|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 March, 2013

பரதேசி ரியாலிடீ ட்ரேலர்

இப்புடியா சார் நடிக்கணும்னு கேட்டு பாலாவுக்கு எவனாவது


திருப்பிக்குடுக்காமலா இருந்திருப்பான். அதையும் காட்டிருந்தா டீசர் 


இன்னும் ரியலா இருந்திருக்கும். லூசு..லூசு.....


இவன் ஒருவனை அனுப்பினால்?

தமிழனை தரக்குறைவாய் பேசும் நாய்களை மென்னு முழுங்கி தண்ணி குடிக்க வைக்கும் தமிழின தலைவன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விவசாயிகள் பிரச்னைக‌ளுக்காக விருதுநகரில் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார். சிவகாசி மக்களவை (இப்போது விருது நகர்) தொகுதியில் இதற்கு முன்பு எம்.பி. தேர்தலில் நின்று வெற்றிபெற்ற வைகோ, கடந்த முறை தோல்வியை தழுவினார். இப்போது இது காங்கிரஸ் தொகுதியாக இருந்தாலும், சிவகாசியில் உள்ள‌ வைகோவின் எம்.பி. அலுவலகம் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமீபகாலமாக விருதுநகர் தொகுதியில் அடிக்கடி சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு கட்சியினரை சந்தித்தும் வருகிறார் வைகோ. இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி நாளை (மார்ச் 14 ) விருதுநகரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார் வைகோ. இந்த திடீர் அறிவிப்பால் மீன்டூம் வைகோ விருதுநகரில் போட்டியிடப் போகிறார் என்று ஆருடம் சொல்கிறார்கள் ம.தி.மு.க.வினர். 

இது தொடர்பாக விகடன் டாட் காமிடம் பேசிய அவர்கள், ''வைகோவுக்கு தூத்துக்குடி, விருதுநகர் லோக்சபா தொகுதியில் நல்ல செல்வாக்கு உண்டு. இதை பல்ஸ் பார்க்கும் விதமாகத்தான் தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் உவரியிலிருந்து பாதயாத்திரை தொடங்கி, விருதுநகர் லோக்சபா தொகுதி முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து மதுரையில் யாத்திரையை முடித்தார். அடுத்தபடியாக இப்போது விருதுநகரில் விவசாயிகள் பிரச்னைகளுக்காக உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார். எனவே விருதுநகர் தொகுதியில் வைகோ மீண்டும் களமிறங்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது" என்றனர் உற்சாகமாக! 

நம்பிக்கையோடு இலங்கை வாய் திறக்குமா இந்தியா?


"சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியா எங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்கும் என நம்புகிறோம்' என, இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது, போர் குற்றம் நடந்ததாகவும், அது குறித்து சர்வதேச அளவில், நம்பிக்கைக்குரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இந்த தீர்மானத்தின் மீதான விவாதம், நாளை துவங்குகிறது. இது தொடர்பான ஓட்டெடுப்பு, வரும் 21ம்தேதி, நடக்கிறது.இந்த தீர்மானத்தின் போது நடக்கும் விவாதத்தில், தங்கள் நாட்டு தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பதற்காக, இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கா, ஜெனிவாவுக்கு சென்றுள்ளார். இதற்கிடையே, இலங்கை வெளியுறவு செயலர் கருணதிலகா அமுனுகாமா குறிப்பிடுகையில், ""அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் தொடர்பாக, கடைசி நேரத்தில், இந்தியா, எங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்கும் என நம்புகிறோம்,'' என்றார்.

தமிழறிஞர் கா.நமச்சிவாயம் இறந்த தினம்(1936)


தமிழ்நாடு வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் ராமசாமி முதலியார்-அகிலாண்டவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ராமசாமி முதலியார் காவேரிப்பாக்கத்தில் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நமச்சிவாயர் தம் இளமைக்கால கல்வியைக் கற்றார். நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி முதலிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த இவர், தமது பதினாறாவது அகவையில், காவேரிப்பாக்கத்தை விட்டு நீங்கி, சென்னைதண்டையார்பேட்டையில் தங்கி, அங்கிருந்த ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். 1906-ஆம் ஆண்டு சுந்தரம் என்னும் அம்மையாரை நமச்சிவாயர் மணந்து ஆண்மக்கள் இருவரையும் பெண் மக்கள் இருவரையும் பெற்றெடுத்தார். தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றி வந்த மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளையிடம் மாணாக்கராக இருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பன்னிரண்டு ஆண்டுகள், தண்டையார்பேட்டையிலிருந்து மயிலாப்பூருக்கு ஞாயிறுதோறும் நடந்தே சென்று பாடம் கேட்டுவந்தார் நமச்சிவாயர். மகப்பேறு இல்லாத மகாவித்துவான், நமச்சிவாயரைத் தமது மகனாகவே கருதி தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தந்தார்.

தமிழாசிரியராகப் பணியாற்ற விரும்பிய நமச்சிவாயருக்குத் தொடக்க காலத்தில் அப்பணி எளிதில் கிட்டவில்லை. 1895-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிறிய வேலையில் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு அதிலிருந்து நீங்கி, சென்னை செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். பின்னர், ராயபுரத்தில் இருந்த "நார்த்விக்' மகளிர் பாடசாலையிலும் அதன்பிறகு "சிங்கிலர்' கல்லூரியிலும் தமிழ்ப் பணியாற்றினார். 1902 முதல் 1914 வரை சென்னைவேப்பேரியில் இருந்த எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் (தற்போது புனித பால்ஸ் பள்ளியில்) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1914-ஆம் ஆண்டில் பெண்களுக்கென அரசினரால் தொடங்கப்பட்ட ராணிமேரி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஆண்கள் எவரும் பணியாற்ற முன்வராத நிலையில், துணிவோடு அப்பணியை ஏற்றுச் சிறப்பித்தார் நமச்சிவாயர். இறுதியாக, ராஜதானிக் கல்லூரி (மாநிலக் கல்லூரி) யில் தமிழ்ப் பேராசிரியர் பணி இவரைத்தேடி வந்தது. உ.வே.சாமிநாதய்யர்மறைமலை அடிகளார்திரு.வி.க., ஆகியோர் நமச்சிவாயர் காலத்து வாழ்ந்த சான்றோர்களாவர். சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, சென்னை விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை மேனாள் தலைவர் சி.ஜெகந்நாதாசாரியார், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் பி.எஸ்.கைலாசம், மேனாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசன் ஆகிய பெருமக்கள் பேராசிரியர் கா.நமச்சிவாயரிடம் பயின்ற மாணாக்கர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இலங்கையில் பிரமாண்டமாக உருவாகும் கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட்!



இலங்கையில் முன்னாள் திமுக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலம் மிக பிராமாண்ட அளவில் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இறுதிகட்டப் போரின் போது தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் கொத்துக் குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசியது. போர் நடந்தபோது இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசினார். இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார். அப்போது அவரது குரல் கம்மியது. அவரது பேச்சுக்கு அனைத்து திமுக உறுப்பினர்களும் கை தட்டி பாராட்டு தெரிவித்தனர். ஆனால் போருக்கு பின்பு தயாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வாரம் 4 முறை ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நடைபெறுகின்றதாம். சிங்கள வியாபாரிகள் தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு வந்து போக ஸ்பைஸ்ஜெட் விமானம் தங்களுக்கு ஏதுவாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்களாம். ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகம் செயல்பட கொழும்பில் பிரமாண்டமான கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்களாம். இதற்கு மேல் உண்மைகளை மக்கள் முன்பு விளக்க வேண்டியது தயாநிதி மாறனின் கடமையாகும்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...