|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 October, 2011

இந்திய வரலாறும் கச்சத் தீவு பிரச்சனைகளும்..!

பத்தாயிரம் ஆண்டு கால இந்திய வரலாற்றினை ஆய்வு செய்த பிரான்ஸ் நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் டேவிட் பிராலே ( David  Frawley ) என்பவர் தான் பத்தாயிரம் ஆண்டுகால இந்திய வரலாற்றினை முழுமையாக ஆய்வு செய்திருக்கிறேன். அந்த ஆய்வின் அவர்  "கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இந்தியா ஒருமுறை கூட அண்டை நாட்டிலுள்ள ஒரு அங்குல  இடத்திற்குக் கூட ஆசைப்பட்டதில்லை ( India never invaded any country even for an inch of land in Her past 10,000 years of history)"" என்று  குறிப்பிட்டதைப் படிக்கும் போது பெருமையாகவும், மெய்  சிலிர்ப்பாகவும் இருக்கிறது. 


கடந்த 10000 ஆண்டுகளில் இந்தியா எப்படி அண்டை நாடுகளின் ஒரு அங்குல நிலத்திற்காக ஆசைப்பட்டதில்லையோ -  அண்டை நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிப்பது நியாயமற்றது என்று எப்படி இந்தியா நினைத்ததோ - அதேப்போல் தான் இந்த தேசத்திற்கு சொந்தமான நிலத்தை அபகரிப்பதை அனுமதிப்பதும் - மக்கள் தொகையில் அதிகமாகவுள்ள இந்த தேசத்திற்கு சொந்தமான நிலத்தை வேற்று நாட்டுக்கு தானமாகவோ அல்லது பரிசாகவோ கொடுப்பதும் கூடாத செயலாகும். நம் தேசத்திற்குச் சொந்தமான கச்சத் தீவு பிரச்சனையையும் அப்படித்தான் நாம் பார்க்கவேண்டும்.

பிரிட்டிஷாரின் ஆவணங்களில், கச்சத் தீவு என்பது ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமானது என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான ஒன்பது தீவுகளில் கச்சத் தீவும் ஒன்று என்று தான் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. அப்படித் தான் கடந்த 1974 - ஆம் ஆண்டு வரையில் கச்சத் தீவு இந்தியா வசம் தான் இருந்தது. அது வரையில் இந்தியாவிலிருந்து கச்சத்தீவிலுள்ள அந்தோனியார் கோயிலுக்கு இந்திய மக்கள் சென்று வருவதும், இந்திய மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை அங்கு சென்று உலர்த்துவதும் வாடிக்கையாக வைத்திருந்தனர். இதற்கிடையில் 1956 - ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை வீரர்களுக்கு கச்சத்தீவில் பயிற்சியளித்த போதே பெரும்  பிரச்சனை எழுந்தது. இருப்பினும் அன்றைய இந்தியப் பிரதமர் நேரு அந்த பிரச்னையை பெரிது படுத்த விரும்பவில்லை. 
                
இந்த சூழ்நிலையில் தான், 1974 - லில் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு அணுகுண்டு சோதனை நடத்திய போது, ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய நாட்டின் மீது கண்டனத் தீர்மானத்தை கொண்டுவர பாகிஸ்தான் முயற்சி  செய்தது. அப்போது ஐ. நா.- வில் முக்கிய பதவியை வகித்த இலங்கையின் மூலம் அந்த கண்டனத் தீர்மானம் முறியடிக்கப்பட்டது. அதற்கு நன்றிக்கடனாகத் தான் இந்திரா காந்தி அம்மையார் இலங்கைக்கு கச்சத்தீவை பரிசாக வழங்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.  1974, 1976 ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவின் எல்லையிலிருந்து பிரிக்கப்பட்டு இலங்கையோடு  சேர்க்கப்பட்டிருக்கிறது.  நியாயமாகப் பார்த்தால்,  இந்திய அரசு  இத்தீவை இலங்கை அரசுக்குக் குத்தகைக்கு விட்டிருக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கே சொந்தமாக்கியிருக்கக்கூடாது என்பது தேசத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, இத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் போது அதை எதிர்த்திருக்கவேண்டிய தமிழக அரசோ கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. அப்போதும் தமிழக முதல்வராக இருந்தவர் இன்றைய மு.கருணாநிதி தான் என்பது தான் வேடிக்கையானது.
             
 அதுமட்டுமல்ல, கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோயிலுக்குச் சென்று வருவதும், இந்திய  மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை உலர்த்துவதும் எப்போதும்போல, இலங்கை அரசின் அனுமதியோ, விசாவோ இல்லாமல் நடைபெறலாம் என்று அன்றைய அந்த  ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், இது வெறும் எழுத்தில் இருக்கிறதே தவிர, நடைமுறையில் இல்லை. இந்திய மீனவர்கள் அங்கு சென்றால் இலங்கைக் கடற்படை பயங்கர கெடுபிடிகளை செய்து வருவது என்பது இந்திய மக்களின் மனதில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதும், மீன்பிடி வலைகள் உலர்த்தவும்கூட அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்படுவதும்இந்திய மக்களுக்கு வேதனையை அளித்து வருகிறது என்பது தான் உண்மை.   இந்த நிலையிலும் கடந்த திமுக அரசு இந்தப் பிரச்சனையில் அக்கறைக் காட்டாமல், பிரதமருக்கு கடிதம் எழுதியே காலத்தை ஒட்டியது.

  .             நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் தீவை இலங்கைக்கு வழங்கியது செல்லாது என்று முந்தைய ஆட்சியின் போது, செல்வி.ஜெயலலிதா தொடுத்த வழக்கில், தமிழக அரசு தன்னையும் சேர்த்துக்கொண்டு இருந்தாலும்கூட,  இந்நேரம் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் போனதற்கு,  அரசியல் கருத்துமாறுபாடு காரணமாக இந்த வழக்கை திமுக தலைமையிலான  தமிழக அரசு கண்டும் காணாமலும்  இருந்துவிட்டது தான் காரணம்.  அதிலும் குறிப்பாக, மத்திய கூட்டணி அரசில் மிக முக்கிய இடம்பெற்றிருந்தும்கூட, திமுக ஏனோ இதில் அதிக அக்கறை காட்டவில்லை. இப்போது தமிழக அரசு, இந்த வழக்கில் தமிழகவருவாய்த் துறையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதன் மூலம், ஏற்கெனவே உள்ள வழக்கு வலிமை பெறும் என்ற நம்பிக்கைப் பிறந்திருக்கிறது.

ஃபார்முலா 1 சச்சினுக்கு அழைப்பு

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறவுள்ள இண்டியன் கிராண்ட் பிரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தைக் காண சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஃபார்முலா 1 உரிமையாளர் பெர்னி எக்லிஸ்டன், சச்சினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சச்சினும் கார் பந்தயங்களில் ஆர்வம் உள்ளவர். இந்தியாவில் ஃபார்முலா 1 போட்டிகளை நடத்த வேண்டுமென்று 2004-ம் ஆண்டிலேயே விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தில்லி அருகே நொய்டாவில் வரும் 30-ம் தேதி ஃபார்முலா 1 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இப்போட்டி விளையாட்டு வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகவும் கருதப்படுகிறது. இது தொடர்பாக சச்சின் கூறியிருப்பது: இந்தியாவில் ஃபார்முலா 1 கார் பந்தயம் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். நான் இங்கிலாந்து சென்றிருந்தபோது ஃபார்முலா 1 உரிமையாளர் பெர்னி, இந்தியாவில் நடைபெறும் போட்டியைக் காண எனக்கு அழைப்பு விடுத்தார். இதுவரை டி.வி.யிலும், வெளிநாடுகளிலும் சென்றுதான் பெருமளவில் இந்த கார் பந்தயங்களை ரசித்து வந்தேன். இப்போது நமது நாட்டிலேயே இப்போட்டியைக் காண வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

பூனம் பாண்டேவுக்கு முத்திப் போச்சு!


பூனம் பாண்டேவுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. முழு நிர்வாணமாக தரிசனம் தருவேன் என்று கூறிய அவர் இப்போது தனது அந்தரங்க உறுப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வீடியோக்களை படிப்படியாக வெளியிட்டு தனது புதிய இணையதளத்துக்கு சூப்பராக விளம்பரம் தேடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் முழு நி்ர்வாணமாக காட்சி அளிப்பேன் என்று அறைகூவல் விட்டார் பூனம். அப்படி அறிவிப்பு விடுவதற்கு ஒரு விநாடி முன்பு வரை அவரை நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் அவரது அறிவிப்பு பல லட்சம் பேரின் கவனத்தை சில நொடிகளில் ஈர்த்து விட்டது. ஆனால் இந்தியா உலகக் கோப்பையை வென்று இத்தனை மாதங்களாகியும் இதுவரை அவர் சொன்னதைச் செய்யவில்லை.

மாறாக அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம், முக்கால் அரைக்கால் நிர்வாணம் என 'ரேஷன்' கணக்கில் தனது உடல் பாகங்களை வெளியுலகுக்கு காட்ட ஆரம்பித்துள்ளார். புதிதாக அவர் தொடங்கியுள்ள இணையதளத்திற்காக நூதன முறையில் விளம்பரம் தேடி வருகிறார் பூனம். இதற்காக பெட்ரூம் சீக்ரெட்ஸ் என்ற பெயரில் வீடியோ டிரெய்லர்களை அவர் வெளியிட்டு வருகிறார். முதல் வீடியோவில் குளிக்கும் காட்சியில் அவர் தோன்றினார். இதிலும் கூட அவர் முழுமையாக இல்லை. பிரா மற்றும் பேன்டீஸ் அணிந்து கொண்டு ஹேன்ட் ஷவருடன் குளிப்பது போல அதில் காட்சி அளித்தார் பூனம்.

இந்த நிலையில் தற்போது தனது பெட்ரூமில் ஸ்டிரிப்டீஸ் செய்தபடி காட்சி அளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் படுக்கை அறையில் உட்கார்ந்தபடியும், வளைந்து நெளிந்தபடியும், நாக்கைச் சுழற்றியபடியும், பறக்கும் முத்தங்களைக் கொடுத்தபடியும் சாக்ஸை கழட்டுகிறார், ஷூவைக் கழற்றுகிறார். படுக்கையில் புரளுகிறார், டான்ஸ் மூவ்மென்ட் கொடுக்கிறார், முன்னழகையும், பின்னழகையும் மடக்கியும், முடக்கியும் காட்டுகிறார். இன்னும் என்னென்னவோ செய்கிறார். ஒவ்வொரு உடையாக கழற்றிப் போடும் பூனம் இறுதியாக தனது கருப்பு நிற மேலுடையையும் கழற்றி விட்டு வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸுடன், பின்புறத்தைக் காட்டியபடி படுக்கையில் படுத்துக் கொண்டு விடை பெறுகிறார்.

இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ ...!

எரிச்சல் போக்கும் வாழைப்பூ ஒத்தடம்!


அன்றாடம் நாம் உணவுப்பொருளாகப் பயன்படுத்தும் வாழைப்பூவானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. துவர்ப்பு மிக்க இந்த வாழைப்பூவை கறியாக சமைத்து உண்ணலாம். பருப்புடன் கூட்டாக செய்தோ, கடலைப்பருப்புடன் சேர்த்து உருண்டை சேர்த்து வடையாகவோ சமைக்கலாம். 
வாழைப்பூ எவ்வாறு சமைத்துச் சாப்பிட்டாலும் அதன் மருத்துவ குணம் மாறுவதில்லை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் ஈ மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன.

கரு உண்டாகும்: நரம்பு நீக்கப்பட்ட வாழைப்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்து பச்சையாக அரைத்து அரை டம்ளர் அளவிற்கு சாறு எடுத்து சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும். வாழைப்பூவைத் தோலோடு இடித்து சாறு எடுத்து ஒரு டம்ளர் சாற்றினை மாதவிலக்கான மூன்று நாட்களுக்குபின் தொடர்ந்து மூன்று நாட்கள் பருகிவர திருமணமான பெண்ணுக்கு கரு உண்டாகும். வாழைப்பூச்சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து உட்கொண்டால் வெள்ளைப்படுதல், வயிற்றுக்கடுப்பு நீங்கும். இளம்பூவை புட்டுபோல அவித்து சாறு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து உட்கொள்ள பெரும்பாடு குணமாகும்.
வயிற்றுவலி நீங்கும்: வாழைப்பூவானது மடலுக்குள் சீப்பு, சீப்பாக அமைந்திருக்கும் ஒவ்வொரு பூவிலும் உள்ள நடு நரம்பையும், கண்ணாடி போன்ற சிறு மடலையும் நீக்கிவிட்டு, பூவை பயன்படுத்த வேண்டும். நரம்பு நீக்கிய வாழைப்பூவுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டாக சமைத்து உண்டு வந்தால் வயிறு தொடர்புடைய கோளாறுகள் நீங்கும். சூதக வயிற்றுவலி, பெருங்குடல்புண், ரத்த பேதி நீங்கும்.

மூலநோய் நீங்கும்: மூலநோய் உள்ளவர்கள் இப்பூவை அடிக்கடி சமைத்து உண்ணவேண்டும். வாழைப்பூ சாறு அரை ஆழக்கு காலை, மாலை சாப்பிட்டு வரவேண்டும். அந்த சமயத்தில் புளி, காரம் தவிர்த்து வந்தால் மூலநோய் மட்டுப்படும். வாழைப்பூச்சாறு நூறு மில்லி எடுத்து எடுத்து பாக்கு அளவிற்கு சீரகம் சேர்த்து அரைத்து கலக்கி குடித்துவர ரத்த மூலம் குணமடையும்.
காசநோய் குணமடையும்: அரை டம்ளர் வாழைப்பூச்சாறுடன் சிறிதளவு தேன், சிறிதளவு நெய் சேர்த்து மாலை நேரத்தில் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர காசநோய் குணமடையும். வாழைப்பூவையும், ஒரு தேக்கரண்டியளவு மிளகையும் சேர்த்து இடித்து சாறு பிழிந்து காலை மட்டும் ஒரு டம்ளர் சாறு பருகி வர இருமல் குணமடையும். கைகால்களில் எரிச்சல் இருந்தால் வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து எரிச்சலை தணிக்கலாம். வாழைப்பூச்சாறுடன் கடுக்காய்த்தூள் கலந்து பருகினால் ஆசனக்கடுப்பு நீங்கும். வாழைப்பூ கூட்டு, வாழைப்பூ வடை தொடர்ந்து சாப்பிட்டு வர குடல்புண் குணமடையும். வாழைப்பூவை எண்ணெய் சேர்க்காமல் சமைத்து உண்பது மிகவும் நல்லது. மொந்தன் வாழைப்பூ அதிக நன்மை தரும்.

மருமகள்கள் கொடுமைக்கு ஆளாகும் மாமியார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!


இந்தியா முழுவதும் வசிக்கும் மூத்த குடிமக்கள் பெரும்பாலோனோர் மகன் மற்றும் மருமகள்களின் கொடுமைக்கு ஆளாகின்றனர் என்று ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

பிறரின் தயவை நாடும் முதியவர்கள்: வாழ்க்கையின் கடைக்கோடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதியவர்கள் குழந்தைகளுக்கு சமமானவர்கள். தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளின் வாழ்விற்காக எண்ணற்ற தியாகங்களை செய்து அவர்களை ஆளாக்கி விட்டு கடைசி காலத்தில் அந்த பிள்ளைகளின் தயவினை எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர் முதியவர்கள்.
எஞ்சிய காலத்தில் பிறரை எதிர்பார்க்க வேண்டியதாலேயே எண்ணற்ற துயரங்களுக்கு அவர்கள் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹெல் ஏஜ் இந்தியா எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி 63 சதவிகிதம் முதியவர்கள் மருமகள்களால் கொடுமைப்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. 44 சதவிகிதம் பேர் மகன்களின் கொடுமைக்கு ஆளாவதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொடுமைக்கு ஆளாகும் முதியோர்களில் 52 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 66 சதவீதம் பேர் பொருளாதார ரீதியாக தங்கள் குடும்பத்தினரைச் சார்ந்து வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் தங்கள் அன்றாட செயல்பாடுகளுக்கு மருமகள்களையே நம்பியுள்ளனர். 85 சதவீதம் பேர் மருத்துவச் செலவுகளுக்கு மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்கின்றனர். 

நாட்டின் தலைநகரில் நூறு சதவிகித பாதிப்பு:  நாட்டின் தலைநகரான புதுதில்லியில் அனைத்து முதியவர்களும் தங்கள் மருமகளின் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வின் போது தெரிவித்தனர். அதாவது 100 சதவீதம் பேர் தங்கள் மருமகள்களால் கொடுமைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் தங்களுக்கு எதிரான கொடுமை அதிகரித்திருப்பதாக 41 சதவீத முதியோர் தெரிவித்துள்ளனர். தாங்கள் மென்மையான இலக்காக இருப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னையில் இரண்டு சதவிகிதம்: நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9 கோடி பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய மருமகள் அல்லது மகன்களால் கொடுமைக்கு ஆளாகின்றனர். நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் சுமார் 64.3 சதவீத வழக்குகள் மருமகளின் கொடுமை காரணமாகவே பதியப்பட்டுள்ளன. அதில் பெங்களூரில்தான் அதிகப்படியான மருமகள் கொடுமை நடைபெற்றுள்ளது. ஐதராபாத் நகரில் 38 சதவிகிதம் பேரும் போபாலில் 30 சதவிகிதம் பேரும், கொல்கத்தாவில் 23 சதவிகிதத்தினரும், சென்னையில் குறைந்த அளவாக 2 சதவிகிதத்தினரும் கொடுமைக்கு ஆளாகின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 72 சதவிகித முதியவர்கள் தங்களின் மகன்களின் வீட்டில் வசிக்கின்றனர். இதில் மும்பையில் மட்டும் அதிக அளவாக 86 சதவிகிதம் பேர் வசிக்கின்றனர். சென்னையில் 22 சதவிகித முதியவர்கள் தங்களின் மகள்களின் வீட்டில் வசித்துவருகின்றனர். முதியோருக்கு எதிரான கொடுமை என்பது மனதைக் காயப்படுத்தும் விதமாகப் பேசுவது மட்டுமின்றி உடல் ரீதியாகக் காயப்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முதியோர்களை சமூக, பொருளாதார, உடல்நல ரீதியாகக் காப்பாற்றுவது அவசியம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. என்னதான் துன்பத்திற்கு ஆளானாலும் 98 சதவிகித முதியவர்கள் தங்களின் துயரம் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்ததில்லை என்பதே நெகிழ்ச்சியான உண்மை. எனவே மற்றொரு பிள்ளைகளாக கருதவேண்டிய மூத்தவர்களை பாரமாக எண்ணாமல் அவர்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது இந்த ஆய்வு முடிவு.

2183ம் ஆண்டில் உலக மக்கள் தெகை 1,000 கோடியை எட்டும் ஐ.நா!


உலக மக்கள் தொகை அளவானது 2183ம் ஆண்டில் 1,000 கோடியை அதாவது 10 பில்லியன் அளவை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிக அளவில் காணப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி வளர்ச்சி விகிதம்: 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 120 கோடியாக உள்ளது. இது 2060ம் ஆண்டில் 170 கோடியை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான சீனாவின் மக்கள் தொகை 2030ம் ஆண்டிலேயே 140 கோடியை தொடும் என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
700 கோடியாக உயர்வு: இந்த நூற்றாண்டின் மத்தியில் 930 கோடியாக அதிகரிக்கும் என்றும் நூற்றாண்டின் இறுதியில் அதாவது 2183ம் ஆண்டில் 10.1 பில்லியனை எட்டும் என்றும் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் 39 நாடுகளும், ஆசியாவில் 6 நாடுகளும் லத்தீன் அமெரிக்காவைக் சார்ந்த நாடுகளிலும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிரடியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகையானது 700 கோடியை தொடும் என்றும் ஐ.நாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதும் நான் போரிடத் தயார் அன்னா!


நான் ராணுவத்தில் இருந்தபோதே பாகிஸ்தானுடன் போரிட்டவன். அப்போது என்னுடன் இருந்தவர்கள் எல்லாம் வீர மரணம் அடைந்து விட்டார்கள். நான் மட்டும் உயிர் தப்பினேன். இப்போது போர் வந்தால் கூட நான் பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போரிடத் தயார் என்று வீராவேசமாக கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.

காஷ்மீர் குறித்து அன்னா குழுவைச் சேர்ந்த பிரஷாந்த் பூஷன் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதையடுத்து டெல்லியில் அவரது அலுவலகத்தில் வைத்தே பூஷன் தாக்கப்பட்டார். அதேபோலே அரவிந்த் கேஜ்ரிவாலும் நேற்று தாக்கப்பட்டார். இந்த நிலையில் அன்னா ஹஸாரே, காஷ்மீர் குறித்த தனது கருத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் மெளன விரதம் இருந்து வருவதால் கடிதம் மூலம் தனது கருத்தை மக்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் அன்னா கூறியுள்ளதாவது எனதருமை சகோதரிகளே, சகோதரர்களே, நமஸ்கார். சிலர் உண்மை நிலவரம் தெரியாமலேயே காஷ்மீர் குறித்து பொருத்தமில்லாத கருத்துக்களைப் பேசி வருகிறார்கள். நான் இந்திய ராணுவத்தில் இருந்தவன் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். இந்தியா-பாகிஸ்தான் போரின்போது ஒரு வீரனாக நான் தீவிரமாக செயல்பட்டவன் என்பதை அவர்கள் அறியத் தவறி விட்டார்கள். என்னுடன் எல்லைப் போரில் ஈடுபட்ட பலரும் வீர மரணத்தைத் தழுவி விட்டனர். ஆனால் மட்டும் ஆச்சரியகரமான வகையில் தப்பினேன். அப்போதுதான் நான் முடிவெடுத்தேன், எனது மீதமுள்ள வாழ்க்கையின் இறுதி வரை நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என்று. பாகிஸ்தான் புல்லட் எனக்குப் பரிசாக விட்டுச் சென்ற தழும்பை இப்போதும் கூட எனது நெற்றியில் பார்க்கலாம். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, அது அப்படியேதான் இருக்கும் என்ற எனது ஆழமான கருத்துக்கு இது ஒன்றே சிறந்த சாட்சியாகும்.

இப்போதும் கூட பாகிஸ்தான் போர் வந்தால் இந்தியாவுக்காக போர்க்களம் செல்ல நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் சிலர் வெறுமனே பேச மட்டுமே செய்கிறார்கள், களத்தி்ல இறங்கி போரிடத் தெரியாதவர்கள் அவர்கள். இது துரதிர்ஷ்டவசமானது கே.பி. ஹஸாரே (அன்னா) என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.

தனது கடிதத்தில் காஷ்மீர் குறித்து பிரஷாந்த் பூஷன் தெரிவித்த கருத்துக்கள் தவறு என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் ஹஸாரே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஹஸாரே குழுவினருக்கும், பூஷனுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரித்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

இதே நாள்...


  • அல்பேனியா - அன்னை தெரசா தினம்
  •  நியுயே - அரசியலமைப்பு தினம்(1974)
  •  மார்டின் லூதர், இறையியலுக்கான டாக்டர் பட்டம் பெற்றார்(1512)
  •  சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)
  • LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...