|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 February, 2013

பார்த்ததில் பிடித்தது!


வரலாற்றுக்கு முந்தைய சிறிய கண்டம்!

இந்தியாவில் இருந்து மதகாஸ்கர் நாடு பிரிவதற்கு முன்பு, சுமார் 61 மில்லியனிலிருந்து 83 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மொரிசியா என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு சிறிய கண்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இந்தியப்பெருங்கடலில் மொரிசியஸ் நாட்டுக்கு அருகில் கடலுக்கு அடியில் உள்ளதாக கூறியுள்ளனர். மொரிசியஸ் கடற்கரை மணலில், 660 மில்லியனிலிருந்து, கிட்டத்தட்ட 200 கோடி ஆண்டுகள் வயதான சிர்கோன்ஸ் எனப்படும் மினரல், இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்ந்துள்ளனர். இந்த சிறிய தாதுத் துகள்கள் குறிப்பிடத்தக்க ஒரு கண்டுபிடிப்பு என்று சொல்லப்படுகிறது. இந்த சிர்கோன் துகள்கள், மொரிசியஸ் தீவின் அடியில் உள்ள, இந்த சிறிய மொரிசியா கண்டத்தின் பிளவு பற்றி குறிப்பிடுகிறது. பின்னர் இந்தியப் பெருங்கடல் சுற்றி வளைத்து அப்பகுதி நிலங்களை மறைத்துவிட்டன என்று்ம் கூறியுள்ளனர்.

இங்கிருந்து 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த பேங்கீ என்ற ஒரு பாறை அடுக்கு, தெற்கில் கோண்டுவானாவாகவும் வடக்கில் லாரேசியா எனவும் பிரிந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த கோண்டுவானா 80 -130 மில்லியன் ஆண்டுகள் இடைப்பட்ட காலங்களில், பிரிந்து மதகாஸ்கர், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா என மாறி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

இயக்குனராகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

கோலிவுட், பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டையும் கடந்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் என பல முகங்களைக் கொண்டிருப்பது தெரிந்த செய்தி. தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராகும் முயற்சியில் இறங்கியிருப்பது தான் ஆச்சர்யமான செய்தி.இயக்குனராக வேண்டும் என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இன்றைய நேற்றைய முடிவல்ல. பல வருடங்களாக அவர் மனதில் இருந்து வந்த திட்டத்தை இப்போது தான் செயல்படுத்தத் துவங்கியிருக்கிறார்.   லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து நீண்ட நாட்களுக்கு முன்னரே திரைக்கதை மற்றும் இயக்கம் சம்மந்தமான படிப்புகளை படித்து முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கார் விருது வாங்கியிருந்தனர்.   ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய நண்பரான ரசூல் பூக்குட்டியும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து தான் இந்த படத்தை துவங்குகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் படத்தைப் பற்றி ரசூல் பூக்குட்டி “ இந்திப் படம் எடுக்க எல்லாம் தயாராகிவிட்டது.  சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளாராம்.


பெரியார் பல்கலை பட்டத்தை நிராகரித்தது டி.ஆர்.பி.



சேலம் பெரியார் பல்கலையில், ஆறே மாதத்தில் வழங்கப்பட்ட பி.எட்., பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்து, வேலைவாய்ப்பை மறுத்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், நேற்று, பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர். சேலம் பெரியார் பல்கலையில், 2008ம் ஆண்டுக்கு முன் வரை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. 2008ம் ஆண்டு, கல்வியியல் பல்கலை துவக்கப்பட்டு, அதில் கல்வியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டன. கல்வியியல் பல்கலை அறிவிப்பு வரும் நேரத்தில், 2008 ஜன., மாதத்தில், 10க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகளுக்கு, பெரியார் பல்கலை இணைவு வழங்கியுள்ளது. அக்கல்லூரிகளில், உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், சேர்க்கப்பட்ட மாணவர்களை, அதே ஆண்டு மே மாதத்தில் தேர்வெழுதவும் அனுமதித்துள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆறே மாதத்தில் பட்டச்சான்றிதழையும் வழங்கியது.அந்த பேட்ஜ் படித்த மாணவர்களில் ஒருவரான பிரபு, டி.ஆர்.பி., நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். இவர் தர்மபுரி கிரிவாசன் கல்வியியல் கல்லூரியில், 2008ம் ஆண்டு, பி.எட்., பட்டம் பெற்றுள்ளார். சான்றிதழ் சரி பார்ப்பில், 2007 நவம்பரில், இளங்கலை பட்டப்படிப்பை முடித்த, இவர் அடுத்த ஆறு மாதங்களுக்குள், 2008 மே மாதம் பி.எட்., பட்டம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, இவரது பி.எட்., பட்டம் செல்லாது என, டி.ஆர்.பி., தெரிவித்து, இவருக்கு வேலை வாய்ப்பை மறுத்துள்ளது. 

இதனால், இதே பேட்ஜில் படித்த மற்ற மாணவ, மாணவியரும் கடும் அதிர்ச்சியடைந்து, நேற்று பல்கலையை முற்றுகையிட்டனர். ஓமலூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் பதிவாளர் அங்கமுத்து ஆகியோர் மாணவர்களுடன் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தினர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: பெரியார் பல்கலை நடத்திய தேர்வில், வெற்றி பெற்று, பல்கலை வழங்கிய பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்துள்ளது. இதனால், 2008ம் ஆண்டு, பி.எட்., படித்த மாணவர்கள் கலக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். பல்கலை கல்வியியல் கல்லூரிகளுக்கு, ஜனவரி மாதத்தில் தான் அங்கீகாரமே கொடுத்தது. ஆனால், அடுத்த ஆறே மாதத்தில், தேர்வுக்கு மாணவர்களையும் அனுமதித்துள்ளது.ஓராண்டு பட்டப்படிப்பான பி.எட்., தேர்வெழுத, குறைந்த பட்சம், 900 மணி நேரம் அல்லது, 150 பணி நாள் பங்கேற்க வேண்டும் என, உள்ள அரசு விதிமுறையை, பயன்படுத்தி ஆறே மாதத்தில் மாணவர்களை தேர்வெழுத அனுமதித்தது மட்டுமல்லாமல், பட்டமும் வழங்கியுள்ளது. ஓராண்டு படிப்புக்கு, ஆறு மாதத்தில் சான்றிதழ் வழங்கினால், அது செல்லுமா என்பது குறித்து பல்கலை நிர்வாகிகளுக்கு தெரியாதா என்பது தான் புரியாத புதிர்.இவை தெரிந்தும், பணத்துக்காக சான்றிதழ்களை வழங்கி, பல மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி உள்ளனர். தற்போது பல்கலையில் கேட்டால், "தவறாக அட்மிஷன் போட்ட கல்லூரியில் போய் கேளுங்கள்" என, கூறுகின்றனர். கல்லூரி வழங்கிய மாணவர் பட்டியலில், தகுதியில்லாத பட்சத்தில், பல்கலை, எதற்காக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அரசு பல்கலை என்பதாலேயே பல நூறு மாணவர்கள், இதுபோல தேர்வு எழுதியுள்ளனர்.இவர்களின் வாழ்க்கை தற்போது, கேள்விக் குறியாகியுள்ளது. இதை பற்றி இங்கு யாருக்கும் அக்கறையில்லை. பெரியார் பல்கலையில் முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்கதையாகவே உள்ளன.

வாழ்த்துக்கள் நண்பா..


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...