|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 August, 2013

சிமானகிய நான்!

சென்னை ஒரு ஊராய்யா?

நாமதான் சொல்லணும்...மரியாதை இல்லாத பேச்சு,நெருக்கடியான போக்குவரத்து,சுகாதாரமில்லாத குடியிருப்பு,குடிதண்ணீருக்கே தட்டுப்பாடு,எதைத்தொட்டாலும் அதிக காசு,எப்போதும் பரபரப்பான சூழல் என்றுள்ள உங்க சென்னை ஒரு ஊராய்யா? என்று வெளியூர்காரர்கள் கேட்கத்தான் செய்வார்கள்.அதற்காக சென்னையை விட்டு கொடுக்கமுடியுமா,வருகின்ற 22/8/13 ந்தேதி சென்னை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நம்ம ஊரு ரொம்ப நல்ல ஊரு என்று அச்சடிக்கப்பட்ட டிசர்ட்டுகள் நேற்று சென்னையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பேய்கள் இருப்பதை கண்டுபிடிக்க மொபைல் அப்ளிகேஷன்

 
தொழில்நுட்பம் என்பது ஒரு வகையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஒன்று தான். ஆனால் இப்பொழுது இதிலும் மூட நம்பிக்கைகள் வந்துள்ளன. பேய்கள் இருப்பதை கண்டுபிடிக்க மொபைல் அப்ளிகேஷன் வந்துள்ளது. ஐபோனில் பயன்படுத்தப்படும் வகையில் உள்ள இந்த மொபைல் அப்ளிகேஷனை, ரோஜெர் பின்ஜெல்டன் மற்றும் ஜில் பெய்ட்ஸ் என்பவர்கள் உருவாக்கியுள்ளனர். உங்கள் சுற்றுபுறத்தில் உள்ள எலமென்ட்களை வைத்து இந்த அப்ளிகேஷன் செயல்படும். இந்த மொபைல் அப்ளிகேஷன் பேய்கள் மற்றும் ஆவிகள் இருப்பதை கண்டுபிடித்து உங்கள் போன்களுக்கு அதை பற்றிய தகவலை மெசேஜ் அனுப்பும். இந்த மெசேஜ் பேய்கள் மற்றும் ஆவிகளின் எனர்ஜியை சித்தரிக்கும் வார்த்தையாக வரும். உதாரணமாக பிங்கர்ஸ், சீக்ரெட்ஸ், ஸ்ட்ரைசினைன், எலிபேன்டியாசிஸ் (fingers or secrets to strychnine or elephantiasis) என வரலாம். ஒரு சிலருக்கு கஷின் ஷேவ், கிராண்ட் பாதர், டைனிங் ரூம், ரயில் ரோட் (Cousin save, resourceful grandfather, read some. Dining room, garters, shallow, around railroad,) என மெசேஜ்கள் வந்துள்ளதாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...