|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2011

தாமஸ் மீதான புகார் எனக்கு தெரியாது: பிரதமர் வெளிப்படை

புதுடில்லி: "மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டதற்கு, நான் பொறுப்பேற்கிறேன்' என, பிரதமர் மன்மோகன் சிங், ராஜ்யசபாவில் நேற்று விளக்கம் அளித்தார்.

ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: "மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது' என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்றுக் கொள்கிறேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மதிப்பளிக்கிறேன். தவறான கணிப்பின்படி, அவர் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக தேர்வு செய்யப்பட்டு விட்டார். பணியாளர் நலத் துறை அமைச்சர் தான், லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் பட்டியலை இறுதி செய்தார். தாமசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருப்பது, ஆரம்பத்தில் எனக்கு தெரியாது. இதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். புதிய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையரை நியமிக்கும்போது, சுப்ரீம் கோர்ட் அளித்த அறிவுரைகள் பின்பற்றப்படும். இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...