|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 January, 2014

இயற்க்கை இருக்க செயற்கையை நாடும் நமது அரசு

விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு திருட்டு!


கடந்த சனிக்கிழமையன்று ஐதராபாத்தின் மத்திய பகுதியிலுள்ள பஞ்சகுட்டா பகுதியில் உள்ள டனிஷ்க் நகைகடையில் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்திருந்தது. அச்சம்பவத்தில் 23 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினரோ 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தான் கொள்ளை போனதாக தெரிவித்தனர்.

கொள்ளை நடந்த ஒரு நாளுக்கு பின் திடீர் திருப்பமாக முன்னணி தெலுங்கு செய்தி சேனல் அலுவலகத்துக்கு வந்த கிரண்குமார் என்ற 23 வயது நபர், அக்கொள்ளை சம்பவத்தில் தான் ஈடுபட்டதாக கூறினார். தான் சரணடைய விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதுமட்டுமன்றி செய்தி சேனல் குழுவினரை தான் தங்கியிருந்த அறைக்கு அழைத்து சென்று கொள்ளையடித்த நகைகளை காண்பித்தார்.

பின்னர் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அப்போது பேசிய அவர் மக்களின் கவனத்தை ஈர்க்கவே தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறினார். நாட்டை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை பார்த்து தான் வேதனையடைந்ததாக கூறிய அவர் தனக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என தெரிவித்தார். ஒரு நாளில் தான் கொள்ளையடித்தாகவும், அரசியல்வாதிகள் வருடக்கணக்கில் கொள்ளையடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...