|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 February, 2012

இதே நாள்...

  • லித்வேனியா விடுதலை தினம்(1918)
  •  இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி தாதாசாஹெப் பால்கே இறந்த தினம்(1944)
  •  கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது(2005)
  •  வொலஸ் கரோத்தேர்ஸ், நைலானுக்கான காப்புரிமம் பெற்றார்(1937)
  •  எக்ஸ்புளோரர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது(1961

ஃபேஸ்புக்கிலேயே ரயில்களில் இடவசதி...


ஃபேஸ்புக் இருந்தால் அனைத்தும் சாத்தியம்தான் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆம், ஃபேஸ்புக் தற்போது ரயில்களில் இடவசதி மற்றும் ரயில்களின் கால அட்டவணை குறித்த விபரங்கள் பற்றிய சேவையை வழங்க உள்ளது.
பயனீட்டாளர்களுக்கு ஃபேஸ்புக் நித்தமும் புதிய வசதிகளை கொடுத்த வண்ணம் இருக்கிறது. இப்பொழுது டெல்லி ரயில்வே ஃபேஸ்புக்கில் இணைய உள்ளது. இதனால் ரயில் டிக்கெட், இடவசதி குறித்த விபரங்கள், ரயில்களின் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் குறித்த கால அட்டவணை உள்ளிட்ட ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் இனி ஃபேஸ்புக் மூலம் அறிந்து கொள்ளலாம்..தேசிய ரயில்வே விசாரணை சேவை வசதியுடன் ஃபேஸ்புக் இணைக்கப்பட இருப்பதாக டெல்லி ரயில்வே துறையின் மூத்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் வசதி இப்பொழுது நிறைய மொபைல்களிலேயே வழங்கப்படுகிறது.
இதனால், ரயில் பயணிகள் இனி தங்களது மொபைலில் இருந்தே ஃபேஸ்புக் மூலம் அனைத்து ரயில்வே விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம் என்று டெல்லி ரயில்வே தெரிவித்துள்ளது.கையில் வைத்திருக்கும் மொபைலில் ஃபேஸ்புக் வசதி இருந்தால் போதும். இதில் ரயில் வருகையில் இருந்து அனைத்து விதமான தகவல்களையும் எளிதாக பெறலாம். இதில் ரயில் வந்து நிற்கும் ப்ளாட்ஃபார்ம் நம்பர் முதல் கொண்டு சரியாக பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

the world's most expensive city in a new survey.



Top 10
Rank                City                 Country                       WCOL index (New York= 100)
1                     Zurich              Switzerland                 170
2                     Tokyo              Japan                           166
3                     Geneva           Switzerland                 157
3                     Osaka             Japan                            157
5                     Oslo                Norway                         156
6                     Paris               France                           150
7                     Sydney           Australia                       147
8                     Melbourne    Australia                       145
9                     Singapore       Singapore                  142
10                   Frankfurt        Germany                     137
Bottom 10
Rank                City                 Country                       WCOL index (New York= 100)
120                 Muscat            Oman                            63
123                  Dhaka             Bangladesh               61
124                 Algiers            Algeria                          59
125                Kathmandu    Nepal                            58
125                 Panama City   Panama                     58
127                 Jeddah            Saudi Arabia              57
128                 New Delhi       India                            56
129                 Tehran            Iran                              54
130                  Mumbai          India                            52
131                 Karachi           Pakistan                     46
உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் எவை என்பது குறித்து சர்வதேச அளவில் 130 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. உணவு, துணிமணிகள் வாங்குதல், வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, கல்வி கட்டணம் ஆகிய புள்ளி விவரத்தை வைத்து இதை தீர்மானித்தனர். இதில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களில் மிகவும் செலவு ஏற்படுவதாக தெரியவந்தது.

இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகர் தான், டோக்கியோவை முந்திக் கொண்டு முதலிடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு சூரிச் 5 வது இடத்தில் இருந்தது. முதல் 20 இடங்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 5 நகரங்கள் இடம் பெற்றன. சிட்னி 7 வது இடமும், மெல்போர்ன் 8 வது இடமும் பெறுகிறது.

தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் கனடாவில் உள்ள வான்கவுவெர் நகரம், அமெரிக்க நகரங்களை விஞ்சி 37 வது இடம் பெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சீனாவின் சாங்காய் ஆகியவை 42 வது இடத்தையும், நிழூயார்க் 47 வது இடமும் பெற்று இருக்கின்றன.

ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் ஒரு இடம் முன்னேறி 9 வது இடத்திலும், சியோல் 9 இடம் உயர்ந்து 27 வது இடத்திலும் உள்ளன. இந்திய துணை கண்டத்தில் மிகவும் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை நகரங்களும், பாகிஸ்தானில் உள்ள கராச்சியும் இடம் பெற்றுள்ளன


திருஷ்டி கழிக்க...

திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களால் நாம் சூழப்பட்டிருப்பது. த்ருஷ் எனில் பார்த்தல். நம்மை சிலர் நோக்கும்போது நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டார்கள் எனில் அவை நம்மை தாக்கக்கூடும். தற்காலத்தில் உளவியல் அறிஞர்கள்கூட பாசிட்டிவ் திங்கிங், நெகட்டிவ் திங்திங் என எண்ணங்களின் தன்மைகளைப் பிரித்து இருக்கிறார்கள். மற்றவர்கள் இப்படித்தான் நினைக்கவேண்டும் என்று நாம் கட்டளை இடமுடியாது. எனினும், மழை பெய்தால் நாம் ஒரு குடையை பிடித்துக்கொண்டு நம்மை தற்காத்துக் கொள்கிறோமோ, அதுபோன்று நமது புருவ மத்தியில் தூய மஞ்சளினால் ஆன குங்குமத்தை வைத்துக் கொள்ளுதல், பெண்கள் சிறப்பாக மஞ்சள் தேய்த்து நீராடுதல், வீட்டு நிலைக்காலில் மஞ்சள் போன்ற மங்கள சின்னங்களை வைத்தல், பார்த்தவுடன் மற்றவர்களின் மனதில் மாற்று எண்ணம் வருவதுபோல் நமது வீட்டுவாசலில் பொம்மைகள், படங்கள் வைப்பது, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை வைப்பது இப்படி பல வழிமுறைகள் தீய த்ருஷ்டியை போக்குவதற்கும், நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ளது.  தந்திர சாஸ்திரங்களிலும் பெரியோர்களின் பழக்க வழக்கங்களினாலும் அந்தந்த ஊர்களில் இருக்கக்கூடிய வழக்கங்களிலும் உள்ளவற்றைக் கடைப்பிடிக்கலாம். இவற்றைத் தவிர நாம் முக்கியமாகக் கொள்ள வேண்டியது கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து நாம் மற்றவர்கள் மீது பொறாமைப்படாமல் இருப்பது, எண்ணம் போல் வாழ்வு என்பதுபோல் நாம் தூய எண்ணத்துடன் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டோமானால் சூரியனைக் கண்ட பனி போல எப்படிப்பட்ட தீய சக்திகளும் நம்மை அண்டாத வண்ணம் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்.

Ex-US President Eisenhower secretly met ‘aliens’ 3 times


வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகிஉள்ளது.உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிவைட் டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார்.எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய அதிபர் டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் ராணுவ விமான தளத்தில் மூன்றுமுறை சந்தித்தனர் என கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.வேற்று கிரக மனிதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மனிதர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த தகவல் இதுவரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால் குட் இன் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை. இதன்மூலம் வேற்று கிரக வாசிகள் உள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான 



அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் 



தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை 




அழிவுக்குக் காரணமாகும்.




2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் 





சக்தி குறைவுக்குக் காரணமாகும்.



3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.



4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் 





தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.



5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் 





பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், 





மூளை பாதிப்படையும்.



6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான 





அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.



7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு 





அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. 





குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.



8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், 





தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், 





மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.



9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், 





மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை 





வலிமையான உறுப்பாக ஆகிறது.



10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை 





அதிகரிக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...