|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 April, 2012

இந்திய சட்டமைப்புகளுடன் இத்தாலி விளையாட வேண்டாம் !


கேரளா அருகே 2 மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு கோடி நிவாரணமாக கொடுத்து சட்டத்தை வளைக்க இத்தாலி நாட்டினர் பார்க்கின்றனர். இது பெரும் கண்டனத்திற்குரியது, இந்திய அரசியல் சட்டமைப்புடன் விளையாட வேண்டாம் என இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியுள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொல்லம் அருகே கடல் பகுதியில் 2 மீனவர்களை இத்தாலி கப்பலில் வந்த படையினர் சுட்டு கொன்றனர். கடற்கொள்ளையர்கள் என நினைத்து சுட்டதாக கூறினர். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து இரு இத்தாலியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தாலியர்களை மீட்க அந்நாட்டு அரசு அதிகாரிகள் இந்தியா வந்து கடும் முயற்சி மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக பலியான மீனவர் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி வழங்குவதாக பேரம் பேசி முடிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 30 லட்சம் வரை வழங்கப்பட்டு விட்டது. இதனை வைத்து கோர்ட்டிற்கு வெளியே சமரசம் மூலம் நாங்கள் பேசி முடித்து கொள்கிறோம். என மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

கப்பல் மற்றும் 2 இத்தாலியர்களை விடுவிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தங்களுக்கு மன வேதனையை தருவதாகவும், இது அனுமதிக்க முடியாது என்றும், இது போன்ற புதிய ஒரு நடைமுறை நிறைவேற்றுவது தவறானது. இந்திய சட்டமைப்புகளுடன் இத்தாலி விளையாட வேண்டாம் என்றும் கூறினர். கேரள அரசு எப்படி இதனை ஏற்றுக்கொண்டது என்றும் கேள்வி எழுப்பினர். இந்த மனு மீதான உத்தரவு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் இத்தாலியினர் விடுதலைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது

இதே நாள்...


  • ஜெர்மனி தந்தையர் தினம்
  • வியட்நாம் விடுதலை தினம்(1975)
  • இந்திய திரைப்படத் துறையின் முன்னோடியான தாதாசாஹிப் பால்கே பிறந்த தினம்(1870)
  • திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1982)
  • ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்தது(1999)

உழைக்கும் மக்களே....



மனித குலம் வாழ உழைப்பும், உழைப்பினால் உற்பத்தியும் தேவையாகிறது. உழைப்பவர்களால் தான் உணவுப் பொருட்கள் உயிரினம் வாழ உதவுகிறது. தொழிலாளர்களின் உழைப்பால் தேவைப்படும் பண்டங்கள் சரக்குகள் உற்பத்தியாகின்றன. இவற்றைக் கொண்டே மனிதகுலம் வாழ்ந்து, முன்னேறிவருகிறது. மனிதகுலத்தையே வாழ்வித்தும், வளர்த்தும் வரும் உற்பத்தியாளர்களான உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பு, உலகம் முழுவதிலும் சுரண்டப்படுகிறது. உரிமைகள் மறுக்கப்படுகிறது.மனித குலத்தையே வாழ்வித்துவரும் தொழிலாளர்கள், வாழ்வாதாரத்துக்காகவே போராடுகிறார்கள் உரிமைகள் மறுக்கப்படுவதால், போராடுவதற்காகவே வாழ்ந்து வருகிறார்கள்.
உரிமைப் போராட்டத்தின் முதல் பெரும் எழுச்சியாக அமெரிக்கக்கண்டத்தில், சிகாகோவில் 1886-ம் ஆண்டு மே முதல் நாளன்று திரண்டு உரிமைக் குரல் எழுப்பிய நாளாகும். தொழிலாளர்கள் காலை முதல் நள்ளிரவு வரை கால வரம்பின்றி உழைக்க அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலம் அது.


- எனவே எட்டு மணிநேர வேலை
- இழந்த சக்தியை மீட்டுப்பெற எட்டு மணிநேர ஓய்வு
- சமுதாயத்திதோடு வாழ எட்டு மணிநேரம்
- என்ற அடிப்படை கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது.


அது ராணுவமும், காவல்துறையும் கட்டவிழ்த்து விட்டு துப்பாக்கிப் பிரயோகத்தால் பலரது உயிரைப் பறித்தது. ரத்தக்காடாயிற்று, மைதானம். தலைமை தாங்கியோர் கைது செய்யப்பட்டு, பொய்க் குற்றச்சாட்டுக்களால் ஜோடிக்கப்பட்ட வழக்கில் - இறுதியில் தூக்கிலிடப்பட்டனர். இது நிகழ்ந்தது 1886-ல், 1890-ல் பாரிஸ் மாநகரில் திரண்ட உழைப்பாளர் மாநாட்டில், காரல் மார்க்சும், ஏங்கல்சும், இனி ஆண்டுதோறும் மே முதல் நாளை, உலகத் தொழிலாளர்கள், உலகத் தொழிலாளர்களின் உரிமை போர் முழக்க நாளாகக் கடைப்பிடிக்க அறைகூவல் விட்டனர்.இப்போது உலகம் முழுவதிலும் மே தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் எட்டு மணி நேர வேலை என்பது சட்டமாக்கப்பட்டு, நடைமுறைக்கும் வந்துள்ளது.தொழிலாளர் எழுப்பி, ரத்தம் சிந்திய முதல் கோரிக்கை வென்று தொடர்ந்து முன்னேறி வருகிறது.இதைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் பல உரிமைப் போராட்டங்களை நடத்தி, பல அரசுகளிடம் பல உரிமைகளைப் பெற்றுள்ளனர்.
சட்டம் இருந்தாலும் அது மீறப்படுவது நடக்கிறது.


தொழிலாளர்கள், சங்கம் அமைத்துப் போராடும் உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது.
தொழிலாளி வர்க்கம் ஊதிய உயர்வு பசஞ்ப்படி, போனஸ், என சில உரிமைகளைப் பெற்று இருந்தாலும், விலையேற்றம், பணி நீக்கம், ஆலை மூடல் என்பதோடு, அவர்கள் எந்தத்துறையில் எவ்வளவு பாதுகாப்புடன் பணிபுரிந்தாலும், அனைவருமே சுரண்டப்படுவதிலிருந்து விடுதலை பெறவே இல்லை.
தன்னையும் விடுவித்துக் கொண்டு மனித குலத்தையும் விடுவிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உலகத் தொழிலாளி வர்க்கம் நிறைவேற்ற, தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
முதலாளித்துவம் அசுர வளர்ச்சியைக் கண்டதால், பலத்தையும் பெற்று, உலகத்தையே ஒரு சந்தையாக ஆக்கி, தன் ஆதிக்கத்திற்குள் பிடித்து வைப்பதில் முன்னேறியிருப்பதோடு, உச்ச வரம்பே இல்லாத லாப வெறிகாரணமாக உலக முதலாளித்துவம் இயற்கைச் செல்வங்களைச் சிதைத்து சீரழித்து வருகிறது. இதனால் பூமண்டலமே வெப்பமனடந்து வெடிப்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.
லாபப் பேராசைக்கு ஒரு கடிவாளம் போடும் மக்கள் நல அரசுகள் மலர வேண்டும். இயற்கைச் சூழல் காக்கப்பட வேண்டும் இயற்கை அழிவைத் தடுப்பதன் மூலமே பூமண்டல அழிவையும் தடுக்க இயலும் ஆதலால், சமதர்ம சமூதாயம் மலர, தொழிலாளவர்க்கம் அரசியல் தலைமை ஏற்க முன்னேற வேண்டும்.உயிரினம் வாழ உதவி வந்த தொழிலாளி வர்க்கம், இப்பூமண்டலத்தை அழிவிலிருந்து தடுத்து உயிரினத்தைக் காத்திட இந்த மேதின நாளில் உறுதி வேண்டுகிறேன். மே தின புரட்சிகர வாழ்த்துக்களை...

ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை !

ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்வது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.பொருளாதார நெருக்கடி, தனிப்பட்ட விவகாரங்கள் காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 23 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஜனவரி, பிப்ரவரியில் தலா 8 இந்தியர்களும், மார்ச்சில் 4 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2010-ம் ஆண்டில் 50 இந்தியர்களும், 2011-ம் ஆண்டில் 54 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

டவர்களால் ஆண்டுக்கு 70 லட்சம் பறவைகள் உயிரிழப்பு!

செல்போன் டவர்களால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பறவைகள் உயிரிழப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.ஏறக்குறைய 2 ஆயிரம் அடி உயரத்தில் 84 ஆயிரம் டவர்கள் உள்ளன. இதனால் பறவைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. எனினும் இந்த டவர்களால் மட்டும் அந்த பறவைகள் உயிரிழப்பதில்லை. கேபிள் வயர்களாலும் அவைகள் உயிரிழப்பது தெரியவந்துள்ளது.

நிலத்துக்கு காவலாளி உரிமை கோர முடியாது சுப்ரீம் கோர்ட்டு !

தனது முதலாளியின் நிலத்தில் காவலாளியாக தங்கி இருக்கும் ஒருவர், அந்த நிலம் தனக்குதான் சொந்தம் என்றும், இதை கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்; குறிப்பிட்ட அந்த நிலத்தில் தனது குடும்பம் இரு தலைமுறைகளாக வசித்து வருவதோடு, அதை பாராமரித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கி பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தது.நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், '’ஒரு குறிப்பிட்ட நிலத்தில் காவலாளியாக இருப்பவரோ அல்லது அந்த நிலத்தை கவனித்துக்கொள்பவரோ,அல்லது அந்த நிலத்தில் வேலைசெய்பவரோ யாராக இருந்தாலும் அவர்கள் எவ்வளவு காலம் அந்த பணியை செய்து கொண்டு இருந்தாலும் அந்த நிலத்துக்கு ஒரு போதும் உரிமை கோர முடியாது. அவர்கள் அந்த நிலத்துக்கு உரிமையானவரின் சார்பில், அந்த நிலத்தை கவனித்துக்கொள்கிறார்கள் அவ்வளவுதான்.குறிப்பிட்ட அந்த நிலத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே அவர்கள் அந்த நிலத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் காவலாளியின் கோரிக்கையை ஏற்க முடியாது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.மேலும் தனது முதலாளியின் நிலத்துக்கு உரிமை கோரிய காவலாளி, வழக்கு செலவாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த தொகையை அவர் 2 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும். மேலும் அந்த இடத்தையும் 2 மாதங்களுக்குள் காலி செய்யவேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.

ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற இலங்கைத் தமிழ் மாணவர்!

லண்டன் ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் போட்டிக்கான தீபத்தை ஏந்துவதற்காக இலங்கையைத் சேர்ந்த தமிழ் மாணவர் ஒருவர் தேர்வாகியுள்ளார்.மல்லாவியைச் சேர்ந்த முருகேசப்பிள்ளை கோபிநாத்(21), நியுகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவம் பயின்று வருகிறார்.இந்த தீபத்தை ஏந்த தேர்வு செய்யப்பட்டுள்ள 8 ஆயிரம் வீரர்களில் முருகேசப்பிள்ளையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படமாக பாலை தேர்வு!


நல்ல தராமான தமிழ்த் திரைப்படங்களை நார்வேயில் வாழும் தமிழர்களுக்கும் நார்வே நாட்டு குடிமக்கள் மற்றும் சர்வதேச மக்களின் பார்வைக்கும் எடுத்துச் செல்லும் நோக்குடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படும் நார்வே சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா மூன்றாவது ஆண்டாக இம்முறை ஏப்ரல் 25 முதல் 29 வரை நடைபெற்றது. தமிழ்த் திரைப்படங்களுக்காக மட்டும் சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒரே திரைத்திருவிழா இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அழகர்சாமியின் குதிரை, வெங்காயம், வாகைசூடவா, கோ, ஆரண்ய காண்டம், தீராநதி(பிரான்சு), எங்கேயும் எப்போதும், போராளி, மயக்கம் என்ன, பாலை, உச்சிதனை முகர்ந்தால், வர்ணம், ஸ்டார் 67(கனடா), மகான்கணக்கு, நர்த்தகி ஆகிய 15 படங்கள் இந்த விழாவில் திரையிடத் தேர்வாகியிருந்தன. 

விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலை படத்தின் இயக்குநர் ம. செந்தமிழனுக்கு கடந்த வருடத்தின் சிறந்த சமூக விழிப்புணர்வுத் திரைப்பட இயக்குநர் விருது வழங்கப்பட்டுள்ளது. தனது அடுத்த பட வேலைகளின் காரணமாக இயக்குநர் செந்தமிழன் நார்வே செல்லாத காரணத்தால் பாலை படத்தின் கதாநாயகன் சுனில் இந்த விருதை இயக்குநர் சார்பில் பெற்றுக்கொண்டுள்ளார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக 2300 வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்வியலைத் திரைப்படமாக்கிய பெருமைக்குரிய பாலை திரைப்படம் தமிழகத்தில் கடந்த நவம்பரில் வெளியானது. தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் பாலை திரைப்படத்திற்கு சிறப்பான விமர்சனம் எழுதி வெகுவாகப் பாராட்டின. 

தமிழ் உணர்வாளர்களுக்கும், உண்மையான திரைப்படக் காதலர்களுக்கும் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவருக்குமே தமிழரின் வரலாற்றுப் பெருமிதத்தை முதன்முறையாக திரைமொழியில் உணர்த்திய பெருமையைப் பெற்ற படம் பாலை. சங்க காலத் தமிழரின் வாழ்க்கைப் போராட்டத்தை நிகழ்காலத் தமிழரின் வாழ்க்கைப் போராட்டத்தோடு ஒப்பிட்டு துணிச்சலான பல கருத்துகளை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ம. செந்தமிழன். சர்வதேச அளவில் தமிழ்த் திரைப்படங்களுக்காக நடைபெற்ற திரைப்படவிழாவில் “சிறந்த சமூகவிழிப்புணர்வுத் திரைப்படம்” என்ற சிறப்புப் பிரிவில் பாலை திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் இயக்குநருக்கு சிறந்த சமூகவிழிப்புணர்வுத் திரைப்பட இயக்குநர் விருது வழங்கப்பட்டுள்ளது

போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.


திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (30.04.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. டெசோ கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கலைஞர், 

கேள்வி: நீங்கள் ஆட்சியில் இல்லாத போதுதான் இலங்கை பிரச்சினையை தீவிரமாக கையில் எடுப்பதாக சிலர் கூறுகிறார்களே?

பதில்:
 ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் வாதாடி இருக்கிறோம். போராடி இருக்கிறோம். அமைதிப்படை என்ற பெயரால் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். அந்த அமைதிப்படை இந்தியா வந்தபோது அன்று முதல்  அமைச்சராக இருந்த நான் வரவேற்க செல்லவில்லை. அதனால் ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தவர்கள் நாங்கள்.

கேள்வி: இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதை நீங்கள் தடுக்க தவறியதாகவும், இப்போது 'டெசோ' அமைப்பை கையில் எடுத்திருப்பதாகவும் விமர்சிக்கிறார்களே?

பதில்:
 விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை. என்னையோ, டெசோ அமைப்பையோ விமர்சிப்பது அவர்களாகவே இந்த அமைப்புக்கு தரும் விளம்பரமாகவே கருதுகிறேன். ஆட்சியை இழந்ததால் இதை உருவாக்கவில்லை.

கேள்வி: போர் முடிந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பால் ஈழ தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும்.

பதில்:
 முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அறவழியில் அனைத்து நாட்டு ஆதரவையும் திரட்ட இருக்கிறோம். இதற்கு அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும்.

கேள்வி: பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

பதில்:
 போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.

கேள்வி: மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவீர்களா?

பதில்:
 உதவி பெற முயற்சிக்கிறேன். முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது தி.மு.க.வால் என்பதை மறந்து விடக்கூடாது.

கேள்வி: புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா?

பதில்:
 ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்.

கேள்வி: இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்:
 இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது. இவ்வாறு கலைஞர்

பார்த்ததில் பிடித்தது!

.பயபுள்ளைகளுக்கு எவ்வளவு பர்பெக்ட்டா பொருந்துது பாருங்க.....
எதனைகோடிகள் கைமாரியதோ...கேடிகள் எல்லாம் ஆதீனமாக மார. மிக 


விரைவில் கொடுத்தவர்களும் வாங்கிவர்களும் தொலைக்காட்சியில் 


வரத்தான் போய்கிறார்கள் நாம் பார்க்தான் போகிறோம்

29 April, 2012

பாரதிதாசன் பிறந்த நாள்...


தமிழ் மக்களுக்குப் பாடல்கள் வழியாக உணர்ச்சியூட்டித் தமிழ் உணர்வுபெறச் செய்தவர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார்.பாவேந்தர் பிறந்த புதுவை மண்ணில் ஒவ்வொரு ஆண்டும் புதுவை அரசின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இன்று(29.04.2012) காலை பதினொரு மணியளவில் புதுவை சட்டப்பேரவையின் எதிரில் உள்ள பாவேந்தர் சிலைக்குப் புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி, சட்டப்பேரவைத்தலைவர் சபாபதி, அமைச்சர்கள் இராசவேலு, தியாகராசன், அரசுகொறடா நேரு ஆகியோர் மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர். பிற தமிழமைப்புகளைச் சார்ந்தவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.புதுவையில் உள்ள பாவேந்தர் இல்லத்துக்கு நான் காலை 10 மணிக்குச் சென்றேன். மன்னர் மன்னன் ஐயா எங்களுக்கு முன்னதாக நினைவில்லத்தில் குடும்பத்தினருடன் இருந்தார்கள். பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கும் இடத்துக்குப் புறப்படுவோம் என்றார்.

பாவேந்தர் பெயரன் கோ.பாரதியின் வண்டியில் மன்னர்மன்னன் அவர்கள் அமர்ந்துகொண்டார். நான் என் வண்டியில் பாவேந்தர் சிலை அமைவிடத்திற்குச் சென்றேன். அங்குப் பொதுவுடைமை இயக்கத்தவர்களும், திராவிடர் கழகத்தினரும் பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவித்து உரையாடிக்கொண்டிருந்தனர். பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடினர்.புதுவை முதல்வர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் ஆர்வமுடன் வந்து மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பாவேந்தரின் நினைவில்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய நிகழ்வுகளை அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டு வாழ்த்தினர்.பாவேந்தரின் குடும்பத்தினர், பாவேந்தர் பற்றாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக ஒன்றுகூடித் தமிழ்ச்சமூக வளர்ச்சிக்குப் பாடல்வழி பாடுபட்ட மாபெரும் பாவலரை நினைவுகூர்ந்தனர்.

முதன்முறையாக முதலிடத்தை சாம்சங்!

அதிக செல்போன்களை விற்பனை செய்து சர்வதேச அளவில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம். உலகம் முழுக்க செல்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோக்கியா, சாம்சாங் போன்ற முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு பல புதுமைகளை புகுத்தி, புது ரக செல்போன்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான செல்போன் விற்பனையில் எந்த நிறுவனம் அதிக செல்போன்களை விற்பனை செய்துள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சாம்சங் நிறுவனம் 93.5 மில்லியன் செல்போன்களை விற்பனை செய்துள்ளது. நோக்கியா நிறுவனம் 82.7 மில்லியன் செல்போன்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன்மூலம் கடந்த 1998ம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த நோக்கியா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து இருக்கிறது சாம்சங்.சாம்சங் நிறுவனத்தின் விற்பனையை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும் போது 36 சதவீதம் அதிகமாகும். இதன் மொத்த நிகரலாபம் ரூ23,400 கோடி ஆகும். இதுபோல் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது சாம்சங். சாம்சங்கின் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ‌மொபைல்கள் அதிகளவு விற்பனையானதே அந்த நிறுவனம் முதலிடம் வந்ததற்கான முக்கிய காரணம்.

இதே நாள்...


  • சர்வதேச நடன தினம்
  • ஜப்பான் தேசிய தினம்
  • புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)
  • இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்(1848)

சைபர் குற்றங்கள் மகாராஷ்டிரா, கர்நாடகம் முதலிடம்.

 2010-ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவும், கர்நாடகமும் முன்னிலையில் உள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் 246 சைபர் குற்ற வழக்குகளும், கர்நாடகத்தில் 176 வழக்குகளும் 2010ம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.சைபர் குற்றங்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் 14 குழந்தைகள் காணாமல்...?

தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் காணாமல் போகும் குழந்தைகளில் 8 சதவீதம் பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள் என்று அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர், வணிக மற்றும் பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான குழந்தைகள் கடத்தப்படுகின்றன.நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ல் 5111 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் வரை 1146 குழந்தைகள் காணாமல் போயுள்ளன.

ஊழல் விபசாரத்தை விட மோசமானது.


போலி ஆயுத பேரத்தில் பங்காரு லட்சுமணனுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்த டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி கன்வல் ஜீத் அரோரா, ஊழலுக்கு எதிரான தனது கருத்துக்களை ஆவேசமாக, ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.தீர்ப்பில் அவர், "ஊழல் என்பது விபசாரத்தை விட மோசமானது. விபசாரம் என்பது தனிமனித ஒழுக்கத்தைத்தான் பாதிக்கிறது. ஆனால் ஊழலானது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரே அளவில் சீரழித்து விடுகிறது. நாட்டுக்கு ஊழல் பகை. மனிதர்களை இது கோபத்துக்கு ஆளாக்குகிறது'' என கூறி உள்ளார்.மேலும் அவர் ஊழல் பற்றி குறிப்பிடுகையில், " பிரச்சினை என்னவென்றால், இந்தச் சமூகம் ஊழலுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுகிறது. எனவே உண்மையிலேயே ஊழலற்ற ஒரு சமூகத்தை காண நாம் விரும்புகிறோமா என்ற கேள்வியை நம்மை நாம் கேட்க வேண்டிய தேவை எழுந்து உள்ளது'' என்றும் தெரிவித்துள்ளார்.

28 April, 2012

பார்த்ததில் பிடித்தது!

கணபதி அய்யர், கணபதி அய்யர் : வீரபாகு, உன் அக்காவ நான் வச்சுகிறேன், 

பேக்கிரிய நீ வச்சுக்கோ - கிரி படத்தில் வர்ற வடிவேலு காமெடி. -------------வை 

நான் வச்சுகிறேன், ஆதினத்தை நீ வச்சுக்கோ. - நேற்று ரிலீசான புதுப்பட 

காமெடி.

வடிவேலு இல்லாத குறையை இவர் ஈடு செய்கிறார் இப்போதெல்லாம்..


இதே நாள்...


  • அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது(1920)
  • மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது(1932)
  • தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் இறந்த தினம்(1942)
  • அமெரிக்காவின் 7வது மாகாணமாக மேரிலாந்து இணைக்கப்பட்டது(1788)

வந்தார்கள் நின்றார்கள் சென்றார்கள் ...


எனக்கு என்னமோ நம்ம சென்னை டீம் இந்த தடவை கப்பை ஜெய்ப்போம்ன்னு தெரியல இப்பல்லாம் தோனி தனக்கு சம்மந்தமே இல்லாம எவனாவது தோத்தா நம்ம உள்ள நுழைய முடியுமான்னு வெய்ட் பண்ணி,வெய்ட் பண்ணி.  நுலையுரதே பொழப்பபா வச்சி வச்சி இப்ப IPL லையும் அது தொடர்கதை ஆகிப்போச்சி ! புனே வாரியார்ஸ் மேட்ச்ல கடைசி பால் வரை ஓடி ஓடியே ரன் எடுத்தது வரை ஏதோ Four எடுக்குறது கொலக்குத்தம்மாதிரி விர்த்திமான் சகா ன்னு ஒருத்தன் 10 பாலுக்கு 4 ரன்னு இவன்ன்லாம் டெஸ்ட் மேட்ச் விளையாட கூட லாயக்கில்லை இவனைபோய் T 20 க்கு விளங்கிடும்! நல்லா விளையாடுற போலின்ச்சர விளையாட விடுறதே இல்ல எனக்கு சென்னை டீம் ஒனறு கேப்டன் தோனியா நல்லா கவனிக்களையோன்னு தோணுது எந்த மேட்ச் விளையாட வந்தாலும் அந்த பழைய கம்பீரம் சுத்தமா போயே போச்சி...

27 April, 2012

பார்த்ததில் பிடித்தது!


பார்த்தா பாருங்க ..பாக்காட்டி போங்க...


பெண்ணின் வயிற்றில் 9 குழந்தைகள்!

மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றில் 9 குழந்தைகள் வளர்ந்து வருவதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த பெண் டெக்ஸாஸ் அருகில் உள்ள கோகுலியாவைத் சேர்ந்த கர்லா வனீஸ்ஸா பரீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தற்போது மாநிலத் தலைநகர் சால்டில்லோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மே 20-ம் தேதி அளவில் குழந்தைகள் பிறக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.6 பெண்குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் பரீஸின் வயிற்றில் வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவார பலன் 27-4-2012 முதல் 3-5-2012 வரை)

மேஷம் பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.  பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில் சில சலுகைகள் பெறக்கூடும். எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்க தாமதமாகலாம்.

ரிஷபம் பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டை சீரமைப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்வீர்கள். கணவர் அன்பாக இருப்பார். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களின் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

மிதுனம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். திடீர் பயணம் செய்யக்கூடும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். உங்கள் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.

கடகம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். வருமானத்திற்கு குறைவிருக்காது. உடல் நலனில் கவனம் தேவை. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். சேமிப்பில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களின் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். அதனால் அவர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

சிம்மம் பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மனம் தெளிவாக இருக்கும். உடல் நலம் மேம்படும். பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். மகன் அல்லது மகளுக்கு புதிய வேலை கிடைத்து மகிழக்கூடும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும்.

கன்னி பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் மேம்படும். சிலர் புதிய வீட்டுக்கு செல்லக்கூடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். பண வரவு அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள்.

துலாம் பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். திறமை பளிச்சிடும். பண வரவு நன்றாக இருக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது.

விருச்சிகம் பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றி்ல் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளக்கூடும். பயணங்களால் நன்மை உண்டு.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். கணவரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.வேலை பார்ப்போருக்கு: சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம்.

தனுசு பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்கள் பாராமுகமாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை.

மகரம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். கடன் பாக்கி வசூலாகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனை தீரும். பெற்றோரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். வேலை பளு குறையும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

கும்பம் பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். சிலர் புதிய வீட்டுக்கு மாறக்கூடும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். வேலைக்குப் போகும் பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. சேமிப்பில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். இல்லையென்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம்.

மீனம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். மனதில் ஏதோ குழப்பம் இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். சக ஊழியர்களின் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும்.

அட்வான்ஸ்டு குரூஸ் கன்ட்ரோல்.

எந்த இடத்தில் டிராபிக் ஜாம் அதிகமாக உள்ளது என்பதை செயற்கைகோள் உதவியுடன் உடனுக்குடன் தெரிவிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஹோண்டா கண்டுபிடித்துள்ளது.நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவிட்டது. தீர்வு காண முடியாத விஷயங்களில் போக்குவரத்து நெரிசலும் ஒன்று என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், அவசரத்திற்கு கூட குறிப்பிட்ட இடத்தை சென்றவடைவது நம் கையில் இல்லை என்ற நிலை இருக்கிறது. இந்த நிலையில், டிராபிக் ஜாம் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் கார்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை ஹோண்டாவும், டோக்கியோ பல்கலைகழக விஞ்ஞானிகளும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ள இடத்தை தவிர்த்து எந்த வழியில் செல்லலாம் எளிதாக என்பதையும் இந்த சிஸ்டம் தெரிவிக்கும் என்கிறது ஹோண்டா. இது அட்வான்ஸ்டு குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்துடன் இணைக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.இந்த புதிய தொழில்நுட்பம் முதன்முறையாக அடுத்த மாதம் இத்தாலியிலும், ஜூலையில் இந்தோனேஷியாவிலும் கார்களில் பொருத்தி நேரடி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டால், கால 

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் 4 அணு உலைகள்! ஆணைய தலைவர்!

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கூடுதல் அணு உலைகளால் தென்னிந்தியாவின் மின் தேவையை பூர்த்தி செய்யலாம். கூடங்குளத்தில் அணு உலை பகுதியில் அணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையம் எதுவும் அமைக்கும் திட்டம் இல்லை.கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.கூடங்குளத்தில் தற்போது தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் உள்ளன. அதில் முதல் உலையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அணு மின் நிலைய ஊழியர்கள் இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள். இதற்கு போராட்டக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிராக மனிதன்.

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறைபாட்டிற்கு காரணம் விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.

விந்தணு வீழ்ச்சி இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிரான நிலை தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

கொத்து குண்டுகளை வீசியே தமிழர்கள் படு கொலை!


 கொத்து கொத்தாக உயிர்களைப் பலியெடுக்கும் கிளஸ்டர் வகை குண்டுகளைத்தான் இலங்கை ராணுவம் இறுதிப் போரில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபையின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு கைப்பற்றியுள்ளது.இலங்கையின் வடக்கில் புதுக்குடியிருப்பு பகுதியில் கிளஸ்டர் வகை குண்டுகளின் வெடிக்காத பகுதிகள் கிடைத்துள்ளதாக ஐ.நா. கண்ண்வெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த அலன் போஸ்டன் தெரிவித்துள்ளார்.தாம் கிளஸ்டர் குண்டின் பகுதிகளைக் கண்டுபிடித்தது தொடர்பாக சர்வதேச ஊடகங்களுக்கு அலன் போஸ்டன் மின் அஞ்சல் மூலம் தகவலையும் தெரிவித்துள்ளார்.இத்தகைய கொத்துக் குண்டுகளை பயன்படுத்தி பொதுமக்களைக் கொல்வது என்பது சர்வதேச சட்டவிதிகளின் படி குற்றமாகும்.

கண்டுபிடித்தது எப்படி? புதுக்குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் குவித்து வைக்கப்பட்ட உலோகங்களை சிறுவன் ஒருவன் பிரிக்க முயன்றான். அப்போது அது வெடித்து சிறுவன் உயிரிழந்தான். அவனது சகோதரி படுகாயமடைந்தார்.இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களை அலன் போஸ்டன் ஆராய்ந்த போது அவை கிளஸ்டர் குண்டுகள்தான் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த வீட்டில் இருந்த கிளஸ்டர் குண்டின் வெடிக்காத பகுதிகளையும் அவர் கைப்பற்றினார்.

ஐ.நா. சந்தேகம் இலங்கை அரசால் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள் மீது கிளஸ்டர் குண்டுகளை இலங்கை ராணுவம் வீசியது என்று ஐக்கிய நாடுகள் சபை அப்போது குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் இலங்கை அரசு இதனை நிராகரித்திருந்தது.அதேபோல் இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. வல்லுநர் குழுவும் போரில் படுகாயமடைந்தோரை பற்றி குறிப்பிடுகையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயமானது கிளஸ்டர் வகை குண்டுகளால்தான் என்றும் குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில் கிளஸ்டர் குண்டின் வெடிக்காத பகுதிகளே கைப்பற்றப்பட்டிருப்பது இலங்கைக்கு பெரும் நெருக்கடியையே கொடுக்கக் கூடும். வழக்கம் போல இலங்கை ராணுவம் தற்போதைய ஆதாரங்களும் பொய்யானது என்று கூறியிருப்பதுடன் விசாரணை நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்கினோம்- ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா!


முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா தெரிவி்ததுள்ளார்.ஜெயசூரியாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.இந்நிலையில் இலங்கையின் குருநாகல் பகுதியில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார்.கடந்த 2009ம் ஆண்டு இலங்கையின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது. ஏனென்றால் அந்த பகுதியில் 45,000க்கும் அதிகமான தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதிகட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.

இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும் சர்வதேச மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.அவர் கொடுத்த தைரியத்தில் தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்காலத்தில் அவர் தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிகட்டப்போரில் வென்றிருக்க முடியாது. இறுதிகட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்றார் ஜெயசூர்யா.ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு மூலம் கடைசிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்பதையும் இந்த ஜெயசூர்யா கூறியுள்ளதால் இது ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல்பாடுகளுக்கான வலுவான ஆதாரமாக, வாக்குமூலமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18


சட்டபூர்வ செக்ஸ் உறவுக்கு வயது வரம்பை 18 ஆக உயர்த்தும் புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் 26.04.2012 அன்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.செக்ஸ் குற்றங்களில் இருந்து சிறு வயதினருக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின்படி 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம் அவர்களுடைய சம்மதத்தின் பேரில் செக்ஸ் உறவு வைத்திருந்தால் குற்றமாக கருதப்படுவது இல்லை.புதிய சட்ட திருத்தத்தின்படி, இந்த வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்படுகிறது. 18 வயதுக்கு குறைவானவர்களிடம் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் செக்ஸ் உறவு வைத்திருந்தாலும் இனி குற்றமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சட்ட திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உண்டு என்ற திருத்தத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசுகளின்படி இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
பெண்களுக்கு தங்கள் பணியிடங்களில் நடைபெறும் செக்ஸ் கொடுமை தடுப்பு சட்டத்துக்கான திருத்த விதிமுறைகளுக்கு மந்திரிசபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஒருதலைப்பட்சமான முடிவை எடுப்பதை தவிர்க்கும் வகையில் மேற்கொண்டு இந்த மசோதா குறித்து விவாதிக்க வேண்டியது இருப்பதால், ப.சிதம்பரம் தலைமையிலான மத்திய மந்திரிகள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதே நாள்...


  • டோகோ விடுதலை நாள்(1960)
  • சியேரா லியோனி விடுதலை நாள்(1961)
  • தென்ஆப்ரிக்கா விடுத‌லை தினம்
  • லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது(1840)
  • ஜெராக்ஸ் பார்க் முதன் முறையாக கணிணி மவுஸை அறிமுகப்படுத்தியது(1981)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...