|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 August, 2011

தமிழக மீனவர்கள் படும் அவலம்! திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்!

சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் படும் பாடுகளை திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம். இந்தப் படத்துக்கான கதை வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.

தமிழக மீனவர்களை பல ஆண்டுகளாக சிங்கள கடற்படையினர் தாக்கி வருகின்றனர். நடுக்கடலில் தமிழக மீனவர்களை மடக்கி நிர்வாணப்படுத்தி துன்புறுத்தும் சிங்கள வெறியர்கள், பல நேரங்களில் சுட்டுக்கொன்று விடுவதும், கைது செய்து இலங்கைச் சிறைகளில் அடைப்பதும் தொடர்கிறது.

இந்த தொடர் அவலத்தை ஜெயமோகன் கதை வசனத்தில் ஒரு திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் என அனைவரும் புதியவர்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை முழுக்க முழுக்க கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வர கடற்கரைகளில், கடல்பகுதிகளில் எடுக்கிறாராம் மணிரத்னம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...