|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 January, 2013

போ...செத்துப்போ.. நான் தடுக்க முடியுமா?


வரைமுறையைக் கடைபிடிக்காமல், உடற்பயிற்சியை செய்தால் பலன்?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலை பராமரித்துக் கொள்ளுதல் மிக அவசியம். சிலர் உடல் கட்டுமானத்துடன் வைத்து கொள்ள விரும்புவர். அப்படி உடல் கட்டுமானத்துடன் இருக்கையில், எத்தகைய உணவுகளை உண்ண வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது. அந்த வரைமுறையைக் கடைபிடிக்காமல், எந்த ஒரு உடற்பயிற்சியை செய்தாலும் அது பலன் தராது. இவ்வாறு மேற்கொள்வதால் நம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை நீக்கி, உடலுக்கு ஏற்ற எடையை தயார் செய்து, ஆரோக்கியமான உடலமைப்பைக் கொடுக்கும். இப்போது எதை சாப்பிடலாம், எதை சாப்பிடகூடாது மற்றும் எந்த வகையான உணவுகள் உடல் கட்டுமானத்திற்கு ஏற்றது
   
1. நம் உடலை கட்டுமானத்துடன் வைக்க அடிப்படைத் தேவை புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகள், குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புள்ள உணவை சாப்பிட வேண்டும். அதற்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ள உணவு திட்டத்தை பின்பற்றவும். மசாலா அதிகமுள்ள உணவை தவிர்க்கவும். சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம். காலைளில் குடிக்கும் டீ அல்லது காப்பியில், சர்க்கரை அல்லது கிரீம் சேர்த்து கொள்ள விரும்பினால், ஆடை இல்லாத பால் பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு நல்லது. 
 
 2. ஒவ்வொரு 2-3 மணிநேர இடைவெளியில் உணவு சாப்பிட வேண்டும். உடல் கட்டுமானத்தை வலியுறுத்த புரதங்கள் கொண்ட உணவினையும், உங்கள் உணவில் அதிக காய்கறிகளை சேர்த்து கொள்வதும் அவசியம். மேலும் நார்சத்து நிறைந்த உணவை சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலானது சரியான நிலையில் இருக்க உதவும். ஒருவேளை ஒரு நேரம் உணவை சாப்பிடவில்லை எனில், அதை ஈடு செய்ய அடுத்த உணவு நேரத்தில் சேர்த்து சாப்பிடக்கூடாது. 
 
3. காலையில் ஆளிவிதை 1 டீஸ்பூன் அப்படியே எடுத்து கொள்ள வேண்டும் அல்லது பாலில் ஆளிவிதை தூள் சேர்த்து குடிக்க வேண்டும். சில சமயங்களில் அதை சமையலில் சீரகத்தை பயன்படுத்துவது போல், சப்பாத்தி, சாலட், மோர், பொரியல் ஆகியவற்றில் தூவி பயன்படுத்தலாம். ஆளிவிதை எண்ணெய்கள் பல கடைகளில் கிடைக்கும். எனவே அந்த எண்ணெய்களை பயன்படுத்தி கூட சமைத்து சாப்பிடலாம். இதனால் மூட்டுகளில் வலி ஏற்படாமல் தடுக்கும். 
 
 4. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஏனெனில் சிலர் நீர்ப்போக்கு இருப்பதை அறியாமல் பசிக்குது என்று குழப்பத்தில் இருப்பர். எனவே எடையை இரண்டாக பிரித்து பார்த்து, அதன் வழியில் நாம் தண்ணீர் குடிப்பது ஒரு பொதுவான வழி. எடுத்துக்காட்டாக, நீங்கள் 150 பவுண்ட் எடை என்றால், நீங்கள் தினமும் 75 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யவும். மெட்ரிக் முறையில் பயன்படுத்துவோர், உங்கள் எடையை (கிலோகிராம்) முறையில் 30 ஆல் வகுத்து கொள்ளவும். உதாரணமாக, 70 கிலோ எடையுள்ளவர், ஒரு நாளைக்கு 2.3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்புகள்: குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்தது 23 கிராம் புரதச்சத்து கொண்ட உணவை எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை அளவு 3 கிராமிற்கு குறைந்து இருக்க வேண்டும். பல கடைகளில் சர்க்கரை இல்லாத பண்டங்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கும் முன் ஒருமுறை அதனை பற்றி நன்கு தெரிந்துகொண்டு உபயோகித்தல் நல்லது

 
 

இடப் பெயர்வினால் எச்ஐவி இந்தியாவில் அதிகரித்து?

பெரிய அளவில் நடைபெறும் இடப் பெயர்வினால் எச்ஐவி பாதிப்பு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இன்றைக்கு கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாடு முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு ஊர்களுக்கும் பெருமளவில் மக்கள் இடம் பெயர்கின்றனர். இவ்வாறு கூட்டம் கூடடமாக இடம் பெயர்ந்து போவதன் காரணமாக எச்ஐவி பரவலும், எய்ட்ஸ் பரவலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாம்.இது அபாயகரமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு! 
 
2001 இந்தியமக்கள் தொகைக் கணக்குப்படி இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குப் பேர் இடம் பெயர்ந்தோர் ஆவர். அதாவது 27.4 சதவிகிதம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.பொது மக்கள் தொகையை விட இந்த இடம் பெயர்ந்தோர் மத்தியில் எச்ஐவி பரவல் கூடுதலாக இருப்பதாக, அதாவது 10 மடங்கு அதிகமாக இருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம்,மகாராஷ்டிரவில் 2009 கணக்குப்படி 18..6 சதவீதம் பேருக்கு பாலியல் வியாதிகள் இருந்ததாம். இவர்களில் 45 சதவீதம் பேர் முறையான சிகிச்சை பெறவில்லை. 76 சதவீதம் பேர் எய்ட்ஸ், எச்ஐவியின் சீரியஸ் தன்மை குறித்து தெரிந்திருக்கவில்லை. 13 சதவீதம் பேர்தான முறையான சிகிச்சை பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் சுமார் 21 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 சதவிகிதம் 15 வயதுக் குட்டபட்டவர்களும், 86 சதவிகிதம் 15 முதல் 49 வயதுக் குட்பட்டோரும் அடங்கும். இதில் 39 சதவிகிதம் அதாவது 8 லட்சத்து 16 ஆயிரம் குடும்பப் பெண்கள் எய்ட்ஸ் நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது வருந்தத்தக்க விஷயம்.நாடு முழுவதிலும் உள்ள செக்ஸ் தொழிலாளர்களிடையே குறிப்பாக பெண்களிடையே எய்ட்ஸ் நோய் கணிசமாகக் குறைந் துள்ளதாக ஒரு ஆய்வு தெரி விக்கிறது. இந்த ஆய்வின்படி கடந்த 2007-ல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் செக்ஸ் தொழிலாளர்களின் சதவிகிதம் 5.06 ஆக இருந்தது. ஆனால் கடந்த வருடம் இது 2.67 ஆகக் குறைந்துள்ளது. விழிப்புணர்வு காரணமாகவே இது தடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.
 

 

அரசியல் பழிவாங்கல்களை முடிவுக்கு கொண்டுவர விஸ்வரூபமெடுக்க வேண்டும்!

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தடையின் பின்னணி தொடர்பாக எராளமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் நிஜம் என்ன என்பதை கற்பனை கதைகளால் மறைத்துவிட முடியாது. விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தடை என்பது இந்த நாட்டின் சகிப்புத் தன்மை எப்படி குறைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அண்மைக்காலமாக நடிகர்கள், எழுத்தாளர்கள் என பலரும் இலக்கு வைக்கப்பட்டு கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாகி வருவது அதிகரித்து வருகிறது. மதச்சார்பற்ற மாண்புகள் கொண்ட ஒரு ஜனநாயக குடியரசில் இத்தகைய போக்குகள் ஆரோக்கியமானது அல்ல. தமிழகத்தில் பல ஆண்டுகாலமாக கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் மிகவும் அதிகரித்தே இருக்கின்றன. 
 
தமிழகத்தில் திரை உலகத்தை சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகளாக உருவெடுப்பதும் ஏன் முதல்வர் பதவியில் அமருவதும் நடந்து கொண்டு இருக்கிறது. 1960களுக்குப் பிந்தைய காலத்தில் திமுகவும் அதிமுகவும் ஏராளமான கதாநாயன்கள், வில்லன்கள், நகைச்சுவை நடிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி கட்சி சார்ந்து அரசியல் இருக்கும் திரை உலகத்தினர் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது வேட்டையாடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுதான் கடந்த காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி ஏன் எதிர்காலத்திலும்கூட இது தொடரவே செய்யப் போகிறது. தற்போது பிரபல நடிகரான கமல்ஹாசன் இப்படி புதிய பலிகடாவாகியிருக்கிறார்.

ரசிகர்களின் மனோநிலை என்ன என்பதை உணர்ந்து அதை திரையில் படைக்கக் கூடியவர் கமல்ஹாசன். தமிழ்த் திரை உலகில் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டவர் வேறு யாரும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரத்துக்கு அரசியலின் பெயரால் நெருக்கடியை கொடுத்திருப்பது தமிழகத்துக்கு மாபெரும் அவமானம். கமல்ஹாசனே சொல்வதைப் போல தனது சொத்து முழுவதையும் விற்று ரூ100 கோடி அளவில் முதலீடு செய்து விஸ்வரூபத்தை உருவாக்கியுள்ளார். தற்போது அவரது திரை உலக சகாக்கள் பலரும் கூட அவரிடமிருந்து விலகி இருக்கவே செய்கின்றனர். எங்கே தாங்களும் இலக்கு வைக்கப்பட்டு விடுவோமோ என்று அவர்கள் அச்சப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டி எழுப்பினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமமான உரிமைகள் இருக்கின்றன என்பதை நிலைநாட்டினார் அவர். அவரது அரசியல்தான் தமிழகத்து அரசியலை ஒழுங்கமைத்தது. அத்தகைய ஒரு தேவை தற்போது உருவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகரிக்கும் அரசியல் பழிவாங்கல்கள், வேட்டையாடுதல்களை முடிவுக்குக் கொண்டு வர அத்தகைய ஒரு இயக்கம் தற்போது அவசியம்!
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...