|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 September, 2011

பூமியில் மோதி விழுந்த அமெரிக்க செயற்கைகோள் எங்கே? தேடும் பணி தீவிரம்!


காற்று மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா 6 டன் எடையுள்ள ஒரு செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. கடந்த 1995-ம் ஆண்டு அது செயல் இழந்தது. அதைத்தொடர்ந்து அந்த செயற்கை கோள்படிப்படியாக பூமியை நோக்கி நகர்ந்து வந்தது. பின்னர் புவிஈர்ப்பு சக்தி காரணமாக கடந்த சனிக்கிழமை வட அமெரிக்காவில் வடகிழக்கு பகுதியில் விழுந்தது.  
 
தொடக்கத்தில் அந்த செயற்கை கோளின் உடைந்து சிதறிய துண்டுகள் கனடாவில் விழுந்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த சிதறல்கள் அங்கு விழவில்லை. எனவே, “நாசா” விஞ்ஞானிகள் உடைந்த செயற்கை கோள் சிதறல் விழுந்த இடத்தை தற்போது கணித்துள்ளனர். அதன்படி அவை அமெரிக்க கண்டத்தில் பசிபிக் கடல் பகுதியில் விழுந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 
 
உடைந்து சிதறிய சில துண்டுகள் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து தென் மேற்கில் 420 கி.மீட்டர் தூரத்தில் விழுந்திருக்கலாம். மேலும் உடைந்த 25 துண்டுகள் அதில் இருந்து 800 கி.மீட்டர் சுற்றளவில் சிதறி கிடக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். செயற்கைகோளின் உடைந்த உதிரி பாகங்கள் எங்கு விழுந்தது என சரியாக கண்டுபிடிக்க முடியாமல் நாசா விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். எனவே அவற்றை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

இதே நாள்...


  • அர்ஜெண்டினா, கண்டுபிடிப்பாளர்கள் தினம்
  •  உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது(1885)
  •  அரபுக் கூட்டமைப்பில் ஓமன் இணைந்தது (1971)
  •  தமிழக கவிஞர் அரங்க.சீனிவாசன் பிறந்த தினம்(1920)
  • பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு அதிகரித்து வருகிறது: உலக கருத்தடை ஆய்வு !


    உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது. நேற்று உலக கருத்தடை நாள் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத்தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் உலகளவில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. உலகில் பாதுகாப்பற்ற முறையில் பலரிடம் செக்ஸ் உறவு கொள்ளும் முறை அதிகரித்து வருவது தெரிந்துள்ளது.

    புதிய நபருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளும் இளவயதினரின் எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் 20 சதவீதமும், பிரன்சில் 2 மடங்கும், அமெரிக்காவில் 40 சதவீதமும் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள இளம்வயதினருக்கு கூட தகுந்த கருத்தடை மற்று பாதுகாப்பான உடலுறவு குறித்த தகுந்த அறிவு இல்லை என தெரிகிறது.

    ஐரோப்பிய நாடுகளில் 50 சதவீதம் இளம் வயதினர் பள்ளிகளின் மூலம் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். தென் அமெரிக்கா, அமெரிக்கா, மற்றும் ஆசியா பசிவிக் பகுதிகளில் 30 சதவீதம் மக்கள் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல நபர்களுடன் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளனர்.

    இந்த ஆய்வில் சிலி, போலாந்து, சீனா உள்ளிட்ட 26 நாடுகளை சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் உலகிலேயே தாய்லாந்தில் 62 சதவீதம் மக்களும், அதற்கு அடுத்தப்படியாக சீனாவில் 58 சதவீதமும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 32 சதவீதம் இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, உலகளவில் பாதுகாப்பற்ற உறவுகளால் இளம் வயதினர் இடையே தேவையற்ற கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது. கருத்தடை முறைகளை குறித்து கேட்பதற்கு சில நாடுகளில் மக்கள் வெட்கப்படுவதால், அது குறித்த சரியான அறிவு இல்லை.

    எகிப்தில் உள்ள 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறவு கொண்ட பின்பு, குளித்தால் கருத்தரிக்க மாட்டார்கள் என எண்ணுகின்றனர். இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள 35 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது மிகவும் பாதுகாப்பானது என கருதுகின்றனர். இதில் உலகளவில் பொதுவாக 15 சதவீதம் பேருக்கு கருத்தடுப்பு முறைகளில் விருப்பமே இல்லை என தெரிவித்துள்ளனர்.

    கனவு காண்பதால் மூளை சுறுசுறுப்படையும்!


    ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்தளவிற்கு மனிதர்களுக்கு தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது. மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது வயசு ஏற ஏற அறிவும் கூட வளறவேண்டும் என்றுதான் நினைக்கிறது.

    எனவே வயது முதிர்ச்சியுடன் சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகளை சமீபத்துல ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.

    ஒரு நாளைக்கு 4 காஃபி: காலையில் எழுந்த உடன் ஆற அமர ருசித்து காஃபி குடியுங்கள். ஏனெனில் காஃபியில் உள்ள கெஃபீன் என்னும் வேதிப்பொருள், மூளையை பாதுகாக்கிறது. நாளொன்றுக்கு நான்கு கப் காஃபி குடித்தால் அல்ஷெய்மர்ஸ் என்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய் வராமல் தடுக்கப்படுகிறதாம். இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன் லேர்ந்து கிடைக்கிறதா ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் என்னும் வேதிப்பொருள்லேர்ந்து கிடைக்கிறதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.மூளையைத் தூண்டுங்கள்: எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவும் உங்க முதுமைக் காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்!. ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம். குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை பெரிதாக மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை!.மன உளைச்சலை குறைங்க: மன உளைச்சலினால் நினைவாற்றல் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் மற்றும் இன்னும் சில பகுதிகளில் விஷத்தன்மையுள்ள பல ரசாயனப் பொருள்கள் கொட்டப்படுகிறதாம். யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வுகனவு காணுங்கள்! கனவு காண்பதால் மூளை வளர்ச்சியடையும் என்ற அதிசயிக்கத்தக்க உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கண்களை திறந்து கொண்டே பகல் கனவு காண்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. சரியான நேரத்தை ஒதுக்கி, உறங்கும்போது, வரும் கனவுகள் ஒருவரின் நினைவாற்றல் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்கிறதாம். ஆனால் சரியான தூக்கமின்மையால் நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்கும் திறன் குறைந்து போகிறதாம். முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!சுறுசுறுப்பான செயல்பாடு: நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்யவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது மூளை ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்துகிறதாம். நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவாக இருந்தாலும் அரைமணி நேரம் தொடர்ந்து செய்தால் மூளை வளர்ச்சி அதிகரிக்குமாம். நோயின்றி வாழ்வோம்: வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொதிப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்! உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்கும் திறனையும், நினைவுத்திறனையும் பெரிதும் பாதிக்கின்றனவாம். எனவே உடலை பேணுவதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்.உணவுக் கட்டுப்பாடு: அதிகமாக உண்ணுவதன் மூலம் மூளை சோர்வடைந்து நினைவாற்றல் பாதிக்கிறதாம். அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் மிகவும் குறைவாக உட்கொண்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம். எனவே அதிக நார்ச்சத்துள்ள மிதமான அளவில் கொழுப்பும் புரதமும் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் செரிமானச் செயல்பாடானது சீராக நடைபெற்று உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்டகாலம் பாதுகாத்து சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.மீன் சாப்பிடுங்க: மூளைவளர்ச்சியை அதிகரிப்பதில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பிற்கு முக்கிய பங்குண்டு. இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த விதைகளையும் அதிகம் உண்ணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள் தேவையில்லை.மாத்திரைகளை தவிருங்கள்: வைட்டமின், தாது மாத்திரைகள் அப்புறம் சில நினைவாற்றல் மாத்திரைகள் எல்லாம் மூளைவளர்ச்சியை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல் போன்ற நோய்களும் தோன்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. என்ன 'கத்திக் கத்தி' டென்ஷனாவைத விட்டு விட்டு 'புத்தியை' தீட்ட சுறுசுறுப்பாக கிளம்பிவிட்டீர்களா?

    கலரை சொல்லுங்கள் குணத்தைச் சொல்கிறோம்!


    கலரை சொல்லுங்கள் குணத்தைச் சொல்கிறோம் என்பார்கள். ஆம். ஒருவருக்குப் பிடித்த கலரை வைத்து அவருடைய குணத்தைக் கண்டுபிடிக்கலாம். கலர்புல்லான ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் இதனை படித்து சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். வெண்மை: அமைதிக்கும் சமாதானத்திற்கும் வெண் நிறத்தை உதாரணமாக கூறுவார்கள். வெண்மை விரும்பிகள் சரியான இளமைவாதிகள். எங்கும், எதிலும் முழுமை வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எந்த செயலிலும் இறங்குவதற்கு முன்பாக ஆழம் பார்த்து கால்விடுவீர்கள். அதனால் சீக்கிரம் ஏமாறமாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடை அணியவேண்டாம். ஊரெல்லாம் மழை பெய்து ஒரே சேரும், சகதியுமாக இருக்கிறது!!.

    சிவப்பு: ரொம்பவே ஆக்டிவ் ஆசாமிகள் இவர்கள். நத்தை கூட மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரவேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இந்த கலர் பிடித்த ஆண்களுக்கு ஒரே மாதிரியான வாழ்க்கை என்றால் கசப்பு. அதிக மன வலிமை இருக்கும். இவர்களின் பலமும், பலவீனமும் அதுதான்.

    பிங்க்: சிவப்பின் மென்மைக் குணமே பிங்க். சரியான சுயநலச் சுனாமிகள். தன்னை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதற்காக பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு நடிப்பார்கள், ரொம்ப ஜாக்கிரதை. மெரூன்: வாழ்க்கையில் அடிபட்டு படிப்படியாக ஏறிவந்தவர்களுக்கு மெருன் கலர் மிகவும் பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால் சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள். மெரூன் என்றால் மெச்சூரிட்டி என்று அர்த்தம்.

    ஆரஞ்சு: இந்த நிறத்தை விரும்புபவர்கள் சுகவாசிகள். எந்த நேரமும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் கூட்டணி கவர்ன்மென்ட் மாதிரி எப்போதும் நிலை இல்லாமல் அலைவீர்கள்.மஞ்சள்: மங்களகரமான மஞ்சள் வர்ணம் பிடித்தவர்களுக்கு புத்திசாலித்தனமும் கற்பனை வளமும் அதிகம் இருக்கும். நகைச்சுவை வளம் கூடுதலாகவே இருக்கும். இதனால் யாரையும் எளிதில் சிரிக்க வைத்துவிடுவார்கள். எங்கும் எப்பொழுதும் முழுச்சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள்.

    பச்சை: பசுமையை குறிக்கும் பச்சை நிறத்தை விரும்புபவர்கள் மென்மை ப்ளஸ் நேர்மைவாசிகள். உங்களைச்சுற்றி எப்பொழுதும் பத்து பேர் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள். அன்பே இவர்களின் ஆயுதம். இதனை பயன்படுத்தி சுற்றியுள்ளவர்கள் ஏமாற்ற முயற்சி செய்வார்கள் எனவே விழிப்போடு இருப்பது அவசியம்.கறுப்பு: கிவ் ரெஸ்பெக்ட், ஹேவ் ரெஸ்பெக்ட் பார்ட்டிகள். மரியாதை என்பது மரணம் மாதிரி. நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களை தேடி வரும். ஈஸியாக மற்றவர்களை இம்ப்ஸ்ரெஸ் செய்துவிடுவீர்கள்.

    வயலட் நிறம்: கொஞ்சம் கலாச்சாரக் காவலர் நீங்கள். புதுமை பிடிக்காது. கட்டம் போட்ட பேண்ட் போட்டுள்ளவர்களைப் பார்த்தால் அலறுவீர்கள். உள்ளுவது உயர்வுள்ளல் ஆனால், வேலை என்று வந்துவிட்டால் குறட்டை விடுவீர்கள்.
    வாழ்க்கை முழுக்க ஒரே கலர் பிடிக்காதே… மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறீர்களா? கலருக்குத் தகுந்த மாதிரி உங்கள் கேரக்டரும் அந்தந்த நேரம் மாறியிருக்கும்!

    4 வயது மாணவி பாலியல் பலாத்கார வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம்!


    4 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் சவுந்தரவல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

    கள்ளக்குறிச்சி போலீசில் ரமேஷ்-ராணி தம்பதியினர் கடந்த 3.8.11 அன்று புகார் ஒன்றை கொடுத்தனர். அவர்களது 4 வயது மகள் கவிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளியின் ஆசிரியைகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர். அப்பள்ளி தலைமை ஆசிரியை லெசி பாஸ்கோ, வகுப்பு ஆசிரியை போசியா ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் வகுப்பு ஆசிரியை கைது செய்யப்படவில்லை. இது குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த கள்ளக்குறிச்சி போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, இச்சம்பவம் குறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

    இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரிடம் விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்ததாகவும், இன்னொருவரை கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது, 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்திருப்பது கொடுமையானது, காட்டுமிராண்டித்தனமானது. இந்த வழக்கில் போலீசார் ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கைது செய்யப்படாதவரின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. ஆகையால் இதில் தொடர்புடைய குற்றவாளையை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேணடும். அடுத்த விசாரணையின்போது விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு, கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும், பெண் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழு விசாரணை நடத்தி இன்னும் 4 வார காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    பள்ளிகளில் இனி மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறை!


    2012-13ம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

    இந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது.இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, 

    பள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு, நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை விவரம் வருமாறு:-

    தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை.

    அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

    இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3-ம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

    உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.

    55 முதல் 60 மார்க் வரை - ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)

    49 முதல் 54 வரை - ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)

    43 முதல் 48 வரை - பி 1 கிரேடு (பாயிண்ட் 8)

    37 முதல் 42 வரை - பி 2 கிரேடு (பாயிண்ட் 7)

    31 முதல் 36 வரை - சி 1 கிரேடு (பாயிண்ட் 6)

    25 முதல் 30 வரை - சி 2 கிரேடு (பாயிண்ட் 5)

    19 முதல் 24 வரை - டி கிரேடு (பாயிண்ட் 4)

    13 முதல் 18 வரை - இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)

    12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் - இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)

    மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்பட வேண்டும். ஒரு பருவத்தில் எடுக்கப்படும் பாடங்கள் அடுத்த பருவத்திற்கு வராது. இதனால், ஆண்டு தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். இதுபோல, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் கல்லூரிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையையே அறிமுகப்படுத்தலாம்.

    நிபுணர் குழு அளித்த மேற்கண்ட பரிந்துரைகளை ஆராய்ந்த அரசு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2013-14) 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறையை கொண்டுவர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் இருப்பதைப் போல அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ தேர்வு முறை (டிரெமஸ்டர் சிஸ்டம்) நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நள்ளிரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய பெண்!


    சென்னை பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் பொட்டுத் துணி கூட இல்லாமல் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேய் என்று கூறி மக்கள் பீதியடைந்தனர்.  நேற்று பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் ஒரு இளம் பெண் உடைகளின்றி, தலைவிரி கோலமாக ஓடி வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்தப் பகுதியில் அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோவிந்த் உடனடியாக மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

    மகளிர் போலீஸார் போலீஸ் ஜீப்பில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைப் பிடித்து ஆடைகளை அணிவித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், தென்கல்பாக்கம் கிராமம் ஆகும். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம்.

    10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நான் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.

    ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன் என்றார் அவர். இதற்கிடையே, இந்தப் பெண் வந்த வழியெல்லாம் அவரைப் பார்த்த பொதுமக்கள் பேய் என நினைத்து ஓடி ஒளிந்ததும் தெரிய வந்துள்ளது. 
    அந்தப் பெண் சொல்வது உண்மையா அல்லது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை வைத்து ஸ்பெக்ட்ரம் மோசடியைச் செய்த ராசா!


    2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த அனைத்தும் பிரதமருக்கும், ப.சிதம்பரத்திற்கும் தெரியும் என கோர்ட்டில் ஒவ்வொரு முறையும் கூறி வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, பிரதமர் தனக்கு அனுப்பிய ஒரு ஒப்புகைக் கடிதத்தை வைத்து அனைவரையும் திசை திருப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் ராசா. அதில், பிரணாப் முகர்ஜியை தான் சந்தித்து மொபைல் லைசென்ஸ் குறித்த கொள்கை வகுப்பு குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது பிரணாப் முகர்ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முடிவுகளைக் கையாளும் உயர் மட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்தார். பதிலுக்கு 2008ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பினார். அதில், உங்களது கடிதம் பெற்றேன் என்று கூறியுள்ளார் சிங்.

    இதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தொலைத் தொடர்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் ராசா. அதில், பிரதமரின் 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை மேற்கோள் காட்டி, லைசென்ஸ் தொடர்பான கொள்கை முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்துவிட்டதைப் போல சொல்லி, முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது பிரதமருக்குத் தான் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை பதிலை, பிரதமரின் அனுமதி போல திரித்து தொலைத் தொடர்புத்துறையைத் திசை திருப்பியுள்ளார் ராசா.

    மேலும் 122 லைசென்ஸ்களை வினியோகிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் தொலைத் தொடர்புக் கொள்கையையும் திருத்தியுள்ளனர். தொலைத் தொடர்பு ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலேயே இது நடந்துள்ளது.
    இதுகுறித்து விசாரித்த, நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிஷன், எந்தவித ஒப்புதலும் பெறாமல் தொலைத் தொடர்புக் கொள்கை திருத்தப்பட்டதாக தெளிவாகக் கூறியுள்ளது.

    முதலில் வருவோருக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை வினியோகிப்பது என்றுதான் இருந்தது. ஆனால் இதை மாற்றிவிட்டார் ராசா. முதலில் வருவோருக்கு அல்லது முதலில் விண்ணப்பிப்போருக்கு என்று இல்லாமல், அனைத்து நிபந்தனைகளையும் யார் ஏற்கிறார்களோ அவர்களுக்கு என்று மாற்றி விட்டார் ராசா.

    2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரிய நிறுவனங்களுக்கு சில மணி நேர அவகாசம் மட்டுமே தரப்பட்டு காசோலைகள், விருப்பம் ஆவணம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ராசாவின் திட்டத்தை முன்கூட்டியே 'அறிந்த' சில நிறுவனங்கள் காசோலைகள் உள்ளிட்டவற்றுடன் தயாராக இருந்துள்ளன. அவற்றுக்கு உடனடியாக லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த சிலர்தான் தற்போது ராசாவுடன் சேர்ந்து திஹார் சிறையில் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்களது கடிதம் வந்தது என்ற ஒரு வரி பிரதமரின் பதிலை வைத்து மிகப் பெரிய திசை திருப்புதலை செய்துள்ளார் ராசா என்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    The Best Prostitute in the World..


    பிரா கழட்டிய சாதனையாளர்!


    சாதனைகள் என்பது மிகவும் இலகுவாக கிடைப்பதல்ல. கடும் முயற்சி செய்து எம்மை வருத்தி பெறுவது என்பது இயல்பு. ஆனால் இங்கு ஒருத்தர் நோகாமல் நொக்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். என்ன என்கிறீர்களா? உலகில் அதிகபடியான பெண்களின் பிராக்களை கழற்றி சாதனை புரிந்துள்ளார். ஒரு நிமிட நேரத்தில் 44 பெண்களின் பிராக்களை கழற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்த அதிஸ்டகார மனிதன். இதற்கு முன்னர் 42 தடவைகள் பிராக்களை கழற்றி சாதனை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இப்பொழுதெல்லாம் சாதனைகள் என்பது நிர்வாணமாக குளிப்பதும், நிர்வாணமாக ஓடுவதும் ,படம் எடுப்பதும் ,பெண்கள் மார்புகனை பிடிப்பதும் தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த உலம் எங்கு போய் முடியப்போகிறதோ கடவுளுக்குத்தான் தெரியும்… காலத்தின் கொடுமை இதெல்லாம் சாதனையாக ஏற்றுக்கொள்வது.

    கில்லாடிப் பெண்!


    நகைகளை திருடி பாவாடைக்குள் உள்ள இரகசிய பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்த பெண்ணொருவர் வசமாக மாட்டிக் கொண்டார். திருடிய தங்க நகைகளின் பெறுமதி 54000 ஸ்டேர்லிங் பவுண்கள். இவர் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியுடன் சேர்த்தே திருடி பாவடையில் இருந்த நீண்ட பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்துள்ளார். கண்காணிப்புக் கமரா காட்டிக் கொடுத்தமையால் Saina Sava என்ற குறித்த பெண் வசமாக மாட்டிக் கொண்டார்.
    குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ரோமானியா நாட்டைச் சேர்ந்தவராவார். திருடுவதிலும் திருடர்கள் நாளாந்தம் புது புது தொழிநுட்பங்களைக் கையாளுகிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எல்லோருமே…

    RaOne Official Song


    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...