலும் சில இன்னும் காலத்தைக் கடந்து நிற்கின்றன. அதில் ஒன்று கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் உள்ள வேட்டுவன்கோவில். 8ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த கோவிலும் அதைச் சார்ந்த சிற்பங்களும் அந்த கால குடைவரை சிற்பங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
முற்றிலும் திராவிடக் கட்டடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்ட வைணவ திருத்தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். பள்ளி கொணட் நிலையில் எம்பெருமாள் இங்கு காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. திவ்வியப் பிரபந்ததில் இந்தக் கோவிலைப் பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாகவும், பாரம்பரிய ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் மிக மிகப் பழமையானது,

பார்ததில் பிடித்தது...

அரியபடம்: கார்டூனிஸ்ட் மதனுடன் பிரபாகரன் அவர்கள்.


உங்களுக்குத் தெரியுமா?
தங்கள் வீட்டுப் பிள்ளையை இரண்டு மாதங்களாகக் காணவில்லை என்றால் துளிக் கூடப் பதறாமல், போலீசில் புகார் செய்யாமல் இருக்கும் அப்பாவையும் தாத்தாவையும் உங்களுக்குத் தெரியுமா?

அப்பா பெயர்: மு.க .அழகிரி

தாத்தா பெயர்: கலைஞர் கருணாநிதி

பிள்ளையோ பிள்ளை: துரை தயாநிதி



அடுத்த ஸ்கீம் ரெடி. யாரு இப்ப ஏமாறுவதற்கு ரெடியோ போன் பண்னவும்.

இது யாருன்னு தெரியுதா-? தெரிஞ்சாக்க சொல்லுங்களேன் சின்ன வயசு லே எடுத்த போட்டோவா யிருக்கும் போல இருககு.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...