|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2012

halloween வரை பொறுப்போம்.

தாண்டவம் போகலாம்னு சொன்ன hotel transylvania கூட்டிட்டு போற! மாற்றான் பார்க்கலாம்ன  Sinister, பார்த்தோம், இப்ப அடுத்த படம் Silent Hill  கூட்டிட்டு போறிய இல்ல பிரெண்ட்டோட போகட்டான்னு கேட்குற? ஏன் இப்படி கொலைவெறி எடுத்து பேய் படமா பார்க்குறான்னு தெரியல? சரி halloween வரை பொறுப்போம்.  

அடப்பாவிங்களா?

மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை என்ற பட்டத்தை அளிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம், அடப்பாவிங்களா? உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பராஷார், காந்தியைப் பற்றியும், அவரை தேசத் தந்தை என அழைக்கப்படுவதற்கான காரணம் குறித்தும் விவரங்களைத் தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், "மகாத்மா காந்திக்கு அதுபோன்ற பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து "மகாத்மாவை தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா கடிதம் எழுதினார்.


பின்னர் தனது கோரிக்கை மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு அளித்தார்.அந்த மனு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:மகாத்மா காந்தியை தேசத் தந்தை என குடியரசுத் தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும் ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை அளிக்க முடியும்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சூப் ஓன்று சுப்’ பாகிப்போனதேன்?

ஆட்டுக்கால் சூப் இங்கே ஆட்கல் சுப் என்றாகியுள்ளது.சூப் போடுவதற்காக எடுக்கப்பட்ட ஆட்டின் காலில் மிஞ்சிய பகுதியை என்ன செய்வது என்று தெரியாமல் ஆ பக்கத்தில் போட்டுவிட்டார்கள் போலும்,அப்ப கால் என்ற வார்த்தைக்கு வரவேண்டிய துணைக்கால் இல்லாமல் கல் என்று இருக்கிறதே அதற்கு காரணம்,அந்த காலில்தான் முதல் நாள் சூப் போட்டு இருப்பார்களோ!! அது சரி சூப் ஏன்? சுப் என்றாகியிருக்கிறது ,சரியில்லை என்றால் சப் என்றுதானே சூப் மாறும், இங்கே சுப் என்று ஏன் மாறியதோ தெரியவில்லை?

பூமாலை தொடங்கி ஐபிஎல் டீம் வரை...

வீடியோ பத்திரிக்கை பூமாலை  மாறன் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன் சகோதரர்கள் 18 வருடங்களுக்கு முன்பு பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்தனர். அதில் சினிமா செய்திகள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகை பேட்டிகள் போன்றவைகளையும் திரைப்பட பூஜை போன்றவைகள் இடம்பெற்றன. இருந்தாலும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
சன் டிவி! தூர்தர்சன் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து தொடங்கப்பட்டது சன் டிவி. இந்த வேரிலிருந்து கிட்டத்தட்ட கேடிவி,சன்நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா என தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் 30 சேனல்களை வரை தன் கைவசம் வைத்துள்ளது சன் குழுமம்.
பண்பலை வானொலி  சூரியன் எப்.எம் என்ற பண்பலை வானொலியை தொடங்கி பல்வேறு இந்திய மொழிகளில் ஒலிபரப்புகிறது.
பத்திரிக்கை துறையில் சன் குழுமம்  தினகரன் என்ற காலை நாளிதழும், தமிழ்முரசு என்ற மாலை நாளிதழும் சன் குழுமத்தின் வசம்.  குங்குமம் வார இதழ் சன் குழுமத்திடம் இருந்து வெளியாகும் வார இதழாகும்.
எஸ்.சி.வி, சன் டைரக்ட்  ‘எஸ்.சி.வி' எனப்படும் சுமங்கலி கேபிள் விசனை கையில் வைத்துள்ள சன் குழுமம் இல்லங்களில் நேரடியாக தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ‘சன் டைரக்ட்' என்ற டிடிஎச் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவையை 2005ம் ஆண்டு முதல் தொடங்கியது.
திரைப்படத்துறையில் சன் குழுமம்  ஊடகத்துறையில் கோலோச்சிய சன் குழுமம் திரைப்படத்துறையில் சன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களை விநியோகம் செய்தது முதன் முறையாக ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தை தயாரித்தது.
ஸ்பைஸ் ஜெட் விமானசேவை  ஊடகத்துறையில் மட்டுமே கோலோச்சிய சன் குழுமம் 2010ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் என்ற விமான நிறுவனத்தை வாங்கியது. அதுவரை உள்ளூரில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் முதன் முறையாக டில்லியில் இருந்து காட்மண்டுவுக்கு இயக்கப்பட்டது.
விளையாட்டுத்துறையில்  பெரும்பாலான சேனல்களை கைவசம் வைத்திருக்கும் சன் குழுமம்  முதன் முறையாக ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய ஐ.பி.எல் அணி deccan chargers யை வாங்கியுள்ளது.

கலாநிதி மாறனின் நிர்வாகம்  32 சேனல்கள், 45 எப்.எம் ரேடியோ, நாளிதழ், வார இதழ் என ஊடகத்துறையில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்வதற்கு சன்குழுமத்தின் நிறுவனர் கலாநிதிமாறன் நிர்வாகத்திறமையே சான்று என்கின்றனர் நீண்ட நாட்களாக சன் குழுமத்தை சேர்ந்தவர்கள். 

We Know About Caffeine in Energy Drinks Like Monster, But What About the Other Ingredients?



பார்த்ததில் பிடித்தது



  • Anbu Raja shared Pakkir Kani's status update.


    காவல் நிலையத்தில் வைத்து நான்கு இருளர் இன பெண்கள் கற்பழிக்கப்பட்டபோது பேசப்படாத பெண்ணியம்,இன்று பாடகி சின்மயிக்காக பேசப்படுகிறது.சட்டமும் சரி சமூகமும் சரி ஒருவருக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பார்ப்பதில்லை,அவர் யார் என்பதைத்தான் பார்க்கின்றன.


    சுயசிந்தனையை முடக்குபவை எவை??

    ஒவ்வொரு மனிதனும் சுயமாக சிந்திக்கவும், சிந்தனைகளைச் செயல்படுத்தவும் ஆற்றல் படைத்தவன். எனினும், பெரும்பான்மை மக்கள் தங்களது சிந்தனைத் திறனைப் பல முக்கியமான விஷயங்களில் பயன்படுத்துவதில்லை. தங்களால் ஆய்வுக்கு உட்படுத்தாத கடவுள், மதம் போன்ற விஷயங்கள் தங்களது வாழ்வை வெகுவாகப் பாதிப்பதை உணராமலிருக்கிறார்கள். அதன் காரணமாக, மக்கள் மனங்களில்

    மூடநம்பிக்கைகள் ஆட்சி செய்கின்றன.
    அறிவிற்குப் பொருந்தாத பல சடங்குகள், சம்பிரதாயங்கள் மனித சமுதாயத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. மதிப்புமிக்க மனித சக்தியும், இயற்கைச் செல்வங்களும் வீணடிக்கப்படுகின்றன.

    அர்த்தமற்ற இலக்குகளுக்கான மக்கள் வாழ்வு பாழாகின்றது. ஆகவே, இது மனித சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்களுடைய சிந்தனைத் திறனை முடக்கும் காரணிகளைக் கண்டறிவோம்.

    பொதுவாக மக்கள் காலங்காலமாக நிலவிவரும் நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து பிரச்சனைகளின்றி வாழவே விரும்புகிறார்கள். தங்களுக்குப் பழக்கமான பழைய பாதைகளே ஆபத்தற்றவை என்று நினைக்கிறார்கள். அவற்றையே பின்பற்றுகிறார்கள். எவற்றிலும் மாற்றங்கள் செய்யப் பயப்படுகிறார்கள். இம்மனநிலை சுயசிந்தனையை முடக்கும் ஒரு சக்தியாக இருக்கிறது.

    சுயசிந்தனையை முடக்கும் மற்றொரு சக்தியாக சம்பிரதாயங்கள் இருக்கின்றன. எவ்வாறெனில், தனி நபர்கள் பல்வேறு நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் குடும்ப அங்கத்தினர்களிடமிருந்தும், சுற்றுப்புற மக்களிடமிருந்தும் கிரகித்துக் கொள்கிறார்கள். அவர்கள் காலப்போக்கில் பல விழுமியங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் பாதுகாவலர்களாக மாறிவிடுகிறார்கள். அச்சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும் மனிதர்களை மனதளவில் அடிமைகளாக்கி விடுகின்றன. ஆய்வு மனப்பான்மையை மழுங்கடித்து விடுகின்றன.

    நவீன போக்குவரத்து வசதிகளும், தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்து கொள்ளும் நல்வாய்ப்பை மக்களுக்கு அளிக்கின்றன. ஊடகங்களின், இணையத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. இத்துடன் இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். மேலும், தற்சமயம் அதிகமான மக்கள் தொகையினர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். மாறுபட்ட கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்களுடன் பழகி வாழ்கிறார்கள். இவை மக்கள் மனதில் நல்ல மாற்றங்களை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட நல்ல மனமாற்றங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உலகில் ஏற்படவில்லை. பழமையைக் கட்டிக் காக்கும் மனநிலைதான் பரவலாகி மேலோங்கி நிற்கிறது. முன்னோர்களிடமிருந்து சுவீகரித்த பல்வேறு நம்பிக்கைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் அடிமைகளாக இருக்கிறார்கள்.

    இப்பழமை காக்கும் மனநிலை பரவலாக நிலவக் காரணங்கள் எவை? இதுபற்றி ஆராய்ந்தால், சமூகப் பிணைப்பு ஒரு காரணமாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறு கூட்டத்தின் அங்கத்தி னராக அடையாளப்படுத்திக் கொள் கிறான். அதன்மூலம் சமூகப் பாதுகாப்பை உணர்கிறான். சக சமூக அங்கத்தினர் களுடன் நட்புடன் உறவு கொண்டிருக்க விரும்புகிறான். அந்த உணர்வு மனிதனை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து விடுகிறது. சக மனிதர்கள் விரும்பாத காரியத்தைச் செய்யும் தைரியத்தை இழந்து விடுகிறான். 
    நண்பன் வார்த்தை மாறுவதில்லை சந்தோசத்திலும் சரி துக்கத்திலும் சரி!

உப்புக்கு சயனைடா?


பஞ்சம ஜாதியினர்  தீண்டத்தகாதவர்கள் : மற்றவர்களை சார்ந்து வாழ்பவர்கள் (ஒட்டுண்ணிகள்)

சூத்திரர்கள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்துக்காகவும் வாழ்பவர்கள்.

வைசியர்கள் வணிகம் மூலம் தங்களுக்காகவும், தங்களோடு வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபத்தை ஏற்படுத்துபவர்கள்.

சத்திரியர்கள் தமக்கு கீழ் இருப்பவர்கள் சாப்பிட்டதற்கு பிறகு சாப்பிடுபவர்கள்.

பிராமணர்கள் தாங்கள் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு கற்பிப்பவர்கள்”

இந்த கருத்தை ட்விட்டரில் ரீட்விட் செய்து வழிமொழிந்ததின் மூலம் தன்னுடைய சமூகப்பார்வையை அகிலத்துக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் சகோதரி சின்மயி. அவரது அறிக்கைகளிலேயே தொடர்ச்சியாக அவரது சமூகம் குறித்த பெருமையை நாம் கண்டு பெருமிதப்பட்டுக்கொள்ள முடிகிறது.

23 October, 2012

பூஜை என்ற அடைமொழி சரஸ்வதி பூஜைக்கு தான்.

 சரஸ்வதி பூஜை நடத்த நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும்.  படத்தின் முன் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.  

சரஸ்வதிபூஜை - அர்த்த்ம்: பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.  

சாமுண்டிதேவி: நவராத்திரியில் ஒன்பதாவது நாள் தேவியானவள் சாமுண்டி மாதா என அழைக்கப்படுகிறாள். இந்த நாள் தேவிக்கு மிகவும் சிறப்பு தரும் நாளாகும். சப்தமாதர்களுள் ஒருத்திதான் சாமுண்டி. துர்க்கா தேவி மகிஷனை வதம் செய்யப் போகும் போது அவளை எதிர்த்து சண்டையிட மகிஷனின் அமைச்சர்களாகிய சண்டன், முண்டன் வந்தனர். துர்க்காதேவி தன் அம்சமான சாமுண்டி தேவியை அனுப்பி சண்டனையும் முண்டனையும் அழிக்குமாறு பணித்தாள். அசுரனின் அமைச்சர்கள் இருவரையும் வீழ்த்தியதால் அதாவது சண்ட முண்ட வதம் செய்ததால் சாமுண்டி என அவள் அழைக்கப்பட்டாள். சாமுண்டி தேவியை வழிபடுவது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் வழக்கம். நாகை மாவட்டத்தில் பூவனுர் என்ற ஊரில் சாமுண்டிக்கு தனிச் சன்னதி உண்டு. சில சிவாலயங்களில் சப்தமாதர்கள் வரிசையில் சாமுண்டியின் திருவுருவம் இருக்கும். நான்கு கைகளும், மூன்று கண்களும், கோரைப் பற்களும், உக்ரமான திருமுகமும் உடைய நிலையில் இவள் உருவம் இருக்கும். புலித்தோலை ஆடையாக அணிந்திருப்பாள். கத்தி, சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியிருக்கும் இவளுடைய மற்றொரு கை அபய ஹஸ்தமாக இருக்கும். சிறிய மணிகளால் ஆகிய மாலை தாங்கியிருப்பாள். சாமுண்டி தேவியை வழிபடுவதால் ஏவல், பின்னி, சூன்யம் வைப்பு முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும். பகை, அர்த்தமற்ற அச்சம் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நவராத்திரி ஒன்பதாம் ஆலயங்களில் உள்ள சப்தமாதர் வரிசையில் கொலுவிருக்கும் சாமுண்டி தேவியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் தேடி வரும்.

நடவடிக்கையை நிறுத்துமாறு உத்தரவிடுங்கள்.


கள்ளநோட்டை கண்டறிவதற்காக வாடிக்கையாளரிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தவிட்டுள்ளது. கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில கடைகள், வணிக நிறுவனங்களுக்கு செலுத்தும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் எண்களை எழுதி கையெழுத்திடுமாறு வாடிக்கையாளர்களை வற்புறுத்தினர். சிலர் பணத்தை வாங்க மறுத்தனர். இதனால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இது ரிசர்வ் வங்கி ஆலோசனைக்கு சென்றதும் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பது குற்றம் என அறிவித்தனர்.கள்ள நோட்டை புழக்கத்தை கண்டறிவதற்காக வாடிக்கையாளர்களிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை நிறுத்துமாறு வங்கிகள், அரசு துறைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறித்தியுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கையெழுத்து பெறும் நிலை இன்னும் நீடிக்கிறது.
இது குறித்து நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து அவர் கடிதத்தில் குறிப்பிட்ட வங்கி, காப்பீ்ட்டு, மின்வாரிய அலுவலகங்களுக்கு ரிசர்வ் வங்கி பொது மேலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ரூ.1000, ரூ.500 நோட்டுகளின் எண்களை எழுதி வாங்கி கையெழுத்திடுமாறு உங்கள் வங்கி கிளையில் கூறுவதாக புகார் வந்துள்ளது. இது குறித்த உங்கள் அலுவலகத்தில் இருந்து குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என எங்களுக்கு தெரிவிக்கவும். இல்லாவிட்டால் உங்கள் கிளைகளுக்கு இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு உத்தரவிடுங்கள். அதிக அளவில் பணம் பெறும் கிளைகளில் கள்ள நோட்டை கண்டறியும் புற ஊதா கதிர் விளக்குகளையோ வேறு அங்கீகரிக்கப்பட்ட எந்திரங்களையோ நிறுவுங்கள் என அறிவுறுத்தியுள்ளது.

22 October, 2012

Their Last Journey - Cattle trafficking to Kerala.


ஒரே குட்டை, அதே மட்டை!


ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவர் கேஜரிவால் முதலில் காங்கிரஸ் கட்சியினரின் ஊழலை அம்பலப்படுத்தியபோது பாரதீய ஜனதாவுக்குக் கொண்டாட்டமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியினரும் கேஜரிவாலை "பாஜகவின் நீட்சி" என்று கிண்டலடித்தார்கள்.இப்போது பாஜக தலைவர் நிதின் கட்கரி மீது ஊழல் புகார் சொல்லும்போது காங்கிரஸýக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. கேஜரிவால் பொய் சொல்கிறார் என்கிறார்கள் பாஜகவினர். அஞ்சலி தமானியா தனது சொந்த நிலப்பிரச்னை காரணமாகக் கட்கரியைத் தாக்குகிறார் என்கிறார்கள்.மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை முறைகேடு பற்றிய குற்றச்சாட்டை எதிர்த்து அமைச்சருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி நின்றது. அதே வேலையைத்தான் இப்போது பாஜக-வும் செய்கிறது. கட்கரிக்கு ஆதரவாக நிற்கிறது. கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவுக்கும் பாஜக பக்கபலமாகத்தான் நிற்கிறது.
வேளாண் பணிக்காக மகாராஷ்டிர அரசு கையகப்படுத்திய நிலத்தை, பயன்படுத்தாத நிலையில் விவசாயிகளிடம் திரும்பக் கொடுக்காமல், கட்கரிக்கு விற்கப்பட்டது என்கின்ற குற்றச்சாட்டுக்கு, அது ஒரு அறக்கட்டளை என்கிறார் கட்கரி.இதைப்போலத்தானே, அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் கூறுகிறார். அறக்கட்டளையின் ஒரே ஒரு நிகழ்ச்சிப் படத்தைக் காட்டி, தான் மாற்றுத் திறனாளிக்கு நன்மை செய்துவிட்டதாக "நிரூபித்தார்'. அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. "என் தொகுதியில் வந்து எனக்கு எதிராகப் பேசிவிட்டு உன்னால் பத்திரமாகத் திரும்பிப் போக முடியுமா?' என்று சவால் விடுத்தாரே, அது அவர் வகிக்கும் சட்டத்துறை பதவிக்கே களங்கம் என்று விவரம் தெரிந்த, படித்த சல்மான் குர்ஷித்துக்கு ஏன் புரியவில்லை? இந்தப் பகிரங்கமான மிரட்டலுக்காக அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றால் அவர் சட்ட அமைச்சராக இருக்கிறார். அவரைக் கட்சித் தலைமை ஏற்றுக்கொள்கிறது. பிரதமர் அமைதி காக்கிறார். மக்களாட்சியின் மகத்துவங்களில் இதுவும் ஒன்று என்று நாம் சமாதானப்படுவதா, என்ன?
குர்ஷித்துக்கு ஆதரவாகப் பேசிய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா, "ஒரு மத்திய அமைச்சர் வெறும் 71 லட்ச ரூபாய்க்கா ஊழல் செய்வார்?' என்கிறார். என்ன அசட்டுத்தனமான வாதம் இது? அமைச்சர்கள் என்றால் பல்லாயிரம் கோடிகளில்தான் ஊழல் செய்ய வேண்டும் என்று இவர்கள் தங்களுக்குத் தாங்களே முடிவு செய்து விட்டார்களா என்ன? மக்களாட்சியின் மகத்துவங்களில் இதுவும் ஒன்று என்று நாம் சமாதானப்படுவதா, என்ன? ராபர்ட் வதேரா - டிஎல்எப் இடையிலான முறைகேட்டை விசாரிக்கத் தொடங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி உடனடியாக வேறு துறைக்கு மாற்றப்படுகிறார். தான் 20 வருடங்களில் 43 இடமாறுதல்கள் பெற்றதை அவர் குறிப்பிட்டால், ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கிறார் என்பதற்காக அவர் மீது அரசு கோபம் கொண்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. ஆட்சியாளர்களுக்கு ஆமாம் சாமி போட மறுத்தால் அந்த அதிகாரி மாற்றப்படும் அவலம். மக்களாட்சியின் மகத்துவங்களில் இதுவும் ஒன்று என்று நாம் சமாதானப்படுவதா, என்ன?
ராபர்ட் வதேராயின் முறைகேடுகள் குறித்துக் காங்கிரஸ் தலைமை மெüனம் காக்கிறது. சட்டப்படி எந்தத் தப்பும் நிகழவில்லை என்று அவருக்கு சில அமைச்சர்களே வக்காலத்து வாங்குகிறார்கள். தனது மாமனார் பண்டித நேருவுக்கு எதிராக முந்த்ரா ஊழலை எழுப்பிய ஃபெரோஸ் காந்தி "அந்தக் காலத்து மருமகன்'. காங்கிரஸ் ஆட்சியைப் பயன்படுத்தி, பெரும் செல்வம் சேர்க்கும் ராபர்ட் வதேரா "இந்தக் காலத்து மருமகன்'. இதையும் மக்களாட்சியின் மகத்துவங்களில் ஒன்று என்று நாம் சமாதானப்படுவதா, என்ன?ஊழல்களை 1993-லிருந்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்கள். அலைக்கற்றை ஊழலை தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து விசாரிக்கத் தொடங்க வேண்டும் என்கிறார்கள். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பதுபோல, சர்வகட்சிக் கொள்கையாக "ஊழலும் முறைகேடுகளும்' மாறிவிட்ட நிலைமைதான் காணப்படுகிறது. சல்மான் குர்ஷித்களும், நிதின் கட்கரிகளும் தேசிய அளவிலான அடையாளங்கள். மாநிலக் கட்சிகளிலும் சரி, ஒன்றுகூட விதிவிலக்காக இருப்பதாகத் தெரியவில்லை.
எல்லா அரசியல் கட்சிகளும், சிறிதும் பெரிதுமாக, அவரவர் சக்திக்கு ஏற்ப மத்தியில் ஆளும் கட்சிகளிடம் பலன் அடைந்தவர்கள்தாம். இதில் யாருமே விதிவிலக்கல்ல. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, தனிப்பட்ட முறையில் பலன் அடைந்தவர்களும் நிறையப் பேர்.இவர்கள் அனைவருமே ஒரு விஷயத்தில் பேசி வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தால், மறுக்கிறார்கள்: "ஆதாரமற்ற பொய்க்குற்றச்சாட்டு" என்கிறார்கள். ஆதாரத்தைச் சொன்னால், நிரூபிக்க முடியுமா? என்கிறார்கள். இவர்கள் பேச்சை நம்பி, நிரூபிக்கத் தயார் என்று சொன்னால், நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுக்கலாமே என்கிறார்கள். நீதிமன்றத்துக்கு போனால், 2ஜி வழக்குபோல, வெட்டி வேலையாக இழுத்தடிக்கப்படுகிறதே தவிர, முடிவதாகத் தெரியவில்லை. இதையும் மக்களாட்சியின் மகத்துவங்களில் ஒன்று என்று நாம் சமாதானப்படுவதா, என்ன?
ஏன் மகாத்மா காந்தி ஒரு தொழிலதிபராக இல்லை? ஏன் அவர் தனது குழந்தைகளை அரசியலுக்குக் கொண்டுவரவில்லை? ஏன் தனது மருமகன்களையாகிலும் தொழிலதிபர்களாக மாற்றவில்லை? நாடு விடுதலை பெற்றதும் ஏன் அவர் எந்தப் பதவியையும் ஏற்கவில்லை? பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் அடிப்படைத் தகுதிகள் உண்மை, நேர்மை, எளிமை என்று ஏன் வாழ்ந்து காட்டினர் என்றெல்லாம் புரியாதவர்கள் புரிந்து கொள்க--இந்தியா விடுதலைபெற்ற நள்ளிரவில், காந்தி ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார் என்று எழுதியுள்ளனர் "ஃப்ரிடம் அட் மிட்நைட்' நூலாசிரியர்கள்.அந்த நள்ளிரவில் விழித்துக்கொண்டிருந்தவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே! அன்று முதல் இன்றுவரை அப்படியே இருக்கிறார்கள். மாறவே இல்லை!

21 October, 2012

எங்கோ போகிறோம்?


மீபத்தில் சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் என் மனதை வதைப்படுத்திக் கொண்டிருக்கிறது.எனக்குத் தெரிந்த ஆசிரியை ஒருவர் ஒன்பதாம் வகுப்புக்குப் பாடம் எடுக்கிறார். அவரது வகுப்பில் படிக்கும் மாணவியின் தாய் அவரிடம்  வந்து " மேடம்.. நேத்து எம்பொண்ணு ரோட்ல வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்திருக்கா. கூட போன பொண்ணக் கூப்பிட்டு விசாரிங்க. அவதான் ஏதாச்சும்  வாங்கி குடுத்துருக்கணும்." என்று அந்தத் தாய் கூற, ஆசிரியை உடனே சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து விசாரித்ததில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வந்து விழுந்திருக்கிறது. இரண்டு மாணவிகளும் மது அருந்தியிருக்கின்றனர்!இது பல நாட்களாக நடந்து வந்திருக்கிறது.எட்டாவது படிக்கும் மாணவர்களிடம் பணத்தைக் கொடுத்து அரசு மதுபானக்கடையில் மது வாங்கி, அருந்தி இருக்கின்றனர். மதுபானத்தில் அந்த சிறுவர்களுக்கும் பங்கு வேறு! இருவரையும் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று விசாரித்ததில் இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வரவே, அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவிகளின் பைகளை சோதனை செய்துள்ளனர்.அவர்களின் பைகளில் என்ன இருந்தது தெரியுமா?

பான்பராக், சிம் கார்டு, கைப்பேசி, ஹான்ஸ் போன்றவை. தினமும் ஒரு மாணவி வீட்டிற்குத் தெரியாமல் கைப்பேசியை எடுத்துவர, சிம் கார்டுகளை மாற்றித் தங்கள் ஆண் நண்பர்களிடம் பேசுகின்றனராம்.நீங்க இவர்களை கண்டிக்க மாட்டீர்களா டீச்சர் என்று நான் கேட்டதற்கு, "இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும். நானே இந்தப் புள்ளைங்களை ராத்திரி கடைத்தெருவுல யூனிபாம்லயே பாத்திருக்கேன். பெத்தவங்களுக்கே அவங்க பசங்க மேல அக்கறை இல்ல. நமக்கு ஏன் வம்பு? ஏதாச்சும் கேட்டா கைய கிழிச்சிகிட்டு பழிய எங்க மேல போடுதுங்க. அதனால தான் அந்த பொண்ணோட அம்மா புகார் பண்ணதும் நான் தலைமை ஆசிரியர்கிட்ட போய்விட்டுட்டேன். அவுங்க ஏதாச்சும் பண்ணிக்கிறாங்க.." என்று சொன்னார் அந்த ஆசிரியை.அந்த மாணவிகள் தினமும் இரவு ஏழு,எட்டு மணிக்குத்தான் வீட்டிற்குச் செல்கின்றனர்.ஏன் இவ்வளவு லேட் என்று பெற்றோர்களும் கேட்பதில்லை;  எதாவது கண்டித்தாலோ, அடித்தாலோ பழியை நம் மீது போட்டு விடுகின்றனர் என்றுக் கூறி ஆசிரியர்களும் ஏதும் கேட்பதில்லை.

ஒரு சில மாணவிகள்தான் இப்படி என்று நாம் அலட்சியமாக விட்டால், இந்த எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்கத்தானே செய்யும்? '18 வயதுக்குட்பட்ட மாணவர்களே மது அருந்துதல் தவறு' என்று நாம் கூறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இவர்கள் பதினைந்தே வயது நிரம்பிய மாணவிகள்.. என்ன செய்யப் போகிறோம்? இதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையாகக் கூட இருக்கலாம்.அந்த வீட்டின் பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்பவர்களாக இருக்கலாம். இருவரும் தங்களது பிள்ளை எப்போது வருகிறது என்று தெரியாமல் அவளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு அவளது படிப்பிற்காக தினமும் கடுமையாக உழைப்பார்கள். அரசுதான், யார் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று தெருவுக்குத் தெரு மதுபானக்கடையை திறந்து வைத்திருக்கிறதென்றால், இப்படி ஆசிரியர்களும் அலட்சியமாக இருந்துவிட்டால் நாளைய தமிழ்நாட்டின் கதிதான் என்ன? 

பிள்ளைகளின் ஒழுக்கம் குறித்து கவனக்குறைவான பெற்றோர்களாக இருந்தாலும், ஆசிரியர்களின் அன்பால் எத்தனையோ மாணவர்கள் திருந்தி அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்களே.. ஆசிரியர்கள் இப்படி தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது சரியா? மாணவிகளே குடிக்கக் கூடிய இந்த சூழலை உருவாக்கியது யார் குற்றம்? இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்கிறோம்.. அவர்கள் கையில் என்ன இருக்க வேண்டும் ? புத்தகமா புட்டியா? 

விடுதலை போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்!



பாலில் உள்ள அழுக்கை நீக்க டிடெர்ஜென்ட் பவுடர்கள்!

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில், கலப்படம் செய்யப்படுகிறது. செயற்கை முறையிலும் பால் தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சார்பில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் பால் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பல முக்கியமான விஷயங்கள் தெரியவந்தன.இதன்படி, நகர்ப்புறங்களில், தற்போது மக்கள் பயன்படுத்தும் பாலில், 60 சதவீத பால், கலப்படமாக உள்ளது. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நிர்ணயித்துள்ள தர விதிமுறைகளை, பூர்த்தி செய்யும் வகையில், இந்த பால் இல்லை. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சில மாதிரி பால்களில், குளுகோஸ், தண்ணீர் உள்ளிட்டவை, சேர்க்கப்படுகின்றன. பாலில் உள்ள அழுக்கை நீக்குவதற்காக, டிடெர்ஜென்ட் பவுடர்கள் சேர்க்கப்படுகின்றன.இவ்வாறு, மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

19 October, 2012

மழைக்காலம்...

 .
வெயிலோ, மழையோ, குளிரோ, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, நமது உடல் தகவமைத்துக் கொள்ளும் இயல்புடையது. அதேபோல, அந்தந்த தட்பவெப்பத்திற்கேற்ப, வைரஸ், பாக்டீரியாக்களால் நோய்களும் அதிகமாக பரவ ஆரம்பிக்கும். தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. அதற்கு முன்பே, ஆங்காங்கே மழை கொட்டத் துவங்கி விட்டது. நோயின் முன்னோடியாக, "டெங்கு' காய்ச்சல் தமிழகம் முழுதும் பரவலாகி விட்டது. இதேபோல மழைக்காலத்தில், பல்வேறு நோய்களும் நம்மைத் தாக்கும். வெயில் காலத்தில் "எறும்பைப் போல' சுறுசுறுப்பாக செயல்படும் நாம், மழைக்காலத்தில் சோம்பல் நிலைக்கு சென்று விடுவோம். திடீர் மழையில் நனையும் போது சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். மழைக்கால நோய்கள், அதிலிருந்து நம்மை பாதுகாப்பது, நோய் வந்தால் எப்படி செயல்படுவதென, மழைக்காலம், பனிக்காலம் என்றாலே அதிக சளி, மூச்சுதிணறல், இருமல் தொந்தரவு பரவலாக இருக்கும். நோயாளிகள் இதிலிருந்து தங்களை தற்காத்து கொள்வது அவசியம்.ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் நோய் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது, மழையில் நனையக் கூடாது. மழையில் நனைந்தால் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல், மூச்சு முட்டல் ஏற்படும். இருதய நோயாளிகள் மழை, அதிக குளிரில் செல்லக்கூடாது. அதிக குளிர், ரத்தத் தமனிகளை சுருங்கவைப்பதால், ஆபத்தில் முடியலாம். மாரடைப்பு மற்றும் வால்வு கோளாறு உள்ளவர்களுக்கு அடிக்கடி சளிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பக்கவாதம், மூளை தொடர்பான நோய்கள் இருந்தால், நோயை கூடுதலாக்கி விடும்.சர்க்கரை நோயாளிகள் மழைக் காலத்தில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய முடியாது. எனவே, ரத்த சர்க்கரை கூட வாய்ப்புள்ளது. அந்தநிலையில், உணவுக் கட்டுப்பாட்டை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதிக குளிரில், அதிகாலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யும் போது, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தேங்கிய மழைநீர் மூலம் சிக்குன்குனியா, டெங்கு, பன்றி காய்ச்சல் வரலாம். பன்றி காய்ச்சல் கிருமிகள் (எச்1என்1) அதிக குளிர், மழை சீதோஷ்ணத்தில் அதிகமாக உற்பத்தியாகும். எனவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். பெண்கள், ஈரத்தலையுடன் இருந்தால், "சைனஸ்' தொல்லை ஏற்படும். வைரசால் கண்நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
 
குளிருக்கு அதிக டீ, காபி குடித்தால் ஆபத்து பாதுகாப்பில்லாத குடிநீரால் மஞ்சள் காமாலை நோய் தாக்கலாம்.கொதிக்க வைத்த வெதுவெதுப்பான நீரை குடித்தால், காலரா, வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும், கிருமிகளில் இருந்து நம்மை காப்பாற்றும்.மழை பெய்யும் போது, சாக்கடை கழிவுநீரும் சேர்ந்துவிடும். தவிர்க்க முடியாமல் நடந்து வந்தாலும், உடனடியாக ஆடையை மாற்றி, கால்களை நன்கு கழுவ வேண்டும். மழையில் நனைந்த ஆடைகள் மூலம், தோல்நோய்கள் வரலாம்.உடல் இயங்குவதற்கு தண்ணீர் அவசியம். குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர், மழைக் காலத்தில் உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க, சிலர் அதிகமாக சிகரெட் புகைப்பர், மதுரை அருந்துவர். இவர்களுக்கு மாரடைப்பு, நுரையீரல், கல்லீரல் தொடர்பான நோய்கள் வரலாம். காப்பி, டீ அதிகமாக குடித்தால், வயிற்றுப் புண் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளின், கொழுப்புச்சத்து அதிகரிக்க காரணமாகிவிடும்.

பார்த்ததில் பிடித்தது...


வதேரா எந்த தகுதியின் அடிப்படையில் இந்த பட்டியலில் இடம் பெற்றார் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்., சோனியாவின் மருமகன் என்ற ஒரு தகுதி இருக்கிறதே அது போதாதா?
ணெய்யை ஊற்றுவது போல் உள்ளது. வேலையின்மையின் பிடி யில் தமிழகம் நாளுக்குநாள் சிக்கித் தவித்துக் கொண்டி ருக்கும் போதும், சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு நலிவ டைந்து வரும் சூழலில் தமி ழக அரசின் இந்த நடவ டிக்கை வன்மையான கண்ட னத்திற்குரியது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின மாநிலச் செய லாளர்கள் இரா.வேல் முருகன், ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.மதவெறியர்களின் சுயநல அரசியலுக்குப் பணிந்து சேதுத் திட்டத்தை முடக்காதே...! தமிழக அரசுக்கு இளைஞர்கள், மாணவர்கள் வற்புறுத்தல்...!! தமிழக இளைஞர்களின் கனவுத்திட்டமாம் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்காதே என வாலிபர் - மாணவர் சங்கங்கள் எச்ச ரித்துள்ளன.தமிழகத்தின் 150 ஆண்டு கனவுதிட்டமான சேது சமுத்திரத்திட்டத்தினை தேவையில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது எரி யும் நெருப்பில் எண்

தமிழகம் மட்டுமல்லாது இந்திய நாட்டின் அற்புத கொடையான நீண்ட கடற் கரையோரங்களில் அள வில்லா கனிம வளங்களை யும், ஆதாரங்களையும் கொண் டுள்ள பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளை உரு வாக்க வேண்டும் என்றால் கூட போக்குவரத்திற்கு எளி தாக சென்று வரக்கூடிய நீர்வழித்தட ஆதாரங்களை அதிகப்படுத்த வேண்டியுள் ளது. தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள 90 லட்சத் திற்கும் மேற்பட்ட இளை ஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்பையும், கடலோர மாவட்டங்களின் கனிம வள ஆதாரத்தின் மூலம் துவங்கப்படும் புதிய தொழிற் சாலைகளையும், தென்தமி ழகத்தின் வளர்சசியையும் குழி தோண்டி புதைக்கும் ஏற்பாட்டையே தமிழக அதிமுக அரசு செய்துள் ளது என அவர்கள் சாடி யுள்ளனர்.மின்வெட்டால் ஒட்டு மொத்த தமிழகமும் தினந் தோறும் இருளில் திண் டாடிக்கொண்டும், தொழிற் சாலைகள் ஒருபுறமும், விவ சாய பம்ப்செட்கள் மறு புறம் இயங்காமல் அனைத்து உற்பத்தியும் தேங்கி கொண்டு கடும் நெருக்கடி யில் சிக்கிதவிக்கிறது. மறு புறம் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து மின்சாரத்தை உற் பத்தி செய்துவிடுவோம் என்று தகவலை சொல்லி ஏமாற்றி வருகின்றனர். இன் றும் அதிகளவு நிலக்கரி கப் பல் மூலமே பெறப்படு கிறது. இப்படிப்பட்ட நிலை யில் இந்த கப்பல் வழி போக்குவரத்திற்கு உதவி யான சேது சமுத்திரத் திட் டத்தை முடக்குவது தமிழ கத்தின் மின்வெட்டை நீட் டிக்கும் செயலாகவே கருத முடியும். புவி வெப்பமயமாக்கல், காடுகள் அழிப்பு, பசுமை ஒழிப்பு என நாள்தோறும் இயற்கைக்கு விரோதமாக எண்ணற்ற நடவடிக்கை களில் கார்ப்பரேட் நிறுவனங் களை ஈடுபட அனுமதிக் கும் அரசுகள், எந்த பாதிப் பும் இல்லாமல் சேதுசமுத் திரத்திட்டதை நடைமுறைப் படுத்த முடியும் என பல் வேறு நிபுணர்குழுக்கள் தெரிவித்து, அதற்காக மக் களின் வரிப்பணம் ஆயிரக் கணக்கான கோடி செல விடப்பட்ட நிலையில் மத வெறியர்களின் சுயநல அர சியலுக்காக தமிழக அதிமுக அரசும் பணிந்து, இன்று இந்த திட்டம் தேவை யில்லை என்பது ஓட்டுப் போட்ட மக்களை முட் டாள்கள் ஆக்கும் நடவ டிக்கையே ஆகும். அதிமுக கடந்த காலங் களில் சேது சமுத்திரத் திட்டத்தை அமலாக்கிட வேண்டும் என பல முறை பேசிவிட்டு இன்று மதவெறி யர்களின் கருத்துக்களோடு இணைந்து பேசுவது, இந்திய அரசியல் சாசனத்தின் மைய மான மதச்சார்பற்ற தன்மை என்பதற்கு வேட்டுவைக்கும் அபாயத்தை உருவாக்கும் செயலாகவே அமையும். எனவே தமிழக அதிமுக அரசு மக்களின் எதிர் பார்ப்புகளுக்கு விரோத மாக மணல்திட்டு என நிரூ பணம் ஆன ஒன்றை நம்பிக் கையின் பெயரால் இராமர் பாலம் என்று சொல்லி சேது சமுத்திரத்திட்டத்தை முடக்க நினைப்பது அர சின் அப்பட்டமான பிற்போக் குத் தனத்தையே காண்பிக் கிறது. ஆகவே உடன் சேது சமுத்திரத்திட்ட பணிகளை விரைந்து செய்திட உரிய நடவடிக்கை எடு, முட்டுக் கட்டை போடாதே என தமி ழக அரசை இந்திய ஜன நாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் வலியுறுத்துகின்றன எனக் குறிப்பிட்டுள்ளனர்.






18 October, 2012

டயட்...

உடல் எடை அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக அனைவருமே டயட்டை மேற்கொள்கின்றனர். மேலும் டயட் மேற்கொண்டால், உடலில் எந்த ஒரு நோயும் எளிதில் வராமல் தடுக்கலாம்.  உடலில் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ராலானது இருக்கும். கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருந்தால், விரைவில் இதய நோய், புற்றுநோய் போன்றவை வந்துவிடும். பெண்களை விட, ஆண்களுக்கு தான் விரைவில் இதய நோய் மற்றும் இதர நோய்கள் வரும். டயட் மேற்கொள்ளும் பொழுது  தவறாமல் ஒருசில உணவுகளை தினமும் உடலில் சேர்க்க வேண்டும்.
நவதானியங்களில் சத்துக்கள்  பாக்கெட்டாக உள்ளது. அதிலும் வைட்டமின், நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்து உள்ளன. இது  சிறந்த உணவுப்பொருள். இதில் உள்ள வைட்டமின் பி9 ஸ்பெர்ம்களை ஆரோக்கியமாக வைக்கும். கூந்தல் உதிர்தலும் நீங்கும்.
 சால்மன்  கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதிலும் சால்மன் என்னும் மீனில் அதிகம்  இந்த மீனை உணவில் சேர்த்தால், உடலில் ஏற்படும் நோய்கள் பலவற்றிற்கு ஒரு ஆயில்மெண்ட் போன்றது. இதை சாப்பிட்டால், மனஅழுத்தம் குறைந்துவிடும்.
 பூண்டு  பூண்டின் நன்மைகளுக்கு அளவே இல்லை. இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதயத்தில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால், புரோடெஸ்ட் புற்றுநோய் தடைபடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.
மாதுளை  மாதுளையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால்,  தினமும் உணவில் சேர்க்கும் போது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்துவிடும். நிறைய ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், புரோடெஸ்ட் புற்றுநோய் குறைந்துவிடும்.
முட்டை கூந்தல் உதிர்தல் அதிகமாக இருந்தால் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி7 சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும்  மஞ்சள் கருவில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது.  இரத்த சோகை குறைந்து கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.
 ப்ளூபெர்ரிஸ்  ப்ளூபெர்ரி பழங்கள் புரோடெஸ்ட் புற்றுநோயை தடுக்கும்  ஆய்வுகள் பலவற்றில், இந்த பழத்தின் நன்மைக்கு அளவே இல்லை, இது இதய நோய், ஞாபக சக்தி குறைவு மற்றும் டைப்-2 நீரிழிவு போன்றவற்றை குறைக்கும் என்று கூறுகிறது.
 பச்சை காய்கறிகள்  டயட்டில் இருக்கும் பொழுது  முட்டைகோஸ், பிராக்கோலி மற்றும் முளைகட்டிய பயிர்களை உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுக் பொருட்களில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கெமிக்கல் இருக்கிறது. அதிலும் புரோடெஸ்ட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே தினமும் சிறிது இதனை உணவில் சேர்ப்பது நல்லது.
 பிரேசில் நட்ஸ்  நெட்ஸ் என்றால் உடலுக்கு நல்லது என்பது தெரியும். அதிலும் பிரேசில் நட்ஸ்  சிறந்தது. இதில் செலினியம் எனும் பொருள் அதிகம்  அதனால் ஸ்பெர்ம்களின் அளவு அதிகரிக்கும். மேலும் செலினியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, தாம்பத்திய வாழக்கைக்கு  ஒரு சிறந்த உணவுப் பொருளும் கூட.
 தக்காளி  தக்காளி ஒரு சிறந்த பழம். அதிலும் ஆண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள லைக்கோபைன் என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும். ஆகவே இதனை தினமும் உண்ணும் உணவில் சேர்த்தால், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம்

17 October, 2012

ஒரு சின்ன பெக் உங்களை மாற்றும்!


ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும். ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா!!!
நல்ல தூக்கம்- உடல் அதிக களைப்புடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.
நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.
மன அழுத்தம்- மனம் அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு விஸ்கி ஒரு சிறந்த பானம். அதிலும் மன அழுத்தம் ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஏற்பட்டால், அதனை உடனே சரிசெய்ய வேண்டும். அதுவே நீடித்தால், உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பவர்கள், அதனை குறைக்க ஒன்று அல்லது இரண்டு பெக் விஸ்கி சாப்பிட்டு தூங்கினால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.
சளி மற்றும் ஜலதோஷம்- உடலில் சளி அல்லது ஜலதோஷம் வந்துவிட்டல், அதனை போக்க மாத்திரைகளை விட, விஸ்கி மிகவும் சிறந்தது. அதிலும் ஒரு பெக் விஸ்கியுடன், சிறிது சுடு தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து குடிக்க வேண்டும். அதுவும் குடிக்கும் போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
மற்ற நோய்கள்- விஸ்கியை மருத்துவரின் ஆலோசனையின் படி குடித்து வந்தால், 50% பக்கவாதம் வராமல் இருக்கும். மேலும் இதனை குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கும்.ஆகவே எப்போதும் ஆல்கஹாலை உடலுக்கு நீங்கு என்பதை நினைக்க வேண்டாம். விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம்.

ஜீவநதி கங்கையில் குளித்தால் பாவம்?


இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதியின் நீரில் புற்றுநோயை உண்டாக்கும் மாசுக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கங்கை ஆற்றுப்படுகையில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பலகோடி இந்தியர்களின் ஜீவநதி கங்கை. இந்த நதியில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்பது பலகோடி இந்துக்களின் நம்பிக்கை. இதற்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புனிதப்பயணம் மேற்கொண்டு கங்கையை தரிசித்து புனித நீராடுகின்றனர்.
கங்கையில் இறந்தாலே அங்கே இறந்தவர்களை எரியூட்டினாலோ சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கை. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுகின்றனர். இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கொண்டுவந்து கரைக்கின்றனர். இதனால் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.புனிதநதியாம் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகி விட்டது. இந்த கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.கங்கையில் உள்ள மாசுக்கள் குறித்து தேசிய புற்றுநோய் பதிவு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்தன.
கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனம் காணப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு,நாட்டின் பிறபகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.புனித நதியாக போற்றப்படும் கங்கை நதியைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் நாட்டில் உள்ள முக்கிய நதிகளை ஆய்வு செய்தால் என்னென்ன அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகுமோ?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...