|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 May, 2012

அட கொடுமையே!


“மறக்க மாட்டோம் மன்னிக்க மட்டோம்!

மறக்க மாட்டோம் மன்னிக்க மட்டோம்! தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! ஐ.நா. சபையே தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்து!” சென்னை மெரினா கடற்கரையில் மே 20 ஞாயிறு அன்று மாலை விண்ணதிர எதிரொலித்த முழக்கங்கள் இவை.தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும், தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் மே-20 அன்று வீரவணக்க ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி, இன்று எழுச்சியுடன் ஒன்றுகூடல் நடைபெற்றது.மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில் நடைபெற்ற ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமை வகித்தார். முன்னதாக, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் ஈகச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 



இந்நிகழ்வில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, லோக் சனசக்தி கட்சித் தலைவர்  இராம் விலாஸ் பாஸ்வான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, ம.தி.மு.க. தென் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன், பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, புதிய பார்வை இதழாசிரியர் திரு. ம.நடராஜன், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் மற்றும் உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். போர் குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் இயக்கம் சார்பில், தமிழீழத்தில் வாக்கெடுப்பு நடத்தக் கோரி 1 கோடி கையெழுத்துகள் பெறுகின்ற கையெழுத்து இயக்கம் மெரினா வந்த மக்களிடம்  நடத்தப்பட்டது. இராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பெருந்திரளானோர் இதில் கையெழுத்திட்டனர்.“இலங்கை அரசு இனப்படுகொலை அரசு! சர்வதேச விசாரணையை உடனே நடத்து!”, “இந்திய அரசின் துரோகத்தை மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்” உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு, மெழுவர்த்தி ஏந்தியபடி சிறுவர்களும், பெண்களும் என பொதுமக்கள் பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உண்மைகள் எப்போதும் வெளியே வரப்போவதில்லை?


இந்தியர்கள் கலாச்சாரம், பண்பாட்டில் உயர்ந்தவர்கள் என்ற உயர்வான எண்ணம் உலக நாடுகள் மத்தியில் உள்ளது. அதேபோல் கோயில், புராதான சின்னங்கள், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், நம்மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப வாழ்வு, ஆன்மீகத்தை பற்றி வெளிநாடுகளில் இந்திய அரசு செய்யும் சுற்றுலா தொடர்பான விளம்பரங்கள் நம்நாட்டை நோக்கி அதிகளவிளவில் மக்களை வர வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு அந்நிய செலவாணியை வாரி வழங்கும் துறையாக சுற்றுலாத்துறை உள்ளது. ஆண்டு தோறும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

2000- ல் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சம். அதுவே கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமாகி 2009ல் 51,67,699 லட்சமாகவும், 2010ல் 55,83,746 லட்சம் வந்ததாக இந்திய சுற்றுலா துறை தகவல் தெரிவிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 1 கோடி பேர் வருகை தருவார்கள் என இந்திய அரசின் புள்ளிவிவரம் மகிழ்ச்சி தெரிவிக்கிறது. அதேபோல், இப்பயணிகளால் ஆண்டு தோறும் அந்நிய செலவாணியும் உயர்ந்து வருவதாக இந்திய பொருளாதார அறிக்கைகள் சொல்கின்றன. 2009ல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் நமது அரசுக்கு கிடைத்த வருமானம் 54,960 ஆயிரம் கோடி. 2010ல் 64,889 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

இப்படி இந்தியாவுக்கு கோடி கோடியாய் கொட்டும் வருமானம் ஒரு புறத்தில் வந்தால் சுற்றுலா பயணிகள் ரூபத்தில் இந்தியாவுக்குள் வரும் கால் கேள்ஸ் எனப்படும் விலைமாதுக்கள் தினமும் இந்தியாவில் லட்சங்களில் சம்பாதித்து அதை கறுப்பு பணமாக ஹவாலா முறையில் தங்களது நாடுகளுக்கு கொண்டும் போகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகிறது. நமது நாட்டில் விபச்சாரம் என்பது சட்டப்படி தவறு. அதனால், சில ஆண்டுகள்க்கு முன்பு வரை இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், பணக்கார குடும்ப இளைஞர்கள், மிகப்பெரிய நிறுவன அதிகாரிகள், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள், உயர் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் ஜாலியாக இருக்க பாங்காங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, நெதர்லாந்து, பிரேசில், காங்கோ, சுஸர்லாந்து, க்யூபா மங்கோலியா, சாலமன் ஐஸ்லாந்து போன்ற செக்ஸ் டூரிஸ நாடுகளுக்கு போவார்கள். காரணம் இங்கு விரும்பியவர்களுடன் விரும்பும் வண்ணம் அனுபவித்துவிட்டு வரலாம், எந்த சட்ட தொந்தரவும் இல்லாத செக்ஸ் டூரிஸ்ட்டுக்கு சட்ட பாதுகாப்பு உள்ள நாடுகள். அதோடு வெளிநாட்டு பெண்கள் மீதான மோகம். அதனால் ஜாலியாக இருக்க நினைத்தவர்கள் இங்கு படையெடுத்தார்கள். அனுபவித்தார்கள். 

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அப்படித்தான் ‘விளையாட்டு’ பிள்ளைகளான இவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. இவர்களுக்கு பணம் பிரச்சனையில்லை. ஆனால் இந்தியாவில் இருந்து அங்கு போய் வர நேரம் விரயமாகிறதே என கவலைப்பட்டனர். இவர்களின் கவலையை போக்க உள்ளுர் புரோக்கர்கள், இன்டர்நேஷனல் புரோக்கர்களாக உருமாறினார்கள். இன்டர்நேஷனல் தொடர்புகள் மூலம் பெண்களை டான்ஸ் ஷோ, மாடலிங் என்ற பெயரில் இந்தியாவுக்கு வர வைத்து தேவையானவர்களுக்கு தேவையான நேரத்தில் சப்ளை செய்தனர். கடந்த 2008 செப்டம்பர் மாதம் லண்டனில் இருந்து வெளிவரும் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் இதழ்க்கு அமெரிக்காவை சேர்ந்த ஸபா என்ற 25 வயது விலைமாது அளித்தபேட்டியில், எனக்கு ஒரு மணி நேரத்திற்கு இந்திய தொழிலதிபர்கள் தரும் விலை 5 லட்சம், வந்து போக டிக்கட் செலவு, விலை உயர்ந்த கார் பயணம், உயர்தரமான ஹோட்டலில் தங்கும் வசதி என செய்து தருகிறார்கள் என்றார். அந்த பேட்டி இந்தியாவுக்கு வெளிநாட்டு விலை மாதுக்காளை படையெடுக்க வைத்துவிட்டது. வெளிநாட்டு மாதுக்களுக்கு இந்தியாவில் பலரும் போட்டி போடுவதால் டிமாண்ட் அதிகமானது. இதனால் நிறைய வெளிநாட்டு மாதுக்கள் சுற்றுலா விசாவில் இங்கு வர வைக்கப்படுகின்றனர். அப்படி வர வைக்கப்பட்டவர்கள் இன்று இந்தியாவை செக்ஸ் நாடாக அறிவிக்கும் அளவுக்கு பெருகியுள்ளார்கள் என்கிறார்கள் இத்தொழிலை நன்கறிந்தவர்கள். 


இந்த பேட்டி மற்றும் இங்கு வந்து போகும் பெண்களால் பரவிய தகவல், ஐ.பி.எல் விளையாட்டு காண என்ற போர்வையில் இளம் விலைமாதுக்கள் இந்தியாவுக்கு அதிகளவில் வர தொடங்கியுள்ளார்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் இவ்வகை பெண்கள் இந்தியாவுக்குள் அதிகம் வருகின்றனறாம். கடந்த 2010 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளாக 56 லட்சம் பேர் வந்துள்ளனர். இதில் 20 – 35 வயதுக்குள்ளான பெண்கள் அதிகம். கிரிக்கெட் ரசிகைகள் என்ற போர்வையிலும், ஐ.பி.எல் போட்டிகளின் போது மைதானங்களில் ரசிகர்களை, வீரர்களை உற்சாகபடுத்த சியர்ஸ் கேர்ள்ஸ் எனப்படும் நடன பெண்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுகின்றனர்.மும்பையில் உள்ள பத்திரிக்கை நண்பர் போலந்து நாட்டை சேர்ந்த சியர்ஸ் கேர்ள் ஒருவரிடம் பேசியபோது, 2008 ஜனவரி மாதம் ஐ.பி.எல் ஆட்டத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்பற ஒப்பந்தத்தில் ஸ்காட்லாந்து சியர்ஸ் கேர்ள்ஸ் டீமில் உள்ள 150 பேர் கையெழுத்திட்டோம். 

ஸ்காட்லாந்து விமான நிலையத்தில் விமானம் ஏற சென்றபோது, என்னுடன் எனக்கு பணிப் பெண்ணாக, மேக்கப் வுமனாக, பிசியோதெரப்பிஸ்ட் என 5 பெண்கள் வந்தனர். இப்படி எனது குரூப்பில் 150 பேருடன் தலா 5 பேர் வந்தனர். மும்பை விமான நிலையத்தில் இறங்கியபோது, அவர்கள் எல்லாம் அங்கிருந்தே எங்களை விட்டு பிரிந்து போய்விட்டனர். அவர்கள் எதற்காக வந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் கண்டுக்கொள்ளவில்லை.ஏன் எனில் எங்கள் குழு தலைமை எங்களுக்கு தரும் கமிஷன். அதோடு ஒரு நாள் இங்கு நாங்கள் நடனமாட எங்களுக்கு கிடைக்கும் தொகை 10 லட்சம். அதை இழக்க நான் விரும்பவில்லை. என்னை போல் தான் மற்றவர்களும். அதனால் நாங்கள் கண்டுகொள்வதில்லை. இது ஆண்டுதோறும் நடக்கிறது என பட்டவர்தமான தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா வெளிநாட்டு செக்ஸ் பெண்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது என்கிறார்கள் மும்பையில் இத்தொழிலை ஆய்வு செய்யும் நபர்கள். இதை நடத்துபவர்கள் எல்லாம் பெரும் பண முதலாளிகள், வெளிநாட்டு விலைமாதுக்களை வைத்து சம்பாதிக்கும் பணத்தில் 40 சதவிதம் புரோக்கர்களுக்கு, மீதி அப்பெண்ணுக்கு என்ற ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் உள்ளதாம்.

இந்த பணமெல்லாம் ஹவாலா முறையில் சம்மந்தப்பட்ட பெண்ணின் நாடுகளில் கொண்டும் போய் தரப்படுகிறது. இந்த பெண்கள் எல்லாம் 3 மாதம், 6 மாதம் சுற்றுலா விசாவில் வருபவர்கள். தேதி முடிந்தும் பல நூற்றுக்கணக்கான பெண்கள் மும்பை, டெல்லி மாநகரங்களில் உலா வருகிறார்கள். இந்தியாவில் தற்போது, தொழிலுக்காக 2 ஆயிரம் வெளிநாட்டு பெண்கள் உள்ளார்கள் என அதிர்ச்சி தருகிறார்கள்.இவர்களை பற்றி பன்னாட்டு புலனாய்வு அமைப்புகள் இந்திய புலனாய்வு அமைப்புகள்க்கு தகவல் தெரிவித்தும் இதில் வரும் அந்நிய செலவாணியை கருத்தில் கொண்டு அரசும், புலனாய்வு அமைப்புகளும் இதை கண்டு கொள்வதில்லை. தற்போது இந்த வெளிநாட்டு மாதுக்களின் புகலிடமாக கோவா, ராஜஸ்தான், புதுவை இருக்கின்றனவாம். அதோடு, தற்போது கார்ப்பரேட் அலுவலங்கள் போல் வெளிநாட்டு விலைமாதுக் களை வரவைக்க சென்னை, மும்பை, பெங்களுர், டெல்லி, ஐதராபாத் போன்ற நகரங்களில் புரோக்கர்கள் அலுவலகமே வைத்துள்ளதாக தெரிவிக்கறார் மும்பை சமுக சேவகர் ஒருவர். 

இதுப்பற்றி பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ள மதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட அமைப்பாளர் ரமேஷ்கிருஸ்டியிடம் பேசியபோது, சமீபத்தில் வெளிநாட்டு விலைமாதுக்கள் 5பேரை டெல்லி போலிஸ் கைது செய்தது. அவுங்கள தீவிரமா விசாரிச்சாலே நம் நாட்லயிருந்து ஹவாலா முறையில வெளிநாடுகளுக்கு பணம் போற வழிய இன்னும் நெருக்கமா அறியலாம். அதோட இவுங்க மூலமா தீவிரவாதிகளுக்கான தகவல் சப்ளையாகவும் வழியிருக்கு. ஆனா இவுங்களை விசாரிக்க முடியாதபடிக்கு அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள் முட்டுக்கட்டை போட்டு வர்றதா தகவல் தெரியுது. இந்த தொழில்ல இருக்கற அரசியல்தான் லலித்மோடி-சசிதரூர் இடையே போட்டி ஏற்பட்டு மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து சசிதரூரை இறக்கனார் லலித். அவர் தன்பங்குக்கு விளையாட ஐ.பி.எல் தலைவர் லலித்மோடியை நாட்டை விட்டே துரத்திட்டார் இது கடந்த ஆண்டு விவகாரம். இந்த ஆண்டு ஆஸ்த்திரியா கிரிக்கெட் வீரர் லூக் மீது அமெரிக்கவில் இருந்து வந்த ஒரு மாடலிங் பெண் தந்த பாலியல் புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதையெல்லாம் தீவிரமா விசாரிக்கறதேயில்ல. இதை விசாரித்தால் இதுக்கு பின்னாடி இருக்கற பல உண்மைகள் வெளி வரும் என்றார். 

உண்மைகள் எப்போதும் வெளியே வரப்போவதில்லை. அதுதான் இந்தியா. 

Sathyamev Jayate Big Fat Indian Wedding


Padam Paarthu Kathai Sol Movie...





கணிணியில் தகவல்களை மற்றவர்களிடமிருந்து எளிதில் மறைக்க!

1. முதலில் உங்கள் கணிணியில் நீங்கள் Administratorஆக லொகின் செய்திருக்க வேண்டும். 

2. இனிமேல் மறைத்து வைக்க வேண்டிய தகவல் உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரு புதிய கோப்பறையில் போட வேண்டும். எடுத்துக்காட்டாக D ட்ரைவில் Data என ஒரு கோப்பறையை உருவாக்கலாம். 

3. அதன் பின் Start பட்டனை அழுத்தி ரன் பாக்ஸில் CMD என டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி(command prompt) கிடைக்கும்.  

4. இங்கு நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய கோப்பறையின், அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். உதாரணமாக attrib+s+h D:Data என இருக்க வேண்டும். இதன்பின் உங்கள் கோப்பறை மறைக்கப்படும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம். மறைத்து வைத்துள்ள கோப்பறைகள் என்றாவது ஒருநாள் அல்லது ஒருநேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம் அல்லது மேலும் சில கோப்புகளை இதன் பின் மறைத்து வைக்க எண்ணி இந்த கோப்பறையில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது attrib s h D:Data என டைப் செய்திட வேண்டும்.

அதிசிய பிரமிடு...!


நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசியங்களில் மிக மிக்கியமான ஒன்று பிரமிடு உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தை கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடைக்கிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான 'கிஸா' பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விழயங்களை உள்ளடக்கியதுஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .

இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். சுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செயப்பட்ட க்ரநிடே சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டன .இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்பு கற்கள் எவ்வாறு அவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கபட்டன் என்பதும், அத்தகைய பாலைவன பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வராலாற்று அய்ய்வலர்கள் கருத்து .கிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும் .பைதொகராஸ் என்கிற கணித விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களை குறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கபட்டுலத்தை ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.மற்றுமொரு அதிசய விழயம் என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கேட்டு போகாமல் இருப்பதின் விந்தை தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த நிலைக்குஉள்ளது. 

ஆராய்ச்சியாளர்களின்ஆய்வுக்கு பெருந்தினியாக உள்ளது !இன்னும் முற்றிலுமாக பயன் பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் ,குருக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன் பாடுகள் மர்மங்கலகவே உள்ளன.இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ளரோபோட்களை உள் செலுத்தி உலகம் முழும் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது.உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கபட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது .இவற்றை திறக்கவும் அதற்குபின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வு குழுக்கள் மும்முரமாக மனிதனின் அதிசய தக்க ஆற்றல் அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிடுகளை எண்ணி நாம் ஆச்சரியபடுவதில் தவறு ஒன்றும் இல்லை.


பிரமிக்கத் தக்க முறையில் கட்டப் பட்டுள்ள பிரமிட கூம்பகம் பண்டை கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப் பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ ஞானத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத் தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஓர் புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப் பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய வருகின்றது. பிரமிட்களும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போலக் கற்தூண் காலங் காட்டியாக [Megalithic Calendars] கருதப் படுகின்றன.இந்த பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டு பிடிக்க பட்டு உள்ளது மம்மிப்படுத்துதல் பற்றி ..

1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்திப் பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் அவரை அலம்புவார்கள்.

2. உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.

3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டுக் கல் உப்பில் பதப்படுத்தப்படும்.

4. இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.

5. ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள்.

6. உடல் கல் உப்பால் மூடப்படும்.

7. நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணைகளைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும்.

8. உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.

9. உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.

10. மம்மி இப்போது அடக்கத்திற்குத் தயார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...