|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2011

பார்த்ததில் பிடித்தது!


சரிவிகித உணவால் இதயநோயை தடுக்கலாம்.


இன்றைய அவசர யுகத்தில் அரக்க பரக்க வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் கிடைப்பதை உண்டுவிட்டு அலுவலகத்திற்கு செல்வதில் குறியாக இருக்கின்றனர். சரிவிகித உணவு உட்கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இதனால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயபாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சுவரை வைத்துதான் சித்திரம் வரையமுடியும். சரிவிகித உணவு உட்கொண்டால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள முடியும். இதயநோய் வராமல் பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்கள்.

மதுவும் புகையும் மதுப்பழக்கம் இதயத்திற்கு எதிரியாகும். இது இதயத்தின் தசைகளை வலுவிலக்கச்செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் எற்படுகிறது. எனவே அதிக அளவு மதுவுக்கு அடிமையானவர்கள் படிப்படியாக குறைத்து பின்னர் அதனை முற்றிலும் விட்டு விடுவது இதயத்திற்கு நன்மை தரும் புகைப்பழக்கம் கொண்டவர்களின் வாழ்க்கை 15 முதல் 25 ஆண்டுகள் வரை குறைந்து விடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே புகைப்பதை நிறுத்தினால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.

உணவும் உடற்பயிற்சியும் சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். அது இதயத்திற்கு இதம் தருவதோடு உடலையும், உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக்கும்.

உணவில் உப்பை குறைக்கலாம் வெள்ளை அரக்கன் எனப்படும் உப்பு இதயத்திற்கு எதிரியாகும். இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் பாதிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.

தியானம் அளவிற்கதிமாக புகையோ, மதுப்பழக்கமோ இதயத்திற்கு ஆபத்தானது. இது இதயநோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே யோகா, தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். குடும்பத்தினரும் ஒரு ஜாலி ட்ரிப் சென்று வரலாம்.

மருத்துவ பரிசோதனை கெட்ட கொழுப்பானது ரத்த நாளங்களில் உட்புகுந்து இதயத்திற்கு ரத்தம் செல்வதை தடுக்கும். எனவே அதிகம் குண்டாகாமல், உடலில் கொழுப்பு சேரவிடாமல் பார்த்துக்கொள்வது இதயத்திற்கு இதம் தரும். 35 வயதை தாண்டிவிட்டாலே அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். உடலில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றை செக்அப் செய்து கொள்வது பாதுகாப்பானது. மரபியல் ரீதியான நோய்கள் இருப்பவர்களுக்கு பரிசோதனைகள் அவசியம். பெற்றோருக்கு நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் இருக்கும் பட்சத்தில் நீங்களும் உங்களின் உடலை பரிசோதனை செய்வது அவசியம். நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்புசத்து போன்றவற்றை பரிசோதனை செய்து அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளவும்.

சிரிப்பு மருந்து கவலைகளை புறந்தள்ளிவிட்டு அதிகமாய் சிரியுங்கள். இது இதயத்திற்கு இதம் உண்டாக்கும். மனதை லேசாக வைத்துக்கொண்டால் இதயநோயாவது ஒன்றாவது.

மேக நோய்களை குணமாக்கும் சீந்திற்கிழங்கு.


மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கில் மகத்துவம் தரும் மருத்துவ குணம் உண்டு. சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சீந்திற்கிழங்கு உயிர் சத்து மிக்கது. கொடி வகையைச் சேர்ந்த இந்த கிழங்கு, சீந்தில், பேய்ச்சீந்தில், பொற்சீந்தில் என பலவகையை கொண்டுள்ளது. இந்த கிழங்கு பல்வேறு நோய்களை போக்குவதால் அமிர்தக்கொடி, அமிர்தவல்லி, சோமவல்லி, குண்டலி எனவும் இதனை அழைக்கின்றனர். 

மேகநோய்களை நீக்கும் சீந்திற்கிழங்கு அஜீரணத்தைப் போக்கி பசியை தூண்டவல்லது. இது 21 வகையான மேகநோய்களையும் நீக்க வல்லது என்று மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும். பித்தம் அதிகரிப்பதினால் ஏற்படும் நோய்களை குணமாக்கும். ரத்த பித்தத்தைப் போக்கும். 

பேய்ச்சீந்தில் எண்ணெய்  பேய்ச்சீந்திலை ஆகாசகருடன், என்று கூறுவர். இக்கிழங்கிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அனைத்துவகை சருமநோய்களையும் போக்க வல்லது. இதனை மேல்பூச்சாக பூச குழிப்புண்களையும் ஆற்றும். இந்த எண்ணெய் கால்நடைகளின் கழுத்தில் ஏற்படும் புண்கள், கழலைகளை குணமாக்கும்.

குடல்நோய் குணமடையும் பேய்ச்சீந்திற்கிழங்கின் மேல் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி நிழலில் நன்கு உலர்த்த வேண்டும். பின்பு பொடியாக்கி துணியில் சலித்து எடுத்துக்கொண்டு மருந்தாக பயன்படுத்தலாம். இதனால் ரத்தம் சுத்தமாகும். குடல் தொடர்புடைய நோய்கள் குணமாகும். காமாலை நோய் பித்தபாண்டு ஆகியவற்றைப்போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இது கழுத்தில் வரும் கழலைக்கட்டிகளை ஆற்றும். நாள்பட்ட தோல்நோய்களை குணமாக்கும். 

பொற்சீந்தில் வற்றல் பொற்சீந்தில் பித்தம் தொடர்புடைய காய்ச்சல், வாந்தி போன்றவற்றை நீக்கும். காசநோய், நீரிழிவு போன்ற நோயால் சிரமப்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாகும். இக்கிழங்கை வற்றலாக காயவைத்து உட்கொண்டால் உடலின் நச்சுத்தன்மை நீங்கும். நீரிழிவு மற்றும் காசநோய் குணமாகும்.

கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ்படம் - செங்கடல்!

கோவா திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமாவில் - 24 படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் தமிழில் ஒரே ஒரு படம் தான். (மலையாளப்படங்கள்-7, மராத்தி - 3, வங்காளம்-4, இந்தி-3, கன்னடம், போஜ்பூரி, அஸ்ஸாமிஸ், கொங்கனி, தமிழ், தெலுங்கு-தலா ஒன்று) நவம்பர் 30 தேதி இரவு பத்து மணிக்கு,  ஐநாக்ஸ் - 2 திரை அரங்கில் "செங்கடல் படம் திரையிடப்பட்டது.  "இப்போ எம்.ஜி.ஆர். இருந்தால் ஸ்ரீலங்கா காரங்க இந்த ஆட்டம் ஆடுவாங்களா, மற்றும் சில வசனங்களுக்கு தியேட்டரில் பலத்த கைதட்டல். மீடியாக்காரர்களுடன் இந்தப் படத்தின் இயக்குனர் ""லீனா மணிமேகலையின் சந்திப்பு இன்று நடந்தது. ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் ஏராளமான அகதிகள் படும் துயரங்களையும், ஆயிரக்கணக்கில் இந்திய மீனவர்கள் ஸ்ரீலங்கா கப்பற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதையும், வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்தப்படம்.  முதல் முறை சென்சாருக்கு சென்ரல் போர்டு ஆஃப் பிலீம் சர்டிபிகேஷன் படத்தை காண்பித்தபோது படத்தை நிராகரித்துவிட்டார்கள். இந்தியா, ஸ்ரீலங்கா அரசுகளின் செயல்பாடுகள் குறித்து காட்சிகள், இந்திய-ஸ்ரீலங்கா நல்லூறவில் பாதிக்கக்கூடும் என்றும் படத்தில் தனுஷ்கோடி ராமேஸ்வரம் மீனவர்கள் பேசும் சில வசனங்கள் ஆபாசமாக இருக்கின்றன என்பது காரணங்கள். அதை எதிர்த்து அப்பெல்லட் ட்ரிபியூனலுக்கு மேல் முறையீடு செய்தேன். பிறகு படத்தை வேறு கமிட்டி பார்த்து, எந்தவித "கட்  "இதt"   வெட்டுக்கள் இல்லாமல் அடல்ஸ்ட் ஒன்லி (அ) சர்டிபிகேட் கொடுத்தார்கள். 2011 ஜூலை 2ம்தேதி சென்சார் சர்டிபிகேட் - இந்தியாவில் திரையிட, வெளிநாடுகளுக்கு படத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைத்தது.  கோவா திரைப்பட விழாவில் செங்கடல் படத்தை இந்திய பனோரமாவில் திரையிட, தேர்வு செய்ததற்கு, நடுவர் குழுவின் தலைவர் பிரபல இயக்குனர் சாய் பரஞ்சபே மற்றும் ஜுறி குழுவினருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 32வது டர்பன் சர்வதேச திரைப்பட விழா, 35வது உலக மான்ட்ரீல் திரைப்படவிழா, 13வது சர்வதேச பம்பாய் திரைப்பட விழா, இந்தப்படம் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தன் சொந்தப் பணத்திலும், உறவினர்கள் (கடைசி தங்கை உள்பட) நண்பர்களிடமும் உதவிபெற்றுத் தன் படத்தை, பல சிரமங்களுக்கு நடுவே எடுத்து முடித்தேன் என்கிறார்.  ராமேஸ்வரத்திலிருந்து - 45 நிமிட பயணத்தில் உள்ள கிடாத்திருக்கை என்ற இடத்தில் உள்ள பல தெருகூத்து கலைஞர்களை இந்தப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். படம் முழுவதும் படப்பிடிப்பிலே சவுண்ட், வசனங்கள், பதிவு செய்தோம். டப்பிங் தியேட்டருக்கு செல்லவில்லை என்கிறார்.  டோக்கியோ திரைப்படவிழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் விருதை, இந்தப்படம் பெற்றிருக்கிறது. அடுத்த மார்ச்சில் (மார்ச்-2012) நடைபெறவுள்ள சர்வதேச மீனவர்கள் திரைப்பட விழாவில், முதல்படமாக செங்கடல் தேர்வு செய்யப்பட்டியிருக்கிறது. இந்தப் படத்தின் பாதிப்பால், ஒரு மீனவர் கொல்லப்படுவது தடுக்கப்பட்டால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, என் முயற்சி பயனுள்ளதாக ஆகிவிடும் என்கிறார்.

மனைவி தலையுடன் ஊர்வலம் போன கணவன்!






சரோஜாவுக்கு நினைத்த நேரமெல்லாம் ஈரோட்டில் இருந்து செபோனில் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அழைப்பு வந்தால் மணிக்கணக்கில் சரோஜாவும், அந்த கடை முதலாளியும் பேசி மகிழ்துள்ளனர். அதே நேரத்தில் ராஜா மன உளைச்சலில் வேலைக்கும் போகாமல் வீட்டிலும் இருக்க முடியாமல் துடித்துக்கொண்டு இருந்துள்ளார். பொறுமையிழந்து சில சமயம் மானைவியை அடித்து உதைத்துள்ளார், இதனால் கணவன் மீது வெறுப்பு கொண்ட சரோஜா கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து வைத்துள்ளார். சாப்பாட்டில் கெட்ட வாசம் அடித்ததால் சந்தேகப்பட்ட ராஜா சாப்பாட்டை எடுத்து கீழே கொட்டிவிட்டார். ஒரு கட்டத்தில், என்னை அவருடன் போகக்கூடாது என்று சொன்னால் நான் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன் என்று கணவனை மிரட்டியுள்ளார் சரோஜா. கணவன் மனைவி இருவருக்கும் 01.12.2011 அன்று மதியம் சண்டை துவங்கியுள்ளது, வீட்டில் பன்றி அறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்து சரஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, மனைவியின் தலையில் இருக்கும் முடியை அப்படியே கொத்தாக பிடித்து தூக்கி தோலில் போட்டபடி வீட்டிலிருந்து எடப்பாடி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார் ராஜா.

மனைவிய கீழே தள்ளி நெஞ்சின் மீது காலை வைத்துக்கொண்டு கழுத்தை அறுத்த போது, சரோஜாவின் கழுத்தில் இருந்து பீறிட்டு வெளியில் வந்த ரத்தம் ராஜாவின் முகம் தலைமுடி எல்லாம் தெரித்துள்ளது, அதனால் ராஜாவின் சட்டை முழுவதும் ரத்தத்தால் நனைந்து போயிருந்தது.காவல்நிலையத்துக்கு போகும் வழியில், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ராஜாவின் கோலத்தை பார்த்து, என்னவோ...? எதோ தெரியவில்லை என்று பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ராஜா, இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொலி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன் என்று அணைவரிடமும் மனைவியிண் தலையை காட்டியபடியே காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார் ராஜா. ஜலகண்டாபுரம் செல்லும் சாலையில் உள்ள காவல் நிலையத்துக்கு போகும் வழியில் இருந்த மக்களிடம் கள்ளக்காதல் செய்யாதீர்கள்... என்று பெண்களிடமும், உம் பொண்டாட்டிய விட்டுட்டு அடுத்தவன் குடும்பத்தை கெடுக்காதீங்க.... என்று ஆண்களிடமும் பிரச்சாரம் செய்தபடியே நடந்து போய் காவல் நிலையத்தில் மனைவியின் தலையை வைத்து விட்டு சரணடைந்துள்ளார்.


எதுக்கப்பா இப்படி கொலை செய்துட்டு ஜெயிலுக்கு போகணும், பேசாம அவள விட்டுட்டு போகவேண்டியதுதானே...?  என்று கேட்ட ஆய்வாளர் செல்வராஜிடம்,  அய்யா நான் இரண்டு வருசமா தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருந்தேனுங்க.... சொந்தக்காரங்க, உள்ளூர் ஜனங்க, பக்கத்துல இருக்கறவங்க... பெத்த புள்ளைங்க மொகத்துல முழிக்க கூட முடியாம தலைகுனிஞ்சு இருந்தேனுங்க... ஆனா இப்ப எனக்கு மனசு சந்தோசமா இருக்குதுங்க... இப்ப யார பார்க்கவும் பயம் இல்ல, கேவலமா இல்ல, நல்லா தூங்கி ரெண்டு வருசமாச்சு.... இனிமேதான் நான் நிம்மதியா தூங்க முடியும் என்று சொல்லியுள்ளார் ராஜா. மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு மனிதன் மானமுள்ளவன் என்பதுதான் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லியுள்ளார். மனிதன் மட்டுமே மானம் என்கின்ற உணர்வுகளால் தூண்டப்படுகிறான். அதற்க்கு ஒரு சாட்சிதான் எடப்பாடி ராஜாவும்...

வாகனங்களை ஓட்ட அனுமதித்தால் சவூதி அரேபியாவில் கன்னித்தன்மையுள்ள பெண்களைப் பார்க்க முடியாது மத சபை எச்சரிக்கை .


 பெண்களை வாகனங்களை ஓட்ட அனுமதித்தால் சவூதி அரேபியாவில் கன்னித்தன்மையுள்ள பெண்களைப் பார்க்க முடியாது என்று அந்நாட்டு மத சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகிலேயே சவூதி அரேபியாவில் மட்டும் தான் பெண்கள் வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களை வாகனங்கள் ஓட்ட அனுமதித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று சவூதி மத சபையான மஜ்லிஸ் அல் இப்தா அல் ஆலாவின் முஸ்லிம் அறிஞர்கள், மன்னர் பஹ்த் பல்கலைக்கழக பேராசிரியர் கமால் சுபியுடன் சேர்ந்து ஒரு அறிக்கை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்களை வாகனங்கள் ஓட்ட அனுமதித்தால் நாட்டில் விபச்சாரம், போர்னோகிராபி, ஓரினச்சேர்க்கை, விவகாரத்து அதிகரித்துவிடும். மேலும் பெண்கள் வாகனங்கள் ஓட்டினால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் கன்னித்தன்மையுடைய பெண்களையே பார்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் கமால் சுபி அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, நான் ஒரு அரபு தேசத்தில் உள்ள காபி கடை ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது அங்குள்ள பெண்கள் அனைவரும் என்னையே பார்த்தனர். ஒரு பெண் தான் ரெடியாக இருப்பதாக சைகை செய்தாள். பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் இது தான் நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜெத்தாவில் வாகனம் ஓட்டியபோது பிடிபட்ட ஷைமா ஜஸ்தானியா (34) என்ற சவூதி பெண்ணுக்கு 10 கசையடிகள் கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஷூ வாங்குவதற்கு ஸ்டேடியத்தை சுத்தம் செய்த கால்பந்து வீரர்! இந்தியாவில்!!


கிழிந்து போன ஷூவுக்குப் பதில் புதிய ஷூ வாங்க போதிய பணம் இல்லாததால், கிரிக்கெட் ஸ்டேடியத்தை சுத்தம் செய்து ஊதியம் வாங்கி அதில் ஷூ வாங்கியுள்ளனர் கால்பந்து வீரர்கள். இந்தக் கொடுமை நடந்திருப்பது இந்தியாவில். இந்தியாவில் கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டுமே நல்ல நிலையில் இல்லை. நன்றாக இருப்பது போலத் தோன்றினாலும் கூட பல விளையாட்டுக்கள், வீரர், வீராங்கனைகள் இன்னும் அனாதையாகவே திரிகின்றனர். இந்த அவலத்தை அப்படட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இந்தூரில் நடந்துள்ள ஒரு சம்பவம். அங்குள்ள இளம் கால்பந்து வீரர்கள், தங்களுக்குப் புது ஷூ வாங்க போதிய பணம் இல்லாததால், கால்பந்து சங்கத்திடமிருந்து உதவி கிடைக்காததால் வெறுப்படைந்து, அங்குள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தை சுத்தம் செய்து பணம் பெற்று அதில் ஷூ வங்கியுள்ளனராம்.

இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில், இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது. இநதற்காக மைதானத்தை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் நடந்தன. இதற்காக யாரைப் பணியமர்த்தலாம் என்று மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கம் யோசித்தது. பின்னர் உள்ளூரைச் சேர்ந்த ஏ டிவிஷன் கால்பந்து அணியின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து அந்த அணி வீரர்களும் சுத்தப்படுத்த முன்வந்தனராம். இவர்களில் 7 பேர் மாநில அளவிலான அணியில் ஆடும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்த கிளப்பின் பயிற்சியாளர் சஞ்சய் நிதன் கூறுகையில், இந்தப் பணியால் எங்களுக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு வீரர்களுக்கு நல்ல பூட்களும், பழையை கால்பந்து சாதனங்கள் சிலவற்றையும் வாங்க முடியும் என்றார். ஸ்டேடியத்தில் உள்ள ஒரு சீட்டை சுத்தம் செய்தால் ரூ. 2.75 பணம் தருமாம் கிரிக்கெட் சங்க நிர்வாகம். இங்கு மொத்தம் 26,000 சீட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து வீரர் தேஜ் கரண் செளஹான் கூறுகையில், கால்பந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எங்களுக்கு ஆதரவு தர வலுவான பின்னணி இல்லை. எனவேதான் இப்படி செய்து பணம் சம்பாதித்து எங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் வேதனையுடன். கால்பந்து வீரர்களுக்கும், அணிக்கும் ஊக்கம் கொடுத்து தூக்கி விடாமல் அவர்களுக்கு நிதியுதவி தந்து கெளரவமாக நடத்தாமல், சீட்டைத் துடைக்க கூப்பிட்ட மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் செயல் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனவெறியும், நிறவெறியும் மனிதர்களிடம் மட்டும்தான் என்றில்லை, இப்படி நடப்பதும் கூட ஒருவகையில் இனவாதம்தான்.

பென்னி குக் பேரவை சார்பில் டிசம்பர் 7ம் தேதி பத்து கிராமத்தினர் கூடி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்!


முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும், புது அணை கட்ட வேண்டும் என்று கூறி வரும் கேரளாவைக் கண்டித்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பாலாறுப்பட்டியில் பென்னி குயிக் பேரவை சார்பில் டிசம்பர் 7ம் தேதி 10 கிராம மக்கள் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குயிக். இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர், ராணுவப் பொறியாளர். இந்த அணையால் தமிழக, கேரள மக்கள் பெருமளவில் பயன் பெறுவார்கள் என்பதற்காக போராடி அணையைக் கட்டினார். இதற்குத் தேவையான பணத்தைத் திரட்ட தனது சொத்துக்களையெல்லாம் விற்று பணம் திரட்டிக் கொண்டு வந்து அணையைக் கட்டி முடித்தார்.இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் பல வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் பெயராக பென்னி குயிக்கின் பெயரை வைக்கும் வழக்கம் இன்றும் கூட நடைமுறையில் உள்ளதைக் காணலாம்.

இந்த நிலையி்ல் போடி நாயக்கனூர், பாலாறுப்பட்டியில் உள்ள பென்னி குக் பேரவை சார்பில் டிசம்பர் 7ம் தேதி அக்கிராமத்தில் பத்து கிராமத்தினர் கூடி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாலாறுப்பட்டியில் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் பேரவைத் தலைவர் ஆண்டி கூறுகையில், கூலையனூர், குச்சனூர், பாலாறுப்பட்டி உள்பட 10 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கேரளாவுக்கு எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளோம் என்றார்.

இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற 5 மீனவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு!

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் மீது போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடைய கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28ம் தேதி காலை 712 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்து சென்றனர். அவர்களின் படைகையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் சிறை பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் கடந்த 2 நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தி வந்ததாக ஊர்காவல்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இதனைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் உடனே மீனவர்களை மீட்கக் கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெபிக்கும் உதடுகளைவிட சேவை செய்தவன் கரங்களே மகத்தானவை வைகோ.


கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டதைப் போன்று மாற்றுத் திறனாளிகளின் நல வாரியத்தைப் போதுமான நிதி ஆதாரத்துடன் அமைத்து அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பெறுவதற்கான கடுமையான விதிகளைத் தளர்த்தி, தேவைப்படும் அனைவருக்கும் உதவித் தொகை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். மாநில அரசு தற்போது அறிவித்துள்ள சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்படி பணி வழங்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. மன்றம் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் மாற்றம் உருவாகி மறுமலர்ச்சி ஏற்பட்டிட 03.12.1981ம் ஆண்டு உலக மாற்றுத் திறனாளிகள் தினமாக அறிவித்து ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்குச் செய்து வரும் உதவிகளை பத்தாண்டுச் செயல் திட்டமாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்திடக் கோரியது.

03.12.1995ல் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள் தினத்தைக் கடைபிடிக்க அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் படிப்படியாக மாற்றுத் திறனாளிகளின் குறைகளை அறிந்து தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 16 லட்சத்து 85 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இன்று 2011ம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 22 லட்சம் பேர் என்று நம்பப்படுகிறது. இவர்களில் 7,886 பேருக்கு மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

எனவே, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டதைப் போன்று மாற்றுத் திறனாளிகளின் நல வாரியத்தைப் போதுமான நிதி ஆதாரத்துடன் அமைத்து அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பெறுவதற்கான கடுமையான விதிகளைத் தளர்த்தி, தேவைப்படும் அனைவருக்கும் உதவித் தொகை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். மாநில அரசு தற்போது அறிவித்துள்ள சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்படி பணி உத்தரவு வழங்கப்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் உரிமையைப் பாதுகாக்கின்ற விதத்தில் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அதேவேளையில் எதிர்காலத்தில் மாற்றுத் திறனாளிகள் உருவாகாமல் மனித சமுதாயத்தைக் கருவிலிருந்தே பாதுகாக்க வேண்டியது மத்திய- மாநில அரசுகளின் கடமையாகும்.ஜெபிக்கும் உதடுகளைக் காட்டிலும் சேவை செய்தவன் கரங்களே மகத்தானவை என்ற அன்னை தெரேசாவின் பொன்மொழிகளை மனதில் இருத்தி மாற்றுத் திறனாளிகளைச் சக மனிதர்களாக் கருதி அன்பு செலுத்த வேண்டியது நாகரீக சமுதாயத்தின் கடமை. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் வசந்தம் உருவாகிட மதிமுக சார்பில் டிசம்பர் 3- உலக மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

ஏ.சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில்?



இந்தியப் பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று ஏ.சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேசமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்கள் செக்ஸை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதற்கே ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர். பழங்காலத்தில் இந்தியப்பெண்கள் நிலம் நோக்கி நடப்பவர்களாகவும், கணவனைத் தவிர பிற ஆடவர்களின் முகம் பார்க்காதவர்களாகவும் இருந்தனர். அடுப்பங்கரையும், வீடுமே அவர்களுக்கு உலகம் என்று இருந்தது. பாலியல் குறித்து பேசுவது கூட பாபம் என்று நினைத்திருந்தனர். ஆனால் இன்றைய இந்திய பெண்களோ தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கின்றனர்.

எங்கேயும், எப்போதும் தற்போதுள்ள பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ் என்பது அவசியமானது என்கிறார்கள். அவர்கள், தங்களது செக்ஸ் வாழ்க்கையினை புது புது சூழ்நிலைகளில் அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்களாக 67 சதவீதமும், பல்வேறு நிலைகளில் என 20 சதவீதமும், புதிய வகை முன் விளையாட்டுகளில் 24 சதவீதமும் மொத்தத்தில் எந்தநேரமும், எங்கேயும் என அதில் ஆர்வமிக்கவர்களாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. மகிழ்ச்சியே பிரதானமானது என்கிற ரீதியில் தாங்களும், தங்களது துணையும் இருக்க வேண்டும் என 57 சதவீத பெண்கள் விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

கம்ப்யூட்டரே கண்கண்ட தெய்வம்! ஆனால் இங்கிலாந்துப் பெண்கள் இதற்கு தலைகீழாக மாறிவிட்டனர். கணவனுடன் உறவில் ஈடுபடுவதை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதையே விரும்புவதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். கம்யூட்டர் விளையாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ருசிகர தகவல் தெரியவந்துள்ளது. தங்கள் துணையுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதை விட விடிய விடிய கம்ப்யூட்டரில் கேம் விளையாடவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர் இங்கிலாந்து பெண்கள். செக்ஸை அனுபவிப்பதை விட, கம்ப்யூட்டர் விளையாட்டில்தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

போட்டு தள்ளும் விஜயகுமார்!


சிறிது காலமாக பேசப்படாமல் இருந்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயக்குமாரின் பெயர் மீண்டும் பலமாக அடிபட ஆரம்பித்துள்ளது. வீரப்பன் உள்ளிட்ட பலரை வீழ்த்திப் புகழ் பெற்ற தமிழக முன்னாள் கூடுதல் டிஜிபியான விஜயக்குமார் தலைமையிலான சிஆர்பிஎப் படைதான் தற்போது மேற்கு வங்கத்தை ஆட்டிப்படைத்து வந்த மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியையும் வீழ்த்தியிருப்பதால் இந்த பரபரப்பு எழுந்துள்ளது. மேற்கு வங்கத்தை மையமாகக் கொண்டு அங்கும் சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் மாவோயிஸ்ட் நக்சலைட்களை தீவிரமாக செயல்படுத்தி வந்தவர் கிஷன்ஜி. பல காலமாக யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக இருந்து வந்து பல்வேறு மாநில அரசுகளின் நிம்மதியைப் பறித்தவர் கிஷன்ஜி.

நேற்று மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிதினாப்பூர் மாவட்டம் புரிசோல் வனப்பகுதியில் நடந்த கடும் சண்டையில் கிஷன்ஜி கொல்லப்பட்டதாக மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. கிஷன்ஜியை வேட்டையாடியது சிஆர்பிஎப் படையினர் ஆவர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடந்த சண்டைக்குப் பின்னர் கிஷன்ஜி கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு 9.30 மணியளவில் சிஆர்பிஎப் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. கடும் இருளில் வெறும் டார்ச் லைட் ஒளியுடன் சிஆர்பிஎப் வீரர்கள் முன்னேறிச் சென்று கிஷன்ஜி உள்ளிட்டோரை வேட்டையாடியுள்ளனர்.

சிஆர்பிஎப்பின் 'கோப்ரா' எனப்படும் அதிரடி படைப் பிரிவே இந்த சண்டையில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் வனப்பகுதிகளிலும், மலைப் பகுதிகளிலும் தீவிரவாதிகளுடனும், நக்சலைட்களுடனும் போரிடுவது தொடர்பான சிறப்புப் பயிற்சியைப் பெற்றவர்கள் ஆவர். சிஆர்பிஎப்பின் 3 படைப் பிரிவில் இடம் பெற்றிருந்த சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கடும் பயிற்சிகள் கொடுத்து இந்தத் தாக்குதலில் இறக்கியுள்ளனர். இந்தப் படையினரை பல்வேறு திட்டங்களை வகுத்து, நீண்ட கால கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்கள் மூலம் 'ஸ்கெட்ச்' போட்டு கிஷன்ஜி மறைவிடத்தைக் கண்டுபிடித்து வீழ்த்தியுள்ளனர்.

உண்மையில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை பிற்பகலே தொடங்கியிருக்கிறது. அன்று நடந்த தாக்குதலிலிருந்து கிஷன்ஜி, சுசித்ரா மஹதோ மற்றும் பிற தலைவர்கள் தப்பியுள்ளனர். இருந்தாலும் விடாமல் சிஆர்பிஎப் படையினர் தங்களது முற்றுகையை மேலும் பலமாக்கி நெருக்கியுள்ளனர். இதனால்தான் அவர்களால் தப்ப முடியாமல் போய் விட்டது.

இருப்பினும் செவ்வாய்க்கிழமை தாக்குதலுக்குப் பின்னர் கிஷன்ஜி குறித்த தகவல் கிடைக்காததால், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு (சம்பவம் நடந்த இடத்திற்கு வெகு அருகேதான் ஜார்க்கண்ட் மாநில எல்லை வருகிறது) தப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்று உறுதியானதால், முற்றுகையை சிஆர்பிஎப் வீரர்கள் இறுக்கினர். இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎப் படையினருடன் வேறு படையினரும் ஈடுபட்டிருந்தாலும் கூட முக்கிய தாக்குதல் திட்டத்தை சிஆர்பிஎப்தான் வகுத்துள்ளது.

இங்குதான் கே.விஜயக்குமார் 'சீனு'க்கு வருகிறார். 'ஜங்கிள் வார்ஃபேர்' எனப்படும் வனப் பகுதி சண்டையில் கில்லாடி விஜயக்குமார். இதற்கு முன்பு எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைவராக அவர் இருந்தபோது அவரது திறமை எல்லைப் புறத்தில் வெளிப்பட்டது. பின்னர் தமிழகத்தில் அதிரடிப்படைத் தலைவராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். வீரப்பனை வேட்டையாடும் பொறுப்பு அவர் வசம் வந்தது. அதற்கு முன்பு வரை அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை உத்திகளை முற்றிலுமாக மாற்றியமைத்து கிடைக்கும் வரை தேடுவது என்ற புதிய உத்தியை அறிமுகப்படுத்தி வீரர்களை காட்டுக்குள் போக வைத்தார். மேலும் உளவுத் தகவல்களையும் பெருமளவில் பல்வேறு 'சோர்ஸ்கள்' மூலம் கறக்க ஆரம்பித்தார்.

அவரது திட்டமிடல் காரணமாகவே வீரப்பனை சுட்டு வீழ்த்த முடிந்தது அதிரடிப்படையால். 2003ம் ஆண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தமிழக மக்களை மட்டுமல்லாமல் இந்திய மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது. அதேபோல அதற்கு முன்பு சென்னையில் போலீஸ் கமிஷனராக இருந்தபோதும் விஜயக்குமாரின் வேட்டை பிரபலமானது. 2001ம் ஆண்டுஅவர் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டார். 23 மாதங்கள் இப்பதவியில் அவர் இருந்தார். இந்த காலகட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இவர் கமிஷனராக இருந்தபோதுதான் சென்னையில் 7 என்கவுண்டர்கள் நடந்தன.

பல கடுமையான தாதாக்களையும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களையும் போட்டுத் தள்ளியது விஜயக்குமார் தலைமையிலான போலீஸ் படை. அதில் முக்கியமானவர்கள் அயோத்தியாகுப்பம் வீரமணி. சென்னை மக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் வீரமணி. அவரை கடற்கரையில் வைத்து போட்டுத் தள்ளியது போலீஸ்.விஜயக்குமாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சென்னையை விட்டு பல ரவுடிகள் ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது மேற்கு வங்கத்தில் கிஷன்ஜி வீழ்த்தப்பட்ட சம்பவத்திலும் கூட விஜயக்குமாரின் முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

மக்களவை உறுப்பினர்களை ஐபேட் வாங்கிக் கொள்வதற்கு ஒவ்வொரு எம்.பி.க்கும் ரூ.50,000 நிதி ஒதுக்கியுள்ளது மக்களவை செயலகம்!


 மக்களவை உறுப்பினர்களை இனி ஐபேட் கையுமாகப் பார்க்கலாம். ஐபேட் வாங்கிக் கொள்வதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் ரூ.50,000 நிதி ஒதுக்கியுள்ளது மக்களவை செயலகம். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்தே தினமும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. கருப்புப் பணம், 2ஜி ஊழல், தெலுங்கானா விவகாரம், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றை எதிர்த்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பிள் ஐபேட் கொடுக்கப்படுகிறது. இதற்காக மக்களவை செயலகம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ரூ.50,000 ஒதுக்கியுள்ளது. நாங்கள் எம்.பி.க்களை ஐபேட் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கிறோம். அதன் மூலம் ஏராளமான பேப்பரை மிச்சப்படுத்த முடியும் என்று லோக் சபா செகரடரி ஜெனரல் டி.கே. விஸ்வநாதன் தெரிவித்தார்.

எம்.பி.க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஆப்பிள் ஐபேட் அல்லது சாம்சங் கேலக்ஸி டேப்ஸ் வாங்கிக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் நாடாளுமன்ற விவகாரங்கள், கேள்வி, பதிலகள் என பல்வேறு விஷயங்களை பிரிண்ட் செய்து எம்.பி.க்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது எம்.பி.க்கள் ஐபேட் வாங்கிவிட்டால் பிரிண்ட் செய்து அனுப்பும் விஷயங்களை டிஜிட்டல் முறையில் அனுப்பிவிடலாம். அதை அவர்கள் ஐபேடிலேயே பார்த்து தேவையான திருத்தங்களை செய்யலாம். எம்.பி.க்கள் ஐபேட் வாங்கவிருப்பதால் லோக்சபாவில் வை-பை வசதி செய்யப்படவிருக்கிறது.

இடைத் தேர்தலில் வெல்ல முல்லைப் பெரியாறு அணை...


கடந்த ஒரு மாதம் வரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைதி காத்து வந்த கேரள காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க் கட்சிகளும் திடீரென அந்த விவகாரத்தைக் கிளப்பியுள்ளதற்கு அந்த மாநிலத்தில் நடக்கவுள்ள இடைத் தேர்தலே காரணம் என்று தெரியவந்துள்ளது. டேம்999 படம் மூலமாக திடீரென இந்தப் பிரச்சனைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தந்தது கேரளா. இடைத் தேர்தலை மனதில் வைத்து படத்தையும் அதை ஒட்டி ரிலீஸ் செய்து தங்களது 'கேரள விவரத்தை' காட்டி வருகின்றனர் அந்த மாநில அரசியல்வாதிகள். இத்தனை நாளாய் சும்மா இருந்த சங்கை காங்கிரஸ் கட்சியும் அந்த மாநில மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஊதிப் பெரிதாக்குவதற்குக் காரணமே, எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் சட்டமன்றத் தொகுதிக்கு நடக்கவுள்ள இடைத் தேர்தல் தான் என்று தெரிகிறது. இந்தத் தொகுதி முல்லைப் பெரியாறு அணைக்கு அருகாமையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் பிரவம் தொகுதி வழியே ஓடும் மூவாற்றுப் புழை ஆற்றின் வழியாகத் தான் செல்கிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பிரவம் தொகுதி உள்பட எர்ணாகுளம் மாவட்டமே மூழ்கிவிடும் என்ற டுபாக்கூர் பிரச்சாரத்தை அந்த மாநில கட்சிகள் கிளப்பி விட்டுள்ளன. மேலும் நடக்கப் போவது வெறும் இடைத் தேர்தல் மட்டுமல்ல. இந்தத் தொகுதியில் வெல்லப் போவது யார் என்பதை வைத்து தான், கேரளத்தில் காங்கிரஸ் அரசு நீடிக்குமா அல்லது கவிழுமா என்பதே உறுதியாகப் போகிறது.

பலவீனமாக உள்ள முல்லைப் பெரியாறு அணை உடைந்து இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் மாவட்டங்களே நீரில் மூழ்கிவிடும் என்று கேரளா அரசு கூறுகிறது. ஆனால், இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அரசு மூழ்கிவிடும் என்பது மட்டும் தான் உண்மை. 2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 72 இடங்களையும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளின் முற்போக்குக் கூட்டணி 68 இடங்களையும் கைப்பற்றின.

இதில், கேரள காங்கிரஸ் கட்சியின் (ஜேக்கப் பிரிவின்) தலைவர் டி.எம். ஜேக்கப், எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் சட்டப் பேரவைத் தொகுதியில் வென்றார். 5வது முறையாக இதே தொகுதியில் வென்ற இவர் காங்கிரஸ் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சரானார். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் அவர் மரணமடைந்தார். இதையடுத்து பிரவம் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. டி.எம். ஜேக்கப் மறைவுக்குப் பிறகு 71 ஆகக் குறைந்துவிட்டது.

இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவினால் சட்டசபையில் இடதுசாரி எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாகிவிடும். மேலும் கடந்த தேர்தலில்தான் டி.எம். ஜேக்கப் வெறும் 157 வாக்கு வித்தியாசத்தில்தான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரை தோற்கடித்தார். இதனால் இந்தத் தொகுதியில் இந்தமுறை காங்கிரஸ் வெல்வது சந்தேகமே. இதனால் தான் கேரள முதல்வர் உம்மன் சாண்டி இந்த அணை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.

அணையை வைத்து காங்கிரஸ் ஓட்டு வாங்குவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?. அதனால், தான் சமீபத்தில் எர்ணாகுளத்துக்கு வந்த முன்னாள் முதல்வரும் மூத்த மார்க்சிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன், புதிய அணையைக் கட்டுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சி விரைவிலேயே பொது மக்களிடம் நிதி திரட்டும் பணியைத் தொடங்கும். இங்கே அணையைக் கட்டுவதற்காக மத்திய அரசிடமோ, தமிழக அரசிடமோ நாம் ஏன் உதவி கேட்க வேண்டும்?. அணையைக் கட்ட மத்திய அரசோ அல்லது உச்ச நீதிமன்றமோ அனுமதி மட்டும் தந்தால் போதும், நிதியை நாங்களே மக்களிடம் திரட்டிக் கொள்வோம் என்று பேசிவிட்டுச் சென்றார்.

1979ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறத் தொடங்கியது கேரள அரசு. அதை நம்பிய தமிழக அரசும் நீரின் அளவை 136 அடிக்குக் குறைத்தது. அதையடுத்து, அணையின் நீரின் அளவை 142 அடியாக உயர்த்த 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கேரளா இன்று வரை நிறைவேற்றவில்லை.இந்த அழகில் தான், நாங்கள் புதிய அணையைக் கட்டினாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவோம் என்று உறுதியளிக்கிறார் உம்மன் சாண்டி. இவரது உறுதிமொழியை எப்படி நம்புவது? இதற்கிடையே இந்த அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தனது முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. அதில், அணை பலமாகவே உள்ளது என்று கூறப்பட்டிருந்தால், இடைத் தேர்தல் நேரத்தில் அது தங்களுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் கேரள காங்கிரஸ் அரசு கருதுகிறது. இதனால் இப்போதே இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

துன்பத்திற்கான அறிகுறி...


மனிதன் எதிர் காலத்தில் துன்பம் அடையப் போகிறான் என்பதை அவனது எட்டு செய்கைகளால் தெரிந்து கொள்ளலாம். காரணமின்றி மனைவியை அடிப்பான், இரவில் வீட்டில் தங்க மாட்டான், ஒழுக்க முள்ளவர்களை அவமதிப்பான்,பொய் சாட்சி சொல்வான்,பேராசை கொண்டு அடுத்தவர்களை மோசம்  செய்வான், பிற உயிர்களை வதைத்து இன்புறுவான், சாதுகள், சோதிடர், குரு இவர்களை கேலியும், கிண்டலும் செய்வான், பொறாமை குணத்திலும், கோப குணத்திலும் உச்சத்தில் இருப்பான்.-இவற்றைத் தடுத்தால் துன்பம் வராமல் தன்னை காத்துக்கொள்ளலாம்.

இதே நாள்...


  • ஐக்கிய அரபு அமீரகம் தேசிய தினம்(1971)
  • லாவோஸ் தேசிய தினம்
  • அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய், உம் அல் குவைன் ஆகியன 
  • இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக்கப்பட்டது((1971)
  • அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட துவங்கியது(1970)

லஞ்ச அதிகாரிகளை பாம்புகளை விட்டு பயமுறுத்தி...


அரசு ஒதுக்கிக் கொடுத்த நிலத்திற்கான உத்தரவை வழங்க, லஞ்சம் தரும்படி நச்சரித்த அரசு அதிகாரிகளை, பாம்புகளை விட்டு பயமுறுத்தினார் இயற்கை வள பாதுகாப்பாளர் ஒருவர். உத்தர பிரதேச மாநிலம், பாஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹக்குள்; இயற்கை வள பாதுகாப்பாளர். இவருக்கு பாம்புகளின் மீது அலாதி பிரியம். பாம்பு பிடிப்பதை பகுதி நேர தொழிலாக செய்து வந்தார். எனவே, பாம்புகளை வளர்ப்பதற்கு தேவையான நிலத்தை ஒதுக்கித் தரும்படி, மாநில அரசுக்கு மனு செய்தார். அதை ஏற்ற மாநில அரசு, நிலத்தை ஒதுக்கித் தந்தது. அதற்கான உத்தரவை தரும்படி, மாவட்ட அதிகாரிகளை ஹக்குள் அணுகினார். அவர்களோ, இவரிடம் லஞ்சத்தை எதிர்பார்த்து, இதோ, அதோ என இழுத்தடித்தனர். இறுதியில் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான், நிலத்திற்கான உத்தரவு வழங்கப்படும் எனக் கூறி விட்டார்.இதனால், ஹக்குள் எரிச்சலடைந்தார். உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் நடந்த விவரத்தைச் சொல்லி புலம்பினார். அதற்கு, "பாம்புகளைப் பிடிப்பதில் வல்லவரான நீங்கள், பாம்புகளை வைத்தே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு பாடம் புகட்டுங்கள்' என, யோசனை கூறினர். அவர்களின் யோசனையை ஏற்ற ஹக்குள், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பாம்புகளை, குறிப்பிட்ட அரசு அலுவலகத்திற்கு கொண்டு சென்று, அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவற்றை வெளியில் விட்டார். பாம்புகள் சீறிப் பாய்ந்து வந்ததைப் பார்த்து, அரசு அதிகாரிகள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என, ஓட்டம் பிடித்தனர்; அத்துடன் போலீசில் புகார் செய்தனர்.

வெ.இண்டீஸ் வீரர் ராம்பால் உலக சாதனை...

விசாகப்பட்டிணத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரவி ராம்பால், 66 பந்தில் 86 ரன்கள் (6 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், பத்தாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2009ல், அபுதாபியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தானின் முகமது ஆமிர், பத்தாவது வீரராக களமிறங்கி 73 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

அரசியல்- கம்பெனிகளால் வளைக்கப்படும்மீடியா...


பணம் கொடுத்து தங்கள் செல்வாக்கை உயர்த்தவும், பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள், மீடியாக்களை தவறாக பயன்படுத்துகின்றன என்ற அம்சத்தை கொண்டு பிரசார் பாரதி ஒரு குறும்படத்தை உருவாக்கியிருக்கிறது. இதில் பத்திரிகைகள் எப்படி தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. பிரசார் பாரதி, தூர்தர்ஷனுக்காக - உமேஷ் அகர்வால் உருவாக்கியிருக்கும் "புரோக்கரிங் நியூஸ்'. பல அதிர்ச்சி தரும் விஷயங்களை வெளிப்படுத்துகிறது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பெரிய நிறுவனங்கள் பணம் கொடுத்து நாளிதழ்களிலும், டி. வி.,க்களிலும் கவரேஜ் பெறுவதை காண்பிக்கும்புரோக்கரிங் நியூஸ் என்ற டாகுமென்டரி படத்தில் வரும் சில தகவல்கள் இதோ: 

* லோக் மத், மஹாராஷ்டிரா டைம்ஸ் மற்றொரு தினசரி, மூன்றிலும், மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் பற்றிய வெளியான கட்டுரைகள் ஒரே மாதிரியாக, வார்த்தைக்கு வார்த்தை ஒன்றாக, ஆனால் மூன்று வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்களில் வெளியாகியிருக்கிறது.

* ஆந்திராவில், பி.கே. ராமராவ் என்ற வேட்பாளர் ஈநாடு தினசரியில் நல்ல கவரேஜ் பெற்றதற்கு, ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தது மட்டுமல்லாமல் தேர்தல் கமிஷனுக்கு, இதை தான் தேர்தலுக்கு செய்த செலவாகவும் காட்டியிருக்கிறார் இதுவும் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

* காங்கிரஸ் பீகாரில் சரித்திரம் படைக்கவிருக்கிறது என்று ஒரு இந்தி பேப்பரில் எட்டு காலம் தலைப்புச் செய்தி. தலைப்பைத் தவிர வேறு செய்தி கீழே இல்லை.

* பர்க்கா தத், நிரா ராடியா இருவருக்கும் இடையே கருணாநிதி, ராஜா,, டி.ஆர்., பாலு, கனிமொழி என்று பல திமுக தலைவர்களை குறிப்பிட்டு, மந்திரி பதவி பெறுவது பற்றிய பேச்சின் ஆடியோ குரல்.

* சி.என்.என்., ஐபின் ராஜ்தீப் சர்தேசாய் பர்காதத் சில பத்திரிகை/டிவி ஆசிரியர் திரைப்பட இயக்குனர் மகேஷ் பட், ஷோபா டே போன்றவர் மீடியா துறையில் உள்ளவர்களை பற்றி கருத்துக்கள். 

* ஐபிஎல் கிரிக்கெட்டில் மீடியாவின் பங்கு , திமுக கட்சி பிரமுகர்களுக்கு ( சன்டிவி, கலைஞர் டிவி), அ.தி.மு.க.,வினருக்கு ஜெயா டிவி, விஜய்காந்த - கேப்டன் டிவி, பாட்டாளி மக்கள் கட்சி - மக்கள் டிவி, காங்கிரஸ் - வசந்த் டிவி, கேரளாவிலும், ஆந்திராவிலும் அரசியல் பிரமுகர்கள் ஆதிக்கத்தில் பல டிவி சேனல்கள் இயங்குகிறது. பல டிவி சேனல்களில் பிரத்யேக பேட்டிக்கு, பணம் பெறப்படுவதும், இது 50% பணமாக, 50% செக் மூலமாக பெறுகின்றனர்.என்றும் காட்டப்பட்டுள்ளது. பணம் கொடுத்து, தாங்கள் விரும்பியவாறு செய்திகள், கருத்துக்கள், பப்ளிசிட்டி பெறுவதற்கு அதிகம் ஈடுபடுபவர்கள், அரசியல்வாதிகளா, பெரிய கம்பெனிகளா (வியாபார நிறுவனங்களா), என்பது கடினமான கேள்வி. திரைப்படத்துறையிலும் இந்த ட்ரென்ட் வந்துவிட்டது.

உமேஷ் அகர்வால், ஒன்றரை ஆண்டுகாலம் உழைத்து இந்த ஒரு மணி நேர டாகுமென்ட்ரியை உருவாக்கியுள்ளார். கடந்த (30ம் தேதி ) திரைப்பட விழாவில், திரையிடப்பட்டபோது, அரங்கு நிரம்பியது. படத்தை தொடர்ந்து முப்பது நிமிடங்களுக்கு மேலாக, கேள்வி-பதில் விவாதம் நடைபெற்றது. பிரசார் பாரதியிடமிருந்து இந்த படத்தின் டி.விடி பெறலாம். லஞ்சமற்ற இந்தியா விரும்பும் அனைவரும் பார்த்தால் நல்லது.சமீபத்தில் கூட , பணம் பெற்ற செய்திகள் நாளிதழ் மற்றும் டிவியில் வெளியிடுவது குறித்து பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் இரு நிபுணர்கள் கொண்ட கமிட்டி, விஷயத்தை முழுமையாக ஆராய்ந்து, ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன் சுருக்கம், இணைய தளத்திலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

ஓய்வூதியம் பெறும், அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு, வாழ்நாள் முழுவதும், குடும்ப ஓய்வூதியம்!



மத்திய அரசு, ஓய்வூதியதாரர்களின், திருமணமாகாத, விதவை, விவாகரத்தான மகளுக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழக அரசின் ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டுமென, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதை பரிசீலித்த அரசு, 25 வயதை கடந்த, குடும்ப ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத, விதவை, விவாகரத்துப் பெற்ற மகள் ஆகியோருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கான நிபந்தனைகள்:
* ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின், 25 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளும், விதவை மற்றும் விவாகரத்தான மகள்களும், வாழ்நாள் முழுமைக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்.
* ஒரு குடும்பத்தில், 25 வயதுக்கு குறைவான, குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுள்ள, குழந்தைகளின் தகுதி காலம் முடிந்த பின்போ, அந்த குடும்பத்தில், வேறு மாற்றுத் திறன் படைத்த குழந்தைகள் இல்லாவிட்டாலோ, 25 வயதுக்கு மேற்பட்ட மகள்கள் பெறலாம்.
* திருமணமோ, மறுமணமோ புரிந்தால், அவர்களின் ஓய்வூதியம் உடனே நிறுத்தப்படும். இதை உறுதி செய்யும் வகையில், ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும், திருமணம் அல்லது மறுமணம் புரியாமை சான்றிதழை வழங்க வேண்டும்.
* வயது அடிப்படையில் மூத்தவருக்கு முதலில், வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மூத்தவர் மறுமணம் புரிந்தாலோ, இறக்க நேரிட்டால் மட்டுமே, அடுத்த இளைய மகள், குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்.
* மாத வருமானம், 2,550 ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் மட்டுமே, ஓய்வூதியம் பெறலாம். இது தொடர்பான வருமானச் சான்றிதழை ஆண்டுதோறும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு, நவ., 28ம் தேதியிலிருந்து, அமலுக்கு வந்துள்ளது.

மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும், 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்,'' என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவு!


மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு விவரம்: மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தரலாம். பிரிவு அலுவலர்கள் அல்லது அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள், மனுக்களை பெற்று, எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம்.

நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடு: நீட்டிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி இல்லாத குறை: தாழ்வழுத்தம் 30 நாட்களில், உயரழுத்தம் 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் அல்லாத நீட்டிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி: தாழ்வழுத்தம் 90 நாட்கள், உயரழுத்தம் 120 நாட்கள்; டிரான்ஸ்பார்மருடன் கூடிய நீட்டிப்பு, மேம்பாட்டு பணி: தாழ்வழுத்தம் 90 நாட்கள், உயரழுத்தம் 180 நாட்கள். மீட்டர் அல்லது இணைப்பு இடமாற்றம்: 25 நாட்கள்; மின்தடம் மாற்றுதல்: 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்: 90 நாட்கள்; மீட்டர் புதுப்பித்தல்: 30 நாட்கள்; கட்டண வகை மாற்றம்: 7 நாட்கள்; பெயர் மாற்றம்: 7 நாட்கள்; கட்டண கணக்கு பிழை திருத்தம்: பணம் செலுத்தும் இறுதி நாட்களுக்குள், குறைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மின்வெட்டுக்கு நிவாரணம்: மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்தடை பிரச்னைகளை தீர்க்க, மணிக்கணக்கில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கெடுக்குள் குறைகளை தீர்க்கத் தவறினால், மின்வாரியத்தில் இருந்து, நுகர்வோருக்கு நிவாரணம் தர வேண்டும். பிரிவு அலுவலகங்கள், குறைகளை தீர்க்க தவறும்போதும், நிவாரணத்திலும் திருப்தி அடையாத நுகர்வோர், அந்தந்த பகுதி மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்ப்பு மையத்தில் முறையிடலாம். இந்த மையங்கள் குறித்து அலுவலக முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் (இ-மெயில்) உள்ளிட்ட விவரங்களை, மின்வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும். குறை தீர்ப்பகத்தின் உத்தரவை மேல்முறையீடு செய்ய விரும்புவோர், சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் குறை தீர்ப்பாயத்தை தொடர்பு கொள்ளலாம்.மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும், 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்,'' என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

உதயநிதி முன்ஜாமின் கேட்டு தாக்கலான வழக்கு வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!



சென்னை, ஆழ்வார்ப்பேட்டையைசேர்ந்தவர் குமார் என்ற சேஷாத்ரி குமார்,64. இவர், நவ., 29ல், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு : என் தந்தை நாராயணசாமியால் வாங்கப்பட்டு, சித்தரஞ்சன்தாஸ் சாலை என்று, என் தந்தையால் பெயரிடப்பட்ட இடத்தில், என் பங்காக கிடைத்த இரண்டரை கிரவுண்டில், நான் 4,445 சதுரடிக்கு கட்டடம் கட்டி வசித்து வந்தேன். பின், இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான ஆறு கிரவுண்டு நிலத்தை, ஸ்டாலின் (தி.மு.க., பொருளாளர்), ஐ.சி. ஐ.சி.ஐ., வங்கி மூலம் வாங்கி குடியேறினார். அவர், அங்கு வந்ததில் இருந்து, அருகில் உள்ள என் வீட்டையும் வாங்கி, ஒரே வீடாக்கிவிட திட்டமிட்டார். அதற்காக, என் வீட்டில் குடியிருந்தவர்களை மிரட்டி, வீட்டை காலி செய்ய வைத்தனர். அத்துடன், சீப்ராஸ் மற்றும் ரெயின்ட்ரீ ஓட்டல்கள் அதிபர் சுப்பா ரெட்டி, ராஜா சங்கர் (ஸ்டாலின் நண்பர்), ஸ்ரீனிவாசன் ஆகியோர், என் வீட்டிற்கு வந்து, சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை, ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இல்லையென்றால், எனக்கு பல பிரச்னைகள் வரும் என்று மிரட்டினர்.

அவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்து, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், கடந்தாண்டு ஜூலை 16ல் புகார் செய்ய சென்றேன். என் மனுவை வாங்க மறுத்து விட்டனர். அதன் பின், பத்திர பதிவாளரை என் வீட்டிற்கு அழைத்து வந்து, வேணுகோபால் ரெட்டி பெயரில், என் வீட்டை கிரையம் செய்து கொண்டனர். அதற்கு, 5.5 கோடி ரூபாயை (5,54,50,000) டி.டி.,யாக கொடுத்தனர். அதன் பின், சீனிவாசன் என் வீட்டிற்கு வந்து, ஒரு கோடியே 15 லட்ச ரூபாயை பணமாக கொடுத்தார். இது கணக்கில் வராத பணம் என்றும், இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது, சொன்னால், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திடம், தளபதி சொல்லி வருமான வரித்துறை மூலம் தொந்தரவு செய்வார்கள் என்று சொன்னதுடன், 15 லட்ச ரூபாயை கமிஷன் என்று சொல்லி எடுத்துச் சென்றுவிட்டார். தற்போது, இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயரில், 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு, ஸ்டாலினின் மகள் செந்தாமரை குடியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி, தன் பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், கறுப்பு பணத்தை என் வீட்டிற்கு வந்து வலுக்கட்டாயமாக கொடுத்து, வருமான வரி சோதனை செய்ய வைத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும், வேணுகோபால் ரெட்டி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது, தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், என் குடும்பத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு: கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் வேணுகோபால்ரெட்டி, சுப்பாரெட்டி, ராஜாசங்கர், சீனிவாசன் ஆறு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். அத்துமீறி நுழைதல் (451), மரணம், கொடுங்காயம் ஏற்படுத்திவிடுவேன் என அச்சுறுத்தி பணம் பறித்தல் (386,387), கொலை மிரட்டல் (506-1), கூட்டு சதி செய்தல் (120-பி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, விசாரணையைத் துவக்கியுள்ளனர். நில அபகரிப்பு மோசடி புகார் தொடர்பாக, தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் சிக்கி, சிறைக்கு சென்று ஜாமினில் வந்துள்ளனர். இந்த வரிசையில், ஸ்டாலின் மீது விரைவில், கைது நடவடிக்கை இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு உதயநிதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். உதயநிதிக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்‌து உதயநிதிக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி மனு மீதான விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் ஸ்டாலின் நண்பர் ராஜா,சங்கர் ஆகியோரும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையையும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...