|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 March, 2012

சென்னை பெண் மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அழகியாக!


சென்னையைச் சேர்ந்த டிவி தொகுப்பாளர் ரோஷல் மரியா ராவ் இந்த ஆண்டின் பேண்டலூன் பெமினா சர்வதேச மிஸ் இந்தியா 2012 அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சர்வதேச இந்திய அழகிகள் தேர்வு போட்டி மும்பையில் நேற்று நடந்தது. இதில் பேண்டலூன் பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2012 அழகியாக வன்யா மிஷ்ராவும்,பேண்டலூன் பெமினா மிஸ் இந்தியா எர்த் 2012 அழகியாக பிராச்சி தேசாயும் தேர்வு செய்யப்பட்டனர்.பேண்டலூன் பெமினா சர்வதேச மிஸ் இந்தியா 2012 அழகியாக சென்னையின் ரோஷல் மரியா ராவ் தேர்வு செய்யப்பட்டார்.

ரோஷல் சென்னை தியாகராயநகர் ஜி.என். செட்டி சாலையை சேர்ந்தவர். அவரது தந்தை டாக்டர் என்.வி.ராவ், தாய் வென்டி ராவ். ரோஷல் தற்போது சானல் யு.எப்.எக்ஸ். டி.வி. யில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.அழகி பட்டம் வென்றது குறித்து ரோஷல் கூறுகையில், "எனக்கு சிறு வயதிலேயே அழகு கலைகளில் நாட்டம் உண்டு. எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்ததும் மாடலிங் தொழிலில் ஈடுபட்டேன். எப்படியாவது அழகி பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஆசை, கனவு எனது உள்ளத்தில் இருந்து கொண்டே இருந்தது. அதற்காக கடுமையாக உழைத்தேன்.இப்போது இந்திய அழகி பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறேன். வருகிற ஜூலை மாதம் 14-ந்தேதி சீனாவில் சர்வதேச அழகி போட்டி நடக்கிறது. அதிலும் சர்வதேச அழகி பட்டத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

இந்தவார பலன்31-3-2012 முதல் 06-4-2012 வரை

மேஷம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தார் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலனில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். விருந்தினர் வருகையால் மகிழக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. புதிய பொருட்கள் வாங்கக்கூடும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

ரிஷபம் பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். மனம் குதூகலமாக இருக்கும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் நன்மை உண்டு. வீடு அல்லது வாகனம் மூலம் லாபம் உண்டாகும். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரிடம் பாராட்டு பெறக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்ப தலைவருக்கு அதிக வருமானம் வரும் வேலை கிடைத்து மகிழக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து பாராட்டு பெறக்கூடும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு செல்வாக்கு அதிகமுள்ள பதவி கிடைக்கலாம்.

மிதுனம் பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியக்கூடும். உடல் நலம் நன்றாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம் பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். வீடு மாற்ற இது உகந்த வாரம் அன்று. ஆன்மீக பலம் பெறுவீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு அதிக வருமானத்துடன் கூடிய வேலை கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம் பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். தடைகள் அகலும். பண வரவுக்கு குறைவிருக்காது. வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரியவர்களுக்கு உதவி செய்வீர்கள்.பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். உறவினர்களை அனுசரி்த்துச் செல்லவும். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும்.

கன்னி பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்க முன்பணம் கொடுக்கலாம். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் ஆதரவாக இரு்பபார்கள். அதனால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

துலாம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். மனம் நிம்மதியாக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உடன் பிறப்புகளைக்குத் தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். சேமிப்பில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் இன்பமாக நடக்கும். மகளுக்கு மங்கல நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். வீடு கட்டும் முயற்சி வெற்றி பெறும். தந்தை வழி உறவுகளால் மனம் மகிழ்வீர்கள். எதிலும் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

விருச்சிகம் பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உடல் நலம் நன்றாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். கணவரின் உடல் நலத்தில் கவனம் செல்லும். குடும்பத்தாரிடம் பாராட்டு பெறுவீர்கள். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும்.

தனுசு பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். நல்லவர்களின் நட்பால் நன்மை உண்டு. உடல் நலம் நன்றாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

மகரம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. புனிதப் பயணம் மேற்கொள்ளக்கூடும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். சேமிப்பில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு.

கும்பம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்கள் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வேலை பளு அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

மீனம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். பெற்றோர் உடல் நலனில் கவனம் தேவை. உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். வேலைக்கு போகும் பெண்களுக்கு பண வரவு அதிகரிக்கலாம். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். யாரைப் பற்றி யாரிடமும் விமர்சிக்க வேண்டாம். வேலையில் கூடுதல் கவனம் தேவை.

டெஸ்ட் ரேங்கிங் டாப்-10 ஒருவர் கூட இந்தியரில்லை!



ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசையில் முதல் 10 பேரில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. பேட்ஸ்மேன்களின் வரிசையில் 12வது நபராக சச்சின் இடம் பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) சார்பில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளின் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் உள்ளார். அவரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் டி.வில்லியம்ஸ், காலீஸ் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.வெளிநாட்டு மண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணியில் உள்ள வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கி உள்ளனர். இதனால் டெஸ்ட் தரவரிசையில் இடம் பெற்றுள்ள முதல் இந்திய வீரரான சச்சின் 12வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்ற டிராவிட் 19வது இடத்தில் உள்ளார்.பட்டியலில் 23வது இடத்தில் லட்சுமணனும், 25வது இடத்தில் அதிரடி வீரர் ஷேவாக்கும் உள்ளனர். கேப்டன் டோணி 43வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெய்ன் நீடிக்கிறார். 2வது இடத்தில் பாகிஸ்தானின் சமீது அஜ்மல் உள்ளார். பந்துவீச்சாளர்களின் பட்டியிலும் டாப்-10 வீரர்களில் இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை. பட்டியில் உள்ள முதல் இந்தியராக 12வது இடத்தில் ஜாகிர்கான் உள்ளார். அதன்பிறகு 20வது இடத்தில் ஓஜா உள்ளார்.இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்பஜன்சிங் 23வது இடத்திலும், இஷாந்த் சர்மா 28வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் ஆல்-ரவுண்டர்களுக்காக பட்டியலின் டாப்-10 வீரர்களிலும் இந்தியர்கள் யாரும் இல்லை.இந்திய அணி சரியுமா? அணிகளுக்கான தரவரிசையில் தற்போது 3வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடரும் பட்சத்தில் இந்தியா 4வது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது.

சாப்பிடாதீங்க எச்சரிக்கை ரிப்போர்ட்!



குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.அவசர உணவுகள்இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ராமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரைடு சிக்கன் மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.

குளிர்பானங்கள் பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது மெக்டொனால்டு, கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை

ஐபிஎல் சென்னை அணியின் பலம்-பலவீனம்!

ஐபிஎல் தொடரின் 5வது சீசனுக்கு தயாராகி வரும் அணிகளில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கோப்பையை வெல்லும் பலம் உள்ளது. சென்னை அணியில் புது வீரர்களின் வருகை மற்றும் சில வீரர்களின் இழப்பு மூலம் அணியின் பலமும், பலவீனத்தையும் தெளிவான கணிக்க முடிகிறது. கடந்த 2010, 2011 ஐபிஎல் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ள சென்னை அணி இந்த ஆண்டும் வெற்றிப் பெற்று ஹாட்ரிக் வெற்றிப் பெற காத்திருக்கிறது. சென்னை அணியில் டோணி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா (துணை கேப்டன்), பத்ரிநாத், விரிதம்மன் ஷா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், சாகிப் ஜக்காதி ஆகியோர் முன்னனி வீரர்களாக அணியில் உள்ளனர். மேலும் உள்ளூர் வீரர்களாக பல புதுமுகங்களும் இணைந்துள்ளனர்.

கேப்டன் டோணி: ஐபிஎல் 1 தொடரில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சென்னை அணியின் கேப்டன் டோணி. இந்திய அணியின் கேப்டனாக உள்ள டோணி, சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இந்திய அணியின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் டோணி, திறமையான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்கிறார். மேலும் அவர் அணி வீரர்களை சிறப்பாக வழிநடத்துவது சென்னை கூடுதல் பலம். துணை கேப்டன் ரெய்னா இடது பேட்ஸ்மேனாக மிடில் ஆடரில் களமிறங்கும் ரெய்னா அதிரடியாகவும், பொறுமையாகவும் ஆடும் தன்மை வாய்ந்தார். மேலும் அணியை வழிநடத்த டோணிக்கு பக்க துணையாக உள்ளார்.

பேட்டிங்கில் சென்னை அணியை பொறுத்த வரை நீண்ட பேட்டிங் வரிசையை பெற்றுள்ளது. மைக்கேல் ஹஸ்ஸி, பிரவோ, ரெய்னா, டோணி, பத்ரிநாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் அணி சிறந்த ஸ்கோர் எட்ட உதவுவார்கள். பந்துவீச்சில் அணியின்  சுழல் பந்துவீச்சிற்கு உள்ளூர் வீரர் அஸ்வின் உள்ளார். அவருக்கு துணையாக ரெய்னா, ஜடேஜா, ஜக்காதி ஆகியோர் செயல்படுவர். வேகப்பந்து வீச்சிற்கு சென்னை அணி முழுக்க முழுக்க வெளிநாட்டு வீரர்களை மட்டுமே நம்பி உள்ளது. ஸ்காட் ஸ்டைரீஸ், நியூவன் குலசேகரா, பென் ஹில்பின்ஹஸ், அல்பில் மார்கல் ஆகியோர் சென்னை அணி நம்பியுள்ளது.ஆல் ரவுண்டர்களின் செயல்பாடு சென்னை அணியி்ல் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், குலசேகரா, ஸ்காட் ஸ்டைரீஸ், பென் ஹில்பின்ஹஸ் ஆகியோர் உள்ளனர்.

பலம்: சென்னை அணியில் புதுமுகமாக ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என்ற அனைத்திலும் சிறந்து விளங்குவது அணியின் பலம். பேட்டிங்கில் மைக்கேல் ஹஸ்ஸி அணிக்கு சிறப்பான துவக்கம் அளிக்கிறார்.அவரை தொடர்ந்து ரெய்னா, டோணி, பிராவோ, ஜடேஜா ஆகியோர் ஸ்கோரை உயர்த்துகின்றனர். பேட்டிங்கில் இறுதிக் கட்டத்தில் அஸ்வின், மார்கல் ஆகியோர் தூள் கிளப்புகின்றனர்.பந்துவீச்சில் வெளிநாட்டு வீரர்களின் கலவை அணிக்கு சிறந்த பலமாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டு அணியில் பெரிய அளவில் மாற்றம் இல்லாதது பெரும் பலமாக கருதப்படுகிறது. சென்னை அணியின் பெரும்பாலான போட்டிகள் உள்ளூர் மைதானத்தில் நடப்பது அணிக்கு உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பலவீனம்: சென்னை அணியி்ல் 9 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தமாகி உள்ளனர். இதில் சில வீரர்களால் குறிப்பிட்ட போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். எடுத்துக்காட்டாக துவக்க வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தொடரின் சில போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டார். இதனால் அணியின் பேட்டிங் பலம் குறைக்கிறது.அணியில் வேக பந்துவீச்சாளர்களாக உள்ள போலிங்கர், மார்க்கல் ஆகியோரின் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை. முரளிதரன் இல்லாதது அஸ்வினுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இதில் இந்த ஆண்டு புதிதாக அணியி்ல் சேர்க்கப்பட்டுள்ள ஜடேஜா, பென் ஹில்பென்ஹஸ் ஆகியோரின் ஆட்டத்தை அணி அதிகம் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு கோப்பையை வென்றுள்ள சென்னை அணி இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

உலக அளவில் 218வது இடம் டில்லி ஐஐடி நிறுவனம்!


தர வரிசை பட்டியலில் டில்லி ஐஐடி நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளதாகவும் உலக அளவில் 218வது இடத்தையும் பிடித்துள்ளதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் புரேந்த‌ரேஸ்வரி கூறுகையி்ல் கடந்த 2011-ம் ஆண்டு டைம்ஸ் இதழ் நடத்திய கருத்து கணிப்பில் மும்பை ஐஐடி நிறுவனம் 317-வது இடத்தையும், பெங்களூரூ ஐஐடி நிறுவனம் 321-வது இடத்தையும் பிடித்துள்ளது.  குளோபல் பிசினஸ் ஸ்கூல் 2012 அறிக்‌கையின் படி ஆசிய பசிபிக் பகுதியில் அகமதாபாத் ஐஐடி நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 43 மத்திய பல்கலைகழகங்களும், 265 மாநில அரசின் பல்கலைகழகங்களும், 80 தனியார் பல்கலைகழகங்களும், 129 நிகர்நிலை பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றது.  இவைகளில் தமிழகத்தி்ல் அதிகபட்சமாக 54 பல்கலைகழகங்களும், உ.பி.,மாநிலத்தில் 48, மகாராஷ்டிரா 41, ஆந்திராவில் 40, ராஜஸ்தானில் 39, கர்நாடகாவில் 35 பல்கலைகழகங்கள்‌ செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஏழு பிறவிகள் எவை?


ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.  இதை  புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி  பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக் கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்  என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...