|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 February, 2012

பார்த்ததில் பிடித்தது!





இதே நாள்...


  • புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1849)
  •  நாஸ்டாக் பங்கச் சந்தை குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது(1971)
  •  இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன(2005)
  •  அப்பர் வோல்ட்டாவில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது(1974)
  •  மரண தண்டனைகளுக்கு நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை‌யை முதல் முறையாக அமெரிக்கா, நெவாடாவில் அறிமுகப்படுத்தியது(1924)

அதிக வேலை இதயத்திற்கு ஆபத்து...

தினமும் 11 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதிக நேரம் உழைக்க நேர்ந்தால் இடையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம் என்பது ஆய்வாளர்களின் அறிவுறுத்தலாகும்.

லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு இந்த முக்கியமான ஆய்வுகளை நடத்தியது. கடந்த 11 வருடங்களுக்கு மேலாக அரசாங்க ஊழியர்களாகப் பணிபுரியும் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் மருத்துவ அறிக்கைகளைக் கொண்டு அவர்களின் இதயத் தொழிற்பாட்டின் நிலை பற்றி மதிப்பீடுகள் செய்யப்பட்டன. இதய நோய்க் கோளாறுகளுக்காக சிகிச்சைப் பெற வருபவர்களிடம் அவர்கள் மது அருந்துகின்றனரா, புகைப் பிடிக்கின்றனரா என்றெல்லாம் கேட்பது போல் அவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தொழில் புரிகின்றனர் என்றும் கேட்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக வேலை ஆபத்து சாதாரணமாக ஒன்பது மணி முதல் ஐந்து மணி வரை தொழில் செய்பவர்களிலும் பார்க்க ஒரு நாளைக்கு 11 மணிநேரம் தொழில் புரிபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் 67 வீதம் அதிகமாகவே உள்ளது. தொடர்ந்து 11 மணிநேரம் வேலை செய்பவர்களுக்கு மற்றவர்களைப் பார்க்கிலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்றில் இரண்டு மடங்கு அதிகம் என்று தெரியவந்தது.புகைத்தல் மற்றும் மது அருந்தல் காரணமாக இதயக்கோளாறை எதிர் கொண்டுள்ளவர்களுக்கு வேலை நேரத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் அதிக ஆபத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம், என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் மிகா கிவிமகி தெரிவித்துள்ளார்.

ஓய்வு அவசியம் இங்கிலாந்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 2.6 மில்லியன் பேர் உள்ளனர். அங்கு கூடுதலான மரணங்களுக்குக் காரணமான நோயும் இதுவே. மாரடைப்பு உட்பட இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் 101000 பேர் பலியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுவலகத்தில் தொடர்ந்து 12 மணிநேரம் உழைக்க வேண்டுமானால் இடையில் சிறிது ஓய்வெடுக்க வேண்டியது அவசியம் என்று ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்,

எடை குறைய...!

உடல் பருமன் என்பது இன்றைக்கு அதிகம் பேசப்படக்கூடிய விசயமாக உள்ளது. எடை குறைப்பு விளம்பரங்கள் ஒரு பக்கம் காசை கறக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் தாங்களாகவே எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர் பலர். உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம் என்பதை விட எதை செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர் உணவியல் வல்லுநர்கள்.

காலை உணவுக்கு கட் கூடாது எடை குறைப்பு முயற்சிக்கு முதலில் செய்வது உணவை தவிர்ப்பது. அதுவும் பெரும்பாலோனோர் காலை உணவை கட் செய்துவிட்டு அலுவலகம் செல்கின்றனர். இது தவறான பழக்கம் என்கின்றனர் உணவியலாளர்கள்.இரவில் உண்ட உணவு ஜீரணமாகி உடலானது சக்தியை எதிர்நோக்கி காத்திருக்கும் போது அதற்கு தேவையான ஆகாரத்தை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக திகழும். எனவே காலை நேரத்தில் அதிக அளவில் உணவுகளை உண்ணாமல் ஜூஸ், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். இதனால் சரிவிகித சக்தி கிடைக்கும்.

மாவுச்சத்து உணவுகள் உடல் எடைக்கு மாவுச்சத்துள்ள உணவுகள்தான் எதிரி என்று நினைத்துக் கொண்டு அனைத்துவகையான கார்போஹைட்ரேட் உணவுகளையும் தவிர்த்து விடுவர். இது தவறானது என்கின்றனர் வல்லுநர்கள். ஏனெனில் கார்போ ஹைடிரேட்தான் நமது இயக்கத்திற்கு தேவையான சக்தியைத் தருகிறது. அதேசமயம் உடலுக்கு தீங்கு விளைக்கு விளைக்கும் சோடா, குளிர்பானங்கள் போன்றவைகளை தவிர்க்கலாம். அதேசமயம் புருக்கோலி, உருளைக்கிழங்கு, உள்ளிட்ட காய்கறிகள், மேலும் பழங்களில் உள்ள கார்போ ஹைட்ரேட் பொருட்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளை உட்கொண்டால் உடல் எடைக் கூடும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

ஜங்க் ஃபுட், நொறுக்குத்தீனி உடல் எடையை குறைப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் உணவைத் தவிர்ப்பவர்கள் பலர் உண்டு. அதேசமயம் தொலைக்காட்சி பார்க்கும் சாக்கிலோ, திரைப்படம் பார்க்கும் போதோ கிலோ கணக்கில் சிப்ஸ், பர்க்கர், உள்ளிட்ட ஜங்க் ஃபுட்களை உள்ளே தள்ளுவார்கள். இதுவும் உடல் நலத்திற்கு தீங்கானது என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதமாக உட்கொள்ள முடியாதவர்கள் காய்கறி சாலட்ஸ், பழங்கள் போன்றவைகளை உட்கொள்ளலாம் இது உடல் எடையை குறைக்கும்.

சரிவிகித கலோரி அதிக கலோரி தரும் உணவுகளை தவிர்க்கிறேன் பேர்வலி என்று எதையாவது உண்ணக்கூடாது. பாதாம் பருப்பு, மூன்று ஆப்பிள் பழங்களை உண்ணும் போது கிடைக்கும் கலோரி சீஸ்பர்கரும், கோக் குடிப்பதன் மூலமும் ஏற்படும். எனவே எந்த விகிதத்தில் கலோரி உணவுகளை உட்கொள்கிறோம் என்பது முக்கியம் என்கின்றனர் உணவியலாளர்கள்.

எடைக் குறைப்பு சாதனங்கள் உடல் எடையை குறைப்பதற்காக விற்பனை செய்யப்படும் சாதனங்கள், மாத்திரைகள் போன்றவைகளைப் பயன்படுத்தினால் உடல் எடை குறையும் என்பது அனைவரின் நம்பிக்கை. இந்த பொருட்கள் உடல் எடைக்குறைப்பிற்கு உதவி புரியுமே தவிர முழுவதுமாக அவற்றை மட்டுமே நம்பக்கூடாது என்கின்றனர் உணவியலாளர்கள். நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் வைக்க நாம் சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்கலாம் என்பதே அவர்களின் அறிவுரை.

ஐஐஎம் அகமதாபாத்தில் 'கொலவெறி' லெக்சர் கொடுத்த தனுஷ்!


நடிகர் தனுஷ் தான் பாடிய 'கொலவெறி' பாடலின் வெற்றி குறித்து ஐஐஎம் அகமதாபாத் மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார். 3 படத்தில் தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி' பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது. இதனால் அவரது புகழின் உச்சிக்கே சென்றுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் கூட தனது வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு தனுஷை அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது கொலவெறி பாடலின் புகழ் குறித்து அவர் இந்தியாவின் தலைசிறந்த பிசினஸ் ஸ்கூலான ஐஐஎம் அகமதாபாத்தில் உரை நிகழ்த்தினார்.அங்கு திரைப்படத் துறை குறித்த படிப்பு படிக்கும் 150 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனுஷிடம் கேள்விகள் கேட்டனர்.

பின்னர் அவர் டுவிட்டரில், ''ஐஐஎம் அகமதாபாத் மிகவும் அழகாக உள்ளது. அங்குள்ளவர்களும் சரி, இடமும் சரி. மாணவர்கள் நல்ல கேள்விகளைக் கேட்டனர். அருமையான அனுபவம்'' என்று கூறியிருக்கிறார்.உரை நிகழ்த்தும் முன்பு அவர் டுவிட்டரில் கூறுகையில், ''ஐஐஎம் அகமதாபாத்தில் நாளை உரை நிகழ்த்த தயாராகிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேச வராது. ஆனால் அதையெல்லாம் யார் கண்டார். நான் இந்தியன், ஆங்கிலேயன் அல்ல. ஹி...ஹி...ஹி.. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார். 

ஒரே எண்ணை 2 பேருக்கு கொடுத்து குழப்பம்!


தென்காசியில் தனியார் செல்போன் நிறுவனங்கள் ஒரே எண்ணை 2 பேருக்கு கொடுத்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஒரு சிம் கார்டு வாங்கியுள்ளார். பின்னர் செல் நம்பரை மாற்றாமலேயே நிறுவனங்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்த பிறகு அவர் அதே நம்பருடன் மற்றொரு தனியார் செல் நிறுவனத்திற்கு மாறியுள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பாலசுப்பிரமணியனின் எண்ணுக்கு கம்பத்தைச் சேர்ந்த பகவதிராஜ் என்ற பெயரைக் கேட்டு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. அவர்களிடம் பாலசுப்பிரமணியன் தான் தென்காசியை சேர்ந்தவர் என்ற விபரத்தை கூறியுள்ளார். இதையடுத்து தொடர்பு கொண்ட நபர்கள் பகவதிராஜை நேரில் சந்தித்து விபரத்தை தெரிவித்துள்ளனர். 

சிறிது நேரத்தில் பகவதி ராஜூம் தென்காசியில் உள்ள பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது திரையில் தனது செல் நம்பரில் இருந்தே தனக்கு அழைப்பு வருவதை பார்த்து பாலசுப்பிரமணியன் அதிரிச்சி அடைந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை தான் கம்பத்தைச் சேர்ந்த பகவதிராஜுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கும் ஒரே எண் இருக்கும் விஷயம் தெரிந்து இருவரும் அதிர்ந்தனர். பகவதிராஜுக்கு அவுட் கோயிங் கால்கள் செல்லும்போது அதே வேளையில் இன்கமிங் கால்கள் அனைத்தும் பாலசுப்பிரமணியனின் செல்போனுக்கு வருகிறது. போனில் தொடர்பு கொண்ட பலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கடும் மனஉளைச்சலுக்கு ஆளான பாலசுப்பிரமணியன் நுகர்வோர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார்.

கர்நாடக முன்னாள் அமைச்சர்களுக்கு தடை...

சட்டசபையில் அமர்ந்து மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டில் தங்களது அமைச்சர் பதவியை இழந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரை, சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சபாநாயகர் போபய்யா தடை விதித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கொண்ட விசாரணை கமிட்டி ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ள அவர், கமிட்டி தன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் வரை, இம்மூவரும் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...