|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 October, 2011

2183ம் ஆண்டில் உலக மக்கள் தெகை 1,000 கோடியை எட்டும் ஐ.நா!


உலக மக்கள் தொகை அளவானது 2183ம் ஆண்டில் 1,000 கோடியை அதாவது 10 பில்லியன் அளவை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிக அளவில் காணப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி வளர்ச்சி விகிதம்: 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 120 கோடியாக உள்ளது. இது 2060ம் ஆண்டில் 170 கோடியை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான சீனாவின் மக்கள் தொகை 2030ம் ஆண்டிலேயே 140 கோடியை தொடும் என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
700 கோடியாக உயர்வு: இந்த நூற்றாண்டின் மத்தியில் 930 கோடியாக அதிகரிக்கும் என்றும் நூற்றாண்டின் இறுதியில் அதாவது 2183ம் ஆண்டில் 10.1 பில்லியனை எட்டும் என்றும் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் 39 நாடுகளும், ஆசியாவில் 6 நாடுகளும் லத்தீன் அமெரிக்காவைக் சார்ந்த நாடுகளிலும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிரடியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகையானது 700 கோடியை தொடும் என்றும் ஐ.நாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...