|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 September, 2012

இன்று உலக ரேபிஸ் தினம்!

ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.

ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு மன் இந்நோய்க்கு மருந்தே கிடையாது. உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவரது மறைந்த நாளான செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 97 சதவீத ரேபிஸ் நோய், நாய்கள் மூலம் தான் பரவுகின்றன. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் தெருவில் திரியும் நாய்களாகவும், மீதி வீட்டில் வளர்க்கும் நாய்களாகவும் உள்ளன என தனியார் ஆய்வு தெரிவிக்கிறது. இவை மூலம் ரேபிஸ் அதிகமாக பரவுகிறது.

கவனம் அவசியம்: வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.

ஆய்வில்அதிர்ச்சி தகவல்!

தற்போது உலகம் சந்தித்து வரும் காலநிலை மாற்றம் மூலம் வரும் 2030ம் ஆண்டிற்கு உலகில் 10 கோடி பேர் பலியாகலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.பல்வேறு காரணங்களால் உலகின் காலநிலையில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹஸ் விளைவு பாதிக்கப்பட்டுள்ளதால், உலகின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் துருவ பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது அதிகரித்து, கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக பூமி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த நிலையில் டாரா என்று மனிதாபிமான அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகில் உள்ள 184 நாடுகளில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு வரையுள்ள காலநிலை, பொருளாதாரம், மனித இனம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது, உலகில் தற்போது நிலவி வரும் மாசுப்பட்ட காற்று, பசி, நோய்கள் ஆகிய காரணங்களால், ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் காலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரிப்பின் மூலம், வரும் 2030ம் ஆண்டிற்குள், ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் வரை பலியாகும் நிலை உருவாக வாய்ப்புள்ளது. தற்போது இறப்பவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள்.காலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரித்து வருவதால், வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 10 கோடி பேர் பலியாகலாம். காலநிலை மாற்றம் மூலம் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் 1.2 ட்ரில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. இது வரும் 2030ம் ஆண்டிற்கு 3.2 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் பட்சத்தில் வரும் 2100ம் ஆண்டிற்குள் இது 10 சதவீத பொருளாதார இழப்பை ஏற்படுத்தலாம்.அடுத்த 50 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலையில் 2 முதல் 3 டிகிரி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 50 ஆண்டுகளுக்கு பிறகு நுகர்வோரின் வாங்கும் தன்மை 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. உலகில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடு

27 September, 2012

World Tourism Day...

 The United Nations World Tourism Organization has celebrated World Tourism Day on September 27.
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலகளவில் 98 கோடியே 30 லட்சம் பேர் சர்வதேச சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டோடு ஒப்பிடும் போது, இது 4.6 சதவீதம் அதிகம் என உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2010, 2011ம் ஆண்டுகளில் அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு என்ற பெருமையை, பிரான்ஸ் பெற்றுள்ளது. 7 கோடியே 95 லட்சம் பேர் பிரான்சுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதற்கு அடுத்த 4 இடங்களில் அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், இத்தாலி உள்ளன. 2011 கணக்கின் படி, 62 லட்சத்து 90 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

எட்டு கோடி பேரின் பசியை போக்கி இருக்க முடியும்?


நாட்டில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில், கடந்த ஐந்தாண்டுகளில், 36 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வீணடிக்கப்பட்ட இந்த உணவு தானியங்கள் மூலம், எட்டு கோடி மக்களின், பசியை போக்கி இருக்க முடியும்.தேஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர், "கடந்த ஐந்தாண்டுகளில், இந்திய உணவு கழகத்துக்கு (எப்.சி.ஐ.,) சொந்தமாக, நாடு முழுவதும் உள்ள சேமிப்புக் கிடங்குகளில், எவ்வளவு உணவு தானியங்கள் கெட்டுப் போயின' என்பது பற்றிய, விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்டிருந்தார்.நாடு முழுவதும் உள்ள, இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில், சேமித்து வைக்க முடியாமல், 2008லிருந்து, இதுவரை, 36 ஆயிரம் டன், உணவு தானியங்கள், பயன்படுத்த முடியாத அளவுக்கு, கெட்டு போயின. இதில், அதிகபட்சமாக, இந்தியாவின் உணவு தானிய களஞ்சியம் என அழைக்கப்படும், பஞ்சாபில் தான், 19.290 ஆயிரம் டன், உணவு தானியங்கள், அழுகி விட்டன. அடுத்தபடியாக, மேற்கு வங்கத்தில் உள்ள, அரசு உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்குகளில், 4,545 டன், உணவு தானியமும், குஜராத்தில், 4,290 டன்னும், அழுகி விட்டன. வீணடிக்கப்பட்ட, இந்த, 36 ஆயிரம் டன் உணவு தானியத்தின் மூலம், ஒரே ஒரு நாளைக்கு, 440 கிராம் என்ற அளவில், எட்டு கோடி பேரின் பசியை போக்கி இருக்க முடியும். இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலட்சியம் காட்டாமல் உதவி செய்யுங்கள்.


சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, மறந்துபோன மனிதாபிமானமும் ஒரு காரணமாகியுள்ளது.புற்றீசல் போல பெருகி வரும் வாகனங்களுக்கு தக்கவாறு விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்து செய்தி இல்லாத நாளிதழ்களே என்று கூறும் அளவுக்கு மோசமான நிலை உருவாகியுள்ளது.
சாலை விபத்தில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பாதிப்படைவர்களை உரிய நேரத்தில் உதவி கிடைக்காததும் முக்கிய காரணம்.துடிதுடிப்பவர்களை ஒரு சில நொடிகள் நின்று வேடிக்கை பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்லும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. இதுவே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது. விபத்துக்கள் எதிர்பார்த்து நடப்பது இல்லை.
எனவே, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து விபத்தில், பாதிக்கப்படுவர்களுக்கு அலட்சியம் காட்டாமல் உதவி செய்யுங்கள்.பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தவுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல உதவுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதும் அவசியம். உரிய நேரத்தில் நீங்கள் செய்யும் உதவி ஒரு உயிரை காப்பாற்றப் போகிறது என்பதை மனதில் வைத்து யோசிக்காமல் களத்தில் இறங்குங்கள்.
மேலும், அவசர வேலை, முக்கிய வேலை என்று யோசிக்காதீர். ஒரு உயிரை காப்பாற்றுவதை விட இந்த உலகில் வேறு அவசர வேலை எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என்று அலைய வேண்டியிருக்கும் என்று அச்சப்பட வேண்டாம். தற்போது விபத்தில் சிக்குபவர்களை மருத்துவமனையில் உடனே அனுமதிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.நீங்கள் உதவி செய்ய முன்வரும்போது அடுத்தவர் யோசிக்காமல் முன் வருவார். எனவே, விபத்தில் சிக்கி துடிதுடிப்பவர்களின் உயிரை மட்டுமல்ல, மறந்துபோன மனிதாபிமானத்தையும் சேர்த்து காக்க முன் வாருங்கள்.

26 September, 2012

இப்படிக்கு உங்க அன்புல்ல பேத்தி?


 மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை. எதுவுமே அளவுக்கு மீறிப் போகும்போது ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. ஐம்பது பைசா இன்லாண்ட் கடிதங்களும், 25 பைசா போஸ்டு கார்டும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை இன்றைய மொபைல் போன்களும், பேஸ்புக்கும் வெளிப்படுத்துவதில்லை.

தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை மெல்ல மெல்ல சுயமாக பல காரியங்களைச் செய்ய இயலாதவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பிவிட்டால் போதும், நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அனைவரும் ஆஜராகிவிடுவார்கள். ஆனால் இன்றைய நிலைமையே வேறு. நேரில் பத்திரிகை வைத்துவிட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் போன் செய்து அழைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.சென்னையிலிருந்து திருச்சிக்கு நண்பரின் விஷேசத்திற்கு செல்ல வேண்டும் எனில் பத்திரிகை கையில் கிடைத்ததும் ஒருமுறை போன் செய்து எப்படி வரவேண்டும் என விசாரித்துவிட்டு, பிறகு விஷேச தினத்தில் "நான் பஸ் ஸ்டாண்ட் வந்துட்டேன் இங்கிருந்து எப்படி வருவது?", "விவேகானந்தர் நான்காவது தெருவுக்கு வந்துட்டேன்.. ஏழாவது தெருவுக்கு எப்படி வருவது?" என நிகழ்ச்சி நடத்தும் நண்பரின் மொபைல் போனுக்கு ஓயாமல் அலைபேசும் நபர்களும் இருக்கிறார்கள். ஏண்டா இவனைக் கூப்பிட்டோம் என நினைக்கும் அளவுக்கு எரிச்சலூட்டுகிறார்கள்.


முன்பெல்லாம் கடிதங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வேண்டும் என நண்பருக்கு ஒரு கடிதம் போட்டால் போதும். அந்த நேரத்தில், அந்த இடத்தில் தவறாமல் ஆஜராகிவிடுவார். இன்றைய தேதியில் பிரசவ வார்டில் மனைவி இருக்கும் போது கூட, " Awaiting for my sweet little baby " என டுவிட்டரில் தகவல் பரிமாறி, பிரசவமான குழந்தையை உடனே புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றுகிறார்கள். குழந்தை பிறந்ததை விட, அந்த செய்தியை பதிவேற்றம் செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்களோ என்று தோன்றுமளவுக்கு தொழில்நுட்ப அடிமைகளாகிவிட்டனர்.ஆனால் அன்று, குழந்தை பிறப்புக்காக அம்மா வீடு வந்த மனைவிக்கு குழந்தை பிறந்த தகவல் கடிதம் மூலம் மூன்று நாட்கள் கழித்து தான் தெரிய வரும். அதன்பிறகு விடுமுறை எடுத்துக் கொண்டு தனக்கு பிறந்த மகனை / மகளைப் பார்க்க ஊருக்கு சென்றவர்கள் ஏராளம். தனது மகன் எப்படி இருப்பான் என நினைத்துக் கொண்டே பயணித்து, மனம் நிறைய  மகனை அள்ளி முத்தமிடும் தருணத்தின் மகத்துவத்தை அனுபவித்தவர்களைக் கேட்டால் தெரியும்.  

ஏதேனும் துக்கம் நிகழ்ந்துவிட்டால் ஊருக்கு ஒருவர் தகவல் சொல்ல கிளம்பி போவார். அவர் போகும் ஊரில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தகவல் சொல்ல தேவையில்லை. அந்த ஊரில் ஒருவருக்கு தகவல் சொன்னால்கூட போதும். அவர்கள் மூலம் தகவல் பரவி அனைவரும் வந்து சேர்ந்துவிடுவர். ஆனால் இப்போது அப்படி இல்லை.. சில குடும்பங்களில் மாமா, அத்தை, அத்தை மகன், அத்தை மகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போன் செய்து தகவல் சொல்ல வேண்டியுள்ளது. இல்லையெனில் எனக்கு ஏன்  சொல்லவில்லை நான் முக்கியமான ஆளில்லையா என்ற சண்டைகள் ஏராளமாக நடப்பதைக் காணமுடிகிறது.

ஊரிலிருக்கும் தாத்தாவுக்கு போட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் வந்த அன்று அதை பிரித்து படிப்பதற்குள் மனதிற்குள் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. நேரத்திற்கு சாப்பிடு, கவனமாக பள்ளிக்கூடத்துக்கு போ, வெயிலில் அதிகம் அலையாதே, காலாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வா என ஒவ்வொரு வார்த்தையிலும் தாத்தாவின் பாசமும், அக்கறையும் இருக்கும். கடிதங்களின் ஓரத்து மடுப்புகளில் கூட தாத்தா, பாட்டியின் அன்பு ஒட்டிக் கொண்டிருக்கும். 
கடிதப் போக்குவரத்தில் 'இப்டிக்கு உங்கல் அன்புள்ள மகன்', 'இப்படிக்கு உங்க அன்புல்ல பேத்தி' என தப்பு தப்பாய் எழுதியிருந்தாலும், அதில் வார்த்தைக்கு வார்த்தை அன்பு நிறைந்திருக்கும். அவை பொக்கிஷம் போல் அவ்வப்போது எடுத்து எடுத்து படிக்கப்படுவதும் உண்டு. ஆயிரம் எஸ்.எம்.எஸ். மெசேஜ்கள் அனுப்பினாலும், அவை ஒரே ஒரு கடிதம் சொல்லிய அன்பை முழுமையாகப் பரிமாறிவிட முடியுமா?

மணலில் புதைந்த வைகோ...

கூடங்குளம் அணு மி்ன் நிலையத்துக்கு எதிராக, கடற்கரை மணலில் புதைந்து மேற்கொள்ளப்பட்ட நூதனப் போராட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலர் வைகோ...

உலக கருத்தடை தினமான இன்று...

இந்தியாவில் ஆய்வின் முடிவு :
* குறைந்தது மூன்று நாடுகளில் உள்ள 36% பெண்கள், தனது 24-29 வயதுகளில் தான் முதல் உடலுறவு கொள்கின்றனர் என்று கூறுகிறது.
* ஒட்டுமொத்தவர்களில், இரு பான்மயரும் முதல் உடலுறவு கொள்ளும் போது 55% பேர் ஆண் ஆணுறையைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிய வந்தது.
* கருத்தடை பயன்பாட்டில் 29% ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தது ஒரு முறையேனும் பாதுகாப்பற்ற உடலுறவை மேற்கொள்கின்றனர்.
* கர்ப்பத்தடைக்கு பெண்கள் பயன்பாடு : 42% பெண்கள் கர்ப்பத்தடைக்கு தினமும் ஒரு மாத்திரையை எடுத்து கொள்கின்றனர். மற்றொரு 28% பெண்கள் உள்-கருப்பை சாதனம் (IUD) பயன்படுத்துகின்றனர். மேலும் குறைந்தது 3 நாடுகளில் இந்த கர்ப்பத்தடை முறை பயன்படுத்தபடுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
* கருத்தடை பொறுப்பைப் பற்றி பதிலளித்தவர்களில் வெறும் 52% ஆண்கள் மற்றும் பெண்கள் இருபான்மயரும் இந்த கருத்தடைக்கு பொறுப்பு என்று ஒப்புக்கொண்டனர்.
* அதுமட்டுமல்லாமல் கருத்தடை முறைகள் பயன்பாட்டைப் பற்றி பதிலளித்தவர்களில் 51% மக்கள் தற்போது கருத்தடைக்கு ஆண் ஆணுறையை ஒரு வடிவமாக பயன்படுத்துகின்றனர் என்றும் கூறப்படுவதாக கூறுகின்றனர்.
தற்போது மேற்கொண்ட உலக கருத்தடை நாள் 2012 கணக்கெடுப்பின் புதிய தகவலாக, மீண்டும் 36% இந்திய பெண்கள், அவர்களது 24-29 வயது வரம்பில் முதல் உடலுறவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு பெண்ணின் முதல் உடலுறவு கொண்ட வயது 24-29 என்றும், அவரது முதல் கர்ப்பம் 24-27 வயதிற்கும் இடையே ஏற்பட்டது என்று 48% இந்திய பெண்கள் பதிலளித்ததில் தெரிய வந்துள்ளது.
மேலும் குடும்ப கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பயன்பாடு விகிதங்கள் மிக முக்கியம் என்பதையும் அந்த கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன. அதிலும் இந்தியாவில் இந்த கருத்தடை பயன்பாட்டு முறை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கின்றன.முதல் முறையாக நீண்ட காலமாக குடும்ப கட்டுப்பாடு பற்றி நடத்திய ஆய்வில், ஆண் ஆணுறை மட்டுமே பெரும்பாலானோரால் உபயோகப்படுத்தபடுகிறது என்பது தெரிய வந்தது. மேலும் மூன்றில் ஒருவர் கருத்தடை தேவை இல்லை என்றனர்.
குடும்ப திட்டமிடுதல் சங்கங்கள் (FPAI) மற்றும் மகப்பேறு கூட்டமைப்பு மற்றும் இந்திய பிரசவ சங்கங்கள் (FOGSI) இணைந்து, இந்தியாவில் பேயர் ஜ்ய்டுஸ் பார்மா (Bayer Zydus Pharma) கருத்தடை பற்றிய விழிப்புணர்வை மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பெண்ணும் உலக கருத்தடை தினமான இன்று முதல் தங்கள் எதிர்காலத்தில், திட்டமிட்டு கர்ப்பம் தெறிப்பது என்றாலும் கருத்தடையை பயன்படுத்துவதாக இருந்தாலும், உங்கள் துணைவருடனும், உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடி பின்னர் முடிவு எடுக்க வேண்டும் என்று Angel-Michael Evangelista, Managing Director, Bayer Zydus Pharma நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

பார்த்ததில் பிடித்தது!




ரெண்டாவது படம்!

பார்க்க துண்டும் தமிழ்ப்படம் இயக்குனரின் அடுத்த (Sorry) ரெண்டாவது படம்!
  

25 September, 2012

மண்ணு மோகனீன் மறுமுகம்!

2002-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகசிங்கிடம் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி அரசு ஏதேனும் பரிந்துரை செய்ய இருக்கிறதா? என்று மகாராஷ்டிரா வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு கடிதம் மூலம் கேட்டிருக்கிறது. அந்தக் கடிதத்துக்குப் பதிலளித்திருக்கும் மன்மோகன்சிங், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப் போகிறதா? மத்திய அரசு என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிதி அமைச்சர், சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கும் முடிவு ஏதும் அரசிடம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் என்று மன்மோகன்சிங் கூறியுள்ளார். இந்தக் கடிதத்தை அப்படியே பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடுகிறேன் என்று கூறி மமதா ஸ்கேன் செய்து ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டிருக்கிறார்.மன்மோகன்சிங்கின் இந்த கடிதம் 2002-ம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி எழுதப்பட்டிருக்கிறது.

போலி அப்துல் கலாம்!

ஒரு எட்டு ஆண்டுகாலம் ஐரோப்பாவின் சில முன்னணி ஆராய்ச்சி கூடங்களிலும், பல்கலைகழகங்களிலும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டபின் நம் திடீர் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பற்றிய இந்த சிறு குறிப்பை வரைவது சாத்தியப்பட்டும், இந்த கணத்தில் அவசியமாகியும் இருக்கிறது. முதலில் ஆராய்ச்சியும், விஞ்ஞானமும் ஒரு பரந்து விரிந்த கடலைப்போன்றது, அதாவது விஞ்ஞானத்தில் ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்கும் இடையேயான வேறுபாடு வானுக்கும் பூமிக்கும் இருக்கும் வித்தியாசத்தை விட சற்றே அதிகமானது.

நான் மூளை (நரம்பியலில்) கார்டெக்ஸ் (cortex) என்னும் பகுதியில் சிந்தனை (thinking), நியாபக சக்தி (memory), கற்றறிதல் (learning) போன்றவற்றிற்கு காரணமான ஜீன்களை (genes ) பற்றியதான ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறேன். எனது பக்கத்து இருக்கையில் எனது தோழன் அதே செயல்களுக்கு காரணமான ஜீன்களை பற்றி மூளையின் மற்றுமொரு பகுதியில் ஆராய்ச்சி செய்து வருகிறான். எனினும் எங்கள் இருவரின் ஆராய்ச்சி முடிவுகளுக்கும் இடையிலான வேறுபாடு முன்பே குறிப்பிட்டதைப்போல கடல் அளவிலானது. இரண்டையும் ஒப்பிடுவதும், இரண்டிற்கும் பொதுவான ஒரு கருத்தியலை உருவாக்குவதும் இயலாத ஒன்று; விஞ்ஞான தர்மப்படி அது நியாயமும் இல்லை.

மூளைக்குள்ளும், மருத்துவ உயிரியல் எனும் ஒற்றை சொல்லுக்குள்ளும் இத்துணை வேறுபாடுகள் இருக்கும் போது அறிவியலின் இரு வேறு துருவங்களான/துறைகளான ராக்கெட் விஞ்ஞானத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாத ஒன்று. நியூட்டனின் நகர்தல் விதி (law of motion) எனும் அடிப்படை தத்தவத்தை மையப்பொருளாக கொண்டு இயங்குவது ராக்கெட் விஞ்ஞானம்; அணுவுக்குள் அடங்கி கிடக்கும் அணுக்கருவை பிளப்பதால் வெள்ளப்பெருக்கெடுக்கும் கதிரியக்கத்தையும், வெப்பத்தையும் அடிப்படையாக கொண்டு இயங்குவது அணுவிஞ்ஞானம். ராக்கெட்டுகளும், அணுகுண்டுகளும் மனித மாமிசம் விற்கும் நர மாமிச கடைகளிலும், நர மாமிச வியாபாரிகளிடமும் ஒன்றாக கிடைக்கும் என்பதைத்தவிர இந்த இரண்டிற்கும் வேறெந்த தொடர்பும் இல்லை. இப்படியாக, அணுவுக்கும், ராக்கெட்டுக்கும் இந்த உலகத்திலே இருக்கும் ஒரே தொடர்பு நமது அப்துல் கலாம் மட்டுமே.

சரி, இந்த எல்லைதாண்டும் விஞ்ஞானி கலாமின் சொந்த துறை சார்ந்த ராக்கெட் அறிவியல் சாதனைகளை தேடி பார்க்கலாமென்றால், ஒரு விஞ்ஞானியின் திறனானது அவரின் ஆராய்ச்சி முடிவுகளின் கட்டுரைகளையும், அந்த கட்டுரைகள் வெளியான அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அறிவியல் சஞ்சிகைகளையும் (scientific journals), அதற்கு வழங்கப்பட்டு இருக்கும் தரப்பட்டியலையும் சார்ந்தே முடிவு செய்யப்படும். ஆனால் விஞ்ஞானி காலமின் ஆராய்ச்சி முடிவுகள் பற்றிய ஒரு பக்கத்தை கண்டுபிடிக்கவே பல வாரங்கள் பிடித்தது. ஏனெனில் அவருடைய கட்டுரைகள் அனைத்தும் பூ பேசியது, குழந்தை வடை சுட்டது, கிளிமாஞ்சாரோ கவிதைகள் போன்ற விஞ்ஞானத்துக்கு முற்றிலும் தொடர்பற்ற ஃபேன்டசி வகையறா சார்ந்து இருந்தது. நான் அறிந்தவரை அவருடைய (மூன்றே மூன்று) கட்டுரைகள் இந்திய அறிவியல் பத்திரிக்கைகளை ஒருபோதும் தாண்டியதில்லை. இந்திய அறிவியல் பத்திரிக்கைகளின் தரப்பட்டியல் (impact factors) பெரும்பாலும் சர்வதேச அளவில் ஒன்றுக்கும் குறைவே. பத்துக்கு குறைவான மதிப்பீடு கொண்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதில்லை என்பது எங்களது ஆராய்ச்சி குழுவில் நாங்களே நிர்ணயம் செய்துகொண்ட எழுதப்படாத விதி.

இப்படியாக, முன்னால் ராக்கெட் விஞ்ஞானியின் அறிவியல் ஆராய்ச்சியும் (பெரிதாக) மெச்சும் படி இல்லை. தன்னுடைய துறையிலேயே உலகின் சிறந்த கண்டுபிடிப்புக்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் வெளிக்கொணர இயலாதவர், மாற்று அறிவியல் துறையான அணு விஞ்ஞானத்தை பற்றி வார்த்தை ஜாலங்களை அள்ளி தெளிப்பது அதிர்ச்சியான ஆச்சரியம். ஏனெனில் விஞ்ஞானம், ஆராய்ச்சி துறைகளுக்கு என்று ஒரு அடிப்படை தொழில் தர்மம் இருக்கிறது. எனது ஆராய்ச்சி கூட பக்கத்து அறைகளின் நோபல் பரிசுவரை பரிந்துரை செய்யப்பட்ட விஞ்ஞானிகள் கூட எங்களின் துறை சார்ந்த விடயங்கள் என்று வரும் பட்சத்தில் எங்களை அழைத்து கருத்தறிவார்கள், தான்தோன்றித்தனமான கருத்துக்களை மறந்தும் உதிர்ப்பதில்லை. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளாகவே இருந்தாலும், அடுத்தவர் துறை தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கைகளையோ, முடிவுகளையோ தெரிவிப்பது விஞ்ஞானத்தில் தடை செய்யப்பட்டும் இருக்கிறது. ஏனெனில், 'இருக்கலாம்' என்ற இடத்தில் 'இருக்கிறது' என்ற வார்த்தை பிரயோகம் கூட விஞ்ஞானத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்ட ஒன்று.

இப்படியாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, அணுத்துறை அறிவியல் பற்றி கருத்து கூறுவது சைக்கிள் டயர் பஞ்சர் பார்ப்பவன் கப்பல் டயர் பஞ்சர் பார்ப்பதை பற்றி பாடம் எடுப்பதற்கு சமம். அணு உலை துவங்க உலக அணுசக்தி கழகம் (IAEA) விதிக்கும் அடிப்படை கட்டுப்பாடுகள், விதிகளில் ஒரு பதினான்கில், எட்டை கூட பூர்த்தி செய்யாத ஒரு அணு உலைக்கு, விஞ்ஞானி கலாம் ரப்பர் ஸ்டாம்ப் அடிப்பது விஞ்ஞானத்தையே கேவலப்படுத்தும் செயலேயன்றி வேறேதுமில்லை. பெரிதும் அறிவியல் ஆராய்ச்சியில் சோபிக்காமல் எவ்வாறு இந்திய அறிவியலில் இவ்வளவு உயரத்திற்கு வர இயலும் என்பதை பற்றியெல்லாம் விவாதித்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் கயிற்று கட்டிலில் அமரும்போது எம்.எஸ்.சுவாமிநாத ஐயர்கள் பசுமை புரட்சியின் தந்தையாகி  குளிரூட்டப்பட்ட கக்கூசில் அமரும் தேசம் இது.

முதலில் ராக்கெட் விஞ்ஞானத்தில் இந்தியாவின் நிலை என்னவென்று அறிந்தாலே அது ஒரு பரிதாபகரமான நிலை. இந்தியாவின் நலனை, சந்தை பொருளாதாரத்தை, வர்த்தகத்தை மேற்கத்திய நாடுகளிடம் அடமானம் வைத்து, ராக்கெட்டின் உதிரி பாகங்களை அந்த நாடுகளிடமிருந்து பெற்று, இங்கே அசெம்பிள் (இணைப்பதே) செய்வதே என்பது ஊரறிந்த, உலகறிந்த 'ரகசிய' உண்மை. ஆகவே அந்தவகையில், வெளிநாட்டு கார்களின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அந்த கார்களை வடிவமைக்கும் கோவை மற்றும் புதுப்பேட்டை பகுதிகளில் இருக்கும் எட்டாப்பு வரை படித்த மெக்கானிக்குகளும் கலாம் போன்ற விஞ்ஞானிகளே. ஆனால் அதை மறைத்து ராக்கெட் விஞ்ஞானத்தில் இந்தியா உலக வல்லரசு என்று கட்டுக் கதைகளை கட்டி, ஊடகங்கள் மூலம் அந்த புளுகுமூட்டைகளை பொன் முட்டைகளாக மாற்றியதில் கலாம்களின் பங்கு அளப்பெரியது. இப்படியாக கோடி கோடியாக மக்களின் வரிப்பணத்தில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் பிற்காலத்தில் பெரு முதலாளிகளிடமும், அரசியல் கோமான்களிடமும் சிக்கி ஸ்பெக்ட்ரம்களாக உருமாறி பலரின் அந்தப்புரங்களை அலங்கரித்தது நம் கண் முன்னே நிற்கும்  வரலாறு.

இங்கே கலாம் உருவான கதைதான் சுவாரசியமானது. பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்று  அதன் இந்துத்வா முகம் மறைக்க அவர்களுக்கு ஒரு இஸ்லாமிய முகமூடி தேவைப்பட்டது. அந்த முகமூடியும் சுயம் தொலைத்த ஒரு அடிமையாக இருக்கவேண்டும் என்ற தேவையின் போது அவர்களுக்கு சிக்கிய மிகச்சிறந்த முகமூடிதான் இந்த கலாம். அவர் எவ்வளவு தூரத்துக்கு அடிமையாக இருக்க முடியும் என்பது இவருடைய ஜனாதிபதி (முப்படை தளபதி) காலத்தில் நிகழ்ந்த அவரின் சொந்த இஸ்லாமிய மதத்தினரின் குஜராத் படுகொலைகளும், தமிழீழ இனப் படுகொலைகளுக்கு நடந்த ஆயத்த ஏற்பாடுகளுமே சான்று.

ஆனால், இதில் ஒரு சூட்சுமம் பிடிபடும், அறிவியலில் சோபிக்காமல் போயிருந்தாலும் இவர் யாரை பிடித்தால் எதை அடையலாம் என்ற நுட்பமான அரசியலில் கைதேர்ந்தவர். ஆரிய சமாஜத்தின் உறுப்பினர் ஆனதும், சங்கராச்சாரிகள் இவரை பலமுறை 'இவா நம்மவா' என்றதும் அதன் எச்சங்கள்தான். ஜனாதிபதி பதவி இழந்ததும், அடுத்த இரண்டு முறையும் ஜனாதிபதி தேர்தலின் போது தான் வேட்பாளராக முன்மொழியப்படக்கூட வாய்ப்பில்லை என்று நன்றாக அறிந்திருந்தும், யாருடைய மனதையோ குளிரூட்ட(!) இவர் அவசரவசரமாக ஈழம் சென்று 'வடக்கில் வசந்தம்' வர பாடுபட்டதும் (இதுநாள்வரை இறந்த ஒரு பிஞ்சுக்கு கூட வருத்தம் தெரிவித்ததில்லை என்பது நினைவிருக்கட்டும்), கூடங்குளம் விரைந்து அணுவுலையில் 'எல்லாம் சுபமே' சான்றிதழ்களை வழங்கியும் ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்புக்காக அல்லாடியது அரசியல் அடிப்படை தெரிந்த அனைவருக்கும் புரிந்திருக்கும்.

பல ஆயிரம் சதுர அடிகள் கட்டிட அமைப்பு கொண்ட அணுவுலையின் சுவர் விரிசல், கீறல், பெயிண்ட், வார்னீஷ் போன்றவற்றை சரிபார்த்து அறிக்கை கொடுக்க கூட ஒரு மேஸ்திரிக்கு நான்கு நாட்கள் பிடிக்கும் என்ற நிலையில், அணுக்கரு அறிவியலில் அடிப்படை அறியாத,  எந்த தொடர்பும் இல்லாத அப்துல் கலாம், உலையை பார்வையிட்ட அன்று மாலையே (தயாரிக்கப்பட்ட) அறிக்கை கொடுப்பது அயோக்கியத்தனமன்றி, வேறென்னவாக இருக்க முடியும்?

பல ஆண்டுகள் அறிவியல் துறையில் பணியாற்றியவர் விஞ்ஞானத்தில் மாற்று துறைகளில் மூக்கை நுழைக்க கூடாது என்ற அடிப்படை விதிகளை அறியாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை, அப்படி இருந்தால் ஒன்று அவர் முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது தெரிந்தே இந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நல்லவேளை, அப்துல் கலாம் இருப்பது இந்தியா, மேற்கத்திய நாடுகளாக இருந்திருந்தால் இந்த அயோக்கியத்தனத்திற்கு அவருடைய முந்தைய டாக்டர் பட்டமும் பறிபோய் இருக்கும், ஆனால் இங்கே தேசத்தின் நலனையும், தேசத்தின் பிள்ளைகளின் நலனையும் அந்நியர்களிடம் அடமானம் வைக்கும் எவருக்கும் ராசபோக மரியாதை உண்டு; அது மற்ற எவரையும் விட விஞ்ஞானி கலாமுக்கு நன்றாக தெரியும்!

அப்துல் கலாம் பற்றி தோழர் அமுதன் ராமலிங்கம் அழகாக இப்படிச் சொல்லி இருந்ததை இங்கே நினைவு கூற வேண்டும், ''லோகத்தில் பிரச்சனை இல்லை, நீ நன்னா படிச்சா பெரியாளாயிடலாம், அதுக்கு நானாக்கும் சாட்சி''. இப்படியாக, பொய்களையும், புரட்டுக்களையும், கட்டுக்கதைகளையும், நயவஞ்சக கவிதைகளும் பேசி பிஞ்சு குழந்தைகளை கண்மூடித்தனமாக, ஏன் எதற்கு என்ற உணர இயலாத, பகுத்தறிவற்ற தேச பற்றாளர்களாக்கி, அதன் மூலம் அவர்களே அறியா வண்ணம் அந்த பிஞ்சுகளை இந்த தேசத்தை ஆளும் முதலாளிகளிடம் அடிமையாக்கி வரும் கலாம்கள் சாத்தான்களின் தூதுவர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல! திருக்குரானில் சொல்லப்பட்டு இருப்பதை போல சாத்தான்களை கற்களை கொண்டு அடித்து துரத்தவேண்டும் என்பதும் இங்கே கடைபிடிக்கப்படும் மரபல்ல, ஏனெனில் இது மனுதர்மம் பேணும் தேசம்!!!

நன்றி: Krishna Tamil Tige 

திரும்ப திரும்ப பேசற நீ திரும்ப திரும்ப பேசற நீ திரும்ப திரும்ப நீ பேசற


14 September, 2012

தர மதிப்பீடு தொடர்ந்து சரிவதை யாரும் தவிர்க்க முடியாது?


ஏற்கனவே மக்கள் விலைவாசி உயர்வினாலும், ஸ்பெக்ட்ரம்-நிலக்கரி ஊழல்.விவகாரங்களாலும் மத்திய அரசின் பெரும் கோபத்தில் இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு சில முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் காங்கிரஸ் அரசு ஏன் டீசல் விலையை உயர்த்தியது?. ஏன் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மீதான மானியத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது?.இதற்கான பதில் இந்தியாவில் இல்லை. வெளிநாடுகளில் இருக்கிறது.
குறிப்பாக உலக வங்கி, சர்வதேச பொருளாதார நிதியம் (IMF), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் Moody's, Standard & Poor's, Fitch போன்ற சர்வதேச பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனங்களுக்குப் பயந்தே இந்த விலை உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.ஒரு நாட்டின் வரவு-செலவு, வளர்ச்சி விகிதம், கடன் அளவு உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து அந்த நாட்டை தர மதிப்பீடு (rating) செய்கின்றன மேலே சொன்ன அமைப்புகள். இவை ஒரு நாட்டுக்கு நல்ல மார்க் போட்டால், அந்த நாட்டின் மீது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வரும். இதையடுத்து தங்களது முதலீடுகளை அந்த நாட்டில் வந்து கொட்டுவார்கள், நல்ல லாபம் கிடைக்கும் என்ற காரணத்தால்.
மார்க் கம்மியாகக் கிடைத்தால், போட்ட முதலீடுகளையும் வாரிச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி விடுவார்கள். மேலும் புதிதாக முதலீடு செய்ய யாரும் முன் வரவும் மாட்டார்கள். அதே போல உலக வங்கி, ஐஎம்எப், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை புதிய திட்டங்களுக்கு கடனுதவியை வழங்குவதை குறைத்துக் கொள்ளும். இது தான் ரேட்டிங் மற்றும் அதைச் சார்ந்த (தலை)விதி.அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல முக்கிய நாடுகளைின் பொருளாதாரத்தையே இந்த ரேட்டிங் ஏஜென்சிகளின் மதிப்பீடுகள் புரட்டிப் போட்டிருக்கின்றன.
இந் நிலையில் தான் சமீபத்தில் Standard & Poor's, Fitch ஆகிய இரண்டும் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கையை விட்டன. வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் 'பிரிக்ஸ்' (BRICS-Brazil, Russia, India, China and South Africa) நாடுகளில் இந்தியாவில் தான் வருமானத்துக்கும் செலவுக்குமான இடைவெளி மிக அதிகமாக உள்ளது என்று கூறிய இந்த தர மதிப்பீட்டு அமைப்புகள், இதனால் இந்த 5 நாடுகளில் இந்தியாவின் முதலீட்டுத் தர மதிப்பீட்டைக் குறைக்கப் போகிறோம் என்று எச்சரித்தன.மேலும் இந்தியா தனது மானியங்களைக் குறைக்க வேண்டும், இல்லாவிட்டால் அதன் தர மதிப்பீடு தொடர்ந்து சரிவதை யாரும் தவிர்க்க முடியாது என்று அச்சுறுத்தின.அவ்வளவு தான்.. பிரதமர்,நிதியமைச்சர், திட்டக் கமிஷன், ரிசர்வ் வங்கியில் ஆரம்பித்து நிதியமைச்சகத்தின் அனைத்து மட்டத்திலும் வயிற்றில் புளியைக் கரைத்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை மானியங்கள் என்றால், மிக அதிகமான பணம் செலவழிக்கப்படுவது டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் ரேசன் கடைகளுக்கான உணவு தானியங்களுக்காகத் தான் (மானியம் என்பது ஒரு பொருளின் விலையை குறைத்து விற்பது, அதனால் ஏற்படும் நஷ்டத்தை அரசு ஏற்பது).இதில் உணவு தானியங்கள் மீதான மானியத்தில் கையை வைத்தால் களேபரமாகிவிடும் என்பதால், எரிபொருட்கள் மீதான மானியத்தின் மீது மத்திய அரசின் கவனம் திரும்பியது.குறிப்பாக டீசல், சமையஸ் கேஸ் விலையை உயர்த்தினால் விலைவாசி உயர்ந்து, ஓட்டுகள் கிடைக்காதே என்ற அச்சத்தில் அதன் விலையை யார் ஆட்சியில் இருந்தாலும் (காங்கிரசோ, பாஜகவோ, தேவ கெளடாவோ) அவ்வளவு சீக்கிரத்தில் உயர்த்த அனுமதிப்பதில்லை.
அதன் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதத்துக்கு 2 காசு, 3 காசு என உயர்த்தியிருந்தால் கூட இப்படி திடீரென ஒரே நாளில் ரூ. 5 வரை உயர்த்த வேண்டிய நிலைமை வந்திருக்காது. ஆனால், விலையை உயர்த்தினால் கெட்ட பெயர் வரும் என்று நினைத்து நினைத்து, நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி கவலையே படாமல், அதன் விலையை மத்திய அரசு உயர்த்தாமலேயே இருந்து வந்தது.இதனால் பெட்ரோல் விலையை மட்டும் அவ்வப்போது உயர்த்தினர். இதைத் தொடர்ந்து டீசல் கார்களின் விற்பனை அதிகமாகி அதிகமாகி இப்போது நாட்டின் 40 சதவீத எரிபொருளாக பயன்படுத்தப்படுவது டீசல் தான் என்ற நிலையை உருவாக்கிவிட்டனர். கிட்டத்தட்ட நாட்டையே டீசல்மயமாக்கிவிட்டனர் ('dieselisation') என்பதே உண்மை.விளைவு, டீசலை உண்மையான விலையை விட குறைவான விலைக்கு விற்று விற்றே இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை கடந்த 3 மாதத்தில் மட்டும் ரூ. 36,000 கோடியை இழந்து போண்டியாகியுள்ளன.
அதே போல சமையல் எரிவாயுவின் உண்மையான சந்தை விலை ரூ.733.50 என்று இருக்க அதில் பாதியை மத்திய அரசு மானியமாகத் தந்து, சிலிண்டரை நெடுங்காலமாகவே ரூ.386.50க்கு விற்று வந்தது.இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை மத்திய அரசு மானியமாகத் தந்து வந்தது.இதன் காரணமாக பட்ஜெட்டில் பெரும் ஓட்டை. முக்கிய திட்டங்களைக் கூட நிறைவேற்ற பணமில்லை என்ற நிலைமை.இந் நிலையில் தான் கேஸ், டீசல் விலையை உயர்த்தாவிட்டால் நாட்டின் ஒட்டு மொத்த நிதிப் பற்றாக்குறை 5.1 சதவீதத்தை விட அதிகமாகிவிடும் என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது.
இதைக் காரணம் காட்டித் தான் இந்தியாவின் பொருளாதாரத் தர மதிப்பீட்டை குறைக்கப் போவதாக ஸ்டாண்ட்ர்ட் அண்ட் புவரும், மூடியும், பிட்சும் எச்சரித்தன.இதையடுத்தே டீசல் விலையை ஒரேடியாக ரூ. 5 வரையும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. டீசலுக்கான மானியத்தையும் கட்டுப்படுத்தும் வகையில், வருடத்துக்கு 6 சிலிண்டருக்கு மட்டுமே மானியம் என்று அறிவித்துள்ளது.இதன்மூலம் சர்வதேச அளவில் இந்தியா மீதான நம்பிக்கை பெருகும், முதலீடுகள் வந்து குவியும் என்பது தான் மன்மோகன் சிங்கின் கணக்கு.
அப்படி முதலீடுகள் குவியும்போது நாட்டின் தொழில்துறை புதிய வேகத்தில் வளரும், நாட்டின் பொருளாதாரம் வலுப்படும், புதிதாக ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். நாட்டின் பொருளாதாரம் வலுப்படுபோது கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தரும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மாதிரி ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தலாம்.. இதன்மூலம் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பர், மீண்டும் நமக்கே ஓட்டு போட்டு ஆட்சிக்குக் கொண்டு வருவர்.. இது தான் சோனியாவிடம் மன்மோகன் சொல்லியுள்ள 'தியரி'..இவை எல்லாம் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் நடந்தாக வேண்டும். அதன் பின்னர் தேர்தல் வந்துவிடும். ஆக, முதல் மூன்று ஆண்டுகளை ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், நிலக்கரி போன்ற விவகாரங்களிலேயே கழித்துவிட்ட மத்திய அரசுக்கு இப்போது கிடைத்திருப்பது மிகக் குறுகலான கால அவகாசம் தான்.

நடேசனின் கடைசி கடிதம்!


முள்ளிவாய்க்காலில் இறுதிக் கட்டத்தை விடுதலைப் புலிகள் நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், அரசியல் பொறுப்பாளர் பா நடேசன் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் சென்று செயல்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம், போரின் கடைசி மணித்துளிகளில் பிரபாகரன் இட்ட உத்தரவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பா நடேசன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில் உள்ள வரிகள்:இங்கு எல்லாம் நிறைவடைந்துவிட்டது. உங்களுக்கு அண்ணர் குறிப்பிட்டதுபோல, எல்லாவற்றையும் வெளியில் சென்று செயற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். கேஸ்ரோ எல்லாவற்றையும் உங்களிடம் தெரிவித்திருப்பார்.எதிர்ப்பார்க்காத திருப்பம் ஏற்பட்டது உங்களுக்குத் தெரியும். தெளிவாகக் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. எனது செய்மதியில் எதுவும் குறிப்பிட முடியாது, அவசரமாக நீங்கள்.
வைகோ அண்ணனைச் சந்திக்கவும் (முடிந்தால்). மற்றபடி இந்தக் கடிதம் கொண்டு வரும் ----- விளக்கமாக தெரிவிப்பார் உங்களுக்கு.என்று எழுதப்பட்டுள்ளது.புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்து, முன்னணி தலைவர்கள் வெள்ளைக் கொடியோடு சரணடைவதற்கு முன் எழுதப்பட்ட கடிதம் இது.இந்தக் கடிதத்தை தமிழ் ஈழ ஆதரவு தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த நிலைமை நம்மவுருக்கு வந்தா?


ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்துக்கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன் நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு வாகனம்.இந்த வாகனத்தில் மரபணு சோதனை நடத்துவதற்கான அனைத்து பரிசோதனை வசதிகளும் உள்ளன. நிபுணர்கள் தயாராக உள்ளனர். மரபணு சோதனை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு 32 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தினமும் நியூயார்க் நகரின் முக்கிய சாலைகளை சுற்றி வரும்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் இந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. ஏராளமான ஆண்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இந்த குழந்தை தங்களுக்குப் பிறந்ததுதானா? என்று பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய்வு முடிவுகள் சில நாட்களுக்குப் பின்னர் அவர்களுக்கு இமெயில் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
இதுபோன்ற சோதனை நடத்துவதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோன்ற சோதனைகள் மூலம் ஏராளமான தம்பதிகளிடையே தேவையற்ற மனக்கசப்பு ஏற்படுகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற சோதனைகளினால் குடும்ப வாழ்க்கையில் விரிசல்கள் அதிகம் ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.

13 September, 2012

'தெரியாத்தனமாக நியூட் படத்தை டிவிட்டரில் நடிகை!



நியூஸ்ரூம் என்ற தொடரில் நடித்து வரும் கனடா நாட்டு நடிகை ஆலிசன் பில், தனது நிர்வாணப் படத்தை டிவிட்டரில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அது தெரியாத்தனமாக இடம் பெற்று விட்டதாகவும், ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போட்டோ டிவிட்டரில்இடம் பெற்று விட்டதாகவும் இப்போது 'சமாளிபிகேஷன்' கொடுத்துள்ளார்.6 வயதான ஆலிசன் பில், மாகி என்ற கேரக்டரில் நியூஸ் ரூம் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வெப் கேமராவுக்கு முன்பு அவர் எடுத்த ஒரு நிர்வாணப் படம் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியானது. அதில், கேமராவுக்கு முன்பு உடைகள் இன்றி படுக்கையில் படுத்திருக்கிறார். வலது கை கேமராவை கையாளுகிறது. இடது கையை தூக்கி தலைக்கு பின்புறம் வைத்துள்ளார். மார்பகங்கள் அப்படியே பளிச்சிடுகிறது. கண்களில் கேபிஎன் ஆம்னி பஸ்களில் உள்ளதைப் போன்ற பெரிய கண்ணாடி போட்டிருக்கிறார்.இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு பலரும் அடடா,நம்ம ஆலிசனா இப்படி என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். இவருக்கு டிவிட்டரில் 16,000 பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் குறித்து இப்போது அவசரமாக ஆலிசன் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், தவறுதலாக இந்தப் படம் வந்து விட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று நினைக்கிறேன். படத்தை டெலிட் செய்யவே நினைத்தேன். ஆனால் அது போஸ்ட் ஆகி விட்டது, மன்னிச்சுக்குங்க என்று கூறியுள்ளார்.ஆனால் ஆலிசனைஅவரது ரசிகர்கள் யாரும் மன்னிப்பதாக தெரியவில்லை. மாறாக இந்தப் படத்தைப் போட்டதற்காக அவருக்கு வாழ்த்தையும், வரவேற்பையுமே பதில் டிவிட்டுகளாககொடுத்துள்ளனர்.

ஊட்டச்சத்துணவு கிடைக்காமல் குழந்தைகள் இறப்பது இந்தியாவில் தான்!


உலக அளவில் இந்தியாவில்தான் ஊட்டச்சத்துணவு கிடைக்காமல் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள் செத்து மடிகின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது யுனிசெப். குழந்தைகள் மரணம் தொடர்பான அந்த அறிக்கை உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.உலகத்தில் போதிய சத்துணவின்றி ஒவ்வொரு நாளும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 19,000 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றினை யுனிசெப் வெளியிட்டுள்ளது. அதை விட பேரதிர்ச்சி அளவிற்கு அதிகமாக உணவுதானியங்களை கையிருப்பு வைத்து அவற்றை மட்கிப் போக செய்துகொண்டிருக்கும் இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதம் அதிகம் என்பது.
2012 ம் ஆண்டிற்காக Child Mortality Estimates அறிக்கையை யுனிசெப் வெளியிட்டது. உலகிலேயே 5 நாடுகளில் மட்டும்தான் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அவை இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், சீனா ஆகியனவாகும். மற்ற நான்கு நாடுகளை விடவும் இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. 15.55 லட்சம் குழந்தைகள் மரணம்  2011ம் ஆண்டில் மட்டும் போதிய அடிப்படை வசதியும், சத்துணவும் இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் 15.55 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் 7.56 லட்சம் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். காங்கோவில் 4.65 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 3.52 லட்சம் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள சீனாவில் 2.49 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் குழந்தைகளுக்கு மரணம் ஏற்படுத்தும் காரணிகளாக ஐந்தினை யுனிசெப் பட்டியலிட்டுள்ளது. குறைப்பிரசவத்தினால் 14 சதவிகிதம் பேறும், டயாரியாவினால் 11 சதவிகிதம் பேரும், மலேரியாவினால் 7 சதவிகிதம் பேரும் எதிர்பாராத நோய்களினால் 9 சதவிகிதம் குழந்தைகளும் உயிரிழக்கின்றனர்.பசி என்பது ஒரு பிணி. ஒரு வாய் சோற்றுக்கே வக்கற்றவர்கள் அதிகம் இருப்பது இந்த தேசத்தில்தான் பல லட்சம் கோடிகளை ஊழல் செய்து பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் வாழ்வதும் இங்குதான். பசிக்காக கையேந்துவதுதான் உலகிலேயே அவமானகரமான செயல். அந்த நிலையிலும் உணவு கிடைக்காமல் செத்து மடியும் பிஞ்சுகள் இருக்கத்தான் செய்கின்றனர்.
பல லட்சம் கோடி ரூபாய்களும், செல்வ வளமும் உள்ள நாட்டில்தான் போதிய சத்துணவும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல லட்சக் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தியும் வெளியாகிறது. இது உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாகும்.இந்தியாவில் குழந்தைகள் மரணிப்பதை தடுக்கவேண்டுமெனில் நாட்டின் உணவுக்கிடங்குகளில் அபரிமிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை சீராக விநியோகித்தாலே போதும் எந்த குழந்தையும் பட்டினியால் மரணிக்காது

12 September, 2012

கூகுளை பின்னுக்கு தள்ளிய ஃபேஸ்புக்!


சர்வதேச அளவில் வலைத்தளங்களின் தரவரிசைப்பட்டியலை வழங்கி வரும் அலெக்ஸா நிறுவனத்தின் பட்டியலில், கூகுளை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.கம்ப்யூட்டர் யுகத்தின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தான் தரவரிசை பட்டிலில் முதல் இடத்தில் இருந்து வந்தது. முதன் முறை கூகுளை பின்னுக்கு தள்ளிவிட்டு, தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் கொடி நாட்டி இருக்கிறது ஃபேஸ்புக்.
இது திகைக்க வைக்கும் சாதனை என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு தகவலை தேட வேண்டும் என்றாலும், கூகுளை திறக்காமல் சாத்தியம் இல்லை என்று ஒரு நிலை இருப்பதனால் கூகுள் தரவரிசை பட்டியலில் முதலில் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.ஆனால் சில காலங்களாக அனைவரின் மனதையும் இரவு பகலாக ஆக்கிரமித்து வரும் ஃபேஸ்புக் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கூகுளை இரண்டாம் இடத்தில் தூக்கி வைத்துவிட்டு, முதலிடத்தை பிடித்திருக்கும் ஃபேஸ்புக் அனைவரின் கண்களையும் சில நிமிடங்கள் அகலமாக விரிய வைக்கிறது.
லட்சோப லட்சம் மக்களால் தினம் தினம் ஆயிரக்கணக்கான் வலைத்தங்கள் இன்டர்நெட்டில் தேடப்பட்டு வருகிறது. இவற்றில் எந்த வலைத்தளம் அதிகமான பேரால் தேடப்படுகிறது என்பது பற்றிய தரவரிசை பட்டியலை பிரித்து காட்டும் நிறுவனம் அலெக்ஸா.இந்த அலெக்ஸா டூல்பாரை ஒருமுறை உங்களது சிஸ்டத்தில் பயன்படுத்திவிட்டால் போதும், அதன் பிறகு எந்த வலைத்தளத்தை திறந்தாலும், அதன் தரவரிசை பட்டியல் தெளிவாக காட்டப்படும்.இதில் முதல் 10 இடத்தில் இருக்கும் வலைத்தளங்களின் பட்டியலையும் பார்க்கலாம். முதலிடத்தில் ஃபேஸ்புக், இரண்டாவது இடத்தில் கூகுள், மூன்றாவது இடத்தில் யூடியூப், நான்காவது யாஹூ மற்றும் ஐந்தாவது இடத்தில் பெய்டூ.காம் இதை தொடர்ந்து ஆறாவது இடத்தில் விக்கிப்பீடியா, ஏழாமிடத்தில் விண்டோஸ் லைவ் இருக்கிறது. சமூக வலைத்தளமான ட்விட்டர் எட்டாமிடத்தில் உள்ளது. கியூகியூ.காம் ஒன்பதாம் இடத்திலும் மற்றும் அமேசான்.காம் பத்தாமிடத்திலும் உள்ளன. இது தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் வருகை தருவோருக்கான கூடுதல் தகவல்கள்.

பார்த்ததில் பிடித்தது!


மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது
நாம் படத்தில் பார்ப்பது, திரைப்பட பின்னணி பாடகி சித்ரா அவர்களும்,அவரது 8 வயது மகளும், திரு மறைந்த சாயிபாபா அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். இன்றைய தேதியில் ஆசீர்வாதாம் வாங்கிய அந்த 8 வயது குழந்தையும் இந்த உலகில் இல்லை.அந்த குழந்தையின் சிறப்பிற்காக ஆசீர்வாதம் வழங்கிய சாயிபாபா அவர்களும் இந்த உலகில் இல்லை. எதிலுமே எல்லாவற்றையும் மிஞ்சியதை தனது சொந்தமாக பாவிக்க விரும்பும் மனிதன், மரணிக்கக்கூடிய மனிதர்களையும், அழியக்கூடிய விசயங்களையும் வணங்குவது ஆச்சர்யமாகவே உள்ளது...!
போராட்ட களத்தில் இருக்கும் மக்கள் மீது வன்முறையை திணித்தால் தலைமை வகிக்கும் தோழர் உதயகுமாரை பலவீனப்படுத்தி சரணடைய வைத்துவிட முடியும்' என்ற அரச பயங்கரவாதத்தின் திட்டத்தை தகர்த்து 'மண் போராளிகள்' தலைமையை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காட்சி!
வாடத பூ ஒன்று வாடும் பூக்களின் முகம் பார்த்து வாடியதோ.





11 September, 2012

Oru Kal Oru Kannadi Movie


சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம் 1921


பார்த்ததில் பிடித்தது !
















4ல் ஒருவருக்கு பிபி, 10ல் ஒருவருக்கு நீரிழிவு!



இளம் தலைமுறை இந்தியா நோயாளி இந்தியாவாக மாறிவருகிறதோ என்ற அச்சம் உருவாகும் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று. அதாவது இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. அதேபோல் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.உடல் ஏற்றுக்கொள்ளும் உணவை உண்ணவேண்டும் என்பது இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் அறிவுரை. நாமே வளர்ந்த நாடுகளின் கழிவுகளை உணவாக உட்கொள்கிறோம். அவர்கள் ஒதுக்கிய குப்பையில் தூக்கிப்போடும் மருந்துகளை நாம் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே நம் இந்தியாவில் உள்ள மக்கள் இன்றைக்கு பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம் மெல்லக்கொல்லும் ஒரு நோய். இது இதயம் தொடர்பான நோய்களையும், பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை தொடங்கி பாதம் வரை நோய் தாக்குகிறது. முறையற்ற உணவுப்பழக்கத்தினாலேயே இந்த நோய்களில் சிக்கித் தவிக்கின்றனர் இன்றைய இளைய சமுதாயத்தினர். இது தவிர இந்தியாவில் 26 சதவிகித மக்கள் புகையிலை உபயோகிக்கின்றனர் என்றனர் என்றும் இது தொடர்பான நோய்களில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. 2012 ம் ஆண்டிற்கான புள்ளிவிபரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மூன்றில் ஒருவருக்கு உயர்ரத்த அழுத்தம் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 51 சதவிகித மரணங்கள் பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
வளரும் நாடுகளில் உடல்பருமன் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். இதுவே உயர்ரத்த அழுத்த நோய்க்கு அடிகோலுகிறது. இந்தியாவில் 23.1 சதவிகிதம் ஆண்களும், 22.6 சதவிகித பெண்களும் உயர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் 11.1 சதவிகித ஆண்களும், 10.8 சதவிகித பெண்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே கடந்த 20 ஆண்டுகளில் பிரசவகால மரணங்கள் இந்தியாவில் குறைந்துள்ளது என்பது ஆறுதல் தரக்கூடிய செய்தியாகும். 1990 களில் 5.4 லட்சமாக இருந்த பேறுகால மரணம் தற்போது 2.9 லட்சமாக குறைந்துள்ளது.இதேபோல் சைட் எனப்படும் ஸ்கிரீன் இன்டியா டுவின் எபிடெமிக் அமைப்பு இந்தியர்களை பாதிக்கும் நோய்கள் குறித்த மிகப்பெரிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, அதில் பல்வேறு முடிவுகள் தெரியவந்துள்ளது.
எட்டு மாநிலங்களில் நகர்புறங்களில் வசிக்கும் 16 ஆயிரம் மக்களிடம் மூன்று ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டது. அவர்களில் 60 சதவிகிதத்தினர் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்தஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதாக சைட் அமைப்பின் தலைவர் டாக்டர் சசாங்ஜோசி தெரிவித்துள்ளார். நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பலரும் ரெகுலராக ரத்த சர்க்கரை, மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பலரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 7 சதவிகிதம்தான் இருந்துள்ளது. கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.லி கிராம் அளவிற்கு இருந்து. ஏராளமானோர் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த 8 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின் படி பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நோய் பற்றிய விழிப்புணர்வு மகாராஷ்டிராவில் குறைவாகவே உள்ளது தெரியவந்தது. இந்தியா முழுவதும் 7 சதவிகிதத்தினர் தங்களுடைய நோய் பற்றிய விழிப்புணர்வு அன்றி இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் 5 சதவிகிதத்தினர் நோய்பற்றி அறியாமையிலேயே இருக்கின்றனர்.மாறிவரும் உணவுப்பழக்கமே இதுபோன்ற நோய் பாதிப்பிற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வருங்கால சமுதாயத்தினரையாவது நோயற்ற சமுதாயமாக உருவாக்க நோய் பற்றிய விழிப்புணர்வும், அதனை கட்டுப்படுத்துவது குறித்த தெளிவும் இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

போனுட்ரியா நிக்ரிவென்டர்' சிலந்தி!


மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க சத்தான உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வாலிப வயோதிக அன்பர்களுக்கு வயக்ரா போன்ற மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சிலந்தியின் விஷம் மூலம் பாலியல் உணர்வுகளை அதிகரிக்க முடியும் என்றும் இதனால் நீண்ட சுகத்தை அனுபவிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பான ஆராய்ச்சி முடிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தென்அமெரிக்க நாடான பிரேசிலின் காட்டு பகுதிகளில் ‘போனுட்ரியா நிக்ரிவென்டர்' என்ற வகை சிலந்திகள் அதிகம் காணப்படுகின்றன. உலகிலேயே அதிக விஷம் கொண்ட சிலந்திகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.இதன் கொடுக்கில் இருந்து வெளியேறும் திரவம், அதிக விஷத்தன்மை வாய்ந்தது. போனுட்ரியா சிலந்தி விஷத்தின் மருத்துவ குணம் தொடர்பாக பிரேசில் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர். சிலந்தியிடம் இருந்து ‘பிஎன்டிஎக்ஸ்2,6' எனப்படும் விஷம் உறிஞ்சி எடுக்கப்பட்டது.
முதுமை காரணமாக செக்ஸ் வாழ்வில் உற்சாகம் குறைந்து காணப்பட்ட எலிகளின் உடலில் இந்த விஷம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர், எலிகளின் ‘மூடு' அதிகரித்தது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர்கள் தங்களில் ஆராய்ச்சி முடிவுகளை செக்ஸ் பற்றிய இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளனர். அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.எலிகளின் உடலில் சிலந்தியின் விஷத்தை செலுத்தியதும் நைட்ரிக் ஆக்சைடு சுரப்பு அதிகமாகிறது. மருந்தை செலுத்திய 20 நிமிடத்தில் அது வேலை செய்ய தொடங்குகிறது. இது ரத்த தட்டுகளை விரிவடைய செய்கிறது. ரத்த தட்டுகளின் சுவர்கள் நெகிழ்வு தன்மை அடைகின்றன. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மர்ம உறுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் அதிக விரைப்புத்தன்மை கிடைக்கிறது.
ஏறக்குறைய, ‘வயாக்ரா' போன்ற செக்ஸ் வீரிய மாத்திரைகள் போலவே சிலந்தி விஷம் செயல்படுகிறது. வயதான பிறகு ஏற்படும் விரைப்புத்தன்மை கோளாறுகளுக்கு சிலந்தி விஷம் அருமையான மருந்தாக இருக்கும் என்று தெரிகிறது.இந்த ஆராய்ச்சி இன்னமும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மனிதர்களை வைத்து சோதனை நடத்தி, வெற்றி கிடைத்த பிறகுதான் சந்தையில் மருந்தாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.இதை படித்து விட்டு நம் ஊர் ஆசாமிகள் யாரும் சிலந்தியை கடிக்க வைத்து சோதனை செய்து பார்க்க வேண்டாம். அப்புறம் அலர்ஜி ஆகிவிடப்போகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...