மெரிக்கா: தனது மனைவியின் பிரசவத்தின்போது எடுக்ப்பட்ட படம் ஒன்றை
அவரது கணவர் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது மகள்
பிறந்தபோது, பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை இறுகப் பற்றியபடி வெளியே
வந்ததே இந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.
இந்தப் புகைப்படம் இப்போது இன்டர்நெட்டில் படு வேகமாகப் பரவி வருகிறதாம்.
அமெரிக்காவின் அரிசோனா, கிளான்டெல் பகுதியைச் சேர்ந்தவர் அலிசியா
அட்கின்ஸ். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பிரசவம் நடந்தது. அழகிய
மகளைப் பெற்றெடுத்தார். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை டாக்டர்கள்
வெளியே எடுத்தனர். நெவியா என்று குழந்தைக்குப் பெயரிட்டனர்.
பிரசவத்தின்போது அலிசியாவின் கணவர் ராண்டியும் உடன் இருந்தார் - கையில்
கேமராவுடன்.மனைவிக்குப் பிரசவம் நடப்பதை அவர் வீடியோவில் பதிவு செய்து
கொண்டார். அப்போது திடீரென ஒரு டாக்டர், ராண்டியைப் பார்த்து, உங்களது மகள்
எனது விரலைப் பிடிக்கிறாள் பாருங்கள் என்று கூற திரும்பிப் பார்த்தார்
ராண்டி. என்ன ஆச்சரியம், அம்மாவிடமிருந்து வெளியே வர ஆரம்பித்துக்
கொண்டிருந்த ராண்டியின் மகள், பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை படு அழகாக,
இறுக்கமாக பிடித்தபடி வெளியே வந்து கொண்டிருந்தாள். இந்த் காட்சியைக் கண்டு
வியந்து போன ராண்டி உடனே அதை படமாக எடுத்தார்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
03 January, 2013
வாழ்க நீ பல்லாண்டு...
வாழ்க்கை என்னும் வட்டத்தில்
எவர் போனாலும் எவர் வந்தாலும்,
மரிக்கொளுந்தின் வாசனைபோல்
மனம் வீசி பறந்திடுவாய்,
வட்டம் சதுரமாகும், சதுரமும் வட்டமாகும்.
நிலையில்லா பிறப்பினுள் எரிமலை குழம்பில்
எரியாத கற்பூரம் நீ!
உள்ளத்தில் வெள்ளம் நீ
வெள்ளை உள்ளம் நீ
நீ இருக்கும் இடத்தில் அன்பு நிறைந்திருக்கும்!
உன் அன்பை வேண்டாதார் அறிவுப் பிளையோடும்,
அறிவியல் பிளையோடும் பிறந்துருப்பார்.
கறந்த பாலின் தூய்மையே, எதனுடன் சேர்ந்தாலும்
சேர்ந்த இடத்தில் அன்பால் நிறைத்திருக்கும் இனிக்கும் கற்கண்டே,
வாழ்க நீ பல்லாண்டு...
காலம் மாறிவிட்டது!
முன்பெல்லாம் இங்கே பள்ளிக்கூடம் இருக்கிறது பார்த்து செல்லவும். இங்கே ஆஸ்பத்திரி
இருக்கிறது ஹார்ன் அடிக்காமல் வாகனத்தை செலுத்தவும் என்பது போன்ற போர்டுகள்
தான் மக்கள் பார்க்கும் படியாக வைப்பார்கள்.ஆனால் இப்போது அப்படியில்லை. நிலைமை மாறிவிட்டது. குடித்து விட்டு வண்டி
ஓட்டக்கூடாது என்று சொல்வதை நம்பி யாரும் குடிக்காமல் போய்விடப்போகிறார்களே
என்ற ‘அக்கறையுடன்’, ஓட்டுனர்கள் பார்க்கும்படியாக நடுரோட்டில்
வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் விளம்பரம்!
Subscribe to:
Posts (Atom)