|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 February, 2012

காமராஜரின் நினைவு இல்லத்தை புனரமைக்கிறது ஆஸி!


விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை பழமை மாறாமல் புனரமைப்பு செய்வது தொடர்பாக தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் டேவிட் ஹோலி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. விருதுநகர் சுலோச்சன் தெருவில் காமராஜர் வாழ்ந்த இல்லம், தமிழக அரசின் சார்பில் நினைவு இல்லமாக பராமரிக்கப்படுகிறது.காமராஜர் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலை மாறி டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு கண்ணாடி மற்றும் அலங்கார விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தி பராமரிக்கப்படுகிறது.

கட்டிடங்களின் பழமையை மாற்றாமல் பலப்படுத்தும் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலிய நாடு பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய கட்டிட கலை நிபுணர்கள் கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூர் நினைவு இல்லம், மும்பையில் வீரசிவாஜி நினைவு இல்லத்தை பழமை மாறாமல் மத்திய அரசு உதவியுடன் புனரமைப்பு செய்துள்ளனர்.ஆஸ்திரேலியா சென்றிருந்த போது விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், காமராஜர் நினைவு இல்லத்தை பழமை மாறாமல் பராமரிக்க புனரமைப்பு செய்ய கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் டேவிட் ஹோலி தலைமையிலான குழு காமராஜர் இல்லத்தை பார்வையிட்டு சென்றுள்ளது.

பதவியிலிருந்து அகற்ற சில வெளிநாட்டு சக்திகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக?

தம்மை பதவியிலிருந்து அகற்ற சில வெளிநாட்டு சக்திகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.கடவத்தை பிரதேசத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்த போது ராஜபட்ச இவ்வாறு குறிப்பிட்டார்.யார் என்ன சூழ்ச்சி செய்தாலும் தமக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றிய பின்னரே தான் பதவியை விட்டு விலகுவேன் என அவர் தெரிவித்தார்.எரிபொருள் விலையேற்றம் குறித்து குழப்பமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள ராஜபட்ச சர்வதேச சந்தை நிலைமையின் அடிப்படையில், எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும்  நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு அதற்கான மானியங்கள் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

சேனல் - 4 : புதிய ஆவணப் படம் அடுத்த மாதம் முதல் வாரத்தில்!


இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மேலும் ஒரு ஆவணப்படத்தினை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது.‘இலங்கையின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட ஜோன் சினோ என்ற செய்தி வெளியீட்டாளரே இந்த ஆவணப்படத்தையும் வெளியிடவுள்ளார். இந்த நிலையில், ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆவணப்படம் வெளி யிடப்படவுள்ளதாக இலங்கை அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

சேனல்-4 தொலைக்காட்சி இந்த ஆண்டுக்கான தமது நிகழ்சித் தயாரிப்பு தொடர்பாக வெளியிட்ட தகவலில், ‘இலங்கையின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை - புதிய போர்க்குற்ற ஆதாரங்க ளுடன் வெளியிடப் போவதாக தெரிவித் திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு நடு நிலையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை அரசிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உலக நாடுகள் இன்று வரை உறுதியாக குரல் கொடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இம்மாத இறுதியில் ஐ.நா. சபையில் மனித உரிமை மாமன்றம் ஜெனிவாவில் கூடுகிறது. இக்கூட்டத்தில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளன.

2009-ம் ஆண்டு நடந்துகொண்டதுபோல் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாமல், இந்திய அரசு நடு நிலையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நினைவூட்டி, போர்க்குற்ற விசாரணை நடத்த வலி யுறுத்தும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட வேண்டும் என்று பிரதமருக்கு, தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...