|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 May, 2012

டாஸ்மாக் மக்களின் ஈரலும் சிறுநீரகமும் கெட்டுப்போவதற்கு மறைமுகக் காரணமாக?

க்களின் ஈரலையும் சிறுநீரகங்களையும், அரசு மதுக்கடைகள் மறைமுகமாகப்பழுது​படுத்துகின்றன’ என்று, ஒரு விமர்சனத்தை முன்வைத்து, அரசை தலைகுனிய ​வைத்துள்​ளார் நீதிபதி சந்துரு.கடலூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்தவர் பால​முருகன். டாஸ்மாக் மதுக்கடையின் தற்காலிக ஊழியர். பாலமுருகனுக்குத் திருமணம் ஆகி ஒன்பது மாதத்தில் ஓர் ஆண்குழந்தை உள்ளது. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு டாஸ்மாக் கடையில் வேலைக்குச் சேர்ந்த பின்பு, அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய கிட்னி பாதிக்கப்பட்டு இருந்தது.'அறுவை சிகிச்சை மூலம், வேறு கிட்னிதான் பொருத்த வேண்டும்’ என்ற நிலையில், அவரது தாயார் ராஜேஸ்வரி, கிட்னி தானம் செய்ய முன்வந்தார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த பாலமுருகனால், மருத்துவமனை கேட்ட தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை.

அதனால், டாஸ்மாக் நிறுவனத்தில் நடப்பில் உள்ள இன்சூரன்ஸ் திட்டம் மூலமாக சிகிச்சைக்கான தொகையைப் பெறுவதற்காக கோரிக்​கை வைத்தார். 'தற்காலிகப் பணியாளருக்கு, சுகாதாரத் திட்டத்தின்படி அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். அதுவும் சிகிச்சை முடிந்த பிறகு, பில்களை ஒப்படைத்துத்தான் பெற முடியும்’ என்று நிர்வாகத் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்.இந்தப் பதிலால் நொந்துபோன பாலமுருகன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு அளித்த தீர்ப்பில்தான் அரசை விளாசித் தள்ளி விட்டார்.''ஊழியர்களுக்காகப் பல்வேறு சுகாதாரத் திட்டங்களை அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது. தற்காலிகப் 


பணியாளர்களுக்கான சுகாதாரத் திட்டத்துக்குள், மனுதாரர் பாலமுருகன் வருகிறார். அந்தத் திட்டத்துக்குக் கட்டணமாக, தனது ஒவ்வொரு மாத ஊதியத்தில் இருந்தும் 80 ரூபாயை அரசுக்குச் செலுத்துகிறார். அதை, டாஸ்மாக் நிறுவனமும் ஒப்புக்கொண்டு உள்ளது. ஆனால், விதிமுறைகளைக் காரணம் காட்டி, சிகிச்சைக்கு முன் பணம் தர முடியாது என்று, டாஸ்மாக் நிறுவனம் மறுத்து உள்ளது. மேலும், அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை செய்துகொள்ள மனுதாரர் பால முருகனுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.தான் எங்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். டாஸ்மாக் நிறுவனமும், அது முன்வைக்கும் விதிமுறைகளும் அதை முடிவு செய்யக்கூடாது. தன்னுடைய ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை சுகாதாரத் திட்டத்துக்காக செலுத்தும் அரசு ஊழியர், தனக்கான மருத்துவச் செலவை அரசிடம் கேட்பதற்கு முழு உரிமை பெற்றவர் ஆகிறார். அவருக்கு உரிய மருத்துவச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவர் சார்ந்துள்ள அரசு நிறுவனத்தின் கடமையும் ஆகிறது.2007-ல் சுகாதாரத் துறைக்கு எதிராகத் தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கின் தீர்ப்பில், 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வாழும் ஒவ்வொருவருக்கும் உணவு, தூய்மையான குடிநீர், ஆரோக்கியமான சுற்றுப்புறம், கல்வி மற்றும் மருத்துவ வசதியை அரசிடம் கேட்டுப் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது. அவற்றைக் குடிமக்களுக்கு வழங்க வேண்டியதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் முதன்மையான கடமையும் ஆகும். பணியில் இருக்கும் அரசு ஊழியர் நோயில் சிக்கும்போது, அவருக்குத் தேவையான மருத்துவ வசதியைச் செய்து தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.ஆகவே, மனுதாரரின் சிகிச்சைக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும், டாஸ்மாக் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை உறுதி செய்து, மனுதாரர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மனைக்கு ஒப்புதல் கடிதம் தரவேண்டும். மருத்துவமனைக்குக் கடிதம் தரும் முன் அதன் நகலை மனுதாரருக்கும் வழங்க வேண்டும்.


மது விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம், மக்களின் ஈரலும் சிறுநீரகமும் கெட்டுப்போவதற்கு மறைமுகக் காரணமாக இருக்கிறது. மக்களின் ஆரோக்கி​யத்தைக் கெடுக்கும், மதுவை விற்று, ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாயை டாஸ்மாக் நிறுவனம் சம்பாதிக்கிறது. ஆனால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஓர் ஊழியரின் சிகிச்சைக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டும்தான் வழங்க முடியும் என்கிறது. ஒரு லட்சம் ரூபாயில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். எனவே, மனுதாரருடைய மருத்துவச் செலவு முழுவதையும் டாஸ்மாக் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். விதிமுறைகளைக் காரணம் காட்டி, விளக்கங்களை அள்ளித் தெளித்து அவற்றின் பின்னால் டாஸ்மாக் நிறுவனம் ஒளிந்துகொள்ள முடியாது'' என்று உத்தரவு போட்டார்.இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள், நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நடவடிக்கை​களை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், நீதிபதி சந்துருவின் தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.இப்போது, உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்கி, ஆபரேஷன் செய்து​ கொண்ட பாலமுருகன், 'அரசு பணம் வந்துவிடும்... கடனை எல்லாம் அடைத்து விடலாம்’ என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். அவரது நம்பிக்கையை அரசு காப்பாற்றட்டும்!

தேசிய பழக்கம்...?

ஆறு மாதத்தில் மும்பை மாநகராட்சி பெற்ற வருவாய் 2.24 கோடி ரூபாய்! எப்படி இந்த வருமானம் கிடைத்தது என தெரிந்தால் மற்ற மாநகராட்சியும் முயற்சி செய்யலாம். ஆமாம் எப்படி கிடைத்தது ? எல்லாம் மும்பை மக்களின் கைங்கரியம் தான், இல்லை இல்லை வாய் சாமார்த்தியம் விசயம் ஒன்னும் பெரிசா இல்ல சின்னது தான், முடிஞ்ச வரை கண்ட இடத்துல துப்பி வைக்கணும், இதை மக்கள் ஒழுங்கா கடை பிடிக்காததால மாநகராட்சிக்கு வருமானம்..எந்த அளவு துப்பினாங்களோ அந்த அளவுக்கு வருமானம்தான். அப்படி மாஞ்சி மாஞ்சி துப்பிய மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1 லட்சத்து 10 ஆயிரம்? பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காக தலா 200 அபராதம் வாங்கி சேர்த்த பணம்! இந்த தப்புக்காக இந்தளவு வருமானம் பார்க்க முடியுங்கிறது மக்களாகிய நமக்கு பெருமையோ பெருமை தான். நாடு பொருளாதாரத்துல முன்னேறனும்னா எவ்வளவு வேண்டுமானாலும் துப்புங்க...துப்பிகிட்டே இருங்க...



பாக்கு, பான் பீடா, பான் மசாலா, புகையிலை, வெற்றிலை என எதையாவது மென்றுகொண்டே இருப்பது நம்மவர்களின் பழக்கமாகி விட்டது. இவ்வாறு மெல்லுவதால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்...அசை போடுறதோட மட்டுமில்லாம போற வர்ற இடத்திலெல்லாம் துப்பி அசிங்கப்படுத்துகிறார்கள். கூடவே எச்சில் மூலம் பரவும் கிருமிகள் காற்றில் கலந்து காச நோயை ஏற்படுத்துகிறது.மும்பையில் மட்டும் கடந்த வருடம் 9,168 பேர் இருமல் மற்றும் எச்சில் மூலம் பரவும் காசநோயால் பலியாகி உள்ளனர். இதனால்தான் பொது இடங்களில் எச்சில் துப்ப அங்கு தடை விதிக்கப்பட்டது. அபராதம் 200 ரூபாய் பிடிபட்டவர்கள் 6 மாதத்தில் ஒரு லட்சம் பேர் என்றால் பல லட்சம் பேர் தப்பி இருப்பார்கள்...!? யார் யார் எங்கே துப்புகிறார்கள் என உற்று பார்த்துக்கொண்டே இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் நிலை பரிதாபம். 'உன் அப்பன் போட்ட ரோடா , நான் அப்படிதான் துப்புவேன்' என விதண்டாவாதம் பண்ணும் இந்தியகுடிமகன்களையும் சமாளித்தாக வேண்டும்.

மாநகராட்சிதான் இதில் கவனம் செலுத்தணும் என்றில்லை.அவரவருக்கு சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம். அவ்வாறு துப்புவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லை...மிக ஒற்றுமையாக எல்லோரும் சேர்ந்தே துப்பி கெடுக்கிறார்கள்.'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிசயம்' சொல்வது மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளே!


Read more: http://www.kousalyaraj.com/2012/04/blog-post_19.html#ixzz1uxIJDgaK

தனி நபர் வளர்த்த காடு...

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ? கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்..



அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார்.1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள  ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின்படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - 200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண்  பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் ! 

இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூககடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம் மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர். இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்கபட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக்கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்.

இரயில், பேருந்துகளில் திருக்குறள்!


உலகம் முளுவதும் தமிழர்களும், தமிழழும் அறிமுகமாக பல காரணங்கள் உண்டு. கடந்த 35 வருடங்களாக உலகின் எந்த மூலைக்கு போனாலும் தமிழன் என்றால் ARE YOU A TIGER [ நீங்கள் புலியா ] என்றுதான் கேட்பார்கள். என்னையே உலகின் கடைக்கோடியில் உள்ள பல நாடுகளில் இப்படி கேட்டிருக்கின்றார்கள்.5 வருடங்களாக மட்டுமல்லாது இந்த உலகத்தில் தமிழன் என்று ஒருவன் இருக்கின்றான் அவன் தமிழீழத்தில் வாழ்ந்தான், வாழ்கின்றான் என உலகம் தமிழனை அறிய காரணம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே.
ஆனால் இலக்கிய ரீதியாகவும், உலக தத்துவங்கள்,ஆராய்ச்சிகள் ஊடாகவும் ”தமிழ்” உலகம் அறிய காரணம் திருக்குறள் என்றால் அது மிகையாகாது.உலகின் பல மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்த திருக்குறளின் பெருமை உணர்ந்து அனைவரும் அறியும் விதமாக பிரான்ஸ் அரசு தங்களுடைய இரயில்களிலும் பேருந்துகளிலும் எழுதியுள்ளதோடு அதற்கு அருகில் எழுதியவர் தமிழர் திருவள்ளுவர் எனவும் எழுதியுள்ளார்கள். தமிழின், தமிழனின் பெருமை தமிழன் உணர்ந்துள்ளானோ இல்லையே ஆனால் வேற்று மொழி நாடுகள் நன்கு உணர்ந்துள்ளார்கள் .படத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் இதுதான்
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் 
காதலை வாழி மதி 
Tu aurais tes adorateur, Ô Lune 
si tu rayonnais comme le visage de la femme. 
Farewell, O moon! If that thine orb could shine Bright as her face, thou shouldst be love of mine Explanation : If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ? 
விளக்கம்: முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக. 

அப்படியா?


காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை. 

அறிய வேண்டிய சில முக்கிய தகவல்கள்!

1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல  


நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். 


அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.



2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் 


ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது


http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.


3.பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து



http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது 


நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.





4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 


9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.


5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... 



போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள 


அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய 


அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.




6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து 


இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் 


கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் 


கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை 


எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் 


நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற 


சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் 


ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க 


முயற்சிக்கலாம்.




7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண 


வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் 


பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு 


அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!




8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் 


வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் 


சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி 


கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/



9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை 


இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. 


மேலும் விபரங்கள் பெற 9916737471





10.இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது 



அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய் முகவரி:


East Canal Bank Road, Gandhi Nagar,

Adyar Chennai - 600020


Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்


தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241





11) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து 


தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் 


சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் 


வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

இதே நாள்...


  • உலக குடும்ப தினம்
  • பராகுவே விடுதலை தினம்(1811)
  • மெக்சிகோ, தென்கொரியா ஆசிரியர் தினம்
  • டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது(1978)
  • மாஸ்கோவில் சுரங்க ரயில் சேவை ஆரம்பமானது(1935)

இன்று சர்வதேச குடும்ப தினம்


ஒவ்வொருவரும் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில், மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம், கொண்டாடப்படுகிறது.உலகம் முழுவதும் பலர், வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்பம், இவர்களைத் தான் சார்ந்து உள்ளது. என்ன தான் இவர்கள், குடும்பத்திற்கு வருமானமோ அல்லது பாசத்தையோ அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. விவாகரத்துகள், தந்தை, தாய் இல்லாத குழந்தைகள், ஒருங்கிணைப்பு இல்லாத குடும்பங்கள் போன்றவை நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தான் பலருக்கும் கவலை அளிக்கிறது. இத்தினத்திலாவாது குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்

காளியின் பெயரில் பீர் விற்பனை.

இந்து கடவுளான காளியின் பெயரில் அமெரிக்காவில் ஒரு நிறுவனம் பீர் விற்பனை செய்துவருவதையடுத்து அதுகுறித்து அமெரிக்க தூதரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.ஓரேகான் மாகாணத்தைச் சேர்ந்த பர்ன்சைட் பிரீவிங் நிறுவனம் அந்த பீரை விற்பனை செய்து வருகிறது. அந்த பீரின் பாட்டில்களில் காளியின் படமும் அச்சிடப்பட்டுள்ளன.இது இந்துக்களின் மத உணர்வுகளை வேதனைப்படுத்துவதாக பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் கூறினார்.மற்ற மதத்தினரின் கடவுளை இதுபோலக் காட்ட முடியுமா என அவர் ஜீரோ நேரத்தின்போது கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அமெரிக்க தூதரை அழைத்து விசாரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணைஅமைச்சர் ராஜிவ் சுக்லா, இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறையிடம் கொண்டுசெல்கிறேன் என்று தெரிவித்தார்.

இல்லறம் நல்லறமாக...

தம்பதியரிடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும்.இடையில பேசாதீங்க குடும்பத்தில் எப்பவுமே சண்டை என்று ஆரம்பித்தால் குரல் உயர்த்திப் பேசுவதை யாராவது ஒருவர் நிறுத்தவேண்டும். இடைமறித்துப் பேசுவதையும் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினை பெரிதாகாமல் இருக்கும்.தவறை ஒப்புக்கொள்ளுங்கள் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தாதீர்கள்.யார் மீது தவறு என்றாலும் அதை ஒப்புங்கள். அப்பொழுதுதான் குடும்பத்தில் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

அடிக்க கை நீட்டாதீர்கள் எந்த சூழ்நிலையிலும் துணையை அடிக்க கை நீட்டாதீர்கள். அப்புறம் பிரச்சினையை தீர்க்கவே முடியாத அளவிற்கு அது தொடர்கதையாகிவிடும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை நேரடியாக தெரிவித்துவிடுங்கள். பூடகமாக பேசுவதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது.கோபத்திற்கு முற்றுப்புள்ளி எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு சமாதான பேச்சு மூலம் தீர்வு காண முயலுங்கள். பெரும்பாலான குடும்பங்களில் தம்பதியர் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்ளாததே பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. எனவே எந்த பிரச்சினை என்றாலும் ஒருவருக்கொருவர் பேசி பிரச்சினையை தீர்க்க முயலுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

மனித உரிமை மீறலாகவே?


கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு சர்வதேச மன்னிப்பு சபை ஆதரவு தெரிவித்துள்ளது.இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசும் இந்திய அரசும் தொடர்ந்து அணு உலை போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கின்னஸ் சாதனையாக 5,000 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது. கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்டோர் மீது பிரிவினைவாத வழக்குகளும், பல்வேறு வழக்குகளும் போட்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

உதயகுமாரின் மீது போடப்பட்ட பொய் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமாயின் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை வாசம் கிடைக்கக்கூடும். இயற்கையை பாதுகாக்க பாடுபாடும் உதயகுமார் போன்றோருக்கு இந்திய அரசு கொடுக்கும் பரிசு இது. மேலும் இடிந்தகரையை சுற்றிலும் 144 தடை உத்தரவு போட்டு ஊருக்குள் யாரும் போகவோ வெளியே வரவோ முடியாதபடி செய்துள்ளது அரசுஇதை சர்வதேச மன்னிப்பு சபை மனித உரிமை மீறலாகவே கருதுகிறது. அதனால் உலகில் உள்ள அனைவரையும் இந்திய அரசுக்கு தகவல் அனுப்புமாறு சர்வதேச மனிப்பு சபை கேட்டுக்கொள்கிறது. உலகில் உள்ள யாவரும் இந்த கோரிக்கையை இந்திய அரசுக்கு எழுதலாம்.

1. அமைதியாக போராட்டம் நடத்தி வரும் போராளிகளின் மேல் போடப்பட்ட பொய்யான வழக்குகளை திரும்பப் பெறு.

2. சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் முகிலனை விடுதலை செய்.

3. 144 தடை உத்தரவை உடனே நீக்கு. ஊர் மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதி. 

4. சர்வதேச, இந்திய சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படும் அமைதி வழிப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கு. அவர்களின் கருத்துரிமைக்கு மதிப்பளி.இந்த கோரிக்கைகளை வரும் ஜூன் மாதம் 22ம் தேதிக்குள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்ள மானியம் ஜெயலலிதா!


சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய புனித இடங்களுக்கு யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு தமிழக அரசு பயணச் செலவுக்கு மானியம் வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அவர் தாக்கல் செய்த அறிக்கையில்,"ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் இறைவனை காணும் பணி மேற்கொள்வோம்' என அனைத்து மதத்தினரும் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.கிறிஸ்தவ பெருமக்கள் ஜெருசலம் புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேரபாளத்தில் உள்ள முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப்படும் என்று 2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.

எனது வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் என்றும், இந்தத் திட்டம் அனைத்து கிறிஸ்துவப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும் என்றும், முதற்கட்டமாக, 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்றும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நான் அறிவித்தேன். இதனையடுத்து, இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன. இந்துக்களைப் பொறுத்த வரையில், ஆன்மீகம் தேடும் ஒவ்வொருவருக்கும், ஒரே ஒரு முறையாவது சீனாவில் உள்ள மானசரோவர் சென்று பார்க்க வேண்டும் என்பதும், நேபாள நாட்டில், சாளக்கிராம் மலையில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றான முக்திநாத் சென்று தரிசிக்க வேண்டும் என்பதும் அவர்களது விருப்பமாக இருந்து வருகிறது.இதன் அடிப்படையில், இந்த திருத்தலங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இருப்பினும், பொருளாதார அடிப்படையில் பின் தங்கியுள்ள இந்து பெருமக்களுக்கு இது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. 

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாள நாட்டில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு செல்ல விரும்பும் இந்துக்களின் பயணச் செலவுக்கு மானியம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த அரசு மானியம், மானசரோவர் புனித யாத்திரைக்குச் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தேர்வு செய்யப்படும் தமிழ்நாட்டைச் சார்ந்த 250 இந்துக்களுக்கும், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்களுக்கும், ஆக மொத்தம் 500 பேருக்கு வழங்கப்படும்.மானசரோவர் புனிதப் பயணத்திற்கு 1 நபருக்கு ஆகும் மொத்த செலவான 1 லட்சம் ரூபாயில் 40,000 ரூபாயும், முக்திநாத் புனிதப் பயணத்திற்கு ஒரு நபருக்கு ஆகும் செலவான 25,000 ரூபாயில், 10,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

ராஜபக்சேவை விரட்டியடிக்க இங்கிலாந்து தமிழர்கள் திட்டம்!


இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் முடிசூட்டி 60 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு வைர விழா லண்டனில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும்படி காமன்வெல்த் நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இதில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்கிறார். இதை கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து வர இருக்கும் அதிபர் ராஜபக்சேவுக்கு அங்கு வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரை வர விடாமல் விரட்டியடிக்கும் வகையில் பல போராட்டங்களை அறிவித்துள்ளனர். முதலாவதாக ராணி எலிசபெத்துக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த எதிர்ப்பு தபால் அட்டைகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி அவர் லண்டன் வரும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அணி திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் லண்டனில் உள்ள ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ராஜபக்சே சென்று இருந்தார். அப்போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்த புலம் பெயர்ந்த தமிழர்கள் முடிவு செய்து இருந்தனர். 

ஆனால் ராஜபக்சேயுடன் சென்றிருந்த அவரது பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக போர் குற்ற வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உரையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக யூனியன் ரத்து செய்தது. இதற்கிடையே, இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்திலும், அவர் தங்கியிருந்த ஓட்டலின் முன்பும் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அச்சம் அடைந்த அவர் மாற்று வழி மூலம் இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். அதையும் அறிந்த தமிழர்கள் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதனால் பயந்த ராஜபக்சே இரவோடு இரவாக கொழும்பு திரும்பினார்.அதே நிலையை தற்போதும் உருவாக்க இங்கிலாந்து வாழ் தமிழர்கள் திட்டமிட்டுள்ளனர்

ரூ.500 வழிப்பறி செய்த வழக்கில் 50 ஆயிரம் அபராதம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கட்டைமேடு குட்டை கிராமத் தைச் சேர்ந்தவர் பார்த்திபன். ரூ.500 வழிப்பறி செய்த வழக்கில் இவரை மாங்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருக்கு காஞ்சீபுரம் செசன்சு கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் நிபந்தனை ஜாமீன் கொடுத்தது. அந்த ஜாமீன் உத்தரவில் ரூ.10 ஆயிரத்திற்கான ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மாதம் வரை நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ரூ.50 ஆயிரத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 5 ஆண்டுக்கு டெபாசிட் செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மாற்றி அமைக்க கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பார்த்திபன் மனுதாக்கல் செய்தார். இவரது சார்பில் வக்கீல் என். துரைசாமி ஆஜராகி வாதாடினார். 

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ் ரூ.50 ஆயிரம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும் என்று காஞ்சீபுரம் கோர்ட்டு விதித்த நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், ‘’ஜாமீன் வழக்கில் நிபந்தனை விதிக்கலாம். ஆனால் அந்த நிபந்தனையானது இதுபோன்ற நிபந்தனை விதிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது. நிபந்தனையை நிறைவேற்றும் தகுதி மனுதாரருக்கு இருக்கிறதா? என்பதை கோர்ட்டு கவனத்தில் கொள்ளவேண்டும்.பணம் வேண்டும் என்பதற்காகத்தான் மனுதாரர் வழிப்பறி செய்துள்ளார். அவருக்கு மேலும் 2 பூஜ்ஜியத்தை சேர்த்து அபராதம் விதித்தது இயற்கை நீதிக்கு மாறானது’’கூறியுள்ளார்.

அனுபவிக்க மாணவனை கடத்திய பெண்!


குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த முதலார் ஓடவிளை பகுதியை சேர்ந்தவர் ரவி (29). கொத்தனார். இவரது மனைவி விஜி (27). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். ரவியின் பக்கத்து வீட்டில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இவன் கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம்.இந்த நிலையில் ரவி இல்லாத நேரத்தில் சிறுவன் விஜியின் வீட்டுக்கு வந்து, அவரது பிள்ளைகளுடன் விளையாடுவான். அப்போது விஜிக்கும், சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சிறுவனை அழைத்து வந்து விஜி உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அறிந்த ரவி மனைவியை கண்டித்தார். இந்நிலையில் விஜி நேற்று முன்தினம் இரவு கணவன் மற்றும் குழந்தைகள் தூங்கிய பின் வீட்டிலிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அதே நேரத்தில் அவருடன் உல்லாசமாக இருந்த சிறுவனையும் காண வில்லை. 

இது குறித்து ரவி நேற்று மாலை திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில் சிறுவன் தந்தை , திருவட்டார் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில்,’’எனது மகனை விஜி, ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி வீட்டுக்குள் அழைத்து உள்ளார். முதலில் நாங்கள் இதை பெரிதாக கண்டு கொள்ள வில்லை. பின்னர் தான் விஜி, எனது மகனிடம் தவறாக நடக்கிறார் என்பது தெரிந்து நாங்கள் கண்டித்தோம். எனது மகன் 10ம் வகுப்பு முடித்து விட்டு ஒரு வருடம் வீட்டில் இருந்தான். இந்த வருடம் அவனை 11ம் வகுப்பில் சேர்க்க திட்டமிட்டு இருந்தோம். இந்த நேரத்தில் நேற்று முன் தினம் விஜி, எனது மகனை அழைத்து நாம் இங்கு இருந்தால் நம்மை பிரித்து விடுவார்கள். ஊரை விட்டு ஓடி விடுவோம் என கூறி எனது மகனை அழைத்து சென்று விட்டார். மேலும் எனது வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம், மூன்றரை பவுன் நகை, பைக் ஆகியவற்றையும் எடுத்து சென்று உள்ளனர். அவனது நண்பர்களிடம் விசாரித்த போது எனது மகனை பலவந்தப்படுத்தி விஜி, கடத்தி சென்றது தெரிய வந்தது. இதற்கு விஜியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று  கூறி உள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலை, கால்கள் துண்டிக்கப்பட்டு 49 பேர்!


மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சான் ஜுயன் என்ற இடத்தில் பிளாஸ்டிக் மூட்டைகளில் கட்டப்பட்டு 49 பேரின் உடல்கள் கிடந்தன. இதில் 43 ஆண்கள், 6 பெண்கள் உடல்களாகும். பலரது தலைகள், கை-கால்கள் வெட்டி துண்டிக்கப்பட்டு இருந்தன. எனவே இந்த 49 பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, பின்னர் உடல்களை மூட்டையில் கட்டி கொண்டு வந்து வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.இந்த கொடூர செயலை போதைப்பொருள் கடத்தல் கும்பல் செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தலைகள், கை-கால்கள் வெட்டப்பட்டு உடல்கள் உருக்குலைந்து இருப்பதால் இவர்கள் யார்? என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் போலீசார் கூறுகிறார்கள். இந்த பிணங்கள் கிடந்த இடம் அமெரிக்க எல்லையை ஒட்டிய பகுதியாகும்.

பிரிந்து வாழ்பவர்களின் சதவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகம்!

தமிழ்நாட்டில் துணை இழந்தவர்கள், விவாகரத்துப் பெற்றவர்கள் மற்றும் திருமண உறவிலிருந்து பிரிந்து வாழ்பவர்களின் சதவிகிதம் இந்தியாவிலேயே அதிக சதவிகிதம் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அது 8.8 சதவிகிதம் என அறியப்பட்டுள்ளது. அதற்கடுத்த நிலையில் ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் வருகின்றன. காதல்கொண்ட கணவனும் மனைவியும் பிரிந்துவாழும் முடிவெடுப்பதற்கான சமூகவியல் காரணங்கள் என்ன? மின்னல் வேகத்தில் நடக்கும் நகர்மயமாதல், பெருகிவரும் மென்பொருள்துறை வேலைவாய்ப்புகள், கூடுதலான ஊதியம், உயர்கல்வி வாய்ப்புகள் என தமிழர்களின் வாழ்க்கை அதிவேக வளர்ச்சியைக் கண்டுவருகிறது. அதுவே தற்போது எழும் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகவும் தொடர்புள்ளதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. மேலும் அரசே நடத்தும் மதுக்கடைகளால் குடிநோயாளிகளாக மாறிவரும் ஆண்கள், அடிக்கடி நிகழும் சாலை விபத்துக்கள் ஆகியவையும்கூட விதவைகள் அதிகரிக்க காரணமாக இருக்கக்கூடும். தமிழ்ச் சமூகம் தொண்ணூறுகளுக்குப் பிறகு கண்டுவரும் அதிநவீன முன்னேற்றத்தின் எதிர்விளைவுதான் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள உண்மைகள்.

விதவைகள் அதிகமாகி இருப்பதற்கான சூழலுக்கு குடியும் ஒரு காரணமா? சாராயம்தான் முதல் காரணம் என்று உறுதியாகவும் புள்ளிவிபரத்துடனும் பேசுகிறார் `பாடம்' பத்திரிகை ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நாராயணன், "ஒரு கிராமத்துக்கு சராசரியாக 60 விதவைகள் வாழ்கிறார்கள். 5 லட்சம் குழந்தைகள் அனாதை இல்லங்களில் இருக்கிறார்கள். அவர்கள் அனாதைகள் அல்ல. ஒற்றைப் பெற்றோரைக் கொண்டவர்கள். சாலை விபத்துக்களும் ஒரு காரணம். ஒரு ஆண்டுக்கு 16 ஆயிரம் ஆண்கள் இறந்துபோகிறார்கள். அதில் 60 சதவிகிதம் விபத்துகள் குடியால் ஏற்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்து மருத்துவம் தனியார்மயமாவதால் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. மக்கள் பயன்பெற முடியாத அளவுக்கு மருத்துவமனைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் மதுபான விற்பனை வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது என்றால் விதவைகளும் அதிகரிக்கிறார்கள் என்று அர்த்தம்" என்று நெஞ்சைச் சுடும் உண்மைகளை தசஇயிடம் எடுத்துவைக்கிறார்.

இளைஞர்களும் இளம்பெண்களும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கான மிகப்பெரிய வலைதளமான பாரத் மேட்ரிமோனி. காம் இயக்குநர் முருகவேல் ஜானகிராமன், சமூகத்தில் சகிப்புத்தன்மை குறைந்துவருவதுதான் விவாகரத்துக்கான முக்கிய காரணம் என்று சொல்கிறார். தசஇயிடம் பேசிய அவர், ஒரு கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்வதற்கு பல காரணங்களை நாம் சொல்லமுடியும். சமூக ஒத்துழைப்பு குறைந்துவிட்டது. முன்பெல்லாம் ஒரு பிரச்னை என்றால் குடும்பத்தில் மூத்தவர்களிடம் பேசித் தீர்த்துக்கொள்ளமுடியும். கூட்டுக்குடும்பம் குலைந்துவிட்டது. சிறு குடும்பங்களாக உருவாகிவிட்டன. அந்தக் காலத்தைப்போல பெண்கள் பொருளாதார காரணங்களுக்காக ஆண்களை நம்பி வாழ்ந்த நிலை மாறிவிட்டது. இருவரும் தனித்துவமாக வாழ நினைக்கிறார்கள். குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் குறைந்துவிட்டது. அந்த நேரத்தை சமூக நிகழ்ச்சிகளும், தொலைக்காட்சியும் எடுத்துக்கொண்டுவிட்டன. எங்களைப் பொருத்தவரை திருமணங்கள் வெற்றிகரமாக அமைந்தால்தான் குழந்தைகள் நல்ல குடிமகன்களாக உருவாகமுடியும். திருமணம் முறிந்தால் அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. ஒரு வலிமையான சமூகத்தின் ஆணிவேராக திருமணமே இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகமாக துணையை இழந்தும் பிரிந்து வாழ்கிறார்கள் என்கிற செய்தி ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. மிக மலினமான காரணங்களுக்காக பிரிவதும் அதிகமாகிவிட்டதும் கவலையளிக்கிறது" என்கிறார். 

மற்ற மாநிலங்களைவிட தமிழகப் பெண்கள் அதிக விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் தசஇயிடம் பேசிய மனநல உளவியல் மருத்துவர் ஷாலினி, "கிராமத்துப் பெண்களுக்கும்கூட தங்களது உரிமைகள் பற்றிய தெளிவு வந்துவிட்டது. முன்பெல்லாம் கணவன் அடித்தாலும் உதைத்தாலும் பொறுத்துக்கொண்டார்கள். பொருளாதார சுதந்தரமும் பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்கான விழிப்புணர்வை திராவிட இயக்க எழுச்சியும் தமிழ் மண்ணில் ஏற்படுத்தியிருக்கிறது. மனைவி போய் மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துவிடுவாளோ என்ற பயத்தில் கணவர்கள் முந்திக்கொண்டு விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிறார்கள். மென்பொருள் துறை வளர்ச்சி மட்டும் காரணமல்ல. கிராமங்களிலும்கூட அதிகமாக விவாகரத்துகளும் பிரிந்து வாழுதலும் அதிகரித்திருக்கின்றன" என்று விளக்கம் தருகிறார். சமூக ஆர்வலர் அ.மார்ஸ், ஆண்களும் பெண்களும் பிரிந்துவாழ்வது கவலைப்படக்கூடிய விஷயமல்ல என்று ஒரு மாறுபட்ட பார்வையில் கருத்தை முன்வைக்கிறார். "பொதுவாக தனிநபர்களின் சராசரி ஆயுள் அதிகரித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். எனவே விதவைகள் அதிகமாக இருப்பதற்கான காரணமா குடியைச் சொல்லமுடியாது. துணையை இழந்தவர்களும் விவாகரத்துப் பெற்றவர்களும் தனித்து வாழ்கிறவர்களும் சேர்ந்துதான் இந்த கணக்கெடுப்பில் சொல்கிறார்கள். சமகாலப் பெண்களிடம் தனித்து வாழ்வதற்கான உணர்வும் சுதந்தரமும் இருக்கிறது. ஏன் சகித்துக்கொள்ள வேண்டும் என்கிற கேள்வி அவர்களிடம் வந்திருக்கிறது" என்று சமூக எதார்த்தம் பற்றிப் பேசுகிறார். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...