|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 December, 2013

வயதுக்கு மீறிய நட்பு, கண் மண் தெரியாத துணிச்சல்,அரை வேக்காட்டுத்தமான நட்புகள்.

10 பேர் கொண்ட இரண்டு கும்பல்களால் அடுத்தடுத்து ஒரு 20 வயது இளம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியை பலாத்காரம் செய்யப்பட்ட செயல் காரைக்காலை அதிரவைத்துள்ளது. முதலில் 3 பேர் கொண்ட கும்பலால் அவர் கடத்தப்பட்டார். அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் அப்பெண்ணை பலாத்காரம் செய்தான். பின்னர் அக்கும்பல் பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டது. இந்த நிலையில் 7 பேர் கொண்ட இன்னொரு கும்பல்வந்து அப்பெண்ணைக் கடத்திக் கொண்டு போனது. அந்த 7 பேரும் சேர்ந்து அப்பெண்ணை மறைவிடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுஞ்செயல் குறித்துப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விரைந்து வந்து பெண்ணை மீட்டனர். தற்போது பத்து அயோக்கியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டபெண் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தோழி ஒருவரும் டிசம்பர் 24ம் தேதி இரவு காரைக்காலுக்கு வந்துள்ளனர். தோழி தனது காதலரைப் பார்க்க வந்துள்ளார். அவருக்குத் துணையாக பாதிக்கப்பட்ட பெண் வந்துள்ளார். தோழியின் காதலனுக்கு 17 வயதுதான். இந்தப் பையன், தனது காதலி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சைட் சீயிங் போயுள்ளான். போன இடத்தில் தோழிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாம். இதையடுத்து அவரும் அவரது காதலனும் அருகில் உள்ள ஒரு நண்பரின் வீ்ட்டுக்குப் போய் வருவதாக கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதைப் பார்த்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திக் கொண்டு போனது. பின்னர் அதில் ஒருவன் மட்டும் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். 
பின்னர் அப்பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டனர். அதிர்ச்சியில் உறைந்தஅப்பெண், தனது தோழியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் அவரைக் கண்டுபிடித்தார். பின்னர் 3 பேரும் பாதுகாப்பான இடத்துக்குப் போயுள்ளனர். அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல்வந்துள்ளது அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அவரது தோழி மற்றும் காதலனை மட்டும் அடித்துப் போட்டு விட்டு விட்டனராம். பின்னர் கடத்தப்பட்ட பெண்ணை 7பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். அடித்து விரட்டப்பட்ட தோழியும் அவரது காதலனும் உள்ளூர் நண்பர்களின் உதவியை நாடியுள்ளனர். அனைவரும் சேர்ந்து அக்கும்பலைத் தேடிக் கண்டுபிடித்துள்ள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்குள் பெரும் மோதல் வெடித்தது. இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீஸுக்குத்தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த பலாத்காரக் கும்பல் தப்பி ஓடியது. அவர்களில் 3 பேர் சிக்கினர். பின்னர் அவர்கள் மூலம் கிடைத்ததகவலை வைத்து மீதமிருந்த 7 பேரையும் போலீஸார் பிடித்தனர். இன்னும் சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடும் செயலில் மொத்தம் 13 பேருக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.அதில் 3 பேர் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களாம். வயதுக்கு மீறிய நட்பு, கண் மண் தெரியாத துணிச்சல்,அரை வேக்காட்டுத்தமான நட்புகள்.. இப்படிப்பட்ட சீரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்.

23 December, 2013

சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன...

டிசம்பர்; 23 கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர் மறைந்த தினம். தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தைதான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி,சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது. பள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய் உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார். பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர். 1932லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.

வைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார். ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார். 1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்,சட்ட சபை உறுப்பினர்,அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர், காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர்  அமைச்சரவையில் பொறுப்பேற்று கொண்ட துறைகள் என்னென்ன தெரியுமா ? அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி. உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியன !

அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார். அவரின் தம்பி விசுவநாதன்  வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர். அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள். இப்படி ஒரு இடம் தேவையா ?" எனக்கேட்டார். விசுவநாதனுக்கு காவல் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால்தான் கிடைத்தது என்பார்கள் ! இந்த வேலைக்கு இவன் வேண்டாம் “ என்று தடுத்துவிட்டார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்,லஞ்ச ஒழிப்பு துறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே ! கலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார்.

அரசு விடுதியில் தங்கபோனார் கக்கன். அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார். ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார். அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார். தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார். சொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ?” என்று கேட்டார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார். சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் நினைவு தினமின்று.

17 December, 2013

ஆணின் பரிணாம வளர்ச்சி ...


பதினைந்து நாள்னு நான்தான் சொல்லுவேன்...


சீக்கிரம் நடவடிக்கைன்னு மட்டும் நீங்க கேட்டுக்கிட்ட போதும்,'பதினைந்து நாள்ல' நடவடிக்கை எடுங்கன்னு நீங்கல்லாம் சொல்லக்கூடாது,அத நான்தான் சொல்லுவேன்.ஏன்னா பதினைந்து நாள் எனக்குதான் சொந்தம்.

11 December, 2013

மகாகவி பாரதி...

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்! சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்! எட்டயபுரம், பிறந்த ஊர். சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர். மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்! சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பாலபாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!
எட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17 ரூபாய் மாதச் சம்பளம். இன்றும் அந்தப் பள்ளி, ‘பாரதியார் பணியாற்றிய பெருமையுடைத்து!’ ஏழு வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள். பாரதி என்றால் சரஸ்வதி. இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்! 14 அரை வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண் டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்! காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப் புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!
முதன்முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்தியவரும் பாரதியே. ‘சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை! பாரதிக்கு பத்திரிகை குரு ‘தி இந்து’ ஜி.சுப்பிரமணிய ஐயர். அரசியல் ஆசான், திலகர். ஆன்மிக வழிகாட்டி, அரவிந்தர். பெண்ணியம் போதித்தவர், நிவேதிதா தேவி! தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும், ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. ‘ஸ்வதேச கீதங்கள்’ இவரது முதல் புத்தகம்! மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்!
பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்றவைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து ‘பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்! அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார். ‘என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர்! லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்! 
கனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிவித்தார். பாரதி பூணூல் அணிய மாட்டார். ‘பூணூலை எடுத்துவிட்டவர்’ என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது! கறுப்பு கோட், தலைப்பாகைதான் அவரது அடையாளம். வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை. ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்! "மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்" என்று இவர் சொன்னபோது, "கூட்டத்தை மறுநாளுக்கு மாற்ற முடியுமா?" என்று கேட்டார் காந்தி. "அது முடியாது. ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி" என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந் தார் காந்தி. "இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!
தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்ட மிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை! எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலை யில் அழைத்துச் செல்வார். ‘பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், ‘நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை’ பாட்டு! தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும். போலீஸ் விசாரணையின்போது, ‘நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?’ என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி! தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், ‘செந்தமிழ் நாடெனும்போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!
விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது. தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந் தார் பாரதி! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க… அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் ‘கோயில் யானை’ என்ற கட்டுரையைக் கொடுத்தார்! ‘ஆப்கன் மன்னன் அமானுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20-க்கும் குறைவானவர்களே.

06 December, 2013

நிஜம்மாவே நடக்கும் பாஸ்!



 சில நாட்களுக்கு முன்னால, டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கானு கேட்டாங்க. இப்ப என்னடான்னா எலுமிச்சையும், உப்பும் இருக்கான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இது இப்படியே போயிட்டிருந்தா, இன்னும் பத்து வருசத்துக்கு அப்புறம் விளம்பரங்கள் எப்படி இருக்கும்னு ஒரு முன்னோட்டம். பாப்போமா...

டூத்பேஸ்ட் விளம்பரங்களின் அடுத்த கட்டம் :

'' உங்க பல்லுல 4,48,937 கிருமி இருக்குனு எங்க கம்ப்யூட்டர் சொல்லுது. நீங்க சரியாவே பிரஸ் பண்ணுறது இல்லை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து தடவையாவது எங்க டூத்பேஸ்ட் யூஸ் பண்ணினாதான் உங்க பல்லு பளபளப்பா இருக்கும். இதனால கரன்ட் போயிட்டாக்கூட உங்க பல்லுல இருந்துவர்ற வெளிச்சத்தை வெச்சே ஊரையே ஒளி வெள்ளத்துல மிதக்கவிட முடியும். அது எங்க டூத்பேஸ்ட்ல உப்பு, எலுமிச்சை, மிளகாய்ப்பொடி, மசாலாப்பொடி, அரிசிப்பொடி, கோலப்பொடினு எல்லாமே சேர்த்திருக்கோம். நீங்க இதை டூத்பேஸ்ட்டாவும் பயன்படுத்தலாம். அப்படியே சமைக்கிறதுக்கும் பயன்படுத்தலாம். உங்களுக்குப் பல்லே இல்லைன்னாக்கூட எங்க டூத்பேஸ்ட் வாங்கி ஒரு வாரம் ஈறுகள்ல தேச்சுட்டே இருந்தா, அடுத்த ஒரே வாரத்துக்குள்ள 32 பல்லும் முளைச்சுடும். சாதாரண டூத்பேஸ்ட் உபயோகிச்சீங்கன்னா, அது வெறும் கத்தி வெச்சுத்தான் கிருமிகளைக் கொல்லும். ஆனா எங்க டூத்பேஸ்ட்டுக்குத் துப்பாக்கி, அணுகுண்டுனு இப்படி ஏகப்பட்ட வித்தைகள் தெரியும். இதை வெச்சுக் கிருமிகளை அடிச்சு தொம்சம் பண்ணிடும். அதனால ஒழுங்கு மரியாதையா எங்க டூத்பேஸ்ட்டை வாங்கிடுங்க. இல்லைனா உங்க பல்லுல இன்னும் அதிகக் கிருமிகளை எங்க கம்ப்யூட்டர் மூலமா ஏத்திவிட்ருவோம்.'

ஷாம்பூ விளம்பரங்களின் அடுத்த கட்டம்: 

'உங்களுக்கு தலையில முடி இருக்குதா? அப்படி இருந்தா, எங்க ஷாம்பூ வாங்கிப் போடுங்க. இது தலையில இருக்கிற முடிகளை அப்படியே ஜெராக்ஸ் எடுக்கும் திறமையோட தயாரிக்கப்பட்டது. இதன் மூலமா உங்க தலையில ஒரே ஒரு முடி இருந்தாக் கூட அதை எங்க ஷாம்பூ ஒரு கோடியா மாத்திடும். மேலும் உங்களுக்கு என்ன கலர்ல முடி வேணும்னு எங்க ஷாம்பூ கம்பெனிக்கு எழுதிப் போட்டீங்கன்னா, அதுவே ஆட்டோமேட்டிக்கா உங்க முடியோட கலரை மாத்திடும். எங்க ஷாம்பூ பயன்படுத்துறவங்களோட தலைமுடியை வெச்சுத்தான் இப்போ நிலாவுக்கும் பூமிக்கும் இடையில கயிற்றுப் பாலம் தயாரிச்சுட்டிருக்காங்க. அந்த அளவு ரொம்ப நீளமான தலைமுடி வேணும்னா, எங்க ஷாம்பூ மட்டும் பயன்படுத்துங்க. அதோட இது உங்க தலையில இருக்கிற பொடுகு மட்டுமில்லாம, உங்க ஊர்ல இருக்கிற எல்லோர் தலையில இருக்கிற பொடுகையும் சுத்தமா ஒழிச்சுடும். ஒரே ஒரு தடவையாச்சும் வாங்கி யூஸ் பன்னுங்க 

சோப்பு விளம்பரங்களின் அடுத்த கட்டம்

எங்க சோப்புல உலகத்துல இருக்கிற 3,00,00,000 கோடி வகையான மூலிகைகள் இருக்கு. அமேசான் காடுகளில் இருக்கிற அற்புத மூலிகைகளில் இருந்து அனகோண்டா மலையில இருக்கிற பாம்பு மாத்திரை வரைக்கும் இருக்கு. அதனால உங்களுக்கு எந்த விதமான நோய்களும் வரவே வராது. உலகத்துல மொத்தமா 8,000 வகையான ஸ்கின் பிராப்ளங்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த எட்டாயிரம் வகையான ஸ்கின் பிராப்ளங்களுக்கும் ஒரே சொல்யூஷன் எங்க சோப்பு மட்டும்தான். எங்க சோப்பு மாதிரி நறுமணம் வீசுற சோப்பை இதுவரைக்கும் யாரும் உருவாக்கினதே இல்லை. உருவாக்கவும் முடியாது. எங்க சோப்பைப் போட்டுட்டுத் தெருவுல நடந்து போனீங்கன்னா, அந்த மணத்துல மயங்கி கரன்ட் கம்பம், தந்திக் கம்பம், வீடு, சேர், டிவி, சோபா, கட்டில், மெத்தை... ஏன் வானத்துல சுத்திட்டிருக்கிற செயற்கைக்கோள்கூட உங்க பின்னாடியே வரும். எங்க சோப்பைப் போட்டதுக்கு அப்புறமா நீங்க ஏடிஎம் சென்டருக்குப் போனா, ஏடிஎம் மெஷின் கூட மெய் மறந்து உங்க பின்னாடியே வந்துடும். எங்க சோப்பைப் போட்டதுக்கு அப்புறமா வேற சோப்பைப் போட முயற்சி பண்ணினா, உங்களுக்கு சொறி, சிரங்குனு பத்து லட்சம் வகையான சரும நோய்களும் வர்ற மாதிரி எங்க சோப்பு சாபம் விட்ரும். அதனால எங்க சோப்பைப் பகைச்சுக்காதீங்க.'

04 December, 2013

மனிதனால் முடியாதது எதுவுமில்லை!

சைக்கிளை நேராக ஓட்டுவதே பலருக்கு தகராறு. ஆனால், பல கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சரிவான மலைப்பாதையில் சைக்கிளில் பின்புறமாக அமர்ந்து கொண்டு 80 கிமீ வேகத்தில் ஓட்டி அசத்துகிறார் நார்வே நாட்டை சேர்ந்த எஸ்கில் ரோனிங்ஸ்பேக்கன். நார்வே நாட்டிலுள்ள பிரபலமான ட்ரோல்ஸ்டிகன் மலைப்பாதையில் 4.5 கிமீ நீளம் தூரத்துக்கு அவர் சைக்கிளில் பின்புறம் பார்த்து அமர்ந்து கொண்டு சீறுகிறார். எதிர்திசையில் வாகனங்கள் ஒருபுறம் சென்றுகொண்டிருந்தாலும் மிக லாவகமாக சைக்கிளை அவர் ஓட்டும் காட்சி திறமையின் உச்சம். இதற்குமேல் தகவல் தேவையில்லை என்று நினைக்கிறேன். நேராக வீடியோவை போட்டு பார்த்துவிடுங்கள். முயற்சித்தால் மனிதனால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணர்த்தி நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் இந்த நிகழ்வை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

25 November, 2013

டயர் வாங்கும்போது...

உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது. அடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது. அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும். உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.
 
(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது. டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும். டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்: M- 130 Kmph P-150 Kmph Q-160 Kmph R-170 Kmph S-180 Kmph T - 190 Kmph H - 210 Kmph V - 240 Kmph W - 270 Kmph Y - 300 Kmph ZR - over 240 Kmph

மனிதாபிமானத்தையும் சேர்த்து காக்க முன் வாருங்கள்.

சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, மறந்துபோன மனிதாபிமானமும் ஒரு காரணமாகியுள்ளது. புற்றீசல் போல பெருகி வரும் வாகனங்களுக்கு தக்கவாறு விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்து செய்தி இல்லாத நாளிதழ்களே என்று கூறும் அளவுக்கு மோசமான நிலை உருவாகியுள்ளது. ADVERTISEMENT சாலை விபத்தில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பாதிப்படைவர்களை உரிய நேரத்தில் உதவி கிடைக்காததும் முக்கிய காரணம். துடிதுடிப்பவர்களை ஒரு சில நொடிகள் நின்று வேடிக்கை பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்லும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. இதுவே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது. விபத்துக்கள் எதிர்பார்த்து நடப்பது இல்லை. எனவே, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து விபத்தில், பாதிக்கப்படுவர்களுக்கு அலட்சியம் காட்டாமல் உதவி செய்யுங்கள். 
 
 பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தவுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல உதவுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதும் அவசியம். உரிய நேரத்தில் நீங்கள் செய்யும் உதவி ஒரு உயிரை காப்பாற்றப் போகிறது என்பதை மனதில் வைத்து யோசிக்காமல் களத்தில் இறங்குங்கள். மேலும், அவசர வேலை, முக்கிய வேலை என்று யோசிக்காதீர். ஒரு உயிரை காப்பாற்றுவதை விட இந்த உலகில் வேறு அவசர வேலை எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என்று அலைய வேண்டியிருக்கும் என்று அச்சப்பட வேண்டாம். தற்போது விபத்தில் சிக்குபவர்களை மருத்துவமனையில் உடனே அனுமதிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் உதவி செய்ய முன்வரும்போது அடுத்தவர் யோசிக்காமல் முன் வருவார். எனவே, விபத்தில் சிக்கி துடிதுடிப்பவர்களின் உயிரை மட்டுமல்ல, மறந்துபோன மனிதாபிமானத்தையும் சேர்த்து காக்க முன் வாருங்கள்.

22 November, 2013

ஓட்டுப்போட்டுருவேன்..


'முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக; முற்றத்தோடு முடிந்தது அதிமுக'

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவரை தமிழக அரசு கட்டித்தரக் கோரி சென்னை ஜெமினி மேம்பாலத்தை மறித்து மாணவர்கள் பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர். 'முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக; முற்றத்தோடு முடிந்தது அதிமுக' தஞ்சாவூரில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பகுதியை தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில் "முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக; முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடிந்தது அதிமுக" என எழுதப்பட்டிருந்தது.

20 November, 2013

786 மற்றும் ஓம்

அதிர்ச்சி தரும் சில விஷயங்கள்.....

அரிதிலும் அரிதாக தேடலில் கிடைத்த சில செய்திகள்..... நம்ப முடியவில்லை.... ஆனால் நம்பாமல் இருக்க போதிய ஆதாரம் இல்லை.இது யாருடைய மனதைடும் புண்படுத்தவோ ஒப்பு நோக்கவோ நான் பெரியவன், நீ சிறியவன் என எண்ணியோ, என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்று எண்ணியோ இடப்பட்டதல்ல. சர்ச்சைக்குரிய விஷயம் ஆதலால், இதை நம்புவதும் நம்பாததும் அவரவரிடமே விட்டு விடுகிறேன்.

அதிர்ச்சி எண் 1

இஸ்லாமியர்களின் புனித எண் 786 என்பது பிரம்மி எழுத்துக்களில் ஓம் என்பதையே குறிக்கிறது.

அதிர்ச்சி எண் 2

காபா எனும் புனிதக் கல் இந்துக்களின் சாளக்கிராமம் எனும் புனித வகையைச் சேர்ந்தது.

அதிர்ச்சி எண் 3

இஸ்லாமியர்களின் தொழுகை சம்ஸ்கிருத வேதத்தில் சொல்லப் பட்ட தொழுகை முறையை ஒத்து இருக்கிறது.

அதிர்ச்சி எண் 4

புனிததலத்தில் இறை வழிபாடு செய்யும் முறை இந்துக்களைப் போன்றே பூணுல் வடிவில் இட்ட மேல் துணியும், பின்னர தலை முடி காணிக்கையும் ஒன்றாகவவே உள்ளது. மேற்கூறிய அனைத்தையும் வலைத்தளங்களில் நிறைய விளக்கங்களுடன் பலர் எழுதி இருக்கிறார்கள். படித்துப் பார்த்த எனக்கு தலை சுற்றுகிறது. இதில் உண்மை உள்ளதா இல்லையா என மத குருமார்கள் மட்டுமே விளக்க முடியும்...

Bangalore - Attack on women inside ATM


18 November, 2013

பார்த்ததில் பிடித்தது

 

மரபைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை

ந்தக் கூட்டணியும் ரொம்ப நாள் நீடிப்பதில்லை. உண்மைதான்! எலும்பு, நரம்பு, சதை... இப்படி உதிரிக் கட்சிகள் 'உயிர்’ என்கிற தனிக் கட்சியுடன் வைத்திருக்கும் கூட்டணிதான் நாம். நாம் எவ்வளவு நாள் நீடிக்க முடியும்?உடம்பையும் உயிரையும் பிரித்து, இந்தக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க, 'மரணம்’ என்கிற எதிர்க்கட்சி தவியாகத் தவிக்கிறது. எப்படியும் ஜெயிக்கிறது! ஆனால், மரணம் ஜெயிக்கிற வரை, உடம்பு ப்ளஸ் உயிர் கூட்டணி ஆட்சி நடக்கத்தான் செய்கிறது! இந்தக் கூட்டணி ஆட்சிக்கு - அதாவது, மனிதனுக்கு ஏதாவது ஒரு பேர் வைக்க வேண்டியுள்ளது!

ராமசாமி, கிருஷ்ணசாமி, பிரமிளா, ஜானகி... இப்படி ஏதாவது பெயர் வைத்தாக வேண்டி உள்ளது. பெயர் வைக்காமல், காருக்கு நம்பர் பிளேட் போடுகிற மாதிரி மனித ஜென்மங்களுக்கு நம்பர் போட முடியாது! இந்துக்கள் கெட்டிக்காரர்கள். பரப்பிரம்மமாகிய கடவுள்தான், இப்படி மனித வடிவத்தில் பிறந்து, வாழ்க்கை நாடகம் நடத்துகிறார் என்று முடிவு கட்டி, 'பரம்பொருளுக்குப் பெயர் வைக்கிறோம்’ என்ற எண்ணத்தில், இறைவன் நாமாக்களையே பெயர்களாக வைத்தனர். விஷ்ணு சகஸ்ரநாமத்திலும் லலிதா சகஸ்ரநாமத்திலும் உள்ள பெயர்களைச் சூட்டும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு. பகவானின் நாமத்தை உச்சரிக்க, இதுவும் ஒரு வாய்ப்பு என்ற எண்ணத்தால் செய்தவர்கள் சிலர். 'மனிதன் பரப்பிரம்மத்தின் துளி’ என்று உணர்ந்து செய்தவர்கள் சிலர்.

இப்போதெல்லாம் கதை மாறிவிட்டது! 'பப்லு, ஷம்மி’ என்று நாகரிகமாக நாய்க்குட்டிகள் மாதிரி பெயர் வைத்தால்தான் பலருக்குப் பிடிக்கிறது.முன்பெல்லாம் ஒருவர் பெயர் சொன்னால், உடனே நட்சத்திரம் சொல்லிவிடலாம். சு, சே, சோ - என்கிற எழுத்துக்களில் பெயர் ஆரம்பமானால் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருப்பார். அ, இ, உ, எ - என்றால் கிருத்திகை. தி, து, தெ, தொ - என்றால் விசாகம் என்று ஒரு பட்டியல் உண்டு.
முன்பு பல குழந்தைகள் பெற்றதால், எல்லா தாத்தா, பாட்டி பெயர்களையும் வைக்க வசதியாக இருந்தது. இப்போது ஒன்றிரண்டு என்பதால், எந்த தாத்தா, பாட்டி பேர் என்பது முதல் பிரச்னை! தாத்தா, பாட்டி பேர் வைத்தால், ஏன்  வைத்தாய் என்று குழந்தைகள் வளர்ந்ததும் படுபிரச்னை.

ஆண் குழந்தைக்கு 'சிவசாமி’ என்று தன் அப்பா பேர் வைக்க, தகப்பனார் ஆசைப்பட்டார். 'கிருஷ்ணசாமி’ என்ற தன் அப்பா பேர் சூட்ட, மனைவி ஆசைப்பட்டார். ஆசை, சண்டை வரை போனது. எதிர்வீட்டுக்காரர் உள்ளே வந்தார். பிரச்னைக்குத் தீர்வு சொன்னார். 'சிவராமகிருஷ்ணன் என்று பேர் வைத்தால் சிவசாமி, கிருஷ்ணசாமி இரண்டு சாமியும் வந்துவிடுவார்கள்!’ என்றார். ஒரே சந்தோஷம்! ஒரு வாரம் கழித்து கணவன் - மனைவி பேசிக்கொண்டிருந்தபோது, 'சிவராமகிருஷ்ணன்’ என்ற பேரைப்பற்றி ஆராயத் தொடங்கினார்கள்.

''சிவசாமி எங்க அப்பா. கிருஷ்ணசாமி உங்க அப்பா. நடுவுல ராமசாமி வந்துட்டாரே? அவரு...'' என்று கணவர் இழுத்தார்.''அதுவா... ராமசாமி, எங்க அப்பா!'' என்று எதிர் வீட்டுக்காரர் உள்ளே வந்தார்.ஒரு குழந்தைக்கு யார் பேர் வைக்கலாம்? அப்பா-அம்மா பேர் வைக்கலாம். அல்லது அப்பா-அம்மாவைப் பெற்ற அவர்கள் அப்பா-அம்மா பேர் வைக்கலாம். அல்லது அவர்கள் ஸ்தானத்தில் இருக்கிற மாமா, பெரியப்பா, சித்தப்பா பெயர் சூட்டலாம். கண்டவனும் பெயர் வைக்கலாமோ?

பெற்றவர்களைத் தவிர வேறு யார் பேர் வைக்கலாம் என்றால், அவர்களின் குரு, குலகுரு, ஆச்சார்யர்களுக்கு இந்த உரிமை உண்டு.உயிர் அல்லது ஆன்மாவை நமக்குப் புரிய வைப்பவர் குரு, ஆச்சார்யர். 'உயிர் இறைவனே’ என்று உணர்த்தி, முக்திக்கு வழிகாட்டும் குரு, இந்தக் கூட்டணிக்குப் பெயர் வைக்கத் தகுதி உடையவர்.உடம்பு ப்ளஸ் உயிர் சேர்ந்த கூட்டணிக்கு, உடம்புக்கு உரிமை உடைய பெற்றோர் அல்லது உயிருக்கு உடைமை உடைய குரு... இவர்கள்தான் பெயர் வைக்கலாமே ஒழிய, தெருவில் போகிற, வருகிறவர் எல்லாம் பெயர் வைப்பது நல்ல கலாசாரமாகத் தோன்றவில்லை.
ராமாயணத்தில் ராமனுக்குப் பேர் வைத்தவர் யார் தெரியுமோ? வசிஷ்டர். பரதன், லட்சுமணன், சத்ருக்னன் என்று தசரதன் பிள்ளைகளுக்குக் குலகுரு வசிஷ்டர்தான் பேர் வைத்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது? அரசியல் தலைவனுக்குக்கூட குருதான் பேர் வைக்க வேண்டும் என்று தெரியவில்லையா?

இராமன் எனப் பெயர் ஈந்தான்...
பரதன் என்று பன்னினான்...
இலக்குவன் என்று இசைத்தனன்...
சத்ருகனன் என்று சாற்றினான்...
என்கிறது கம்ப ராமாயணம்.

நான்கு வேதம் மாதிரி பிறந்த நான்கு அரச குடும்பத்துத் தலைவர்களுக்கும் நான்மறை பயின்ற குலகுரு வசிஷ்டர் பேர் வைத்தார். அதனால்தான், இன்றுவரை அந்தப் பெயர்கள் நிலைத்து நின்றுள்ளன.ஞானம், தவம், சீலம், நிறைநலம் மிக்க குருமார்கள், பிறந்த சிசுக்களைத் தீண்டி, செவிவழி உரக்கச் சொல்லி, உடம்பும் உயிரும் சேர்ந்த கூட்டணிக்குப் பெயர் வைக்கும் பாரத மரபைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.


Summa News


14 November, 2013

சக்கர இனிக்கிற சக்கர

நவம்பர் 14, 2013 உலக நீரிழிவு நாள்

நீரிழிவு நோய் -  21-ம் நூற்றாண்டின் மனித இனத்துக்கே சவால் விடும் ஒரு சுகாதாரம் மற்றும் சமூகவியல் சார்ந்த பிரச்னையாக உருவெடுத்துள்ளது.கடந்த 1922-ம் ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து நீரிழிவு நோயாளிகளின் உயிர் காக்கும் இன்சுலினைக் கண்டுபிடித்தார். பொதுமக்களிடையே நீரிழிவைப் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பன்னாட்டு நீரிழிவு நோய் கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க்கின் பிறந்தநாளை உலக நீரிழிவு தினமாக அறிவித்தது.

ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் மற்றும்  சார்லஸ் பெஸ்ட் அதன்படி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் நாள் 'உலக நீரிழிவு தினமாக' அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, தற்போது உலக அளவில் 346 மில்லியன் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் நீரிழிவின் பாதிப்பு மிக அதிகம். எவ்வளவு தெரியுமா? 62.4 மில்லியன்.மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் 77.2 மில்லியன் பேருக்கு நீரிழிவு பிரச்னை வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாம்.

இந்தியாவின் ரன் மெஷின்!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கிரிக்கெட், ஒரே ஒருவரால்தான் அதிகம் நேசிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒருவர்... சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இவரின் கிரிக்கெட் சகாப்தம் இதோ முடிவுக்கு வருகிறது!மும்பை, வான்கடே மைதானத்தில் தனது 200-வது டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிவிட்டு, கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு எடுக்கவிருக்கிறார் சச்சின். இனி இந்தியக் கிரிக்கெட்டை, சச்சினுக்கு முன் - சச்சினுக்குப் பின் என்றே குறிப்பிடலாம்.

05 November, 2013

படம் பார்க்க வந்தவங்கள பழி வாங்குது


நண்பன் ஒருத்தன் திபாவளிக்கு வந்த 3 படமும் பார்த்துட்டான் 3 படத்துக்கும் ஒரு வரில ஒரு விமர்சனம் சொன்னான்.நண்பன கொன்னவன பழிவாங்குறது ஆரம்பம். அண்ணன்ன கொன்னவன பழிவாங்குறது பாண்டியநாடு,  படம் பார்க்க வந்தவங்கள பழிவாங்குவது  இந்த ஆல் இன் ஆல்அழகுராஜா  படம்.

31 October, 2013

முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது(1931)


இந்திய விடுதலை போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் (1875)


பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு...


இந்தியாவை சேர்ந்த எழுத்தாளரான ஷாலு ஷர்மா  என்பவர் சமீபத்தில் 'இந்தியாவில் பயணிக்க அவசியமான ஹிந்தி வார்த்தைகள்' ("Essential Words and Phrases for Travellers to India") என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் அடிக்கடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயன்தரும் விதத்தில் அமைந்திருக்கிறது. நீங்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக இருக்கலாம், ஆனால் அது இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் செல்லுபடியாகாது. உதாரணமாக நீங்கள் மும்பை செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் அங்கு டேக்ஸி டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பொன்றவர்களிடம் ஹிந்தியில்தான் பேச முடியும். அப்படி உங்களுக்கு ஹிந்தி தெரியாதபட்சத்தில் அவர்களுடன் சரியாக தொடர்புகொள்ள முடியாது என்பதோடு உங்களை அவர்கள் ஏமாற்றவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே பயணிக்க தேவையான அடிப்படை ஹிந்தி வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் போன்றவற்றை அறிந்துவைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹிந்தி மொழி பேசப்படுவதோடு 60% இந்திய மக்கள் ஹிந்தி பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதிலும் டெல்லி, உத்தர பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், ராஜாதான் உள்ளிட்ட மாநிலங்களில் ஹிந்தி பிரதான மொழியாக இருந்து வருகிறது.

வணக்கம் - நமஸ்தே அல்லது பிரனாம் 
வணக்கம் கான் - நமஸ்தே கான் ஜி 
நான் - மே 
நான் சென்னையை சேர்ந்தவன் - மே சென்னை சே ஹும் 
என்னுடையது - மேரா 
இது என்னுடையது - யே மேரா ஹே 
உங்களுடையது - ஆப்கா 
இது உங்களுடையதா? - கியா யே ஆப்கா ஹே? 
யார் - கௌன் 
நீங்கள் யார்? - ஆப் கௌன் ஹே? 
ஆடைகள் - கப்டா 
என் ஆடைகள் எங்கே? - மேரா கப்டா கஹா ஹே?
தேனீர் - சாய் 
எனக்கு ஒரு கப் தேனீர் வேண்டும் - முஜ்ஜே ஏக் கப் சாய் சாஹியே நீர் - பாணி 
எனக்கு ஒரு பாட்டில் தண்ணீர் வேண்டும் - முஜ்ஜே ஏக் பாட்டில் பாணி சாஹியே 
உணவு - கானா
 உணவு தாருங்கள் - முஜ்ஜே கானா தோ 
நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? - கியா ஆப் இங்கிலீஷ் போல்தே ஹே? மெதுவாக பேசுங்கள் - தீரே போலியே எப்படி இருக்கிறீர்கள்? - ஆப் கைசே ஹே நான் நலம் - மே டீக் ஹூம் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி - ஆப் சே மில்கர் குஷி ஹூய்
உங்கள் பெயர் என்ன? - ஆப் கா நாம் கியா ஹே 
என் பெயர் வசந்த் - மேரா நாம் வசந்த் ஹே 
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? - ஆப் கஹா சே ஹே
ரயில் நிலையம் எங்கே இருக்கிறது? - ரயில்வே ஸ்டேஷன் கஹா ஹே பேருந்து நிலையம் எங்கே இருக்கிறது? - ஸ்டாண்ட் கஹா ஹே 
நீங்கள் எனக்கொரு உதவி செய்ய முடியுமா? - கியா ஆப் மேரி மதத் கரேங்கே 
இது என்ன? - யே கியா ஹே?
நான் இதை வாங்க விரும்பிகிறேன் - முஜே யே கரித்னா ஹே 
இது எவ்வளவு? - யே கித்னே கா ஹே? 
விலையை குறையுங்கள் (பேரம் பசுவது) - தாம் கம் கீஜியே ஆம் - ஹா இல்லை - நஹி 
தயவு செய்து - க்ருப்யா 
நன்றி - தன்யவாத் ஷாலு ஷர்மா எழுதியுள்ள இந்த 60 பக்க புத்தகம் ஹிந்தி மொழிக்கு ஒரு அறிமுகம் 

24 October, 2013

நாட்டின் நன்மைக்காக அமையும் அணியை வரவேற்பேன்: கருணாநிதி


ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம் நினைவுக்கு வரல?

தங்க டாய்லெட் பேப்பர்

பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட உயர் வர்க்கத்தினருக்காக, 22 கேரட் தங்கத்தினால் ஆன விலை உயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம்.

‘டாய்லெட் பேப்பர் மேன்’ என்ற அந்த நிறுவனம், இயற்கைக்கு மாறான இந்த புதிய தயாரிப்பினை 22 கேரட் தங்கத்தினால் செய்துள்ளது. இது 100 சதவீதம் பயன்படுத்தக்கூடியது என்றும், பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுவரை ஒரே ஒரு தங்க பேப்பர் ரோல் மட்டுமே தயாரித்துள்ளது. இதன் விலை 13 லட்சத்து 76 ஆயிரத்து 900 மில்லியன் டாலர் ஆகும். ஆர்டர் செய்தால், தங்க டாய்லெட் பேப்பர் ரோலுடன், இலவசமாக ஒரு சாம்பெய்ன் மதுபாட்டிலையும் சேர்த்து வீட்டுக்கே டெலிவரி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதுவரை விற்பனைக்கு தயாரிக்கவில்லை.

துபாயில் உள்ள நிறுவனம், வெஸ்டன் டாய்லெட்டுகளுக்கான இருக்கையை (டாய்லெட் சீட்) முழுக்க முழுக்க தங்கத்தினால் தயாரித்திருப்பதைப் பார்த்து, தங்க டாய்லெட் பேப்பர் ரோல் தயாரிக்கும் எண்ணம் உருவானதாக ‘டாய்லெட் பேப்பர் மேன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘அஷோக்' அக்டோபர் 31-ஆம் தேதி முதல்...

 
இதுவரை தீபாவளி ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டுவந்து அஜித்தின் ’ஆரம்பம்’ திரைப்படம் அக்டோபர் 31-ஆம் தேதி  ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆரம்பம் திரைப்படத்தில் அஜித் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘அஷோக்’ என்று தெரிகிறது. 

எப்படியும் புது ஆடைகள் எடுக்கத்தான் போறீங்க?



நண்பர்களே! 500 ரூபாய் சேலையை 1500 ரூபாய்க்கு விற்கும் (நடிகர்கள் - விளம்பரங்களுக்கு யார் குடுப்பாங்க!) இன்றைய பண்டிகை சூழலில்.. நமது பணம் உரியமுறையில் செலவளிக்கப்படுவது இன்பம்!  எனவே அனைவரும் ஒரு சேலையையாவது சட்டையையாவது கோ-ஆப்-டெக்ஸ்ல வாங்குங்க மக்கா!அதுவும் இந்த முறை முன்னாள் மதுரை ஆட்சியர் சகாயம் அவர்கள் தற்போது எம்.டி.ஆக .. பேக்கேஜிங் முதல் டிசைன்கள் வரை பலவித புதுமைகளை புகுத்தியுள்ளார் என்பதை நேரில் அறியமுடிந்தது ! அதுவும் கோரா காட்டன் சாரிகள் செம ! அவசியம் கூட்டுறவுத்துறைக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்க!பல ஆண்டு நஷ்டத்திற்குப்பின் முதல் முறையாக சென்ற ஆண்டு இலாபம் ஈட்டியிருக்கும் இந்நிறுவனத்தை ஆதரிப்பது நமது கடமை ! அந்நிறுவனம் ஈட்டிய ஒரு கோடி ரூபாய் இலாபத்தை தினமும் ரூ 65 க்கு உழைக்கும் ஏழை நெசவுத் தொழிலாளிகளுக்கு இலாபப்பங்கு மூலம் பிரித்துக்கொடுத்திருக்கிறார் திரு சகாயம் இ.ஆ.ப அவர்கள்.நமது பணம் யார் கைக்கு செல்கிறது என்பதுவும் முக்கியமானதுதானே ! கண்ணில் பட்ட நல்ல விஷயத்தை நாலு பேர் மத்தியில் வைகோ கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியதுதான்...

22 October, 2013

உறவுகளை அழைக்கிறது...

உரிமையுடன் உறவுகளை அழைக்கிறது -மே பதினேழு இயக்கம் இணைவோம் 25 இல்...இனப்படுகொலை செய்த இலங்கை மண்ணில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தி அதன் மூலம் இலங்கை செய்த இனப்படுகொலையை மறைக்க சதி வேலை பார்க்கும் இந்திய-இங்கிலாந்து அலுவலகங்களை முற்றுகையிடுவோம்,

பதில் சொல்லுங்கள்!


மனம் வலிக்குது ...

புரிஞ்சு போச்சு ...

சபரிமலைக்கு பத்து வயதிற்கு மேல் ஐம்பது வயதிற்குட்பட்ட பெண்கள் அனுமதிப்பது கிடையாது என்று சொல்ல வருகிறார்கள் என்பது புரிஞ்சு போச்சு.

ஓரியோ பிஸ்கட் சாப்பிட்டா கோகைன் மாதிரி போதை வருமாம்!

 
 குழந்தைகளின் பிரிய பிஸ்கட் ஆகிவிட்டது ஓரியோ. இதற்கு அதிக அளவில் செய்யப்படும் விளம்பரம். கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.

10 October, 2013

பப்ளிசிட்டிக்கு கருமத்துக்கு



படத்தோட டிரைலர் ரிலீஸ் ஆகி ஒரு மாமங்கம் ஆகிடுச்சு... ஆனா பாருங்க பயபுள்ள முந்தாநேத்துதான் அந்த தொப்புளை சாரி... டிரைலரை... பார்த்துச்சாம்... அது போலினு தெரிஞ்சிச்சாம். அதுக்கொசரம் கமிஷனர் ஆபீஸ்ல போயி கம்ப்ளைன்ட் வேற குடுத்துச்சாம்! உடனே படத்தோட இயக்குனர் வேற கிடந்து சலம்ப... இந்த அம்மணி அலம்ப.. எல்லா மீடியாலயும் இதே நியூஸுதான்..

ப்ப்பா...

படம் எப்பங்கண்ணா ரீலீஸ்னு பார்த்தா இந்த வார வெள்ளிக்கிழமையாம்...

அடடே ஆச்சர்யக்குறி!
ஒரு பப்ளிசிட்டிக்கு  கருமத்துக்கு  என்ன எழவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு!எனக்கு தனுஷ்  சப்போட்டு வேறன்னு அந்தம்மா  பேட்டி வேற ஏன்னா ஏற்கனவே 2 படம் உத்திகிச்சு இந்த படமும் லிஸ்டுல சேர்த்துட கூடாதுல்ல  அதான். நையாண்டிக்கு நய்யாண்டின்னு போட்டு எந்த தமிழ் பண்டிட்டும் கண்டுகலைன்னு இந்த சேட்டை 

இதையெல்லாமா கண்காணிப்பாங்க.


எப்பூடி!

07 October, 2013

தமிழர்களுக்கு அநீதி இழைத்த காங்கிரசிடமிருந்து நாடு விடுபட வேண்டும்.


தமிழகத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க.,விற்கு மாற்றாக, தே.மு.தி.க., பா.ஜ., ம.தி.மு.க., இணைந்த "மாற்று அணியை' உருவாக்க முயற்சி செய்து வருகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். காமராஜர் காலத்தில் மாணவர் காங்கிரசில் சேர்ந்து, காமராஜரால் "தமிழருவி' என்று அழைக்கப்பட்டவர். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி, லஞ்சம், ஊழலுக்கு எதிராக உரத்தக்குரல் எழுப்புவர். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசியவர், இப்போது இந்த ஆட்சியை விமர்சனம் செய்பவர். தமிழகத்தில் பா.ஜ., அல்லாத பிறக்கட்சியினர், மோடி பிரதமராக வருவது குறித்து கருத்து ஏதும் வெளிப்படையாக வெளியிடாத நிலையில், புதுக்கூட்டணி உருவாகி, மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புபவர். 

பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அல்ல; காங்கிரஸ் வரக்கூடாது என்பதற்காக தான் மாற்று அணிக்கு முயற்சிக்கிறேன்' என்று கூறியுள்ளீர்களே?   இடதுசாரிகள், மாநிலக்கட்சிகள் இணைந்து வலிமை மிக்க 3 வது அணி அமைத்து, ஆட்சிச்சூழல் அமையும் என்றால் ஆதரவு தருவேன். அப்படி ஒரு ஆட்சியில், தமிழக முதல்வர் ஜெ., பிரதமரானால், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதரிப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எது எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். ஊழலால் நாட்டையே கொள்ளையடிக்கும், இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்த காங்கிரசிடமிருந்து நாடு விடுபட வேண்டும். அதற்கு மாற்று, மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி அரசு அமைய வேண்டும்.

மோடி பிரதமராவது காலத்தின் கட்டாயமா?
காலம், மக்கள் மூலம் காரியம் நடத்தும். வாக்காளர்கள் விதியை எழுதுவார்கள். மோடி மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு, நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அந்த இளைஞர் கூட்டம் மாற்றத்தை விரும்புகிறது. அவர்கள் ஊழலுக்கு, ஜாதி, மதத்திற்கு எதிரானவர்கள். மதங்களை வைத்து, மதசார்பின்மை என்று கூறி அரசியல் நடத்துபவர்கள் யார் என்று இளைஞர்களுக்கு தெரியும். அவர்கள் மோடியைத் தான் தேர்வு செய்வார்கள், ஏனென்றால் மோடி ஊழலற்ற மனிதர். மோடி மூலம் மாற்றம் நிகழவேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள். 

நாட்டிற்கு கோயில்களை விட கழிப்பறைகள் தான் அவசியம் என்கிறாரே மோடி..இதற்காகவே நான் மோடியை கூடுதலாக ஆதரிப்பேன். இந்த தெளிவுக்காகவே அவருக்கு அதிக மதிப்பெண் தரலாம். ஆன்மிகம் என்பது கோயிலில் சுவாமி கும்பிடுவது மட்டும் அல்ல; சக மனிதர்கள் நலம் தான் ஆன்மிகம் என மோடி உணர்ந்திருக்கிறார். 

நல்ல பேச்சாளர், சிந்தனையாளரான நீங்கள் மோடியின் மேடைப்பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மக்களின் நாடி, நரம்பை மின்னல் போல் தாக்கும் சக்தி மேடை பேச்சுக்கு உண்டு. அந்த சக்தி மோடிக்கு இருக்கிறது. அவருடைய மேடைப் பேச்சில் லட்சியம், தெளிவு இருக்கிறது. பிரதமர் வேட்பாளர் என்பதால், தேசிய அரசியலைத்தான் பேசுகிறார். ஒரு இந்துவாக அடையாளம் காட்டி பேசவில்லை. மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டி பேசுகிறார். திருச்சியில்,மோடிக்கு இவ்வளவுக்கூட்டம் எப்படி வந்தது? அவரது பேச்சை கேட்கத்தானே! ஹிட்லர், ஒபாமா, கருணாநிதி பேச்சால் வென்றவர்கள் தானே. 

உங்கள் பார்வையில் மோடி அலை வீசுகிறதா?நிச்சயமாக, இந்தியா முழுக்க வீசுகிறது. கூட்டணி சரவர அமையாமல், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஓரிடம் கூட கிடைக்காமல் இருந்தாலும், மோடி பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. நான் முயற்சிப்பது போல கூட்டணி அமைந்தால், 15 முதல் 20 இடங்கள் வரை, இந்த மாற்று அணிக்கு கிடைக்கும். அ.தி.மு.க.,விற்கு 20 இடங்கள் வரை கிடைக்கும். காங்.,-தி.மு.க., கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைப்பதே அபூர்வம். நாற்பது தொகுதிகளிலும் மூன்றாம் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. 

இன்று பிரதமர் பதவியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கேலி, கிண்டல் செய்கிறார்கள். மோடி பிரதமரானால், வெளிநாட்டில் இந்திய கவுரவம் காக்கப்படுமா? "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்படாத பிரதமரை யாரும் கிண்டல் செய்ய முடியாது. குறைந்த எம்.பி..க்களுடன் கவுரவமாக ஆட்சி செய்தார் சந்திரசேகர். மன்மோகன் சிங்கை இயக்குபவர் சோனியா. இதுவரை எந்த பிரதமரும், சாவி கொடுத்த பொம்மையாக இருக்கவில்லை. மோடி பிரதமரானால், நாட்டின் கவுரவம் 100 மடங்கு உயரும். இப்போது போல்,"ரிமோட்' மூலம் மோடி இயங்கமாட்டார். 

ஆர்.எஸ்.எஸ்., அவரை இயக்கும் என்று பிரசாரம் செய்யப்படுகிறதே.. "ரிமோட்' கன்ட்ரோலில் இயங்கினால் மரியாதை இழப்பார். மோடி அப்படி இருக்க மாட்டார். குஜராத் ஆட்சி, இதற்கு சாட்சி. பாபர் மசூதி பிரச்னையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக அவர் செயல்பட மாட்டார். கூட்டணிக்கு முயற்சிக்கும் நீங்கள் மோடியை சந்தித்தீர்களா? அவர் பிரதமர் வேட்பாளர். உடனடியாக சந்திக்க, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், வைகோவிடம் பேசிஉள்ளேன். 

மோடி- பிரதமர், மாற்று அணி என்பது குறித்து விஜயகாந்தின் கருத்து என்ன? மோடிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ விஜயகாந்த் என்னிடம் ஏதும் சொல்லவில்லை. ஆனால் மாற்று அணியில், தே.மு.தி.க.,விற்கு அதிக இடம் ஒதுக்கப்படும். இதுவே நீங்கள் அ.தி.மு.க.,-தி.மு.க., கூட்டணியில் சென்றால் குறைந்த இடங்கள் தான் ஒதுக்குவார்கள் என்று அவரிடம் கூறியுள்ளேன். 2016 ல் முதல்வர் கனவில் உள்ள நீங்கள், அந்த கூட்டணியில் குறைந்த இடங்களில் போட்டியிடுவது சாத்தியமா என்றும் கேட்டேன். இதே கூட்டணி முயற்சி, சட்டசபை தேர்தலிலும் தொடருமா? அதை இப்போது சொல்ல முடியாது. விஜயகாந்த், முதல்வராக விரும்பலாம். வைகோ ஆக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என்றாலும் அ.தி.மு.க.,-தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி தான் அடுத்து தமிழகத்தில் அமையும். 

சமீபகாலமாக, வைகோவை முன்னிலைப்படுத்தி நீங்கள் பேசி வருவது ஏன்? தமிழக அரசியல் தலைவர்களை, 40 ஆண்டுகளாக பார்த்து கழித்துக்கொண்டு வந்தேன். மிஞ்சியது வைகோ. அவரின் தனிமனித வாழ்க்கை தூய்மையானது. பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரானவர். பதவியை விரும்பாதவருக்கு பதவியை தரலாமே. லோக்சபா தேர்தலில், அவரது தொகுதியில் நாங்கள் பிரசாரம் செய்வோம்.

உடைகளில் கண்ணியம் தேவை!


திருமலையில் பெருமாளை தரிசிக்க கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் பெர்மூடாஸ், ஜீன்ஸ்,டிசர்ட் என்று விருப்பப்படி உடையணிந்து செல்லமுடியாது.பாரம்பரிய உடையணிந்துதான் செல்லமுடியும்.அது என்ன மாதிரியான உடை என்பதை அறிவிக்கும் வகையில் திருமலையில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இது எங்கள் கோயில் விதி!


மங்களூரில் உள்ள ஒரு கோயில் கருவறைக்குள் தினமும் 2 விதவை பெண்கள் பூஜைகள் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகாவில் கடந்த 5 ஆம் தேதியில் இருந்து தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மங்களூர் புத்ரோலியில் உள்ள புகழ் பெற்ற கோகர்னாதா கோவிலிலும் தசரா திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தினமும் 2 விதவை பெண்கள் கோவில் கருவறைக்குள் சென்று அங்குள்ள மூலவரான சிவ பெருமானுக்கு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பூ, தீர்த்தம், பிரசாதம் கொடுத்து வருகிறார்கள். இது கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கலாச்சாரத்தின்படி கணவனை இழந்த விதவை பெண்கள் சுப காரியங்களில் ஈடுபடுவது மிகவும் கடினம். இந்த சூழ்நிலையில் கோவிலுக்குள் தினமும் 2 விதவை பெண்கள் சென்று பூஜைகள் செய்து வருவது பெரும் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த, இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ஜனார்தன புஜாரி கூறுகையில், ''பெண்கள் தெய்வத்துக்கு நிகராணவர்கள், அவர்கள் மீதுள்ள மரியாதை நிமித்தம் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்.விதவை பெண்கள் மீதான மூட நம்பிக்கை முழுவதும் ஒழிந்து போக வேண்டும். இனி ஒவ்வொரு தினமும் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு நாள் மட்டும் பயிற்சி எடுத்து கொண்டு கோயில் கருவறைக்குள் சென்று பூஜைகள் நடத்தலாம். இது எங்கள் கோயில் விதி" என்றார்.


05 October, 2013

அரசியலுக்கு வந்திருந்தால் ரஜினி விருது கொடுத்திருப்பார்.

திரைப்பட நூற்றாண்டு விழாவில் ரஜினிக்கு நேர்ந்த அவமானம் அவரது ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. தலைவரை அவ மானப்படுத்தியவர்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் கற் பிக்க ரஜினி மன்ற சீனியர் நிர்வாகிகள் சிலர் ரகசிய கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். ரஜினி ரசிகர் மன்ற வட்டாரத்தில் இது சம்பந்தமாக விசா ரித்தோம்.ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மன்றத் தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பால.நமச்சிவாயத்திடம் பேசினோம். ''தலைவ​ருக்காகக் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்தி​யவர்கள்தான் நாங்கள். ஏன் அவ ருக்காக உயிரையும் கொடுப்போம். இப்போது அவரைப்போலவே ரொம்ப பக்குவப்பட்டு விட்டோம். அன்றைக்கு திரைப்பட நூற்றாண்டு விழாவில் தலைவர் மட்டுமா அவமதிக்கப்பட்டார்? நாட்டின் ஜனாதிபதியே அவமதிக்கப்பட்டிருக்கிறார்.

பல சீனியர் கலைஞர்களையும், காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைக் கொடுத்தவர்களும் புறக் கணிக்கப்பட்டிருக்கிறார்கள். சினிமாவே தயாரிக்காத கேயாருக்கும், சூப்பர் ஸ்டார் உச்சத்தில் இருக்கும்போது திரைப்படத் துறைக்கு வந்த விக்ரமனுக்கும், சீனியர்களை பின்னுக்கு தள்ளுகிறோமே என்ற குற்ற உணர்வு இல்லை. 96-ம் ஆண்டு தேடிவந்த முதல்வர் பதவி வாய்ப்பை அப்போதே சூப்பர் ஸ்டார் ஏற்றுக்கொண்டிருந்தால், இதேவிழாவில் முன்னாள் கலைஞர்கள் என்ற அடிப்படையில் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் அவர் விருது கொடுத்திருப்பார்.மறுபடியும் காலம் வரும். அவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கும். இதைக் கண்டித்து போஸ்டர் ஒட்டுவதாலோ, ஆர்ப்பாட்டம் நடத்துவதாலோ அதுவும், இந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கப் போவதில்லை. ஆனால், இந்தநிலை இப்படியே தொடராது. வரும் தேர்தலில் ரஜினி ரசிகர்கள், இதற்கான பதிலைக் கொடுப்பதற்கு ஆலோசனைசெய்து வருகிறோம். இந்த ஆலோசனை விவரங்கள் தலைவர் கவனத்துக்குப் போய், அவர் ஒப்பு தலுடன் அடுத்த அதிரடி ஆரம்பமாகும்'' என்றார்.

ரஜினி ஒப்புதல் கொடுப்பாரா.... கண்களை மூடி கையை மேலே உயர்த்துவாரா?

03 October, 2013

Public Restroom.


அப்பாவி பூச்சி'களுக்கு மரண தண்டனை?


பூச்சிகள் இந்தியாவில் மிகப்பெரிய கொலையாளி இனங்களில் ஒன்று’
இப்படியொரு தலைப்புடன், வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்ததும் எனக்குள் பலத்த அதிர்ச்சி. அது, பூச்சிகளைக் கொல்லும் விஷத்தை தயாரித்து விற்கும் தனியார் நிறுவனத்தின் விளம்பரம்.அதில், கரப்பான் பூச்சிகளும், கொசுவும் இணைந்து மிகப்பெரிய சதி செய்து மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா... போன்ற நோய்களை பரப்புகின்றன. அதனால், அவற்றை ஓர் இயக்கமாக இருந்து அழிப்போம் வாருங்கள் என்று அழைக்கிறது அந்த விளம்பரம்.
 
ஒரு பொருளை விளம்பரம் செய்வது அவர்களின் உரிமை. அதற்காக ஒட்டுமொத்தமாக பூச்சி இனத்தையே கொலையாளிகள் என்று சொல்லி, மக்கள் மனதில் பயத்தைத் தோற்றுவிக்கும் விதத்தில் விளம்பரம் செய்வதுதான் அதிர வைக்கிறது.இங்கே மனிதர்கள் மட்டுமே ஜீவன்கள் இல்லை. அப்படி நாம் மட்டுமே இருந்தால், இங்கே நமக்கு வாழ்க்கையும் இல்லை. ஆம், மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனிதர்கள் இல்லை. மனிதர்கள் இல்லாமல் மண்புழு இருக்கும்... ஆனால், மண்புழு இல்லாமல் மனிதர்கள் இல்லை. ஒட்டுமொத்தத்தில் மனிதர்கள் இல்லாமல் இந்த பூமியும் அதிலிருக்கும் அத்தனை ஜீவன்களும் வாழும். ஆனால், அவற்றில் ஒன்றிரண்டு இல்லாவிட்டாலும்கூட, ஒரு நொடியும் நம்மால் வாழவே முடியாது.

ஆம், அனைத்தையும் சார்ந்தே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு தேவையுடன்தான் இங்கே உயிர்பெற்று உலாவிக் கொண்டிருக்கின்றன. மனிதனும் அப்படி ஒரு தேவையுடன்தான் இங்கே தோன்றியிருக்கக் கூடும். ஒருவேளை, அந்தத் தேவை, இந்தப் பூமியை ஒட்டுமொத்தமாக அழிப்பதாகக்கூட இருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.ஏனென்றால், இன்றைக்கு அவன் செய்துகொண்டிருக்கும் வேலைகள் அனைத்தும் அப்படித்தானே. ஆம், கிட்டத்தட்ட பஞ்சபூதத்தையும் பஞ்சராக்கிவிட்டோமே! நிலத்தைக் கெடுத்தாகிவிட்டது, நீரைக் கெடுத்தாகிவிட்டது, காற்றைக் கெடுத்தாகிவிட்டது, ஆகாயத்தையும் கெடுத்தாகிவிட்டது... வரிசையாக செயற்கைகோள்களை அனுப்பி! எஞ்சியிருப்பது நெருப்பு மட்டுமே, அது நெருங்க முடியாத நிலையில் இருப்பதால் யோசித்துக் கொண்டிருக்கிறோம்... அவ்வளவே!
 
ம்... இந்த பூமிக்கு கட்டக்கடைசியாக வந்து சேர்ந்த இந்த மனிதன் ஆடும் இத்தனை ஆட்டங்களுக்கு, அவனுக்கு பல காலம் முன்பாகவே தோன்றிய அனைத்து உயிர்கள், தாவரங்கள், உயிரற்ற பொருட்கள் என்று அத்தனையும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் பாவப்பட்ட ஜென்மங்கள்தான் இந்த பூச்சிகள். தேனீக்கள் இல்லாமல் மகரந்த சேர்க்கைகள் நடக்குமா? 'இகோலி'கள் இல்லாமல், உயிரினங்கள் வெளியே தள்ளும் கழிவுகள் சிதையுமா? கரையான்கள் இல்லாமல், காய்ந்து போன மரம் மட்டைகள் மட்குமா? கரப்பான் பூச்சிகள், டைனோசர் காலத்திலிருந்தே இருப்பதாக உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கரப்பான் பூச்சிக்கு இடப்பட்டிருக்கும் வேலை, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்குவதுதான். குறிப்பாக, அவை ஏன் சமையலறையில் அதிகமாக இருக்கின்றன. நாம் அந்த இடத்தை தூய்மையாக வைத்திருக்கவில்லை என்பதுதான். தூய்மையாக இருந்தால், அவற்றுக்கு இயல்பாகவே அங்கே வேலையிருக்காது... வேறு இடம் தேடிச் சென்று விடும். 
 
அதேபோல, கொசுக்களின் தேவை... தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் தவளை இன குஞ்சுகளான தலைப்பிரட்டைகளுக்கு உணவு என்பதுதான். தண்ணீரில் கெமிக்கல் கழிவுகளைக் கொட்டிக் கொட்டி அசுத்தப்படுத்தி விட்டோம். தவளைகள் வாழ வழியில்லாத நிலையில், கொசுக்கள் பெருக ஆரம்பித்துவிட்டன. அவை நோய் பரப்பும் காரணிகளாகவும் மாறிவிட்டன. கொசுக்களுக்கு கூடுதல் வசதியாக வீடுதோறும் தண்ணீர் தேங்கும் வகையில், குப்பைகள் தேவையற்ற பாத்திரங்கள் என்று போட்டு வைத்திருக்கிறோம். கழிவு நீர் ஓடைகளையும், வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருந்தால்... கொசுக்கள் போயே போச்சு! செய்ய வேண்டியதையெல்லாம் செய்யத் தவறிவிட்டு, இந்த ஜீவன்களை ஓழிக்கிறேன் என்று சொல்லி, விஷத்தைத் தெளிக்கிறோம்.... அது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்கிறோம் என்று தெரியாமலே! ஆம் இப்படி வயல்காடுகளில் 'பூச்சிமருந்து' என்கிற பெயரில் நெல், காய்கறி என்று பயிர்களின் மீது தெளிக்கப்படும் விஷம்தான் இன்றைக்கு பலவிதமான நோய்களுக்கு காரணமாகி நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க... வீட்டுக்குள்ளேயே விஷத்தை கண்மூடித்தனமாக தெளித்துக் கொண்டிருந்தால்?

'அதற்காக பாம்பு கடிக்கும்போது... வேடிக்கை பார்க்க வேண்டுமா... தேள் கடிக்கும்போது கையைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா?' என்று ஒரு கேள்வி வந்து விழுகிறது. ஒன்றை ஒன்று சார்ந்து அல்லது வேட்டையாடி வாழும் வாழ்க்கைதான் இங்கே விதிக்கப்பட்டிருக்கிறது. அது எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் அவா. எந்த பாம்பும், தேளும் தேவையில்லாமல் தன்னுடைய விஷத்தை வீணடிப்பதில்லை. அதேபோல இயற்கைக்கு எதிரான செயல்களிலும் ஈடுபடுவதில்லை.தேவைக்கு மட்டுமே வேட்டையாடுபவைதான் அத்தனை ஜீவன்களும்.... மனிதனைத்தவிர. நாம், இன்னும் எழுபத்தைந்து தலைமுறைக்கு அப்புறம் வரப்போகும் நம் சந்ததிக்கு கூட அல்லவா சொத்து சேர்க்க ஆசைப்படுகிறோம்! தேவையென்றால், ஒட்டுமொத்தமாக ஒரு தோப்பையே அழிப்போம்... மலையையே தூள் தூளாக்குவோம்... ஆறுகளை கபளீகரம் செய்வோம்... யானைகளை வேட்டையாடுவோம்... இப்படி செய்கின்ற தவறுகளையெல்லாம் நம் பக்கமே வைத்துக் கொண்டு... 'கொலையாளிகள்' என்று 'அப்பாவி பூச்சி'களுக்கு மரண தண்டனை கொடுப்பது நியாயம்தானா?


30 September, 2013

உணவுக்காக உயிரை பயணம் வைத்து!


 

ஒரு வேலை அந்த மூடுல?

Mobile Phone Important Codes.

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...