|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 August, 2011

இதே நாள்...


  • உக்ரேன் தேசிய தினம்(1991)
  •  கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது(1690)
  •  நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை இறந்த தினம்(1972)
  •  விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது(1995)
  •  நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது(1949)
  • பறக்கும் மீன்!


    ஊழலுக்கு எதிராக ரத்தமில்லா புரட்சி ஹசாரேக்கு ரஜினிகாந்த் ஆதரவு!


    அன்னா ஹசாரே போராட்டத்தை ஆதரிக்கிறேன். எனக்கு உடல்நிலை சரி இல்லாமல் உள்ளது. இல்லையேல் டெல்லி சென்று அன்னா ஹசாரே போராட்டத்தில் கலந்து கொண்டு இருப்பேன். அரசியல்வாதிகள் லோக்பால் மசோதாவை சீக்கிரத்தில் நிறைவேற்ற விடமாட்டார்கள். ஹசாரே உறுதியாக இருந்து இதை செயல்படுத்த வேண்டும்” என்றார்.
     
    இப்போது அன்னா ஹசாரே, போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ளதால் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு அளிக்கும் ஆதரவை உறுதி செய்து இன்று ரஜினிகாந்த் மீண்டும் அறிக்கை வெளியிட்டார்.
     
    அதில் கூறி இருப்பதாவது:-  இந்திய சமுதாயத்தில் இன்று ஊழல் ஒரு கடும் நோய் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரே போன்ற ஒரு மாபெரும் தலைவர் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஜன் லோக்பால் பாராளுமன்றத்தில் சட்டமாக்க எடுத்துக்கொண்டுள்ள இந்த பணியினை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.  
     
    இந்த ரத்தமில்லாத ஒரு புரட்சியில் பங்கு கொண்ட எல்லா இந்தியர்களையும் நான் வாழ்த்துகிறேன். அமைதியான இம்மாதிரியான போராட்டம், சத்தியாககிரகத்தின் பிறப்பிடமான, இந்தியாவில் மட்டும்தான் நடக்க முடியும். இந்தியன் என சொல்லி கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
     
    இவ்வாறு அறிக்கையில் 

    பார்த்தீனியம் களை கட்டுப்படுத்தும் முறை!

    பார்த்தீனியம் களையை கட்டுப்படுத்தும் முறை குறித்த விழிப்புணர்வு முறை குறித்து வடமதுரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெ.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு விரோதியாக இருப்பது களைகள். இவற்றும் மிகவும் ஆபத்தானது பார்த்தீனியம் என்ற ஒரு களை. இந்த களை எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நன்கு வளரக் கூடிய தன்மை கொண்டது. மேலும் இது மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் சுவாசக் கோளாறு ஏற்படுத்தி ஆபத்தை உண்டாக்கும் வல்லமை படைத்தது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் பார்த்தீனியத்தை அழித்து கட்டுப்படுத்திட கிராம அளவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி தொழில்நுட்ப அறிவுரை வழங்க வலியுறுத்தி உள்ளார்.


    ஒரு முறை பார்த்தீனியம் விதை உருவாகிவிட்டால் 20 ஆண்டுகள் கூட முளைக்காமல் அப்படியே மண்ணில் இருந்து பின்னர் மீண்டும் வளரும் தன்மை பெற்றது. இவ்வகை பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்திட அவற்றை கைகளால் பிடுங்கி அழித்திட வேண்டும், பயிர் சுழற்சி முறை அதாவது செண்டு மல்லி என்னும் பூச்செடி சாகுபடி செய்து பின்னர் மற்ற பயிர் சாடுதல் முறை பின்பற்றலாம், ஒரு லிட்டர் தண்ணீரில் 200 கிராம் உப்பு கரைத்து தெளித்து இதனைக் கட்டுப்படுத்தலாம், களைக்கொல்லி மருந்து அடித்து கட்டுப்படுத்தலாம், பார்த்தீனிய களையைப் பிடுங்கி அதனை அழுக வைத்து வாட்டமேற்றி உரமாக மாற்றிப் பயன்படுத்தலாம். இது தொடர்பான தொழில் நுட்பம் உதவி வேளாண் அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி வேளாண் உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ஒற்றைத் தலைவலியா ? அசால்டா இருக்காதீங்க

    தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல தெரிக்கும் தலைவலியை நம்மில் அநேகம் பேர் உணர்ந்திருக்க முடியும். தலைவலியில் பல விதங்கள் உண்டு. சாதாரண தலைவலி சில நிமிட நேரமே நீடிக்கும். ஆனால் ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரேன் தலைவலி பிரச்சினைக்குரிய ஒரு நோயாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஒற்றை தலைவலிக்கு காரணங்கள் பல உள்ளன. மூளையில் கொப்பளம், நாடாப்புழு மூளையைத்தாக்குதல், சைனஸ், பற்களில் பாதிப்பு போன்றவை இந்தவகை தலைவலி வருவதற்கு காரணமாக கருதப்படுகிறது. ஆனால் முறையற்ற வாழ்க்கை முறையே இந்த மைக்ரோன் ஒற்றைத்தலைவலி வர காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

    யாருக்கு பாதிப்பு அதிகம்; மைக்ரேன் தலைவலி குறிப்பிட்ட தரப்பினரை அதிகமாக தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 20 வயதில் இருந்து 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள்தான் இந்த பிரச்சினைக்கு அதிகம் ஆளாகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    நோய்க்கான மருந்து; ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் உள்ளன. மனதை ஒருமுகப்படுத்துதல், தியானம், யோகாசனம், ஆகிய பயிற்சிகள் மைக்ரேன் தலைவலியை கட்டுக்குள் வைக்கும். இவற்றைக் காட்டிலும், முறையான ஓய்வு, நேரத்திற்கு கட்டுப்பாடான உணவு, உடற்பயிற்சி போன்றவை ஒற்றைத்தலைவலியை அண்டவிடாமல் செய்துவிடும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகும்.

    வெளி நாடுகளில் குவியும் இந்திய டாக்டர்கள்!

    இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பணிபுரியச் செல்லும் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 6.13 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். 13.30 லட்சம் டாக்டர்கள் உள்ளனர், இதனால் பற்றாக்கறை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நம் நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் 10,000 பேருக்கு 6 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் டாக்டர்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 3,000 டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 767 டாக்டர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதாக இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளது. ஆனால், இந்தக் கவுன்சிலின் கடிதம் பெறாமல் நேரடியாக வெளிநாடுகளுக்குச் சென்ற மருத்துவர்கள் எண்ணிக்கை இதை விட மிக மிக அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. அமெரிக்காவில் சுமார் 50,000 இந்திய டாக்டர்களும், இங்கிலாந்தில் 40,000 இந்திய டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவில் 1,325 பேருக்கு ஒரு இந்திய டாக்டர் உள்ளார்.

    நம் நாட்டில் ஆண்டுதோறும் 30,558 மருத்துவப் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். ஆனால், முதுகலை மருத்துவக் கல்வியில் 12,346 இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால், உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் அங்கேயே தங்கிவிடுகின்றனர். அதே நேரத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த மிகச் சிறந்த மருத்துவர்களை இந்தியாவின் மாபெரும் தனியார் மருத்துவமனைகள் ஈர்ப்பதும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    பட்டுப்போன்ற கைகளைப் பெற..!

    மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். இன்றைக்கு பெண்களுக்கு இருக்கும் வேலைப் பளுவில் கைகளுக்கென்று தனித்தனியாக நேரமெடுத்து கவனிக்க நிச்சயம் பொறுமை இருப்பதில்லை. திருமணமாகும் வரை பட்டுப்போல் கையை வைத்திருப்பவர்கள் பிறகு அதனைப் பற்றி பெரிதாக நினைக்காமல் பாழாக்கிக் கொள்கிறார்கள்.

    பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, காய் நறுக்குவது, வீடு துடைக்க என்று பல விஷயங்களை அதுவரை என்றாவது ஒரு நாள் செய்தது போய் இப்போது அதுவே தினசரி கடமைகளாக ஆனபிறகு கைகளை எங்கே கவனிக்க என்று அலுத்துக் கொள்ளும் நிலைமை பொதுவாக எல்லாருக்குமே இருக்கும் . இதனால் கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம். இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும்.

    கைகள் பாதுகாக்க கையுறைகள்; முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.

    கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள கிச்சன் சிங்க் அருகே ஒரு செட் பாத்திரம் கழுவும் கிளவுஸ்களை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கை அளவுக்கு அடுத்த சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் கஷ்டப்படாமல் உடனடியாக அணிய முடியும். சிறிய அளவில் இருந்தால் கிளவுஸ் வேறா என்ற எரிச்சல்தான் மிஞ்சும். ஒவ்வொரு முறையும் ஒன்றிரண்டு பாத்திரங்களுக்காக இப்படி கிளவுஸ் மாட்ட பொறுமையில்லை என்றால் அதிக அளவு பாத்திரங்கள் துலக்கும்போது மட்டுமாவது இதனை செயல்படுத்துங்கள்.

    வெதுவெதுப்பான நீர்; ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.

    பாத்திரம் கழுவி முடித்ததும் கைகளை துடைத்து உடனடியாக லோஷனை போட்டுக் கொள்ளுங்கள். இது ஸ்ப்ரே அடித்து துடைப்பது, பாத்ரூம் கழுவுவது, வீடு துடைப்பது போன்ற வேலைகளுக்கும் பொருந்தும். அதே போல் ஒவ்வொரு இரவும் உறங்கப் போகும் முன் உப்பை 2 ஸ்பூன் அளவு எடுத்து, இரு கைகளிலும் படுமாறு நன்றாக ஸ்க்ரப்பிங் செய்து கழுவி, துடைத்து, பிறகு லோஷன் போட்டுவிட்டு படுங்கள். கைகளுக்கு வேக்சிங் அல்லது எபிலேட்டர் கொண்டு முடிகளை நீக்கலாம். வேக்சிங்கிற்கு டிஸ்போசபிள் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்துங்கள். தொற்றுநோய்களை தடுக்கலாம். அப்படி நீக்கும்போது மறக்காமல் விரல்களில், மோதிரம் போடும் இடங்களில் உள்ள முடிகளையும் நீக்குங்கள்.

    சீரான ரத்த ஓட்டத்திற்கு மசாஜ்; கைகளின் தோல் மிகவும் வறட்சியாக உடையவர்கள், கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும். கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும். அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண்டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

    வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் இவை தடுக்கப்படும்.

    குளிக்கும் முன்பு முகத்துக்கு எண்ணெய் தடவி ஊறவத்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கைகளுக்கும் தடவி மசாஜ் செய்யுங்கள். குளித்தபின்பு மறக்காமல் ஹேண்ட் அல்லது பாடி லோஷனை தடவுங்கள். நகம் வளர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடையாமல் காக்க ஹேண்ட் லோஷன் உபயோகிக்காமல் ஹேண்ட் அண்ட் நெய்ல் லோஷன் உபயோகிக்கலாம். நகங்கள் உடையாமல் இருக்கும். இவர்கள் கிளவுஸ் உபயோகிப்பதும் கூட நகங்களை பாதுகாக்கும்.

    ஓவர் செக்ஸும் ஓவர் காபியும்...!


    பக்கவாத நோய் மனிதர்களை முடமாக்கும் அபாயகரமான நோயாகும். மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களின் சுவர்கள் வலுவிழக்கும் போது ரத்தம் கசிந்து பக்கவாதம் ஏற்படுகிறது. காபி, உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை சேர்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து நெதர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் மானிக் எச்.எம்.விலாக் என்பவர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகமாக காபி குடிப்பதால் மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதாக கண்டறிந்தனர்.

    அதிகரிக்கும் ரத்த அழுத்தம்: மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு 8 முக்கிய காரணங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதில் முதல் இடத்தில் இருப்பது நாம் குடிக்கும் காபி தான். இது பக்கவாதம் ஏற்பட 10.6 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தாக தீவிர உடற்பயிற்சி செய்வதால் 7.9 சதவீதமும், அதிக உடலுறவினால் 4.3 சதவீதமும் பக்கவாதம் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

    குளிர்பானம் குடித்தல்: சிரமப்பட்டு உடல் உபாதைகளை வெளியேற்றுவதால் 3.6 சதவீதமும், கோலா பானம் குடித்தல் 3.5 சதவீதமும், அதிர்ச்சி அடைவதால் 2.7 சதவீதமும், கோபப்படுவதால் 1.3 சதவீதமும் ரத்த குழாயில் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

    பிரபாகரன் வல்வெட்டித் துறை வீட்டை புல்டோஸர் கொண்டு இடிக்கும் ராணுவம்!



    இலங்கையின் வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை இடிக்கும் பணிகளை இரவோடு இரவாக செய்து வருகின்றனர் ராணுவத்தினர். இந்தத் தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித் துறை வீடு, கடந்த இரு வருடங்களாக சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்டது. தமிழர் மட்டுமின்றி, சிங்களவரும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றனர். ஆனால் இந்த வீட்டை இடிக்கும் பணியில் ராணுவத்தினர் முனைப்பு காட்டினர். ஒருப பகுதியை முன்பே இடித்துவிட்ட ராணுவத்தினர், இப்போது மிச்சமிருக்கும் கட்டடம் முழுவதையும் இடித்து வருகிறார்களாம். பகலில் செய்யாமல், இரவு நேரத்தில் இந்த கட்டடத்தை இடித்துத் தள்ளுவதாக தெரிய வந்துள்ளது.

    டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் இதுகுறித்துக் கூறுகையில், "பிரபாகரன் வீட்டை முற்றாக இடித்துவிடும் வகையில் புல்டோஸர், ஜேசிபி போன்ற பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இரவோடு இரவாக இந்த வேலையை படையினர் செய்து வருகின்றனர்," என்றார்.

    டிரிபோலியை நேற்று எதிர்ப்பாளர்கள் முழுமையாகக் கைப்பற்றினர்!

    டந்த சில நாட்களாக, கடாபி ராணுவத்தின் வசம் இருந்த நகரங்கள் படிப்படியாக, எதிர்ப்பாளர்கள் வசம் வந்தன. இதையடுத்து நேற்று முன்தினம், தலைநகர் டிரிபோலியை நான்கு திசைகளிலும் அவர்கள் முற்றுகையிட்டனர். நேற்று டிரிபோலிக்குள் நுழைந்த எதிர்ப்பாளர்கள், எதிர்ப்பட்ட கடாபி ராணுவத்துடன் கடும் மோதலில் ஈடுபட்டனர். எனினும் இந்த எதிர்ப்பு மிகச் சிறிதளவே இருந்தது. நேற்று முன்தினம் வானொலி மூலம் பேசிய கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம், தங்கள் வசம் 65 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் எதிர்ப்பாளர்கள் டிரிபோலி நகருக்குள் நுழைந்த போது அவர்களில் பெரும்பாலோர், சரணடைந்ததால் எதிர்ப்பு பெருமளவின்றி, அந்நகர் விழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட கடாபியின் மகன் கமீஸ் கடாபி, நேற்று நடந்த தாக்குதலின் போது ராணுவத்தை முன்னின்று நடத்தினார் என செய்திகள் வெளியாயின. நகரின் 90 சதவீதம் தங்கள் வசம் வந்து விட்டதாகத் தெரிவித்த இடைக்கால அரசின் செய்தித் தொடர்பாளர், மீதமுள்ள 10 சதவீதம் பகுதிகள் மட்டும் கடாபி ராணுவம் வசம் இருப்பதாகத் தெரிவித்தார்.

    கடாபி மகன்கள் கைது: கடாபியின் குடியிருப்பான பாப் அல் அஜீசியாவை எதிர்ப் படைகள் முற்றுகையிட்டபோது, குடியிருப்பு வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பீரங்கிப் படைகள் வெளிவந்து தாக்குதல் நடத்தின.
    அதேபோல், டிரிபோலி துறைமுகத்திலும் கடாபி ராணுவம், பதில் தாக்குதல் நடத்தியது. டிரிபோலியின் பிரதான சதுக்கமான "கிரீன்' சதுக்கத்தில் நேற்று முன்தினம் இரவு வரை கடாபி ஆதரவாளர்கள், பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். ஆனால், நேற்று எதிர்ப்பாளர்கள் அங்கு சென்ற போது, அங்கிருந்தோர் அவர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து கொண்டனர். பாப் அல் அஜீசியாவிற்குள் புகுந்த எதிர்ப்பாளர்கள் அங்கு ஒரு வீட்டில் இருந்த, கடாபியின் மகன்கள், சயீப் அல் இஸ்லாம், அல் சாடி மற்றும் முகமது ஆகிய மூவரை கைது செய்தனர். கடந்த ஜூன் மாதம், சர்வதேச கிரிமினல் கோர்ட் விடுத்த வாரன்ட் பட்டியலில், சயீப் அல் இஸ்லாமும் சேர்க்கப்பட்டிருந்தார் என்பதால், அவரை கோர்ட்டிடம் ஒப்படைப்பது குறித்து லிபிய தேசிய இடைக்கால அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    கடாபி எங்கே? : கடந்த மே மாதத்திற்கு பின் பொதுமக்கள் மத்தியில் நேரிலும், "டிவி'யிலும் தோன்றாத கடாபி, பாப் அல் அஜீசியா வளாகத்தில் இருக்கிறாரா அல்லது வேறு எங்கும் தப்பி ஓடிவிட்டாரா என்பது தெரியவில்லை.
    நேற்று முன்தினம் அவர் வானொலியில் பேசிய போது, "நான் எங்கும் போய்விடவில்லை. கடைசி வரை உங்களுடன் இருப்பேன்' என்று தெரிவித்தார். அவர் டிரிபோலியில் உள்ள தஜூரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக "அல் ஜசீரா' தொலைக்காட்சி தெரிவித்தது. ஆனால் அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரம் பாப் அல் அஜீசியாவில் கடாபி பல பதுங்கு குழிகள் வெட்டி வைத்திருப்பதாகவும், அவற்றில் ஏதேனும் ஒன்றில் பதுங்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
    கடாபி தப்பியோட, தென் ஆப்ரிக்கா விமானம் அளித்ததாக வெளியான செய்தியை அந்நாடு மறுத்துள்ளது.

    அடுத்து என்ன? : கடந்த ஏழு மாத கால உள்நாட்டுப் போரில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், கடந்த இரு நாட்களில் மட்டும் டிரிபோலியில் 1,500க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், லிபியாவில் அடுத்து அரசு அமைப்பது குறித்து, தேசிய இடைக்கால கவுன்சில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அதிகார மாற்றம் ஜனநாயக ரீதியில் தேர்தல் வழிமுறையில் அமைதியான முறையில் நிகழும் எனவும் கவுன்சில் தெரிவித்துள்ளது.

    மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்: தேசிய இடைக்கால அரசின் தலைநகரான பெங்காசியில் உள்ள பிரதான சதுக்கத்தில், நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடி எதிர்ப்பாளர்களின் வெற்றியைக் கொண்டாடினர். டிரிபோலி வீழ்ந்ததை அடுத்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் எதிர்ப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, விரைவில் லிபியாவில் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    இதுவரை நடந்தது என்ன? : எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், பதவி விலகிய மூன்றாம் நாள், பிப்ரவரி 14ம் தேதி லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசியில் லிபியத் தலைவர் மும்மர் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் துவங்கின. துவங்கிய ஓரிரு நாட்களிலேயே ஆர்ப்பாட்டங்கள் கலவரங்களாகவும் மோதல்களாகவும் மாறின. மிஸ்ரட்டா, பெங்காசி உள்ளிட்ட கிழக்குப் பகுதி நகரங்கள் படிப்படியாக, எதிர்ப்பாளர்கள் வசம் வந்தன. எதிர்ப்பாளர்களை அடக்க லிபிய அரசு வன்முறையைக் கையாளத் துவங்கியது. அமெரிக்கா, ஐ.நா., மற்றும் ஐரோப்பிய யூனியன், லிபிய அரசு மற்றும் கடாபி மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.
    கிழக்குப் பகுதியை நிர்வகிக்க, தேசிய இடைக்கால கவுன்சில் மார்ச் 5ம் தேதி உருவானது. அமெரிக்கா தலைமையில், மார்ச் 7ம் தேதி முதல், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் இணைந்து வான்வெளிக் கண்காணிப்பில் ஈடுபட்டன. "நேட்டோ' படைகளும் அதில் இணைந்தன. அமெரிக்காவில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக லிபிய கண்காணிப்புக்கான தலைமைப் பொறுப்பில் இருந்து அந்நாடு விலகியது. மார்ச் 24ம் தேதி "நேட்டோ' பொறுப்பேற்றது.
    கடாபி குடியிருப்பு வளாகம் மீது "நேட்டோ' நடத்திய தாக்குதலில் அவரது கடைசி மகன் சயீப் அல் அரப் மற்றும் பேரப் பிள்ளைகள் பலியாயினர்.
    கடாபி, அவரது மகன் சயீப் அல் இஸ்லாம், லிபிய உளவுத் துறைத் தலைவரும் கடாபியின் மருமகனுமான அப்துல்லா அல் சனுஸ்ஸி ஆகியோருக்கு ஜூன் 27ம் தேதி சர்வதேச கிரிமினல் கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்தது.
    இம்மாதத் துவக்கத்தில் இருந்து எதிர்ப்பாளர்கள், கடாபி ராணுவம் வசம் இருந்த நகரங்களைப் படிப்படியாகக் கைப்பற்றி வந்தனர். நேற்று முன்தினம் ( 21ம் தேதி), டிரிபோலியை மூன்று திசைகளிலும் முற்றுகையிட்டனர். வடக்கில் உள்ள கடற்பகுதியை "நேட்டோ' முற்றுகையிட்டது. நேற்று தலைநகர் டிரிபோலிக்குள் எதிர்ப்பாளர்கள் நுழைந்து, கடாபியின் மூன்று மகன்களைக் கைது செய்தனர். நகரின் பெரும்பான்மையான பகுதிகள் எதிர்ப்பாளர்கள் வசம் வந்தன.

    லிபியாவின் "புரட்சி வழிகாட்டி' : 1942, ஜூன் 7ம் தேதி லிபியாவின் சிர்ட் நகர் அருகில் உள்ள பாலைவனத்தில் ஒரு கூடாரத்தில் பிறந்தார். லிபியாவில் உள்ள சிறுபான்மை இனக் குழுவான "கடாப்டா' என்ற இனக் குழுவைச் சேர்ந்தவர் கடாபி. லிபிய ராணுவ அகடமியில் 1965ல் பட்டம் பெற்றார். அக்காலகட்டத்தில் அரபு நாடுகளின் விடிவெள்ளியாகப் போற்றப்பட்ட எகிப்தின் கமால் அப்துல் நாசர் தான் கடாபியின் ஆதர்ச பிம்பமாக இருந்தார். அதனால், லிபியாவின் மன்னராட்சியைக் கவிழ்க்க படிக்கும் போதே திட்டமிட்டார். லிபியாவின் அப்போதைய மன்னர் இத்ரிஸ், சிகிச்சைக்காக துருக்கி சென்றிருந்த போது, 1969, செப்டம்பர் 1ம் தேதி தனது 27 வயதில் ரத்தம் சிந்தாத புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆட்சிக்கு வந்த உடன், வெளிநாட்டவர்களை அவரவர் நாடுகளுக்கு விரட்டியடித்தார்.
    1969, டிசம்பர் மாதம், லிபிய ராணுவ உயர் அதிகாரிகள் கடாபியைக் கவிழ்க்க முயன்றதை எகிப்து உளவு அமைப்பு தடுத்து நிறுத்தியது.
    இதையடுத்து, ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தனக்கும் தனது குடும்பத்துக்குமாக மாற்றி அமைத்தார். தொடர்ந்து யாரும் செய்யாத "புதுமையாக' லிபியாவில் முதலாளித்துவம், கம்யூனிசம் இரண்டுக்கும் மாற்றாக,"நேரடி ஜனநாயகம்' என்ற பெயரில் மக்களின் ஆட்சியைக் கொண்டு வரப் போவதாக அறிவித்தார். அதன்படி தனது கொள்கைகளை வகுத்து "பச்சைப் புத்தகம்' என்ற பெயரில் வெளியிட்டார். அதன் அடிப்படையில் லிபியாவில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. பெயருக்கு பிரதமர் என்பவர் நியமிக்கப்பட்டார். தன்னை நாட்டின் நிரந்தர "சகோதரத் தலைவர் மற்றும் புரட்சி வழிகாட்டி' என்று அழைத்துக் கொண்டார். பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாத அமைப்புகளை பணம் கொடுத்து ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. சபலபுத்திக்குப் புகழ்பெற்றவர் கடாபி. இவரது மெய்க்காவல் படைகளில் உள்ளோர் அனைவரும் பெண்களே. சமீபத்தில் "விக்கிலீக்ஸ்' மூலம் இவரது பெண் சபலம் பற்றிய தகவல்கள் வெளியாயின.

    கடாபிக்கு எதிர்ப்பு ஏன்? : ஜனநாயக ஆட்சி நடப்பதாகக் கூறப்படும் லிபியாவில் கடாபி தான் எல்லாமே. மாணவர்கள் அவரது "பச்சைப் புத்தகத்தில்' உள்ள அரசியல் கொள்கைகளைப் படிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர். எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. கடாபியின் கடந்த 41 ஆண்டுக் கால ஆட்சியில் லிபியா எவ்விதப் பொருளாதார முன்னேற்றத்தையும் காணவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வந்தது. அண்டை நாடுகளான எகிப்து மற்றும் டுனீஷியாவில் நிகழ்ந்த புரட்சிகள் தான் லிபிய மக்களுக்கும் தூண்டுதலாக அமைந்தன.

    அடுத்து என்ன? : முதலில் கடாபியைக் கண்டுபிடிக்க வேண்டும். பின் அவர் சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
    அவர் பிடிபடும் வரை, அவரது ஆதரவாளர்கள், கொரில்லாத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும். அதனால் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
    லிபியாவில் விரைவில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்தப்படும் என தேசிய இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதில், பல்வேறு இனக்குழுக்கள், கடாபியின் முன்னாள் ஆதரவாளர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனப் பலரும் உள்ளனர். அவர்களுக்கிடையில் ஒரு கருத்தொற்றுமை ஏற்படும் வரை லிபியாவின் அரசியல் ஸ்திரத் தன்மை சந்தேகத்திற்கிடமாகவே இருக்கும்.

    உலகத் தலைவர்கள் கருத்து : 
    "கடாபியும் அவரது ஆட்சியாளர்களும் தங்களது ஆதிக்கம் முடிவுக்கு வந்து விட்டதை உணர வேண்டும். அதுதான் ரத்தம் சிந்தும் இப்பிரச்னைக்குத் தீர்வு. தான் எப்போதுமே ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கடாபி கைவிட வேண்டும். லிபியாவின் எதிர்காலம் இனி அந்நாட்டு மக்கள் கையில்'
    - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

    "லிபிய மக்களின் விருப்பத்தை சீனா அங்கீகரிக்கிறது. விரைவில் அங்கு நிலவரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்புகிறோம்'
    - சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மா ஷாவோஷூ.

    "டிரிபோலியில் நடக்கும் சம்பவங்கள், கடாபிக்கு இறுதிக் காலம் வந்து விட்டதைக் காட்டுகின்றன. தன் மக்கள் இனிமேலும் பாதிக்கப்படாமல் இருக்க அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். லிபிய மக்களைக் கொன்ற குற்றச் செயல்களை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும்'
    - பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.

    "கடாபி தன் மீதான சர்வதேச கிரிமினல் கோர்ட் சுமத்தியுள்ள குற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். பயமில்லாத விடுதலையான, சர்வாதிகாரமில்லாத ஜனநாயகமான புதிய லிபியாவை இனி உருவாக்க வேண்டும். அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடக்க வேண்டும்'
    ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு.
    "ஜனநாயக நாடுகள் எனத் தங்களைக் கூறிக் கொள்ளும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள், குண்டு வீச்சின் மூலம் டிரிபோலியைக் கைப்பற்றியுள்ளன. பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள், தொழிற்சாலைகள் என, அனைத்தின் மீதும் அவர்கள் குண்டு மழை பொழிந்தனர். லிபிய மக்கள் மீதும் உலக மக்கள் மீதும் அமைதி நிலவட்டும்'
    - வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ்

    எண்ணெய் வளமிக்க லிபியா : ஆப்ரிக்க கண்டத்தின், வடபகுதியில், எகிப்தின் அருகில் அமைந்துள்ள மிகப் பெரிய நாடு.
    கி.மு., 8000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
    லிபியாவின் கிழக்கில் எகிப்து, தெற்கில் சூடான், சாட், நைஜர், மேற்கில், அல்ஜீரியா, டுனீஷியா நாடுகள் உள்ளன. வடக்கில் மத்திய தரைக் கடல் உள்ளது.
    நாட்டின் பெரும்பான்மையான பகுதி பாலைவனம்.
    65 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு. அவர்களில் 82 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். 97 சதவீதம் பேர் "சன்னி' முஸ்லிம்கள்.
    பொருளாதாரத்தில் எண்ணெய் வளம் 95 சதவீத பங்கு வகிக்கிறது.
    நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 30 சதவீதம்.
    வறுமைக் கோட்டுக்குக் கீழ் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உள்ளனர்.

    கடைசியில் அசைந்தார் கடாபி : வட ஆப்ரிக்க நாடான லிபியா, எண்ணெய் வளமிக்க நாடு. 1951 டிச., 24ல் இத்தாலி, பிரிட்டன் - பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிடியில் இருந்து சுதந்திரம் பெற்றது. முதலாம் இத்ரிஸ் என்பவர் சுதந்திர லிபியாவின் மன்னராக பதவியேற்றார். லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கடாபியின் முழு பெயர் முயாமர் அபு மின்யர் அல் கடாபி. 1942, ஜூன் 7ல், பிறந்தார். 1956ல் லிபியா சார்பில் இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்றார். ஏதென்சின் ஹெலனிக் ராணுவ அகடமியில் பயிற்சி பெற்றார். 1969, செப்.,1ல், லிபிய மன்னர் இத்ரிஸூக்கு எதிராக ராணுவ புரட்சி செய்து ஆட்சியை பிடித்தார். அன்று முதல் நேற்றுவரை இந்த பதவியை தொடர்ந்தார். இவருக்கு ஏழு குழந்தைகள்.ஆறு மாதங்களாக, இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் பலியாகினர். இருப்பினும் உறுதியுடன் போராடிய கிளர்ச்சியாளர்கள் கடாபியின் ஆட்சிக்கு முடிவு கட்டினர்.

    போரட்டத்தின் முக்கிய சம்பவங்கள்: 2011, பிப்.,15: அதிபர் கடாபி பதவி விலகக்கோரி லிபியா புரட்சியாளர்கள் பெங்காசி நகரில் போரட்டத்தில் குதித்தனர். இது நாட்டின் மற்ற நகரங்களுக்கு பரவியது. ஆயிரம் பேர் பலியாகினர்.
    பிப்.,21: லிபிய அரசு, போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என, பிரிட்டன் பிரதமர் கேமரூன் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கண்டனம்.
    பிப்., 22: எனது உயிரின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என அதிபர் கடாபி சவால்.
    பிப்., 25: புரட்சியாளர்கள் மிசுரடா, ஜாவியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றினர்.
    மார்ச் 17: புரட்சியாளர்கள் மீது லிபிய ராணுவம் தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்.
    ஏப்.,30: கடாபியின் இளைய மகன் சயீப் அல் அராப், நேட்டோ படையினரின் வெடிகுண்டு தாக்குதலில் பலி.
    ஜூன் 27: கடாபி மற்றும் மகன் சயீப் அல் இஸ்லாம் ஆகியோரை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் பிடிவாரன்ட்.
    ஆக., 21: புரட்சியாளர்கள் கிரீன் சதுக்கம் உள்ளிட்ட தலைநகர் டிரிபோலி முழுவதையும் தங்கள் வசம் கொண்டு வந்தனர். கடாபியின் மகன்கள் சயீப் மற்றும் முகமது ஆகியோரை கைது செய்தனர்.
    ஆக., 22: உச்சக்கட்ட போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேலானோர் திரண்டு, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்து தர்ம சாஸ்திரம்...!

    * இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
    * ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.
    * சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.
    * அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
    * பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.
    * குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.
    * கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.
    * நெருப்பை வாயால் ஊதக் கூடாது.
    * கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.
    * எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.
    * திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.
    * சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.
    * சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
    * கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.
    * இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.
    *சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.
    *சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
    * மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.
    * குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.
    * தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.
    * இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.
    * தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.
    * வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
    * மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.
    * பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.
    * ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
    * வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.
    * ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.
    * தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.
    * பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.
    * பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.
    * அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.
    * ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.
    * பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
    * பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.
    * பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.
    * பசு மாட்டை, "கோமாதா'வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.
    * தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.
    * பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.
    * தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.
    * அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.
    * வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.
    * நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

    பக்தி என்றால் என்ன?

    இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார்கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கிறதோ, பதிவிரதையின் மனமானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகாசமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ... அதுபோல், கடவுளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக்கூடாது. காரணம் என்று வந்தால் அது வியாபாராமாகி விடும். இறைவனிடம் எதைக் கேட்டாலும் அது வியாபாரம் தான்! ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல,செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகிவிடும். அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, ஈஸ்வரனிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் பக்தி என்று பெயர்.

    வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் அனைத்து பாடங்களில் தோல்வியுற்றவர்களும் உடனடி சிறப்புத் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற அனுமதிக்கப்படும்!


    வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் அனைத்து பாடங்களில் தோல்வியுற்றவர்களும் உடனடி சிறப்புத் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற அனுமதிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்துள்ளார்.


    தமிழக சட்டப்பேரவையில் திங்கட்கிழமையன்று பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இதுவரை 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் 3 பாடங்கள் வரை தோல்வியுற்றவர்கள் மட்டுமே உடனடியாக நடத்தப்படும் துணைத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று அடுத்த கல்வியாண்டிலேயே உயர் கல்வியை தொடர முடியும்.

    இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு, அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்கள் கூட துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2012-13ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள மாற்றுப் பள்ளிகள், உண்டு, உறைவிடப் பள்ளிகள், தேசியக் குழந்தைத் தொழிலாளர் நலத் திட்டப் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் இலவச சீருடை, பஸ் பாஸ், மிதிவண்டி, உதவித் தொகைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

    இந்தியாவுக்கு மீண்டும் அவமானம் ஓவல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி!

    ஓவல் டெஸ்டில் சொதப்பலாக ஆடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரை 0-4 என முழுமையாக இழந்து, மிகப் பெரும் அவமானத்தை சந்தித்தது. சச்சின்(91), அமித் மிஸ்ராவின்(84) போராட்டம் வீணானது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, கோப்பை வென்று சாதித்தது.
    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 591 ரன்கள் குவித்து "டிக்ளேர் செய்தது. இந்திய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, "பாலோ-ஆன் பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்திய அணி, நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.
    நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், "நைட்-வாட்ச்மேனாக களமிறங்கிய அமித் மிஸ்ரா இணைந்து பொறுப்பாக ஆடினர். இங்கிலாந்து பவுலர்களை எளிதாக சமாளித்த இவர்கள், அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தனர். "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வழிகாட்ட கலக்கலாக ஆடிய மிஸ்ரா 84 ரன்களுக்கு சுவான் சுழலில் போல்டானார். நான்காவது விக்கெட்டுக்கு சச்சின்-மிஸ்ரா 144 ரன்கள் சேர்த்தனர்.


    விக்கெட் மடமட: இதற்கு பின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. இந்திய பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல் ஏனோதானோ என ஆடினர். அம்பயர்களின் சில தீர்ப்புகளும் தவறாக அமைந்தன. மீண்டும் பந்துவீச வந்த பிரஸ்னன் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது "வேகத்தில் சச்சின் 91 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய ரசிகர்களின் நெஞ்சம் தகர்ந்தது. இதையடுத்து சதத்தில் சதம் காணும் சச்சின் கனவு இம்முறையும் பலிக்கவில்லை. சுவான் சுழலில் சுரேஷ் ரெய்னா(0) சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார். "ரீப்ளேவில் பந்து "இன்சைட் எட்ஜ் ஆகிச் சென்றது தெளிவாக தெரிந்தது. பொறுப்பற்ற "ஷாட் அடித்த கேப்டன் தோனி(3), பிராட் பந்தில் வீழ்ந்தார். இதே ஓவரில் ஆர்.பி.சிங்கும்(0) அவுட்டானார். 8 ஓவர் இடைவெளியில் வெறும் 7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழக்க, தோல்வி உறுதியானது. தொடர்ந்து சுழலில் மிரட்டிய சுவான், காம்பிரையும்(3) அவுட்டாக்கினார். இதன் மூலம் தனது 5வது விக்கெட்டை பெற்றார். உணவு இடைவேளைக்கு பின் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

    இங்கிலாந்து சார்பில் சுழலில் அசத்திய சுவான் 6 விக்கெட் வீழ்த்தினார்.
    மூன்றாவது இடம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-4 என, மோசமாக இழந்த இந்திய அணி, ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில், 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து அணி 125 புள்ளிகளுடன் "நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்க அணி (118) இரண்டாவது இடம் பிடித்தது.
    ------
    நான்காவது சோகம் இந்திய அணியின் 79 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில், 4 அல்லது 5 போட்டிகள் கொண்ட தொடரில், முழுமையாக தோல்வியடைவது இது நான்காவது முறை. இதற்கு முன், இங்கிலாந்து (0-5, 1959), வெஸ்ட் இண்டீஸ் (0-5, 1961-62), ஆஸ்திரேலியா (0-4, 1967-68) அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. தவிர, 1967, 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக 0-3, 1999-2000ல் ஆஸ்திரேலியாவுடன் 0-3 என மோசமாக தோற்றது.
    ---
    21 ரன்களுக்கு 7 விக்.  கடைசி நாள் ஆட்டத்தில், சச்சின்-அமித் மிஸ்ரா ஜோடி, நான்காவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்க்க, இந்திய அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்திருந்தது. பின் வந்தவர்கள் சொதப்ப, அடுத்த 21 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

    அத்தியாவசியப் பொருட்களை கடத்தும் சமூக விரோதிகள் மற்றும் போலி ரேஷன் கார்டுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம்!


    அத்தியாவசியப் பொருட்களை கடத்தும் சமூக விரோதிகள் மற்றும் போலி ரேஷன் கார்டுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் உயர்த்தி வழங்கப்படும்'' என்று, சட்டசபையில் அமைச்சர் புத்திசந்திரன் அறிவித்தார்.

    சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் புத்திசந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்: அத்தியாவசியப் பொருட்களை கடத்தும் சமூக விரோதிகள் பற்றி அளிக்கப்படும் தகவல்கள், சமூக விரோதிகளைக் கைப்பற்றுவதில் முடிந்தால், தகவல் தரும் நபருக்கு வழங்கப்படும் சன்மானம், 500 ரூபாயிலிருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். போலி ரேஷன்கார்டுகள் கண்டுபிடித்து களையப்பட்டால், தகவல் தரும் நபருக்கு வழங்கப்படும் சன்மானம் 200 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நுகர்வோர் தங்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை அறிந்து கொள்ள உதவும், மாநில நுகர்வோர் உதவி மையம் தொடர்பான விளம்பர ஒலித் துணுக்குகள் தயாரிக்கப்பட்டு, வானொலி நிலையத்தின் சென்னை பண்பலை அலைவரிசை வாயிலாக ஒலிப்பரப்பப்படும்.

    சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு, 53 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், சொந்தக் கட்டடம் கட்டப்படும். வில்லிவாக்கம், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அலுவலகங்களுக்கும், மாவட்ட அளவில் தர்மபுரி, அரியலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகங்களுக்கும், 5 புதிய ஜீப்கள் வழங்கப்படும். விஞ்ஞான முறையிலான 1,250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், தண்டையார்பேட்டை வட்டத்திலுள்ள தங்கசாலையில் கட்டப்படும். 1,200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் கட்டப்படும்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காலி இடங்கள், பிற துறைக்கு சொந்தமான இடங்களில், மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன்கள் கொள்ளளவு கொண்ட, கூடுதல் கிடங்குளை 47 கோடியே 50 லட்ச ரூபாய் நபார்டு வங்கி கடன் நிதியுதவியுடனும், 2 கோடியே 50 லட்ச ரூபாய் அரசு நிதியுதவியுடனும் கட்டப்படும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, மத்திய அரசின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, சொந்தக் கட்டடம் கட்டப்படும். இவ்வாறு அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    மன்னிப்பு கேட்க வேண்டும்' சகாய் வீடுமுன் போராட்டம் !


    இதே நாள்...


  • உக்ரேன் கொடி நாள்
  •  ருமேனியா விடுதலை நாள்(1944)
  •  மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது(1821)
  •  ஏ.கே.செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டது(1948)
  • சித்திரை மாதம் முதல் நாளிலேயே தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தமிழக அரசு!


    கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ் புத்தாண்டு ரத்து செய்யப்பட்டு சித்திரை மாதம் முதல் நாளிலேயே தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த சட்டசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி மாறியதும் தி.மு.க., கொண்டு வந்த பல்வேறு திட்டங்களான கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச கலர் டி.வி., திட்டம் , இலவச வீடு வழங்கும் திட்டம் சமச்சீர் கல்வி (கோர்ட்டு போய் தப்பியது ) , புதிய தலைமை செயலகம் மாற்றம் ரத்து என உள்ளிட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

    தை மாதம் முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தி.மு.க., சட்டம் இந்நிலையில் இயற்றியது.இன்றைய சட்டசபையில் இன்று தமிழக அரசு ரத்து செய்தது. மீண்டும் சித்திரை முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று புதிய சட்ட மசோதாவை அவையில் அரசு தாக்கல் செய்தது. இதற்கு கம்யூ., கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க., எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

    பல்லாண்டு காலம் நடைமுறையில் இருந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம் என தொல்லியல், வானிலை நிபுணர்கள் தெரிவித்த கருத்தின்படி இந்த மாற்றம் கொண்டு வருவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தை மாதம் ( பொங்கல் நாளில் ) கொண்டாடப்படுவது மக்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் இருந்ததாகவும் அரசு தனது மசோதாவில் கூறியுள்ளது. இந்த மசோதாவை அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் தாக்கல் செய்தார். இதன் படி சித்திரை ஒன்று ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்புத்தாண்டாக கொண்டாடப்படும்.


    ‌‌ஜெ., விளக்கம் சொல்கிறார்: இது தொடர்பாக அவர் சட்டப்பேரவையில் முதலவ்ர் ஜெ., ‌பேசுகையில், தமிழ் புத்தாண்டு சட்டம் சுய விளம்பரத்துக்காக இயற்றப்பட்டதே தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதத்தை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த சட்டம் இயற்றப்பட்ட உடன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விளம்பரத்திற்காக இது உருவாக்கப்பட்டது. இதை தவிர இந்த சட்டத்தினால் யாருக்கும் நன்மை இல்லை என்றார்.

    கருணாநிதி கருத்து என்ன ? : தி.மு.க., தலைவர் கருணாநிதி இது குறித்து வெளியிட்டுள்ள அறிகையில்: தமிழ் புத்தாண்டு தை த்திங்கள் முதல் நாளில் கொண்டு வரவேண்டும் என தமிழ் புலவர்கள் கோரிக்கை வைத்ததன் காரணமாகத்தான் மாற்றி அமைக்கப்பட்டது. 1921 ம் ஆண்டு முதல் மறை மலை அடிகள் தலைமையில் 500 புலவர்கள் அந்நாள் முதல் இதனை வலியுறுத்தி வந்தனர். தமிழ் புத்தாண்டை மாற்றுவது என்பது தி.மு.க.,வின் முடிவு அல்ல. இடதுசாரி கட்சிகளின் தமிழ் உணர்வு பாராட்டத்தக்கது . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்!


    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...