|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 January, 2012

அங்க என்னடாண சுடுத்தன்ணிய ஊத்தி...

அங்க என்னடாண சுடுத்தன்ணிய ஊத்தி... கோவிலுக்கு போனவன, சாமி கும்பிடபோனவன கொலை பண்ணி இங்க அனுப்புறாங்க இவனுங்க என்னடான்ன இங்க இந்த கேரளா குட்டிங்கள வச்சு கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சுரானுங்க தமிழ் நாட்டுல யாருமே நடிக்க வரமாட்டேன்னு சொல்லுறாங்கள புரியல?    போராளி, மவுனகுரு, வேட்டை, ன்னு இந்த மலையாளி குட்டிகளிடமே போய் ஏன்?  காசு கொடுத்து நாம பாக்குறது நாளதான் 

இப்படிதான் சிலோன் போயிட்டு வந்த அந்த ஒல்லிகுச்சிகாரி ஜெனிலியாவை ஒதுக்கணும்னு தமிழ்நாட்டுல எத்தனைபேர் குரல் கொடுத்தாங்க?அந்த படத்த  எங்க பார்க்காமலா இருந்தோம்? தனுஷ் நாதரிக்காக படத்தையும் ஓட வச்சு! தன்மனத்தில் ஓட்டை அல்லவா போட்டோம். அதான் இந்த டைரக்டர் நாய்களும், கதாநாயன், நாய்களும், மலையாளத்தில் இருந்து கும்பல் கும்பல குட்டிகளா கூட்டி வருதுங்க முதல்ல இந்த நாய்ங்க நடிக்கும். தயாரிக்கும்  படங்கள நாம என்னைக்கு புறக்கனிக்குறோமோ அன்னைக்கு தான் தமிழனுக்கு விடிவு காலம் அதுவரை...            

இன்சுலினை கட்டுப்படுத்தலாம்!


மனித உடலின் ஆரோக்கியத்திற்கு இன்சுனின் சுரப்பு அவசியமாகும். குறைந்த அளவு இன்சுலின் சுரப்பு உடலின் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கிவிடும். எனவே இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் மருத்துவர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளனர். 

சரியான உறக்கம் தேவை உடலுக்கும் தரும் ஓய்வுக்கும், ஹார்மோன் சுரப்பதற்கும் தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 24 மணிநேரத்தில் 7 மணி நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதுவே உடலில் சரியான அளவில் இன்சுலின் சுரக்கச் செய்யும். உறக்கம் குறைபாடு ஏற்பட்டால் மன உளைச்சல் உள்ளிட்ட ஏற்பட்டு இன்சுலின் சுரப்பில் பாதிப்பில் ஏற்படும். நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு இதுவே காரணமாகிறது. பரிசோதனை கட்டாயம் நமது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன்மூலம்தான் அதற்கேற்ப உணவை எடுத்துக்கொள்ள முடியும். இன்சுலின் அளவு சரியாக சுரப்பதற்கு உணவுமுறையும் அவசியம். இதன் மூலம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுப்படும். 




திட்டமிடுவது அவசியம் உணவு திட்டமிடல் அவசியம். தினசரி மூன்றுவேளை உணவு அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும். புரதம், மாவுப்பொருட்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். ஒருவேளை உணவு தவறினாலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைத்து மயக்க நிலையை ஏற்படுத்திவிடும். எனவே சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்வது அவசியம். 



இனிப்பு மிகுந்த உணவுகள் உண்ணும் உணவில் குறைந்த குளுக்கோஸ் உள்ள உணவுகளை கண்டறிந்து உண்ணவேண்டும். காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் போன்றவை குறைந்த குளுக்கோஸ் அளவுள்ள உணவுகளாகும். அது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். டைப் 2 நீரிழிவு ஏற்படுவதை தடுக்கும். 



நார்ச்சத்து உணவுகள் மாவுச்சத்துள்ள உணவுகளை உண்பது உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சிரமம் உண்டாகும். எனவே நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது உணவு ஜீரணத்தன்மை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். மேலும் உடலில் கொழுப்பு அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தும். இது இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்தும். 



உடற்பயிற்சி அவசியம் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். குறைந்த ரத்த அழுத்தம், இதயநோய் போன்றவற்றை தடுக்கும். எடையை கட்டுக்குள் வைத்து இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தும். தொடர்ந்து யோகா செய்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கும்.

பில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் $ !!!


அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமை, இதுவரை அவரது படங்கள் விற்காத அளவு 1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதால், படத்தை வாங்க உள்ளூரில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

பில்லா 2-ன் வெளிநாட்டு உரிமையை ஜிகே மீடியா என்ற நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது 1 மில்லியன் டாலர்.இதுவரை அஜீத் படம் எதுவும் இவ்வளவு தொகைக்கு வெளிநாட்டில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா படம் ரூ.3 கோடியே 7 லட்சத்துக்குதான் விலை போனது. ரஜினி படம்தான் அதிகபட்சமாக ரூ 15 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து கமல், விஜய், சூர்யா படங்கள் ஏற்கனவே ரூ.5 கோடிக்கு விற்கப்பட்டன. இந்த ரூ 5 கோடி லிஸ்டில் இப்போது அஜீத் படமும் சேர்ந்துவிட்டது!

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி!


நேர்மையாளர்கள் எங்கே என்று சகல துறைகளிலும் தேட வேண்டிய ஒரு காலகட்டத்தில், அவ்வப்போது சிலர் தலையை நீட்டி இதோ அப்படி ஒரு ஆள் இருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாரிஜாத் சஹா மாதிரி.யாரிந்த பாரிஜாத் சஹா? ஒரு பள்ளி ஆசிரியர். மேற்கு வங்கத்தில் உள்ள பாலுர்கட் என்ற சிறிய நகரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். மாதச் சம்பளம் ரூ 35000. 

கடந்த ஞாயிறன்று தனது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்புக் கணக்கில் எவ்வளவு உள்ளது என்று இன்டர்நெட்டில் பார்த்துள்ளார். ரூ 49,570,08,17,538 (அதாவது 9.8 பில்லியன் டாலர்கள்!) இருப்பதாக திரையில் வர, ஷாக்கடித்து நின்றுவிட்டார் மனிதர். இந்தத் தொகை இந்திய கல்வித் துறைக்கான ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம்! ஆஹா வந்த வரை லாபம் என்று கமுக்கமாக இருக்கவில்லை சஹா. அடுத்த கணமே அந்த வங்கியில் தனக்குத் தெரிந்த அதிகாரிக்கு போன் செய்தார். "என் கணக்கில் ரூ 49000 கோடி வந்துள்ளது.. சீக்கிரம் உங்கள் தவறை சரி செய்யுங்கள். என் பணம் ரூ 10000 அதில் உள்ளது. எடுக்க வேண்டும்," என்றாராம்.

அவர் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை ஞாயிறன்றே எடுத்திருக்க முடியும். ஆனால் கணக்கில் நடந்துள்ள தவறைப் பார்த்ததும் அடுத்த நாள் வரை காத்திருந்தார். விஷயம் வெளியில் கசிந்ததும் உளளூர் தொலைக்காட்சிகள் முதல் சிஎன்என், பிபிசி வரை போட்டி போட்டுக் கொண்டு சஹாவை பேட்டி எடுத்துத் தள்ளின. அவர்களிடம் சஹா கூறுகையில், "இவ்வளவு பணம் என் கணக்கிலிருப்பது தெரிந்ததும் எனக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. முதலில் இந்த தவறை சரி செய்யச் சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றியது," என்றார்.

ஸ்டேட் பேங்கின் கொல்கத்தா மண்டல அலுவலகமும், மும்பை தலைமை அலுவலகமும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன. கிட்டத்தட்ட 4 நாட்களாக விசாரணை நடக்கிறது. ஆனால் இந்த ரூ 49000 கோடி வந்த வழிதான் அவர்களுக்குத் தெரியவில்லையாம். உங்கள் பணத்துக்குப் பாதுகாப்பான வங்கி என விளம்பரங்களில் கூவுகிறார்கள் பாரத ஸ்டேட் வங்கிகாரர்கள். வங்கிக்கே பாரிஜாத் சஹாக்கள் மாதிரி பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள் இப்போது!

கண்டதையும் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக்!


உண்ணும் உணவு உடலுக்கும், மனதிற்கும் ஊட்டத்தை தருவதாக இருக்கவேண்டுமே தவிர உபத்திரம் தருவதாக இருக்கக் கூடாது. ஆரோக்கியத்திற்காக சாப்பிட்ட காலம் போய் அநாவசியத்திற்கு கிடைத்ததை எல்லாம் சாப்பிட தொடங்கிவிட்டனர். இதனால் உடல்பருமன், நீரிழிவு, இதயநோய் என தொடர்நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. கண்டதை சாப்பிடாமல் கவனமாக சாப்பிட்டால் இதயநோயை தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

‘ஹார்ட் அட்டாக்’ என்ற வார்த்தையே சிலரை அட்டாக் செய்து விடும். இருமுறை அட்டாக் வந்தும் பிழைத்தவர்கள் உண்டு. வந்தபின் அதற்கேற்ப உண்பதை விட வருமுன் காக்க அதற்கேற்ப உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள் முதலில் இதயம் தொடர்பான பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

நோ டென்சன் ரிலாக்ஸ் நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் வாய்ப்புண்டு. அதேபோல் புகைப்பழக்கம் உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள், மொனோபாஸ் பருவத்தை கடந்தவர்கள், டென்சன் பார்ட்டிகள் இதய நோய் தாக்கும் ஆபத்து உள்ளது. அதேபோல் உடல் உழைப்பு இல்லாதவர்கள், குடும்பத்துல யாருக்காவது இதய நோய் உள்ளவர்கள் சற்றே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

என்னென்ன அறிகுறி தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்ற பழமொழி இந்த நோய்க்கு சரியாக பொருந்தும். ஏனெனில் இதயநோய்க்கு அறிகுறி இதயத்தில் மட்டும் தெரிவதில்லை. அடிக்கடி தலைவலி, தலைசுற்றல், பார்வை தடுமாற்றம் போன்றவையாகவும் எச்சரிக்கை மணி அடிக்கும். ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி, இப்படி ஏதாவது ஒரு விதத்தில் இதயநோய்க்கான அலாரம் அடிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இதில் எது வந்தாலும் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

உணவுக்கட்டுப்பாடு தேவை நோய் வந்தபின் சிகிச்சை, உடற்பயிற்சி மேற்கொள்வதை விட உணவு கட்டுப்பாடு இருந்தால் இதயநோயை விரட்டலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உணவு விஷயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. எனவேதான் காய்கறிகளும் பழங்களும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள உணவுகளில் எல்லாம் ‘டிரான்ஸ்ஃபேட்’ என்று சொல்லப்படும் அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு உள்ளதா என்பதை பேக்கிங் லேபிளில் போடவேண்டும் என்ற சட்டம் உள்ளது. நம்மூரில் அதை கடைபிடிப்பதில்லை. அதனால் கடைகளில் விற்கும் கண்டதையும் விழுங்கிவிட்டு கடைசியில் இதயநோய்க்கு ஆளாக நேரிடுகிறது.

எதை சாப்பிடலாம் கீரை, முழு தானியங்கள், காய்கறிகள், போன்றவை சாப்பிடலாம். அசைவத்துல மீன் மட்டும் சாப்பிடலாம். ஏனெனில் அதில் உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது. ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். இது ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும். கொழுப்பு குறைந்தாலே இதயம் பாதுகாக்கப்படும். அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.

தவிர்க்க வேண்டியவை இதயம் பலவீனமானவர்களுக்கு ஊறுகாயும், அப்பளவும் ஆபத்தானது. அதில் உள்ள அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும். எனவே அவற்றை தவிர்க்கலாம். பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின் உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ போன்றவற்றை தவிர்க்கலாம். ஒரு முட்டையில 210 மி.கி. கொழுப்பு இருப்பதால் கூடவே கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். முக்கியமாக டென்சன் கூடாவே கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

தேசபக்தி நிகழ்ச்சிகளை அதிகம் ஒளிபரப்பியது சென்னை தூர்தர்ஷன்தான்!


நாட்டில் உள்ள தூர்தர்ஷன் நிலையங்களிலேயே சென்னை தூர்தர்ஷன்தான் அதிக அளவிலான தேசபக்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, தேச பக்தியில் சிறந்தவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.தேச பக்திப் பாடல்கள், நாடகங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த நிகழ்ச்சிகள் என தேசம் சார்ந்த நிகழ்ச்சிகளை, தேச பக்தி நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வரும் ஒரே தொலைக்காட்சி நிறுவனம் மத்திய அரசின் தூர்தர்ஷன் மட்டும்தான்.

தனியார் தொலைக்காட்சி நிலையங்களில் இவற்றை சற்றும் எதிர்பார்க்க முடியாது. அவர்களும் கூட விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அதுவும் கூட சில டிவிகளில் பார்க்க முடியாது. சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்ற நாட்களில் கூட இந்த தனியார் தொலைக்காட்சிகள் தேச பக்தி நிகழ்ச்சிகளைப் போடுவதில்லை. மாறாக நீங்கள் நடித்த படங்களில் கவர்ச்சி மிதமிஞ்சி நிற்கிறதே அது எப்படி என்று ஏதாவது ஒரு நடிகையிடம், ஏதாவது ஒரு டிவி தொகுப்பாளர் படு கவனமாக கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்.

இப்படிப்பட்ட சாட்டிலைட் மாயைக்கு மத்தியில், தன்னிலை தவறாமல், தொடர்ந்து தேச பக்தி நிகழ்ச்சிகளை அதிக அளவில் ஒளிபரப்பி வரும் தூர்தர்ஷன் பாராட்டுக்குரியதே. அதேசமயம், இந்தியாவிலேயே அதிக அளவிலான தேச பக்தி நிகழ்சசிகளை ஒளிபரப்பி நாட்டிலேயே தமிழ்நாட்டுக்காரர்கள்தான் தேச பக்தியில் சிறந்தவர்கள் என்பதை மறைமுகமாக நிரூபித்துள்ளது சென்னை தூர்தர்ஷன்.

இதுதொடர்பாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தொகுத்துள்ள தகவலின் அடிப்படையில், சென்னை தூர்தர்ஷன் நிறுவனம், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 66 தேச பக்தி தொடர்கள், ஆவணப் படங்களை ஒளிபரப்பியுள்ளது. அனைத்தும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்தது மற்றும் சுதந்திரப் போராட்டம் தொடர்பானவையாகும்.

இந்த விஷயத்தில் சென்னைக்குப் பக்கத்தில் கூட வேறு எந்த தூர்தர்ஷன் நிறுவனமும் இல்லை என்பது அத்தனை தமிழ்நாட்டுக்காரர்களுக்கும் பெருமை தருவதாக உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள டெல்லி தூர்தர்ஷன் கேந்திரா கூட வெறும் 19 நிழ்ச்சிகளை மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் ஒளிபரப்பியுள்ளது ஆச்சரியம் தருகிறது. 3வது இடத்தில் கேரளா உள்ளது. இதன் பங்கு 18தான்.

இன்னொரு விஷயத்திலும் சென்னை தூர்தர்ஷன் கலக்கியுள்ளது. அதாவது பிற நிலையங்கள் எல்லாம் அவரவர் மாநில சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்துதான் பெரும்பாலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியுள்ளன. ஆனால் சென்னை அப்படி அல்ல தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் மட்டுமல்லாமல் தேசிய அளவில் நாட்டு்க்காகப் போராடிய பலரையும் கூட அது தனது ஆவணப் படங்கள், தொடர்களில் வெளிப்படுத்தி அவர்களைக் கெளரவித்துள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள் தாகூர், ஜோதிபாசு, மோதிலால் நேரு, அன்னிபெசன்ட் ஆகியோர்.

தேசபக்தி நிகழ்ச்சிகளை மிக மிக குறைந்த அளவில் ஒளிபரப்பியவை பீகாரும், ஆந்திராவும்தான். இங்கு தலா ஒரே ஒரே நிகழ்ச்சி மட்டுமே காட்டியுள்ளனர். பீகார் தூர்தர்ஷன் தனது மாநிலத்தைச் சேர்ந்த பாபு ஜெகஜீவன் ராம் பற்றி ஒரு நிகழ்ச்சியை போட்டுள்ளது. ஹைதராபாத் தூர்தர்ஷன், திரிகபத்தா தெலுகு கத்தா என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளது.

இந்த புள்ளி விவரம் மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் தமிழகத்தில் தேச பக்தி அதிகம் இருப்பதையே இந்த அதிக அளவிலான நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை காட்டுகிறது. அதனால்தான் தமிழகத்தில்தான் அதிக அளவிலான தேச பக்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் பிராந்திய உணர்வுகளே அதிகம் உள்ளது இதன் மூலம் வெளிப்படுகிறது என்றார்

கையால் உணவு ஊட்டுவது தவறு என்ன கொடுமை சரவணன்...

கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அனுருப். அவரது மனைவி சகாரிகா பட்டாச்சாரியா. அவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். அனுருப் தனது குடும்பத்துடன் நார்வேயில் வசித்து வருகிறார்.

அனுருப் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப் பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர். ஏனென்றால் அந்த நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு கையால் உணவு ஊட்டுவது பெருந்தவறு. அதனால் அந்த 2 குழந்தைகளையும் பெற்றோரிடம் இருந்து பிரித்து வேறு நபர்களிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். குழந்தைகளைப் பிரிந்து அனுருப் தம்பதியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.எனது மகன் தனது தந்தையுடன் தூங்குவான். நார்வேயில் அப்படி செய்யக் கூடாதாம். எனது கணவர் தனியாகத் தான் தூங்க வேண்டுமாம் என்று சகாரிகா தெரிவித்தார்.

இந்திய கலாச்சாரப்படி குழந்தைகளுக்கு கையால் உணவூட்டுவது வழக்கம். ஆனால் இங்கு கையால் உணவூட்டினால் அது குழந்தையைக் கட்டாயப்படுத்தி உண்ண வைப்பதாம் என்று அனுருப் தெரிவி்த்தார். அனுருப் தம்பதியினரை அவர்கள் குழந்தைகளைக் கூட பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்லோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த குழந்தைகளை சந்தித்தார். இதற்கிடையே வரும் மார்ச் மாதத்துடன் அனுருப்பின் விசா காலம் முடிகிறது. அதற்குள் குழந்தைகள் கிடைக்கவிட்டால் அவர்கள் விசாவை புதுப்பிக்கத் தான் வேண்டும்.

இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க...!

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழகத்திலும் கொண்டாட ஏற்பாடு!


தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவு, இதுவரை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தைத் தாண்டி தமிழகத்தில் எங்குமே கொண்டாடப்படாத இலங்கையின் சுதந்திர தின விழாவை, முதல் முறையாக சென்னையில் நடத்த சில புத்த பிக்குகள் ஏற்பாடு செய்து வருகின்றனராம்.

சென்னையில் உள்ள மகா போதி சபையுடன் இணைந்து இந்த சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இலங்கை துணைத் தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் 64வது சுதந்திர தினம் பிப்ரவரி 4ம் தேதி வருகிறது. இதை இலங்கையில் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். அதேபோல தமிழகத்திலும் இதைக் கொண்டாட முடிவு செய்துள்ளனராம்.

இதுவரை தமிழகத்தில் இலங்கை துணைத் தூதரகத்தைத் தாண்டி வெளியில் இலங்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதில்லை. அங்கேயும் கூட மிகவும் எளிமையான முறையில்தான் சத்தம் போடாமல் கொண்டாடுவது வழக்கம். காரணம், விடுதலைப் புலிகள் குறித்த பயம். ஆனால் இதை தற்போது தமிழகத்திலும் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனராம். சிங்கள புத்த பிக்குகள் நிறைந்துள்ள மகா போதி சபையுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளில் இலங்கை துணைத் தூதரகம் இறங்கியுள்ளதாம். இந்த கொண்டாட்டத்தில், இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. புத்த பிக்குகள், இந்தியாவில் வசித்து வரும் இலங்கையர்கள் திரளாக கலந்து கொள்ளப் போகிறார்களாம்.

நக்கீரன் கோபால் பகிரங்க மன்னிப்பு..


முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்டதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது. நக்கீரன் இதழில் கடந்த வாரம் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து ஒரு சர்ச்சைக்குரிய செய்தி வெளியிடப்பட்டது. இதனால் பிரச்சனை எழுந்தது. நக்கீரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இந் நிலையில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமாராஜ் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நக்கீரன் கோபால் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த இதழின் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் Why This கொலவெறி ?

நாடாளுமன்றத்தில் நேற்று ஊழியர் சகாயநிதியம் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சியின் எம்.பி.யான அஸ்வர் ஜே.வி.பி.யை பார்த்து Why This கொலவெறி  எனக் கேட்க எமக்கு No கொலை வெறி என ஜே.வி.பி. எம்.பி. தெரிவித்தபோது சபையில் சிரிப்பொலி எழுந்தது. ஆளும் கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் தனது உரையில் தமிழ்நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் இன்று கொலவெறி கொலவெறி  என பாடல்களில் கூட பாடுகின்றனர். இந்தக் கொலவெறி  பாடலுக்கு எமது யாழ்ப்பாண இளைஞன் பதிலடி கொடுத்து பாடியுள்ளார். அந்தப் பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இலங்கையில் ஜே.வி.பி.யினர் கொலை வெறியுடன் திரிகின்றனர். கொலவெறியுடன் யாழ்ப்பாணம் சென்று அடிவாங்கிக் கொண்டு திரும்பி வந்துள்ளனர் என்றார். பின்னர் சுனில் ஹந்து நெத்தி எம்.பி.யே  Why This கொலை வெறி என அஸ்வர் கேட்க, எனக்கு No கொலை வெறி No கொலை வெறி என சுனில் எம்.பி. தெரிவித்தார்

ரூ.23 லட்சம் நேர்மையுடன் ஒப்படைத்த சீமா ராய்!

மால்டா கௌர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டியை சுத்தம் செய்யும்போது, வியாழன் இன்று காலை முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து ரூ.23 லட்சத்தை கண்டெடுத்தார் கிழக்கு ரயில்வேயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியாளரான சீமா ராய், உடனே மேலதிகாரிகளுக்கு இந்த விவரத்தை தெரியப்படுத்தினார். அந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, அவருக்கு நேர்மைகான ரயில்வே விருதுக்கு சீமா ராயினை பரிந்துரைக்கப் போவதாகக் கூறினார்.  

இதே நாள்...


  • ஆங்கிலோ எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)
  •  அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று (1903)
  •  கிழக்கிந்திய கம்பெனி, ஏமனின் ஏடென் நகரை கைப்பற்றியது(1839)
  •  நன்னம்பிக்கை முனையை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றியது(1806)
  • பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது...

    ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மற்றொரு அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

    சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்தது...

    சீனாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரான சன்வே புளு லைட், தற்போது அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முற்றிலும் சீன தயாரிப்பான இந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஒரு நொடியில், ஆயிரம் டிரில்லியன் கணக்குகளை போடும் வல்லமை கொண்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீனாவின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர், 3 மாத சோதனை ஓட்டத்திற்குப்பின், தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    பார்த்ததில் பிடித்தது!






    Movie of the Day...! Salangai Oli - Tamil Movie


    திராவிட கட்சிகளில் இருந்து வெளியே வா தமிழா

    தமிழ் நாட்டில் மலையாளியின் ஒனதிற்கு தமிழகத்தில் அரசு விடுமுறை ?

    தமிழ் நாட்டில் தெலுங்கு வருட பிறப்பிற்கு தமிழகத்தில் அரசு விடுமுறை ?

    தமிழா ஒன்று மட்டும் தெரிகின்றது தமிழ் நாட்டினையும் தமிழ் 


    இனத்தினையும் திராவிடன் என்று கூறி கொண்டு தமிழனை இளிசவாய்யாக 


    மாற்றி தமிழ் நாட்டினை இன்று தெலுங்கர்களும் மலையாளிகளும் பிரித்து 


    எடுத்து கொண்டு இருகின்றார்கள் தமிழா விழித்து கொள் திராவிட கட்சிகளில் 


    இருந்து வெளியே வா திராவிடன் என்று சொல்லும் கன்னடர்கள் ,


    மலையாளிகள் தெலுங்கர்கள் இடம் இருந்து தமிழ் நாட்டினையும் தமிழ் 


    நாட்டின் உரிமையையும் மீட்டு எடுப்போம் தமிழா வா நீ திராவிடன் இல்லை நீ 


    திராவிடன் என்று சொல்லி கொண்டு இருக்கும் வரை தமிழ் நாட்டின் 


    உரிமைகளை தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் இடம் இருந்து 


    தமிழனால் பாதுகாக முடியாது தமிழா விழித்து கொள் 


    வரும் தமிழ் தலைமுறை தமிழ் நாட்டில் இருந்து தெலுங்கு இனத்தால் விரடி 


    அடிக்காமல் பாதுகாக வேண்டும் என்றால் இன்றே தமிழ் நாட்டினை இந்த 


    திராவிடம் என்று சொல்லும் கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் இடம் 


    இருந்து தமிழ் நாட்டினை இன்றே பாதுகாக வேண்டும் தமிழா 

    திராவிட கட்சிகளில் இருந்து வெளியே வா தமிழா 


    தமிழர் தலைமையில் இணைப்போம் 


    தமிழ் நாடு தமிழருக்கே 


    தமிழ் நாட்டினை தமிழனே அதிகாரம் செய்ய வேண்டும் !

    ஹிந்திகாரன் குசும்புக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.


    இந்தியன் என்பதில் வெட்கப்படுகிறேன்...


    சுதந்திர நாடுதான?


    தமிழர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றுவோம் (இலங்கை புதிய அதிபர் ) எஸ்.எம்.கிருஷ்ணா?

    இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க அரசு 

    தயார் - ராஜபக்சே! -குசுவிட்டுக்கலாமா? இது நேற்று என் முக நூலில் படித்தது 

    உண்மையும் இதுதான் தமிழர்களின் பெயரை சொல்லி இந்திய பணத்தை 

    விரயமடிக்கும் இந்த கூட்டத்தை மாற்ற நேரம் விரைவில்... இலங்கையில் தமிழர்களுக்காக முதல் கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்டி வழங்கும் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தியது. இதில் கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட 135 வீடுகளையும், யாழ்ப்பாணத்தில் கட்டப்படட 48 வீடுகளையும் தமிழர்களுக்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா வழங்கினார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருக்கிறது. இதில் முதல் கட்டமாக 1000 வீடுகளை கட்டும் திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம். மேலும் 49 ஆயிரம் வீடுகளை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற இலங்கை அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தமிழர்களுக்கு தேவையான அனைத்து மறுவாழ்வு திட்டங்களையும் படிப்படியாக நிறைவேற்றுவோம். கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட 79 பள்ளிக்கூடங்களை சீரமைக்கும் பணியை இந்தியா செய்து வருகிறது. இதில் முதல் கட்டமாக சீரமைக்கப்பட்ட பள்ளிக்கூடத்தை அதன் நிர்வாகிகளிடம் வழங்கி இருக்கிறேன். மற்ற பள்ளிக்கூடங்களையும் விரைவில் சீரமைத்து வழங்குவோம்.   தமிழர்களின் குழந்தைகளுக்கும் கல்வி தாராளமாக கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையில் மனிதவள மேம்பாட்டுக்கு உதவும் வகையில், இந்திய அரசு 100 கோடி ரூபாயை கல்வி உதவிக்காக அளிப்பதில் பெருமை அடைகிறேன். இலங்கை மாணவர்களுக்கான கல்வி கட்டணம், புத்தக கட்டணம், தங்குவதற்கான கட்டணம், மாதாந்திர சம்பளம் உள்ளிட்ட இந்த உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

    மேலும் இளநிலை படிப்பிற்கு 120 இடங்களும், கணினி பொறியியல் படிப்பிற்கு 25 இடங்களும், முதுநிலை படிப்பிற்கு 50 இடங்களும்,  சுய நிதி திட்டத்தின் கீழுள்ளதற்கு 40 இடங்களுமாக இந்த திட்டம் மும்மடங்கில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது  என கூறினார்

    டெலிபோன் பில் முறையில் மாற்றம்...

    சென்னை நகரில் பி.எஸ்.என்.எல். 'லேண்ட்லைன்' டெலிபோனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சம் வரை உள்ளது. டெலிபோன் பில் மாதம் ஒரு முறையும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறையும் வருகிறது. வாடிக்கையாளர்கள் முழு விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் டெலிபோன் பில் முறையில் புதிய மாற்றம் செய்யப்படுகிறது. இந்த புதிய பில்லின் முறைப்படி தாங்கள் பயன்படுத்திய லோக்கல் கால், எஸ்.டி.டி. கால் கட்டணத்தை தனித்தனியாக தெரிந்து கொள்ளலாம்.
     
    முன்பு இருந்த பில்லில் மொத்தமாக குறிப்பிடப்பட்டு இருக்கும். இதற்காக சி.டி.ஆர். (முழு மையான கால் விவரம்) பில்லிங் 'சாப்ட்வேர்' விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த மாதம் பில்லில் இருந்து புதிய முறையில் அமல்படுத்தப்படும். ஆன்லைன் மூலம் டெலிபோன் பில் கட்டுபவர்கள் தினசரி தாங்கள் பயன்படுத்தும் 'கால்' விவரங்களை தெரிந்து கொள்ளலாம். கட்டண தொகையை அவ்வப்போது அறிந்து கொள்வதன் மூலம் அதற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இறந்தபோது அழுகாதவர்களுக்கு தண்டனை!

    வடகொரியாவில் சமீபத்தில் மரணம் அடைந்த அதிபர் 2வது கிம் ஜோங் மறைவின்போது இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும், இறுதி சடங்கில் கலந்து கொண்டபோது வாய்விட்டு அழாதவர்களுக்கும் தண்டனை கொடுக்க அந்த நாட்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


    அவர்கள் தொழிலாளர் வேலைவாய்ப்பு முகாமில் 6 மாதம் உழைக்க வேண்டும். 2வது கிம் ஜோங்கின் தந்தை கிம் 2வது சுங் 1994ம் ஆண்டு மறைந்தபோதும் இவ்வாறு தண்டனை அளிக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக, யார் அதிக அளவில் அழுதது? யார் அதிக அளவில் துக்கத்தை வெளிப்படுத்தியது? என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விவரம் சேகரித்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. யார் நல்லா அழுததுன்னு பார்த்து அரசாங்கத்துல பதவி ஏதும் கொடுப்பாங்களோ என்னமோ? 

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2012









    போலீசாரை நம்பி பயனில்லை...?

    முன்பெல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் கொலை வழக்குகளில் அல்லது மிக முக்கியமான வழக்குகளில் துப்பு கொடுப்பவர்களுக்கு போலீசார் வெகுமதி கொடுபதாக அறிவிப்பார்கள். ஆனால், இப்போது கொலை செய்யப்பட்ட ஒருவரின் கொலைக்கான காரணம் பற்றியும் காணமல் போன அவரது மனைவியை பற்றியும் துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுபதாக கொலையானவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர். போலீசாரை நம்பி பயனில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள்.

    சேலம் மாவட்டம், ஓமலூர் பக்கமுள்ள கோட்டை மேட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). விவசாயம் செய்து வரும் இவரது மனைவியின் பெயர் அமுதா (வயது 28). இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. கணேசன் விவசாயம் செய்வதுடன், கூடுதலாக நிலத்தை வாங்கி வீட்டுமனைகளாக பிரித்தும் விற்பனை செய்தும் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 21.4.2011 அன்று வீட்டுக்கு வெளியில் படுத்திருந்த கணேசன் கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மனைவி அமுதா மற்றும் கணேசனின் எட்டுமாத கை குழந்தையையும் காணவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் ஓமலூர் போலீசார் எட்டு மாதங்களாக விசாரணை நடத்தியும் கணேசனை கொலை செய்த குற்றவாளிகளையும், காணாமல் போன கணேசனின் மனைவி அமுதாவையும் கண்டுபிடிக்கவில்லை.

    தனது மகளை கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறி அமுதாவின் தந்தையார் வெங்கடாசலம் என்பவர் சென்னை உயர்நீதின்றத்தில் ஹைபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட கணேசனின் தாயார் நல்லக்காள் மற்றும் கணேசனின் அண்ணன் பச்சியப்பன் ஆகியோர் சார்பில் ஓமலூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களில் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், கணேசனின் கொலை குறித்தும், காணமல் போன கணேசனின் மனைவி அமுதாவை பற்றியும் ஏதாவது பயனுள்ள தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துளனர்.

    தகவல் கொடுக்க விரும்புகிறவர்கள் ஒமலூர் காவல் நிலையத்துக்கு வந்து ஆய்வாளரிடம் தகவல் கொடுக்கலாம் என்றும் தகவல் கொடுப்பவரின் பெயர் மற்றும் விபரங்கள் பாதுகாகப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இப்படி, தமிழ்நாடு போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க வெளிநாட்டு போலீசாரை கூப்பிட்டால் கூட அவர்களுக்கு பணம் கொடுத்து வழக்கை விசாரிக்க பலர் தயாராக இருக்கிறார்கள்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...