|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 April, 2012

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம் கருணாநிதி!


"தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், தை முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்' சென்னையில் நேற்று தி.மு.க., சார்பில், தமிழக அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதி பேசியதாவது:தமிழக முதல்வராக இருப்பவர் எப்படிப்பட்டவர், எத்தகைய வாய்மை கொண்டவர் என்பதையெல்லாம் இக்கூட்டத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசும்பேது, பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்க, பெயருக்கு முன்னால் தாயின் தலைப்பெழுத்தை தான் பயன்படுத்த வேண்டும் என்றார். அப்படியானால் அவருடைய பெயருக்கு முன்னால், "ச' தானே வர வேண்டும், எதற்கு ஜெ., போடுகிறார். ஒருவேளை நான் இப்படி பேசியதற்காக நாளை எப்படி எழுதுவார் எனத் தெரியவில்லை.

தி.மு.க., ஆட்சியில் தை முதல் நாள் தான் தமிழர் புத்தாண்டு என, அறிவித்தோம். ஆட்சி மாறியவுடன் சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து விழா எடுக்கிறார். அன்று நடந்த விழாவில், தமிழ் மீது யாருக்கெல்லாம் அக்கறை இல்லையோ அவருக்கெல்லாம் விருது கொடுக்கிறார். செம்மொழியான தமிழை அவர் அழிக்க வேண்டும் என, கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்.மீண்டும் வருவோம்: மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரும். அப்போது, தை முதல் நாள் தான் தமிழர்களுக்கான புத்தாண்டு என, அறிவிப்போம். திராவிட உணர்வு கொண்ட வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தை முதல் நாளைத் தான் புத்தாண்டாக அறிவிக்கும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

இதே நாள்...

  • சிரியா விடுதலை தினம்(1946)
  • உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சார்ளின் பிறந்த தினம்(1889)
  • இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது(1853)
  • செர்பியப் பேரரசு, டுசான் சில்னி என்பவரால் உருவாக்கப்பட்டது(1346)

அலங்காரச் செடிகளால் வீட்டை அழகாக்கலாம்!

வீட்டிற்கு வெளியே காலி இடத்தில் தோட்டம் போடுவது வீட்டிற்கு அழகு தருவதோடு சுற்றுப்புற மாசுகளையும் நீக்கும். அதேபோல் வீட்டிற்குள் அழகான மலர்ச் செடிகள் கொண்டு அலங்கரிப்பது மனதிற்கு அமைதியை தரும். வரவேற்பரை மேஜைகளிலும், தொலைக்காட்சி வைக்கும் அலமாரி, டைனிங் டேபிள் போன்றவைகளில் அழகான செடிகளால் அலங்கரிக்கலாம். அதற்கான ஆலோசனைகளை அளிக்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.

வரவேற்பரையில் செடிகள் வரவேற்பரையில் நன்கு வளர்ந்த அலங்கார இலைகள் கொண்ட செடிகளை வைத்து அழகுபடுத்தலாம். இவ்வாறு வைக்கப்படும் செடிகளின் எண்ணிக்கை அறையின் நீள அகலத்திற்கு ஏற்ப வைக்கவேண்டும். இவை அறையினுள்ளே இருப்பதால் இவற்றில் இலைகளின் தூசி படிய வாய்ப்புள்ளமையால் சிறு தெளிப்பான் கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்துவதன் மூலம் செடிகள் நன்கு இயற்கை எழில் மாறாமல் இருக்கும். இந்த செடிகளுக்கு சூரிய ஒளி கிடைக்க சிறிது நேரம் வீட்டுத்திண்ணையில் வைத்திட வேண்டும். நல்ல வெப்பநிலையில் சூரிய ஒளி படும்படி வைக்கக்கூடாது.

திண்ணை, போர்டிகோ வீடுகளில் வரவேற்பரை தவிர திண்ணை மற்றும் போர்டிகோ வீட்டு அறையின் நுழைவாயில் போன்ற இடங்களில் செடிகளை வைத்து நன்கு அழகுறச் செய்யயலாம். போர்டிகோ வீட்டு மற்றும் வீட்டு நுழைவாயில் போன்ற இடங்களில் நல்ல சூரிய ஒளி படும்படி இருப்பதால் நாம் வெளித்தோட்டத்தில் வைக்கும் செடிகளையே தொட்டிகளில் வளர்த்து அவற்றை அவை தாம் கொண்டுள்ள அழகு இலைத் தன்மை, பூத்தன்மை மற்றும் பல நிற வேறுபாடு கொண்ட இலைகள் ஆகியவற்றிற்கு தக்கபடி தொட்டியை முன்னும் பின்னும் மாற்றி அமைப்பதன் மூலம் நன்கு அழகுபடுத்தலாம்.

போர்டிகோ பகுதியில் தொங்கும் தொட்டிகள் பொருத்திக் கொள்ள ஏதுவாக இரும்பு வளையங்கள் பல வரிசையாக கட்டிடம் கட்டும்போதே பொருத்தி இருக்கும் இவற்றில் தொங்கும் தொட்டிளில் பல அழகுச் செடிகளை வைத்து தொங்கிவிடுவதன் மூலம் அழகுறச் செய்யலாம். போர்டிகோவில் பக்கவாட்டில் பூக்கும் அல்லது அழகு இலையுடன் கூடிய படர் கொடிகளை படரவிட்டு போர்டிகோவின் மேலிருந்து தொங்கும் வண்ணம் வளரவிட்டு அவற்றை வெட்டி விட்டு அழகுடன் மிளிரச் செய்யலாம்.இது தவிர வீட்டின் முன் வாயில் போர்டிகோவின் முன்பகுதி , போர்டிகோ பகுதி போன்ற இடங்கள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பெரிய, சிறிய செடிகளை தனித் தொட்டிச் செடியாகவோ அல்லது கூட்டாகவோ வைத்து நல்ல எடுப்பான தோற்றத்தை ஏற்படுத்தலாம்.

போர்டிகோ பகுதியில் வைக்கும் செடிகள் பொதுவாக இவ்வகைச் செடிகளுக்கு சூரிய ஒளி அதிகம் தேவைப்படாது. பனை மர வகைகள் பலவித இலை அமைப்பு கொண்டவைகளான பிட்சார்டிய, திரிநாஷ், குரோட்டன் வகைகள், எராந்திமம், கிராப்டோபியம், அக்ஸோநீமா, ஆஸ்பராக்ஸ், கலர் கீரை, கோலியஸ், டைபன்பேக்கியா, டிரசீனா, பைலியா, பெரலி வகைகள் மற்றும் ரப்பர் செடி வகைகள் போன்றவைகளைக் கொண்டு அழகு படுத்தலாம்.காசித்தும்பை, பெட்டூனியா, குள்ள மெரிகோல்ட், ஹெலிக் கோனியம் போன்ற பூச்செடிகளை வளர்க்கலாம்.

செடிகளை பராமரிக்க செடிகளின் வளர்ச்சி மிதமிஞ்சிவிட்டால் அவற்றை வெட்டி வளர்ச்சியை சீர்படுத்த வேண்டும். தொட்டியின் மேல் பகுதி மண் அரை அடி அளவுக்கு எடுத்து விட்டு 6 மாதத்திற்கு ஒரு முறை புது மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும்.தண்ணீர் தேவையை பொருத்து 2 நாட்களுக்கு ஒருமுறை அளித்திட வேண்டும்.செடிகளில் படியும் தூசு முதலியவற்றை வாரம் ஒரு முறை தண்ணீர் தெளிப்பான் கொண்டு தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். பூச்சி , பூஞ்சான நோய் தாக்குதல் இருந்தால் தக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் வைக்கும் அறை போன்றவற்றில் சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பே இல்லாமையால் அவற்றை 20 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சூரிய ஒளி படும்படி திண்ணை அல்லது போர்டிகோ போன்ற பகுதியில் வைக்க வேண்டும். இது தவிர இந்த இடங்களில் வைக்கும் செடிகளை இடத்தை மாற்றி வைப்பதன் மூலம் முகப்பு பாகம் மற்றும் போர்டிகோ பகுதியில் வைத்துள்ள செடிகளை 2 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்குள்ளே கொண்டு வருதல் போன்ற மாற்றத்தை கையாளலாம். இது போன்று பராமரிப்பின் மூலம் செடிகள் நல்ல நிலையில் நீண்ட நாள் வீட்டு அலங்கரிப்புக்கு பயன்படுத்தலாம்.

இதே நாள்...


  • தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது(1976)
  • உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சி பிறந்த தினம்(1452)
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்த தினம்(1865)
  • ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது(1892)
  • சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்(1755)

போலியோ இல்லாத இந்தியா!!!


 உங்கள் செல்ல குழந்தைகளுக்கு பருவம் தவறாமல் வழங்கி வந்த போலியோ சொட்டு இனி வழங்க வேண்டியது இருக்காது. காரணம் இந்தியாவில் 17 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. போலியோ இல்லாத நாடாக உலக சுகாதர நிறுவனமும் இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று நடப்பதுதான் கடைசி கட்ட போலியோ ஒழிப்பு சொட்டு முகாம்.போலியோவில் பலர் கால் இழந்து தவழ்ந்த காலம் இனி இருக்காது. மக்களை அச்சுறுத்தி வந்த போலியோ முடிவுக்கு வந்திருப்பது நாட்டுக்கே மகிழ்ச்சியான விஷயம் ஆகும். இந்த கொடூர நோய் தாக்கத்தை ஒழிக்க பல ஆயிரம் கோடிகளை செலவழித்து, பலக்கட்ட முகாம்கள் நடத்தி மத்திய மாநில அரசுகள் பெரும் சிரத்தையுடன் இந்த பணியை முடித்திருக்கிறது என்றால் மிகவும் பாராட்டத்தக்கதே ! இந்த முகாம்களை சிறப்பாக நடத்திய சுகாதார துறை இலாகாவினர், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தேச அக்கறையுடன் தினமலர் ஒரு ‘ சல்யூட் ’ அடிக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் இந்த சேவையில் பங்காற்றிய 25 லட்சம் பேருக்கு பிரதமர் நன்றி தெரிவித்து கொண்டார்.

போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்ட, பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வின் எதிரொலியாக, இந்தியாவில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுள்ளது . மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் போலியோ பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு மற்றும் மக்களின் ஒத்துழைப்பு மூலமே இந்த வெற்றி பெற முடிந்தது இவ்வாறு அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.இந்தியாவில் கடந்த 2009 ல் 741 பேருக்கு இந்த பாதிப்பு இருந்தது . 2011 ஜனவரி மாதம் மேற்குவங்கத்தில் ஒரே ஒரு நபர் போலியோ பாதிக்கப்பட்டவர் கண்டறியப்பட்டார். ஒராண்டாக போலியோ பாதிப்பு இல்லை, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி லட்டில் தங்கத் திருகாணி!

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் லட்டு பிரசாதத்தில், தங்க நகை இருந்ததைக் கண்ட பக்தர் ஒருவர் ஆச்சரியமடைந்தார்.திருமலை கோவிலில் தினமும், 2 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் வரை தயாரித்து, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சித்தூர் மாவட்டம் பி.கொத்தகோட்டா டவுனில் ரங்கசமுத்திரம் சாலையில் வசிக்கும் சூரேரெட்டியப்பா, கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருமலைக்கு சென்றார். சாமி தரிசனத்திற்குப் பின், இவர் லட்டு பிரசாதங்களை வாங்கி வந்தார். இதில் ஒரு லட்டை, இதே டவுனில் சோகநாடி தெருவில் வசிக்கும் தனது நண்பரான சுபர்ணாச்சாரிக்கு வழங்கினார். இவர்கள் இந்த லட்டு பிரசாதத்தை திண்பதற்காக உடைத்துப் பார்த்தபோது, லட்டின் மையப் பகுதியில் வட்ட வடிவிலான, அரை கிராம் எடை கொண்ட தங்கத் திருகாணி இருப்பதைக் கண்டனர்.திருமலையிலிருந்து வாங்கி வந்த லட்டு பிரசாதத்தில் தங்கம் கிடைத்தது எங்களின் அதிர்ஷ்டம் என தம்பதியினர் தெரிவித்தனர்.கடந்த காலங்களில் பக்தர்கள் வாங்கிச் சென்ற லட்டு பிரசாதங்களில் இரும்பு ஆணிகள், கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு, பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே லட்டு பிரசாதத்தில் இப்போது தங்கம் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...