|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 February, 2012

Boys - telugu Movie - Siddartha - Genelia


M.I.A. real bad girl love it.


பார்த்ததில் பிடித்தது...

உப்பின் அளவை குறைக்கும் முன்...

உணவில் உப்பின் அளவைக் குறைக்க ஆரம்பித்துள்ளீர்களா? கவனம் தேவை! குறிப்பிட்ட அளவுக்குக் கீழே உணவில் உப்பின் அளவைக் குறைப்போருக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் என சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. சாதாரணமாக உணவில் உப்பின் அளவு அதிகமாக பயன்படுத்துவோருக்கு இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் உருவாவதோடு அதுவே மாரடைப்பு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது என்ற கருத்து மருத்துவர்களிடையே உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களுடன் வரும் நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறுவர்.ஆனால், மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக அவ்வாறு உப்பைக் குறைத்துக்கொள்வதே மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத்தகவல் தெரிவித்துள்ளது.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹார்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு தொடர்பாக மருத்துவ ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் கூறுகையில், "உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்."நாளொன்றுக்கு உணவில் சராசரியாக 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்"

விரதத்தின் போது கடைப்பிடிக்க...


விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். கடவுளை எண்ணி விரதம் மேற்கொள்வதால் நமது உள்ளம் தூய்மை அடைவதுடன் அறியாமையினால் நாம் செய்த தீவினைகளும், பாவங்களும் நம்மை விட்டு விலகும்.  விரதம் மேற்கொள்ளும் போது கீழ்கண்டவற்றை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.  சதாசர்வ காலமும் மனதில் இறைவனை மட்டுமே எண்ணி துதித்தல் வேண்டும். 

தம்மை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்ளாமலும், நாவிற்கு சுவையான உணவு வகைகளை உண்ணாமலும் இருத்தல் வேண்டும். கேளிக்கைச் செயல்களிலோ, வீண் விவாதங்களிலோ ஈடுபடக்கூடாது. பிறரைப்பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது. அடுத்தவர் மனம் துன்பப்படும்படியான தீய சொற்களைப் பேசக்கூடாது. மனதில் தான் என்ற கர்வத்தை அறவே அகற்ற வேண்டும். விரும்பத்தகாத செயல்களை செய்யக்கூடாது. அதிகமாக தானம் செய்ய வேண்டும். அவ்வாறு, தானம் செய்யும்போது எவ்வளவு பொருள் கொடுத்தாலும், இவ்வளவு குறைவாகவே கொடுக்கிறோமே! என்ற எண்ணத்துடன் கொடுக்க வேண்டும். அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் எளிதில் இறைவனின் அருளை எளிதில் பெறலாம்.

மாணவியுடன் உறவு கொண்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி!

Add caption

 முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி வெள்ளை மாளிகையில் பயிற்சிக்காக வந்த 19 வயது பெண்ணுடன் உறவு கொண்டார் என்று அந்தப் பெண் தற்போது எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜான் எப் கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையின் பிரஸ் அலுவலகத்தில் பயிற்சி பெற வந்தவர் மிமி ஆல்போர்ட்(69). அப்போது அவருக்கு வயது 19. அவர் முன்னாள் அதிபர் கென்னடியுடன் தனக்கிருந்த ரகசிய உறவு குறித்து ஒரு புத்தம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் வெள்ளை மாளிகையில் பயிற்சிக்கு சென்ற 4வது நாளே அங்குள்ள நீச்சல் குளத்திற்கு வருமாறு என்னை கென்னடி அழைத்தார். அதன் பிறகு கென்னடியின் நெருங்கியநண்பர் டேவ் பவர்ஸ் என்னை ஒரு பார்ட்டிக்கு அழைத்தார். கென்னடி நிறைய குடித்துவிட்டு எனக்கு வெள்ளை மாளிகையை சுற்றிக்காண்பித்தார். அப்போது அவர் தனது மனைவியின் அறைக்கு அழைத்துச் சென்று எனக்கு மிக அருகில் வந்தார்.பின்னர் என்னுடன் உறவு கொண்டார். நீ இதற்கு முன்பு உறவு கொண்டுள்ளாயா என்று அவர் என்னிடம் கேட்டார். இல்லை என்று சொல்ல வந்த நான் பிறகு ஆமாம் என்று கூறினேன். உறவுக்குப் பிறகு அவர் ஆடையை அணிந்து கொண்டு ஒரு அறைக்கு சென்றுவிட்டார்.நான் அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால் அவரோ மிகவும் சகஜமாக இருந்தார். அன்று வீட்டுக்கு செல்லும் வழியெல்லாம் இனி நான் கன்னியில்லை என்பது தான் என் நினைவுக்கு வந்தது.

மறுவாரம் நான் மீண்டும் அவருடன் நீச்சல் குளத்திற்கு சென்றேன். அதன் பிறகு ஒரு அறைக்கு சென்று உறவு வைத்தோம். அன்றில் இருந்து 18 மாதங்கள் எங்களுக்கு இடையே ரகசிய உறவு இருந்தது. அவர் அதிபர் என்பதால் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. நாட்டின் மிகவும் முக்கியமான நபர் என் மீது ஆசைப்படுகிறார் என்ற எண்ணத்தால் என்னால் அவரை ஒதுக்க முடியவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.இது தவிர அப்போது 45 வயதான கென்னடி மிமியை தனது நண்பருடன் உறவு கொள்ளச் சொல்லி வேறு அதையும் பார்த்தாரம். மிமிக்கு அமில் நைட்ரேட் என்னும் போதைப் பொருளைக் கொடுத்துள்ளார். அதை உட்கொண்டால் செக்ஸ் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம்!


வரும் கோடை காலத்தில் வெயில் 40 டிகிரி செல்சியஸ் அளவு வரை உயர்ந்து (104 டிகிரி பாரன்ஹீட்) சுட்டெரிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவத்தில், மழை கிடைக்க வேண்டிய சராசரியை விட கூடுதலாக பொழிந்தது. குளிர் காலமும் மாறுபட்டிருந்தது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் குளிர் பருவத்தில் வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இது ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் உள்ள பருவ நிலையை நினைவுப்படுத்தியது. பருவ நிலை மாற்றம் : ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் வரை மிதமான தட்பவெட்பம் நிலவுவது வழக்கம். இந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் துவங்கி விட்டது. வழக்கமாக, கோடை காலம் மார்ச் மாதம் துவங்கும். ஆனால், இப்போதே சுட்டெரிக்கும் வெயில் கோடை காலத்தை நினைவுப்படுத்துகிறது. இந்தாண்டு பருவ மழையில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என, வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் கோடை வெயில் கடுமையாக சுட்டெரிப்பது வழக்கம். கடந்தாண்டு உள்மாவட்டங்களிலும் வெயில் கொளுத்தியது. கடல் காற்று வீசியதால் கடலோர மாவட்டங்கள் ஓரளவுக்கு தப்பின.

மாலை 6 மணிக்கும் சுரீர் : கடந்தாண்டு கோடையில், மாலை 6 மணிக்கு கூட பகல் 12 மணி போல சுரீர் என்று வெயில் சுட்டது. புவி வெப்பமயத்தால், ஆண்டுதோறும் வெப்ப அளவு அதிகரித்து வருகிறது. இதனால், கடந்தாண்டை விட இந்தாண்டும் வெயில் அதிகமாக சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 3ம் தேதி காலை குறைந்தபட்சமாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 29.4 டிகிரி செல்சியேசும், மீனம்பாக்கத்தில் 30.3 டிகிரி செல்சியேசும் வெப்பம் பதிவானது. இது சராசரியை விட அதிகம். கடந்த 4ம் தேதி அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 28.7 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 30.3 டிகிரியும் வெப்பம் பதிவாகியிருந்தது. பருவ நிலை மாற்றத்தால் இந்தாண்டு 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவு வரை சென்னையில் பதிவாக வாய்ப்புள்ளது

ஊழலுக்கு எதிராக மக்கள் கோபம் லஞ்ச ஒழிப்பு ஆணையர் பிரதீப் குமார்!

ஊழலுக்கு எதிராக மக்கள் கோபம் அதிகரித்து வருவதாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையர் பிரதீப் குமார் கூறியுள்ளார். இது குறித்து பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: ஊழல் மற்றும் முறைகேடு, புற்றுநோய் போல், நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது. இதனால் ஊழலுக்கு எதிராக மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் மக்கள் பொறுமை இழக்கின்றனர். ஊழலால் ஏழை மக்கள் நேரிடையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.

வாடா செல்லம் கதாநாயகி விபசார வழக்கில் கைது!


கடந்த ஆண்டு வெளிவந்த, வாடா செல்லம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிகை கரோலின் நடித்துள்ளார். 

இவர் மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து, விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வாடிக்கையாளர் போர்வையில் ஒரு போலீஸ்காரர், நடிகை கரோலின் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் நடிகையைக் கண்டு பேசியபோது, அவர் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது மானேஜரும், திரைப்பட ஸ்டூடியோ ஒன்றின் அதிபருமான எம்.ராஜ்குமாரும் கைது ஆனார்கள்.நடிகை கரோலின் தமிழ்ப்படங்களில் நடித்துள்ளதோடு மட்டுமின்றி மாடல் அழகியாகவும் இருந்து வந்துள்ளார். இவர் பிரபல வைரம் மற்றும் ஆடை நிறுவனங்களின் விளம்பரப்படங்களில் தோன்றியும் நடித்துள்ளார்.

ஒழுக்கத்தை காக்க போராடிய அண்ணன்!


திருப்பூர் மாவட்டம், அவினாசி பக்கம் உள்ள ஆனந்தகிரியை சேர்ந்தவர் ஆயயாச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு வெள்ளியங்கிரி (வயது 21) என்ற மகனும், அம்பிகா (வயது 18) என்ற மகளும் உள்ளார்.அம்பிகாவுக்கும், பக்கத்து ஊரானா சுண்டக்காம்பாளையம் என்ற ஊரை சேர்ந்த சண்முகம் (வயது 22) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. திருமணமான ஒரே வாரத்தில் எனக்கு சன்முகத்துடன் வாழப் பிடிக்கவில்லை ஏற்று கூறிவிட்டு அம்பிகா தனது தந்தையார் வீட்டுக்கு வந்துவிட்டார். அம்பிகாவின் அப்பா அய்யாச்சாமி, அண்ணன் வெள்ளியங்கிரி ஆகியோர், மகளிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கணவன் வீட்டுக்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார் அம்பிகா. இதற்கிடையில் கடந்த வாரம் அம்ம்பிகாவின் கணவரின் ஊரான சுண்டக்காம்பாளையத்தில் இருக்கும் வடிவேல் என்பவரும், அம்பிகாவும்  காணாமல் போய்விட்டனர்.தனது மகளை வடிவேல் கடத்திக்கொண்டு போய்விட்டதாகவும், வடிவேலிடமிருந்து தனது மகளை மீட்டு கொடுங்கள் என்று அம்பிகாவின் தயார் பழனியம்மாள் அவினாசி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வடிவேலுவையும், அம்பிகாவையும் கண்டுபிடித்த ஆய்வாளர் குப்பு, நேற்று மதியம் அம்பிகாவையும் வடிவேலுவையும் காவல்நிலையத்துக்கு கூட்டிவந்து அவர்களை தனியாக விசாரணை செய்து கொண்டிருந்தார்.அப்போது, அம்பிகாவின் குடும்பத்தினரும் உடன் இருந்துள்ளார்கள். உனக்கும் சண்முகத்துக்கும் திருமணம் நடந்துள்ளது, நீங்கள் இருவரும் தான் சேர்ந்து வாழவேண்டும், அப்போது தான் உங்களுக்கு ஊரில் நல்ல மரியாதை இருக்கும். வடிவேலுவுடன் நீ சேர்ந்து வாழ்ந்தால் அது ஆரோக்கியமாக இருக்காது. ஊரில் உள்ளவர்கள் உன்னை தவறான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள் என்று அம்பிகாவுக்கு அறிவுறை கூறிக்கொண்டிருந்தார் ஆய்வாளர் குப்பு.

ஆய்வாளர் சொல்லுவதையெல்லாம் நல்ல பிள்ளையாய் தலையை ஆட்டியபடியே கேட்டுகொண்டிருந்த அம்பிகா கடைசியில், நான் வடிவேலு கூடத்தான் போவேன் எனக்கு சண்முகத்தை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவனோடு சேர்ந்து வாழமுடியாது என்று சொல்லியுள்ளார்.இதை கேட்டுக்கொண்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்த அம்பிகாவின் அண்ணன் வெள்ளியங்கிரி, நீ திருந்தவேமாண்டே... என்று சொல்லி விட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியே போனவர் கையில் ஒரு அருவாளை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே வந்து தனது தங்கை அம்பிகாவின் முடியை பிடித்து இழுத்து கிழே குனிய வைத்து வைத்து நடு முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டு விட்டார்.தனது கண் முன்னாலேயே அம்பிகாவுக்கு வெட்டு விழுந்ததை பார்த்து மிரண்டு போன ஆய்வாளர் குப்பு போட்ட சத்தத்தில் காவல் நிலையாத்துக்கு வெளியில் இருந்த சிலர் ஓடிவந்து வெள்ளியங்கிரியை பிடித்துக் கொண்டனர்.

முதுகில் வெட்டுப்பட்ட அம்பிகாவை முதலில், அவினாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆய்வாளர் குப்பு கொடுத்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட வெள்ளியங்கிரி இப்போது கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...