|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 March, 2011

Dalai Lama pleads for right to 'retire'

The Dalai Lama pleaded with exiled Tibetan MPs on Monday to accept his resignation as their political leader, warning that a delayed handover could pose “an overwhelming challenge”. In a letter read out to the exiled parliament, the 75-year-old Nobel peace laureate argued that the Tibetan movement was now mature enough for a directly-elected political leader. (Source: Hindustan Times)

"அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நான் எடுத்த முடிவை, திபெத் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் கால தாமதம் செய்தால், தேவையற்ற பிரச்னைகளும், நிச்சயமற்ற தன்மையும் ஏற்படும்' என, திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறினார்.தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவர் தலாய் லாமா, கடந்த வாரம் அறிவித்தார். இதுகுறித்த முறையான அறிவிப்பை, இமாச்சல் மாநிலம் தரம்சாலாவில் செயல்படும் திபெத் பார்லிமென்டில் (நாடு கடந்த அமைப்பு) நேற்று வெளியிட்டார். அவரது இந்த அறிவிப்பை, திபெத் பார்லிமென்ட் சபாநாயகர் பென்பா டிசெரிங், திபெத் மொழியில் வாசித்தார். தலாய் லாமாவின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒருவரிடம் தலைமை பொறுப்பை தரப்போவதாக அறிவித்தேன். இதற்கு திபெத் நிர்வாகிகள் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால், புதிய தலைமைக்கு இது தான் சரியான நேரம் என நினைக்கிறேன். என் முடிவை திபெத் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.திபெத் பிரச்னை தீர்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அந்த காலம் வரை, நான் தலைமை பதவியில் நீடிக்க முடியாது. எனவே, புதிய தலைவரை தற்போது தேர்வு செய்தால், பிரச்னை சுமுகமாக தீரும். இதற்கிடையில், ஏதாவது பிரச்னை என்றால், அதை தீர்ப்பதற்கு நான் உதவுவேன். புதிய தலைவரிடம் பொறுப்பு ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்பட்டால், நிச்சயமற்ற தன்மையும், தேவையற்ற பிரச்னைகளும் <உருவாகும். இதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு தலாய் லாமாவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறும்படம் - ராமசாமி

ராமசாமி 

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: ஒருவர் கைது


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஒருவர் கற்பழிதுக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் அவரது உடலை சூட்கேசில் வைத்து கால்வாயில் வீசியுள்ளனர்.


தோஷா தாக்கர் (24) என்னும் இந்திய பெண் சிட்னி காலேஜ் ஆப் பிசினஸ் அன்ட் ஐடியில் படித்து வந்தார். அவர் ஆஸ்திரேலிய குடியிருப்பு பெற்றவர். கடந்த 9-ம் தேதி திடீர் என்று மாயமானார்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி காலை கட்டுமானப் பணியாளர்கள் சிலர் மெடோபாங்க் பார்க் அருகில் உள்ள கால்வாயில் ஒரு சூகேஸ் கிடப்பதைப் பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது ஒரு இளம் பெண்ணின் உடல் இருந்தது. உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே போலீசார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து தேனியல் ஸ்டானி-ரெஜினால்ட் 19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதாகியுள்ள ரெஜினால்ட் தோஷா வீட்டிற்கு அருகில் தான் வசித்துள்ளான்.

46வது பிறந்தநாள் கொண்டாடும் ஆமிர் கான்


ஏ மேரே ஹம்சஃபர்' என்று நேற்றுதான் ஆமிர்கான் பாடியது போல இருக்கிறது. ஆனால் 30 ஆண்டுகள் ஓடி விட்டது பாலிவுட்டில் ஆமிர்கான் அறிமுகமாகி. யாதோன் கி பாரத் படம்தான் ஆமிர்கானின் முதல் படம். அதில் குட்டிப் பையனாக நடித்திருப்பார் ஆமிர்.

அவர் ஹீரோவாக அறிமுகமான படம் ஹோலி. ஆனால் லைம் லைட்டுக்கு போய், சூப்பர் ஸ்டாராக அவரை அடையாளம் காட்டிய படம் கயாமத் சே கயாமத் தக். அன்று தொடங்கிய அவரது பாலிவுட் ஆட்டம், ஒவ்வொரு படத்திலும் ஆமிர்கானுக்கு தனி முத்திரையைப் பதித்து தனித்துவம் வாய்ந்த நாயகனாக அவரை மாற்றியிருக்கிறது.

தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப் மட்டுமின்றி சமுதாயத்திற்கு தேவையான கருத்தையும் மக்களுக்கு பிடித்தபடி கொடுக்கும் நடிகர் அவர்.

ஆமிர் நடிக்கும் ஸ்டைலை மட்டுமல்லாமல், படம் எடுக்கும் ஸ்டைலையும் பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டும் பாராட்டுகின்றது. ஆஸ்கர் விருதுக்கு அவரது லகான், தாரே ஜமீன் பர் ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

'அரைச்ச மாவை அரைப்போமா' என்று மற்றவர்கள் பாடிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், லகான், ரங் தே பசந்தி, தாரே ஜமீன் பர், தோபி காட் போன்ற வித்தியாசமான படங்களைத் தந்துள்ளார் ஆமிர்.

அவருக்கு நாளுக்கு நாள் வயதாகிக் கொண்டு போனாலும், நடிப்பிலும், இயக்கத்திலும், இளமை கூடிக் கொண்டே போகிறது என்பதில் சந்தேகமில்லை.

சட்டப்படி குற்றம் இசை வெளியீட்டு விழா


8 அடி நகர்த்திய பூகம்பம்!-பூமியின் அச்சும் மாறியது


8.9 ரிக்டர் பூகம்பம் காரணமாக, பூமி தனது அச்சிலிருந்து 4 இன்ச் அளவுக்கு இடம் மாறியுள்ளது. அதே போல ஜப்பானின் மத்திய தீவு 8 அடி நகர்ந்துள்ளது.


பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்வாக மேற்கிலிருந்து கிழக்காக சுழன்று வருகிறது.

இந் நிலையில் 2004ம் ஆண்டு இந்தோனேஷியா அருகே ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் 2.76 இன்ச் அளவுக்கு (7 சென்டி மீட்டர்) பூமியின் சாய்வை மாற்றியது. இதனால் பூமியின் சுற்று வேகமும் குறைந்து ஒரு நாளின் சில மைக்ரோ செகன்டுகளும் குறைந்தன. மேலும் அந்தமான் தீவுகளுக்கும் இந்திய கடலோரப் பகுதிகளுக்கும் இடையிலான தூரமும் சில அடிகள் குறைந்தது. மேலும்

இதையடுத்து கடந்த தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கமும் இதே போல பூமியின் அச்சை சில செ.மீ. மாற்றி பூமியின் சுற்று நேரத்தின் சில மைக்ரோ செகன்டுகளைக் குறைத்தது.

இப்போது ஜப்பானை உலுக்கிய பூகம்பமும் பூமியின் அச்சை 4 இன்ச் அளவுக்கு மாற்றியுள்ளதோடு, 24 மணி நேரத்தில் 1.6 மில்லி செகண்டுகளையும் குறைத்துவிட்டது.

அமெரிக்க பூகம்பவியல் கழக விஞ்ஞானி கென்னத் ஹட்நட் கூறுகையில், ஒட்டுமொத்த ஜப்பானும் பூமியின் அச்சிலிருந்து 8 அடி அளவுக்கு விலகியுள்ளது. ஜப்பான் வரலாற்றில் இது மிகப் பெரிய பூகம்பமாகும். இந்த கடும் பூகம்பத்தின் காரணமாக வெளியான மிக மிக அபரிதமான சக்தியே, கடலை கொந்தளிக்க வைத்து பெரும் சுனாமி அலைகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது. 30 அடி அளவுக்கு சுனாமி அலையின் உயரம் இருந்ததற்கும் இதுவே காரணம். குறிப்பாக மியாகி மாகாணத்தை முற்றிலும் சீரழித்துள்ளது இந்த பூகம்பம் என்றார்.
English summary

கலைஞர் டிவி எம்.டியிடம் டெல்லியில் சிபிஐ விசாரணை


2 ஜி ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக சிபிஐ கலைஞர் தொலைக்காட்சியில் அதிரடி சோதனை நடத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அந்த தொலைக்காட்சியின் பங்குதாரர்கள் கனிமொழி எம்பியிடமும், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்நிலையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரரும், நிர்வாக இயக்குனருமான சரத்குமாரிடம் டெல்லியில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்


அணு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது ஜப்பானில். அந்நாட்டின் முக்கிய அணுசக்தி மையமான ஃபுகுஷிமாவின் மூன்றாவது அணுஉலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 19 பேர் படுகாயமடைந்தனர்.


இந்த வெடிப்பு காரணமாக மணிக்கு 20 மைல் வேகத்தில் அணுக்கதிர் வீச்சு பரவும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் வேகமாக வெளியேற வேண்டும் என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...