|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 September, 2013

உணவுக்காக உயிரை பயணம் வைத்து!


 

ஒரு வேலை அந்த மூடுல?

Mobile Phone Important Codes.

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

27 September, 2013

வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளருக்கு உண்டு!

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு என்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. தேர்தல்களில் யாருக்குமே வாக்களிக்காமல் இருப்பது தொடர்பாக பொதுநலன் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த பொதுநலன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின்படி, தேர்தலில் போட்டியிடுகிற அனைத்து வேட்பாளர்களையுமே நிராகரிக்கிற உரிமை வாக்காளுக்கு உண்டு. அத்துடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் "மேலே உள்ள வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை" என்பதை பதிவு செய்யக் கூடிய பட்டனையும் தேர்தல் ஆணையம் இணைக்க வேண்டும். மேலும் இப்படி யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்கிற வாக்காளர் பற்றிய விவரத்தை ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படி நிராகரிப்பு வசதியை ஏற்படுத்தினால் தேர்தலில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். வேட்பாளர்கள் அனைவரும் நிராகரிக்கப்படுவார்கள் என்ற அச்ச உணர்வால் நேர்மையானவர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதியாக செயல்படும் திறன் கொண்டவர்களை மட்டுமே தேர்தலில் நிற்க வைக்க வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் கிரிமினல் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

26 September, 2013

நாளைய பூமி நமக்கும் இல்லை?

மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காடுகள் அழிக்கப்படுவது தொடர்கிறது. இதன் எதிர்விளைவாக, யானைகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றன.திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு இன்மை காரணமாக, அங்கிருந்து வெளிப்பட்ட காட்டுயானைகள், அதன் அருகிலிருக்கும் மலையடிவார பிரதேசங்களில் உள்ள வயல்வெளி மற்றும் மக்கள் வசிக்கும் இடங்களில் திரிய ஆரம்பித்தன. இதையடுத்து பயந்து போன மக்கள் புகார் செய்யவே... அவற்றை மீண்டும் காட்டுப்பகுதிக்கு விரட்டியடிக்கும் முயற்சியை மேற்கொண்டது வனத்துறை. அது தோல்வியில் முடியவே... மயக்க ஊசி போட்டு அத்தனை யானைகளையும் பிடித்தவர்கள், அவற்றை முதுமலையிலிருக்கும் யானைகள் வளர்ப்பு முகாமுக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
 
இதையடுத்து, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த இ.சேஷன் என்பவர், ''யானைகளை பாகன் மூலம் பழக்குகின்றனர். இதன் மூலம், வாழ்க்கை முழுவதும் நிரந்தரமாக அவை பாகனின் பிடிக்குள் வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. யானைகளின் சுதந்திரத்தில் மனிதன் தலையிடக் கூடாது. அவற்றை காட்டில் விடுவதற்கு உத்தரவிட வேண்டும்'' நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.இதற்கு, ''சுமார் ஆறு வாரங்களுக்கு கூண்டில் அடைத்து பாகனுடன் பழக்கப்படுத்துவோம். முன்னதாக நல்ல உணவு அளித்து, மிருக வைத்தியர்கள், நிபுணர்களின் உதவியோடு சோதனை மேற்கொள்வோம். பாகனுடன் பழகிய பிறகு மீண்டும் காட்டில் கொண்டுபோய் விடப்படும்'' என்று பதில் மனு தாக்கல் செய்தார் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் லட்சுமி நாராயண்.
 
இதை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன், ''மக்கள் தொகை பெருக்கத்தினால், வனப்பகுதி நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, சாலைகளும், ரயில் பாதைகளும் அமைக்கப்படுகிறது. இதனால், யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது தடுக்கப்படுகிறது. யானைகள், ரயில்களில் அடிப்பட்டு இறப்பதும் நடக்கிறது. இது மிகப்பெரிய வேதனையான விஷயமாகும்.எனவே, பிடிப்பட்ட 6 யானைகள் பழக்கப்பட்டுவிட்டன என்பதையும், இனி அது காட்டுக்குள் செல்ல தகுதியாகி விட்டது என்பதையும் உறுதி செய்தபின்னர், வனத்துறை அதிகாரிகள் காலதாமதம் இல்லாமல் அவற்றை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்'' என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.இந்தத் தீர்ப்பை கேட்டதும் சிரிப்பதா... அழுவதா என்று தெரியவில்லை.
 
காட்டுக்குள் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கும் யானைகளை, காட்டை விட்டு வெளியேற வைத்தது யார் குற்றம்? அதைச் செய்தது... பேராசை பிடித்த மனிதர்கள்தான். அந்தத் தவறுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதைவிட்டு, பாதிக்கப்பட்ட யானைகளுக்கே தண்டனை கொடுக்கிறீர்களே!பிடிபட்ட யானைகளை ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டுக்கு கடத்துவதே தவறு. அவை தங்களின் வாழ்விடங்களில் நிரந்தமாக வசிக்கும் சூழலை ஏற்படுத்தாமல், வேறு ஒரு காட்டுக்கு கடத்தியதோடு மட்டுமல்லாமல், அங்கேயும் அவை சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்காமல், முகாமில் வைத்து யானைப்பாகன் மூலமாக பழக்கிக் கொண்டிருக்கிறார்கள். 
 
அங்கே வழக்கமான யானைகளின் உணவிலிருந்து மாறுபட்ட உணவுகளும் நிச்சயமாக வழங்கப்படும். அதுமட்டுமல்ல, வேளாவேளைக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படும். மருத்துவ கண்காணிப்பும் நிச்சயமாக இருக்கும். ஆனால், இப்படி சொகுசு வாழ்க்கைக்கு ஆறு வாரங்களுக்குப் பழக்கி விட்டு, அதன் பிறகு காட்டுக்குள் அனுப்பினால், அவற்றின் இயல்பு வாழ்க்கை எப்படி நீடிக்கும்.ஒரு ஏழையைப் பிடித்து, ஆறு வாரங்களுக்கு மெத்தை, ஏசி, கட்டில், ஆறுவேளைசோறு என்றெல்லாம் பழக்கப்படுத்திவிட்டு, அதற்குப்பிறகு பழையபடி பிளாட்பாரத்துக்கே போ என்று விரட்டி அடித்தால் அவனுடைய நிலை என்னவாக இருக்கும்?
 
அதிலும், மற்ற விலங்குகளை விட யானைகளுக்கு நினைவுத்திறன் அதிகம். அதனால், ஏற்கனவே, சாப்பிட்ட உணவு ருசி எப்போதும் அவற்றை வாட்டிக் கொண்டே இருக்கும். இப்படியிருக்க, ஆறு வாரங்களுக்கு முன்பு வரை ஒருவிதமான உணவு மற்றும் உபசரிப்பில் வாழ்ந்துவிட்டு, அது கிடைக்காதபோது அவற்றின் மனநிலையும் வெகுவாக பாதிக்கப்படும்.ஏற்கெனவே பெருமளவில் யானைகள் அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பவையும் அழிவின் விழிம்பில்தான் இருக்கின்றன. இத்தகைய சூழலில், இருக்கின்ற யானைகளையாவது அவற்றின் வாழ்வியல் சூழலிலேயே வைத்துக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை எடுக்காமல்... இப்படி கொஞ்சம்கூட யோசிக்காமல், அவற்றை நாட்டு சூழலுக்குப் பழக்கிவிட்டு பிறகு, காட்டில் விடுவது என்பது கொடுமையே!'நாங்கள் மனிதர்கள்... எங்களுக்கு மட்டுமே இந்த பூமி' என்கிற இறுமாப்புடன்  இருந்தால்... நாளைய பூமி நமக்கும் இல்லை என்பதை எப்போதுதான் உணரபோகிறோமோ!
 

25 September, 2013

மோடியை கண்டித்து...


மோடியை கண்டித்து திருச்சியில் நாளை எஸ்.டி.பி.ஐ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


தன்னை உலகம் கவனிக்க வேண்டும் என நினைக்கும் வக்கிரபுத்தி கும்பல். மோடி தான் அடுத்த பிரதமர் என தெரிந்து கருப்புக்கொடி, கண்டன ஆர்ப்பாட்டம் என தொடர்வது இதுகலும் இந்த உலகில் இருப்பதை பாறை சாற்ற...

24 September, 2013

இந்த உலகம் இன்னுமாட நம்மள நம்புது!


இது உங்களுடைய தவறு!


சட்டப்பூர்வமாக பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதி பெற்றவர்கள் இங்கே நடமாடிக் கொண்டிருக்கும்போது பாலியல் பலாத்காரத்துக்கு, பெண்கள் ஆளாவது யாருடைய தவறு?. இது  உங்களுடைய தவறு!பாலியல் பலாத்காரத்தில் செய்ய ஒருவர் வந்தால்,. 'அண்ணா... ப்ளீஸ் அண்ணா.. விட்டுடுங்க' என்று சொல்லிப் பாருங்கள்... 'ரேப்' கேன்சலாகிவிடும். சில சாமியார்கள் இதைத்தான் பரிந்துரைக்கிறார்கள்.

பெண் வீட்டை விட்டு வெளியில் வருவதால்தான் பாலியல் பலாத்காரம்  நடக்கிறது. எதற்காக வெளியில் வரவேண்டும்...எதற்காக வேலைக்குச் செல்ல வேண்டும். படிதாண்டாமல் இருந்துவிட்டால்  இந்தப் பிரச்னை இருக்காதல்லவா? ஆனால் அப்போதும்  விருப்பமில்லாத சமயத்தில் கணவனே பாலியல் வன்முறையில் ஈடுபட்டால்?

ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டக்கூடிய உணவுகள்கூடபாலியல் பலாத்காரம் நிகழ காரணமாக  அமைந்துவிடுகின்றன. ஆனால், வீட்டில் சமைப்பது யார்? பெண்கள்தானே.

ஆபாசமான சினிமாவினால்தான் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. அதுபோன்ற சினிமாக்களில் நடிப்பது யார். பெண்கள்தானே?

பாலியல் பலாத்காரம் நடப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் -செல்போன். அதிகம் செல்போன் பேசுவது யார்? பெண்கள்தானே. இப்போது புரிகிறதா.. இது யாருடைய தவறு என்று? ஆம். இது  உங்களுடைய தவறு.

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? இதுபோன்ற  பாலியல் வன்முறைகள்  நடப்பதற்கு காரணமாக இருப்பது 100% பெண்கள்தான். அட, இங்கே 90% என்று சொல்லியிருக்கிறார்களா? கணக்கு போடுவதிலும் பெண்கள் பலவீனமாகத்தான் இருக்கிறார்கள்.... பாவம்!

பாலியல் பலாத்காரம் நிகழ்ந்தால், போலீஸிடம் செல்ல வேண்டும். நிச்சயமாக அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
''ஏன்  பாலியல் பலாத்காரம் நடக்கிறது... ஆண்களோடு இருப்பதால்தானே?''

நடுரோட்டில் டாக்டர் வெட்டிக் கொலை!


நாங்கல்லாம் அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்?


11 September, 2013

இன்று பாரதியின் 92ம் ஆண்டு நினைவு நாள்..

பாரதி தமிழ்க் கவிஞனாய், தேசியக் கவியாய், சுதந்திரக் கனல் பொங்கும் எழுத்தைத் தந்த எழுத்தாளனாய் அறியப்பட்டாலும், ஒரு சிறந்த பத்திரிகையாளராக பாரதி எடுத்த அவதாரம், வேறு யாரும் எடுத்திராதது. அவருடைய அந்த சாதனைகள்தான் என்னென்ன.?

* ஒரு கவிஞனாகப் பெரும்பாலானவர்களால் இனம்காணப்பட்ட சுப்பிரமணிய பாரதிக்கு, புரட்சிகள் பல செய்த பத்திரிகையாளன் என்ற மற்றொரு முகமும் உண்டு. பாரதி தனது பத்திரிகைப் பணியை 1904 நவம்பரில் சுதேசமித்திரனில் துணையாசிரியராகத் துவக்கினார். அதன்பிறகே தமிழ்ப்பத்திரிகையுலகுக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது.

* தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன் முதலில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதி. "இந்தியா' (1905) பத்திரிகைக்கே அந்தப் பெருமை சேரும்.

* பத்திரிகை சந்தாவில் புதுமையை அறிமுகப்படுத்தினார். வாசகர்களின் வருமானத்துக்கு ஏற்றவாறு சந்தா விகிதம் நிர்ணயித்த பாரதியை இன்றும்கூட யாரும் எட்ட முடியாது.

* பத்திரிகையுடன் இலவச இணைப்பாக சிறுபுத்தகம் வழங்குவதை அறிமுகப்படுத்தினார்.

* ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளில் பணிபுரிந்தவர். சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதா அல்லது யங் இந்தியா, விஜயா, சூர்யோதயம், கர்மயோகி, தர்மம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார்.

* பத்திரிகைகளில் நேரடியாகப் பணிபுரிந்தது மட்டுமன்றி சுதந்திர இதழாளராகவும் பல பத்திரிகைளுக்கு தம் படைப்புகளை அனுப்பியிருக்கிறார். விவேகபானு, சர்வஜன மித்திரன், ஞானபானு, காமன்வீல், நியூ இண்டியா ஆகிய பத்திரிகைகளிலும் பாரதியின் எழுத்துகள் அணி செய்துள்ளன. புனை பெயர்களை (காளிதாஸன், ஷெல்ன்தாஸ், சாவித்திரி, நித்யதீரர், உத்தம தேசாபிமானி) அதிகம் பயன்படுத்தியவரும் பாரதியே.

* செய்திப் பத்திரிகையில் வாசகரின் ஆர்வத்தைக் கூட்ட கதை, கவிதைகளை வெளியிட்டார். வாசகர்களை விவாதத்திலும் பங்கேற்கச் செய்தார்.

* முதன் முதலில் தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் ஆண்டு, மாதம் குறித்தவர் ("இந்தியா', "விஜயா') பாரதியே. "விஜயா' இதழில் தமிழ் எண்களையும் பயன்படுத்தி புரட்சி செய்தார்.

* "பழைய பத்திரிகைகளில் வெளிவந்த விஷயங்களை எடுத்துக் கோர்த்தால் நல்ல வசனநூல் கட்டலாம்'' என்று பத்திரிகை உலகுக்கு வழிகாட்டியவர் பாரதி. "எங்கள் காங்கிரஸ் யாத்திரை' போன்ற சிறு நூல்களை தனது பத்திரிகை அலுவலகத்திலிருந்து வெளியிட்டார்.

* செய்தி அனுப்புவோருக்கு பணம் தரும் முறையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தினார்.

* சித்திரங்களை மட்டுமே கொண்ட ""சித்ராவளி'' என்ற பத்திரிகையை நடத்தத் திட்டமிட்டார். ஆனால் அது இயலாமல் போனது.

* லண்டன் "டைம்ஸ்' முதல் கொல்கத்தாவின் "அமிர்தபஜார் பத்ரிகா' வரை 50 -க்கும் மேற்பட்ட பிறமொழிப் பத்திரிகைகள் பற்றியும், பிறமொழிப் பத்திரிகை ஆசிரியர்கள் பற்றியும் தனது பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்.

* மகாத்மா காந்தி இந்தியாவில் அறியப்படுவதற்கு முன்னரே 1909 ல் ""காந்திபசு'' என்ற கருத்துப் படத்தை "இந்தியா'வில் வெளியிட்டார்.

* தமிழுக்கு பொதுவுடைமை என்ற புதிய சொல்லை வழங்கியதோடு, வன்முறை மூலம் உருவாக்கப்படும் ரஷ்யாவின் சோஷலிஸ சமுதாயம் நிலைக்காது என்று 1920 லேயே தீர்க்க தரிசனமாக எழுதினார்.

* நாட்டின் முந்நாள்பெருமையும் இந்நாள் சிறுமையும் எதிர்கால வறுமையும் கருதாத கல்வியால் பலனில்லை என்று கூறி சுதேசிக் கல்வியை வலியுறுத்தினார்.

* மகளிரின் விடுதலைக்காக பத்திரிகையில் குரல்கொடுத்து பாலின சமத்துவத்துக்கு தமிழ்நாட்டில் வித்திட்டார்.

* தமிழின் பழம்பெருமையை பேசியபடியே ஆங்கில மோகத்தில் வீழ்வதால் அன்னைத் தமிழ் அவலத்தில் தாழும் நிலையை எடுத்துக்கூறி அன்றே எச்சரித்தவர் பாரதி. அதேசமயம் கிணற்றுத் தவளையாக இல்லாமல் ஆங்கிலம், இந்தி, சம்ஸ்க்ருத மொழிகளையும் அறிந்து அதனை தனது இதழியல் பணிக்கு பயன்படுத்தியவர் பாரதி.

"உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்'' என்ற தனது அமுதமொழிக்கு தானே உதாரணமாக பாரதி வாழ்ந்ததை இந்த தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன.

உங்களது செல்போன் எண்ணை அறிந்து கொள்ள!

மற்றவர்களின் செல்போன் எண்ணை மறந்துவிட்டால் செல்பேசியில் பார்த்துக் கொள்ளலாம். திடிரென ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் செல்போன் எண்ணே உங்களுக்கு மறந்துவிட்டால்...அது எப்படி மறக்கும் என்று கேட்காமல்.. மறந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள். சிரமமே இல்லை. ஒவ்வொரு செல்போன் சேவையும், உங்களது செல்போன் எண்ணை அறிந்து கொள்ள வசதி செய்துள்ளது.

அதனை அறிந்து கொள்ள...
உங்கள செல்பேசி எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்...
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

01 September, 2013

McNugget Rampage - Security Cam


Elephant ATTACKS Safari Jeep


சமூக வலைதளங்களில் கவனத்துடன் இருக்க


One-fact story என்ற தலைப்புடன் நிறைய போஸ்ட்கள் பேஸ்புக்கில் வருவதை நாம் பார்த்திருப்போம். இது போன்ற போஸ்ட் வந்தால் அதில் உள்ள தலைப்பை வைத்து அது உண்மையானதா என்பதை கூகுளில் பார்த்த பின்பு கிளிக் செய்யுங்கள்.

Breaking news என்ற தலைப்பில் நிறைய போஸ்ட்களை பார்த்திருப்போம். இது போன்ற போஸ்டகளை தெரியாதவர்களிடம் இருந்து வந்தால் தவிர்த்துவிடுங்கள். 

இந்த போஸ்டிற்க்கு கண்டிப்பாக Likes போடுங்கள் என்று கெஞ்சியபடி சில போஸ்ட்கள் வரும் அவைகளை தவிர்த்துவிடுங்கள்.


உடல் எடையை குறைப்பதற்க்கு டிப்ஸ் என்ற வகையில் போஸ்ட்கள் வரும் அவைகளை கிளிக் செய்ய வேண்டாம்.



பெயர் தெரியாத லிங்கை கொண்டு செய்திகள் வந்தால் கிளிக் செய்ய வேண்டாம்.



கிப்ட் கார்டுகளை பகிர்ந்து கொள்ளுங்கள், கிரீட்டிங் கார்ட் மற்றும் பரிசுகளுக்கு கிளிக் செய்யுங்கள் என்று போஸ்ட்கள் வந்தால் கிளிக் செய்யாதீர்கள். இவைகளில் தான் வைரஸ் அதிகம் பரவும்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...