|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 August, 2011

6 லட்சம் கட்டி விடிய விடிய ஆடிப் பாடி, குடித்துக் கொண்டாட அனுமதிக்கும் ஹோட்டல்!

மும்பையில் உள்ள சன் அன் ஷீல் என்ற ஹோட்டலில் நடந்தேறும் இரவு நேர ரகசியங்கள், அலங்கோலங்கள் அம்பலத்திற்கு வந்து அனைவரையும் பரபரக்க வைத்துள்ளது. இந்த ஹோட்டலில் ரூ. 6 லட்சம் பணம் கட்டினால், இரவு முழுக்க டான்ஸ் பார்க்கவும், ஆடவும், மூக்கு முட்ட குடிக்கவும், செக்ஸ் வைத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படுகிறதாம். அதனால்தான் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த திரில்லைக் கொடுக்கிறது இந்த ஹோட்டலும், அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மற்றும் உள்ளே நடக்கும் விஷயங்களும். தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு அரணின் கீழ் உள்ள இந்த ஹோட்டலுக்குள் அவ்வளவு சீக்கிரம் யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது.

அந்தேரியில் உள்ள இந்த ஹோட்டலில் கடந்த வாரம் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போதுதான் உள்ளே நடந்து வந்த அலங்கோலங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஹோட்டலில் எந்தப் பக்கம் போனாலும் விபச்சாரம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து போலீஸார் பயந்து போய் விட்டனராம். அத்தோடு மதுவும் லிட்டர் கணக்கில் ஊற்றி ஓடிக் கொண்டிருந்தது. கண்களைக் கூச வைக்கும் அரைகுறை ஆடைகளுடன் நடந்த கண்மண் தெரியாத ஆட்டமும் போலீஸாரை அதிர வைத்தது. படு ரகசியமாக இந்தத் 'தொழிலை' நடத்தி வந்துள்ளது இந்த ஹோட்டல் நிர்வாகம். அதை விட முக்கியமாக படு தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளனர்.

இங்கு ஒரு இரவுக்கு ரூ. 6 லட்சம் கட்டணம் வாங்கி வந்துள்ளனர். அந்த இரவு முழுவதும் நம் இஷ்டப்படி உள்ளே கொட்டமடிக்கலாம். விடிய விடிய குடிக்கலாம், விரும்பும் வரை டான்ஸ் ஆடலாம், போர் அடித்தால் பொழுதுபோக்க பெண்களையும் ஏற்பாடு செய்து தரும் ஹோட்டல் நிர்வாகம். அவர்களுடன் கூத்தடிக்கலாம். எல்லாவற்றுக்கும் கட்டணம்தான் இந்த ரூ. 6 லட்சம். அதேசமயம், யார் வேண்டுமானாலும் போய் பணத்தைக் காட்டி உள்ளே போய் விட முடியாது. மாறாக, இந்த ஹோட்டலுக்கு ரெகுலராக வருவோர் யாராவது ரெபரன்ஸ் செய்தால்தான் அனுமதி கிடைக்கும்.

ஹோட்டலுக்குள் திடீரென யாராவது 'எதிரிகள்' (அதாவது போலீஸார்) புகுந்து விட்டால், தப்பித்து வெளியேறுவதற்காக ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளையும் செய்து வைத்துள்ளது இந்த ஹோட்டல் நிர்வாகம். இதற்காக ரகசியப் பாதைகளையும் அமைத்து வைத்துள்ளனர். உள்ளே 'ஆடி'க் கொண்டிருப்பவர்களுக்கு சிக்னல் கொடுக்க எலக்ட்ரானிக் சிஸ்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் டான்ஸ் ஆடுவோர் உடை மாற்றிக் கொள்ளவும் பல ரகசிய அறைகளை அமைத்து வைத்துள்ளனர்.

ஹோட்டலுக்கு வெளியே பார்த்தால் படு சாதாரணமாகத்தான் காட்சி தருகிறது. ஆனால் உள்ளே போனால் யாரும் மிரண்டு விடுவார்கள். அத்தனை நவீன வசதிகளுடன் உள்ளது இந்த ஹோட்டல். இரவுதான் இந்த ஹோட்டலுக்கு வேலையே. காலை 6 மணி வரை படு பிசியாக இருக்குமாம் இந்த ஹோட்டல். இந்த ஹோட்டலுக்கு வருவோர் பெரும்பாலும் தொழிலதிபர்கள்தான்.

ரெய்டுக்குப் பின்னர் ஹோட்டலின் உரிமையாளர் லால்ஜி சிங் என்கிற வினோத் சிங் உள்ளிட்ட 45 ஆண்களும், 6 பெண்களும் கைது செய்யபப்ட்டுள்ளனர். இதில் உரிமையாளர் சிங்கை, துபாய் போலீஸாரும் ஒரு மோசடி வழக்கில் தேடிக் கொண்டுள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவருக்கு எதிராக இன்டர்போல் அலர்ட்டும் நிலுவையில் உள்ளதாம்.

சிங்குக்கு துபாய், மொரீஷியஸிலும் ஹோட்டல்கள் உள்ளனவாம். அங்கும் இதுபோலத்தான் தொழில் நடந்து வருகிறதாம்.

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங் இந்தியாவில்!

உலகப் புகழ் பெற்ற ஒற்றன் ஜேம்ஸ் பாண்ட் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.டெல்லியின் சரோஜினி நகர் மார்க்கெட் மற்றும் அகமதாபாத்தின் நவகாம் நகர் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாம். மேலும் மும்பை மற்றும் கோவா கடற்கரைப் பகுதிகளிலும் ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்தியாவில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை நடத்தத் தேவையான அனுமதியை மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஏற்கனவே கொடுத்து விட்டதாம். பாண்ட் பட வரிசையில் இது 23வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் டெல்லியில் தொடங்கவுள்ளது. சரோஜினி நகர் மார்க்கெட் தவிர அன்சாரி சாலை, தார்யாகஞ்ச் ஆகிய பகுதிகளிலும் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. சாம் மென்டிஸ் படத்தை இயக்குகிறார். 2012ல் இப்படம் திரைக்கு வரும். பாண்ட் பட நிறுவனம் மற்றும் அப்படத்தின் முக்கிய கேரக்டரான டாக்டர் நோ ஆகியோருக்கு இது 50வது வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தவிர வடக்கு கோவா, தென் கிழக்கு ரயில்வேயின் கீழ் வரும் துத்சாகர் சுரங்கப் பாதை, ஜூவாரி ரயில் பாலம் ஆகியவற்றிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. வெளிநாட்டுப் படம் ஒன்றின் ஷூட்டிங் இந்தியாவில் நடைபெறுவது இது முதல் தடவையல்ல. ஏற்கனவே டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் உள்பட இதுவரை 22 வெளிநாட்டுப் படங்களுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் 007, ஒரு கற்பனைக் கதாபாத்திரமாகும். இயான் பிளமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1953ல் இந்த கதாபாத்திரத்தை வைத்து நூல்களை எழுதினார். மொத்தம் 12 நாவல்களையும், 2 சிறுகதைத் தொகுப்புகளையும் பாண்ட் கேரக்டரை வைத்து அவர் உருவாக்கியுள்ளார். அதை அடிப்படையாக வைத்துத்தான் இதுவரை 22 படங்கள் உருவாகி உலகெங்கும் பாண்ட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களைத் தேடிக் கொடுத்துள்ளன.

1962ம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகத் தொடங்கின. முதல் படத்தின் பெயர் டாக்டர் நோ. இது ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் இடம்பெறும் முக்கிய கேரக்டராகும். 1964ல் பிளமிங் மரணமடைந்தார். இதையடுத்து பின்னர் வெளியான பாண்ட் கதைகளை கிங்ஸ்லி அமிஸ், ஜான் கார்டினர், ரேமான்ட் பென்சன், செபாஸ்டியன் பால்க்ஸ், ஜெப்ரி டீவர் ஆகியோர் எழுதினர்.

ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த முதல் நடிகர் சீன் கானரி. மொத்தம் 6 படங்களில் அவர் நடித்துள்ளார். அதிகபட்ச ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்தவர் ரோஜர் மூர். மொத்தம் 7 படங்களில் இவர் நடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்து, அதிகபட்சமாக 4 படங்கள் வரை பியர்ஸ் பிராஸ்னன் நடித்துள்ளார்.

தற்போது ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடித்து வருபவர் டேணியல் கிரேக். இவர்தான் இதுவரை நடித்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர்களிலேயே அதிக அளவில் பிரபலமாகாத பாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்ட் வேடங்களுக்கு நடிக்கப் பொருத்தமில்லாதவர் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டவர் கிரேக்.

இயான் புரடக்ஷன்ஸ் நிறுவனம்தான் இப்படங்களைத் தயாரித்து வருகிறது. கடைசியாக வெளியான ஜேம்ஸ் பாண்ட் படம் குவான்டம் ஆப் சொலஸ். 2008ல் இது வெளியானது.

போலீசாருக்கு பர்தாவை விலக்கி முகத்தை காட்டாவி்ட்டால் 1 ஆண்டு சிறை!

முஸ்லீம் பெண்கள் அணிந்துள்ள பர்தாவை, போலீசார் கூறினால் நீக்கி முகத்தை காட்ட வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவித்தால், 1 ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும், என ஆஸ்திரேலியா அரசு கெடுபிடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், சமீபத்தில் குற்றவாளியான ஒரு கிறிஸ்துவ பெண்ணிற்கு பதிலாக, பர்தா அணிந்த முஸ்லீம் பெண் ஒருவர் போலீசாரால் தவறுவதாக கைது செய்யப்பட்டார். பின்னர், சோதனையில் அவரல்ல என கண்டறியப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்டார்.

பொது இடங்களில் பெண்கள், பர்தா அணிந்து வருவதால், குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தப்புவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த குழப்பங்களை தவிர்க்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதற்கு, அடுத்த வாரம் முதல் புதிய கட்டுப்பாடுகள் வர உள்ளது.

அதன்படி, சாலையில் செல்லும் முகமுடி அணிந்தவர்கள், ஹெல்மேட் அணிந்தவர்கள், பர்தா அணிந்தவர்கள் ஆகியோரை, சந்தேகத்தின் பேரில் முகத்திரையை போலீசார் நீக்க கூறினால், உடனே அவர்கள் முகத்தை காட்ட வேண்டும். அப்படி காட்டாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

அதையும் மீறினால், 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். முகத்தை காட்டிய பின் தங்கள் முகத்திரை போட்டுக் கொள்ளலாம். பொது இடங்களில் முகத்தை காட்ட கலாச்சாரம், மதம், தனிப்பட்ட நம்பிக்கைகள் தடுக்கும் பட்சத்தில், அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று முகத்தை காட்டலாம்.

நீதிமன்றங்களிலும் இந்த சட்டம் அமலில் இருக்கும். சந்தேகத்தின் அடிப்படையில், பெண்களின் முகத்திரையை விலக்கி பார்க்கும் அதிகாரம் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தற்போது சட்டமாகவே இயற்றப்பட்டுள்ளது.பிரான்ஸ், பெல்ஜீயம், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் சில பகுதிகளுக்கு அடுத்தபடியாக தற்போது, ஆஸ்திரேலியாவிலும் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.

விடுதலைப் புலிகளைக் காப்பி அடித்து இலங்கை உருவாக்கிய படகுகளை இந்தியா வாங்குகிறது!


விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்படைப் பிரிவான கடற்புலிகள் வைத்திருந்த அதி வேக இடைமறிப்புப் படகுகளைப் பார்த்து அப்படியே காப்பி அடித்து இலங்கை கடற்படை உருவாக்கிய இடைமறிப்புப் படகுகளை வாங்க இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தி உண்மையாக இருந்தால், தன்னை விட சுண்டைக்காய் நாடு ஒன்றிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்கும் முதல் உலக நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் கூறப்பட்டுள்ள செய்தி:

இந்தியக் கடற்படையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப் பிரிவுக்காகவே ரூ 250 கோடி மதிப்பில் இந்தப் படகுகள் வாங்கப்பட உள்ளன. சந்தேகத்துக்கிடமான கப்பல்கள், படகுகளை வழிமறித்தல், மற்றும் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவதற்கு இந்தப் படகுகளை இந்தியா பயன்படுத்தவுள்ளது.

இந்தப் படகுகள் இலங்கையின் சோலாஸ் மரைன் நிறுவனம் 36 மாதங்களுக்குகள் கட்டிக் கொடுக்கவுள்ளது. கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை அடியொற்றி இலங்கை கடற்படை உருவாக்கியிருந்த சிறப்புப் படகுப் படையணியை முன்னுதாரணமாகக் கொண்டே இந்தியா சாகர் பிரஹாரி பால் என்ற இந்தப் படைப்பிரிவை உருவாக்கியுள்ளது என்று அச்செய்திகள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற் பிரிவினர் வைத்திருந்த இடைமறிப்புப் படகுகள் அதி நவீனமானவை. மிக நுனுக்கமான முறையில் இந்தப் படகுகளை அவர் வைத்திருந்தனர். இதைக் கொண்டுதான் இலங்கைக் கடற்படையினரின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தனர் கடற்புலிகள். இத்தகைய படகைப் பார்த்துதான் இலங்கை கடற்படை பின்னர் புதிய படகுகளை வடிவமைத்து ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் பயன்படுத்த ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புலிகளை வெல்ல புலிகளின் உபாயத்தையே இலங்கை கடற்படை பயன்படுத்த வேண்டியதாயிற்று.

தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா!

தமிழக சட்டசபையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையாக தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது போல ஜம்மு காஷ்மீர் சட்டசபையிலும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்க கோரலாமா என்று கேட்டுள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உமர் அப்துல்லா ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள தகவல் கடும் கண்டனத்துக்குரியது என்று பாஜக கூறியுள்ளது.

உமர் அப்துல்லா தனது ட்விட்டர் செய்தியில், தமிழகத்தில் ஒரு தீ்ர்மானம் போட்டிருப்பதைப் போல ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையிலும் ஒரு தீர்மானம் போட்டு அப்சல் குருவின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூறினால் இதேபோலத்தான் அமைதி நிலவுமா? நான் அப்படி நினைக்கவில்லை என்று ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனையைக் குறைக்கக் கோரும் தமிழக சட்டசபை தீர்மானத்தை விமர்சித்துள்ளார் உமர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. அதேசமயம், பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக கூறுகையில், அப்சல் குருவின் செயலை ஆதரிப்பது போல உமர் அப்துல்லாவின் செய்தி உள்ளது. இதற்கு அவர் விளக்கம் தர வேண்டும். அவரது பேச்சு அதிர்ச்சியும், வியப்பும் தருகிறது என்று கூறியுள்ளது அக்கட்சி.

யிர்ப்பிச்சை கேட்கவில்லை, மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்- சீமான்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட நீதியைத்தான் நாங்கள் கேட்கிறோமே தவிர யாரிடமும் உயிர்ப் பிச்சை கேட்கவில்லை என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத் இடைக்காலத் தீர்ப்பு குறித்து சீமான் கருத்து தெரிவிக்கையில், தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் யாரிடமும் உயிர் பிச்சை கேட்கவில்லை. மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். இடைக்கால தடை உத்தரவு, அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. செங்கொடியின் அர்ப்பணத்திற்கு கிடைத்த வெற்றி.

தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று மரண தண்டனையை ரத்துசெய்ய தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.

தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா?



இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது,
இவர் திட்டமிட்டே கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்நதவரான நடிகர் விஜய், எப்படி இந்து கடவுள்களான சிவனையும், முருகனையும் படைக்க முடியும்? தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா? அந்த சம்பளத்திற்கு கட்டிய வருமான வரி கணக்கை காட்டுவாரா? அவருடைய கல்யாண மண்டபம் உள்ளிட்டவற்றிற்காக கட்டப்பட்டுள்ள வணிக வரி கணக்கை காட்டுவாரா? வேலாயுதம் படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என்பதற்காக விஜய்யும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் இந்து மதத்தை புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். உடனடியாக இந்த பேனர்களை திருப்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்காவிட்டால், எங்கள் கட்சி போராட்ட களத்தில் இறங்கும் என்று இந்து மக்கள் கட்சி கண்ணன் தெரிவித்துள்ளார். 

பிள்ளையார்சுழி போட்டு...


விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இதை விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும்.

* தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லை என்ற ஒப்பற்ற தனிப்பெருந்தலைவனே! கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துபவனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவனே! உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன்னை நம்பும் அடியவர்களின் தீவினைகளைப் போக்கி கருணை காட்டும் கணபதியே! உம்மை வணங்குகிறேன்.

* தேவாதிதேவனே! பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே! வல்லமை நிறைந்தவனே! ஆனைமுகனே! கருணை மிக்க இதயம் கொண்டவனே! அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே! எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கியத்தை அருள்வாயாக.

* ஓங்கார வடிவினனே! கருணாமூர்த்தியே! பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே! எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே! பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே! அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே! நித்ய வடிவினே! உன்னை வணங்குகிறேன்

* கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப்பெருமானே! சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் புதல்வனே! பக்தர்களின் துயர் களைபவனே! ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே! செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே! உன்னை சரணடைந்து போற்றுகின்றேன்.

* ஒற்றைக் கொம்பனே! கணபதீஸ்வரா! சிவபெருமானின் பிள்ளையே! ஆதி அந்தமில்லாதவனே! துன்பம் துடைப்பவனே! யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே! உன் திருவடிகளை எப்போதும் திருவடியில் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக. விநாயகப்பெருமானின் இத்துதியை அதிகாலையில் பாராயணம் செய்வோருக்கு நோய்நொடிகள் அனைத்தும் விலகும். தோஷம் யாவும் நீங்கும். வாழ்வில் உண்டாகும் துன்பம், தொல்லை யாவும் அடியோடு அகலும். குலம் தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும். நற்புகழும், மேம்பாடும் உண்டாகும். அஷ்டமாசித்திகள் கைகூடும். எனவே, அந்த விக்ன விநாயகப்பெருமானை வழிபடுவோமாக.

மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு,அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர். எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார்சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர். விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சதுர்த்திநாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!


பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் தகுதி பரிசு பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் கே.. அண்ணாமலை (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் சார்பில் 2011ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1055 மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 1077 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம்மாறிய கிறிஸ்தவ மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் தகுதி பரிசு வழங்கப்பட்டு வருகிறதுஇத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ரூ.1500 வீதம் தொடர்கல்வி படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். தொடர்கல்வி சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி நிலையத்தில் படிப்பவராக இருக்க வேண்டும்மதிப்பெண் மற்றும் சாதிச் சான்றிதா நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கல்வி நிலைய தலைவரின் முகப்புக் கடிதத்துடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை !


செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள, எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வுக்கான அட்டவணைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.



எஸ்.எஸ்.எல்.சி. :
23.9.11-மொழி முதற்தாள்
24.9.11-மொழி இரண்டாம் தாள்
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்


ஓ.எஸ்.எஸ்.சி.: 21.9.11-மொழி முதற்தாள்
22.9.11-மொழி இரண்டாம் தாள்
23.9.11-தமிழ்
24.9.11-சிறப்பு மொழித்தாள் மூன்று
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்

இத்தேர்வுகள் அனைத்தும், காலை 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும் என்றும், முதல் 15 நிமிடம் வினாத்தாள் படிக்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பதிவு செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மீண்டும் லேப் டாப் சந்தையில் தடம் பதிக்கிறது எல்.ஜி!

மீண்டும் லேப் டாப் தயாரிப்பு துறையில் நுழைய எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டமாக நெட்புக்குடன் கூடிய 13 புதிய ரக லேப் டாப்புக்களை இந்தியாவில் எல்.ஜி., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை ரூ.26,000 முதல் ரூ.66,780 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான முக்கிய அம்சம் என எ.ஜி., இந்தியா தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை லேப்டாப்க்கள் ஐ.டி., துறையில் 12 முதல் 14 சதவீதம் வரை முக்கிய பங்களிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் எல்.ஜி., தெரிவித்துள்ளது. மேலும் எல்.ஜி., ஏ530 என பெயரிடப்பட்டுள்ள 3டி லேப்டாப்பையும் எல்.ஜி., அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வகை லேப்டாப்க்கள் உயர்தர பேட்டரியுடனும், எடை குறைவாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய பயோ-டெக் துறை வளர்ச்சி 4 பில்லியன் டாலர்களை தாண்டியது !

கடந்த ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு பயோ டெக் துறை வளர்ச்சி 4 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்திய பயோ டெக் வளர்ச்சி 3 பில்லியன் டாலர்களாக இருந்ததாக ஏன்ஸ்ட் அன் யங் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசி, நோய் கண்டறிதல், அதற்கான சாதனங்கள் மற்றும் தனிப்பட்ட மருத்துவம் உள்ளிட்டவைகள் பயோ டெக் துறையின் வளர்ந்து வரும் முக்கிய பிரிவுகளாகும். உலக அளவில் இந்திய பயோ டெக் துறை அதிக வேகமாக வளர்ந்து வருவதாக சர்வதேச பயோடெக்னாலஜி கழகம் தெரிவித்துள்ளது. பயோடெக் துறையை மையமாக கொண்டு பல்வேறு நிறுவனங்களும் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சூழ்நிலைகளுக்கு ஏற்றாற் போல் உள்நாட்டு பயோ டெக் துறை மாற்றம் பெற்று, வளர்ச்சி கண்டு வருவதாக பயோ டெக் துறை‌யினர் தெரிவித்துள்ளனர். 

இதே நாள்...


  • மலேசிய விடுதலை தினம்(1957)
  •  வேல்ஸ் இளவரசி டயானா இறந்த தினம்(1997)
  •  தாமஸ் ஆல்வா எடிசன், முதலாவது கினேட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்(1897)
  •  வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது(1998)
  • அரசு கேபிள் டிவி சேவை செப். 2ம் தேதி முதல் துவங்கும்! 70 ரூபாய் கட்டணத்தில் 90 சேனல்கள் வசதி!!


    மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான அரசு "கேபிள் டிவி' சேவை, செப்., 2ம் தேதி முதல் துவங்கும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அரசு "கேபிள் டிவி'யில் மாதக்கட்டணம் 70 ரூபாயில், 90 சேனல்கள் தெரியும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஆட்சியில் துவக்கப்பட்ட அரசு "கேபிள் டிவி' நிறுவனம், 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகளை வழங்கியது. முந்தைய ஆட்சியாளர்களின் சுயநலம் காரணமாக, அரசு "கேபிள் டிவி' நிறுவன இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, 432 இணைப்புகளாக சுருங்கிவிட்டது.

    தி.மு.க., அரசால் துவக்கப்பட்ட அரசு "கேபிள் டிவி' நிறுவனம், அந்த அரசாலேயே முடக்கப்பட்டு விட்டது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தின் நடவடிக்கைகளை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், என் அரசு தீவிரமாக மேற்கொண்டது. இந்நிறுவனத்திற்கு ஒரு முழுநேர தலைவர் மற்றும் ஒரு நிர்வாக இயக்குனர் நியமிக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள், பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில், தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில்நுட்ப "கேபிள் டிவி' கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு "கேபிள் டிவி' புனரமைக்கப்பட்டது. மேலும், இந்த நிறுவனம், "தமிழ்நாடு அரசு "கேபிள் டிவி' நிறுவனம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும்,"கேபிள் டிவி' சேவையைத் தொடங்கும் வகையில், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்களை, அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள, 34 ஆயிரத்து 344 கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்கள், மிகுந்த ஆர்வத்துடன், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இவர்களிடம், ஒரு கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன. 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை, 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்குதடையின்றி மக்களுக்கு வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
    அரசு "கேபிள் டிவி' ஒளிபரப்பின் மூலம், கட்டணச் சேனல்கள் உட்பட 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். கட்டணச் சேனல்களை பெற, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    விரைவில், கட்டணச் சேனல்களும், அரசு "கேபிள் டிவி' மூலம் வழங்கப்படும்.
    செப்டம்பர் 2ம் தேதி முதல் ஒளிபரப்புச் சேவைகள் துவங்கப்பட்டு, குறைந்த செலவில் நிறைவான சேவையை, அரசு "கேபிள் டிவி' நிறுவனம், தமிழக மக்களுக்கு வழங்கும். அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மூலம், "டிவி' சேவையை பெறும் சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக 70 ரூபாய் மட்டுமே "கேபிள் டிவி' ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும்.

    இந்த ஒளிபரப்பை வழங்கும், "கேபிள் டிவி' ஆபரேட்டர்களிடமிருந்து கட்டணமாக, ஒரு இணைப்பிற்கு 20 ரூபாய், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தால் வசூலிக்கப்படும். மிகக் குறைந்த கட்டணத்தில், "கேபிள் டிவி' இணைப்பை, தமிழக மக்கள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும்.
    இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    என்ன செய்ய வேண்டும்!""அரசு, "கேபிள் டிவி' ஒளிபரப்பைப் பெற, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்ற கேள்விக்கு, அரசு "கேபிள் டிவி' நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:"கேபிள்' ஆபரேட்டர்கள் அரசுடன் இணைந்துள்ளதால், தற்போது, "கேபிள்' இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள், அந்த இணைப்பிலேயே, அரசு "கேபிள் டிவி' இணைப்பை பெற முடியும். அரசு, "கேபிள் டிவி'யைப் பெற, அவர்கள் தனியாக யாரையும் அணுக தேவையில்லை.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

    சென்னைக்கு?கடந்த 2002ம் ஆண்டு, "கண்டிஷனல் அக்சஸ் சிஸ்டம்' என்ற சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா ஆகிய நான்கு நகரங்களில் இந்த சட்டம் முன் மாதிரியாக அமல்படுத்தப்பட்டது. இதன்படி, இந்த நகரங்களில் உள்ளவர்கள், கட்டண சேனல்களை பெறுவது என்றால், "செட் - டாப் பாக்ஸ்' உதவியுடன் மட்டுமே பெற முடியும். இதற்கு எதிராக பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டதால், கடந்த 2006ம் ஆண்டு முதல், சென்னை தவிர மற்ற மூன்று பெருநகரங்களிலும், இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. "சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களுக்குள் சென்னையிலும் அரசு, "கேபிள் டிவி' கால் பதிக்கும்' என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    30 August, 2011

    ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்!

    சி.டி. ஸ்கேன் போன்ற மருத்துவப் பரிசோதனைகளின் போது ஏற்படும் கதிர்வீச்சுத் தாக்கம் குறித்து நோயாளிகளுக்கு முன்னமேயே அறிவுறுத்துவதுதான் முறை என்று மருத்துவத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட அது போன்ற பிற பரிசோதனைகளின் போது இயந்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுத் தாக்கம் புற்று நோய் உள்ளிட்ட பிற நோய்களுக்குக் காரணமாகும் அபாயம் உள்ளது. மேலும் செல்லின் மரபுப் பூர்வாங்கப் படிவத்தில் (gene blue-print) சேதம் ஏற்படுத்துகிறது இதனால் பல ஆரோக்கியக் கேடுகள் ஏற்படுகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    "சில வேளைகளில் செல்கள் செயல்படாமல் போகும், அல்லது தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் அல்லது இறந்து விடும். ஆனால் மேலும் சில வேளைகளில் செல் பல்கிப் பெருகும் அதாவது கட்டுப்படுத்த முடியாத வகையில் பல்கிப்பெருகும், அப்போது புற்றுநோய் ஏற்படும் என்று கங்காராம் மருத்துவமனையின் சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிபுணர் டி.பி.எஸ். புக்சி தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு மருத்துவமனையிலும், பரிசோதனை மையங்களிலும் சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களால் உடலில் உள்வாங்கப்படும் கதிர்வீச்சு அளவு குறித்த விவரம் உள்ளது.இதனால் ஒரு நோயாளியை ஸ்கேன் செய்யும் முன் அவரிடம் கதிர்வீச்சு அளவு குறித்து கூறப்படவேண்டும் என்பதை ஒரு கொள்கையாக அரசு வடிவமைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

    டெல்லிய்ல் உள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவனமையின் மருத்துவர் ஒருவரும் இந்தக் கதிர்வீச்சு அபாயத்தை உறுதி செய்துள்ளார், அதாவது சி.டி. ஸ்கேன்கள் கதிர்வீச்சுத் தாக்கத்தின் மிகப்பெரிய ஆதாரமாகும். திடீர் கதிர்வீச்சு அல்லது நீண்ட நாளைய கதிர்வீச்சுத் தாக்கம் எலும்பு செல்களை செயலிழக்கச் செய்வதோடு, சிலருக்கு விதையிழப்பும் ஏற்படுகிறது என்றார்.

    பி.சி.சி.ஐ.-யை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர மசோதா!

    மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றவுள்ள தேசிய விளையாட்டு மசோதாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகளையும் கொண்டு வர முடிவெடுக்கப்படுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ. இந்த மசோதா பி.சி.சி.ஐ.,யை கட்டுப்படுத்தவே நிறைவேற்றப்பட உள்ளதாக குற்றம்சாட்டியது. இந்த மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வரும் செப்டம்பர் 8ம் தேதியன்று தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு பி.சி.சி.ஐ., சட்ட மசோதாவில் சேர்க்கப்பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் வந்தாகவேண்டும். இந்த மசோதாவில், விளையாட்டுத்துறை அமைப்புகளில் பதவியில் உள்ளவர்களுக்கு வயது 70க்குமேல் இருக்கக்கூடாது. ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளுக்கு மேல் வகிக்கக்கூடாது என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ஐ.சி.சி., தலைவராக உள்ள சரத்பவார் மத்திய விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக உள்ளார். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளார். மேலும் இந்த மசோதாவில், பி.சி.சி.ஐ., வந்தால், இந்திய கிரிக்கெட் அணியும், மற்ற விளையாட்டு வீரர்களை போல் போதை தடுப்பு சோதனைக்கு உட்பட வேண்டும். இந்திய அணி வீரர்கள் சர்வதேச போதை மருந்து தடுப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த மசோதா குறித்து பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான், விளையாட்டுத்துறையில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இதனை தேசிய விளையாட்டு மசோதா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மசோதா நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை முடிந்து விட்டது. இந்த மசோதா நாளை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.

    ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம்!

    பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை என்பதாலேயே இதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும். பனை இந்தியாவில் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.

    “தென்னையை வைத்தவன் தின்று விட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துக்கொண்டே சாவான்” என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப பனையின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். ஆனால் நூறு ஆண்டுகள் வரை பனை உயிருடன் இருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரத்தில் நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன் தரும் பகுதியாகும். பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது. கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும்.

    உடலுக்கு குளிர்ச்சி தரும்: பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். தினமும் காலை எழுந்தவுடன் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் குணமடையும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

    நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும். கோடை காலத்தில் பதநீரும் நுங்கும் கலந்து பருக உடலுக்கு குளுமை தரும்.

    ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம்: பனைமரத்தின் பழமே பனம் பழமமாகும். இது உருவத்தில் தேங்காயை விட பெரியதாகவும், உருண்டையாகவும் இருக்கும். பழம் கருப்பாக இருக்கும். தலையில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும். பனம் பழத்தினுள் இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகளிலிருக்கும். இந்த கொட்டைகளைச் சுலபத்தில் சுலபத்தில் உடைக்க முடியாது. கெட்டியானது. பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினூடே சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் உண்ணலாம்.
    பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சொரி சிரங்கு, புண், உள்ளவர்கள் தின்றால் இவைகள் மேலும் அதிகரிக்கும். பனம்பழம் மலத்தை இறுக்கிவிடும்.

    உடலைத் தேற்றும் பனங்கிழங்கு: பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

    பனை மரத்தின் அடி பாகத்தில் வெட்டினால் வரும் நீரை எடுத்து அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும். கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சல் தீரும்.

    பனை மரத்தின் பாகங்கள்: பனையின் அனைத்து பாகமும் பயன்படுகிறது. பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் தாக்காது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி போன்ற கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். பனங்காயில் பிரஷ், கயிறுகள் தயார் செய்யலாம். வேலிக்கும் பயன்படுகிறது.

    கொரிய திரைப்பட விழாவில் பார்த்திபன் படம் உள் விலாசம்!

    புகழ்பெற்ற கொரிய திரைப்பட விழாவில் திரையிட பார்த்திபன் நடித்த உள்  விலாசம் படம் தேர்வாகியுள்ளது.இயக்குநர் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ள படம் உள் விலாசம். மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.

    கொரியாவில் ஆண்டுதோறும் பூசோன் நகரில் சர்வதேச திரைப்பட நடக்கிறது. இந்த விழாவில் சிறப்புத் திரையிடலுக்கு இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'எ விண்டோ ஆன் ஆசியன் சினிமா' என்ற பிரிவில் இந்தப்படம் திரையிடப்படுகிறது.

    உலகம் முழுவதுமிருந்து வரும் திரைப்பட கலைஞர்கள் இந்தப் படத்தை பார்வையிடுகின்றனர்.பூசோன் திரைப்பட விழாவில் ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படம் தேர்வாகி, திரையிடப்பட்டது. இரண்டு தினங்கள் திரையிடப்பட்ட இந்தப் படத்தைக் காண கூட்டம் குவிந்ததில் டிக்கெட்டுகள் தீர்ந்து போனது நினைவிருக்கலாம்.

    இப்போது அடுத்த தமிழ்ப் படமாக உள் விலாசம் தேர்வாகியுள்ளது.

    தானத்தை தவறாகப் பயன்படுத்தி, அதை வர்த்தரீதியில் விற்பதை தடுக்க புதிய சட்டம்!

    சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானத்தை தவறாகப் பயன்படுத்தி, அதை வர்த்தரீதியில் விற்பதை தடுக்க புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
    இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியர்களின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறவும், வெளிநாட்டினரின் உறுப்புகளை இந்தியர்கள் வாங்கவும் தடை விதிக்கப்படவுள்ளது.

    கடந்த 13ம் தேதி நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த சட்டம் அமலுக்கு வரும்.

    இதன்படி திசுக்கள், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை சட்ட விரோதமாக விற்றால் 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 1 கோடி அபராதமும் விதிக்கப்படும். இதன்மூலம் ஏழை மக்கள் தங்கள் உடல் உறுப்புக்களை பணத்துக்காக விற்பதை தடை செய்ய முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

    இந் நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை, ஜிப்மர், சென்னையைச் சேர்ந்த உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பு அமைப்பான "மோகன் பவுண்டேஷன்' ஆகியவை இணைந்து மனித உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. அதில் பேசிய, மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் என்.கே. மொகந்தி கூறுகையில், இப்போது உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான அனுமதி வழங்கும் குழுவின் ஒப்புதலுடன் இந்தியரின் உறுப்புகளை வெளிநாட்டினர் பெற்று மாற்று சிகிச்சை செய்து கொள்ளும் நிலை உள்ளது. திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு இதற்கு தடை ஏற்படும்.

    இந்தியாவில் மனித உறுப்புகள் தானம் தேவைப்படுவோருக்கும், அதைக் கொடுப்போருக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. இந்தியாவில் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறுநீரகங்கள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.5 லட்சமாக உள்ளது. ஆனால், ஆண்டுக்கு 4,500 முதல் 5,500 சிறுநீரகங்கள் மட்டுமே உறவினர்கள் மூலமும் தானமாகவும் கிடைத்து வருகின்றன.

    அதே போல ஆண்டுக்கு 50,000 பேருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 400 பேருக்கு மட்டுமே கல்லீரல்கள் மட்டுமே தானம் மூலம் கிடைக்கின்றன. பொது மக்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவுக்கு இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என்றார்.

    மோகன் பவுண்டேஷனின் தலைவர் டாக்டர் சுனில் ஷெராப் பேசுகையில், உடல் உறுப்புகள் தானம் தென்னிந்தியாவில்தான் அதிகம் நடக்கின்றன. வட இந்தியாவில் தானம் தருவோர் மிக மிகக் குறைவு. இதில் தமிழ்நாடு தான் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. இப்போது மக்களிடம் பொருளாதார வசதி அதிகரித்துவிட்டதாலும், சுகாதார காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு வசதிகளாலும், நவீன மருத்துவ தொழில்நுட்பங்களாலும் உடல் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    ஆனால், உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவது சவாலாகத்தான் இருக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் பவுண்டேஷனின் நோக்கம். உறுப்புகள் மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டியையும் எங்கள் பவுண்டேஷன் நடத்தியது என்றார்.

    மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இனி நேரடித் தேர்தல்!

    மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்களை மக்கள் நேரடியாகவே வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வகை செய்யும் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதுவரையிலும் மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் முறை இருந்து வந்தது. இதை மாற்றி நேரடித் தேர்தல் மூலம் மக்களே அவர்களைத் தேர்வு செய்ய இந்த மசோதா வழி வகுக்கும். இந்த மசோதாவை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    தற்போது மாநகராட்சிகளின் மேயர்களும், மற்றும் நகராட்சிகளின் தலைவர்களும் மன்ற உறுப்பினர்களால் அவர்களுக்கு இடையே இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலான மேயர்கள் அல்லது தலைவர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதி முழுவதின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியின் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.எனவே மாநகராட்சியின் மேயருக்கான மற்றும் நகராட்சியின் தலைவருக்கான தேர்தல் முறையை மறைமுக தேர்தல் முறையிலிருந்து நேரடி தேர்தல் முறைக்கு மாற்றுவதென்று அரசு முடிவு செய்துள்ளது.

    அது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் மேம்பட்ட நிர்வாகத்திற்கு எளிதாக வழிவகுக்கும். மக்களுக்கு இன்னமும் திறம்பட்ட முறையிலும் விரைவாகவும், பொதுப் பணிகளை வழங்கும் விளைவினை ஏற்படுத்தும்.எனவே தமிழக அரசானது மாநகராட்சியில் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை தக்கவாறு திருத்துவதென்று முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு சொந்தமான டி.பி.ரியால்டி, டைனமிக்ஸ் ரியால்டி மற்றும் கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், நிகார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகிய 5 நிறுவனங்களின் சொத்துகளை அமலாக்கப்பிரிவு பறிமுதல்!

    ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் லைசென்சு பெற்ற சுவான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, அதற்கு பிரதிபலனாக, தனது டி.பி.ரியால்டி நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டு இருந்தது இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு சொந்தமான டி.பி.ரியால்டி, டைனமிக்ஸ் ரியால்டி மற்றும் கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், நிகார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகிய 5 நிறுவனங்களின் சொத்துகளை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த சொத்துகளை பறிமுதல் செய்வது என்று அமலாக்கப்பிரிவு ஏற்கனவே அடையாளம் கண்டு கொண்டு விட்டது. பறிமுதல் செய்வதற்கான முறையான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.

    விசைத்தறி மூலம் பட்டுச்சேலை தயாரித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை !

    கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், விசைத்தறி மூலம் பட்டுச்சேலை உற்பத்தி செய்பவர்களின் மீது, அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம், தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில், இரண்டரை லட்சம் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம், கோ - ஆப்டெக்சால் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும், 200 கோ- ஆப்டெக்ஸ் ஷோரூம்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில், 131 ஷோரூம்கள் உள்ளன. நூறு சதவீத பட்டு நூல் கலந்த சேலைகளை, கைத்தறி நெசவாளர்கள் மூலமே நெய்யப்பட வேண்டும். விசைத்தறி மூலம் நூறு சதவீத பட்டு கலந்த சேலைகள் உற்பத்தி செய்யக் கூடாது என்றும், மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டத்திற்கு புறம்பாக, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரமான, கைத்தறி நெசவுத் தொழிலை சிதைக்கும் நோக்கில், பல விசைத்தறி நிறுவனங்கள், நூறு சதவீத பட்டுச்சேலைகளை மறைமுகமாக தயாரித்து, அவைகளை கைத்தறியில் செய்தது போல விளம்பரம் செய்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. 'சேலம் மாவட்டத்தில் கருங்கல்பட்டி, கொண்டலாம்பட்டி, வனவாசி, ஜலகண்டபுரம், இலம்பில்லை, பஞ்சுகாலிப்பட்டி மற்றும் இளந்தமாவூர் பகுதிகளிலுள்ள விசைத்தறி மூலம், 100 பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இது, மத்திய அரசின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை. கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், நடைபெறும் இச்செயலை தடுக்க வேண்டும். இத்தகைய செயலில் ஈடுபடும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, விசைத்தறிக் கூடங்களில், 100 சதவீதம் பட்டு கலந்த சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, தகவல்களை கோ - ஆப்டெக்ஸ் தலைமையகத்திற்கு அனுப்பும்படி, கைத்தறி நெசவாளர்கள் சங்கங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. 

    இதே நாள்...


  • ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண்‌ நகரம் அமைக்கப்பட்டது(1835)
  •  டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது(1984)
  •  அசர்பைஜான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1991)
  •  இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா இறந்த தினம்(2008)
  • 29 August, 2011

    நம்ம ஊரு தறுதளைங்க!


    இனிமை பொங்கும் ஈத் பெருநாள்!



    பிறையும் ... திருமறையும் ...
    மேகத்திரை
    பிரிந்தது....
    வானில் பிறை
    தெரிந்தது....
    மனதில் குறை
    பறந்தது...
    இரவெல்லாம்
    பிரார்த்திக்க
    விழித்திருந்தோம்...
    பகலெல்லாம்
    நோன்புக்காகப்
    பசித்திருந்தோம்...
    இறைவன்
    பார்க்கிறான் என்கிற
    பயத்தில்....
    இந்த பயம்
    ஒரு மாதம் மட்டுமின்றி
    ஆயுள் வரை
    ஆட்டிப் படைக்க
    வழிகாட்டு இறைவா....
    நல்வழிகாட்டு...

    இஸ்லாம் என்ற அரபு வார்த்தைக்கு, அமைதி, சமாதானம் என்ற பொருள்கள் உண்டு. இஸ்லாம் பிறந்து 1389 வருடங்கள் ஆகிவிட்டன. மூடநம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றி பின்பற்றி வந்த ஆதி அரபு மக்களை தனியாக நின்று எதிர்த்து போராடி, இறைவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்ற கொள்கையை வகுத்து இஸ்லாம் என்று பெயரிட்டு இவ்வுலகத்திற்கு தந்தவர் முகமது நபி (ஸல்) ஆவார். இன்று இக்கொள்கையை உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருக்கின்ற 157 கோடி மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். உலகத்தின் மொத்த ஜனத்தொகை 680 கோடியில். 23 சதவீதம் முஸ்லிம்கள். இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் 18 கோடி மக்கள் இஸ்லாமியர் என்று நீதியரசர் சாச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. இஸ்லாம் ஒரு பெரிய மாளிகை. இந்த  மாளிகையை ஐந்து கொள்கைகள், ஐந்து தூண்களாக நின்று தாங்கிக் கொண்டிருக்கின்றன. அவையாவன 1. ஆண்டவன் ஒருவன். அவனை அல்லாஹ் என்று அழைக்கிறோம். அல்லாஹ்வின் திருத்தூதர் முகமது நபி (ஸல்)
    2. ஐந்து நேரம் தொழ வேண்டும்.
    3. ரம்ஜான் மாதம் 30 நாட்களும் நோன்பு வைக்க வேண்டும்.
    4. ஒவ்வொரு முஸ்லிமும் தன் வருமானத்தில் இரண்டரை சதவீதம் ஆண்டுதோறும் கண்டிப்பாக தர்மம் செய்ய வேண்டும்.
    5. முஸ்லிம்களில் முடிந்தவர்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மெக்கா சென்று காபாவை தொழுது வரவேண்டும்.

    இஸ்லாத்திலும், மற்ற சமயங்களைப் போல 12 மாதங்கள் உண்டு. ஒரு மாதம் 29 இரவுகளைக் கொண்டது. சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்பட்டிருக்கிறது. மேற்சொன்ன சந்திர இயக்க மாதங்களில் 9வது மாதமான ரம்ஜான் மிகச் சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குர்ஆன் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறங்கியது என்பர். ரம்ஜான் என்றால் எரி என்று பொருள்.  ரம்ஜான் மாதம் மிகவும் சூடான (காய்ந்து எரியும்) மாதம். அதுமட்டுமல்லாது மனிதர்கள் அதுவரைக்கும் செய்த பாவங்களை எரித்துவிடும் என்றும் சொல்வர். ரம்ஜான் மாதத்தை ரமலான் என்றும் ரமதான் என்றும் சொல்லலாம். இந்த மாதத்தின் கடைசி 10 நாட்கள் சிறப்புடையதாகக் கருதப்படும். ஏனென்றால் இந்த 10  நாட்களில் ஏதோ ஒரு இரவில் தான் திருக்குர் ஆனை அல்லாஹ் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு இறக்கினான் என்பர்.குர்ஆன் என்ற அரபு வார்த்தைக்கு படி என்று பொருள். ரம்ஜான் நோன்பு முடிந்த அடுத்த பெருநாள் என்றும், ஈத் பெருநாள் என்றும் சொல்வர். புத்தாடை உடுத்தி, பலகாரங்களும், உணவு வகைகளும் செய்து, நண்பர்களுடன் கூடி உண்டு மகிழ்வர். உற்றார் உறவினர், நண்பர்கள் ஒன்று சேர்ந்து கட்டி அணைத்து (முலாக்கத்) மகிழ்வர். ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வர். மாற்று மதத்தினரையும் இனத்தவரையும் வீடுகளுக்கு அழைத்து விருந்து கொடுப்பர். அரபு நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களும் கூட, இன்னொருவரைப் பார்க்கும்போது சலாம் அலைக்கும் என்பர். அதன் பொருள் உங்களிடம் அமைதி உண்டாகட்டும்என்பதாகும். இஸ்லாம் அமைதிக்காகவும்,

    சமாதானத்திற்காகவும் சகோதரத்துவத்திற்காகவும் நிற்கின்ற மார்க்கம். இங்கே வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் இடமில்லை. இவ்விதச் செயல்களில் இஸ்லாத்திற்கு உடன்பாடில்லை. மார்க்கத்தில் இஸ்லாமியர், தேசத்தில் இந்தியர், இந்தியா நமது நாடு என்ற உணர்வோடும், குர்ஆனில் வலியுறுத்தி சொல்லப்படுகின்ற லக்கும் தீனுக்கும் வலியதீன் அதாவது அவர்களுக்கு அவரவர் வழி என்ற இலக்கணத்திற்கு உதாரணமாக இஸ்லாமியர்கள் திகழ்கிறார்கள்.

    வாய்குள்ளே ஒரு வாட்டர் பால்ல்ஸ்!


    ராகுல் ஒரு தத்தி !


    வால் டிஸ்னியின் குறும்படம்! PRESTO...


    உறவு இனிக்க பேசுங்க!

    வகிக்கிறது பேச்சு. குறிப்பாக ஆண் - பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல... வெறுப்பை அடர்த்தியாக்குவதும் அதே பேச்சுதான்.

    ஒருவரை 'விமர்சனம் செய்யும்போது அதை அவரது மனம் புண்படாதவாறு இனிமையுடன் கூறவேண்டும் என்பதையே வள்ளுவர் 'கடிதோச்சி மெல்ல எறிக’ என்று கூறியுள்ளார். இனிய உறவுகளுக்கான தாரக மந்திரமாகவும் இதைச் சொல்லலாம். கனி போல இருக்கும் இனிய சொற்களை விடுத்து காய்போல பேச்சுக்களை பேசுவதாலே திசைக்கொருவராக சிதைந்து கடைசியில் யாருமற்றவர்களாக நிற்க நேரிடுகிறது.

    அன்பை விதைக்கலாம்: பேச்சு என்பது உறவுகளுக்குள் அன்பை விதைக்க வேண்டும். ஆனால் ஒருசில குடும்பங்களில் உறவை சிதைக்கிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, குதர்க்கமாகப் பேசுவது, குத்திக்காட்டுவது, எரிச்சல் வரவழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது. அதுவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட பல ஆண்களுக்கு, 'பெண்கள் நம் அடிமைகள்' என்கிற நினைப்பு இருப்பதால்... பெண்களிடம் கனிவுடனோ, அன்புடனோ பேசுவதே இல்லை. இத்தகையோரிடம் பெண்களுக்கு பயம் ஏற்படுமே தவிர... உன்னதமான அன்பு இருக்கவே முடியாது!

    பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அன்பின் ரகசியம் அறியாதவர்கள். காதலின் மகத்துவம் தெரியாதவர்கள். இயந்திரம் போல் வாழ்க்கை நடத்தும் ஜீவன்கள் இவர்கள்.

    இதயங்கள் பேசவேண்டும்: இதயங்கள் பேசிக் கொள்ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்... விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்! பொதுவாகவே கணவன்-மனைவி இருவரிடையேயான உரையாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்றுதான் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

    பேச வேண்டிய எல்லாவற்றையுமே முதல் சில ஆண்டுகளிலேயே பேசி முடித்து விடுகிறார் களாம். அதற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போகிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத்தரப் பருவத்தில் வாழ்க்கை இயந்திரமயமாகிப் போகிறது. அதற்குப் பின் வெறும் பாதுகாப்புக்காகவே இணைந்து வாழ்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.

    சுவாரஸ்யமான உரையாடல்கள்தான் தம்பதியர்களுக்கிடையே நாளுக்கு நாள் உறவை செம்மைப்படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். இசை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, சமூகம் என்று ஆயிரம் விஷயங்கள் பேசுவதற்கு இருக்கின்றன. ஆனால், அதைப் பற்றி எல்லாம் பேச பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை. இன்கிரிமென்ட் பற்றியும், நகை வாங்குவது பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தை என்பதே நாளடைவில் போரடித்துப் போகிறது.

    அன்பை புரியவைக்கும் பேச்சு: அளவுக்கு மீறின அன்பு தான் எப்போதும் சந்தேகங்களை உருவாக்கும். எனவே சந்தேக விதை உருவாகாமல் தடுப்பது இருவரின் கடமை. அலுவலகத்தில் இருக்கும் நட்பு வட்டாரத்தை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வது சிறந்தது. இல்லையென்றால் சாதாரண தொலைபேசி உரையாடல் கூட இருவரின் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிடும்.

    புரிதலின்மையால் தோன்றும் சிக்கல்: புரிதல் என்பது தம்பதியருக்கிடையே இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது பேச்சின் விபரங்களை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம். இன்றைய சூழலில் எதையுமே அரைகுறையாக புரிந்து கொண்டு விடுவதே பிரிவினைக்கு காரணமாகிறது. வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் - மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி ஒரு கட்டத்தில் அது முறிந்து விடுகிறது. எனவே மனம் விட்டு பேசுவோம். வீண் மன உளைச்சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்.

    சட்ட பாடத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கோரிக்கை!


    சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சட்டப் பல்கலையில் பயிலும் மாணவர்களிடம் சில படிப்பு சார்ந்த கேள்விகளைக் கேட்டார். அதற்கு மாணவர்கள் சரியான பதில்களை அளிக்கவில்லை.
    அதனைத் தொடர்ந்து பேசிய கட்ஜு, இந்தியாவில் உள்ள சட்டக் கல்வி மிகவும் பழமையானதாக உள்ளது. அதை மாற்றும்படி அகில இந்திய பார் கவுன்சில் தலைவரிடம் கூறியுள்ளேன். ஆனால் இன்னும் அதை மாற்றவில்லை.
    நடைமுறைக்கு உதவும் வகையில் படிப்பு இருக்க வேண்டும். புத்தகத்தை வைத்துப் படித்து தேர்வு எழுதும் கல்வி முறை வாழ்க்கைக்கு உதவாது.
    அமெரிக்காவில் பல சட்ட முகாம்கள் நடததப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகும் தகுதியை உருவாக்கிய பிறகே மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறுகின்றனர்.சட்ட நடைமுறைக்குத் தேவையான சில அடிப்படை விஷயங்கள் கூட இங்குள்ள சட்ட மாணவர்களுக்கு தெரியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 

    கலியுகம் எப்போது முடியும்?

    கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின் கொடுமை எல்லை மீறி போய் விட்டது. இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும் அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால் கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

    இதே நாள்...


  • இந்திய தேசிய விளையாட்டு தினம்
  •  செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது(708)
  •  மைக்கேல் ஃபாரடே,மின்காந்தத் தூண்டலை கண்டுபிடித்தார்(1831)
  •  கோட்லீப் டாயிம்லர், மோட்டார் சைக்கிளுக்கான காப்புரிமத்தை பெற்றார்(1885)
  •  குட்இயர் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1898)
  • நாளைய அரசே! விஜய் ரசிகர்கள்!!


    கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை ஜெயலலிதா!


    29.8.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110 ன் கீழ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அளிக்கப்பட்ட அறிக்கை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை  ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.  

    எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன்.  மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72 ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161 ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1) ன்படி கட்டளையிடுகிறது. 

    இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.   எனவே, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.  

    குடியரசுத் தலைவர் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்

    ஜிரோ கிலோமிட்டேர் குறும் படம்!

      படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் ஜோர் முடிவு வரை தொடர்ந்தது ஜோரான விஷயம். கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமான படமாய் அமைந்து இருக்கும்!   

    28 August, 2011

    முதலில் யாருக்கு தூக்கு? : குலுக்கல் முறையில் தேர்வு!

    வேலூர் சிறையில், செப்., 9ம் தேதி தூக்கிலிடப்படும் மூவரிடமும், கடைசி ஆசை தெரிவிக்கும்படி கேட்கப்பட்டு, அவர்களுக்கான தூக்கிலிடும் நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கில் போட, சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வேலூர் மத்திய சிறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறை உள்கேட் வரை, பத்திரிகையாளர்கள், போட்டோ கிராபர்கள் செல்ல, நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறை அலுவலர்கள் வாகனங்கள், சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சிறையைச் சுற்றி நான்கு இடங்களில் தடுப்புகள் அமைத்து, 24 மணி நேரம் வாகனச் சோதனை நடக்கிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில், 19 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில், 7,500 பேர் தங்கியுள்ளனர். அவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பேரறிவாளன் கடிதம்: "என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் சாவின் மடியில் இருக்கிறேன். இவ்வழக்கில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு நேற்று, பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார். ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போடும் வரை, பார்வையாளர்கள் சிறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, மூவரின் ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தூக்கிலிடும் நேரம்: செப்., 9ம் தேதி அதிகாலை, 4.30 மணி, 5:00 மணி, 5.30க்குள் என, அடுத்தடுத்து மூன்று பேரையும் தூக்கில் போட முடிவு செய்துள்ளனர். முதலில் யாரை தூக்கிலிடுவது என்பது, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஒரே சமயத்தில் இருவரை மட்டுமே, வேலூர் சிறையில் தூக்கு போட வசதி உள்ளதால், சேலம் சிறையில் ஒருவரை தூக்கில் போட, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    கடைசி ஆசை: மூன்று பேரிடம், "கடைசி ஆசை என்ன?' என்று தெரிவிக்கும்படி, எழுத்து மூலம் கேட்கப்பட்டுள்ளது. முருகன் தினமும் காலை, 6 மணிக்கு வாக்கிங் செல்வார். நேற்று முதல், வாக்கிங் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் துறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பி நேரடி கண்காணிப்பில், தனித்தனி செல்களில் அடைக்கப்பட்ட இம்மூவருக்கும், சிறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த பின் உணவு தரப்படுகிறது.
    பத்திரிகைகள் படிக்க, "டிவி' பார்க்க, ரேடியோ கேட்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, தினம் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை, மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஐ.ஜி., சைலேந்திர பாபு நேற்று சிறைக்கு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,யுடன் நான்கு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

    28 ஆண்டுகளுக்கு பின் மூன்று பேருக்கு தூக்கு : சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த சேட்டு என்ற சந்துரு, 35. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொன்று, குழந்தை தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு, 1983, நவம்பர் மாதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பின், செப்., 9ம் தேதி, ராஜிவ் கொலை வழக்கில் கைதான மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காத்திருக்கும் கைதிகள்: ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன்; தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ரவிச்சந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன்; சென்னை சிறுவன் கொலை வழக்கில் மோகனரங்கன், கோபி ஆகிய எட்டு பேருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இவர்கள் தூக்கு கயிற்றை எதிர்நோக்கியுள்ளனர்.

    வேலூர் சிறையில் தூக்கு மேடை தயார் : முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு, செப்டம்பர் 9ம் தேதி, வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்காக, சிறை மதில் சுவர்களுக்கு வெளியே, சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தூக்கு மேடை சரிபடுத்தும் பணி, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு துவங்கி, நேற்று மாலை 3 மணிக்கு முடிந்தது. சிறைக்கு வெளியே உள்ள தோட்டப் பகுதியை ஒட்டி, தூக்கு போடும் இடம் சிறிய கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக, இங்கு சேட்டு என்பவரை தூக்கில் போட்டனர். அதன் பின், 28 ஆண்டுகளாக இங்கு யாரையும் தூக்கில் போடவில்லை. இதனால், இந்த இடம், காடு போல இருந்தது. பொதுவாக இந்த இடத்தில், ஒருவரை தூக்கில் போட்டு விட்டால், அதற்குப் பின் யாரும் பார்க்க முடியாதபடி, துணியால் மூடி வைத்திருப்பர். கடந்த 28 ஆண்டுகளாக இந்த இடம் மூடி இருந்ததால், துணியும் கிழிந்து கந்தை போல தொங்கிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தூக்கு மேடை கம்பிகள் சரிப்படுத்தப்பட்டன.
    ஆனால், மூன்று பேரும் ஜனாதிபதிக்கும், தமிழக முதல்வருக்கும் கருணை மனுக்கள் அனுப்பியதால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இப்போது, ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கும், செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போடுவது நிச்சயமான பின், அவசர கதியில் இந்த இடம் சரி செய்யும் பணி துவங்கியது. இதற்காக, 16 அடி ஆழத்தில் கிணறு போல காணப்படும் தூக்கு மேடையின் கீழ்ப் பகுதி, சுண்ணாம்பால் வெள்ளையடிக்கப்பட்டது. மேடையைத் தாங்கி நிறுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பி, தூக்கு பள்ளத்தில் இருந்து கீழே உடல் விழும் போது தூக்கும் இரும்புத் தகடுக்கும், கறுப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், தூக்கு போடும் இரும்பு விசை, கிரீஸ் போட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    தூக்கு மேடையின் மேற்கூரையும் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் மிகவும் வலுவான நிலையில், இரு தூண்கள், அதனிடையே பலமான இரும்புக் கம்பியும் அமைக்கப்பட்டன. அவை இன்றும், நல்ல கண்டிசனில் இருப்பதாக, சிறை அதிகாரிகள் கூறினர். தற்போது, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு தூக்கு போடும் நிலை இங்குள்ளது. தூக்கு மேடை தயாராக இருப்பதாக, வேலூர் சிறைத்துறை அதிகாரிகள், சிறைத் துறை தலைவருக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.

    தூக்கு மேடை சீர் செய்ய பூஜை : ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில், ஆரம்பம் முதல் இந்த தூக்கு மேடை மட்டும் தான் உள்ளது. இங்கு இதுவரை, 1,500க்கும் மேற்பட்டவர்களை தூக்கில் போட்டிருப்பதாக, சிறைத் துறையினர் கூறினர். தற்போது, இந்த தூக்கு மேடையை சரிப்படுத்த வேண்டும் என, சிறைத் துறையினர் பல மேஸ்திரிகள், இரும்புக் கம்பிகளை சரிசெய்பவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மறுத்து விட்டனர். 25க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்களிடம் கேட்டும், யாரும் முன்வரவில்லை. இதனால், வெறுத்துப் போன சிறைத்துறை அதிகாரிகள், சிறை வார்டன்களை கொண்டே இதை சரிசெய்தனர். உள்ளே செல்லும் முன், சூடம் ஏற்றி பூஜை செய்தனர். பின்னர், பணி முடிந்ததும், இதே போல பூஜை செய்தனர். சரிசெய்து முடிக்கும் வரை, 50 சிறைக்காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

    நாணயத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள மொய் கவர் !

    நாடு முழுவதுமாக சில்லரை தட்டுப்பாட்டால், மக்கள் அவதியுறும் நிலையில், ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய மொய் கவர் விற்பனைக்கு வந்துள்ளது. பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் மாற்றித் தருவதன் மூலம், ஓரளவு சில்லரை தட்டுப்பாடு நீங்குகிறது. எனினும், வர்த்தக நிறுவனங்கள் முதல், பஸ், ரயில்கள் வரை, சில்லரை தட்டுப்பாடு பிரச்னை, பெரிய தகராறாக மாறி விடுகிறது. ஈரோடு கடைகளில், ஒரு ரூபாய் நாணயம் மொய் கவரின் உட்பகுதியில் ஒட்டப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது. திருமணம், காது குத்து, சீர் உள்ளிட்ட விசேஷங்களில் மொய் வைக்க, பணத்தை கவரில் வைத்து கொடுப்பது வழக்கம். பலரும், 101 ரூபாய், 201 ரூபாய், 501 ரூபாய்... என, எவ்வளவு தொகை வைத்தாலும், அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அதுபோன்ற சமயங்களில், ஒரு ரூபாய் நாணயம் கிடைப்பது அரிதாகி விட்டதால், கவர் தயாரிப்பு நிறுவனங்களே, ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, கவரை தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளன. ஸ்டேஷனரி,பேன்சி, கிப்ட் விற்பனை கடைகளில், இத்தகைய கவர் விற்கப்படுகிறது.



    ஈரோடு கடைக்காரர் கூறியதாவது: பொதுமக்கள் வசதிக்காகவே, ஒரு ரூபாய் நாணயம் வைக்கப்பட்ட மொய் கவர், விற்பனைக்கு வந்துள்ளது. மும்பை, டில்லி ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டு, இங்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய சாதாரண கவரை நான்கு ரூபாய்க்கும், பார்டர் வைத்து, குஞ்சம் வைத்த கவரை ஆறு ரூபாய்க்கும் விற்கிறோம். 100 கவர் கொண்ட கட்டு, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கவராக வாங்கினால் ஆறு ரூபாயாக விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

    ஆஸ்திரேலியாவில் படிப்பதற்கு முன்பாக செய்ய வேண்டியவை-28-08-2011


    ஆஸ்திரேலியாவிற்கு கல்வி கற்க செல்லும் முன்பாக, எந்தெந்த வகையில் முன்னேற்பாடாக இருக்க வேண்டும் மற்றும் அதன்மூலம் பயணத்தை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வது குறித்து மாணாக்கர்கள் அனைவரும் அறிந்து வைத்துக் கொள்வது நலம்.


    பலவிதமான பிரச்சினைகளுக்குப் பிறகும், ஆஸ்திரேலிய நாடானது, சர்வதேச அளவில் அதிகளவு மாணவர்களை இழுக்கும் ஒரு முக்கிய கேந்திரமாக திகழ்கிறது. எனவேதான், மாணவர்களுக்கு அவசியமாக தேவைப்படும் முன்னேற்பாடு குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
    புறப்படும் முன்பாக

    * பாஸ்போட்டிற்கு விண்ணப்பம் செய்து, அதன் Validity, நீங்கள் படிக்கும் காலம் வரை போதுமானதா என்பதை உறுதிசெய்யவும்.
    * மாணவர் விசாவுக்கு ஏற்பாடு செய்யவும்
    * நீங்கள் அந்நாட்டில் படிக்கவிருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தொடர்புகொண்டு, உங்களின் சேர்க்கை மற்றும் ஆரம்பத் தேதியை உறுதிசெய்து கொள்ளுங்கள். மேலும், அந்த நிறுவனங்கள் விமான நிலையத்திற்கே வந்து மாணவர்களை அழைத்துச் செல்லும் விதிமுறையை வைத்துள்ளனவா என்பதையும் உறுதிசெய்யவும்.
    * உங்கள் மருத்துவரிடமிருந்து தேவையான நோய் காப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும்.
    * ஆஸ்திரேலியாவில் தேவைப்படும் நிதிக்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளவும்.
    * உங்கள் வங்கியின் வெளிநாட்டுப் பயன்பாட்டு வசதியைப் பற்றி நன்கு விசாரித்து தெரிந்துகொள்ளவும்.
    * பயணக் காப்பீடு உட்பட, தேவையான பயண ஏற்பாடுகளை செய்துகொள்ளவும்.

    * ஆஸ்திரேலியாவில் குறைந்தபட்சம் நீங்கள் தங்கியிருக்கும் முதல் வாரத்திற்கான தங்கும் ஏற்பாடுகளை செய்துகொள்ளவும்.
    * விமான நிலையத்திலிருந்து, தங்குமிடம் செல்வதற்கான பயண ஏற்பாடுகளைத் திட்டமிட்டுக் கொள்ளவும் மற்றும் அந்நாட்டில் உங்களின் அவசர பயன்பாட்டிற்குத் தேவைப்படும் பணத்தை ஆஸ்திரேலிய பணமாக மாற்றிக் கொள்ளவும்.
    * பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்கையில், நீங்கள் படிக்கவிருக்கும் கல்வி நிலையத்தினுடைய சர்வதேச பிரதிநிதியின் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களைக் குறித்துக் கொண்டீர்களா? என்பதையும் உறுதிசெய்து கொள்ளவும்.
    முக்கியமான ஆவணங்கள்
    * தகுதியான பாஸ்போர்ட்
    * உங்களுடைய மாணவர் விசா உறுதியளிப்பு கடிதம்
    * கல்வி நிறுவனம் வழங்கிய இடம் மற்றும் சேர்க்கை கடிதம்
    * சேர்க்கைக்கான மின்னணு உறுதியளிப்பு
    * பணம் கட்டியதற்கான ரசீதுகள்
    * காப்பீட்டு பாலிசிகள்
    * உங்கள் கல்வித்தகுதிப் பற்றிய சான்றளிக்கப்பட்ட நகல்கள்
    * மருத்துவப் ஆவணங்கள் மற்றும் பரிந்துரை சீட்டுகள்
    * கிரெடிட் மற்றும் ATM அட்டைகளின் நகல்கள்
    * மருந்து விபரச் சீட்டுகள்
    இதுபோன்ற தேவையான ஆவணங்களுடன் நீங்கள் புறப்படும்போது, அவற்றின் நகல்களை வீட்டில் விட்டுச்செல்லவும். ஏனெனில், ஆஸ்திரேலியாவில், உங்களது அசல் ஆவணங்கள் எதுவும் தொலைந்துவிட்டால், இந்த நகல்களை நீங்கள் பெறலாம். பயணத்தின்போது, முக்கிய ஆவணங்களை உங்களுடனேயே வைத்துக்கொள்ளவும். காப்பீடு பயணக்காப்பீடு பயணக் காப்பீட்டை வைத்துக்கொள்வது எப்போதுமே புத்திசாலித்தனமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில், விமானங்கள் ரத்தாகும்போது, உங்களின் பொருட்கள் தொலையும்போது உங்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகமாக இருக்கும். எனவே, காப்பீட்டின் மூலம் இத்தகைய இழப்புகளைக் குறைக்கலாம்.
    மருத்துவக் காப்பீடு 
    ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாவின் கீழ் தரையிறங்கும் ஒவ்வொருவரும், வெளிநாட்டு மாணவர் மருத்துவ வசதியை(Overseas student health cover), அவர் தங்கியிருக்கும் காலம் வரையில் வைத்திருக்க வேண்டும். அந்த வசதியானது, நீங்கள் அந்நாட்டில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள உதவும்.
    உங்களுக்கு தேவையான பணம்
    ஆஸ்திரேலியாவின் ஆரம்ப நாட்களை சமாளிக்க, உங்களிடம் தேவையான பணத்தை வைத்துக் கொள்ளவும். அதேசமயம், மிக அதிகளவிலான பணத்தை உங்களிடம் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணர் காசோலையில் A$1,500 முதல் A$3,000 வரை வைத்திருந்தால், அங்கே உங்களுக்கான ஆரம்பகட்ட தேவைகளை நிறைவுசெய்துகொள்ள ஏதுவாய் இருக்கும். அதேசமயம், உங்களிடம் A$10,000 தொகைக்கு அதிகமாக இருந்தால், அந்நாட்டில் நுழையும்போது, அந்த சுங்க அதிகாரிகளிடம் அதைப்பற்றி தெரிவிக்க வேண்டும்.
    தங்குமிட ஏற்பாடுகள்
    நீங்கள் பள்ளிப் பருவ வயது மாணவனாக இருந்தால், அந்நாட்டை சென்றடைவதற்கு முன்பாகவே ஒரு தங்குமிட ஏற்பாட்டை செய்துகொள்ள வேண்டும். அதேசமயம், கல்லுரி அல்லது பல்கலைக்கழக நிலையிலான மாணவராக இருந்தால், அங்கே சென்ற ஆரம்ப நாட்களில் ஏதேனும் ஒரு தற்காலிக ஏற்பாட்டை செய்துகொள்ள வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் சேரப்போகும் கல்வி நிறுவனம் உங்களுக்கு துணை நிற்கலாம். இல்லையெனில் www.yha.com.au என்ற இணையதளத்தில் தேடவும்.
    மேலும், ஹோட்டல் அறைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்துகொள்ளும் பொருட்டு, கடைசிநேர இணையதள பதிவு வசதிகள் அதிகளவில் உள்ளன. இவற்றில் www.getaroom.com.au மற்றும் www.wotif.com என்பவை முக்கியமானவை. ஆஸ்திரேலியாவில் பொதுவாக ஹோட்டல் அறைகளுக்கு அதிக செலவாகும். பல முக்கிய நகரங்களில் ஒரு இரவிற்கான செலவு குறைந்தபட்சம் A$150 -இலிருந்து தொடங்குகிறது.
    பொருட்களுக்கான அளவு
    நீங்கள் கொண்டு செல்லும் பொருட்களுக்கான எடை வரைமுறைகளை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. வெளிநாட்டு விமானங்களில் அதிகபட்சமாக 23 கிலோவிற்கு கூடாமல் இருக்க வேண்டும். அதேசமயம், ஆஸ்திரேலியாவிற்குள் செய்யும் பயணங்களின் பொருள் எடை 20 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
    ஆடை வரையறைகள்
    பொதுவாக ஆஸ்திரேலிய மாணவர்கள், பாரம்பரிய முறையில்(formal) அன்றி, இலகுவான(informal) முறையில் உடையணிகிறார்கள். கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்கள் பொதுவாக டீ-ஷர்ட், ஜீன்ஸ் அணிகிறார்கள். அதேசமயம், பல பள்ளி மாணவர்கள் சீருடை அணிகிறார்கள்.
    அந்நாட்டில் கோடைகாலம் என்பது டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலும், இலையுதிர் காலம் மார்ச் முதல் மே வரையிலும், குளிர்காலம் ஜுன் முதல் ஆகஸ்ட் வரையிலும், வசந்தகாலம் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலும் இருக்கும். அந்நாட்டில் ஜனவரியும், பிப்ரவரியும் அதிக வெப்பமுடைய மாதங்கள். எனவே நீங்கள் எப்போது அங்கே செல்கிறீர்களோ, அதற்கேற்ற ஆடை ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்.
    மருந்துக் கட்டுப்பாடுகள்
    நீங்கள் உங்கள் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட வகை மருந்துகளை அந்நாட்டிற்கு எடுத்துச்செல்ல விரும்பினால், அதற்கு அந்நாட்டு சட்டப்படி அனுமதி உண்டா? என்பதை முதலிலேயே தெரிந்துகொள்ள வேண்டும். இதைப்பற்றிய முழுமையான தகவலுக்கு www.tga.gov.au என்ற இணையதளம் செல்லவும்.
    அதிகளவிலான மருந்துகள் ஆஸ்திரேலியாவில் கிடைக்கின்றன. நம் நாட்டைப் போன்று அங்கு நினைத்தவுடன், மருத்துவர் பரிந்துரையின்றி(prescription) மருந்துகளை வாங்கிவிட இயலாது. எனவே, அங்கு சென்றவுடன் ஒரு சரியான மருத்துவரை அணுகி, அவரிடம் பரிந்துரை சீட்டை பெற்றுக்கொள்ளவும்.
    மின்சாதனப் பயன்பாடு
    ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் மின்சாதனப் பொருட்களின் நிலையான வோல்டேஜ் 240 வோல்ட்டுகள். பெரும்பாலான கணினிகள், செல்போன் மின்னேற்றிகள்(chargers), MP3 ப்ளேயர்கள், டிஜிட்டல் கேமராக்கள், 110 முதல் 240 வோல்டேஜ்களுக்குள் ஒத்துவந்து இயங்கக்கூடியவை. ஆனால் சிலவகை மின்சாதனப் பொருட்களுக்கு மாற்றிகள் தேவைப்படும்.
    எனவே ஆஸ்திரேலிய பயன்பாட்டிற்கு ஏற்ற Plugs, Adaptors ஆகியவற்றை அங்குப் பெற்றுக்கொள்ளவும்.

    கணினிப் பயன்பாடு
    கணினி என்பது பலரின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. எனவே, ஆஸ்திரேலியா செல்கையில், உங்களது கணியை எடுத்துச்செல்லும்போது அந்நாட்டு சுங்க விதிமுறைகளை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
    குறுகியகால படிப்புகள் மற்றும் நீண்டகால படிப்புகள், குறுகியகால கணினிப் பயன்பாடுகள் மற்றும் நீண்டகால கணினிப் பயன்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்தும், அந்தக் கணினி எவ்வளவு நாட்களாக உங்களின் பயன்பாட்டில் இருக்கிறது என்பதைப் பொறுத்தும், அதனுடைய விலை மதிப்பை பொறுத்தும் வரி விதிப்பு மற்றும் வரி விலக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதைப்பற்றி தெளிவான தகவல்களை அறிந்துகொள்ள www.customs.gov.au என்ற இணையதளம் செல்க.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...