|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 January, 2014

21-ல இருந்து திண்டாட்டம்!

ம்ம பயலுக மாசக் கடைசியில பண்ற அட்ராசிட்டிஸ் இருக்கே..! ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பப்ப்ப்பா..! (நான் என்னையும் சேர்த்துச் சொன்னேன்) வாங்க ஒரு ரவுண்ட் பார்ப்போம்.
ஆபீஸ்ல எல்லோரும் ஒண்ணா டீ குடிக்கப் போனா பெரும்பாலான பக்கிகள் ஸ்லீப்பர் செல்லா மாறிடுவாய்ங்க. 'ரொம்ப சூடா இருக்குல்ல கோவிந்தா?’ எனச் சொல்லாத குறைதான். ஆறின டீயை நல்லா ஆத்தி ஆத்தி ஊதி ஊதிக் குடிப்பார்கள். சும்மா பர்ஸ் எடுக்கிற மாதிரி சீன் போட்டுட்டு, 'அட என்னங்க நீங்க... எப்போன் னாலும் நீங்களே பே பண்றீங்க’ என அலுத்துக்கொள்வது மாசக் கடைசி ஸ்டைல்.
'பர்ஸை வெச்சிட்டு வந்துட் டேன்’, 'பேன்ட்டை மாத்திப் போட்டு வந்துட்டேன்’, 'ஏ.டி.எம் ஒர்க் ஆகலை,’ 'நாளைக்குப் பணம் ஊர்ல இருந்து போட்டு விட்ருவாங்க’ எனக் கலவையாகப் பொய் சொல்வது மாசக் கடைசிக்காரர்களின் அடையாளம். அடுத்த தபா நண்பர்களோடு வெளியே கிளம்பும்போதே,  'எல்லோரும் பர்ஸ் எடுத்துட்டு வந்தீங்களா?’ எனக் கேட்டு வெளியே கிளம்புவது உங்கள் பர்ஸுக்குப் பாதுகாப்பு.
நடமாடும் ஏ.டி.எம்-மாய் இருக்கும் ஆபீஸ் ஆபத்பாந்தவனை இனம் கண்டு வைத்திருப்பார்கள். 'ஒரு 100 ரூபா கொடுங்க, 200 ரூபாவாக் கொடுத்தாக் கூட பரவால்ல. சம்பளம் வந்ததும் தந்திடுறேன்’ என அட்டாக் கொடுப்பார்கள். 1-ம் தேதி அந்த ஆளா வெட்கத்தை விட்டுக் கேட்டாலும்கூட, 'ஓ... 200 ரூபாயா வாங்கினேன். இருக்காதே... 100-னு நினைக்கிறேன். ஸாரி மறந்துட்டேன்’ என டயலாக்கையும் ஃபேஸ் எக்ஸ்பிரஷனையும் மாற்றிப்போட்டு டரியலாக்குவார்கள்.
பெரும்பாலும் 100 ரூபாய் மட்டுமே அக்கவுன்டில் பேலன்ஸ் இருக்கும். நொந்து நூடுல்ஸா இருக்கும்போது பைக் பஞ்சராகும். பெட்ரோல் ரிசர்வில் இருக்கும். சோப் தீரும். டூத் பேஸ்ட்டை ரோடு ரோலரில் வைத்துத் தேய்த்ததைப்போல பிதுக்குவார்கள்.
'சாமியே சப்பரத்துல போச்சாம். பூசாரிக்கு புல்லட் கேட்குதாம்’னு சொல்ற மாதிரி நாமளே கடன் வாங்க ஆள் தேடிட்டு இருக்கிறப்போ அசால்ட்டா, '500 ரூபா கிடைக்குமா பாஸ். 200 ரூபாயா இருந்தாக்கூட ஓகே. ஐ வில் மேனேஜ்’ என்று பீட்டர் விட்டுக் கடன் கேட்பார்கள் சிலர். நம்மளை நம்பிவந்து கடன் கேட்கும் அந்த ஆட்டை நினைத்து சிரிப்பதா அழுவதா எனக் குழம்பித் தவிப்பீர்கள்.
எஸ்.எம்.எஸ்-ல 'கிரெடிட்டட்’னு எப்போ மெசேஜ் வரும்னு அடிக்கடி ஓப்பன் பண்ணிப் பார்ப்போம். சில பக்கி சும்மானாச்சுக்கும் 'சேலரி கிரெடிட்டட்’னு அனுப்பிவெச்சு விளையாட்டுக் காட்டுவாய்ங்க.
ஒவ்வொரு மாசம் ஆரம்பிச்சதும் பொறுப்பு பொன்னம்பலமாய் 500 ரூபாய் நோட்டை எடுத்து 'மாசக் கடைசியில யூஸ் பண்ணுவோமுடா’னு பர்ஸுக்குள்ள ஒதுக்குப்புறமான ஏரியாவில் பதுக்கிவைப்பாய்ங்க. ஆனா அதை பானிபூரி கடையில் முதல் வாரத்திலே மாற்றிச் செலவு பண்ணுகிற அளவுக்கு பிஞ்சு நெஞ்சுக்காரய்ங்களா இருப்பாய்ங்க. செலவு பண்ணினதை மறந்துட்டு பர்ஸைக் கவிழ்த்துப்போட்டுக் கிணத்தைக் காணோம்கிற மாதிரி இல்லாத 500 ரூபாயைத் தேடோ, தேடுனு தேடுவாய்ங்க.  
தாடியை ஷேவ் பண்ண மாட்டாய்ங்க. செல்ஃப் ஷேவிங்கிற பேர்ல குதறிவெச்சிருவாய்ங்க. மாசத்தோட துவக்கத்துல க்ளீன் ஷேவ் பண்ணி சிம்பு ஃபேனா இருக்கிறவனுங்க மாசக் கடைசியில டி.ஆர் ஃபேனா மாறிடுவானுங்க.
24 மணி நேரமும் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்களோட, 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ என விடிய விடியக் கடலை வறுத்தவனுங்க மாசக் கடைசியில சிங்கிள் எஸ்.எம்.எஸ்-க்காக தேவுடு காத்துக் கிடப்பானுங்க.
மாச ஆரம்பத்தில் சரக்குல ஆரம்பிச்ச சண்டை, மாசக் கடைசியில் சிகரெட்ல ஒண்ணா சேருவாங்க. நட்பெல்லாம் மாசக் கடைசியில வலுப்படும். டீ கூட 1/2, 1/3, 1/4னு ஏகப்பட்ட தலைகீழ் விகிதங்களில் சாப்பிடுவாய்ங்க.
'நான் சரக்கடிக்கிறதை விட்டுட்டேன் மச்சி’னு சும்மா பீலா விடுவாங்க. அப்படியே அடிச்சாலும் 'கொஞ்சம் கொஞ்ச மாத்தான் குடியை நிறுத்தணுமாம். அதனால கட்டிங்ல பாதி சிட்டிங்’னு டயலாக் பேசி அளவாக் குடிக்கிறவங்க மாதிரி சீன் போடுவானுங்க.
சும்மாவே இந்த பேச்சிலர்ஸ் துவைக்க மாட்டாய்ங்க. மாசக் கடைசியில இருக்கிறதுலேயே அழுக்குக் கம்மியா இருக்கிற சட்டை பேன்ட்டைப் போட்டு பெர்ஃபியூம் அடிச்சு மேட்ச் பண்ணிக்குவாய்ங்க.
முக்கியமான மேட்டர் நண்பனே... ஆனாலும் யாரை நம்பியும் மாசக் கடைசியில் பைக்ல லிஃப்ட் கேட்டு பின்னாடி ஏறிப் போக முடியாது. ஒண்ணு பெட்ரோல் போடச் சொல்வாய்ங்க. இல்லைனா தள்ள விட்ருவாய்ங்க. மாச ஆரம்பத்தில் 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட ஆளுங்க மாசக் கடைசியில் பாட்டில்ல பெட்ரோல் வாங்கி 50, 30 னு போட ஆரம்பிச்சிடுவானுங்க.
பேச்சுலர்கள் மாசத் துவக்கத்தின் முதல் வார ஞாயிற்றுக் கிழமைகளில் பிரியாணி செய்து ஏரியாவையே மணக்கவிடுவானுங்க. ஆனா மாசக் கடைசி வாரத்தில் சோற்றை மட்டும் பொங்கித் தயிர் பாக்கெட்டும் ஊறுகாயும் என சிம்பிளாய் டின்னரை முடித்துவிடுவார்கள்.
உப்புமா என்ற உலகின் புராதன உணவைக் காலை உணவாகப் பத்து நாட்கள் வைத்து பசியைப் போக்கிக்கொள்வார்கள்.
மொத்தத்தில் மாசக் கடைசியில் பைசா வெச்சிருக்கிறவன்தான் ராஜா பாஸ்!

ஐ சப்போர்ட்அழகிரி‬...!

என்னாச்சு...

கோவம் வந்துச்சு... 
பேட்டி கொடுத்தேன்... 
அப்பா வீட்டுக்கு கூப்பிட்டாரு...
ஓ,,,கட்சியை விட்டு நீக்கிட்டாங்களா... 
தம்பி ஏதாவது சொல்லி இருப்பான்....
அது ஒண்ணும் பிரச்சினை இல்லை...
ஆட்டோமேடிக்கா அதுவே சரியாடும் !!!

இதை யார் கேட்பது.....?

இதை யார் கேட்பது.....? அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி விட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில் இருந்தனர். 

அந்த மோட்டலின் கல்லாவில் இருந்தவர், அவரின் அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து “போ’ என்றார். உடனே அந்த நபர் கையில் ஒரு காலி தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு அந்த கேனால் பஸ்ûஸ ஓங்கி ஓங்கி தட்டியபடியே சுற்றி சுற்றி வந்தார். அவ்வளவுதான், நல்ல தூக்கத்தில் டம் டம் என்று தட்டும் சத்தம் கேட்டு அனைத்து பயணிகளும் வாரிச் சுருட்டி எழுந்தனர். தரையில் படுத்திருந்த குழந்தை வீறிட்டு அழும் சத்தம், கீழே அவர்கள் கதற விடும் பாட்டுச் சத்தத்தையும் மீறி கேட்டது. சரி, கீழே இறங்கி விட்டோமே ஒரு டீ சாப்பிடுவோம் என்று நினைத்து “டீ எவ்வளவு’ என கேட்டேன். “பதினைந்து ருபாய்’ என்றனர். டீ குடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிஸ்கெட் வாங்கலாம் என்று போனேன். தரமான நிறுவன பெயர்களில் ஒன்றிரண்டு எழுத்துகளை விழுங்கிவிட்டு அதே போன்ற பேக்கிங்கில் உள்ளூர் தயாரிப்பு பிஸ்கெட்களாக வைத்திருந்தனர். உதாரணமாக, மில்க் பிக்கீஸ் என்பதற்கு பதில் மில்க் பிக்ஸ் என ஓர் ஆங்கில எழுத்தை தவிர்த்துவிட்டு, கம்பெனி பிஸ்கெட் போன்ற பேக்கிங்கில் விற்றனர். 

அதையும் வாங்க மனமின்றி யோசித்தபடி நின்றேன். அப்போது பஸ்ஸில் வந்த கைக்குழந்தையின் தந்தையான அந்த இளைஞர் கடைக்காரருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “பஸ்ஸில் தட்டுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நான் போலீஸில் புகார் செய்வேன்’ என்ற ரீதியில் அவர் பேச… இவரைப்போல எத்தனையோ பேரை பார்த்துவிட்ட மிதப்பில் கடைக்காரர் பேச… இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. பிரச்னை அதிகரித்தால் பயணத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற சுயநலம் தோன்றவே, அந்த இளைஞரைச் சமாதானம் செய்து பஸ்ஸில் ஏற்றி விட்டேன். சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நடத்துநரிடம் பேசினேன். “உங்களுக்கு ஓசியில் உணவு கிடைக்கிறது என்பதற்காக இப்படி பயணிகளின் உயிருடன் விளையாடு கிறீர்களே” என்று நான் துவங்க… 

தொடர்ந்து ஒவ்வொரு பயணியும் சகட்டுமேனிக்கு ஓட்டுநரையும் நடத்துநரையும் வறுத்தெடுக்க துவங்கினர். சற்று நேரம் பேசாமல் இருந்த நடத்துநர் பேசத் தொடங்கினார்.“இவ்வளவு பேர் பஸ்சுல இருந்து இறங்கினீங்களே நாங்க என்ன சாப்பிட்டோம்னு பாத்தீங்களா…. வெறும் டீ தான் சாப்பிட்டோம். இங்க இருக்கற பொருள் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும். அதுனால இதுமாதிரி இடங்கள்ல நாங்க சாப்பிடவே மாட்டோம்… அப்புறம் ஏன் நிறுத்துறோம்னு அடுத்த கேள்வி கேப்பீங்க… இங்க நாங்க நிறுத்தலேன்னா எங்களுக்கு மெமோ கொடுப்பாங்க… காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சுக்கங்க’ என்றார்… 

அவர் தரப்பில் இருக்கும் நியாயம் புரிந்தது. ஆனால், என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. தூங்கும் பயணிகளை எழுப்ப காலி டப்பாவால் பஸ்ûஸ தட்டும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? ஒரு நிறுத்தத்தில் பஸ்ûஸ விட்டு பயணிகள் இறங்கும் முன் பஸ் புறப்பட்டால் ஓட்டுநரை எச்சரிக்கும் விதத்தில் ஒரு பயணி லேசாக கையால் பஸ்ûஸ தட்டினாலே கோபித்துக் கொள்கிற ஓட்டுநரும் நடத்துநரும் இந்த நபர் காலி பாட்டிலால் தொடர்ந்து சத்தமாக தட்டுவதை தங்கள் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லலாமே… உணவகத்தை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். நியாயமான விலையில் உணவையும் பொருள் களையும் தரமாக கொடுக்கலாமே.

ரயில் நிலையங்களில் உள்ளது போல, இதுபோன்ற உணவகங்களிலும் விலை, எடை போன்றவற்றை முறைப் படுத்தலாமே. உணவுப் பொருள் தரம், போலி தயாரிப்புகள் தடுப்பு, தரக் கட்டுப்பாடு என விதவிதமான அரசுத் துறைகள் இருந்தும் அவற்றின் பார்வையில் இந்த மோட்டல்கள் படவில்லையா?… இப்படி பல கேள்விகள்… எல்லாமே விடையில்லா வினாக்கள்.

அப்ப மூணு முதலாளியாகுதே!

ஆரம்பிச்சுட்டாங்கள்ல...: 
போஸ்டரால் ஒரு கட்சி கலகலத்தது என்றால் அது சந்தேகமே இல்லாமல் தி.மு.க.,வாகத்தான் இருக்கும். மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மதுரையில் போஸ்டர் ஒட்டியவர்களை சஸ்பென்ட் செய்து கையெழுத்திட்ட பேனா மையின் ஈரம்கூட காய்ந்து இருக்காது, அடுத்து அதே போல ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.இரண்டு வேலை செய்யலாமாம் ஆனால் இரண்டு முதலாளிகள்ட்ட வேலை செய்யமுடியாதாம்.போஸ்டர் படி பார்த்தாலும் அப்ப மூணு முதலாளியாகுதே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...