|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 November, 2011

நல்ல மகனாக இருக்கும் எந்த ஒரு ஆண்மகனுமே பெண்ணுக்கு நல்ல கணவனாக இருக்க முடியும்!


இந்தியாவில் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் அனைவருக்குமே தங்களுடைய பெண்ணுக்கு சரியான கணவன் அமைய வேண்டுமே என்ற கவலை ஏற்படுவதுண்டு. நல்ல மருமகன் கிடைத்து விட்டாலே அவர்களுக்கு பாதி பாரம் குறைந்து விடுகிறது. மகளின் வாழ்க்கை நன்றாக அமைந்துவிட்டது. இனி கவலை யில்லை என்ற நிம்மதியுடன் காலத்தை கழிக்கத் தொடங்கிவிடுவர். நல்ல மகனாக இருக்கும் எந்த ஒரு ஆண்மகனுமே பெண்ணுக்கு நல்ல கணவனாக இருக்க முடியும்.  ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு. நல்ல கணவனாக இருக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். 

பாதுகாப்பு உணர்வு: மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனைவி சொல்வதை அப்படியே சில கணவன்மார்கள் கேட்பார்கள். அதனால் தான் அப்படிச் சொன்னார்கள். இதேபோல், கணவன்மார்கள் சொல்வதை அப்படியே அவர்களது மனைவியர் கேட்க வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறை இருக்கிறது. அன்பாக, எல்லா வகையிலும் பாது காப்பு தரும் உணர்வுடன் ஒரு கணவன் தனது மனைவியிடம் பழகினால் அந்த மனைவி அவன் என்ன சொன்னாலும் கேட்பாள். 

அமைதியும் ஆர்வமும் : அலுவலக வேலை என்றாலும் சரி, பணியை முடித்து விட்டு சாலையில் வரும் போது நடைபெறும் சம்பவம் என்றாலும் சரி உங்களை பாதிக்கும் விசயங்களை, அதே கோபத்தோடு அவற்றை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். எதுவென்றாலும் சரி நண்பர்கள் வட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்வீர்களோ அதே போல வீட்டில் மனைவியடமும் உங்களின் செயல்பாடுகள் அமைந்தால் வெற்றி உங்களுக்கே. 

மென்மையான அணுகுமுறை: வாழ்க்கையில் தாம்பத்ய உறவு முக்கிய இடம் பெறுகிறது. அந்த விஷயத்தில் கணவனின் அன்பான அணுகுமுறையைத்தான் ஒரு மனைவி எதிர்பார்க்கிறாள். ஒரு ஆண் தனது செக்ஸ் ஆசையை மனைவியிடம் எளிதில் சொல்லி விடலாம். ஆனால், பெண் அப்படி அல்ல. அவள் வளர்ப்பு முறையே வேறு. இப்படித்தான் எல்லோரிடமும் பழக வேண்டும் என்று சிறுவயது முதலே அவள் சொல்லி சொல்லியே வளர்க்கப் பட்டு இருக்கிறாள். அதனால், நாசூக்காகத் தான் அவள் தனது விருப்பத்தை வெளிப்படுத்த முடியும். இதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். “இன்னிக்கு வேண்டாம்” என்று மனைவி சொன்னால்கூட கொஞ்சமும் வெறுப்பை அவள் மேல் காண்பிக்கக் கூடாது சரி ... என்று சொல்லிவிட்டு, அவள் அப்படிச் சொல்ல என்ன காரணம் என்பதை மென்மையாக கேளுங்கள். உங்களது அந்த பாசமான கேள்வியே, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் 50 சதவீதம் சரியாக்கிவிடும். அன்புக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. 

உறவில் மகிழ்ச்சி: உறவு விஷயத்தில் உங்கள் அவசரம் மட்டுமே பிரதானமாக இருந்தால் மனைவிக்கு விரக்தி தான் மிஞ்சும். எனக்குப்போய் கணவன் இப்படி அமைந்து விட்டாரே? என்று நாளடைவில் எண்ணத் தொடங்கிவிடுவாள். இதனால் குடும்ப வாழ்க்கையே நரக வேதனையாகிவிடும். எனவே உறவின் போது மென்மையான அணுகுமுறையையே பின்பற்றுங்கள். அவள் விருப்பத்தை கேளுங்கள். ஓரிரு நிமிடங்களில் உறவை முடித்து விட்டு படுத்துத் தூங்கிவிடாதீர்கள். உறவுக்கு பின்னரும் அன்பாக அவளை வருடிவிடுங்கள். ஆதரவாக பேசுங்கள். உறவின் போது அவள் மகிழ்ச்சியாக இருந்தாளா என்பதையும் கேளுங்கள். 

ஈகோ வேண்டாம் : எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!. எனவே அனைத்து விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் வார்த்தைக்கு சரி என்ற பதிலைத் தவிர வேறு எதையும் யோசிக்கமாட்டார் உங்கள் மனைவி. பிறகு தெளிந்த நீரோடை போல வாழ்க்கை தெளிவாக செல்லும்.

அக்னி ரூபாமாய் ஒளிரும் கார்த்திகை மாதம்!


தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபாமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் துலாராசியில் இருந்த சூரியன் நீச்சம் மாறி உச்சம் ஆகிறார் என்கின்றன புராணங்கள். சூரியனின் நகர்வைக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் சூரியன் தன் உச்சவீடான மேஷத்தில் பிரவேசம் செய்வது தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

இதன் பின்னர் சூரியன் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளைக் கடந்து தன் நீச்ச வீடான துலாத்திற்கு வந்து விடுவார். நீச்ச வீடு வரும் போது சூரியன் தன் பலத்தை இழந்து விடுவார். பின்னர் மீண்டும் தன் உச்ச ராசியான மேஷத்திற்குச் செல்ல, விருச்சிக ராசியில் இருந்து தன் ஏறுமுகமான பயணத்தைத் தொடங்குவார். அவ்வாறு பயணம் செய்யும் போது ஒளிக் கடவுளான சூரியனுக்கு மரியாதை செய்யும் விதமாக கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்.

தீபத் திருவிழா: கார்த்திகை நட்சத்திரத்திற்கான அதிபதி சூரியன். அதனால்தான் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அத்துடன் பெரும்பாலான கோயில்களிலும், வீடுகளிலும் கார்த்திகை மாதம் முழுவதும் மாலை விளக்கேற்றி வைக்கும் பழக்கமும் உண்டு.

திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டுவாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

கார்த்திகை சோமவார விரதம்: அக்னி ரூபமான அண்ணாமலையார் சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுதும் வழிபடுகிறோம். சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. இந்தநாளில் அனைத்து சிவ ஆலயங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுவது சிறப்பம்சமாகும். சிவ பெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகளே சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருவானதாக கூறுகிறது ஸ்கந்த புராணம்.

முருகப்பெருமானாக மாற அந்த அறுவரையும் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் இதற்காக அவர்கள் அறுவரும் நட்சத்திரமாக விளங்குகின்றனர். அந்த கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை ‘அக்னி’. கிருத்திகா ப்ரதமம் என்று வேதத்தில் கார்த்திகை நட்சத்திரம் முதலாவதாக கூறப்படுள்ளது. அந்த மாதத்தின் கார்த்திகை மற்றும் பௌர்ணமி இணைந்த அந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம்.

விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள், பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள் என்கின்றன புராணங்கள்.

மாமிசம் தவிர்ப்பது நல்லது; கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுசரிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. இந்த மாதத்தில்தான் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து மலைக்கு செல்கின்றனர்.

தானத்தின் புகழ்: மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஐதீகம். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல்சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் "திருமண மாதம்" என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

கார்த்திகை மாதப் பௌர்ணமி நாளில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும் என்று கருதப்படுவதால் இந்து மதச் சடங்குகளில் கார்த்திகை ஸ்நானம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. தினமும் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் எல்லா துன்பங்களும் விலகும். கார்த்திகை மாதம் தீபம் தானம் செய்வது லட்சுமிகடாட்சம் தரும். வெண்கலப்பாத்திரம், தானியம், பழம் போன்றவற்றை தானம் செய்தால் செல்வம் சேரும்.

அய்யனாருக்கு கிடாவெட்டி, அன்னக்கொடியும் கொடிவீரனும்!


பாரதிராஜாவின் கனவுப் படம் என வர்ணிக்கப்படும் அன்னக்கொடியும் கொடிவீரனும் தேனி அல்லி நகரத்தில் இன்று தொடங்கியது. கொட்டும் மழையிலும் தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து படத்துக்கு வாழ்த்து தெரிவித்தது. பாரதிராஜாவின் குலதெய்வமான வீரப்ப அய்யனார் கோயிலில் கிடாவெட்டி பொங்கல் வைத்து இந்த படத்தின் தொடக்கவிழாவை நடத்தினார் பாரதிராஜா. பொம்மலாட்டம் படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கும் இந்தப் படத்தில், இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கிறார். இனியா, கார்த்திகா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

தொடக்கவிழாவுக்கு, இயக்குநர்கள் கே பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம், நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன், கலைப்புலி தாணு, பி எல் தேனப்பன் உள்பட பலரும் பங்கேற்றனர். படத் தொடக்கவிழாவையொட்டி, அல்லி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பாரதிராஜாவின் உறவினர்கள், பக்கத்து ஊர்களிலிருந்து வண்டி கட்டிக்கொண்டு வந்திருந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ரம்மியமான சூழலில் விழா நடந்தது. காலையிலிருந்தே மழை விட்டுவிட்டு பெய்தாலும், விழா தடையில்லாமல் நடந்து முடிந்தது.

பஸ் கட்டணம், பால் விலை உயர்வுக்கு கருணாநிதி கண்டனம்!


முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள பஸ் கட்டணம், பால் விலை உயர்வுக்கு திமுக தலைவர் கருமாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் இதுதொர்பாக திமுக போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்த கட்டண உயர்வு குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, பஸ் கட்டணம், பால் விலை உயர்வு கண்டனத்துக்குரியது. இதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து திமுக தனது முடிவை அறிவிக்கும். தேவைப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

கார் ஏற்றி எல்ஐசி அதிகாரி கொலைகள்ளக் காதலனுடன், மனைவி கைது! (கலிகாலம்)


அம்பை அருகே கார் ஏற்றி எல்ஐசி அதிகாரி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டனர்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி விநாயகர் காலனியைச் சேர்ந்தவர் விசுவநாதன். அவரது மனைவி ஆதிலெட்சுமி. அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். விசுவநாதன் மார்த்தாண்டத்தில் எல்ஐசி உயர் நிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். தினமும் அவர் நெல்லை வரை பைக்கில் சென்று பின்னர் அங்கிருந்து பஸ்சில் மார்த்தாண்டம் செல்வது வழக்கம்.

கடந்த 10ம் தேதி அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது அம்பை கல்சுண்டு காலனி அருகே பைக் மீது பின்னால் வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த விசுவநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து விகேபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே விசுவநாதன் சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி இறந்தார். இறப்பதற்கு முன்பு அவர் போலீசாரிடம் மரண வாக்குமுலம் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் விகேபுரம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், அம்பை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் விசுவநாதன் மனைவி ஆதிலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆதிலட்சுமி நேற்று மாலை விஏஓ முன்பு சரணடைந்தார்.

அப்போது அவர் அளித்துள்ள வாக்குமுலத்தில் கூறியிருப்பதாவது,எனக்கும், அம்பை எல்ஐசி காலனியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் குமார் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. ஆட்டோ டிரைவரான குமார் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றபோது எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்து எனது கணவர் கண்டித்தார். இது பற்றி குமாரிடம் தெரிவித்தேன்.

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக் கட்ட இருவரும் முடிவு செய்தோம். கடந்த 1 மாதத்துக்கு முன்பாக ரூ.1 லட்சம் குமாரிடம் கொடுத்தேன். அந்த பணத்தில் தான் குமார் கார் வாங்கினார். கடந்த 10ம் தேதி வேலைக்கு சென்ற விசுவநாதனை கார் ஏற்றிக் கொன்றோம். இதற்கு குமாரின் நண்பர்கள் இருவரும் உதவினர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி குமாரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. குமாரின் நண்பர்களை தேடி வருகின்றனர்.

காங்.கில் இணைந்த சிரஞ்சீவி அமைச்சராகிறார்!


பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸில் வந்து இணைந்து விட்டதைத் தொடர்ந்து தற்போது அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியைக் கொடுக்க சோனியா காந்தி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இந்தப் பதவிக்காகத்தான் இத்தனை நாட்களாக ஆவலுடன் காத்திருந்தார் சிரஞ்சீவி. இந்தப் பதவியே முன்பே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இடையில் தெலுங்கானா பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததாலும், சோனியாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதாலும் அவரால் மத்திய அமைச்சர் பதவியை உடனே அடைய முடியவில்லை.

இந்த நிலையில், தற்போது சிரஞ்சீவிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க சோனியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிரஜா ராஜ்ஜியத்தைக் கலைத்து விட்டு காங்கிரஸில் சேர்ந்தபோது சோனியா காந்தி அப்போது டெல்லிலேயே இல்லை. மாறாக ராகுல் முன்னிலையில்தான் அவர் கட்சியில் சேர்ந்தார்.இந்த நிலையில் முதல் முறையாக சோனியாவை நேற்று சந்தித்தார் சிரஞ்சீவி. காங்கிரஸில் சேர்ந்த பிறகு அவர் சோனியாவை சந்தித்தது இதுவே முதல் முறையாகும். அப்போது உரிய கெளரவம் தரப்படும் என சிரஞ்சீவிக்கு உறுதியளித்தாராம் சோனியா. அவருக்கு விரைவில் மத்தியஇணை அமைச்சர் பதவி தரப்படும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதற்கு முன்பாக சிரஞ்சீவி எம்.பியாக வேண்டும். ராஜ்யசபா மூலமாகவோ அல்லது லோக்சபா எம்பியாகவோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியும். இதற்காக அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் சிரஞ்சீவியை நிற்க வைக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அப்போது 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ராஜ்யசபா தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே சிரஞ்சீவி அமைசச்ராகி விடுவார் என்று கூறப்படுகிறது. அமைச்சரான பின்னர் அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவாராம்.

அனேகமாக அடுதத மாத வாக்கில் சிரஞ்சீவி அமைச்சராக்கப்படலாம் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாத வாக்கில் உ.பியில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்குள்ளாக சிரஞ்சீவி விவகாரத்தை முடித்து விட காங்கிரஸ் தலைமை தீர்மானித்துள்ளது. நேற்று சோனியாவை சந்தித்த பின்னர் வெளியே வந்த சிரஞ்சீவி படு உற்சாகமாக காணப்பட்டார். அவர் கூறுகையில், எனக்கு உரிய கெளரவம் அளிக்கப்படும் என்று மேடம் உறுதியளித்துள்ளார். மேலும் எனது கட்சியிலிருந்து காங்கிரஸில் இணைந்த எம்.எல்.ஏக்களுக்கும், பிற தலைவர்களுக்கும் கூட உரிய மரியாதை தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.

திமுக வேட்பாளருக்கு சாதிச் சான்றிதழ் தராதது சரியல்ல மதுரை உயர் நீதிமன்றம்!


சங்கரன்கோவில் நகராட்சி திமுக வேட்பாளர் மாரியப்பனுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்தது முறையன்று என்று மதுரை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சங்கரன்கோவில் நகராட்சி 13வது வார்டில் திமுக சார்பி்ல் நகர திமுக பொருளாளர் மாரியப்பன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் பேச்சியப்பன் என்பவர் போட்டியிட்டார். வேட்புமனு பரீசிலனையின் போது தி்முக வேட்பாளர் மாரியப்பன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர் என்பதால் அவரது மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என தேர்தல் அதிகாரி செந்தில்முருகனிடம் அதிமுக வேட்பாளர் பேச்சியப்பன் வாதிட்டார்.

இதேபோல் தாசில்தாரும் மாரியப்பன் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர் என ஆட்சேபனை தெரிவித்ததால் மாரியப்பனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே வார்டில் மாரியப்பன் தம்பி ஜெகஜீவன்ராம் மாற்று வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு இந்து பறையர் என சான்றிதழ் தர தாசில்தார் மறுத்ததாகக் கூறி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மாரியப்பன் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் கே. என். பாஷா, வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மாரியப்பன் இந்து சமயத்தினை பின்பற்றுவதற்குரிய சான்றுகளை வட்டாட்சியரிடம் சமர்ப்பித்துள்ள போதிலும் வட்டாட்சியர் ஆவணங்களை சரிவர ஆராயாமல் இந்து பறையர் என சான்றழிக்க இயலாது என தெரிவித்து இருப்பது சட்டத்துக்கு முரணான செயலாகும். வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்வதுடன், மாரியப்பனின் சாதிச் சான்றிதழ் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து, அவரது உறவினர்களுக்கு வழங்கப்பட்டது போல் சாதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களுக்காக போராடிய கேரள கன்னியாஸ்திரி வல்சாஜான் படுகொலை!


ஜார்க்கண்டில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி வல்சா ஜான் என்பவர் சுரங்க மாஃபியாவால் படுகொலை செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளியைச் சேர்ந்வர் வல்சா ஜான்(53). கடந்த 1984ம் ஆண்டு கன்னியாஸ்திரி ஆனார். முதலில் கொச்சியில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் பொருளாதார ஆசிரியையாக பணியாற்றினார். அதன் பிறகு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய விரும்பிய அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி வளம் அதிகமுள்ள தும்கா பகுதிக்கு சென்றார். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடி வந்தார். நிலக்கரி மாஃபியா அந்த பழங்குடியின மக்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து விரட்டிவிட்டது. இதை எதிர்த்து போராடி வந்தார் கன்னியாஸ்திரி வல்சா ஜான்.

பழங்குடியின மக்களின் வாயை அடைக்க முடிந்த மாஃபியாவால் வல்சா ஜானை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாகூர் மாவட்டம், பச்வாரா கிராமத்தில் இருந்த கன்னியாஸ்திரியை நேற்று முன்தினம் இரவு சரமாரியாக வெட்டினர். இதில் வல்சா ஜான் பரிதாபமாக உயிர் இழந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய கன்னியாஸ்திரி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவிதுள்ளார். அவரது மரணச் செய்தி கேட்டு கேரளாவில் உள்ள அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து அவரது மூத்த சகோதரர் எம்.ஜே. பேபி கூறியதாவது,

தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று வல்சா தெரிவித்தார். ஆனால் மாஃபியா ஆட்கள் அவரை இப்படி படுகொலை செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. பெரும்பாலும் அவரது இறுதிச் சடங்கு தும்காவில் தான் நடக்கும் என்று நினைக்கிறேன். இரவு 2 மணிக்கு அவரது வீட்டிற்கு வந்த கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியது என்று எங்களுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வல்சா ஜார்க்கண்டில் சட்டப்படிப்பு படித்து வந்தார். தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அவர் அம்மாநில அரசியல் தலைவர்கள் சிபி சோரன், ஸ்டீபன் மாராண்டி ஆகியோரிடம் கூட தெரிவித்துள்ளார். நிலக்கரி மாஃபியா ஆட்கள் வல்சாவுக்கு பணம் தர முன்வந்துள்ளனர். அவர் மறுக்கவே அவரை படுகொலை செய்துள்ளனர் என்றார்.

2ஜி வழக்கு குற்றச்சாட்டுகளைத் திருத்தக் கோரி மனுத்தாக்கல்!

ஜி வழக்கில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் உள்ள "முரண்பாடுகளையும் பிழைகளையும்' திருத்த வேண்டும் என்று கோரி குற்றம் சாட்டப்பட்ட மூவர் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.


தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் தனிச் செயலராக இருந்த ஆர்.கே. சண்டோலியா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் சாஹித் உஸ்மான் பல்வா, குசேகாவ்ன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவன இயக்குநர் ஆசிப் பல்வா ஆகியோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் திருத்தங்களைக் கோரினர். குற்றச்சாட்டுப் பதிவு தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 22-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் முறையைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 213-ன்படி குற்றம் நடந்த முறை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நேர்மையான விசாரணை நடைபெறும் வகையில் குற்றச்சாட்டுப் பதிவில் உள்ள முரண்பாடுகளும் பிழைகளும் களையப்பட வேண்டும். பிழைகளை அனுமதித்தால் ஒட்டுமொத்த விசாரணையே நேர்மையற்றதாகி விடும் என்று நீதிபதி ஓ.பி. சைனி முன்பு மனுதாரர்கள் ஆசிப் பல்வா, சண்டோலியா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய் அகர்வால் வாதிட்டார்.


நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், நேர்மையற்ற முறையில் சொத்துகளை அளிப்பது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தும்போது எவ்வளவு பணம், சொத்து மதிப்பு அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். போலியான ஆவணங்களை உருவாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அப்படி எந்த ஆவணம் போலியாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. போலியாக உருவாக்கப்பட்டாகக் கூறப்படும் ஆவணத்தைக் குறிப்பிடாவிட்டால் எதை எதிர்த்து மனுதாரர்கள் வாதிடுவது என்று அகர்வால் கேட்டார். ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து குற்றம் புரிந்ததாக பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு சாஹித் பல்வா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.என். மித்தல் எதிர்ப்புத் தெரிவித்தார்.


இப்படி இணைத்துக் குற்றம்சாட்டியிருப்பது பொருத்தமற்றது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஆதரவாக யூனிடெக் நிறுவனம் வாதாடும் என்று எதிர்பார்க்க முடியுமா? எனவே, தங்கள் தரப்பு நியாயங்களைத் தெரிவிக்கும் வகையில் இந்த இரு நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தனித்தனியாகப் பிரித்துப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கோரினார். இவர்களின் மனு மீதான விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, "வயதானவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள்', முக்கியச் சாட்சிகள் போன்றோருக்கு முக்கியத்துவம் அளித்து முதலில் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று ராஜீவ் அகர்வால் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

வாஷிங்டன் மாகாண தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக, இந்தியாவைச் சேர்ந்த பரத் ஷ்யாம்!

வாஷிங்டன் மாகாண தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக, இந்தியாவைச் சேர்ந்த பரத் ஷ்யாம் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி ஏற்ற பிறகு, அந்நாட்டின் முக்கிய பொறுப்புகளில், இந்தியர்கள் பலர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகையில், தற்போது வாஷிங்டன் மாகாண தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக, பரத் ஷ்யாம் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை ஐ.ஐ.டி.,யில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர் ஷ்யாம். அதன் பின், அவர் "ஸ்டேன்போர்ட்' பல்கலைக்கழகத்தில், 93ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றார். சாப்ட்வேர் டிசைன் இன்ஜினியராக பணியை துவக்கிய ஷ்யாம், ஸ்மார்ட்போனை வடிவமைத்தார். இன்டெர்நெட் எக்ஸ்புளோரர், வின்டோஸ் 98, 2000, "எக்ஸ்பாக்ஸ் லைவ்' உள்ளிட்ட பல சாப்ட்வேர் வடிவமைப்பில், இவர் முக்கிய பங்காற்றியவர். வின்டோஸ் அஷ்யூர் என்ற நிறுவனத்தின் பொது மேலாளராகப் பணியாற்றி வந்த ஷ்யாம், சாப்ட்வேர் வெளியீடுகளைக் குறைந்த செலவில் வெளிவரச் செய்தார். இவரது செயல்பாடுகளில் கவரப்பட்ட வாஷிங்டன் மாகாண கவர்னர், ஷ்யாமுக்கு தலைமை தகவல் தொடர்பு அதிகாரி பதவியை அளித்துள்ளார்.

புதியமுறையில் கொசு ஒழிப்பு!

ராமநாதபுர நகராட்சி நிர்வாகத்தினர், கச்சா எண்ணெயில், மரத்துகள்கள், பழைய துணிகளை ஒரு நாள் ஊற வைக்கின்றனர். இந்த கலவையுடன், துணியை பந்துபோல் சுருட்டி, பயன்படுத்தாத குட்டைகள், சாக்கடைகள், கழிவு நீர்த் தேக்கங்களில் போடுகின்றனர். இதிலிருக்கும் எண்ணெய், தண்ணீரில் மிதப்பதன் மூலம், கொசுக்களின் ஆரம்ப நிலையான லார்வா, மூச்சுச் திணறி இறந்து விடும். இதன் மூலம், கொசு உற்பத்தியைத் தடுக்க முடிவதால், நகராட்சிகளில் இம்முறையைப் பின்பற்றத் துவங்கி உள்ளனர்.

பதிவிறக்க காப்புரிமை பிரச்னையால் மொபைல் போன் பாடல்களுக்கு சில்லறை வியாபாரிகள் கும்பிடு!


சினிமா பாடல்கள் பதிவு மற்றும் பதிவிறக்கம் செய்யும் மொபைல் போன் சில்லறை வியாபாரிகளின் உரிமத் தொகையை குறைக்க, ஐ.எம்.ஐ., அமைப்பு முன்வரவில்லை. இதனால், இந்த பணியை கைவிடும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர். மொபைல் போன் சில்லறை வியாபாரிகள், உரிய அனுமதியின்றி, சி.டி.,க்களிலும், மொபைல் போன்களிலும், வாடிக்கையாளர்களுக்கு பதிவு மற்றும் பதிவிறக்கம் செய்து தருகின்றனர். இந்திய காப்புரிமை சட்டப்படி தவறான இந்த செயலை தடுக்கும் பணியில், ஐ.எம்.ஐ., களம் இறங்கியது. இதையடுத்து, மொபைல் போன் சில்லறை வியாபாரிகளுக்கு, சென்னையில் 22 ஆயிரம் ரூபாய், மாவட்ட தலைநகரங்களில் 18 ஆயிரம் ரூபாய், சிறு நகரங்களில் 15 ஆயிரம் ரூபாய் என, உரிமக் கட்டணம் நிர்ணயித்தது.

உரிமம் பெறாமல் பாடல்களை பதிவிறக்கம் செய்யும் வியாபாரிகள் மீது, கடந்த மூன்றாண்டுகளில், சென்னையில், 184 வழக்குகளும், மதுரையில், 142 வழக்குகளும் பதியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு தேவை : இதுகுறித்து, சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்த மொபைல் போன் சில்லறை வியாபாரி கோபிநாத் கூறியதாவது: இந்திய காப்புரிமை சட்டம் குறித்து, சமீபத்தில், சென்னையில், காவல்துறையினருக்கு பயிலரங்கம் நடத்தப்பட்டது. அவர்களுக்கே இந்த சட்டம் குறித்து பயிற்சி தேவைப்படும்போது, இதுபற்றி எங்களிடம் எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல், சட்டரீதியான நடவடிக்கை என, பயமுறுத்துவது நியாயமில்லை.

சினிமா பாடல்கள் உரிமை வாங்கும், எப்.எம்., ரேடியோக்கள் மற்றும் "டிவி' சேனல்களுக்கு, விளம்பர வருவாய் கிடைக்கிறது. மொபைல்போன் சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து மாதாந்திர சேவை கட்டணம் பெறுகின்றன. ஆனால், "புளூ டூத்' போன்ற நவீன தொழில்நுட்பத்தால், எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, ஆண்டு உரிமத் தொகையை, 5,000 ரூபாயாக ஐ.எம்.ஐ., நிர்ணயிக்க வேண்டும். இல்லையெனில், இப்பணியை நாங்கள் கைவிட வேண்டியது தான். இவ்வாறு கோபிநாத் கூறினார். குறைக்க முடியாது : ஐ.எம்.ஐ.,யின், தமிழக ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் எஸ்.பி.,யுமான சுப்ரமணியன் (பணி நிறைவு) கூறும்போது: சென்னை, மதுரை மாவட்டங்களை தொடர்ந்து, படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும், மொபைல்போன் சில்லறை வியாபாரிகள் மீதான எங்கள் நடவடிக்கை தொடரும். இந்திய காப்புரிமை சட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆறு மாத ஆய்வுக்கு பின்பே, உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதை குறைக்க முடியாது. கட்டணம் செலுத்த முடியாதோர், பாடல் பதிவிறக்கத்தை தாராளமாக கைவிடலாம். இவ்வாறு சுப்ரமணியன் கூறினார். 

காப்புரிமை கட்டணம் ஏன்? : சோனி மியூசிக், வீனஸ், டிப்ஸ், சரிகம, மானசா உள்ளிட்ட 56, இசைப் பதிவு நிறுவனங்கள், "இந்தியன் மியூசிக் இண்டஸ்ட்ரி' (ஐ.எம்.ஐ.,) அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. சினிமா தயாரிப்பாளரிடமிருந்து பல லட்சம் ரூபாய்க்கு, சினிமா பாடல்களுக்கான உரிமத்தை இந்நிறுவனங்கள் பெறுகின்றன. இந்த பாடல்களை வானொலியிலோ மற்ற வடிவங்களிலோ பயன்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த உரிமையை, இந்திய காப்புரிமை சட்டம் பாதுகாக்கிறது.

சிம்புவின் ஒஸ்தி பாடல் ஒரிஜினல் தபாங்!


பட்டி தொட்டி பட்டய கிளப்பும் தனுஷ் பாடல்! 3


பார்த்ததில் பிடித்தது! கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்!

பேஸ் புக்கில் 
கன்னி வெடியபத்தி ஒரு குறும்படம் எடுக்கும் முயற்சி வாழ்த்துக்கள் .
ஓர் அதிகாலை பொழுதில் மொட்டு ரோஜா மலர்வதை சொல்ல  வார்த்தை இல்லை சூப்பர்.
 ஒரு மெக்கானிக் தன திறமையை! பேய் ஓட்டுவதுபோல்?  சூப்பர்!!
தன் திறமையை...
  பேசன் ஷோவில் நடந்த கமோடி.
நமக்கு உடம்புக்கு முடியலைன்னா ஆம்புலன்ச கூப்பிடலம் அந்த ஆம்புலன்சுக்கே ?  

அக்னி 5 ஏவுகணை பிப்ரவரியில் சோதனை!

அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை பிப்ரவரி மாதம் சோதனை செய்யப்படும் என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சரஸ்வத் கூறியுள்ளார். அக்னி என்ற பெயரில் ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது. அக்னி 1, அக்னி 2 மற்றும் 3 ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. 3,000 கி.மீ. தூரத்தில் உள்ள எதிரியின் இலக்கை குறிதவறாமல் தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்தது.

அந்த அமைப்பின் தலைவர் சரஸ்வத் நேற்று பெங்களூரில் அளித்த பேட்டியில், ‘‘அக்னி 4 ஏவுகணை சோதனையின் வெற்றி நமக்கு மேலும் ஊக்கத்தை அளித்துள்ளது. அக்னி 5 ஏவுகணை தயாரிப்பில் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 5,000 கி.மீ. தூரத்தில் இலக்கை கூட குறிதவறாமல் சென்று தாக்கும். பிப்ரிவரி மாதத்தில் அக்னி 5 ஏவுகணை சோதித்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆவின் பால் இனி லிட்டர் 24 ரூபாய்!


தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6.25 உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுவரை 1 லிட்டர் ரூ.17.75க்கு விற்கப்பட்ட ஆவின் பால் இனி 24 ரூபாய்க்கு விற்கப்படும். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள விலை உயர்வு பட்டியலில்  கூறப்பட்டுள்ளதாவது: பால் உற்பத்தியாளர்களுக்கு பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தவும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தவும் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் ஏற்கெனவே பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதையும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதையும் கருத்தில் கொண்டு, அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 6.25 உயர்த்தப்பட்டுள்ளது.

சச்சினுக்கு பாரத ரத்னா விருது அன்னா ஹசாரே பரிந்துரை!


இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரேவின் சொந்த ஊரான ராலேகான் சித்தியில் அவரது தாயின் நினைவாக நடத்தப்படும் டென்னிஸ் போட்டியை நேற்று அவர் துவங்கி வைத்தார். பின்னர் அவர் பிடிஐயிடம் கூறியதாவது, இளைய சமுதாயத்தினர் போற்றும் நபர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளிலும் சரி, ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் சரி புதிய சாதனைகள் படைத்துள்ளார். இந்த இரண்டு வகையான போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்தவர் மற்றும் அதிக சதம் அடித்தவர் என்ற பெருமை சச்சினுக்கே உரியது. ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் தான். அவர் சர்வதேசப் போட்டிகளில் 99 சதம் அடித்துள்ளார். இன்னும் ஒரேயொரு சதம் அடித்தால் 100 சதம் அடித்து புதிய சாதனை படைத்துவிடுவார். தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடி வருகிறார். இதில் எப்படியும் அவர் சதம் அடித்துவிடுவார் என்று அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் முதல் பல பெரும்புள்ளிகள் வரை பரிந்துரைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மத்தியஅரசு நிதி கொடுக்காதாதால் விலை உயர்த்த வேண்டியதாயிற்று முதல்வர் ஜெயலலிதா!


மத்திய அரசிடமிருந்து போதிய நிதி உதவி கிடைக்காததால் பஸ், பால், மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஆற்றிய உரை:
பொதுமக்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் இன்றியமையா சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இந்த உயரிய நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையில், அதன் செயல்பாடுகள் முடங்கிப் போகும் அளவுக்கு, முந்தைய தி.மு.க. அரசு, பொதுத் துறை நிறுவனங்களை சீரழித்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட எனது தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றிக் கொண்டு வந்த அதே சமயத்தில், துறை வாரியான ஆய்வுகளையும் மேற்கொண்டேன். இந்த ஆய்வுகளின் போது, தமிழக அரசு மட்டுமல்லாமல் தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் உட்பட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் கடும் கடன் சுமை காரணமாகவும், நிதி நெருக்கடி காரணமாகவும் முடங்கும் அபாயத்திற்கு வந்துள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து, தமிழ்நாட்டின் நிதி நிலைமையை சீர் செய்து மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களையும், சமூக நலப் பணிகளையும் முடுக்கிவிட முடிவு செய்து, மின் வாரியத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தும் வகையில் சிறப்பு உதவிகள் வழங்கப்பட வேண்டும்; அதிக அளவில், கூடுதல் விலை கொடுத்து, வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசின் மின் தொகுப்பிலிருந்து கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்; மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க, தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும்; மடிக் கணினி வழங்கும் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும்; கடலோரப் பகுதி மீனவர் மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 14 ஜூன், 2011 அன்று புது டெல்லி சென்று பாரதப் பிரதமர் அவர்களிடத்தில் ஒரு கோரிக்கை மனுவினை அளித்தேன். இது குறித்து நீண்ட நேரம் என்னுடன் உரையாடிய பாரதப் பிரதமர், ஆவன செய்வதாக உறுதி அளித்தார். பின்னர், இந்த கோரிக்கை மனு மத்திய திட்டக் குழுவிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், திட்டக் குழு இது குறித்து உரிய முடிவு எடுக்கும் என்றும் பாரதப் பிரதமர் தெரிவித்தார்.

6 ஜூலை, 2011 அன்று மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் திரு. மான்டெக் சிங் அலுவாலியா அவர்களை நான் சந்தித்த போது, இந்தச் சிறப்பு நிதியுதவி குறித்து அவருக்கு நினைவூட்டினேன். இருப்பினும், திட்டக் குழுவிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ எவ்வித நிதி உதவியும் கிடைக்கவில்லை. அதே சமயத்தில், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க அரசுக்கு மட்டும் 21,614 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு நிதி தொகுப்பு உதவி வழங்கியுள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் அல்லாத கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய அரசு புறக்கணித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. மத்திய அரசு எந்த உதவியையும் தமிழகத்திற்கு செய்ய முன் வராத நிலையில்; தமிழகத்தின் நிதி நிலைமையும் அதலபாதாளத்தில் இருக்கின்ற சூழ்நிலையில்; முடங்கும் நிலையில் இருக்கின்ற பொதுத் துறை நிறுவனங்களை, குறிப்பாக மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் நிலையில் இருக்கின்ற பொதுத் துறை நிறுவனங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிவோம். மரணப் படுக்கையில் உள்ள இந்த பொதுத் துறை நிறுவனங்களுக்கு தற்போது ஆக்சிஜன் வழங்கப்படவில்லை என்றால், அவை முற்றிலும் செயலற்று போய்விடும். அதனால் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, அத்தகைய ஒரு நிலையை தடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இந்த அரசு உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை எடுத்துக் கொண்டால், 31 மார்ச், 2011 அன்றைய நிலவரப்படி 40,659 கோடி ரூபாய் நஷ்டத்தில் அது இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தேவைக்கேற்ப மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காமல், மின் தேவையை சமாளிக்க மின்சாரத்தை வெளிச் சந்தையிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியது தான். 2010-2011 ஆம் ஆண்டில் மட்டும் 19,302 கோடி ரூபாய் அளவுக்கு வெளிச் சந்தையிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு இருக்கிறது.

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2005-2006 ஆம் ஆண்டில், 4,911 கோடி ரூபாய் என்று இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த நஷ்டத்தை 40,659 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின் குறை மாநிலமாக மாற்றிய பெருமை முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியையே சாரும். இது மட்டுமல்ல. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமை 42,175 கோடி ரூபாய் ஆகும். இதே நிலைமை நீடித்தால், இந்த நிதி ஆண்டின் இறுதியில் இந்தக் கடன் அளவு 53,000 கோடி ரூபாயை தாண்டிவிடும். மேலும், மின்சாரம் விற்பனை செய்தவர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய தொகை 10,000 கோடி ரூபாய் ஆகும். தமிழக அரசின் மொத்த கடன் அளவான 1 லட்சத்து 1 ஆயிரத்து 349 கோடி ரூபாயுடன், மின்சார வாரியத்தின் கடன் அளவான சுமார் 53,000 கோடி ரூபாயை ஒப்பிட்டுப் பார்த்தால், மின் வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெளிவாகும். கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாரியம் புதியதாக கடன் வாங்கி, பழைய கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும் செலுத்தி வருகிறது. 

2010-2011 ஆம் ஆண்டில், 21,385 கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் பெற்று, 15,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும் செலுத்தியுள்ளது. இவ்வாறு கடனில் மூழ்கி திவாலாகும் நிலையை மின்சார வாரியம் எட்டிவிட்டது. இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில், மின்சார வாரியம் மேலும் கடன் பெறவேண்டும். ஆனால், மதிப்பீட்டு நிறுவனங்கள் மின்சார வாரியத்தின் மதிப்பை குறைத்துவிட்டதால், வெளிச்சந்தையில் இருந்து கடன் பெற வழியில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்க கூடாது என பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு முழுமைக்கும் வழங்கப்பட வேண்டிய மானியத் தொகையான 2,016 கோடி ரூபாயை முன்னதாகவே அரசு வழங்கியுள்ளது. மேலும், பங்கு மூலதனம் மற்றும் றயலள யனே அநயளே யனஎயnஉந ஆக 1,055 கோடி ரூபாயை அரசு அளித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதற்காக 500 கோடி ரூபாயை அரசு வழங்கி உள்ளது. இதற்கு மேலும் மின்சார வாரியத்திற்கு பணம் அளிக்க மாநில அரசிடம் பணம் இல்லை. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பும், மின்சார உற்பத்தியை பெருக்க வேண்டிய கடமையும் எனது தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதே போன்று தான் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் உள்ளன. எரிபொருள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், சாலை விபத்துகளில் நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்களில் பிணையாக வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதரப் பலன்களை அளிக்கவும் இயலாத சூழ்நிலையை முந்தைய தி.மு.க. அரசு ஏற்படுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. 

போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களின் சிரமத்தை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காமல், டீசலின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. 2001 ஆம் ஆண்டு லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டுவிட்டது. இது தவிர, டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன. இதன் காரணமாக, 31 மார்ச், 2011 நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஊதியத்திற்காக எனது தலைமையிலான தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்காமல் விட்டுவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதே போன்று ஆவின் நிறுவனத்தின் நிலைமையும் முந்தைய தி.மு.க. அரசின் தவறான நடவடிக்கைகளால், மோசமடைந்துவிட்டது. எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், 2006-ஆம் ஆண்டு வரை, லாபம் ஈட்டி வந்த பால் கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் ஆவின் நிறுவனம் உள்ளது. கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் சுமார் நான்கு ரூபாய் அளவுக்கு ஆவின் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. 

 இதன் காரணமாக, 22 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து வந்த ஆவின் நிறுவனம், தனது கொள்முதலை குறைத்துக் கொள்ள வேண்டிய மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு பணம் கொடுப்பதற்காக எனது தலைமையிலான அரசு மாதா மாதம் 17 கோடி ரூபாய் அளவுக்கு ஆவின் நிறுவனத்திற்கு நிதி உதவி அளித்து வருகிறது. தனியார் நிறுவனங்களை விட, ஆவின் பால் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுவதன் காரணமாக, பொதுமக்கள் அடையும் பயனை விட இடைத் தரகர்கள் அதிக அளவில் பயன் பெறும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்தத் தருணத்தில், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பால் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை மீட்டெடுப்பது குறித்தும், அந்த நிறுவனங்கள் தங்களது இன்றியமையாப் பணியை மக்களுக்கு தொடர்ந்து செவ்வனே ஆற்றுவதற்கான வழிவகைகள் குறித்தும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, “வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும்” என்ற பழமொழிக்கேற்ப சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு எனது தலைமையிலான அரசு தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரையில், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியமே மின்சார உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை மாற்றியமைப்பது பற்றி ஆய்வு செய்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை வைத்து, 

அந்த ஆணையம் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து முடிவுகளை அறிவிக்கும். அதே சமயத்தில், விவசாயிகள், நெசவாளர்கள், ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் வருபவர்கள், ஆகியோருக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வழி வகை செய்யும் வகையில் அதற்கான மானியத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்த அரசு தொடர்ந்து வழங்கும்.

இது மட்டுமல்லாமல், அதிக அளவு மின்சாரம் உபயோகிப்பவர்களைத் தவிர, ஏனைய வீட்டு மின்சார பயனீட்டாளர்களுக்கும் அரசு மானியம் வழங்கும். மின் அமைப்புகளின் நிதிநிலையை சீர்படுத்தவும்; புதிய உற்பத்தித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்கவும்; நிதி உதவி தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, 2,000 கோடி ரூபாய் கூடுதல் பங்கு மூலதனமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு எனது தலைமையிலான அரசு வழங்கும். மேலும், மின்சார திருட்டை ஒழிப்பது; மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்பது; மின்சார பகிர்மான கட்டமைப்புகளை மேம்படுத்துவது; மின் இழப்பை குறைப்பது; நிர்வாக செலவுகளை நெறிமுறைப்படுத்தி கட்டுப்படுத்துவது; செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களை துரிதப்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும். போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரையில், டீசல், உதிரி பாகங்கள் மற்றும் நிர்வாக செலவுகள் பன்மடங்கு உயர்ந்து, போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும், அரசு போக்குவரத்துக் கழகங்களை செயல்பட வைக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் கருத்தில் கொண்டு; சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 42 பைசா என்றும்; விரைவு, மற்றும் Semi deluxe புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 32 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 56 பைசா என்றும்; Super Deluxe மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 38 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 60 பைசா என்றும்; Ultra Deluxe புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 52 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 70 பைசா என்றும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று, நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக, இதர பகுதிகளில் தற்போதுள்ள குறைந்த பட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும்; சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும், இவ்வாறு உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணம் கூட தென் மாநிலங்களில் உள்ள பேருந்துக் கட்டணங்களை விட குறைவானதே ஆகும். பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கொடுத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகும். தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் வழங்கும் பால் கொள்முதல் விலையை விட அதிக விலையினை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 150 லட்சம் லிட்டர் பாலில், 22 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே தற்போது ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும் போது, ஆவின் நிறுவனம் குறைவாக கொடுப்பது நியாயமானதல்ல. எனவே, பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தவும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவின் ஏற்கெனவே பெருத்த நட்டத்தை எதிர்கொண்டு வருவதையும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதையும் கருத்தில் கொண்டு; அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட பின்பும் வெளிச் சந்தையில் விற்கப்படும் பாலின் விலையை விட ஆவின் பால் விலை குறைவாகவே இருக்கும். மேலும், தென்னிந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள விலையை விடவும் குறைவாகவே இருக்கும்.இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேலோட்டமாக பார்க்கும் போது, அவை பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தாலும்; இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதற்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்தால், அது அவ்வாறு அல்ல என்பது விளங்கும். முற்றிலுமாக முடங்கிப் போயுள்ள நிறுவனங்களை கைதூக்கி விடவில்லை என்றால், இந்த நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு கிடைக்காமலே போய்விடும்.

டீசல் போன்ற பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே செல்கின்ற நிலையில், சிறப்புக் கடன் உதவி என்ற வகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாயைக் கூட அளிக்காத நிலையில், மத்திய தொகுப்பிலிருந்து மாநில அரசு கோரிய 1000 மெகாவாட் மின்சாரத்தை கூட வழங்காத நிலையில், தமிழக அரசே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பொதுத் துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட வைக்க தமிழக மக்களாகிய உங்களிடம் அல்லாமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்? எத்தனை முறை கேட்டாலும், தமிழ்நாட்டிற்கு உதவி செய்ய மத்திய அரசு மறுக்கும்போது, தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு யாரிடம் சென்று உதவி கேட்க முடியும்? முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, தமிழ்நாட்டை முற்றிலுமாக சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு, திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்ட சூழ்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, தமிழக மக்களாகிய நீங்கள், ஆட்சிப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள். கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், தமிழ்நாட்டை சீரமைக்க, மத்திய அரசு ஓரளவிற்காவது உதவி செய்யும் என்று எதிர்பார்த்து கடந்த 6 மாத காலமாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தமிழ்நாட்டை அடியோடு புறக்கணித்து, கைவிட்டுவிட்ட நிலையில், எனதருமை தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்? எனவே, தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டு உங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா உரை நிகழ்த்தினார்.

70க்கும் மேற்பட்ட சாதிகளை ஒ.பி.சி பட்டியலில் இணைத்து மத்திய அரசு!


20 மாநிலங்களில் உள்ள 70க்கும் மேற்பட்ட சாதிகளை ஒ.பி.சி.,பட்டியலில் இணைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேசிய கமிஷனின் பிற்படுத்தப்பட்ட பிரிவு தெரிவித்திருப்பதாவது: ஆந்திரா, அசாம் , பீகார், சட்டீஸ்கர், கோவா, இமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, சி்க்கிம், தமிழ்நாடு, உத்தரகண்ட், மேற்குவங்காளம், மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான்நிக்கேபார் தீவுகள், சண்டிகர்,புதுடில்லி, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளை ‌சேர்ந்த 70க்கும் மேற்பட்ட சாதிகளை ஒ.பி.சி.பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறி்ப்பில் தெரிவித்துள்ளது. இதில் ‌கோவா, உத்தரகண்ட், ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபைகளுக்‌கான தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாமுக்கு மக்கள் தொண்டனின் திறந்த மடல்!- பழ. நெடுமாறன்!


அறிவியல் மாமேதையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களே,பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெடிப்பு நடத்தப்படுவதற்கு முன்நின்றவர் நீங்கள். அதன் மூலம் அணுயுகத்தில் இந்தியா அடியெடுத்து வைப்பதற்குக் காரணமாக இருந்தீர்கள். உலகின் அணுவிஞ்ஞானிகளில் தலைசிறந்தவராகவும் நீங்கள் திகழ்கிறீர்கள்.அணுவிஞ்ஞானியான நீங்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றபோது பெருமிதம்கொண்ட தமிழர்களில் நானும் ஒருவன்.கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நீங்கள் தலையிட முடிவு செய்தபோது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு நல்லதொரு முடிவுக்கு வருவீர்கள் என நம்பினோம்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சென்று பார்வையிட்டு, அதன் பிறகு அதனருகிலேயே போராடிக்கொண்டிருக்கும் மக்களைச் சந்திக்காமல் நாளிதழில் நான்கு பக்கம் வரும் அளவுக்கு நீண்டதொரு அறிக்கையைக் கொடுத்துள்ளீர்கள்.கூடங்குளத்தைப் பார்வையிட்ட அன்று இரவோடு இரவாக இந்த அறிக்கையை எழுதி மறுநாள் வெளியிட்டிருக்க முடியாது. நீங்கள் கூடங்குளம் வருவதற்கு முன்னாலே அறிக்கையை எழுதிவிட்டு அதற்குப் பின்னால் கூடங்குளம் அணு உலையைச் சோதனை செய்ததில் ஏதாவது அர்த்தம் உண்டா?அந்த அறிக்கையில் முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் குறிப்பிட்டபடி செய்தீர்களா? கூடங்குளத்திலும் சுற்றிலும் வசிக்கும் மக்களைச் சந்திக்காமல், அவர்களின் உணர்வுகளையும் சந்தேகங்களையும் எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?

சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை விபத்துகளால் ஒரு சிறிதும் பாதிக்கப்படாத அளவுக்கு கூடங்குளம் அணு உலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பெருமையுடன் உறுதி தந்திருக்கிறீர்கள். அவ்வாறு சொல்லும்போதுகூட கூடங்குளத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று கூறியிருக்கிறீர்களே தவிர, பூகம்பம் வரவே வராது என அறுதியிட்டு உறுதிதர உங்களால் இயலவில்லையே ஏன்?இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி அணு உலை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் 30 கி.மீ. சுற்றளவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடாது. அப்படி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் அணு உலையை அமைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதி உங்களுக்குத் தெரியாமல் வகுக்கப்பட்டிருக்க முடியாது.கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசின் ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு எதிராகக் கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த விதிமுறையை ஆணையம் வகுத்ததற்கே காரணம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மக்கள் 30 கி.மீ. அப்பால் தப்பிச் செல்வதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான். அணு உலையில் விபத்தே ஏற்படாது என்பது உண்மையானால் இந்த விதியை வகுக்க வேண்டிய அவசியம் என்ன?

அணு உலையில் உபயோகப்படுத்தப்பட்ட திடக்கழிவுகளைப் பாதுகாப்பது குறித்து விரிவாகக் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறாமல்விட்ட ஓர் உண்மை என்னவென்றால் கூடங்குளம் அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதை அணு உலையை நிறுவுவதற்கு 17 ஆயிரம் கோடிதான் முதலீடு, ஆனால், அதன் ஆயுள்காலம் முடிந்தபிறகு புதைப்பதற்கு 20 ஆயிரம் கோடி செலவாகும். இந்தச் செலவுகளையெல்லாம் மொத்தமாகக் கூட்டினால் மின்சார உற்பத்திச் செலவு அணு உலையில் மிகமிக அதிகம். அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கிறது என்கிற தங்கள் கூற்று அடிபட்டுப் போகிறது.

இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரம் பெற வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சியை நாம் எட்டினால்கூட 2030-ம் ஆண்டுக்குள் 4 லட்சம் மெகாவாட்தான் உற்பத்திசெய்ய இயலும். ஆனாலும் இந்த 4 லட்சம் மெகாவாட்டில் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அணுமின் உலைகள் மூலம் மட்டுமே பெற முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் இன்றைக்கு நம் நாட்டில் அணுசக்தியின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. எனவே, மீதமுள்ள 45 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு அணுசக்தியைத் தவிர, வேறு வழியில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்.இந்தியாவில் அணு ஆற்றல் துறையின்கீழ் வரும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுக்கான அமைப்பு, நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 23 விழுக்காடு சேமிக்க முடியும் எனக் கூறியுள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?

திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட பல பெரிய தொழில் நிறுவனங்கள், அதன் மூலம் பெருமளவு மின்சேமிப்பைச் செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் 2,194 மெகாவாட் அளவு மின்சாரத்தைச் சேமித்திருக்கின்றன என்ற உண்மையைக் கூறுவதும் இந்திய அரசின் ஆற்றல் துறைதான்.கூடங்குளம் அணுமின் நிலைய மின்சக்தித் திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித் திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர் என மின்னணுவியல் துறை பேராசிரியர் முனைவர் வே. பிரகாஷ் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 2011 முதல் 2015-க்குள் 19 ஆயிரம் மெகாவாட் மின்சேமிப்பு செய்வோம் என்கிறது மத்திய அரசின் ஆற்றல் துறை.இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி இந்திய அணுசக்தித் துறையில் மின் உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியும் என்று கூறிவிட்டு அதற்கேற்ற தொழில் நுட்பம் உலகில் எங்கும் இல்லை. அப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இதை நாம் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.யுரேனியத்தைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகமாக வெப்பம் கடத்தும் ஆற்றல் கொண்டது தோரியம் என்றும் குறைந்த கதிரியக்கக் கழிவைக் கொடுக்கக்கூடியது தோரியம் என்றும் அணு ஆயுதம் செய்ய இயலாத தோரியம் என்றும் நீங்களே உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.அப்படியானால் யுரேனியத்தின் கதிரியக்கம் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவேதான் தோரியத்தைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வது பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை, வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது எனக் கூறும் நீங்கள் அந்த ஆராய்ச்சி முற்றுப் பெறும்வரை பொறுத்திருக்கக்கூடாதா? அதற்குள் அவசரப்பட்டு ஆபத்தான கதிரியக்கத்தைப் பரப்பும் யுரேனியத்தைப் பயன்படுத்தி கூடங்குளம் அணு உலையைச் செயல்பட வைப்பதற்கு அவசரப்படுவது ஏன்?

கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு ரூ. 200 கோடி செலவில் "புரா' திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதாவது நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டமாகும்.1988-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் உலை குறித்து இந்தியாவுக்கும் சோவியத் நாட்டுக்குமிடையே உடன்பாடு கையெழுத்தாயிற்று. 22 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கூடங்குளம் பகுதி மக்கள் மீது 22 ஆண்டுகாலமாக ஏற்படாத கரிசனம் மத்திய அரசுக்கு இப்போது திடீரென ஏற்படுவானேன்?22 ஆண்டுகாலத்துக்கு மேலாக வறட்சியான அந்தப் பகுதியின் வளர்ச்சியிலோ, ஏழ்மை நிறைந்த அந்த மக்களின் முன்னேற்றத்திலோ, இந்திய அரசுக்குக் கொஞ்சமும் கவலை ஏற்படவில்லை. அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் மக்களைச் சரிக்கட்டத்தானே இந்தப் "புரா' திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது?

அணு சக்தி என்பது இறைவன் மனித குலத்துக்குக் கொடுத்தது. அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் மனித குலத்தின் கையில்தான் உள்ளது. எனவே, கூடங்குளத்தின் மூலமும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்களின் மூலமும் உற்பத்தியாகும் அணு மின்சாரம் கண்டிப்பாக நமக்குத் தேவை என உங்கள் அறிக்கையில் அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தி இருக்கிறீர்கள்.ஆனால், இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் கைக்கா, நரோரா, தாராபூர், கல்பாக்கம் மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள அணு உலைகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக்குறைவினாலேயோ அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டு உள்ளது என்றும், கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச்சூழலில் கலந்துள்ளது என்றும் பகிரங்கமாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்திய அரசிடமிருந்தோ அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ உங்களிடமிருந்தோ அவருக்கு இதுவரை எத்தகைய பதிலும் கூறப்படவில்லையே அது ஏன்?

இனி தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறைப் பிரச்னைக்கு வருவோம். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டுமானால் அதற்கு அவசியமான கட்டமைப்பு மின்சாரம் ஆகும். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி அணு மின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய செய்தியாகும். கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்க இருக்கிறது எனவும் தமிழக மக்கள் நாவில் தேனைத் தடவ முயற்சி செய்திருக்கிறீர்கள்.

உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளுக்குப் பின்னாலும் காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடகத்துக்கும், முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கும், பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திரத்துக்கும் கூடங்குளம் மின்சாரத்தில் பாதி அளிக்கப்பட இருக்கிறது.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகப் போகும் மின்சாரத்தில்50 % மட்டுமே தமிழகத்துக்கு அளிக்கப்படும் என்பதை பெரிய வாய்ப்புப்போல கூறியிருக்கிறீர்கள். மீதமுள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஆனால், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக உருவாகும் அபாயம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே. இது என்ன நியாயம்?

ஏற்கெனவே நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்த மூன்று அண்டை மாநிலங்களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 26 கோடி யூனிட் மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 22 கோடி யூனிட்தான் ஆகும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையும் தமிழகத்துக்குக் கொடுத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அவசியம் இருக்காதே.தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தாங்களே மின்நிலையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி 3,000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 5 அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு இலவசமாகவும் பிறகு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்கப்படுவதும்தான் காரணமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தமாகவே அனல் மற்றும் காற்று மின்உற்பத்தியைச் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட வேண்டும். அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கும் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.காவிரியில் பெருகிவரும் வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அழிவைத் தடுக்கவும், வளம் பெருக்கவும் கரிகாலன் கல்லணையைக் கட்டினான். ஆனால், மக்களுக்கு அபாயத்தை அளிக்கும் கூடங்குளம் அணு உலைக்காக வாதாடும் நீங்கள் கரிகாலனையும் கல்லணையையும் எடுத்துக்காட்டாகக் காட்டுவது சற்றும் பொருத்தமற்றதாகும். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக உங்களைப் பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். அதை நீங்கள் ஏன் உணரவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

ஈரான் நாட்டு பல்லவர்கள் தமிழரான வரலாறு படித்ததில் பாதித்தது!



ஐரோப்பியர்கள் அறிமுகப் படுத்திய இனத் தேசியவாதம் என்ற கற்பிதம் செயற்கையானது. இது பல தடவை நிரூபிக்கப் பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு இனமும் பழம் பெருமை பேசத் தெரிவு செய்யும் சரித்திர நாயகர்கள், அந்தப் பெருமைக்கு தகுதியுடையவர் தானா, என்பது சந்தேகமே. இன்றைக்கு இருக்கும் மொழி சார்ந்த இனவுணர்வு, நூறாண்டுகளுக்கு முன்னர் காணப்படவில்லை. மதத்தை மாற்றுவது போல, மொழியை மாற்றிக் கொள்வதும் காலங்காலமாக நடைபெற்று வரும் மாற்றங்கள். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, ஆட்சியாளர்கள் கூட அவ்வாறு தான் வாழ்ந்துள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம், இன்று "தமிழர்கள்" என அறியப்படும் பல்லவர்கள். சேர, சோழ, பாண்டியர்கள் என்ற மூவேந்தர்களுடன் பல்லவர்களையும் பண்டைய தமிழ் மன்னர்களாக உருவகித்துக் காட்டும் போக்கு, இனப்பெருமை பேசுவோரால் முன்னெடுக்கப் படுகின்றது. "தமிழ் மன்னர்கள்" எல்லாம், உண்மையிலேயே தமிழர்களா, அல்லது தமிழ் உணர்வுடன் ஆட்சி செய்தனரா, என்பது குறித்தெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை.

பல்லவர்கள் என்றவுடன், சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரம் சிற்பங்கள் நினைவுக்கு வரும். பல்லவர் காலத்து கோயில்களும், சிற்பங்களும் இன்றைக்கும் அழியாமல் உள்ளன. கருங்கல்லில் வடிக்கப் பட்ட சிற்பங்கள், இந்து புராணக் கதைகளை நினைவூட்டுகின்றன. இவற்றை வைத்து பல்லவர்கள் நம்மவர்கள் என்று கருதிக் கொள்கிறோம். மாமல்லபுரம் கோயில்களை குடைந்தவர்களும், சிற்பங்களை செதுக்கிய சிற்பிகளும் தமிழ் பாட்டாளி மக்கள் தான். அதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஆனால், அவற்றை செதுக்குவதற்கு உத்தரவிட்ட மன்னர்கள் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சோழர் காலத்து கல்வெட்டுகள் தமிழில் இருக்கையில், பல்லவர் காலத்து கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் காணப் படுகின்றன. இந்தியாவின் கிழக்குப் பகுதியில், சமஸ்கிருதத்திற்கு முன்னர் பேசப்பட்ட பிராமி மொழி, அந்தக் காலத்தில் நாகரீகமடைந்த மொழியாக இருந்துள்ளது. அதுவே பல்லவர்களின் ஆட்சி மொழியாக இருந்திருக்கலாம். பல்லவர்களின் சிற்பங்கள் செதுக்கும் வழக்கம், மாமல்லபுரத்திற்கு மட்டுமே சிறப்பான ஒன்றல்ல.

முதலில் பல்லவரின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் எதுவெனப் பார்ப்போம். இன்றைய ஆந்திரா மாநிலத்தின் தென் பகுதியும், தமிழ் நாடு மாநிலத்தின் வட பகுதியும் பல்லவர்களின் நாடாக இருந்துள்ளது. தென் ஆந்திராவில் உள்ள குண்டூர், வட தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் என்பன பல்லவர் காலத்தில் குறிப்பிடத் தக்க நகரங்களாக இருந்துள்ளன. ஒரு காலத்தில், மகாராஷ்டிரத்தில் இருந்து தெற்கு நோக்கி விரிந்திருந்த சாதுவாகனரின் சாம்ராஜ்யத்தின் மறைவில் தான் பல்லவர்கள் தலையெடுக்கத் தொடங்கினார்கள். பண்டைய இந்தியாவில், சாதுவாகனரின் சாம்ராஜ்யத்திற்குள், இன்றைய இந்திய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றின் பகுதிகள் அடங்கியிருந்தன, சாதுவாகனரின் ஆட்சியில் பௌத்த மதம் அரச அந்தஸ்துப் பெற்றிருந்தது. இன்றைக்கும் ஆந்திராவில், குன்டூருக்கு அருகில் புத்தர் சிலைகளும், வேறு சில பௌத்த மத சின்னங்களும் கண்டெடுக்கப் படுகின்றன. மகாராஷ்டிராவில் தான் அஜந்தா குகை ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும் காணப் படுகின்றன. இவை யாவும் பௌத்த மத துறவிகளால் செதுக்கப் பட்டவை. இதற்கெல்லாம் நீங்கள் சரித்திரப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. சாதாரணமாக, அந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணியாக செல்லும் ஒருவர், அறிந்து வைத்திருக்க கூடிய தகவல்கள் இவை.

இன்றைக்கும் புத்தகக் கடைகளில் சூடாக விற்பனையாகும், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற "சரித்திர நாவல்கள்", வரலாற்றை திரித்து எழுதப் பட்டுள்ளன. கல்கியின் நாவல்களில் வரும் புலிகேசி என்ற "வில்லன்", உண்மையில் இந்தியர்கள் பெருமைப் படக் கூடிய சக்கரவர்த்தி ஆவார். ஆனால், அவர் காலத்தில் பௌத்த, சமண மதங்களுக்கு அரச அங்கீகாரம் கொடுக்கப் பட்டமை, அவரை வில்லனாக காட்டுவதற்கு காரணமாக இருக்கலாம். புலிகேசியின் சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் தான், "இந்து மதம்" (இந்து என்ற சொல் சர்ச்சைக்குரியது. பொதுவான அர்த்தத்தில் கூறப் படுகின்றது.) தலையெடுத்தது. 

பண்டைய காலங்களில், இந்து மதம் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய ஆதிக்க மதமாக இருந்தது. யாகம் வளர்த்து மிருகங்களை பலி கொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை, வழிபாடாகக் கொண்டிருந்தது. சாதுவாகனரின் ஆட்சிக் காலத்தில், அந்த வழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. புலிகேசி காலத்தில் அடங்கியிருந்த பிராமணர்கள், பல்லவர்கள் காலத்தில் தான் மறுபடியும் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. பல்லவர்களும் பிராமணர்கள் என்றொரு சரித்திரக் குறிப்பு தெரிவிக்கின்றது. இந்திய சாதி அமைப்பின் பிரகாரம், அரச பரம்பரையினர் சத்திரியர்களாக கருதப் பட வேண்டும். இருப்பினும், பிராமணர்களும், சத்திரியர்களும் ஆரிய வம்சாவழியை பூர்வீகமாக கொண்டுள்ளனர்.

வரலாற்றில் திராவிடர் என்றொரு இனம் இருந்ததில்லை. அது, ஐரோப்பிய சமூக-விஞ்ஞானிகள் தென்னிந்தியர்களுக்கு சூட்டிய பொதுப் பெயர். ஆனால், ஆரியர், அல்லது அவ்வாறு தம்மை அழைத்துக் கொள்ளும் இனம், இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கி.பி. 200 க்குப் பின்னர், ஈரானிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சசானியர்கள் தம்மை ஆரிய இனத்தவர்கள் என அழைத்துக் கொண்டனர். அவர்கள் காலத்தில் தான் ஈரான் என்ற பெயர்ச் சொல்லும் பாவனைக்கு வந்தது. அதாவது, ஈரான் என்றால் "ஆரியர்களின் நாடு" என்று அர்த்தம்!

சசானியர்களுக்கு முன்னர், ஈரானை பார்த்தியர்கள் ஆண்டார்கள். சசானியர்களினதும், பார்த்தியர்களினதும் ஆட்சிப் பரப்பு, இன்றைய பாகிஸ்தான் வரையில் விரிந்திருந்தன. அதற்குமப்பால், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் அவர்கள் படையெடுத்து சென்றுள்ளனர். இரண்டு அரச பரம்பரையினர் காலத்திலும், மாமல்லபுரத்தில் உள்ளது போன்று சிற்பங்கள் போன்று செதுக்கும் கலை வளர்ந்திருந்தது. மேலும் ஒரு தகவல், உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சசானியர்களினதும், பார்த்தியர்களினதும் ஆட்சிக் காலத்தில், பெரும்பான்மை ஈரானிய குடிமக்கள் பேசிய மொழியின் பெயர், "பல்லவ மொழி"! அரேபியரின் இஸ்லாமியப் படையெடுப்பின் பின்னர், பல்லவ மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய ஈரானியர்கள் பேசும் பார்சி மொழியில், நிறைய அரபுச் சொற்கள் கலந்துள்ளதால், புதிய மொழி போன்று தோற்றமளிக்கின்றது.

ஈரானியர்களுக்கும், வட-இந்தியர்களுக்கும் இடையில் மிக அதிகமான கலாச்சார ஒற்றுமைகள் காணப்படுகின்றன. பார்சி, சமஸ்கிருதம், உருது, ஹிந்தி எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள மொழிகள். இவற்றில் ஒரு மொழி தெரிந்தவர், இன்னொன்றை பயில்வது இலகு. மார்ச் 21 , அல்லது அதற்கு பிந்திய நாள், ஈரானில் புது வருடமாகவும், வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகவும் கொண்டாடப் படுகின்றது. இஸ்லாத்தின் வருகைக்கு முந்திய ஈரானிய மதக் கதைகள், இந்து மதக் கதைகளை ஒத்துள்ளன. மித்ரா, வருணா, போன்ற கடவுளர்கள் ஒரே பெயரில் வந்தாலும், அவர்களைப் பற்றிய கதைகள் சிறிது மாறு படுகின்றன. இந்துக்களின் "ரிக் வேதம்", ஈரானியர்களின் "அவெஸ்தா கதா" இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும். சுருக்கமாக, இந்து மதமும், ஈரானிய மதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இந்துக்களான பல்லவர்கள், ஈரானியர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதை நிறுவுவதற்கு இது போதும்.

பண்டைய ஈரானிய மன்னர்கள் போரில் கைப்பற்றும் நாடுகளில், தமது மதத்தையோ, அல்லது மொழியையோ திணிக்கவில்லை. உள்நாட்டு மக்களின் மொழியை, மதத்தை அங்கீகரிப்பதன் மூலம், சிறந்த முறையில் அவர்களை ஆள முடியும் என்று நம்பினார்கள். இல்லாவிட்டால், கிரேக்கம் முதல் இந்தியா வரையிலான, ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அவ்வளவு சுலபமாக நிர்வகித்திருக்க முடியாது. ஈரானிய ஆட்சியாளர்கள், "நெருப்பை வணங்கும், சரதூசரின் தத்துவங்களை பின்பற்றும்" மத நம்பிக்கையாளர்கள். ஆனால், அவர்கள் ஆக்கிரமித்த நாடுகளில், தமது மதத்தை தமக்குள்ளே மட்டும் வைத்துக் கொண்டார்கள். ஈரானிய மன்னர்கள் வெளியிட்ட இலச்சினைகளில் எப்படியும் நெருப்பின் படம் பொறிக்கப் பட்டிருக்கும். தென்னிந்தியாவில் பல்லவர்கள் ஆண்ட இடங்களிலும், அது போன்ற இலச்சினைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ஆந்திராவில், குண்டூர் மாவட்டத்தில் பல்லவர்கள் ஆண்ட பகுதி "பல் நாடு" என்று அழைக்கப் படுகின்றது. பல் நாடு பற்றிய செவி வழிக் கதைகள், "பல் நாட்டி வீருள்ள கதா" என்ற நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. தெலுங்கு மொழியில் உள்ள, பண்டைய இலக்கியங்களில் அது முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள், தமிழ் பேசும் மக்களைக் கவர்வதற்காக தமது பெயர்களையும் தமிழ்ப் படுத்திக் கொண்டார்கள். "மாமல்லன்" என்பது, தமிழாக்கப் பட்ட ஈரானியப் பெயராக இருக்க வாய்ப்புண்டு. தமிழில் மல்யுத்தம் செய்யும் வீரர்களை மல்லர்கள் என்று அழைப்பார்கள். மல்யுத்தம் என்ற வீர விளையாட்டு, பல்லவர்களின் தாயகமான ஈரானில் இருந்து வந்திருக்க வேண்டும். பல்லவ மன்னர்கள், தம்மை சிறந்த மல்யுத்த வீரர்களாக காட்டிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. Varzesh-e Bastani என்பது ஈரானின் மரபு வழி மல்யுத்த விளையாட்டைக் குறிக்கும். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக, இன்றைக்கும் பயிற்றப் படும் மல்யுத்தமானது, ஈரானியக் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்து விட்டது. ஈரானில் மல்யுத்த வீரர்களை "பஹ்லவன்" என்று அழைப்பார்கள்! ஈரானிய பஹ்லவன், தமிழில் பல்லவனாக மருவியிருக்கலாம். இன்றைக்கும் பல ஈரானியர்கள், பஹ்லவன் என்று பெயர் வைத்துக் கொள்வது வழமையானது.

உங்களுக்குள்ளே இருக்கும் போதி தர்மனை பார்க்க வேண்டுமா? படித்ததில் பிடித்தது!

1) திரையுலகை நம்பி வாழும் எத்தனையோ குடும்பங்களில், திருட்டு டிவிடிகளால் வாழும் குடும்பங்களும் இருக்க தான் செய்கிறது.

2)குழந்தையின் கண்களுக்கு உலக அதிசயம் 7 அல்ல,  7 கோடி..

3)ரசித்து கட்டிய வீட்டில் உட்கார நேரம் இல்லை, வீடு கட்ட வாங்கிய தவணையை அடைக்க ஓட வேண்டி உள்ளது.#நகரத்துவாழ்க்கை 

4)பாஸ் வோர்ட்களை நினைவு படுத்துவதில் பல நேரங்களில் விரல்கள் மூளையை மிஞ்சிவிடுகின்றன. 

5) லிப்ஸ்டிகோடு நன்றாக மேக்-அப் போட்ட அயர்ன் செய்த சேலை கட்டிய "மிக ஏழை" பெண்களை சீரியல்களில் மட்டுமே பார்க்க முடியும் - 

6) எத்தனை பயங்கள் இருந்தபோதும் பாவங்களின் எண்ணிக்கைகள் குறைவதே இல்லை. 

7) எப்பயுமே போடுறதுக்கு டிரஸ் இல்லைன்னு பொலம்புற ஒரே ஜீவன் பொண்டாட்டி மட்டும் தான்.

8)அந்த காலத்தில் 10,  15 குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள். இன்று ஒரு குழந்தைக்கே பிஸி, பிஸி என்று கதை விடுகிறார்கள். 

9) திருமணத்தில் எல்லோருக்கும் இஷ்டம், வாழ்வதில்தான் கஷ்டம். 

10)வளர்ச்சி என்பது, அப்பாவின் திட்டுக்கு கோபபடுவதில் தொடங்கி, மேனஜரின் திட்டுக்கு அமைதியாக நிற்பதில் முடிகிறது. 

11)சச்சின் 100 வது சதம் அடிக்க தயவு செய்து "சென்னை 28" டீமுடன் ஒரு போட்டியை நடத்துமாறு மிகவும் பணிவாக கேட்டுக்கொள்கிறோம். 

12)  வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.  #வேலாயுதம் வருவாண்டா 

13) கவுதம் மேனன் சச்சினை வைத்து படம் எடுக்கிறாராம், டைட்டில் '100 ரன்னைத்தாண்டி வருவாயா? 

14) அதிகமா செலவு செய்யறீங்க நமக்கும் ஒரு பொண்ணு இருக்கா பார்த்துக்குங்கன்னு பக்கத்துவீட்ல சத்தம்,   அடப்பாவி போனமாசம் தான் குழந்தையே பொறந்துச்சு.

15)தூங்கி வழியும் போது இனி ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்க வேண்டும்,தூக்கம் வராத பொழுதுகளில் பயண்படுத்தி கொள்ளலாம். 

16)ஒருவர் அடிக்கும் மொக்கை ஜோக்கிற்கு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தால் ஒன்னு அவரிடம் பணமிருக்க வேண்டும் இல்லை பதவியிருக்க வேண்டும்.!  

17)எவ்வளவு சில்லறை போட்டாலும் நிறையாதது பஸ் கண்டக்டரின் பை மட்டுமே.. 

18) உலகத்தில் அழகான விஷயங்கள் 2 மட்டுமே, ஜனனமும்,  மரணமும்.ஆனால் அதற்கான காலத்தில் நடக்கும் போது மட்டுமே. 

19)பாகிஸ்தானின் திருவிளையாடல்களில் ஒன்று, சீனாவிடம் ஏவுகணை, விமானம் வாங்கி பச்சை பெயின்ட் அடித்து தான் கண்டுபிடித்தது என சொல்வது முடியல. 
20) நம்மூரில் கரகாட்டம்,   அவங்க ஊரில் சியர்லீடர்ஸ். 

21)கணக்கு டீச்சர் கணக்கு பாடம் நடத்துவதை விட கொடுமையானது அதை நம்ம முகம் பார்த்து நடத்துவது.!  

22) ஆட்டோக்களில் குழந்தைகளை ஏற்றிப்போக சொன்னா ஆட்டோக்காரங்க ஒரு கிளாஸ்ரூமையே ஏத்திகிட்டு போறாங்க.!

23)நம்ம எல்லோருக்குள்ளேயும் ஒரு போதி தர்மர் இருக்கார். ஆனா அத தூண்டி விட்றதுக்கு தான்  ஒரு ஸ்ருதிஹாசன் இல்ல.

24) காதல்.வென்றவர்களுக்கு இனிப்பு,தோற்றவர்களுக்கு கசப்பு,கிடைக்காதவர்களுக்கு புளிப்பு.

25) சாதாரண சுற்றுலாவை இன்பசுற்றுலாவாக்க செல்போனை வீட்டிலயே விட்டுவிட்டு செல்லுங்கள்.!!! 

26) ஆரம்பத்துல இல்லாதது அந்த கடைசி கால் இஞ்சுல என்னதான் இருக்கோ? சிகரெட்டும், சிக்கன் லெக் பீசும்.!!!   

27)ரஜினி வரும் வரை எதற்காக ராணா காத்திருக்க வேண்டும்! ரஜினிக்கு பதில் எம்.எஸ் பாஸ்கரை வைத்து தொடர்ந்து எடுக்கலாமே!  

28)இந்தியாவில் ஏழை பணக்காரர் என்ற வித்யாசம் இல்லாமல் இருப்பது   குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகள் மட்டுமே. 

29)உலகப் பிரச்சனைகளில் எல்லாம் தலையிடும் அமெரிக்க ஜனாதிபதி தன்னாட்டு பிரச்சனையில் வாய் மூடி மௌனியாக இருக்கிறார். 

30) ஊருப்பக்கம் யாரும் வந்தால் துரத்தி அடிப்பதும், ஊரூரா போனால் அடிச்சுத் துரத்தப்படுவதும் இந்திய கிரிக்கட்டின் ட்ரேட்மார்க்!  

31)என்னதான் பரம்பரை பரம்பரையாக எதிரியாக இருந்தாலும் எக்ஸாம் மண்டபத்தில் பக்கத்து பக்கத்து சீட் கிடைத்தால் நண்பனா(க்)கி கொள்வதே நலம்!  

32) தனிநாடு கூடாது என கொக்கரித்தவர்கள் இன்று தன்நாட்டையே சைனாக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்! #வளமான எதிர்காலம்!  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...