|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 June, 2011

இதே நாள்


  • குக் தீவுகள் நியூசிலாந்துடன் இணைந்தது(1901)

  •  எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங், உலகின் முதலாவது பண்பலை ஒலிபரப்பை நியூஜெர்சியில் அறிமுகம் செய்தார்(1935)

  •  அன்டோனியோ மெயூச்சி, தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப்பட்டார்(2002)

  •  தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இறந்த தினம்(1995)

  • அலற வைக்கிறது ஈ-கோலி பக்டீரியா !


    உயிராபத்தை விளைவிக்கும் ஈ – கோலி பக்டீரியா தற்போது ஐரோப்பாவை அலற வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள். ஜேர்மனியில் 16 பேருடைய உயிர்களை காவு கொண்டுவிட்டது. டென்மார்க்கில் 06 பேர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஈ -கோலி பக்டீரியா மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கும் தொற்றும் என்பது அச்சமூட்டுவதாக உள்ளது. இதனால் பீடிக்கப்பட்டால் வயிற்று நோய் ஏற்படும். சிறு நீரகங்கள் பாதிக்கப்படும். மலத்துடன் 30 வீதம்வரை இரத்தப்போக்கு காணப்படும். நீண்ட கால சுகயீனத்தை ஏற்படுத்தும். அதைவிட முக்கியம் மரணத்திலும் கொண்டு சென்று நிறுத்திவிடும். சிறு நீரகங்களை செயற்பட முடியாது திகைக்க வைக்கும் மோசமான பக்டீரியாவாக உள்ளது.

    இதுவரை காலமும் இறைச்சியில் இருந்து ஆரம்பித்த கிருமி தற்போது மரக்கறி வகையில் இருந்து ஆரம்பித்துள்ளது. கொலன்ட்டில் இருந்து வரும் அக்குவக்கா, அத்தோடு தக்காளி, சலாட் போன்றவைகளில் இதன் தாக்கம் இருக்கிறது. டென்மார்க்கில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் இருந்து வெளிநாட்டு மரக்கறிகள் அகற்றப்பட்டு வருகின்றன. டென்மார்க் அக்குவக்காவிலும் இந்தக் கிருமி இருக்கிறதா என்ற ஆய்வுகள் தொடங்கிவிட்டன. பறவைக் காய்ச்சலுக்குப் பிறகு உலகத்தை கதிகலங்க வைத்துள்ளது. இந்தக் கிருமி வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது. ஜேர்மனியில் இதனால் பாதிக்கப்பட்டவரில் 67 வீதமானவர் பெண்களாவர். கூடுதலாக பெரியவர்களையும் பிள்ளைகளையும் இது வேகமாகத் தாக்குகிறது. ஜேர்மனி, டென்மார்க், கொலன்ட், சுவீடன், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளில் இது பரவியுள்ளது

    பிகினி உடை அணிந்தபடி படு கவர்ச்சியாக கார்களைக் கழுவும் ஒரு வித்தியாசமான கவர்ச்சிகரமான நிகழ்ச்சி!











    டிஎச்க்யூ எனப்படும் வீடியோ கேம்ஸ் தயாரிப்பு நிறுவனம் புதிய செயின்ட்ஸ் ரோ என்ற புதிய வீடியோ கேமை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோ கேம், இ3 எனப்படும் எலக்ட்ரானிக் என்டர்டெய்ன்மென்ட் எக்ஸ்போ எனப்படும் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

    இந்த வீடியோ கேமை பிரபலப்படுத்தும் நோக்கில் வித்தியாசமான, நூதனமான ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டது டிஎச்க்யூ. அதுதான் இந்த கவர்ச்சிக் கார் கழுவல். அதன்படி கவர்ச்சிகரமான பிகினி உடை அணிந்த பெண்கள் பங்கேற்கும் இலவச கார் வாஷ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு வந்த கார்களை, இந்த அழகுப் பெண்கள் கவர்ச்சி ரசம் சொட்ட சொட்ட கழுவி அனைவரையும் கவர்ந்தனர்.

    பேச்சைக் குறை...!

    மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல். புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி ( 2ஜி அல்ல. அது அரசியல் புற்றுநோய்) என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது. 

     புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

    14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம்.

    இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது. 2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள். அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்!

    உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன. அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.

     செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது.

     அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது. இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம்.

    இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட-செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், ""பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது. ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை- பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
     உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: "பேச்சைக் குறை' .

    எல்டிடிஇ கொடிக்குத் தடையில்லை!

    விடுதலைப் புலிகளின் கொடிக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்படவில்லை என்று அந்த அந்நாட்டு சட்ட வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். பிரிட்டனின் அதிகாரங்களுக்கு உட்பட்ட வேல்ஸ், ஸ்காட்லாண்ட் மற்றும் வட அயர்லாந்து என எந்த பகுதியிலும் தமிழர்களின் தேசியக் கொடிக்கு தடை ஏதும் இல்லை என்பதும் தேசியக் கொடி வைத்திருந்தால் கைதுசெய்து தண்டனைக்கு உட்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

    ஆனால் போராட்டங்களில் காவல்துறையும் ஆதரவு தரவேண்டுமானால் தேசியக் கொடியை அனைத்துவிதமான போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் முன்னிலைப்படுத்த வேண்டும். இதனை தமிழர் அமைப்புக்கள் முன்னெடுத்துச் செய்ய வேண்டும் என அந்தக் குழு யோசனை தெரிவித்துள்ளது. புலிகள் வேறு, மக்கள் வேறு. புலிக்கொடி தமிழர் கொடியல்ல. அது பிரிட்டனில் தடை செய்யப்பட்டுவிட்டது என தமிழர்கள் சிலரே தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்து வந்தனர்.

    இதனால் பிரிட்டனில் நடக்கும் போராட்டங்களில் புலிக்கொடியை காட்டுவதை தவிர்க்கத் தொடங்கினர். ஆனால் தடை செய்யப்பட்ட கொடியாக இருந்தால் அதனா பிபிசி உள்ளிட்ட ஊடகங்களில் அதைக் காட்டியிருக்க மாட்டார்கள். ஆனால் பிபிசி இந்தக் கொடியை தொலைக்காட்சிகளில் காட்டி வந்தது. எனவே இந்தக் கொடி பிரிட்டனில் தடை செய்யப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதனை விடுதலைப் புலிகள் தரப்பும் விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இலங்கை பொருட்களை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் சீமான்!

    ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததது மட்டுமின்றி, இன்றுவரை ஈழத் தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியத் தீர்மானத்தை தமிழக மக்கள் அனைவரும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

    ஈழத் தமிழினத்தின் நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் இத்தீர்மானம் ஒரு பெரும் திருப்புமுனையாகும். இதனை இந்திய அரசு நிறைவேற்றும் என்று நாம் காத்திருந்தால் இலவு காத்த கிளி கதையாக முடிந்துவிடும்.

    எனவே, இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை தமிழர்களையாகிய நாம் உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம்.


    1. இங்கு விற்பனைக்கு வந்திருக்கும் இலங்கை நாட்டின் பொருட்கள் எதுவாயினும் அவைகளைப் புறக்கணிப்போம்.

    2. இலங்கைக்கு இங்கிருந்து அனுப்பப்படும் பொருட்களை நிறுத்துமாறு தமிழ்நாட்டு வணிகர்களை வலியுறுத்துவோம்.


    3. இலங்கையில் கடந்த 2010ஆம் ஆண்டில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டபோது, அதில் இந்தியக் கலைஞர்கள் எவரும் கலந்துகொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுத்தோம். அந்த விழா தோல்வியில் முடிந்தது. அதேபோன்று, இப்போதும் இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் இலங்கையை முழுமையாகப் புறக்கணித்து தங்களுடைய மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்துமாறு கோருவோம்.


    4. ‘கலை, இலக்கியம் யாவும் மக்களுக்காகவே’ என்கிற முழுக்கத்துடன் எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்பட்டுவருபவர்கள் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள். இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை முன்னெடுக்கும் மானுடத்தின் தூதுவர்களாக அவர்களை முன்னுறுத்தி செயல்படுவோம். அவர்கள் இந்தியா முழுவதும் சென்று, கலைஞர்களையும், படைப்பாளிகளையும் சந்தித்து இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்வோம்.


    5. இதேபோல், இனவெறியை கடைபிடித்த தென் ஆப்ரிக்காவை எப்படி சர்வதேச சமூகம் தனிமைபடுத்தியதோ அதேபோல், தமிழினப் படுகொலை செய்த இலங்கையையும் பன்னாட்டுச் சமூகம் தனிமைபடுத்திட வேண்டும் என்ற முழக்கத்தை உலகளாவிய அளவில் நாம் முன்னெடுப்போம். குறிப்பாக இலங்கையின் கிரிக்கெட் அணி இதற்கு மேல் இந்தியாவில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று போராடுவோம். தமிழ்நாட்டு மண்ணில் அந்த அணிக்கு இடமில்லை என்பதை ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் காட்டுவோம்.


    6. இலங்கை அரசின் விமான போக்குவரத்தை மனிதாபிமானமுள்ள யாரும் பயன்படுத்தாதீர்கள் என்று விரிவான அளவில் அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி பரப்புரை செய்வோம்.



    7. இலங்கை இனப் படுகொலை செய்த குற்றவாளி என்பதை இந்தியா முழுவதும் கொண்டு செல்வோம்.


    8. இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை கொண்டுவருமாறு நாடாளுமன்றத்தில் தங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு மத்திய அரசை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்வோம்.



    9. தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கையிலுள்ள சிங்களக் கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்க்கின்றன. தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை தாங்கள் கண்டு கொள்ளப் போவதில்லை என்றும், தங்களைப் பொறுத்தவரை இந்திய அரசுடன் மட்டுமே உறவு கொண்டுள்ளதாகவும் திமிருடன் கூறியுள்ளார் இலங்கை அமைச்சக பேச்சாளர் கேகலிய ரம்புக்வாலா. இநதியா வேறு, தமிழ்நாடு வேறு என்று இலங்கை அமைச்சர் பேசுகிறார். நாம் புரியவைப்போம். தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தீர்மானத்திற்கு எந்த அளவிற்கு வலிமை உள்ளதென்பதை தமிழக மக்களாகிய நாம் உணர்த்துவோம். தமிழினத்தின் ஒன்றிணைந்த செயல்பாட்டிலேயே தமிழினத்தின் மீட்சி உள்ளது என்பதனை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான தனது அறிக்கையில்

    வேர்ல்ட் ரிகார்ட் பண்ண எப்படி எல்லாம் உக்காந்து யோசிகிறாங்க?






    இதுவரை 3100 ஆணிகள் துளை இட்டதே கின்னஸ்  சாதனையாக இருந்தது! லாஸ் வேகாசை சேர்ந்த சடய்ஷா  அதை உடைத்து புதிய உலக சாதனையாக 3200  ஆணி துளைகளை தாங்கினார்!

    Staysha Randall has attempted to break the world record of 3,100 piercings for a title of "Most Body Piercings in a Single Sitting."
    The piercings took place at Inktoxicated Tattoos in Las Vegas, Nevada. She initially wanted to go for 3,600 piercing, however, after she got 3,200 piercing she changed her mind and thought it was enough for her. The record is still awaiting verification by Guinness to be official  

    பார்வையாள சிறுவனுடன் விளையாடிய கடல் சிங்கம்!


    ஹவாய் தீவில் ஒரு எரிமலை குழம்பு


    வாத்துக்கு எஸ்கார்ட் பாருங்க! நம்ம ஊரா இருந்தா?


    அமெரிக்காவுல நாயா பொறக்கணும் - ம் !



    ஒரு திரில்லான பயணம் சிகாகோவில்


    டிஸ்னியில் புதிதாக சேர்க்கப்பட்ட "ஸ்டார் வார்ஸ் உலகம் டூர்"


    ஒரு கார் வாங்க என்னல்லாம் பார்க்கவேண்டி இருக்கு !

      

    இந்த சம்மருக்கு அமெரிக்காவுல எங்க போகலாம்?


    பஞ்சவர்ண கிளியபோல ஒரு பூ இனம் - அபூர்வம்!


    விமானத்துல ஏறிட்டு கடைசி நிமிஷம் புறப்பட்டுடேனு பேசுவோம்ல? அது ரொம்ப தப்புங்கலாம்!


    SUV ல எந்த காருக்கு பாதுகாப்பு அதிகம் ?


    தங்கத்தின் விலை 450 k US டாலர்


    இதெல்லாம் கூட ஷேர் பண்ண .... முடியல!


    டயானாவின் அழியாத காவிய கடிதங்கள் ( பொக்கிசம் )


    நாளொன்றுக்கு 50,000 வீடியோக்களை டோரென்ட்டிலேருந்து தரவிறக்கம் செய்யும் மக்கள் (திருட்டுத்தனமாக ) சி என் என் குற்றச்சாட்டு !

    50,000 BitTorrent users sued for alleged illegal downloads

    Get ready for round two. This time, it's BitTorrent users facing off against the movie studios.Nearly 50,000 users of BitTorrent's peer-to-peer downloading software have been targeted in a sting over the past few months, accused of illegally downloading one of two movies.
    Voltage Pictures, the studio behind 2009's The Hurt Locker, is suing almost 25,000 BitTorrent users who allegedly illegally downloaded the flick. That came just weeks after 23,000 were sued for downloading The Expendables, produced by Nu Image. Both of the lawsuits were filed in federal court in Washington, D.C., by the U.S. Copyright Group, an outfit formed by Washington-based law firm Dunlap, Grubb & Weaver. The group filed its Expendables lawsuit in February, then followed with its Hurt Locker lawsuit in April.


    "They're copyright trolls," says Corynne McSherry, intellectual property director at the Electronic Frontier Foundation, a digital rights organization. "They take a dragnet approach to litigation."
    The USCG did not respond to multiple calls asking for comment.
    A spokesman for Voltage Pictures, the Hurt Locker studio, defended the sweeping lawsuits. "The lawyers are just doing their jobs," he said. "Somebody stole our property and we are trying to get it back." The representative declined further comment.
    The new anti-piracy clampdown: Legal skirmishes over digital piracy happen constantly, and BitTorrent is often in the crosshairs.
    The free software program lets users swap and download large media files. It's got plenty of legitimate uses -- online Education pioneer Khan Academy recently made its free video catalog Available Through BitTorrent -- but is also heavily used to illegally trade movies, TV shows and other copyright-protected content.
    BitTorrent CEO Eric Klinker said that his company merely provides the software, and it can't control what its customers do.

    ISPs are complying and handing over the details, according to those tracking the case. "Time Warner Cable has fought the subpoenas, but most ISPs are coughing up about 100 to 150 IP identifications per month," said Eric Menhart, a Cyberlaw attorney who is representing about 50 defendants in the Hurt Locker case.
    A Time Warner Cable ( TWC,Fortune 500) spokesman confirmed that his company traditionally fights these kinds of legal requests. Representatives of Comcast, the nation's largest ISP, did not respond to a request for comment. The EFF's McSherry is troubled by the move to prosecute thousands of individuals as one linked class. USCG "isn't letting people who have legitimate defenses raise them," she said.
    Holding individuals accountable for illegal acts committed through IP addresses they're linked to is tricky. For example, should a parent be responsible for a child downloading a movie through the family's IP address? What about a landlord who supplies Internet to a tenant? Years after those issues first arose, courts are still grappling with them on a case-by-case basis, legal experts say. For those hit by the lawsuits, the costs of defending themselves can be daunting.
    Dozens of the "John Does" in the Locker case have complained to the court about the distance they'd be required to travel to appear in Washington. Others say multiple computers were linked to their IP address.So far, the court has thrown out the Does' moves to quash subpoenas sent to their ISPs seeking their personally identifiable information.
    Threatened into settling? USCG launched in early 2010 and has filed a stack of digital piracy cases, typically going after a few thousand defendants at a time. Many choose to settle out of court.
    McSherry and other critics have attacked the USCG for what they say is a "pay up or we'll getcha" method -- that is, pay a relatively small fee to settle or face tens of thousands of dollars in legal fees and potential penalties.
    BitTorrent user Dmitriy Shirokov filed a lawsuit last year making the case that the firm has made a business out of threatening people. The suit alleged that USCG exploited copyright law -- and that its goal was to frighten people into paying up a small settlement of $1,500 to $2,500 rather than face litigation.
    The case is currently pending in U.S. District Court in Washington.
    Booth Sweet attorney Dan Booth, who filed that suit, said that USCG hasn't responded to the claims, and has moved to have the case dismissed. It also asked the court to sanction Booth Sweet,  a Massachusetts-based law firm, for taking the case.
    Menhart said he's seen "an uptick in this style of litigation" over the past two years. The small sums at stake can add up fast. As Torrent freak, the first blog to report on the Locker case, points out: If only 10,000 of the alleged infringers pay a $2,000 settlement, it would net $20 million for Voltage and USCG. In comparison, The Hurt Locker grossed $17 million at the U.S. box office.
    Menhart hopes mass dragnets like this one will draw attention to a legal issue that's faded into the shadows in the years since Napster collapsed. Nearly everyone agrees illegal downloading is wrong. But how draconian should the punishment be?
    "I think there will be a call from people asking, do we really want Grandma to pay $2,000 to settle over a movie her grandson downloaded?" Menhart said. "There's just something about it that doesn't feel right."

    பசங்களிடம் கலக்கும் 5 புதிய வீடியோகேம்


    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...