|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 July, 2011

தினமும் உடற்பயிற்சி...

நொறுங்கத் தின்றால் நூறுவயது வாழலாம் என்பது பழமொழி. ஆனால் சத்தான, சரிவிகித உணவே இன்றைய ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன.

கண்டதையும் தின்று குண்டான உடம்பால் நோய் அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தேவையற்ற கொழுப்புகளும் அழையா விருந்தாளியாக உடலுக்குள் புகுந்து கொள்கின்றன. உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வதற்காக பொதுவான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், உணவுக்கட்டுப்பாடுகளையும் தேசிய சத்துணவு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமும் உடற்பயிற்சி: உடல் தசைகள் வலுவடைய தினமும் 15 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். இதனால் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதோடு உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.

உணவுக்கட்டுப்பாடு: காடு, கழனிகளில் வேலை பார்த்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் நோய் வருவதில்லை. கனிணி முன் அமர்ந்த படியே பைல் பார்ப்பவர்களுக்குத்தான் அனைத்து நோய்களும் அழைக்காமல் வருகின்றன. கட்டுப்பாடான உணவுப் பழக்கத்தை கையாண்டால் நோய் தாக்குதலில் இருந்த தப்பிக்கலாம் என்பது தேசிய சத்துணவு நிறுவனத்தின் அறிவுரை.

காலையில் இட்லி, தோசை: காலை நேரத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆகாரங்களாக உட்கொள்ளவேண்டும். அமர்ந்து கொண்டே வேலை பார்க்கும் ஆண்கள் தினமும் 200 மில்லி லிட்டர் பால் அல்லது 2 கப் டீ மற்றும் காபி சாப்பிடலாம். 4 இட்லி அல்லது 3 தோசை சாப்பிடலாம் இவை தவிர 11/2 கப் உப்புமா அல்லது 4 ரொட்டித் துண்டுகள், அல்லது 2 கப் பாலுடன் கூடிய கார்ன் பிளேக்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

பெண்களின் உணவு பழக்கத்தை பொறுத்த வரை ஆண்களின் உணவை விட 20 முதல் 30 சதவீதம் குறைவாக எடுத்து கொண்டால் நல்லது. காலை உணவாக 3 இட்லி அல்லது 2 தோசை அல்லது 1 கப் உப்புமா அல்லது 3 ரொட்டி துண்டுகளே சாப்பிடலாம்.

காய்கறி சாலட்: மதிய சாப்பாட்டை பொறுத்தவரை ஆண்கள் 2 கப் அரிசி சாதம் சாப்பிடலாம். அதனுடன் 1/2 கப் பருப்பு, 3 முதல் 4 கப் காய்கறிகள், 8 துண்டு வெஜிடபுள் சாலட் மற்றும் 1/2 கப் தயிர் எடுத்து கொள்ளலாம்.

அசைவ உணவு வகையில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றை ஒரு சில துண்டுகள் மட்டும் சாப்பிடலாம். பெண்களை பொறுத்த வரை 1 கப் அரிசி சாதம் சாப்பிட்டால் போதுமானது. மற்ற படி ஆண்கள் சாப்பிடும் அதே அளவு பொருட்களை சாதத்துடன் சேர்த்து கொள்ளலாம்.

இரவில் அரிசி சாதம்: இரவு சாப்பாட்டின்போது ஆண்கள் 2 கப் அரிசி சாதமும், 1/2 கப் பருப்பு, 3 முதல் 4 கப் காய்கறிகள் உண்ணலாம். அத்துடன் 100 கிராம் பழங்களும் சாப்பிடலாம். பெண்களை பொறுத்தவரை 1 கப் அரிசி சாதமும், ஆண்களுக்கான மற்ற உணவு வகைகளையும் சேர்த்து கொள்ளலாம்.

ஆரோக்கியத்திற்கு தாய்பால்: அன்றாட உணவில் புரதச்சத்து நிறைந்த கடல் உணவுகளையும், குறைவான கொழுப்பு கொண்ட பாலையும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தை பெற்ற தாய்மார்கள் , பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது தாய்மார்களுக்கும் ஆரோக்கியமானதாகும்.

பல லட்சம் கோடி பொக்கிஷங்கள் இருக்கலாம் தகவல்!..


திருப்பதி ஏழுமலையானை சொத்து மதிப்பில் மிஞ்சியுள்ள திருவனந்தபுரம் பத்மநாபர் கோவிலில் பல லட்சம் கோடிக்கு பொக்கிஷங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த அளவுக்கு இக்கோவிலில் நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் குவிந்து கிடப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இவை எப்படி வந்தது தொடர்பாக ஒரு தகவல் உலவுகிறது.

ஒருங்கிணைந்த இந்தியாவின் குருநில மன்னர் சமஸ்தானங்கள் சேர்க்கப்பட்டபோது 1949ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானமும் சேர்க்கப்பட்டது. தெற்கில் கன்னியாகுமரி, வடக்கே எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா வரை நீண்டிருந்தது. தமிழ்நாட்டின் பத்பநாபபுரம் தான் அப்போது அதன் தலைநகராக இருந்தது. பின்னர்தான் திருவனந்தபுரமாக மாற்றப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தான முதல் மன்னர் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அவருக்கு பின் கார்த்திகை திருநாள் ராமவர்மா ஆட்சி செய்தார். அப்போதுதான் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாறியது. 1175ல் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆரம்பித்த போதே அரசாட்சியும் பத்பநாபர் கோவிலும் இணைந்தே இருந்தது. முதல் மன்னர் என் சொத்துகள் எல்லாம் பத்மநாபருடையது, நான் அவருடைய சேகவன் என்று அறிவித்த தனது பெயரை பத்மநாபதாசர் என்றும் மாற்றிக் கொண்டார்.

கடந்த 1813ல் இருந்து 1846 வரை ஆண்ட சுவாதி திருநாள், பிரபலமான கர்நாடக இசை கலைஞராக இருந்தவர், ஆங்கிலமொழி பற்றுக் கொண்டவர். 1921-1992ல் வாழ்ந்த கடைசி மன்னர் சித்திரை திருநாள் பாலவர்மாதான் இந்தியாவில் மரண தண்டனையை ஓழித்த முதல் சமஸ்தான மன்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1936ல் திவானாக இருந்த சிபி ராமசாமி அய்யர் யோசனைப்படி தீ்ண்டாமையை ஓழித்து கோயிலுக்குள் எல்லோரும் சென்று தரிசிக்க வைத்தவரும் இவர்தான். பத்மநாபர் கோயிலுக்கு தங்கள் சொத்துகளை அப்படியே தந்தவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் என்பதை பல மலையாள இலக்கியங்கள் சுட்டி காட்டியுள்ளன. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் குறித்து 1941ல் கவிஞர் பரமேஸ்வர அய்யர் தன் பிரதான பட்டா மதிளகேம் பதிவேடுகள் என்ற புத்தகத்தில் குறிப்புகளை எழுதியுள்ளார்.

திருவிதாங்கூர் பரம்பரையில் உள்ள முதல் மன்னர் முதல் கடைசி மன்னர் வரையும், இப்போதுள்ள வாரிசுகள வரையும் சொத்துகள் பற்றி கணக்கில் தெளிவாக இருந்துள்ளனர். கோயிலுக்கு தந்தபின் சொத்துகளை கட்டி காத்து வந்துள்ளனரே தவிர அவற்றில் இருந்து செலவு செய்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி கோவிலில் ஒரு லட்சம் கோடி அளவுக்கு பொக்கிஷங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளதுத. ஆனால் இன்னும் ஒரு அறை திறக்கப்படாத நிலையில் அங்கு மேலும் சில லட்சம் கோடி அளவுக்கு பொக்கிஷங்கள், கணக்கிடவே முடியாத அளவிலான பொக்கிஷங்கள் குவிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதே நாள்...

  • சாலமன் தீவுகள் விடுதலை தினம்(1978)

  •  இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பிறந்த தினம்(1981)

  •  இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது(1896)

  •  கனடாவில் ஆங்கிலத்துடன் இணைந்து பிரெஞ்சு மொழியும் அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது(1969)

  •  இந்தியாவின் தாஜ்மஹால் புதிய ஏழு உலக அதிசயங்களில் இடம்பெற்றது(2007)
  • LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...