|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 March, 2012

ஐபிஎல் சென்னை அணியின் பலம்-பலவீனம்!

ஐபிஎல் தொடரின் 5வது சீசனுக்கு தயாராகி வரும் அணிகளில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கோப்பையை வெல்லும் பலம் உள்ளது. சென்னை அணியில் புது வீரர்களின் வருகை மற்றும் சில வீரர்களின் இழப்பு மூலம் அணியின் பலமும், பலவீனத்தையும் தெளிவான கணிக்க முடிகிறது. கடந்த 2010, 2011 ஐபிஎல் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ள சென்னை அணி இந்த ஆண்டும் வெற்றிப் பெற்று ஹாட்ரிக் வெற்றிப் பெற காத்திருக்கிறது. சென்னை அணியில் டோணி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா (துணை கேப்டன்), பத்ரிநாத், விரிதம்மன் ஷா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், சாகிப் ஜக்காதி ஆகியோர் முன்னனி வீரர்களாக அணியில் உள்ளனர். மேலும் உள்ளூர் வீரர்களாக பல புதுமுகங்களும் இணைந்துள்ளனர்.

கேப்டன் டோணி: ஐபிஎல் 1 தொடரில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சென்னை அணியின் கேப்டன் டோணி. இந்திய அணியின் கேப்டனாக உள்ள டோணி, சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இந்திய அணியின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் டோணி, திறமையான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்கிறார். மேலும் அவர் அணி வீரர்களை சிறப்பாக வழிநடத்துவது சென்னை கூடுதல் பலம். துணை கேப்டன் ரெய்னா இடது பேட்ஸ்மேனாக மிடில் ஆடரில் களமிறங்கும் ரெய்னா அதிரடியாகவும், பொறுமையாகவும் ஆடும் தன்மை வாய்ந்தார். மேலும் அணியை வழிநடத்த டோணிக்கு பக்க துணையாக உள்ளார்.

பேட்டிங்கில் சென்னை அணியை பொறுத்த வரை நீண்ட பேட்டிங் வரிசையை பெற்றுள்ளது. மைக்கேல் ஹஸ்ஸி, பிரவோ, ரெய்னா, டோணி, பத்ரிநாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் அணி சிறந்த ஸ்கோர் எட்ட உதவுவார்கள். பந்துவீச்சில் அணியின்  சுழல் பந்துவீச்சிற்கு உள்ளூர் வீரர் அஸ்வின் உள்ளார். அவருக்கு துணையாக ரெய்னா, ஜடேஜா, ஜக்காதி ஆகியோர் செயல்படுவர். வேகப்பந்து வீச்சிற்கு சென்னை அணி முழுக்க முழுக்க வெளிநாட்டு வீரர்களை மட்டுமே நம்பி உள்ளது. ஸ்காட் ஸ்டைரீஸ், நியூவன் குலசேகரா, பென் ஹில்பின்ஹஸ், அல்பில் மார்கல் ஆகியோர் சென்னை அணி நம்பியுள்ளது.ஆல் ரவுண்டர்களின் செயல்பாடு சென்னை அணியி்ல் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், குலசேகரா, ஸ்காட் ஸ்டைரீஸ், பென் ஹில்பின்ஹஸ் ஆகியோர் உள்ளனர்.

பலம்: சென்னை அணியில் புதுமுகமாக ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என்ற அனைத்திலும் சிறந்து விளங்குவது அணியின் பலம். பேட்டிங்கில் மைக்கேல் ஹஸ்ஸி அணிக்கு சிறப்பான துவக்கம் அளிக்கிறார்.அவரை தொடர்ந்து ரெய்னா, டோணி, பிராவோ, ஜடேஜா ஆகியோர் ஸ்கோரை உயர்த்துகின்றனர். பேட்டிங்கில் இறுதிக் கட்டத்தில் அஸ்வின், மார்கல் ஆகியோர் தூள் கிளப்புகின்றனர்.பந்துவீச்சில் வெளிநாட்டு வீரர்களின் கலவை அணிக்கு சிறந்த பலமாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டு அணியில் பெரிய அளவில் மாற்றம் இல்லாதது பெரும் பலமாக கருதப்படுகிறது. சென்னை அணியின் பெரும்பாலான போட்டிகள் உள்ளூர் மைதானத்தில் நடப்பது அணிக்கு உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பலவீனம்: சென்னை அணியி்ல் 9 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தமாகி உள்ளனர். இதில் சில வீரர்களால் குறிப்பிட்ட போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். எடுத்துக்காட்டாக துவக்க வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தொடரின் சில போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டார். இதனால் அணியின் பேட்டிங் பலம் குறைக்கிறது.அணியில் வேக பந்துவீச்சாளர்களாக உள்ள போலிங்கர், மார்க்கல் ஆகியோரின் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை. முரளிதரன் இல்லாதது அஸ்வினுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இதில் இந்த ஆண்டு புதிதாக அணியி்ல் சேர்க்கப்பட்டுள்ள ஜடேஜா, பென் ஹில்பென்ஹஸ் ஆகியோரின் ஆட்டத்தை அணி அதிகம் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு கோப்பையை வென்றுள்ள சென்னை அணி இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...