|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 April, 2012

பார்த்ததில் பிடித்தது!

2 landu thina asayaaaaaaaaa 

சுஷ்மாவா செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!.. இலங்கை வந்துள்ள இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சுவ்ராஜ் அவர்களும் மற்றும் காங்கிரஸ் எம்பிமார்களும் செல்லும் இடம்மெல்லாம் பசுரிகளைப் பெற்று வருகின்றனர். அவர்களைப் பார்க்க வரும் எல்லா இலங்கை அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் ஏதாவது ஒரு பரிசுபொதியை இவர்களுக்கு வழங்கிய வண்ணம் இருக்கின்றனர். டக்ளஸ் தொடக்கம் பிள்ளையான், கருணா என எல்லோரும் பரிசுகளை வழங்கிவருகின்றனர். இதில் போதாக்குறைக்கு பசில் மற்றும் மகிந்தரும் தமது பரிசுகளையும் வழங்கியுள்ளனர். சில பரிசுப் பொதிகள் பெரிதாகவும் சில பரிசுப் பொதிகள் சின்னதாகவும் இருப்பதாக அதிர்வின் விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார். மகிந்தர் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சுஷ்மாவுக்கு அதிஉயர் நவரத்தினக் கல் பதிக்கப்பட்ட ஆபரணத்தை வழங்கினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் விளையும் ஸபையர் மற்றும் சில மாணிக்கக் கற்கள் கொண்ட ஆபரணங்களையே சுஸ்மா பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் இருந்துசெல்லும்போது பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்த ஆவணங்களை இவர்கள் கொண்டு செல்கிறார்களோ இல்லையோ, பரிசுப்பொதிகளை மட்டும் நிச்சயம் கொண்டுசெல்வார்கள். ஒருவேளை எடை அதிகமாக இருந்தால், ஆவணங்களை விட்டுவிட்டு தமது பரிசுப்பொதிகளோடு செல்லவேண்டிய நிலைகூடத் தோன்றலாம் என்று சொல்லும் அளவுக்கு அங்கே பரிசுகள் குவிந்துள்ளதாம் ! இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கை சென்று தமிழர்களின் நிலையைக் கேட்டறிந்து ஆவனசெய்யும் என மக்கள் நம்பியிருக்க இவர்களோ இலங்கை அரசின் உல்லாச உபச்சாரத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.



மனிதனின் சிந்தனையை மெருகூட்டும் ஆயுதங்கள்.


புத்தகங்கள் கருப்பு மையினால் அச்சிடப்பட்ட காகிதங்கள் அல்ல; அவை மனிதனின் சிந்தனையை மெருகூட்டும் ஆயுதங்கள். அப்படிப்பட்ட ஆயுதங்களை உருவாக்கும் எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளை பிடித்தமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்வது தமிழ்ப் புத்தக வெளியீட்டில் மரபாகப் பின்பற்றப்படுகிறது.
பொதுவாக அம்மாவுக்கு, அப்பாவுக்கு என்று தான் சமர்ப்பணம் எழுதுவர். ஆனால், புத்தகங்களை வித்தியாசமாக சமர்ப்பிப்பவர்களும் உண்டு. சில சுவாரசியமான காணிக்கைகள்


* குடகு என்ற புத்தகத்தை எழுதிய ஏ.கே. செட்டியார், அதை, "கருணை பொழியும் காவிரி அன்னையின் திருவடிகளுக்கு' காணிக்கையாக்கியுள்ளார்.


* காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள் என்ற புத்தகத்தை எழுதிய கூத்தங்குடி அழகு. ராமானுஜன், "உலக மனிதர்களின் பசித்துயர் களைய வாய்க்கால் நீரை, வயலில் நிரப்பிப் பயிர்கள் வளர்க்கும் மடை வயல்களுக்கு' என்று அர்ப்பணம் செய்துள்ளார்.


* ஜனகண மன என்ற புத்தகத்தை எழுதிய மாலன் "சரித்திரம் தேர்ச்சி கொள்' என கட்டளையிட்ட கவிஞனுக்கும் அதைக் கற்றுக் கொடுத்த ஜவஹருக்கும் என் தோட்டத்திலிருந்து இந்த எளிய ரோஜா என்று சமர்ப்பணம் செய்துள்ளார்.

* கீதாரி என்ற புத்தகத்தை எழுதிய க.தமிழ்ச்செல்வி, அதை, "ஆடுகளுடன் வெட்ட வெளிதனை மெய்யெனக் கொண்டு வாழும் கீதாரிகளுக்கு' காணிக்கையாக்கியுள்ளார்.


*மனப்பத்தயம் என்ற புத்தகத்தை எழுதிய யுகபாரதி அதை, "படித்துவிட்டுத் தருகிறேன் என இரவல் பெற்று, தொலைந்துவிட்டதாய் தர மறுக்கும் புத்தகப் பிரியர்களுக்கு' சமர்ப்பணம் செய்துள்ளார்.


*பட்டாம்பூச்சி விற்பவன் என்ற புத்தகத்தை எழுதி நா. முத்துக்குமார் அதை புத்தகம் வெளியிட முடியாமல் தவிக்கும் சக கவிஞர்களுக்கு சமர்ப்பித்துள்ளார். 


* சாப்பாட்டு புராணம் எழுதிய சமஸ், அதை, "நான் ரசித்து சாப்பிடுவதை உலகின் மிகப் பெரிய சந்தோஷங்களில் ஒன்றாகக் கருதும் என்னுடைய அம்மாவிற்கு' காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.


*ஐந்தாறு வகுப்பறைகளும் பத்து, பதினைந்து காக்கைகளும் என்ற புத்தகத்தை எழுதிய ஈஸ்வர சந்தான மூர்த்தி, அந்தப் புத்தகத்தை "எப்பொழுதும் நேர்மையோடு வாழும் என் குழந்தை சமூகத்திற்கு' என்று சமர்ப்பணம் செய்துள்ளார்.


* உடைந்த இருட்டு என்ற புத்தகத்தை எழுதிய வலம்புரி லேனா, இந்தப் புத்தகத்தை வெயில், மழை பாராது கடிதங்களை அள்ளித் தந்து போகும் இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் பட்டுவாடா ஊழியர்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.


* பெண் எழுதும் காலம் என்ற புத்தகத்தை அ. வெண்ணிலா, பலாத்காரம், சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகளால் துன்புறுத்தலுக்கும் நசிவுக்கும் உள்ளான லட்சக்கணக்கான பெண்களின் நினைவுகளுக்குச் சமர்ப்பித்துள்ளார்


* உய்... உய்... ரசிகர் மன்றங்களின் நோக்கும்-போக்கும் என்ற நூலை எழுதியுள்ள கோவி.லெனின், கல்லூரிப் பருவத்தில் பாடம் போதித்த தஞ்சை-திருவாரூர் சுற்று வட்டாரத் திரையரங்குகளுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


* தானியம் கொத்தும் குருவிகள் என்ற நூலை எழுதிய ப்ரணா என்னைப் பாதித்த, என்னை எழுத வைத்த அனைத்து நிகழ்வுகளுக்கும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

* கதைகள் தீர்ந்தபோது அம்மா சொன்ன கதைகள் என்ற புத்தகத்தை எழுதிய செந்தில்பாலா இன்றைக்கும் ஆல இலை பொறுக்கி வரப் போயிருக்கும் பாட்டி பட்டம்மாளுக்கும் உலர்த்தி படிய வைத்து தைத்து, 

"கோட்டை'யாக்கி விற்கும் தாத்தா தனபாலுக்கும் தனது புத்தகத்தைச் சமர்ப்பித்துள்ளார்.


*தஞ்சை ப்ரகாஷ் படைப்புலகம் என்ற புத்தகத்தை எழுதியுள்ள கீரனூர் ஜாகிர் ராஜா, பெரியகோவில் புல்வெளிக்கு என்று சமர்ப்பணம் செய்துள்ளார்.இவ்வாறு தமிழ்ப் புத்தகங்கள் வித்தியாசமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நம்மை புரட்டும் புத்தகங்கள் எங்கே?பக்கங்களை நம் விரல்களை புரட்டுவதற்குப் பதில், நம்மை புரட்டிப் போடும் புத்தகங்களே நல்ல புத்தகங்கள். அத்தகைய புத்தகங்களைக் கொண்ட நூலகங்களில் ஒன்று, தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம்.அண்ணா சாலையில் அமைந்துள்ளது. 1947 ம் ஆண்டில் சிறிய கட்டடத்தில் இயங்கியது. மூன்று சக்கர சைக்கிளில் வீடு வீடாகப் புத்தகங்களைக் கொடுத்து, வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கியது. பின்னர், இப்போதைய நூலகக் கட்டடம் கட்டப்பட்டு, 1965ல் இப்போதைய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

புலியை முறத்தால் துரத்திய கதை இனி எடுபடாது: புதுமையை தேடும் தமிழ் வாசகர்கள்: இணையதள வளர்ச்சியால், புத்தக விற்பனை மற்றும் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என, புத்தக கடைகாரர்கள் தெரிவித்தனர்.நவீன இலக்கியங்கள் மீதான தேடல் அதிகரித்து வருகிறது. புலியை முறத்தால் அடித்து துரத்தி, வீரத்தை நிலை நாட்டினாள் பார் தமிழச்சி என்பது போன்ற கதைகளை எவ்வளவு நாளைக்குத் தான் படிப்பது; புதிய சிந்தனைகள் பிறக்க வேண்டாமா என, கேட்கின்றனர்.உதவி செய்யும் இணையம் இணையதள வசதிகள் அதிகரித்து விட்டன. அதனால், புத்தகம் வாசிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது ஏற்புடையதல்ல. இணையம் வந்து விட்டதால், பொத்தானை தட்டியவுடன், புத்தகங்களின் பட்டியல் வருகிறது. இணையதள முகவரியில் உரையாடல்கள் நடந்து, மாலைக்குள் புத்தகம் கைக்கு சேர்ந்து விடுகிறது. இணையத்தில் படிக்க ஆர்வம் இருந்தால், ஏன் புத்தகங்களை வாங்குகின்றனர்.தாய், தந்தை, உறவினர், ஆசிரியர் புத்தகப் பிரியர்களாக இருந்து, அவர்களின் தாக்கம் உள்ளவர்கள் தான் இப்போது வாசகர்களாக, படைப்பாளிகளாக நீடிக்கின்றனர். எதிர்காலத்தில், படைப்புலகை தீர்மானிக்கக் கூடிய சிறுவர்களுக்கு புத்தக வாசிப்புத் தன்மையை கொண்டு சேர்ப்பதில், மக்கள் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். இந்த போக்கு, எதிர்கால சந்ததியை பாழாக்கிவிடும்.

வாழ்வை வெல்லும் வாசிப்பு:மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக சிறுவர்கள் பார்க்கப்படுகின்றனரே தவிர, புத்தக வாசிப்புக்கு உட்படுத்துவதில்லை. அதனால், அவர்களுக்கான உலகத்தை நாம் பூட்டியே வைத்திருக்கிறோம். அதனால் தான் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர். பரந்து விரிந்து கிடக்கும் புத்தக உலகிற்குள் சிறுவர்களை அழைத்துச் செல்ல வேண்டியது, காலத்தின் கட்டாயம்.இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.

திருநங்கையரிடம் மாற்றம்ஏற்படுத்திய "வாடாமல்லி': திருநங்கையர் வாழ்வில் மாற்றத்தைஏற்படுத்தியது, எழுத்தாளர் சமுத்திரம்எழுதிய "வாடாமல்லி' என்ற நாவல்தான்என, தமிழக திருநங்கையர் ஒப்புக்கொள்கின்றனர்.மூத்ததிருநங்கையர், "பிச்சை, பாலியல் உள்ளிட்டவற்றிற்கே நாம் படைக்கப்பட்டோம்; அதை கேவலமாக நினைக்கக்கூடாது' என்றனர். பின் வந்த நாங்கள்அதை மாற்றினோம். எழுத்தாளர்கள்,கைவினை கலைஞர்கள், சமையல் கலைஞர்கள் என, எங்கள் வாழ்வை மாற்றியுள்ளோம். இவை, புத்தக வாசிப்புகளால்தான் சாத்தியமானது. "வாடாமல்லி' எங்கள் வாழ்க்கையை மாற்றிய படைப்பு.எழுத்தாளர் திருநங்கை பிரியா பாபு:எழுத்துகளை விட பலமான ஆயுதம் எதுவுமில்லை. "அரவாணிகள் சமூக வரைவியல், மூன்றாம் பாலின் முகம்' உள்ளிட்டவை திருநங்கையரின் வாழ்க்கைப் பதிவுகள் குறித்து நான் எழுதியவை. எங்கள் சமுதாயத்தவரிடம் விழிப்பை ஏற்படுத்த, "எழுத்தாளர் பயிற்சி முகாம்'நடத்தி வருகிறோம். இதனால்,வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்யமுடியும்.

"குழந்தைகளை கொண்டாடாத சமூகத்துக்கு வரலாறு கிடையாது':
இந்திய அரசின் நேஷ்னல் புக் டிரஸ்ட் நிறுவனம் குழந்தைகளுக்காக,நேரு குழந்தைகள் புத்தகாலயம் என்ற ஒரு பிரிவைஆரம்பித்து, குழந்தைகளுக்கான புத்தகங்களைவெளியிட்டு வருகிறது.இந்தி, மலையாளம்,பெங்காலி உள்ளிட்டமொழிகளில்தான் குழந்தைகளுக்கான புத்தகங்களை அதிகளவில் வெளியிட்டு வருகிறது. தமிழில்வெளிவரும் புத்தகங்கள்குறைவு. இந்த நிறுவனம்தமிழில் அதிகமான புத்தகங்களை வெளியிடவேண்டும்.மதிப்பெண்கள்தமிழகத்தில், தமிழ்வழியில் படிக்கும் குழந்தைகளே அதிகம்.எனவே, அவர்களுக்காகதமிழில் அதிக புத்தகங்கள்வரவேண்டும்.வெளிநாடுகளில் குழந்தைகளின் படிப்பார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, பாடப்புத்தகம் அல்லாத குழந்தைகள் புத்தகத்தை படிக்கும் குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் போடும் வழக்கம்இருந்து வருகிறது. அதுமாதிரியான வழக்கம் தமிழகத்திலும் ஏற்படுத்தினால் நம் குழந்தைகள் மத்தியில், வாசிப்புபழக்கம் அதிகரிக்கும்.தமிழ்ச் சமூகம் குழந்தைகளை கொண்டாட வேண்டும்


டி.கே.ரங்கராசன், ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வையே அங்குள்ள தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பான, மோசடிப் பேச்சு!

இலங்கைக்கு சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.ரங்கராசன், ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வையே அங்குள்ள தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பான, மோசடிப் பேச்சு என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த சிங்கள – பெளத்த இனவாத அரசுகளின் கொடூரமான ஒடுக்குமுறையால் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கு மேல் அடிமை நிலையில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்கள், தாங்கள் சுதந்திரமாக, சம உரிமையுடன் வாழ ஒரே வழி தமிழீழ தனி நாடு காண்பதே என்பதை 38 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தீர்மானித்துவிட்டார்கள். 1974ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் தனித் தமிழீழ குடியரசை நிறுவுவதுதான் தமிழர்கள் முழு உரிமையுடன் வாழ ஒரே வழி எனும் தீர்மானத்தை ஈழத் தந்தை செல்வா நிறைவேற்றினார். அதே கோரிக்கையை முன்வைத்து வல்வெட்டித் துறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன் பிறகு 1977ஆம் ஆண்டு நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தனித் தமிழீழ விடுதலையை தேர்தல் முழுக்கமாக வைத்துப் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வடக்கிலும் கிழக்கிலும் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.சாத்வீக வழியில் போராடிய தந்தை செல்வாவின் போராட்டங்களை ஆயுத வன்முறையின் மூலம் சிங்கள அரசு தொடர்ந்து ஒடுக்கியதன் எதிர்வினையாகவே தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடங்கியது. தமிழ் மக்களின் முழுமையாக ஆதரவுடன் நடந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத்தான் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழர்களை அழிக்கும் இன அழிப்புப் போராக சிங்கள இனவெறி அரசு நடத்தி முடித்தது. இரண்டரையாண்டுக் காலம் நடந்த அப்போரில் ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்படிப்பட்ட ஒரு கொடூரமான போரில் தங்கள் சொந்தங்களை இழந்தும், வாழ்விடங்களை இழந்து வாழ வழியின்றியும் தவித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயர நிலையை கண்டறியச் சென்ற நாடாளுமன்றக் குழுவினர், அவர்களின் துயரத்தை போக்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காததைப் பற்றிப் பேசாமல், தமிழர்கள் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று கூறுவது வடிகட்டிய பொய்யாகும்.


மட்டக்களப்பில் மட்டும் 45,000 விதவைகளைக் கண்டோம், அவர்களில் 13,000 பேர் 23 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்று கூறும் டி.கே. ரங்கராசன், தங்கள் கணவர்களை கொன்றொழித்த சிங்கள இனவாத அரசுடன் இணைந்து வாழவே தாங்கள் விரும்புவதாக இவரிடம் தெரிவித்தார்களா? தங்களுடைய வாழ்விடங்களில் ராணுவ முகாம்களை அமைத்து, வாழ வழியற்றவர்களாக்கிய சிங்கள அரசு, தங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை அளிக்கும் என்று இவரிடம் கூறினார்களா? தங்களுடைய காணிகளை அபகரித்து தமிழர்கள் பகுதிகளில் குடியேற்றியுள்ள சிங்களர்களுக்கு அளித்த அரசு, தங்களுக்கு அதிகாரப் பகிர்வு தரும் என்று தமிழர்கள் நம்புகிறார்களா?இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் சகஜ நிலை திருப்பி வருவதாக கூறுகிறார் ரங்கராசன். அப்படி ஒரு கருத்தை நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட கூறவில்லையே? இலங்கைத் தமிழர்களின் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று ஓங்கிக் குரல் எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர், தன் கருத்தை ஈழத் தமிழர்களின் கருத்தாக அங்கு போய்விட்டு வந்து கூறுவது கடைதெடுத்த அரசியல் மோசடியாகும். தமிழர்கள் அரசியல் தீர்வைத்தான் விரும்புகிறார்கள், விடுதலையை அல்ல என்று கூறும் மார்க்சிஸ்ட் கட்சி, ஈழத் தமிழர்களிடம் விடுதலைத் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கத் தயாரா என்று நாம் தமிழர் கட்சி கேட்கிறது.தமிழர்களுக்கு எதிராக நடந்த முடிந்த போருக்குப் பின்னர் வடக்கில் மட்டும் 97,000 தமிழ் பெண்கள் விதைவைகள் ஆகியுள்ளனர் என்றால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்பத் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றுதானே பொருள்? அப்படியானால் அது திட்டமிட்ட இன அழித்தல் அல்லாமல் வேறென்ன? இந்தக் கொடுமைக்கு காரணமானவர்களை விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்றல்லவா ரங்கராசன் கூறியிருக்க வேண்டும்? இலங்கை அரசு செய்த தமிழினப் படுகொலையை மறைக்க மார்க்சிஸ்ட் கட்சி முயற்சிப்பதேன் என்று கேட்கிறோம். தமிழீழ விடுதலைக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கும் மார்ச்சிஸ்ட்கள், இப்போது இலங்கைக்கு சென்று திரும்பியும் அதையே பேசுகிறார்கள்.


நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை தாங்கி்ச் சென்ற சுஷ்மா சுவராஜ், மற்ற உறுப்பினர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, தனியாகச் சென்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசியிருக்கிறார். இப்படியொரு தனித்த சந்திப்பு எதற்காக என்று தெளிவுபடுத்தப்படவில்லை. அது குறித்து மற்ற உறுப்பினர்கள் ஒருவரும் விளக்கவில்லை. இந்தக் குழுவில் இடம்பெற்றுச் சென்ற காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை எம்.ஜி.ஆர். என்று கூறி புகழந்துள்ளார். சென்னை, சூளையில் தங்கியிருந்தபோது, நடுரோட்டில் துப்பாக்சியால் சுட்டு அப்பாவித் தமிழர் ஒருவரைக் கொன்ற டக்ளஸ் எனும் கிரிமனலுடன், தமிழீழ விடுதலைக்கு துணை நின்ற எம்.ஜி.ஆரை ஒப்பிட்டுப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியதாகும். இலங்கைக்கு சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவில் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகள் எதுவும் இடம்பெறாததும், இடம்பெற்றவர்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இலங்கை பிரச்னை என்றால் என்னவென்று தெரியாதவர்கள் என்பதும் இக்குழுவின் பயணம் ஒரு திட்டமிட்ட நாடகமே என்பதை பறைசாற்றுகிறது.இலங்கைப் போரில் அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று உலகமே பேசுகிறது, விசாரிக்க வேண்டும் என்று கோருகிறது. ஆனால் இங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் அது குறித்துப் பேசாமல் மவுனம் சாதிக்கிறது. இதிலிருந்து தமிழினப் படுகொலை செய்த ராஜபக்ச அரசுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைப் போல், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும், மார்க்சிஸ்ட் கட்சியும் ஆதரவு அளிக்கின்றன என்பது உறுதியாகிறது. இதனைத் தமிழர்கள் புரிந்துகொண்டு இனிவரும் தேர்தல்களில் இந்த மூன்று கட்சிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல் ரோல்ஸ் ராய்ஸ்

அமெரிக்காவில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் பிராண்ட் காரை இயக்குநர் ஷங்கர் வாங்கியுள்ளார். தமிழகத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ள முதல் உரிமையாளர் என்ற பெருமையை ஷங்கர் பெற்றுள்ளார்.இதற்காக அவர் செலவழித்துள்ள மொத்த தொகை 3 கோடி ரூபாயாகும். இந்த காரின் மொத்த மதிப்பு வெறும் ஒன்றரை கோடிதான். ஆனால், அதனை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதால், வரி, பதிவுத் தொகை என பிற செலவுகள் மட்டும் ஒன்றரை கோடி ஆகியுள்ளது.கோலிவுட் வட்டாரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ள முதல் நபர் என்ற பட்டத்தையும் ஷங்கர் பெற்றுள்ளார்.

காங். கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் பருத்தி விவசாயி!

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் 45 வயதான பருத்தி விவசாயி ஒருவர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிவைத்த கடிதத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். விவசாயியான கஜானந்த் கோத்தீகர் என்பவர் டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் பருத்தி விலைகள் மிகவும் குறைவாக இருந்ததால் டிராக்டருக்காக வாங்கிய 1 லட்ச ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. தனது இளைய மகளுக்கான திருமண ஏற்பாடும் அவரை மேலும் கடனில் ஆழ்த்தியது. இதனால் கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார்.தனது தற்கொலை குறிப்பில் பருத்திக்கு நல்ல விலைகிடைக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் துயரம் குறித்து கவலைப்படாத காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் அரசுக்கு அடுத்தமுறை வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.விதர்பா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 325 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி லேண்ட்டில் சிம்பு நடனம்!


வேட்டைமன்னன் படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அடுத்ததாக நடிக்கலாம் என்று சிம்பு நினைத்திருந்த வெற்றிமாறனின் வடசென்னை படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டதால் எப்பவோ துவங்கி நிறுத்திய போடா போடி படத்திற்கான படப்பிடிப்பை மறுபடியும் துவங்கியிருக்கிறார் சிம்பு.   போடா போடி படக்குழுவினர் தற்போது ஹாங் காங்கில் உள்ள டிஸ்னி லேண்டில் முகாமிட்டு பாடல் காட்சிகளை அங்கு படமாக்குகின்றனர். ஹாங் காங் சென்றதும் சிம்புவின் உடல்நிலை பாதித்ததால் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டதாம். உடல் தேறி சிம்பு வந்ததும் மழை குறுக்கிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிட்டது. அதன் பிறகு ஒரு வழியாக எல்லா தடங்கள்களும் முடிந்ததும் பாடல் காட்சிகளுக்கு நடமாடியிருக்கிறார் சிம்பு. என் மருமகன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையுடன் டிஸ்னி லேண்ட் முழுவதும் சுற்றி பார்த்திருக்கிறார் சிம்பு.


வருகிறது ஜெயா பிக்சர்ஸ்!

சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியாக இருந்த சன் நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி படங்களை தயாரித்தும், பிறர் தயாரித்த படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கி விநியோகம் செய்தும் வருகிறது. தமிழ் தொலைகாட்சிகளில் சன் சேனலுக்கு போட்டியாக இருக்கும் ஜெயா தொலைக்காட்சி தனது சேனலில் சில படங்களுக்கு விளம்பரம் செய்தாலும் விநியோகம் செய்வதில் ஈடுபாடு காட்டாமல் இருந்தது. சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியாக இருந்த சன் நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி படங்களை தயாரித்தும், பிறர் தயாரித்த படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கி விநியோகம் செய்தும் வருகிறது. தமிழ் தொலைகாட்சிகளில் சன் சேனலுக்கு போட்டியாக இருக்கும் ஜெயா தொலைக்காட்சி தனது சேனலில் சில படங்களுக்கு விளம்பரம் செய்தாலும் விநியோகம் செய்வதில் ஈடுபாடு காட்டாமல் இருந்தது. 

சில நாட்களுக்கு முன் ஆஸ்கர் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வேலாயுதம் படத்தை ஜெயா சேனல் விநியோகம் செய்யும் எண்ணத்தில் இருப்பதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் பிறகு அது பொய்யாகி ஆஸ்கார் ஃபிலிம்ஸும், ஐங்கரன் இண்டர்நேஷனலும் அந்த படத்தை விநியோகம் செய்தன. தற்போது ஜெயா தொலைக்காட்சி இனி வரவிருக்கும் படங்களை விநியோகம் செய்வதில் முனைப்புடன் இறங்கப்போவதாகத் தெரிகிறது. ஜெயா தொலைக்காட்சியின் பார்வை வளையத்திற்குள் இருப்பது கமலஹாஸனின் இயக்கத்திலும், தயாரிப்பிலும், நடிப்பிலும் உருவாகிக்கொண்டிருக்கும் படமான விஸ்வரூபம் மற்றும் ரஜினியின் நடிப்பில் உருவாகிகொண்டிருக்கும் கோச்சடையான் ஆகிய படங்கள் தான் என்கின்றனர். முக்கிய நடிகர்களின் படங்களையும், பிரபல தயாரிப்பாளர்களின் படங்களையும் தன் வசம் இழுப்பதற்கு ஜெயா தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாம். 

ஒதுக்கப்பட, தண்டிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய நாடு இலங்கை: தா.பாண்டியன்!


ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களை இலங்கைக்கு அனுப்பி, அங்குள்ள நிலைகள் குறித்து அறிந்து வரச்செய்ய வேண்டும். அது தான் ஜனநாயக முறை.தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் இடம்பெறாத தூதுக் குழு இலங்கை சென்று வந்துள்ளது. உலக அரங்கில் மனித உரிமை மீறல் விசாரணை நடத்து கொண்டிருக்கும்போது, தூதுக்குழுவினர், ராஜபக்சேவை சந்தித்து விருந்து சாப்பிட்டுள்ளனர்.ஒதுக்கப்பட, தண்டிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய நாடு இலங்கை. இங்கு தமிழர்கள் மனித உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பது தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை.  

கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க இளைஞர்கள் அதிரடி



சென்னை எழும்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் எந்தெந்த கடைகளில் தமிழ் பெயர் இல்லை என்பதை ஆய்வு செய்து , அந்த கடை உரிமையாளர்களை சந்தித்து சென்னை மாநகராட்சியின் 2010 ஆம் ஆண்டு கட்டாய தமிழ் மொழி பலகை வைக்க வேண்டும் என்ற ஆணையை தமிழர் பண்பாட்டு நடுவம் ஆதரவோடு இளைஞர்கள் சிலர் காட்டினர். இந்த ஆணைப் படி பெயர் பலகைகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்று கடை காரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வணிகர்களும் தங்கள் தவறை உணர்ந்து, தங்கள் கடைகளுக்கு தமிழ் பெயர் பலகை வைக்கிறோம் என்ற வாக்குறுதியை கொடுத்தனர். மேலும் அறிக்கையை பெற்றுக் கொண்டதற்கு சாட்சியாக படிவத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தனர். மேலும், தமிழ் பெயரிடாத கடைகளை பற்றிய விவிரங்களை சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், மேயரிடமும் தமிழர் பண்பாட்டு நடுவம் அனுப்ப உள்ளது. மீண்டும் சென்னையில் வணிகர்களுக்கு ஒரு அரசு அறிக்கை வெளி வந்தால் தான் ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் வைப்பார்கள். அதற்கும் தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.

கூட்டம் கூட்டமாக நகை வாங்க வருவதை பயன்படுத்தி !

அட்சய திருதியை (24.04.2012) நாளில் எல்லோரும் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், நுகர்வோர் அமைப்பினரின் பிரச்சாரம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருகும் என மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி, தரமற்ற தங்க நகைகளை பலரும் விற்பனை செய்வதாக அவர்கள் பிரச்சாரம் செய்தனர். புதுச்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மைக்குகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த லெனின் கூறியதாவது, பொதுமக்கள் அனைவரும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் பொருள் சேரும், செல்வம் சேரும் என்று சொல்லி அனைவரும் விழுந்தடித்துக்கொண்டு அன்றைய தினம் தங்கம் வாங்குகிறார்கள். அப்படி தங்கம் வாங்கும்போது அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள் என்பதை எமது அமைப்பின் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...