|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 August, 2011

15,000 முன்பணம் கட்டினால் நானோ கார்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு நானோ காருக்கு டாடா மோட்டார்ஸ் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி கார் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நானோ காருக்கு டாடா மோட்டார்ஸ் பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

நானோ கார் வாங்குவதற்கு குறைந்த முன்பணமாக ரூ.35,000 செலுத்த வேண்டும். ஆனால், தற்போது வெறும் ரூ.15,.000 கட்டினால் போதும். நானோ உங்கள் வீடு தேடி வரும். அதுமட்டுமா, நானோ காருக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி சலுகையையும் போனசாக கொடுக்கப்படும் என்று கூறி வாடிக்கையாளர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது டாடா.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் செய்திதொடர்பாளர் தேபஷிஸ் ரே கூறியதாவது: "பண்டிகை காலத்தை முன்னிட்டு நானோ காருக்கு சிறப்பு சலுகைகள் வழங்க உள்ளோம். குறைந்த முன்பணம், அதிக தவணை காலம் உள்ளிட்ட சலுகையுடன் கடன் வழங்கப்படும். இதன்மூலம், 60 மாதங்கள் வரை தவணை காலத்துடன் கடன் பெற முடியும். இதனால், குறைந்த மாதத்தவணையில் நானோ காரை வாங்கலாம்.

கார் விலையில் ரூ.20,000 வரை சலுகைகளை வழங்க இருக்கிறோம். இதனால், பண்டிகை காலத்தில் நானோ கார் விற்பனை நிச்சயம் ஏற்றம் பெறும்,' என்று கூறினார்.

அடுத்தாண்டு முதல் ரயில்களில் மேட்ச், சீரியல் பார்க்கலாம்!

நீண்டதூர ரயில்களில் டிவி சேனல்களை ஒளிபரப்ப இந்திய ரயில்வே முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த வசதி அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.சொகுசு பஸ்கள், கார்கள் மற்றும் வாகனங்களில் டிவிக்கள் பொருத்தப்பட்டு உடனுக்கு உடன் செய்திகள், சினிமா, விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. இந்த வசதியை ரயில்களிலும் கொண்டுவர இந்திய ரயில்வே திட்டமிட்டு அதற்கான பணி்களில் இறங்கியுள்ளது.

முதல் கட்டமாக டெல்லியில் இருந்து புறப்படும் நீண்டதூர ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ்சில் டிவி பொருத்தப்பட உள்ளது. இதற்கான இணைப்பை வழங்க இந்தியாவின் முன்னணி டி.டி.எச். நிறுவனங்களான டிஸ் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி உள்ளிட்டவை முன் வந்துள்ளன.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, ரயில்களில் டிவி சேனல்களை ஒளிபரப்பு முதலில் டெல்லியில் இருந்து புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸில் அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு ராஜ்தானி மற்றும் துரந்தோ ரயில்களிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

இதன் மூலம் ரயில் பயணத்தின் போது செய்திகள், பொழுதுபோக்கு, விளையாட்டு சம்பந்தப்பட்ட 70 சேனல்களை பயணிகள் கண்டு களிக்கலாம். உடன் பயணிப்போருக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் நிகழ்ச்சியின் ஒலியை பார்ப்பவர்கள் மட்டுமே கேட்கும் வகையில் இயர்போன்கள் வழங்கப்படும்.

இந்த வசதியை பெற சிறப்புக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. நிகழ்ச்சிகளுக்கு இடையே விளம்பரங்களை ஒளிபரப்பி, ஒப்பந்த நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்ளும்.

ஒப்பந்தத்தில் இணையும் டிடிஎச் நிறுவனங்களிடம் இருந்து உரிமக் கட்டணத்தை ரயில்வே பெற்றுக் கொள்ளும். ரயிலில் டிவி ஒளிபரப்புக்கு இடையே விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அந்நிறுவனங்கள் பெறலாம். ரயில்களில் முதல் மற்றும் ஏசி வகுப்புகளில் இந்த வசதிகளை பயணிகள் பெறலாம் என்றனர்.

உறவு அனைவருக்கும் அவசியம்!

மலரினும் மெல்லிது காமம்’ என்று உலக பொதுமறையான திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் ஆண் பெண் உறவை விளக்கும் காஜுராகோ சிற்பங்களும், காமசூத்ரம் போன்ற நூல்களும் எழுதப்பட்டுள்ளன. நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் காம அணுக்கள்தான். ஆண்-பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான். மனிதஉணர்வுகளிலே முதன்மையானதும் பாலுணர்வுதான். இது உலகிலுள்ள அனைவருக்கும் பொருந்தும். எனவே பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. சுவசம் போல, இதயத்துடிப்பு போல மனித உடலில் அது இயற்கையானது. பாலுணர்வை நாம் முறையாக பயன்படுத்துகின்றபோது அது ஆரோக்கியமானதாகிறது. முறையற்ற உறவில் ஈடுபடும் போதுதான் ஆரோக்கிய மற்றதாகி விடுகிறது.

மனிதர்கள் வாழும் நில அமைப்பு,அங்கு நிலவுகின்ற தட்பவெட்ப நிலைகள் இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெளிப்படுத்தி வருகிறோம். மனித இனத்தில் ஆண்-பெண் எனஇரு பிரிவினருக்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது, பாலுணர்வுகள் இயற்கையாகவே உற்றெடுக்கும் இதுதான் அறிவியல் பூர்வமான உண்மை என பலஉளவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.

மரபணுவில் பதியப்படும் உண்மை; குழந்தையானது கருவிலேயே ஆண், பெண் என தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் மரபணுக்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்துமே பதிவு செய்யப்பட்டு விடும்.

அதன்படியே அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது. அதன்படிதான் ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தியும் தொடங்கிவிடுகிறது. அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது விளைவுகள் ஏற்படுகின்றன.

ஆண் பெண் உறவு அவசியம்; ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும். தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும். இது டார்வின் கண்டறிந்த உண்மை. அந்த வகையில், ஆண், பெண்களின் பாலியல் உறுப்புகளுக்கும் இது பொருந்தும். எனவே,அவைகளுக்கும் மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரீதியான, மன ரீதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

உடல்நலக் கோளாறுகள்: அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, ஒரு சில தம்பதியர் நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜீரணக்கேளாறுகள், இதயநோய், தலைநோய், தலைபாரம் போன்ற நோய்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது அவசியம் என்கிறது காமசூத்திரம்.

இந்தியாவை உலுக்கி எடுத்த உண்ணாவிரதங்கள்!

உண்ணாவிரதம். தன்னைத் தானே வறுத்திக் கொண்டு ஒரு உயரிய நோக்கத்தை அடைய மகாத்மா காந்தி பயன்படுத்திய ஆயுதம் இந்த உண்ணாவிரதம். வெள்ளையர்களின் இரும்பு மனதைக் கரையவைக்க பலமுறை காந்தியடிகள் இந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார், வெற்றியும் கண்டுள்ளார். இன்று அன்னாவின் உண்ணாவிரதத்தால் நாடே பதறிப் போயுள்ளது.

இதற்கு முன்பும் இந்தியாவில் பல உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்...
அரிஜனங்களுக்காக காந்தி உண்ணாவிரதம்:
வெள்ளையர் ஆட்சியின்போது அரிஜனங்கள் என்று அப்போது அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு தனி வாக்குரிமை தர இங்கிலாந்து அரசு திட்டமிட்டது. இதை கடுமையாக எதிர்த்தார் காந்தியடிகள். அனைவருக்கும் சமமாக வாக்குரிமை தரப்பட வேண்டும். அரிஜன மக்களைப் பிரிக்கக் கூடாது, பாரபட்சம் காட்டக் கூடாது என்று கோரி உண்ணாவிரதத்தில் குதித்தார்.

காந்தியடிகளின் உண்ணாவிரதத்தைப் பார்த்து நாடு முழுவதும் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் இறங்கினர். இதையடுத்து அரிஜன மக்களை தனியாகப் பிரிக்கும் திட்டத்தை வெள்ளையர் அரசு கைவிட்டது.

மேலும் காந்தியடிகளின் இந்த உண்ணாவிரதம் அரிஜன மக்களுக்கு பல விமோச்சனங்களை அளிக்க வழி வகுத்தது. அதுவரை கோவில்களுக்குள் நுழைய அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. இந்தியாவில் ஜாதீய முறைக்கு எதிரான முதல் சம்மட்டி அடியாக இது இன்றும் கருதப்படுகிறது.

செளரி செளரா இயக்கம்: அகிம்சையை உலகுக்குப் போதித்தவர் காந்தி. ஆனால் அவரையே கலங்கடித்து விட்டது செளரி செளராவில் நடந்த சம்பவம். போலீஸ் நிலையத்தை போலீஸாருடன் வைத்து தீவைத்துக் கொளுத்தினர் சுதந்திரத்திற்காக போராடிய மக்கள். இது காந்தியடிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அகிம்சை முறையி்ல போராட வேண்டிய நமது மக்கள் வன்முறையைக் கையில் எடுத்து விட்டார்களே என்று மனம் நொந்து, தன்னைத் தானே தண்டித்துக் கொள்வதற்காக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதி்த்தார். பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து வற்புறுத்தியதன் விளைவாக 5வது நாளில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் காந்தி.

பொட்டி ஸ்ரீராமுலு:
அமர்ஜீவி என்று புகழப்படுபவர் பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்தின் கீழ் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த இந்த புரட்சிகரத் தலைவர் மகாத்மா காந்தியடிகளின் தீவிர தொண்டர்.

தெலுங்கு பேசும் மக்கள் உள்ள பகுதிகளை தனியாகப் பிரித்து ஆந்திரப் பிரதேசம் மாநிலம் உருவாக்க வேண்டும், சென்னையை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இந்த உண்ணாவிரதம் அவரது மரணத்தில் முடிந்ததால் தெலுங்கு மொழி பேசுவோர் மத்தியில் பெரும் சோகம் ஏற்பட்டது. இன்று வரை பொட்டி ஸ்ரீராமுலுவின் மொழிப் பற்று ஆந்திர மக்களிடையே பெரும் தியாகச் செயலாக போற்றப்படுகிறது.

சந்திரசேகர ராவ்:
ஆந்திர மாநிலம் அமைய தனது உயிரை பொட்டி ஸ்ரீராமுலு கொடுத்தார் என்றால் அந்த மாநிலத்தை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியவர் சந்திரசேகர ராவ்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரான ராவ், 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். கிட்டத்தட்ட 11 நாட்கள் உண்ணாவரிதம் இருந்த இவரது போராட்டத்தால் தெலுங்கானா ரத்த பூமியாகியது. அதன் பின்னர் வலுக்கட்டாயமாக இவரை மருத்துவமனைக்குச் சென்று குளுக்கோஸ் ஏற்றி உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது அரசு.

நானோவை எதிர்த்து மமதா உண்ணாவிரதம்:
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி ஆட்சியைப் பிடித்தவரான மமதா பானர்ஜி,எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது நானோ தொழிற்சாலை அமைக்க சிங்கூரில் டாடா நிறுவனத்திற்கு விவசாய நிலங்களைக் கொடுத்ததைக் கண்டித்து மிகப் பெரிய போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

அந்தப் போராட்டத்தின் உச்சம் காலவரையற்ற உண்ணாவிரதம். கிட்டத்தட்ட 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் மமதா. இந்தப் போராட்டமும் நாட்டை பரபரப்பில் ஆழ்த்தியது. மமதாவின் போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறியது டாடா. இந்த வெற்றிதான், பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தலில் மமதாவை ஆட்சிக் கட்டிலில் உட்கார வைக்க உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேதா பட்கர்:
நர்மதா பச்சாவோ அந்தோலன் அமைப்பின் முன்னோடியான மேதா பத்கர், தனது வாழ்க்கை முழுவதும் போராட்டங்களுக்காகவே அர்ப்பணித்தவர். பல்வேறு பிரச்சினைகளுக்காக கடுமையாக போராடியுள்ள பத்கர், நர்மதா பச்சாவோ அந்தோலன் அமைப்பின் முக்கிய முகம் ஆவார். சர்தார் சரோவர் அணைக்கு எதிராக போராடி வந்த பழங்குடியினருக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து போராடியவர் பத்கர். அணைக்கு எதிராக அவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். இந்தப் போராட்டம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இராம் ஷ்ர்மிளா:
மணிப்பூரைச் சேர்ந்த இராம் ஷர்மிலா கடந்த 11 ஆண்டுகளாக இந்தியப் பாதுகாப்புப் படையினரை எதிர்த்து தனி நபராக போராடி வருகிறார். மலோம் என்ற பகுதியில் பத்து அப்பாவிகளை பாதுகாப்புப் படையினர் கொடூரமாகக் கொன்றதற்கு நியாய்ம் கேட்டு இந்தப் போராட்டம்.

வட கிழக்கு மாநிலங்களிலிருந்து பாதுகாப்புப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 11 வருடங்களாக இவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உடல் பலவீனமாகி விட்ட நிலையில், டியூபுகள் மூலம் திரவ உணவுகளை கொடுத்து உயிரைப் பிடித்து வைத்து வருகின்றனர். இந்த இரும்புப் பெண்ணின் இந்தப் போராட்டம் பெரியஅளவில் யாராலும் கண்டு கொள்ளப்படாமல் போனது மிகப் பெரிய துரதிஷ்டம்.

இன்று அன்னா...
இன்று அன்னா ஹஸாரே, ஊழலுக்கு எதிராக தலைநகரில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9 நாட்களாகி விட்ட அவரது உண்ணாவிரதத்தின் மூலம் மக்களை ஊழலுக்கு எதிராக ஒன்று திரட்டிய பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. அன்று வெள்ளையனை விரட்ட மகாத்மா காந்தி கிடைத்தார். இன்று ஊழல் கொள்ளையர்களை விரட்ட வந்திருக்கும் அன்னாவை, மக்கள் மிகவும் பெருமையுடன் பார்க்கின்றனர்.

காமம் பெருக்கும் கானாம் வாழை!

மழைக்காலம் வந்து விட்டாலே சாலை ஓரங்களிலும், காலியாக கிடக்கும் நிலங்களிலும் செழித்து வளரும் செடி கானாம் வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமைத்து சாப்பிட்டால் பலன்களை பெறலாம்.

தாது விருத்தியாகும்: நன்றாக சுத்தம் செய்த கானாம் வாழைக் கீரையையும், அரைக்கைப்பிடியளவு முருங்கைப் பூவையும், துவரம்பருப்பையும் சேர்த்து கூட்டு வைத்து, நெய் கூட்டி சாதத்துடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். உடலில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும். கானாம்வாழைக் கீரை மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்.

கானாம்வாழைக் கீரையை கொட்டைப் பாக்கு சேர்தது அரைத்துச் சாப்பிட்டால் போகம் நீடிக்கும். காம உணர்வும், ஆண்மையும் அதிகரிக்கும். கானாம் வாழைக் கீரைச் சாறில் கசகசாவை ஊற வைத்து அரைத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.

காய்ச்சால் குணமாக; எந்த வகையான சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும், கானாம்வாழை இலையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு வதக்கி, ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக்காய்ச்சி, அந்த கசாயத்தை காலை, மாலை, இரண்டு வேளைக்கு ஒரு அவுன்சு கொடுத்து வந்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும். கானாம்வாழைக் கீரையுடன் சிறிது மிளகு கூட்டி அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜூரம் உடனே குணமாகும்.

கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அடிக்கடி சாப்பிட்டால் வெட்டைச் சூடு குறையும். கானாம்வாழைக் கீரையுடன் வேப்பந்துளிர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும்.

இரத்த பேதி குணமாகும்; கைப்பிடி அளவு கானாம் வாழை இலையையும், அருகம் புல்லையும்,மை போல அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து, ஆழாக்கு பசும்பாலில் கலந்து காலை, மாலையாக கொடுத்து வந்தால் ரத்த பேதி குணமாகும்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஆசனங்கள்!

யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் தவறு. உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு யோகா மிகவும் அத்தியாவசியமானது. யோகாவின் உதவியால் உடலை கட்டுக்குலையாமல் பாதுகாக்க முடியும் என்கிறார் இந்திய பிரபலங்களின் யோகா பயிற்சியாளர் பாயல் கித்வானி திவாரி. அவர், தனது யோகா அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

இளமை நீடிக்கும்: நாம் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற்சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.

யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும். யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்!

யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம் சீராகும். மற்ற பயிற்சிகளைவிட யோகாவில் மட்டுமே, ரத்த ஓட்டம் முகம் மற்றும் சருமத்தின் மீதும் பாய்ந்து உடல் அழகை பாதுகாக்கிறது. இதனால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் குணமடையும்.

சோர்வு நீங்கும்: யோகா உடம்பை சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும். குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும்!

நீங்கள் எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உங்களுடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி. மேலும் செயற்கையை தவிர்த்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.

தீபாவளிக்கு ஏழாம் அறிவு... ரெட் ஜெயன்ட்!

சூர்யா - ஸ்ருதி ஹாஸன் நடிப்பில் உருவாகியுள்ள, பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகக் கருதப்படும் 7ஆம் அறிவு, தீபாவளியன்று வெளியாகும் என தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தப் படம் தனது ரெட்ஜெயன்ட் பேனரிலேயே வெளியாகும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் உதயநிதி.

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கருணாநிதி குடும்ப வாரிசுகள் தொடர்புடைய திரைப்படங்கள் சிக்கலுக்குள்ளாகி வருகின்றன. இந்தப் படங்களைத் திரையிட இப்போது ஆர்வம் காட்டுவோர் குறைந்துவிட்டனர். ஆளும்கட்சியைப் பகைத்துக் கொள்ளக்கூடாது மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக இதை செய்கின்றனர்.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் தனது புதிய படமான 7-ஆம் அறிவை தானே வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "7-ஆண் அறிவு திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது. ரெட்ஜெயன்ட் மூவீஸ் பேனரிலேயே இந்தப் படம் வெளியாகும்", என்று கூறியுள்ளார். ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை சன் டிவிக்கு மிகப்பெரிய விலைக்குத் தரப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 10-ம் தேதி படத்தின் ஆடியோ வெளியாகிறது.

மீண்டும் சன் பிக்சர்ஸ்...! மங்காத்தாவை வாங்கியது!


வழக்குகள், கைதுகள், தயாரிப்பாளர்களின் புகார்கள் என ஒரு பக்கம் சிக்கல்களைச் சந்தித்தாலும் மீண்டும் புதிய வேகத்தோடு திரைப்படத் துறையில் களமிறங்குகிறது சன் பிக்சர்ஸ். இந்த இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த எடுப்பிலேயே மங்காத்தா என்ற பெரிய படத்தை வெளியிடுகிறது இந்த நிறுவனம்.

தயாநிதி அழகிரியின் தயாரிப்பான இந்தப் படம், சமீபத்தில் ஞானவேல் ராஜாவுக்கு விற்கப்பட்டது. உடனே அவர் படம் தொடர்பான விளம்பரங்களில் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி மற்றும் அவரது க்ளவுட் நைன் நிறுவன பெயரை முற்றாக நீக்கிவிட்டார். மேலும் ஜெயா டிவிக்கு படத்தின் ஒளிபரப்பு உரிமையைத் தர முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படத்தை ஞானவேலிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார் தயாநிதி அழகிரி. மங்காத்தாவின் தொலைக்காட்சி உரிமம் மட்டுமல்லாமல், நெகடிவ் உரிமையையும் சன் குழுமத்துக்கே அவர் கொடுத்துவிட்டார்.

வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி சன் பிக்சர்ஸ் பேனரில் மங்காத்தா வெளியாகிறது. எங்கேயும் காதலுக்குப் பிறகு, தான் வாங்கிய அவன் இவன் உள்ளிட்ட படங்களைக் கூட திரும்பக் கொடுத்து வந்த சன் பிக்சர்ஸ், இப்போது மீண்டும் அதிரடியாக மங்காத்தாவை வெளியிடுகிறது.

நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா!

நில அபகரிப்பில் போலீசார் உள்பட யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்புத்துறை, மது விலக்கு, ஆயத்தீர்வை, உள்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. முன்னதாக இந்தத் துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகளை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

இந்த அரசு பதவி ஏற்றவுடன் பொதுமக்களிடையே சட்டம்- ஒழுங்கு பராமரிப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், கடந்த காலத்தில் சமூக விரோதிகளின் செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் நிலவி வந்த பய உணர்வை போக்கும் விதத்திலும் நடந்துள்ளது.

சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனிமனித உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி வந்த சமூக விரோதிகள் தப்பிக்க இடம் கொடுக்காமல் இரும்பு கரம் கொண்டு அடக்கிட இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆட்களை கடத்தி பணம் பறித்தல், மணல் கொள்ளை, அத்தியாவசிய பொருட்களை கடத்துதல், நில ஆக்கிரமிப்பு, கட்ட பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை மாதங்களில் 323 பேர் மீது குண்டர் சட்டத்திலும், 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திறமையும், ஆற்றாலும் தமிழக காவல் துறையின் பணி தரத்தின் தனி அடையாளங்களாக திகழ்கின்றன. ஆனாலும், காவல் பணியில் மேலும் சில மாற்றங்களும், சீர் திருத்தங்களும் தேவை என்பதில் சந்தேக மில்லை. எனவே திட்டமிட்ட மற்றும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நடந்த விவாதத்தில் பேசிய பென்னாகரம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நஞ்சப்பன், கடந்த திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் மீது போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை. அடியாட்களாகவே காவல்துறையில் சிலர் நடந்து கொண்டார்கள். என் மீதே பல்வேறு வழக்குகள் போட்டார்கள். அதிலிருந்து விடுதலையாகி விட்டேன். ஒரே ஒரு வழக்குதான் உள்ளது. அதுவும் கூட பொய் வழக்கு தான்.

முதல்வர் ஜெயலலிதா: தி.மு.க. ஆட்சியில் பல பொய் வழக்கு போடப்பட்டதாக உறுப்பினர் நஞ்சப்பன் கூறினார். அந்த வழக்கின் விவரங்களை கொடுத்தால், பொய் வழக்கு என்றால் திரும்ப பெறப்படும்.

மேலும் நில அபகரிப்பில் போலீசார் சிலர் ஈடுபட்டதாகவும் கூறினார். நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் போலீசார் விதி விலக்கு அல்ல. ஏற்கனவே தவறு செய்த போலீஸார் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் நல்லவர்களும் உள்ளனர். குற்றம் புரிந்தவர்களும் உள்ளனர். எனவே, நில அபகரிப்பில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் தயங்காமல் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

அதே நேரத்தில் உறுப்பினர் நஞ்சப்பன் பேசும்போது, போலீசை பிடிபிடியென விளாசித் தள்ளினார். இடையில் போலீசாருக்குப் பரிந்து கோரிக்கைகளையும் வைக்கிறார். இதில் எதை எடுத்து கொள்வது என்று புரியவில்லை. பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):- இரண்டையும் எடுத்து கொள்ள வேண்டும். பாலபாரதி இவ்வாறு கூறியதும் முதல்வர் உள்பட அனைவரும் சிரித்தனர்,

லோக்பால் விவகாரத்தில் பாஜக அணுகுமுறைக்கு யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா கண்டனம்!

லோக்பால் விவகாரத்தில் பாஜக மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இதை தீவிரமான பிரச்சினையாகவே அது கருதவில்லை. இந்த நிலை நீடித்தால் எங்களது எம்.பி பதவிகளை நாங்கள் ராஜினாமா செய்யத் தயங்க மாட்டோம் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவும், கட்சி எம்.பி சத்ருகன் சின்ஹாவும் கூறியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், லோக்பால் விவகாரத்தில் வலுவான நிலையை எடுக்க பாஜக தவறி விட்டது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுவுள்ளதாக மாற்ற வேண்டியது முக்கியக் கட்சியான பாஜகவின் கடமையாகும். ஆனால் பாஜகவோ மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

இந்த நிலை நீடித்தால் எனது எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்து விட்டுப் போக வேண்டியதுதான் என்றார்.இதேபோல கருத்து தெரிவித்துள்ளார் சத்ருகன் சின்ஹாவும். இவர்களைத் தவிர பாஜக எம்.பி உதய் சிங்கும் கட்சிக்கு அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹாவும், சத்ருகன் சின்ஹாவும், உதய் சிங்கும், அத்வானி தலைமையில் நடந்த கட்சியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது இந்த அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சத்ருகன் சின்ஹா கூறுகையில், காங்கிரஸைத் தாக்க கிடைத்த வாய்ப்பாக மட்டும் கருதிக் கொண்டு ஒப்புக்கு பேசி வருகிறது பாஜக. இது தவறு. இந்தப் பிரச்சினையை பாஜக தீவிரமாக அணுகியிருக்க வேண்டும் என்றார். இருப்பினும் யஷ்வந்த் சின்ஹா ராஜினாமா செய்வதாக கூறவில்லை என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.எஸ்.அலுவாலியா கூறியுள்ளார்.

சச்சின் 100வது சதத்தை அடித்திருந்தால் இந்தியாவின் தோல்வியை திசை திருப்பியிருப்பார்கள்- நாசர் ஹூசேன்!

சச்சின் டெண்டுல்கர் மட்டும் 4வது டெஸ்ட் போட்டியின்போது தனது 100வது சதத்தை அடித்திருந்தால் அதை வைத்தே, இந்தியாவின் தோல்வியை அந்த நாட்டினர் திசை திருப்பியிருப்பார்கள் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன்.

சிங்கம் சீறத் தயங்கியதால், இன்று சிறு நரிகள் எல்லாம் நாட்டான்மை பண்ணும் நிலைமைக்குப் போய் விட்டது இந்திய கிரிக்கெட் அணியின் நிலை. யார் யாரோ, கேலி கிண்டல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது இந்திய கிரிக்கெட் அணி.

4வது டெஸ்ட் போட்டியின்போது சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இப்போது இந்த அவுட்டை வேறு மாதிரியான கோணத்தில் பார்த்து கருத்து தெரிவித்துள்ளார் நாசர் ஹூசேன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சச்சின் தனது 100வது சதத்தை தவற விட்டது நல்லதுதான். இல்லாவிட்டால் இதை வைத்து இந்திய அணியின் மோசமான ஆட்டத்தையும், தொடர் தோல்விகளையும் இந்தியாவில் மறைத்திருப்பார்கள். சச்சின் சதமடிக்கத் தவறியதால் இந்திய அணியின் தோல்வி குறித்து சிந்திக்க அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் ஹூசேன்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், சச்சின் சதம் போட்டிருந்தால் ராகுல் டிராவிடன் அபாரமான ஆட்டமும், அவரது சிறப்பான முயற்சிகளும் கூட மறைக்கப்பட்டிருக்கும். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய ஒரே இந்திய வீரர் அவர் மட்டுமே. 3 சதங்களை அவர் போட்டதை, சச்சினின் ஒரு சதம் மறைத்து விட்டிருக்கும்.நல்ல வேளை அப்படி நடைபெறவில்லை.

எனவே சச்சின் சதத்தால் இந்தியாவின் உண்மை நிலை, எப்படி அது மோசமாக ஆடியது, எப்படி ராகுல் மட்டும் சிறப்பாக ஆடினார் என்ற உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கக் கூடும். அது நடைபெறாதது இந்திய அணிக்கு நல்லதுதான் என்றார் ஹூசேன்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இங்கிலாந்துக்கு இதுவரை சுற்றுப்பயணம் செய்த அணிகளிலேயே மிகவு்ம் மோசமாக ஆடிய அணி இந்தியாதான். இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரிதாக உள்ளது என்றும் சாடினார் ஹூசேன்.

5 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்துவோம்- ஸ்டிராஸ்!அடுத்த வெள்ளைக்கு அயத்தமாகுமா? பெருமை மிட்குமா?

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வீ்ழ்த்தியது போல, ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெல்லும், வெல்ல வேண்டும் என்று இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் கூறியுள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவை வென்று விட்டதால் இங்கிலாந்து அணியை ஆஹா, ஓஹோவென அத்தனை பேரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தோல்வியே காணாமல் கம்பீரமாக நடை போட்டு வந்த டோணி தலைமையிலான இந்திய அணி கடும் நெருக்கடிக்கும், அவமானத்திற்கும் உள்ளாக்கி விட்டது.

இந்த நிலையில் ஒரு நாள் போட்டித் தொடரிலும் அத்தனை போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று ஸ்டிராஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை வீழ்த்த இதுவே சரியான தருணம். எங்களிடம் பல ஆச்சரியகரமான விஷயங்கள் நிறையவே உள்ளன. ஒரு நாள் தொடரையும் வெற்றிகரமாக முடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். டெஸ்ட் போட்டிகளைப் போலவே நாங்கள் ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்த வேண்டும், வீழ்த்துவோம். அதற்தான தகுதியும், திறமையும், உத்திகளும் எங்களிடம் உள்ளன.

சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பவுலர்கள், சிறப்பான பீல்டிங் எங்களிடம் உள்ளது. எனவே எங்களால் 5 ஒரு நாள் போட்டிகளிலும் வெல்ல முடியும் என்றார்.ஒரு நாள் போட்டிகளில் வல்லவர்களாக கருதப்படும் டோணி தலைமையிலான படையினர் ஸ்டிராஸ் சொல்வதை பொய்யாக்குவர்களா?. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெர்மனி கால்பந்தாப் போட்டி அணிவகுப்பில் தமிழ் ஈழ தேசியக் கொடி!

ஜெர்மனியின் வெஸ்ட்பாலன்ஸ்டேடியான் என்ற நாட்டிலேயே மிகப் பெரிய கால்பந்து ஸ்டேடியத்தில் நடந்த கால்பந்துப் போட்டிக்கு முன்னதான அணிவகுப்பின்போது இலங்கையின் தேசியக் கொடிக்கு இணையாக தமிழ் ஈழத் தேசியக் கொடியும் கொண்டு செல்லப்பட்டு கெளரவம் தரப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் கடந்த சனிக்கிழமையன்று பொருஸ்ஸியா டர்ட்மண்ட் மற்றும் நூரம்பர்க் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி நடந்தது. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் டார்ட்மண்ட் அணி வெற்றி பெற்றது. இப்போட்டிக்கு முன்னதாக பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகள் எடுத்துச் செல்லப்பட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது. பிரேசில், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட 40 நாடுகளின் தேசியக் கொடிகள் இதில் பங்கேற்றன. அதில் தமிழ் ஈழத்தின் தேசியக் கொடியும் ஒன்றாகஇடம் பெற்றது அனைவரையும் கவர்ந்தது.

தமிழ் ஈழத்தின் கொடியை தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும், பொருஸ்ஸியா டார்ட்மண்ட் ரசிகர்கள் மூவருமாக இணைந்து பிடித்துச் சென்றனர். இலங்கைக் கொடியுடன், அக்கொடிக்கு இணையாக தமிழ் ஈழத்தின் தேசியக் கொடி பட்டொளி வீசும் வகையில் மதிப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரரீதியில் தன்னைவிட பலவீனமான நாடா.. ராணுவ பலத்தைக் காட்டி மிரட்டு. ராணுவ பலத்தில் தன்னைவிட பலசாலியா பொருளாதாரரீதியில் மடக்கு சீனாவின் வெளியுறவுக் கொள்கை!

பொருளாதாரரீதியில் தன்னைவிட பலவீனமான நாடா.. ராணுவ பலத்தைக் காட்டி மிரட்டு. ராணுவ பலத்தில் தன்னைவிட பலசாலியா பொருளாதாரரீதியில் மடக்கு.. இது தான் சீனாவின் வெளியுறவுக் கொள்கை.
அருணாசலப் பிரதேசத்தில் அவ்வப்போது தனது ராணுவத்தினரை நுழைய விட்டு அங்குள்ள பாறைகளில் சிவப்பு நிற பெயிண்டை பூசிவிட்டுப் போவது சீனாவின் வாடிக்கை.. அதாவது 'இந்த ஏரியா எல்லாம் என்னுடையது' என்று மறைமுகமாகச் சொல்கிறது சீனா.

அதே நேரத்தில் ஆப்ரிக்க நாடுகளை பணத்தைக் கொடுத்து மடக்கி அந்த நாடுகளில் மாபெரும் திட்டப் பணிகளுக்கான காண்ட்ராக்ட்களைப் பெறுவதிலாகட்டும், அந்த நாடுகளின் இரும்பு உள்ளிட்ட தாது சுரங்கங்களை மொத்தமாக வாங்குவதாகட்டும், ஈரான்-வட கொரியா ஆகிய நாடுகளுக்கு ஆயுத உதவிகள் தந்து அவர்களை தன் பக்கம் இழுப்பதிலாகட்டும், இந்தியாவுக்கு தென் பகுதியிலும் தொல்லை தர இலங்கைக்கு உதவிகள் செய்வதிலாகட்டும், ரஷ்யாவிடம் மோதல் போக்கை கையாளமால் தனது வட பகுதி எல்லையில் அமைதியைப் பேணுவதிலாகட்டும் சீனாவுக்கு இணையான ஒரு ராஜதந்திர நாடு இப்போதைக்கு வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட சீனா, அமெரிக்காவை மட்டும் விட்டு வைக்குமா?. விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. அமெரிக்கா மூன்று வகைகளில் சீனாவிடம் 'சிக்கியுள்ளது' என்று சொல்லாம்.

ஒன்று பிளேடுகளில் ஆரம்பித்து துணிகள் வரை அமெரிக்கா தனது நாட்டின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்ய பெருமளவில் சார்ந்துள்ள நாடு சீனா தான். அமெரிக்காவில் ஒரு சிறிய தொழிற்சாலையை உருவாக்கி, நடத்தி ஒரு பாட்டிலை தயார் செய்வதற்குக் கூட பல மில்லியன் டாலர் செலவாகும். இதனால், மக்கள் பெருவாரியாக பயன்படுத்தும் அடிப்படைப் பொருட்களைக் கூட அமெரிக்கா தயாரிப்பதில்லை. இதில் பெரும் தேவையை பூர்த்தி செய்வது சீனா தான். அமெரிக்காவின் பெரும் ஸ்டோர்கள் சீன இறக்குமதிகளையே பாதிக்கும் அதிகமாக சார்ந்துள்ளன என்று கூட சொல்லலாம்.

இரண்டாவது.. ஆசிய பிராந்தியத்தின் பெரும் பரப்பில் விரிந்து கிடக்கும் சீனாவை பகைத்துக் கொண்டு இந்தப் பகுதியில் அமெரிக்கா ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போட முடியாத நிலை. ஆப்கானி்ஸ்தான் விவகாரம், இராக் மீது போர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் சீனாவின் அனுமதி இல்லாமல் ஐ.நா.வில் அமெரிக்காவால் ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றியிருக்க முடியாது.

ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் அமெரிக்கா பக்கமே நின்றாலும், ரஷ்யா-சீனா ஆகிய நாடுகள் உதவியில்லாமல் ஐக்கிய நாடுகள் சபையை தனது இஷ்டத்துக்கு அமெரிக்காவால் ஆட்டுவிக்க முடியாது. இதில் ரஷ்யா தனது உலகளாவிய கனவுகளை எல்லாம் இப்போதைக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு, 'கேபிடலிஸ்ட்' பொருளாதாரப் பாதையில் அமெரிக்காவை அப்படியே காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டது. இப்போதைக்கு சர்வதேச விவகாரங்களில் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதை விட்டுவிட்டு தனது பொருளாதாரத்தை பலப்படுத்திலேயே தீவிரமாக உள்ளது ரஷ்யா. அதற்கு அமெரிக்கா, ஐரோப்பாவின் உதவியும் தேவை என்பதால், அமெரிக்காவுடன் ரஷ்யா மோதல் போக்கை கையாளுவதே இல்லை.

ஆனால், சீனா அப்படியில்லை. ஆசிய பிராந்தியத்தையும் தாண்டி தனது செல்வாக்கை நிலை நிறுத்தும் பெரிய கனவு கண்டு வருகிறது. இதனால், அவ்வப்போது அமெரிக்காவுடன் மோதலைக் கையாளவும் சீனா தயங்குவதில்லை. ஆனால், அதை ஒரு அளவோடு.. தைவான், வட கொரியா ஆகிய நாடுகளின் விவகாரங்களோடு இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறது சீனா.

அருணாசலப் பிரதேசம் மாதிரி தைவானும் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறும் சீனா, அதை அப்படியே ஆக்கிரமிக்க முயல்கிறது. சீனாவிடமிருந்து தப்புவதற்காக அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டாலர்களுக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது தைவான். உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான தைவான் தான் உலகில் மிக அதிகமான ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகளில் ஒன்றாகும். தைவானுக்கு அமெரிக்கா ஆயுதம் தருவதை எதிர்த்து சீனா அவ்வப்போது 'சவுண்டு விடுவது' வழக்கம்.

அதே போல சோமாலியா, ஆப்கானிஸ்தான், இராக் என நினைத்த இடத்தில் எல்லாம் நினைத்த நேரத்தில் படைகளை அனுப்பி நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்காவால் இதுவரை வட கொரியாவை நோக்கி ஒரு துப்பாக்கிச் சூடு நடத்த முடியவில்லை என்றால் அதற்கு முழுக் காரணம் சீனா தான். தென் கொரியாவில் அமெரிக்கப் படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கு சீனா எல்லா வகையான உதவிகளையும் தந்து வருவதால், அந்த நாடு அணு ஆயுதம் தயாரித்தால் கூட அமெரிக்கா அதை அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை. வட கொரியா விஷயத்தில் அமெரிக்காவை கையைக் கட்டி போட்டுள்ளது சீனா.

இப்படி 'மாஸ் புரொடக்ஷன்', சர்வதேச விவகாரங்கள் என அமெரிக்காவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, பொருளாதாரரீதியிலும் அமெரிக்காவை எப்போதும் அச்சுறுத்தியே வருகிறது. அந்த வகையில் 3வது காரணம், சீனாவிடம் கையிருப்பில் உள்ள அமெரிக்காவின் 3.8 டிரில்லியன் டாலர்கள் பணம்.!

ஒரு டிரில்லியன் என்றால் 1000000000000 (ஒரு லட்சம் கோடி). இதை முதலில் 3.8 ஆல் பெருக்கிவிட்டு பின்னர் 45 ஆல் பெருக்குங்கள்... அது தான் 3.8 டிரில்லியன் டாலர்!.இதில் 60 சதவீதத்தை டாலர்களாகவே வைத்துள்ளது சீனா. அதில் 1.1 டிரில்லியன் டாலர்களை அமெரிக்க நாட்டின் கருவூலப் பத்திரங்களில் (US Treasury bonds) முதலீடு செய்து நேரடியாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் 'இதயத்தில் கை வைத்துள்ளது' சீனா.

இந்த டாலர்களை சீனா ஒரு நாள் உலகச் சந்தையில் 'கொட்டினால்', அமெரிக்க டாலரின் மதிப்பு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்குச் சரியும். அமெரிக்கப் பொருளாதாரமும் ஒரே நாளில் முடங்கும். அதற்காகக் தான் இதை வாங்கி வைத்துள்ளது சீனா!.தைவானுக்கு அமெரிக்கா தனது அதிநவீன போர் விமானங்களைத் தரும்போதெல்லாம் ''டாலர்களை சந்தையில் கொட்டவா?'' என்று அமெரிக்காவை சீனா மிரட்டுவது வழக்கம்.

அமெரிக்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா வைத்துள்ள 'பிரம்மாஸ்திரம்' இது. ஆனால், சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் இந்த டாலர்களையே சீனாவுக்கு எதிராகத் திருப்பியுள்ளன..!

அது எப்படி..? ''சரி.. தைவானை ஆதரித்தால் சீனா நமது டாலர்களின் மதிப்பை சரித்துவிடுமே.. நமக்கு எதுக்கு வம்பு' என்று அமெரிக்கா சும்மா இருக்கலாம் அல்லவா?. அதைவிட்டுவிட்டு தைவானை அமெரிக்காவே தேடிப் போய் உதவிகள் செய்வது ஏன்?. ''நீ டாலர்களை சந்தையில் கொட்டித் தான் பாரேன்'' என்று சீனாவை சீண்டுவதற்காகத் தான்..!நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்தக் கடன் அளவை அமெரிக்கா வெகு விரைவிலேயே எட்டி விடலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இதனால், நினைப்பதை விட மிக விரைவிலேயே மீண்டும் இந்த கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படலாம்.

அப்படி ஒரு நிலை வந்தால் டாலரின் மதிப்பு வெகுவாகவே சரியும். அப்படிச் சரிந்தால், முதல் அடி அமெரிக்காவுக்கு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான அளவில் டாலர்களை கையிருப்பில் வைத்திருக்கும் சீனாவுக்குத் தான் பிற நாடுகளை விட பெரும் அடி விழலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதனால் இப்போது சீனாவிடம் பிரம்மாஸ்திரமாக இருக்கும் டாலர்களே அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கலாம். சீனாவின் ரிசர்வ் வங்கியான People's Bank of China தான் இந்த 3.8 டிரில்லியன் டாலர்களை கையிருப்பில் வைத்துள்ளது. இந்த வங்கிக்கு அடி விழுந்தால், சீனாவின் அனைத்து மட்டங்களிலும் அதன் பாதிப்பு படு வேகத்தில் பரவும்.

இதனால் இவ்வளவு டாலர்களை சீனா கையில் வைத்திருக்கும் வரை, அமெரிக்காவுக்கு எப்போதெல்லாம் பொருளாதார சிக்கல் வருகிறதோ அப்போதெல்லாம் சீனாவுக்கு சிக்கல் தான்.

இதை உணர்ந்துள்ள சீனா, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக டாலர்களைக் 'கரைத்துவிட்டு' அதை வேறு நாட்டு கரன்சிகளாகவும் (யுரோ), தங்கமாகவும் மாற்றலாமா என்ற யோசனையில் உள்ளது.

அதே போல டாலருக்கு எதிரான தனது நாட்டு கரன்சியான யுவானின் (yuan) மதிப்பை அதிகரிப்பது குறித்தும் சீனா யோசித்து வருகிறது. இதுவரை அமெரிக்காவே எத்தனையோ முறை கோரியும் கூட சீனா தனது கரன்சியின் மதிப்பை அதிகரிக்கவே விட்டதில்லை. இதன்மூலம் டாலரின் மதிப்பை மிக அதிகமாகவே வைத்திருந்து, சீன மக்கள் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதை கஷ்டமான ஒரு விஷயமாகவே வைத்துள்ளது.

இ்ப்போது தனது கரன்சியான யுவானின் மதிப்பை அதிகரித்துவிட்டால், டாலருக்குப் பதில் வேறு நாட்டுக் கரன்சிகளை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் சீன ரிசர்வ் வங்கிக்கு இல்லை. உயர்த்தப்பட்ட யுவானின் மதிப்பே, டாலரின் மதிப்பு சரிவதால் ஏற்படும் இழப்பை சரி செய்துவிடும்.

ஆனால், சீன கரன்சியின் மதிப்பு உயர்ந்தால் அதை வாங்க உலக நாடுகளிடையே, சர்வதேச முதலீட்டாளர்களிடையே திடீரென போட்டி உருவாகும். சீனா எப்படி அமெரிக்க டாலர்களை வாங்கி குவித்து வைத்துள்ளதோ, அதே போல பிற நாடுகள் யுவானை வாங்கி குவிக்க முயலாலாம். இதனால் அதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஆனால், அளவுக்கு மீறி யுவானின் மதிப்பு அதிகரித்தால், அது சீனாவின் ஏற்றுமதியை பாதிக்கும்.

சீனாவைப் பொறுத்தவரை அதன் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஏற்றுமதி தான். சீனாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் 40 சதவீதம் ஏற்றுமதியையே சார்ந்துள்ளது (அதிலும் பெருமளவிலான ஏற்றுமதி நடப்பது அமெரிக்காவுக்குத் தான்). ஏற்றுமதி குறைந்தால், சீன பொருளாதார வளர்ச்சி 3 முதல் 5 சதவீதம் சரியும் என்கிறார்கள். மேலும் ஏற்றுமதி குறைந்தால் நாட்டில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் ஏற்படும்.

சீனாவின் Center for Economic Research நடத்தியுள்ள ஒரு ஆய்வின்படி, டாலருக்கு எதிராக யுவானின் மதிப்பு 20 சதவீதம் அதிகரித்தால்.. (நான் மேலே 2 பாராக்களில் சொன்ன விஷயங்கள் நடந்து) நாட்டில் 2 கோடி வேலைவாய்ப்புகள் காலியாகும் என்று தெரியவந்துள்ளது.

இதனால் சீனாவின் கையில் உள்ள இந்த 3.8 டிரில்லியன் டாலர் என்பது.. சாதாரண சுமை அல்ல.. பெரும் சுமை!

சங்கர்ராமன் கொலை வழக்கு: நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் 'டீல்'!

சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோ சிடி வெளியாகியுள்ளது. நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந் நிலையில் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஜெயந்திரர், அவரது பெண் உதவியாளர், 2 இடைத்தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் அடங்கிய சி.டி. வெளியாகி உள்ளது. இதை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று உரையாடல் உள்ளது. இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுதலையாக ஏதோ 'டீல்' நடந்துள்ளதாகத் தெரிகிறது.

அதில் பேசும் பெண் குரலுக்குச் சொந்தக்காரர் கெளரி என்பவர் ஆவார். இவர் ஜெயேந்திரரின் உதவியாளர் என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.இந்த சி.டி. உண்மையானதா, உண்மை என்றால் பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

அதுவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது வார இறுதியில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இதன்மூலம் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஜெயேந்திரர்.

இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் திமுக ஆட்சியின்போது இந்த வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து ஜெயேந்திரருக்கு ஆதரவாக பல்டியடித்தனர். இப்போது மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ஜெயேந்திரர் தொடர்பான புதிய சிடி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதி பெறாத பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்!


தனியார் பள்ளிக்கு எதிராக பெற்றோர் அளித்த புகாரை விசாரிக்கும் உண்மை அறியும் குழு, தமிழக அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது.


தனியார் பள்ளி அதிகக் கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் நடத்திய போராட்டத்தை விசாரிக்க கல்வியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் ஆய்வு அறிக்கை செவ்வாயன்று வெளியிடப்பட்டது. ஆய்வு அறிக்கையில், புகார் அளிக்கப்பட்ட பள்ளி நிர்வாகம் சென்னையில் மட்டும் 36 பள்ளிகளை நடத்துகிறது. இந்த பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சிகள் நடத்துவதாக கட்டாய கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

எனினும், இந்த பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களும் முறையான பயிற்சி பெற்றவர்கள் இல்லை. போதிய கட்டமைப்பு வசதியும்  இல்லை.
கட்டணங்களைக் கட்டத் தவறும் குழந்தைகளை தனியாக அமர வைப்பது, மிரட்டுவது போன்ற செயல்களிலும் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி வணிகப் பொருளாகிவிட்டதால் படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளிகள் முழுமையாக அனைத்து அரசு அனுமதிகளையும் பெற்ற பின்னரே இயங்க அனுமதிக்க வேண்டும். இதற்குரிய சட்டத்திருத்தம் உடனடியாக செயல்பட வேண்டும். எந்த வகை பள்ளியானாலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்க வேண்டும். தமிழகத்தில் அனுமதி பெறாத பள்ளிகளை கண்டறிய குழு அமைத்து அனுமதி பெறாமல் நடத்தப்படும் பள்ளிகளின் பட்டியலை பத்திரிக்கைகளில் அரசு வெளியிட வேண்டும்.

அனுமதி பெறாமல் நடத்தப்படும் பள்ளிகளை மூடி, அதில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரேலியாவில் இருந்து 55 இந்தியர்கள் விசா ரத்து!


55 இந்தியர்கள் உட்பட ஆஸ்ட்ரேலியாவில் பயின்று வந்த 150 வெளிநாட்டவர்கள், இந்த நிதியாண்டில் மட்டும் ஆஸ்ட்ரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
நடைமுறைகளை பின்பற்றாமல் விசா பெற்று ஆஸ்ட்ரேலியாவிற்கு வந்த மாணவர்கள், கண்டறியப்பட்டு 72 மணி நேரத்தில் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 2010-11ம் ஆண்டில், விசாரவை ரத்து செய்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்களில் பலர், படிப்பை தொடராததும், வகுப்புகளுக்கு நீண்ட நாட்களாக செல்லாமல் இருந்ததுமே காரணமாக இருந்துள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்ட 159 மாணவர்கள் 151 மாணவர்கள் 72 மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

சிம்புவுடன் குத்தாட்டம் போட கத்ரீனாவுக்கு ரூ.1 கோடி!

ஒஸ்தி" படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் போட பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாலிவுட்டில் சூப்பர், டூப்பர் ஹிட்டான படம் "தபாங்". இப்படம் தமிழில் "ஒஸ்தி" என்ற படத்தில் ரீ-மேக் ஆகி வருகிறது. படத்தில் நாயகனாக சிம்புவும், நாயகியாக ரிச்சாவும் நடித்து வருகின்றனர். தரணி இயக்கி வருகிறார். ஒஸ்தி படத்தின் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தி தபாங்கில் "முன்னி..." என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் மல்லிகா அரோரா, கலக்கலாக ஒரு குத்தாட்டம் போட்டு அனைவரையும் கிறங்கடித்தார். அதேபோல் ஒஸ்தியிலும் இதுபோன்று ஒரு பாடல் அமைக்க வேண்டும் என்று சிம்புவும், தரணியும் விரும்புகின்றனர்.

இதற்காக கலக்கலான குத்து சாங்க் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்நிலையில் சிம்புவுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவதற்கு, சிம்புவின் மாஜி காதலி நயன்தாராவை கேட்டு பார்த்தனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனையடுத்து இந்தி நடிகைகள் திபீகா, கத்ரீனா, ப்ரியங்கா சோப்ரா, மல்லிகா அரோரா உள்ளிட்ட பலரிடம், ஒஸ்தி படக்குழு அணுகியது, யாரும் முன்வரவில்லை. கத்ரீனா மட்டும் ரூ.1 கோடி கொடுத்தால் ஓ.கே., என்று சொல்லியிருக்கிறார். சிம்புவும், கத்ரீனா என்றதும் உடனே ஓ.கே. சொல்லுமாறு கூறிவிட்டாராம். இன்னொரு பக்கம் ராணா நாயகி, தீபிகா படுகோனேவிடமும் இதே ஆஃபரை வைத்துள்ளனர். அவர் இன்னும் எந்த பதிலும் சொல்லாததால், கத்ரீனாவையே ஒப்பந்தம் செய்துவிடலாம் என்ற முடிவில் உள்ளனராம்

ரசிகர்களுக்கு, நிச்சயம் இந்த செய்தி வருத்தத்தை அளிக்கும்!.தள்ளி போகுமா மங்கத்தா?

மங்காத்தா படத்திற்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களில், க்ளவுடு நைன் பெயரையே போடாததால் அப்சட் ஆகிபோன துரை தயாநிதி தரப்பினர், படத்தை ஞானவேல் ராஜாவிடமிருந்து திரும்ப பெற்று ‌வேறு ஒருவருக்கோ அல்லது தாங்களே வெளி‌யீடும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத் நடிப்பில் உருவாகியிருக்கும் 50வது படம் மங்காத்தா. இப்படத்தை க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரித்துள்ளார். படம் இம்மாத வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் க்ளவுடு நைன் பேனரில் முன்னர் தயாரிக்கப்பட்ட வ குவாட்டர் கட்டிங் உள்ளிட்ட சில படங்களால் நஷ்டம் அடைந்திருப்பதாலும், தற்போதைய ஆட்சி மாற்றத்தாலும் படத்தை வாங்க விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் தயங்குகின்றனர். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் உருவானது. அதேசமயம் மங்காத்தா அஜீத்திற்கு 50வது படமும் கூட, இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும் உள்ளதால் படத்தை தள்ளிப்போடவும் முடியவில்லை.

இப்பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு க்ளவுடு நைன் பேனரில் வெளியிடுவதற்கு பதிலாக ‌வேறு ஏதாவது ஒரு பேனரில் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்தது துரை தயாநிதி தரப்பு. அதன்படி மங்காத்தா படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனமான, கே.இ.ஞானவேல் ராஜா வெளியிட முன்வந்தார். இதனையடுத்து மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலையில் மும்மரமாக இறங்கினார் கே.இ.ஞானவேல் ராஜா. சரி எப்படியோ, மங்காத்தா ரிலீஸ் பிரச்சனை ஒரு வழியாக தீர்ந்தது என்று எண்ணியிருந்த வேளையில், புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பியிருக்கிறது.

மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்வதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரங்களில், க்ளவுடு நைன் மூவிஸ் என்ற பெயரே வரவில்லை. இதனால் துரை தயாநிதி தரப்பு மிகுந்த அப்செட்டாகியுள்ளது. படத்தை தயாரித்தது நாம் தான், நமது பெயரையே விளம்பரத்தில் போடவில்லை, அப்படி நமது பெயரை மறைத்து, இந்தபடத்தை ஞானவேல் வெளியிட வேண்டாம் என்று துரை தயாநிதி தரப்பு கருதுகிறது. படத்தை ஞானவேல் ராஜாவிற்கு பதிலாக ‌வேறு ஒருவருக்கோ அல்லது தாங்களே வெளி‌யிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மங்காத்தா ரிலீஸ் ஆகும் தேதி தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

எதிர்ப்பின்றி சரணடைந்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பெரிய அளவில், எவ்வித எதிர்ப்பும் இன்றி சரணடைந்தது வியப்பு தருகிறது,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதில் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின், அமித் மிஸ்ரா இருவரும் துணிச்சலான போராட்டத்தை வெளிப்படுத்தி, "டிரா' செய்யப் போராடினர். இருப்பினும், மற்றவீரர்கள் ஏனோதானோ என்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இன்னிங்ஸ் தோல்வியடைய நேரிட்டது.


இதுகுறித்து முன்னாள் வீரர்கள் கூறியது:

கவாஸ்கர்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவு பெரும் ஏமாற்றம் தருகிறது. இரண்டு சிறந்த அணிகள் பங்கேற்ற நிலையில், இத்தொடர் சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்திய வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எவ்வித எதிர்ப்பும் இன்றி சரணடைந்தனர்.  இது "நம்பர்-1' அணிக்கு அழகல்ல. தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணிகள், பொதுவாக கடைசிவரை போராடி, சிறிய வித்தியாசத்தில் தான் தோற்கும். இப்படி மிகப்பெரிய அளவில் தோற்க மாட்டார்கள். ஒருவேளை இந்திய வீரர்களின் அணுகுமுறைகள் தவறாக இருந்திருக்கலாம்.


ரவி சாஸ்திரி: இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய வீரர்களின் காயங்கள், "பார்ம்' இல்லாதது என, பல்வேறு காரணங்கள் <உள்ளன. ஆனால், இந்த தோல்வியிலிருந்து உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். இதற்காக கண்டிப்பான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.  டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, மூன்று வகையான போட்டிகளுக்கும் தனித்தனியாக குறிப்பிட்ட அளவு தரமான வீரர்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீரர்களின் பழைய சாதனைகளை எப்போதும் பேசிக்கொண்டு, தேர்வு முடிவுக்கு வரக்கூடாது. இவற்றை சரியாக பின்பற்றினால் அடுத்த 6 முதல் 8 மாதங்களில் இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.


சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: லட்சுமண் போன்றவர்கள் ஒரு திறமையை மட்டும் வைத்துக் கொண்டு, அணியில் காலம் தள்ள முடியாது. தென் ஆப்ரிக்காவில் ஸ்ரீசாந்த் செயல்பாட்டினை பார்த்தபின், ஜாகிர் கானுக்கு மாற்றாக நல்ல வீரரை கண்டறிய வேண்டும் என நினைத்தேன். இங்கிலாந்து தொடரில் ஸ்ரீசாந்துக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மிகச் சாதாரணமான பவுலிங்கை வெளிப்படுத்தியது பெரும் ஏமாற்றமாக இருந்தது.


வெங்சர்க்கார்: வெளிப்படையாக சொல்வதென்றால், இது இந்திய அணிக்கு கடினமான தொடர். சமீபகாலமாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், அஞ்சத்தக்க அணியுடன் தான் இந்தியா மோதியது. என்னைப் பொறுத்தவரையில் கடைசி சில இன்னிங்ஸ்களில் இந்திய வீரர்கள் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஆறுதலாக இருந்திருக்கும்.
பாபு நட்கர்னி:

இந்திய அணி இவ்வளவு மோசமாக விளையாடும் என்று நினைக்கவே இல்லை. நமக்குள்ள திறமையில் 5 சதவீதம் கூட வெளிப்படுத்தவில்லை. அடுத்தடுத்து தவறு செய்து கொண்டே தான் இருந்தனர். சில சீனியர் வீரர்களுக்கு உடல் ஒத்துழைத்தால், மனது தயாராக இல்லை. சிலநேரங்களில் மனது தயாராக இருந்தால், உடல் ஒத்துழைக்கவில்லை. மொத்தத்தில் இவர்கள் மனதளவில் பலகீனமாக இருந்தனர்.


பரூக் என்ஜினியர்: இங்கிலாந்து அணி அதன் சொந்தமண்ணில் வலுவானது. இவர்களை இந்திய வீரர்கள் குறைத்து மதிப்பிட்டனர். இத்தொடருக்கு போதிய அளவில் தயாராகவில்லை. கூடுதலான பயிற்சி போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும். அதிகளவில் சம்பளம் பெறும் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை.


அருண் லால்: இந்திய அணியில் இள ரத்தத்தை பாய்ச்ச வேண்டும். 35 அல்லது 38 வயதுள்ள வீரர்களை இன்னும் வைத்துக்கொண்டிருக்கக் கூடாது. இவர்களுக்கு பார்வைக் குறைபாடும் உள்ளது.


மனீந்தர் சிங்: சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோரை எப்போதும் பெறமுடியாது. 19வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு, டெஸ்ட் போட்டியின் மீதான ஆர்வத்தை, பி.சி.சி.ஐ., கொண்டு வர வேண்டும். இதன் மூலம் எதிர்கால வீரர்களை உருவாக்கலாம்

கலைஞர் "டிவி' சொத்து பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை தீவிரம்!

ஸ்பெக்ட்ரம் ஊழலில், கலைஞர் "டிவி'யுடன் நடந்த பணப் பரிமாற்றத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு, அமலாக்கத் துறை விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற, டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் உரிமையாளரான ஷாகித் பல்வாவும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றதற்கு கைமாறாக, டி.பி.ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினியுக் நிறுவனம், குசிகான் பழ நிறுவனம் வழியாக, கலைஞர் "டிவி' க்கு 214 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக, விசாரணை நடத்திய சி.பி.ஐ., கலைஞர் "டிவி' நிறுவனத்தில் சோதனை நடத்தியது.

வரி ஏய்ப்பு செய்து, சட்ட விரோத பண மாற்றம் செய்யும் நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் முதல், கலைஞர் "டிவி' வரையில் நடந்த பண பரிமாற்றத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில், இது தொடர்பான உத்தரவை, அமலாக்கத்துறை பிறப்பிக்க உள்ளது. இதையடுத்து, டி.பி.ரியாலிட்டி, சினியுக், குசிகான், கலைஞர் "டிவி', சொத்துக்களை பறிமுதல் செய்ய, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டு துவக்கம் சித்திரை மாதம் தான்!

சித்திரை 1ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ""பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டு துவக்கம் சித்திரை மாதம் தான். மக்கள் நம்பிக்கையை சட்டம் மூலம் மாற்றுவது சரியல்ல. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தை ரத்து செய்வதே சரி,'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை சட்டம்) 2008 நீக்கச் செய்யும் சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சித்திரை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவதற்காக, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று முந்தைய தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய, இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இம்மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மசோதாவை ஆதரித்து, செ.கு.தமிழரசன் பேசினார். எனினும், இந்த சட்டத்தின் மீது விவாதம் நடத்த வேண்டியிருப்பதால், இதை நிறைவேற்றாமல் நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின.

இது பற்றி முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும், தனக்கு மட்டுமே அக்கறை இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை, பொதுமக்கள் மத்தியில் உருவாக்க, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தமிழ்ப் புத்தாண்டு சட்டம் 2008ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டம், ஒரு சுய விளம்பரத்துக்காக ஏற்றப்பட்டதே தவிர, இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. மாறாக, ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வரும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இச்சட்டம் அமைந்துள்ளது.

தமிழர் காலக் கணிப்பு முறைப்படி, ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை முதலாவது மாதம். இது, சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. சூரியன், மேஷ ராசிக்குள் நுழைவதில் இருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம். ஆண்டின் துவக்கம் வசந்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், சித்திரை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டுள்ளனர். பல்லாண்டு காலமாக, சித்திரை முதல் நாளையே புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். சித்திரை மாதத்தில் புத்தாண்டு துவங்குவது என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. கோடைக் காலமே முதலாவது பருவம் என, "சீவக சிந்தாமணி'யில் வர்ணிக்கப்பட்டுள்ளது. பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டு துவக்கம் சித்திரை மாதம் தான். மேலும், பல்வேறு கல்வெட்டுகளும், எண்ணற்ற இலக்கியங்களும் சித்திரை முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டு துவங்குவதை உறுதிப்படுத்துகின்றன. தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், யாருக்கும் பயனளிக்காத, காலங்காலமாக போற்றி பாதுகாத்து வந்த மரபுகளை மீறும், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிற, இச்சட்டத்தை ரத்து செய்வது தான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு முதல்வர் கூறினார். இதன் பின், அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் கொண்டு வந்த சட்ட மசோதா, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது

தமிழர் பெருமை மீட்பு-விஸ்வ ஹிந்து பரிஷத்:தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை 1 என்று மாற்றியிருப்பதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் வரவேற்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வேதாந்தம் வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களின் பழம்பெருமை வாய்ந்த ஆன்மீகப் பாரம்பரியத்தையும் கலாசாரப் பெருமையையும் மீட்டுக் கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. சென்ற திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட தமிழர் விரோத சட்டமான, தமிழ்ப் புத்தாண்டு தினத்தை சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து தை மாதம் முதல் நாளுக்கு மாற்றியமைத்த புதிய தமிழ்ப் புத்தாண்டு சட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை முதல் நாளுக்கு மாற்றி சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டதை வரவேற்கிறோம்.

மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பேசிய முதல்வர், தமிழ் மக்களின் பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் மகோன்னதத்தையும், தமிழர்களின் பழம்பெருமை வாய்ந்த காலக் கணிப்பின் சிறப்பையும் கூறியதோடு, வானியல் நூல்களையும் சங்க இலக்கியங்களையும் மேற்கோள் காட்டி தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதப் பிறப்பில் கொண்டாடப்படுவதே சிறப்பானது, முறையானது என்பதையும் வெகு அழகாக விளக்கிக் கூறியுள்ளார்.

மேலும் சுய விளம்பரத்திற்காக நிறைவேற்றப்பட்ட திமுக அரசின் சட்டமானது தமிழ் மக்களின் ஆன்மீக மற்றும் கலாசார உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டி, ஆதீன கர்த்தர்கள், தமிழ்ப் பண்டிதர்கள், வானியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்துக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க இந்த சட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாக எடுத்துரைத்தது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.

குடிநீர் வசதியில்லாத அரசுப் பள்ளிகள் - 4,085, கழிவறைகள் இல்லாத அரசுப் பள்ளிகள் - 2,248


அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் தேவைப்படும் அரசுப் பள்ளிகள் குறித்து, தமிழக அரசு கணக்கெடுத்துள்ளது. அதன்படி, 4,085 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என்றும், 2,248 பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்த குறைகளை போக்க, இந்த கல்வியாண்டிலேயே நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வித்துறை செய்முறைத் திட்டம் மற்றும் புள்ளிவிவர கையேடு, சட்டசபையில் நேற்று உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. அதில், தமிழகத்தின் கல்வி நிலையை விளக்கும் வகையில், பல்வேறு புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் விவரம்:
* நடப்பாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை-7 கோடியே 21 லட்சம்.
* மாநிலத்தின் எழுத்தறிவு சதவீதம் - 80.33 (ஆண்கள் - 86.81, பெண்கள் - 76.86)
* கன்னியாகுமரி மாவட்டம், 92.14 சதவீதம் எழுத்தறிவு பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடம் சென்னைக்கு (90.33%) கிடைத்துள்ளது.
* 64.71 சதவீதத்துடன், தர்மபுரி மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இடங்களில், முறையே அரியலூர் (71.99%), விழுப்புரம் (72.08%) மாவட்டங்கள் உள்ளன.
* தொடக்கப்பள்ளிகள் 34 ஆயிரத்து 226, நடுநிலைப்பள்ளிகள் 10 ஆயிரத்து 614, உயர்நிலைப் பள்ளிகள் 4,557, மேல்நிலைப் பள்ளிகள் 5,560 என மொத்தம், 54 ஆயிரத்து 957 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தொடக்க கல்வித்துறையில், 54 லட்சத்து, 98 ஆயிரத்து 419 மாணவர்களும், பள்ளிக் கல்வித்துறையின் கீழ், 81 லட்சத்து 22 ஆயிரத்து 678 மாணவ, மாணவியரும் படிக்கின்றனர்.
* 31 ஆயிரத்து 816 அரசு பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் உள்ளன என்றும், 3,979 பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன என்றும், அரசு தெரிவித்துள்ளது. 16 ஆயிரத்து 75 வகுப்பறைகள் கூடுதலாக தேவைப்படுகின்றன. இதில், 4,444 வகுப்பறைகள், நடப்பு கல்வியாண்டில் கட்டப்பட உள்ளன.
* 14 ஆயிரத்து 836 பள்ளிகளில் தளவாட சாமான்கள் முழுமையாக உள்ளன. 14 ஆயிரத்து 16 பள்ளிகளில், ஓரளவுக்கு உள்ளன. 6,943 பள்ளிகளில், தளவாட சாமான்களே இல்லை என்றும் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 2,248 பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை.
* 1,510 பள்ளிகளில் குடிநீர் வசதி, பயன்பாட்டில் இல்லை.
இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, நடப்பு கல்வியாண்டில் 1,820 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தை முதல் நாள்தான் தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு கருணாநிதி!

தை முதல் நாள்தான் தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள். அந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திடுவோம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க. வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தது முதல் திமுக ஆட்சியில் நிறைவேற்றபட்ட முக்கிய திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஓமந்தூரார் வளாகத்தில் 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடம் தரமாக இல்லை என்று கூறி, அதில் செயல்படமாட்டோம் என்றனர். இப்போது அந்தக் கட்டடத்தில் மருத்துவமனை அமைக்கப் போகிறோம் என்கின்றனர்.சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் கூறியதையெல்லாம் கேளாமல் செயல்பட்டு, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் குட்டுப்பட்டுக் கொண்டனர்.அதனால் கோபமடைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றொரு நடவடிக்கையாக சித்திரை மாதம் முதல் தேதிக்கு தமிழ்ப் புத்தாண்டை மாற்றிட பேரவையில் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார்.
23.1.2008 அன்று பேரவையில் ஆளுநர் தனது உரையில், திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பதாகும். இது எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால் தை திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்கிறது.
எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழக மக்கள், தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைந்து இனி இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர் என்று அறிவித்தார்.இந்த அறிவிப்புக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன், வைரமுத்து போன்றோர் பாராட்டினர். ஆளுநர் உரையைத் தொடர்ந்து 29.1.2008 அன்று தமிழ்ப் புத்தாண்டு சட்ட முன் வடிவை பேரவையில் நான் அறிமுகம் செய்தேன்.
இந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.எஸ்.எஸ்.ராமன், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.நன்மாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை.சிவ புண்ணியம், மதிமுக சார்பில் மு.கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள்  சார்பில் கு.செல்வம் ஆகியோர் வரவேற்று பேசி அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இப்படியெல்லாம் போற்றப்பட்டு 2008 -ம் ஆண்டு தை முதல் நாளே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு முடிவு கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை பா.ஜ.க. அவசரம் அவசரமாக வரவேற்றுள்ளது. அதிலிருந்தே இந்தத் தீர்மானத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும்,  பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் கண்டித்திருக்கின்றனர். அவர்களுக்கு நான் நன்றியினை தெரிவிக்கிறேன். பேரவையில் ஜெயலலிதா பேசும்போது, நாங்கள் எதைச் செய்தாலும், அதைச் சீரழிப்பதே தி.மு.க.வின் வேலை என்று சொல்லியிருக்கிறார். அது தவறு. தி.மு.க. எதைச் செய்திருந்தாலும், அதைச் சீரழிப்பதுதான் அ.தி.மு.க.வின் வேலை என்பதே சரியாகும். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். நம்பைப் பொறுத்தவரையில் தை திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள். அன்றைய தினம் தமிழர்களாக பிறந்த மக்களுக்கு ஓர் இனிய விழா. அந்த நாளை உவகைப் பொங்கிட கொண்டாடி மகிழ்ந்திடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

இவனுக கைல மாட்டி நம்ம புத்தாண்டு பாவம் படாத பாடு... 

அண்ணா ஹசாரேவுக்கு ஏதாவது ஆனால் அரசே பொறுப்பு கெஜ்ரிவால்!

9வது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரேவின் உடல்நிலை சற்று மோசமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. அவ்விதம் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு மத்திய அரசே முழுப் பொறுப்பு என்று அண்ணா ஹசாரே குழுவில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், நாளையே பாராளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆனால், உடனே அண்ணா ஹசாரே தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுவிடுவார் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர், அண்ணா ஹசாரேவின் உடல்நிலை குறித்து தாம் மிகவும் கவலை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், உண்மையிலேயே பிரதமருக்கு அண்ணாவின் உடல்நிலை குறித்து கவலை இருக்குமானால், அவர் அண்ணா ஹசாரே விடுக்கும் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதனிடையே இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஒன்றாக ஒரே கருத்தில் இருப்பதால், அரசு உடனடியாக தங்கள் தரப்பு முன்வைத்துள்ள லோக்பால் மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

ஒவ்வொரு நாட்டில் இருந்தும் பொருட்களை ஏற்றுமதி செய்ராங்களாம்! ஆனால் இந்தியாவில் இருந்து மட்டும் மனிதர்களை???


ஒரு அழகிய விளம்பரம்! பெண்ணை நம்பாதே!!


ஒரு விமானம் தறை இறங்கியது ஆனால்...?


நம்ம ஊர் வாண்டு!


கண்முன்னே மரணம் பவம் அவர் என்ன பாவம் செஞ்சார்!


எந்த திறமைனாலும் நம்மள அடிச்சுக்க ஆளே இல்லீங்க!


நம்ம இந்தியாவ இது! இந்திய ஒளிர்கிறது யாருக்கு ? யாருக்கோ !!


அழுகுணி ஆட்டம் !


குறும்பு வீடியோ !


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...