|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 August, 2011

தமிழக அரசு கௌரவம் பார்க்காமல் பயனளிக்க வாய்ப்பில்லாத மோனோ ரயில் திட்டத்தை கைவிட வேண்டும். ராமதாஸ்!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது   சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தை முதல்கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அது 300 கிலோமீட்டருக்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்க வாய்ப்பில்லாத இத்திட்டத்தை தமிழக அரசு கௌரவம் பார்க்காமல் கைவிட வேண்டும். உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 60 இடங்களில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன. இவற்றில் 48 திட்டங்கள் 3 அல்லது 4 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே உள்ளன.

உலகில் உள்ள மோனோ ரயில் திட்டங்களின் ஒட்டுமொத்த நீளத்தையும் கூட்டினால் அது வெறும் 400 கிலோமீட்டர் மட்டுமே வருகிறது. உலக நிலவரம் இவ்வாறு இருக்கும்போது தமிழக அரசு சென்னையில் மட்டும் 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் அமைக்கப் போவதாகக் கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது.இவ்வாறு அவர்  அறிக்கையில்

ஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி! கொடிகட்டிப் பறக்கும் கதர் துணி வியாபாரம்!

ஊழக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் காரணமாக உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் கதர் துணி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. குல்லா, கதர் துணிகள், கையில் கட்டிக்கொள்ளும் கதர் துண்டுகள் மற்றும் போஸ்டர்கள் ஏராளமாக தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றது. பக்கத்து மாநிலங்களுக்கும் இந்த கதர் துணிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய 3 நாட்களில் 20,000க்கும் மேற்பட்ட கொடிகள், 5 ஆயிரம் குல்லாக்களும், ஹசாரே உருவம் பொறித்த போஸ்டர்களும், பேட்ஜுகளும், முகமூடிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக சுதந்திர தின விழாவின்போது விற்கப்படுவதை காட்டிலும் 100 மடங்கு விற்பனை அதிகரித்து இருப்பதாக ராஜேஷ் அகர்வால் என்கிற மொத்த வியாபாரி தெரிவித்துள்ளார்.பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரகாண்டம், டெல்லி போன்ற மாநிலங்களுக்கும் இதுபோன்ற கதர் துணிகள் ஏராளமாக அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரித்துள்ளார். இந்திய தேசிய கொடிகளை அரசு அங்கீகாரம் பெற்ற கடைக்காரர்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஆனால் அன்னா ஹசாரேவின் போராட்டம் காரணமாக எல்லா கடைக்காரர்களுமே தேசிய கொடிகளை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். மக்கள் மத்தியில் இந்திய தேசிய கொடிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் படும் அவலம்! திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்!

சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் படும் பாடுகளை திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம். இந்தப் படத்துக்கான கதை வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.

தமிழக மீனவர்களை பல ஆண்டுகளாக சிங்கள கடற்படையினர் தாக்கி வருகின்றனர். நடுக்கடலில் தமிழக மீனவர்களை மடக்கி நிர்வாணப்படுத்தி துன்புறுத்தும் சிங்கள வெறியர்கள், பல நேரங்களில் சுட்டுக்கொன்று விடுவதும், கைது செய்து இலங்கைச் சிறைகளில் அடைப்பதும் தொடர்கிறது.

இந்த தொடர் அவலத்தை ஜெயமோகன் கதை வசனத்தில் ஒரு திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் என அனைவரும் புதியவர்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை முழுக்க முழுக்க கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வர கடற்கரைகளில், கடல்பகுதிகளில் எடுக்கிறாராம் மணிரத்னம்.

நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?

பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,

வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப் புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என் மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.
1. திரு. இராசீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின்நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்பு மில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.

2. திரு. இராசீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.

3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று.இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி இரகோத்தமன் தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடைத் தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?

4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. 

5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவு மில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி,    பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டு விட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.

6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தா கின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப் படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.
 
7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ்வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்....

8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப் பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.

இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப் பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப் போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ்பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?

9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.

11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.

12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.

13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒருதலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கெள்ள முடியும்.

 சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் இராசீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

 அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்... ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப்போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?
14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.

15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.

16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள்.

ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி

ஈழப்பெண்களின் மார்புகளை அறுத்து ராஜபக்சே நீண்ட நாள் வாழ வளர்க்கும் யாக குண்டலத்தில் வீசும் கொடூரம் சீமான்!

இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.அவ்வறிக்கையில்,    ’’இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர்.

இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
துவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர்.
 
பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.   
இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார். 
தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த சிறிலங்க அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது பாரிய மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது.
இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை” என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சதான் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.   இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம்  தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு

ஹசாரேவை புகழ்ந்த வெளிநாட்டு பத்திரிகைகள்!

Indian activist Anna Hazare leaves jail to start 15-day public fast against corruption

Pakistani anti-graft campaigner inspired by Anna protest

India anti-corruption activist Anna Hazare detainedPolice in India have detained prominent activist Anna Hazare hours before he had planned to start a fast against a proposed new anti-corruption law.As news of the arrest spread, his supporters came out on the streets of many Indian cities in protest.Mr Hazare had pledged to go on hunger strike in the capital, Delhi, Tuesday despite police denying him permission to fast for more than three days.

 Charges levelled against me are false: Anna Hazare Ahead of his indefinite fast on the Lokpal issue, social activist Anna Hazare lashed out at the Congress for calling him corrupt according to the Sawant Commission Report. Hazare said, "Charges levelled against me are false. I dare them to conduct an enquiry against me."Gandhian Hazare also added, "Till the time my name is cleared I will continue my fast." 

 

Anna Hazare fast 'totally misconceived' – Indian PM Manmohan Singh steps up rhetoric in row over activist whose jailing has sparked biggest protests in decades

 Anna Hazare to launch public fast as government relents India's beleaguered government caved in to popular fury over corruption on Thursday after thousands protested across the country, granting permission for a self-styled Gandhian crusader to stage a 15-day hunger strike in public.Anna Hazare was arrested on Tuesday, hours ahead of a planned fast to demand tougher laws against the graft that plagues Indian society from top to bottom.But the jailing of the 74-year-old campaigner sparked nationwide protests and put Prime Minister Manmohan Singh's government on a backfoot, forcing it to relent.

 Anna’s Movement Boost Business The protest against anti corruption by Anna Hazare will be a success or not is a question. But this protest has created a hike in business of goods that is used by the Anna's supporters. The whole nation is with him as he is fighting for the future 

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அன்னா ஹசாரேயைப் பற்றி, சர்வதேச அளவில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு, அமெரிக்க இந்தியர்களும் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக மாணவர் உமங் அகர்வால் குறிப்பிடுகையில், "சுப்ரீம் கோர்ட்டுக்கு நாங்கள் ஒட்டுமொத்தமாக இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம். ஊழலை தடுக்க சுப்ரீம் கோர்ட் தன்னிச்சையான நடவடிக்கை மேற்கொள்ளும்படி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்' என்றார். இதே போல, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் இந்தியர்கள், ஹசாரேவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரபல நாளிதழ்களும், ஹசாரேவை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. "தி டெலிகிராப்' பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில், உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் இந்திய அரசை, ஹசாரே கட்டிப்போட்டு விட்டதாகவும், முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு புகை, மாமிசம், மது, கேபிள் "டிவி' போன்ற விஷயங்கள் பிடிக்காது எனவும், தன் கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் மது குடித்ததற்காக கோவில் தூணில் கட்டி வைத்து ராணுவ பெல்டை கழற்றி அசாரே அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. "அசாரே தன்னுடைய போராட்டத்தால், டில்லி உள்ளிட்ட நகரங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்' என, "தி இண்டிபென்டன்ட்' என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. "ஹசாரேவின் போராட்டம் பலத்தரப்பட்ட மக்களையும் ஈர்த்துள்ளது. ஊழலுக்கு எதிராக மற்றவர்கள் நடத்திய போராட்டம் எல்லாம் இவரது போராட்டத்துக்கு முன் காணாமல் போய்விட்டன' என, "கார்டியன்' பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான இந்தியர்கள், புதிய காந்தியின் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளதாக "டெய்லி மெயில்' பத்திரிகை கூறியுள்ளது. ஹசாரேவின் போராட்டத்தால் இந்திய அரசுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக, "வாஷிங்டன் போஸ்ட்' குறிப்பிட்டுள்ளது. "இந்தியாவில் நடந்த ஊழல்களுக்கெல்லாம் சமாதானம் சொல்லி வந்த காங்கிரஸ் தலைவர்களின் செயல்களையெல்லாம், ஹசாரேவின் போராட்டம் புறந்தள்ளிவிட்டது. வளர்ந்து வரும் ஊழல்களுக்கெதிராக மக்கள் கொதித்தெழுந்து விட்டனர்' என, "நியூயார்க் டைம்ஸ்' தெரிவித்துள்ளது. "கடந்த 1975ம் ஆண்டு எமர்ஜென்சியை எதிர்த்து இந்திராகாந்திக்கு எதிராக நடந்த போராட்டத்தை போல, தற்போது ஹசாரே தலைமையில் மக்கள், ஊழலுக்கு எதிராக திரண்டுள்ளனர்' என, "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...