|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 July, 2011

ஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை!

அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும். அதுவும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை பித்ரு கடன் செய்ய ஏற்ற நாளாளும் அன்றைய தினம் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் “பிதிர் காரகன்” என்கிறோம். சந்திரனை “மாதுர் காரகன்” என்கிறோம்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் தோஷங்களில் இருந்து தப்ப முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ரமேஸ்வரம் அக்னி தீர்த்தம்: நேற்று ஆடி அமாவாசை. ஆடி அமாவாசை தினத்தன்று எள்ளும் அரிசியும் கலந்து மூத்தோர்களை வணங்கும் இந்துக்கள் அவற்றை கடலில் இட்டு நீராடி விட்டு பின்னர் முன்னோர்கள் ஆத்மா சாந்திக்காக 24 தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுகின்றனர். முக்கடலும் சங்கமிக்கும் குமரியிலும், நாகப்பட்டணம் மாவட்டம் கோடியக்கரையிலும் ஏராளமானோர் புனித நீராடுவது மரபு.

ஆயுள் பலம் கூடும்: ஆடி அமாவாசை விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இதற்கு சுவையான கதை ஒன்றும் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் அழகாபுரி என்ற பட்டணத்தை கத்தலைராஜா என்ற அரசன் ஆண்டுவந்தான். பல புண்ணிய தலங்களுக்கு சென்று விரதம் மேற்கொண்டு புண்ணிய நதிகளில் நீராடியதன் பலனாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு அழகேசன் என பெயரிட்டு சீராட்டி வளர்த்தான் கத்தலைராஜா. அந்த மகனுக்கு 16 வயதில் ஆயுள் முடியும் என்று ஒருநாள் காளி மாதாவிடமிருந்து வாக்கு வெளிப்பட்டது. அதைக்கேட்ட மன்னன் தன் மகனுக்காக தன்னுயிரை இழக்கத் துணிந்தான்.

அப்போது மீண்டும் காளிமாதா தோன்றி “உன் மகன் இறந்ததும் சடலத்திற்கு உலகிலேயே நல்ல குணங்கள் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து வை. அவளது மாங்கல்ய பலத்தால் உன் மகன் மீண்டும் உயிர் பெற்று எழுவான், என்றாள்”.

சிவன் பார்வதி: காலமும் விரைந்து ஓடியது. காளியின் வாக்குப் படியே 16 வயதில் அழகேசன் மரணமடைந்தான். இதனையடுத்து சடலத்திற்கு பெண்கொடுப்பவர்களுக்கு அவ-ருடைய குடும்பத்திற்கு தேவையான அளவு செல்வம் தரப்படும் என்று மன்னன் அறிவிக்கச் செய்தான். அப்போது கிராமத்தில் வசித்து வந்த தேவசர்மா என்பவரின் பெண் குழந்தை கங்காவை அவளுடைய அண்ணிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு இளவரசனின் சடலத்திற்கு திருமணம் செய்து தர முன்வந்தனர்.

மறுநாள் கங்கா அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். தலைகுனிந்த வண்ணம் உள்ளே சென்ற கங்காவை மணவறையில் அமரவைத்தனர். அவளது அருகில் சடலம் வைக்கப்பட்டது. அக்கால மன்னர் முறைப்படி கண்ணைக்கட்டிதான் திருமணம் செய்ய வேண்டும் என்று அவளிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கண்ணைக்கட்டிவிட்டனர். திருமணம் நடந்தது. ஒரு பல்லக்கில் கங்காவையும் சடலத்தையும் ஏற்றி காட்டில் கொண்டு விடக்கூறினர். பல்லக்கு இறக்கப்பட்டதும் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது. தனது கணவன் அசதியின் காரணமாக உறங்குகிறான் என கங்கா நினைத்துக்கொண்டாள். நீண்ட நேரமாகியும் கணவன் எழவில்லை. எனவே அவனை மெதுவாக தொட்டு எழுப்பினாள். அவனை லேசாக அசைத்துப்பார்த்தாள். எவ்வித உணர்வும் இல்லாததால் அவளுக்கு நிலைமை புரிந்துவிட்டது.

உயிர் மீண்ட அழகேசன்: தனக்கு செய்யப்பட்ட மோசடியை அறிந்து கண்ணீர்விட்டாள். அப்போது வான் வழியே சிவனும் பார்வதியும், சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காதில் கங்காவின் கதறல் கேட்டது. இருவரும் அவளிடம் வந்தனர். பார்வதிதேவியின் காலில் விழுந்து புலம்பினாள் கங்கா. அத்துடன் சிவபெருமானின் கால்களை கட்டிக்கொண்டு தன் கணவனுக்கு உயிர் தராவிட்டால் அவ்விடத்தைவிட்டு அகலவிடமாட்டேன் என சூளுரைத்தாள். சிவன் அவளிடம், மகளே! கவலைப்படாதே! அழுகையை நிறுத்து. உன் முன்வினைப்பயனால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தையும் உன் வீட்டிலேயே தொலைத்து விட்டாய். இன்று ஆடி அமாவாசை. இந்நாளில் இறைவனை நினைத்து வழிபடுவோருக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும். பெண்கள் சுமங்கலிகளாய் இருக்க அருள்செய்யும் விரதநாள் இது. உன் கணவன் உடனே எழுவான், என்றார். அழகேசனும் எழுந்தான்.

உடனே பார்வதிதேவி, கங்காவிடம், இந்த வரலாற்றை படிக்கும் அனைத்து பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் சித்திக்கும். ஆடி அமாவாசைக்கு முதல்நாள் இக்கதையை ஒருவர் சொல்ல மற்றவர் கேட்க வேண்டும், என அருள்பாலித்து விட்டு மறைந்தாள்.

அமைதி தரும் அவரைக்காய்!

சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி

என்று அவரைக்காய் பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்பே தேரையர் குணபாடத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

மருத்துவ குணம்; அவரைக்காய் தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் தாவரமாகும். வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.

உடலுக்கு வலிமை: அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

ரத்தத்தை சுத்தமாக்கும்: அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

நீரிழிவை குணமாக்கும்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும். மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்

சரும நோய்களை குணமாக்கும்: முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும். முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

தமிழ் இனத்தை அழித்த குற்றத்துக்கு துணை போனது இந்தியா என வரலாறு கூறும்-இலங்கை எம்.பிசுரேஷ் பிரேமச்சந்திரன்!

 ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும். இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்று ஈழத் தமிழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சென்னையில் சிறப்பு மாநாடு நடந்தது. அதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, இலங்கையில் போர் முடிந்துவிட்டது. ஆனால் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. தற்போது தான் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. 
தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றோ, சம உரிமை வழங்க வேண்டும் என்றோ இலங்கை அரசுக்கு நினைப்பே இல்லை. 

அன்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் கட்சி நினைத்தது. ஆனால் அதன் நினைப்பு பொய்யாகிவிட்டது. தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமோக வெற்றி பெற்றுத் தந்தனர்.

இலங்கை அரசு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடன் தான் செயல்படுகிறது. தமிழர் பகுதிகளை முதலில் ராணுவமயமாக்குவது, இரண்டாவதாக புத்தமயமாக்குவது, இறுதியாக சிங்களமயமாக்குவது தான் அதன் திட்டம். தமிழர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கவோ, சம உரிமை வழங்கவோ, சுமூகமான அரசியல் தீர்வு காணவோ இலங்கை அரசுக்கு துளியும் விருப்பமில்லை.

இந்நிலையில் இலங்கை அரசு எந்த நாடு சொல்வதையும் கேட்கத் தயாராக இல்லை. ஆனால் இந்தியா சொல்வதை அதனால் மறுக்க முடியாது. தமிழர்களுக்கு அதிகாரப் பங்கு வாங்கிக் கொடுக்க இந்தியாவால் மட்டுமே முடியும். ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும். இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்றார்.

நித்தியானந்தா இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்டும்: இந்து மக்கள் கட்சி !

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம்,நித்தியானந்தாவை கைது செய்யக் கோரி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் நித்தியானந்தாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் நித்யானந்தா தொடர்ந்து அவமதித்து வருகிறார். குண்டலினி யாகம் என்ற பெயரில் தாய்மார்களை அந்தரத்தில் பறக்க விடுவதாக சொல்லி மிகப்பெரிய கேலிக் கூத்தை பிடதி ஆசிரமத்தில் நடத்தி விட்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார். நித்தியானந்தா இந்து மதத்தை விட்டே வெளியேற வேண்டும். 

இந்து மக்கள் கட்சிக்கும், இந்து இயக்கங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ரவுடி சாமியாராக உருவாகி இருக்கிறார் நித்தியானந்தா. கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார். நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

வாழ்ந்த தெய்வம் ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய பெயரை பரமஹம்ஸ என்ற எழுத்தை பரமஹம்ஸ நித்யானந்தர் என்று நித்யானந்தர் தன் பெயருக்கு முன்னர் வைத்துக்கொண்டிருக்கிறார். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பரமஹம்ஸ நித்தியானந்தர் என்று நித்தியானந்தர் இனி போடுவாரானால், பிடதி ஆசிரமம் இந்து மக்கள் கட்சியினரால் முற்றுகையிடப்படும் என்றார்.

அதிகளவில் காலியாக உள்ள பொறியியல் இடங்கள்!


தமிழகத்தில் 92 ஆயிரம் இன்ஜினியரிங் சீட்-கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.பொறியியல் கல்லூரியில் நடந்தபயிற்சி முகாமை துவக்கி வைத்துஅவர் கூறியதாவது: &'தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2.20 லட்சம்சீட்டுக்கள் உள்ளனகவுன்சிலிங் மூலம் ஒரு லட்சத்து 47 ஆயிரம்பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்மேனேஜ்மென்ட் கோட்டாவிற்கு 73ஆயிரம் சீட்-கள் ஒதுக்கப்பட்டுள்ளனஇதுவரை 55 ஆயிரம் பேர்தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 92 ஆயிரம் சீட்கள் காலியாகஉள்ளனதற்போது 22 நாட்கள் கவுன்சிலிங் முடிந்துள்ளதுஇன்னும்13 நாட்கள் கவுன்சிலிங் நடக்க உள்ளதுஇது முடிந்த பின்பு 30 ஆயிரம்சீட் எப்படியும் காலியாக இருக்கும்இதனால்துணை கவுன்சிலிங்ஆக., 12 ல் நடக்க உள்ளது.
துணை கவுன்சிலிங்கில் இதுவரை விண்ணப்பிக்காதவரும்பிளஸ் 2 ல் பெயிலாகிதேர்வானவர்களும்விண்ணப்பிக்கலாம்.சி.., பிரிவை 46 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்இதையடுத்துகம்ப்யூட்டர்மெக்கானிக் பிரிவை தேர்வு செய்கின்றனர்இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முதலாமாண்டுவகுப்புகள் ஆகஸ்ட் 22 முதல் துவங்குகிறது

பொருளாதார தாராளமயம் என்ற சூறாவளி!

ஆனால், பொதுவாகவே இந்த தாராள பொருளாதாரமயம் என்ற கோட்பாடு உலகின் எல்லா நாடுகளையும் அமெரிக்க கடன் சூறாவளி பாதிப்பில் இழுத்து, அலைக்கழிக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் நேச நாடாக செயல்படும் சீனா, தன் முடிவைச் சொல்லாமல் சமாளிக்கிறது. அதற்கு, அங்கு நடைபெறும் ஜனநாயகமற்ற ஆட்சி கவசமாக உள்ளது.விலைவாசி உயர்வு ஏன்?
கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார தாராளமயம் என்ற சூறாவளி, எல்லா நாடுகளையும் ஓரளவு பாதித்திருக்கிறது. தற்போது கடன் சுமையில் அமெரிக்கா தத்தளிப்பது எல்லாரும் விமர்சிக்கும் விஷயம். மிகப்பெரிய வளர்ந்த நாடான அமெரிக்கா, அதற்கு தீர்வு காண முயல்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் பலவும், மூச்சு முட்டும் பொருளாதார அபாயத்தை தற்போது சந்தித்து வருகின்றன.அடுத்த 10 ஆண்டுகளில், அமெரிக்கா 2.7 டிரில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையை சமாளித்தாக வேண்டும். அதற்கு வழிகாணும் வகையில், செலவினம் குறைப்பது, வரியைக் கூட்டுவது குறித்து, அங்கே ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஆகியவை ஆலோசித்து வருகின்றன. ஆனால், இதில் இக்கட்சிகள் தங்களுக்கு உள்ள ஆதாயத்தைக் கருதுவதால் முடிவு எடுக்க தாமதம் ஆகிறது. 

இந்தியாவில் தற்போது இருக்கும் அளவுகடந்த பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலைஉயர்வுக்கு இந்தச் சுழலும் ஒரு காரணம். ஏதோ தேவை அதிகரித்து, அதனால் பொருட்கள் விலை உயர்ந்தது என்ற அடிப்படை பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையில் தற்போது, விலை உயர்வு விண்ணை முட்டவில்லை. இது அபாய அறிகுறி.நாட்டின் மொத்த வளர்ச்சியைக் கணக்கிட்டு, அதில் 10 சதவீத அளவுக்குமேல் நிதிப்பற்றாக்குறை வந்தால், அந்த நாடு பொருளாதாரத்தில் தள்ளாட்டம் போடுகிறது என்று அர்த்தம். அந்த நாடு தலைகீழாக நின்றாலும், எங்குமே கடன் வாங்க முடியாது. ஆனால், இன்று அந்த நிலையில் இருக்கும் அமெரிக்கா, எளிதாக தன் பிரச்னைகளைச் சமாளிக்க முயற்சிக்கிறது. காரணம், அது வலுவான நாடு.

டாலர் - யூரோ போர்:அமெரிக்க டாலர், அதற்கு அடுத்த இடத்தில் இருந்த "யூரோ' என்ற ஐரோப்பிய கரன்சி ஆகிய இரண்டுக்கும் இடையே, தற்போது பெரிய போர் நடக்கிறது. அடுத்த சில நாட்களில், யூரோ மேலும் பலமிழக்கும். டாலருக்கு பதிலாக, சுவிஸ் பிராங்க் கரன்சி, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து வரக்கூடிய அபாயத்தைத் தவிர்க்கும் போக்கு வந்து விட்டது. தற்போது காணப்படும் அபாயத்தில் தங்கம், கச்சா எண்ணெய், கோதுமை, சர்க்கரை, சோயாபீன்ஸ் ஆகியவற்றின் விலை, விநியோகம்- தேவை என்ற 
கோட்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை.

அபாயத்தில் கிரீஸ், இத்தாலி:ஐரோப்பிய நாடுகளில், கிரீஸ் மிக மோசமாக இருக்கிறது; இத்தாலிக்கு அதிக அபாயம் காத்திருக்கிறது. ஜெர்மனி சிரமப்படுகிறது. போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இந்த பொருளாதார இருள் சூழ்ந்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் என்பதில் உள்ள 17 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூடி ஆலோசித்தனர். அதில், பெரிய அளவில் முடிவு ஏற்படவில்லை. கிரீஸ் தடுமாற்றத்தை எந்த அளவு குறைப்பது என்று பேசிய அவர்கள், முடிவு எடுக்காமல் பின்வாங்கினர். அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில் பெரிய நாடுகள் வரிசையில், மூன்றாவது நாடான இத்தாலி கடன் சுமையில் தவிப்பது கண்டு அச்சப்பட்டனர்.

நிபுணர் கருத்து:இன்று எல்லாரும் அமெரிக்காவின் கடன் சுமை பாதிப்பு பற்றி பேசும் போது, ஐரோப்பிய நாடுகள் தவிப்பு குறித்து, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறிய கருத்து இதோ:உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் (ஐ.எம். எப்.,) தந்த நிதியுதவிகள் எகிப்து, டுனீஷியா ஆகிய நாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனாலும், எல்லாத் தரப்பையும் அந்த வளர்ச்சி சென்றடையவில்லை. மத்திய தர மக்களைக் கூட முன்னுக்குக் கொண்டு வரவில்லை.தனியார்மயம் ஊழலை வளர்த்து, புதிய பணக்காரர்களை உருவாக்கி, முடிவில், அதிக வேலையின்மையை ஏற்படுத்தி விட்டது. பொதுவாக, உலகமயமாக்கல் தத்துவம், ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழவைத்து விட்டது.

உலகின் ஒரு பக்கம் பாதிப்பு என்றால், அடுத்த பக்கத்தில் அது பிரதிபலிக்கிறது.அமெரிக்காவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், அங்கே தொழில்துறை தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தற்போது ஐரோப்பிய நாடுகளின் தள்ளாட்டம், அமெரிக்காவை மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளையும் பாதிக்கும். அரபு நாடுகளின் மகிழ்ச்சியை பாதிக்கும். அங்கிருந்து பலர், வேலை வாய் ப்புகளை இழந்து ஐரோப்பிய நாடுகளுக்கு திரும்பலாம்.தற்போதைய பிரச்னைகளுக்கு சீர்திருத்த நடவடிக்கைகள் பலன் தரலாம் என்றாலும், அதற்கான பலன் கிட்ட, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.இவ்வாறு, நிபுணர் ஸ்டிக்லிட்ஸ் கூறியுள்ளார். இது ஐரோப்பிய நாடுகளின் எதிர்கால பொருளாதார நிலை அபாயமான சூழ்நிலையில் இருக்கிறது என்பதை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது

பா.ம.க.,வின் சுயலாபக் கணக்கு !

சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., அணியில் போட்டியிட்டு படுதோல்வி கண்டதால், அந்த அணியிலிருந்து விலகி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட பா.ம.க., அதிரடி முடிவு எடுத்துள்ளது.பொதுக்குழுவில், கட்சிப் பிரமுகர்கள் தி.மு.க., வை கடுமையாக விமர்சித்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மட்டும், தி.மு.க.,வை விட்டு வெளியேறும் முடிவை பொறுமையாக எடுக்க விரும்பினார். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் ஆதரவாளர்கள்,"தி.மு.க., கூட்டணி தேவையில்லை' என்ற முடிவை, உடனடியாக எடுக்க உறுதுணையாக இருந்தனர்.

அவர்கள் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் நீடித்தால், மீண்டும் மோசமான தோல்வியை நாம் சந்திக்க நேரிடும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், வேலு போன்றவர்கள் நமக்கு பச்சைத் துரோகம் செய்து, நம்மை தோற்கடித்தனர். இப்போது தி.மு.க.,வின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தோல்வி அடைந்தால், தொடர் தோல்வி மூலம் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும். எனவே தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், எந்த வகையிலும் பலன் இல்லை. தி.மு.க., கூட்டணியில் ஒற்றை எம்.பி.,யாக இருக்கிற திருமாவளவன், தி.மு.க., தரப்புடன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தாங்கிப் பிடிக்கும் கட்சியாக, விடுதலைச் சிறுத்தைகள் மாறிவிட்டது. அக்கட்சியுடன் இனிமேல் இணைந்து பணியாற்ற, நமது தொண்டர்கள் தயாராக இல்லை.இவ்வாறு அவர்கள் பேசினர்.

தி.மு.க., கூட்டணியை விட்டு, வெளியேறுவது என்ற பா.ம.க.,வின் முடிவு, அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் அதிர்ச்சியையோ, ஆச்சிரியத்தையோ ஏற்படுத்தவில்லை. தி.மு.க.,வை பொறுத்தவரையில், இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட முடிவாகக் கருதுகிறது. தி.மு.க., கூட்டணியை முறிப்பதற்கு, பா.ம.க., வின் சுயலாபக் கணக்கு தான் காரணம் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வரும் 2013ம் ஆண்டில், ஒரு ராஜ்யசபா சீட் பா.ம.க., வுக்கு தரவேண்டும் என, தி.மு.க., விடம் போடப்பட்ட தேர்தல் உடன்பாட்டினால், இனி லாபமில்லை. ஒரு ராஜ்யசபா சீட் பெறுவதற்கான எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,விடம் இல்லை என்பதால், அக்கட்சியுடன் கூட்டணியை தொடர, பா.ம.க., விரும்பவில்லை.

தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறினால், அ.தி.மு.க.,வின் கரிசனம் கிடைக்கும். அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில், முக்கிய எதிரிகளாகக் கருதப்படும் ராமதாஸ், அன்புமணி வழக்கு விசாரணையிலிருந்து மீளமுடியும் என்ற எதிர்பார்ப்பும், முக்கிய பங்கு வகிக்கிறது.வட மாவட்டங்களில் திருமாவளவனுடன் ராமதாஸ் கைகோர்ப்பதை, வன்னியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமாவளவனை விட்டு விலகுவதால், பா.ம.க., வுக்கு லாபம் என்ற கருத்தும் கணிக்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், இதுவரை ராமதாஸ் விமர்சனம் செய்யாமல் இருந்தார். இதனால் ராமதாஸ் மீது, வன்னியர்கள் சங்கத்தினர் அதிருப்தி அடைந்தனர். இனிமேல், ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சிப்பதன் மூலம், வன்னியர்களின் அதிருப்தியைப் போக்க முடியும் என்ற கணக்கும் கணிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, பென்னாகரம் பார்முலா மூலம், ஓட்டு வங்கியை பலப்படுத்துவது, தி.மு.க., அணியில் போட்டியிட்டு தோல்வி அடைவதை விட, வட மாவட்டங்களில் தனித்து நின்று, கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற பேராசையும், முக்கிய காரணமாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

பா.ம.க., பொதுச் செயலர் வடிவேல் ராவணன் தலைமையில், செப்டம்பர் மாதம் 11ம் தேதி பரமக்குடியில் நடக்கும் இமானுவேல் சேகரனின் விழாவில் ராமதாஸ் கலந்து கொள்கிறார். அவ்விழாவின் மூலம், தென் மாவட்டங்களில் பா.ம.க.,வை வளர்ப்பதற்கு, தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தினரை கையில் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி சுய லாபத்திற்காகவே தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறியுள்ளது என்கிறது அரசியல் வட்டாரம்.

திமுகவினரின் வெள்ளையாக்கப்படும் கருப்பு பணம்!

தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய அமைச்சராவதற்கு, கனிமொழி சிபாரிசு செய்தார் என்பது ஊரறிந்த ரகசியம். இதேபோல், நிதித் துறை பொறுப்பை கையில் வைத்திருப்பவரை சிபாரிசு செய்தவர், தி.மு.க., தலைவரின் மற்றொரு மகளான செல்வி. இவர் சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்துடன், அவருக்கு நிதித் துறை பொறுப்பு பெற்றுத் தரப்பட்டது.இவர் ஒரு வழக்கறிஞர் என்றாலும், தகுதியின் அடிப்படையில், அவருக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. திருவல்லிக்கேனி பெல்ஸ் சாலையில், இவர் மெஸ் ஒன்றை நடத்தி வந்தார். இவரை வைத்து, தி.மு.க.,வினர் எப்படி எல்லாம் பயன் அடைந்துள்ளனர் என்பது, மிகவும் சுவராசியமான தகவல்.

வருமான வரித் துறையை, பணம் சம்பாதிப்பதற்காக, இவர் பயன்படுத்திக் கொண்டார். இவரின் உத்தரவு படி, சில இடங்களில் சோதனை நடத்தப்படும். மேலும், வேறு சில இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கும்போது, இவரது உத்தரவு படி, திடீரென நிறுத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.சி.பி.ஐ., மற்றும் புலனாய்வு அமைப்புகள், இதுகுறித்து விசாரணை நடத்தினால், வருமானவரித்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவது நிச்சயம். காரணம், மந்திரியின் வாய்மொழி உத்தரவு மூலம் தான், சோதனைகள் நிறுத்தப்படுகின்றன.

சோதனை நடத்துவதற்கான வாரண்ட், வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரலிடம் இருந்து பிறப்பிக்கப்படுகிறது. சோதனை நடத்தச் செல்லும் இடம், நபர் பற்றிய விவரங்கள் அனைத்தும் முன் கூட்டியே காண்காணிக்கப்பட்டு, தயார் செய்யப்பட்ட பின்னரே, சோதனை நடத்த உத்தரவிடப்படுகிறது.அப்படி இருக்கும்போது, அமைச்சரிடம் இருந்து வரும் போனின் மூலம், சோதனையை எப்படி நிறுத்த முடியும்? ஆனாலும், ஓய்வு பெற்றதற்கு பின், தமிழகம், கேரளாவில் வங்கி தீர்ப்பாயம் போன்ற முக்கிய பதவி வேண்டும் என்ற ஆசையில், அதிகாரிகள் பலிகடா ஆகி விடுகின்றனர்.

தி.மு.க., தலைவருக்கு பின்னரோ அல்லது காங்கிரசுடனான, தி.மு.க.,உறவு முறிந்து விட்டாலோ, வருமான வரித் துறை, தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என கருதி, தி.மு.க.,வினர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாருக்குமே சந்தேகம் ஏற்படாத வகையில், எந்த வழியிலாவது, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பணத்தை கொண்டு வருவது மற்றும் வரித் தொடர்பான நடவடிக்கைகள் போன்ற முயற்சிகளை செய்கின்றனர். இதன்மூலம், நிதித் துறை, விஞ்ஞானப்பூர்வமாக, கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தின் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர், தன் பதவிக் காலத்தின்போது, அவரது மகன் திருமணத்தை நடத்தினார். திருமணத்துக்கு முன், கட்சியில் உள்ள தன் விசுவாசிகளுக்கு, பல லட்ச ரூபாய்களை விநியோகம் செய்தார். பணத்தை கொடுத்த கையோடு, திருமணத்தின்போது, இந்த பணத்தை, டி.டி.,யாகவோ, பரிசு காசோலையாகவோ, திரும்பச் செலுத்தும்படியும், அவர்களிடம் அறிவுறுத்தினார். வருமான வரித் துறை விசாரணையில் இருந்து, தப்பிக்கும் நோக்கத்துடன் தான் அவர் இப்படிச் செய்தார்.

தொழில் கல்வி நிலையங்களுக்கு சொந்தமான அறக்கட்டளைகள், பல கைகளுக்கு மாறுகின்றன. இவ்வாறு மாறும்போது, பணமும் கை மாறுகிறது. அறக்கட்டளை கைமாறுவது தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும்போது, அதுபற்றி தகவல், வருமான வரித் துறையினருக்கு தெரியாமல் இருக்காது.
அதேபோல், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், வரி தொடர்பான பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதற்காக, விவசாய பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ளார். விவசாயத்தின் மூலம், அதிக பணம் கிடைத்ததாக, முறைகேடாக சம்பாதித்த பணத்தை, கணக்கில் கொண்டு வருவது தான் அவரது திட்டம். முறைகேடாக சம்பாதித்த பணத்தின் மூலம், பெரும்பாலான தி.மு.க.,வினர், இன்ஜினியரிங் கல்லூரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளை, பினாமிகள் மூலமாகவோ, சொந்தமாகவோ நடத்தி வருகின்றனர். 

ஆனால், என்ன செய்வது?அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளுக்கும் குடும்பங்கள் உள்ளன. அதிகாரிகளின் குழந்தைகளின் கல்வி, மிகவும் முக்கியமானது. கட்சிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம், விரும்பத் தகாத, தொலைதூர இடங்களுக்கு மாற்றப்படுவதை அதிகாரிகள் விரும்புவது இல்லை.ரூபாய் ஏழு அல்து எட்டு விலையுள்ள வாரப் பத்திரிகைக்கு, 15 ரூபாய் மதிப்புள்ள இலவசங்கள் தரப்படுகின்றன. இதன்மூலம், விற்பனை அதிகரித்துள்ளதாக கூறி, பணத்தை கணக்கில் கொண்டு வருகின்றனர். சரி... இலவச பொருட்களையாவது விலை கொடுத்து வாங்கினார்களா என்றால் அதுவும இல்லை. மிரட்டல் நடவடிக்கைகள் மூலம், தொழிற்சாலைகளில் இருந்து, இலவசங்கள் பெறப்பட்டன.

இதே நிறுவனத்தால் நடத்தப்படும் நாளிதழ், அதிகம் விற்பனை செய்யப்படுவதாக காட்டப்படுகிறது. இதன் மூலம், கணக்கில் காட்டப்படாத பணத்தையும், முறைகேடாக சம்பாதித்த பணத்தையும், கணக்கில் கொண்டு வருகின்றனர். உதாரணமாக, நாளிதழின் விற்பனை ஒரு லட்சம் பிரதிகள் என்றால், விலையை குறைத்து விற்பதால், பல லட்சம் பிரதிகள் விற்பனையாவதாக கூறி, பெருமளவு பணத்தை, தினமும் கணக்கில் காட்டுகின்றனர்.

திரைப்பட தயாரிப்பு விவகாரத்திலும், தி.மு.க.,குடும்பத்தினர் இதே வழிமுறைகளைத் தான் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு வாரமும், திரைப்படங்கள் வெளியாவதை அடுத்து, அவற்றை வெளியிடுவதற்காக, பெரிய அளவில் தியேட்டர்கள் முன் கூட்டியே, "புக்' செய்யப்படுகின்றன. பெரிய அளவு விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. கொள்ளையடித்த பணத்தை வெள்ளையாக்கும் நோக்கத்துடன் தான் இவைகள் செய்யப்படுகின்றன.
இவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு, "கால்ஷீட்' கொடுக்காத நடிகர், நடிகைகளின் வீடுகளில், அமைச்சரின் உத்தரவின் பேரில், சோதனை நடத்தப்படுகிறது. திரைப்படத் துறையை அழிக்க வேண்டும் என்பது, தி.மு.க.,வின் நோக்கம் இல்லை... ஆனால், இவர்களில் செயல்களால் அது தான் நடந்தது . இதனால் கொந்தளித்த, சினிமா துறையினர் அனைவரும், தி.மு.க., படு தோல்வி அடைய காரணமாக இருந்தனர். "எந்திரன்' திரைப்படம் தயாரிப்பு மற்றும் வெளியீடு விவகாரத்திலும் இது தான் நடந்தது. இதன்மூலம், அவர்களின் கறுப்பு பணம், வெள்ளையாக்கப்பட்டது.

இதுபோன்ற நிதி ஆதாரங்கள் உருவாக்கப்படுவதன் மூலம், விமான நிறுவனத்தை தங்களுடன் இணைத்துக் கொள்வதோ, வேறு நிறுவனங்களை கையகப்படுத்துவதோ, அவர்களுக்கு எளிதாகி விடுகிறது.இவர்களின் கட்சியை சேர்ந்தவரே, நிதித் துறை இணை பொறுப்பு வகிக்கும்போது, இவர்களை எதிர்த்து யார் கேள்வி கேட்க முடியும். கட்சிக்காகவும், கட்சியை சார்ந்தவர்களுக்காகவும் தான், அவர் வேலை பார்க்கிறார். இதற்காக, அரசின் பணம், அவருக்கு சம்பளமாகவும் கிடைக்கிறது.கடந்த ஏழு ஆண்டுகளாக, அவர் பதவி வகித்து வருகிறார். இந்த கால கட்டத்தில், அமைச்சகத்துக்காக அவர் என்ன செய்துள்ளார்? அவரின் பங்கு என்ன? குறிப்பிட்ட, "டிவி' குழுமம் தான், இதனால் பெரிய அளவில் பயன் அடைந்துள்ளது."சன் டிவி' செயல் இயக்குனர் மீது சேலத்தைச் சேர்ந்த ஒருவர் போலீசில் மோசடி புகார் கொடுத்தார். அடுத்த சில நாட்களில் அவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தி.மு.க., ஆட்சியில் இருந்த வரை யாருமே இந்த குடும்பத்தினர் செயல்களை எதிர்த்து போலீஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது. காரணம், போலீஸ் இயந்திரம் முழுவதும் இவர்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.வருமானவரித்துறையில் நேர்மையான, மனச்சாட்சிக்கு பயந்த அதிகாரிகள் உள்ளனர். நடக்கும் செயல்களை எல்லாம் அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அமைச்சர் பதவி இழந்தாலோ, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி முறிந்தாலோ, இழந்த கவுரவத்தை மீட்கவும், துன்புறுத்திய மந்திரியை பழிவாங்கவும், வருமானவரித்துறைக்கு அதிக வேலை வந்து விடும்.இவ்வாறு, வருமானத்துறையில் உள்ள, பல நேர்மையான அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீருக்கடியில் சதுரங்க போட்டி புதுச்சேரியில் கின்னஸ் சாதனை!


 நீருக்கடியில் சதுரங்கம் விளையாடி, கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில், விளையாட்டு வீரர்கள் ஈடுபட்டனர். புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான, கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை கோகோ லேண்ட் நீச்சல் குளத்தில், நீருக்குள் சதுரங்கம் விளையாடி, 3 உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி துவக்க விழா நேற்று நடந்தது. அரசு கொறடா நேரு துவக்கி வைத்தார். காலை 11.12 மணிக்கு, 10 சதுரங்க வீரர்கள் 5 ஜோடியாக பிரிந்து, 12 அடி ஆழ நீச்சல் குளத்தில் பிரத்யேக நீச்சல் உபகரணங்கள் அணிந்து, நீருக்குள் மூழ்கியபடி விளையாடினர். நீரின் அழுத்தம், சுவாசப் பிரச்னை உட்பட, பல்வேறு தடைகளைக் கடந்து, 25 நிமிடங்களில் வெற்றிகரமாக விளையாடி முடித்தனர். இதில் ஐயப்பன், லியோ ஆனந்த், விக்னேஷ், ஜெகன்ராஜ் வெற்றி பெற்றனர். ராஜேஷ்குமார், அதிர்ஷ்டசெல்வம் மோதிய போட்டி டிராவில் முடிந்தது. 

இரண்டாவதாக, நீருக்கு மேல் மிதந்தபடியே, சதுரங்கம் விளையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சதுரங்கப் பலகை மிதந்தபடி இருக்க, இரண்டு செஸ் வீரர்கள் நீருக்குள் மிதந்தபடியே, செஸ் விளையாட வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சதுரங்கப் பலகை மிதக்காமல் கவிழ்ந்ததால், இச் சாதனை தோல்வியில் முடிந்தது. மூன்றாவதாக, லியோ ஆனந்த் ஒரே நேரத்தில், 10 பேருடன் 22 நிமிடங்கள் சதுரங்கம் விளையாடினார். போட்டிகளை தேசிய செஸ் நடுவர் நடராஜன், துணை நடுவர் பாஸ்கர், நீச்சல் வீரர் பிரேமானந்தன் ஆகியோர் கண்காணித்தனர். அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ரிசர்ச் பவுன்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் நடுவராகப் பணியாற்றினார். நீருக்கடியில் நடந்த சதுரங்கப் போட்டிகள் முழுவதும், பிரத்யேக கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு, கின்னஸ், குளோபல், லிம்கா, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் முதல்வரின் பாராளுமன்றச் செயலர் வைத்தியநாதன், சத்திய சாய் செஸ் பயிற்சி மையத் தலைவர் சிவக்குமார், சேலஞ்சர் அகாடமி தலைவர் வெங்கடேசன், ஸ்கூபா டெம்பிள் அட்வென்சர் அரவிந்த், பன்னீர்செல்வம், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு அமெரிக்கா புதிய நெருக்கடி!

இலங்கையின் உள்நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்ந்து வரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா, இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது.

இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் இதைத் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ராஜதந்திர கோரிக்கை கடிதம் ஒன்றை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. எனினும் வெளிநாட்டு அமைச்சகம் இதற்கான பதிலை இதுவரை அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 19 வது அமர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.


இதன்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை கலந்துரையாடலுக்காக சமாப்பிக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கேட்டுள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை இலங்கை நிராகரிக்கும் நிலையே உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு உடன்பட்டால் மனித உரிமைகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படலாம் என்பதே இதற்கான காரணம் என்று இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 July, 2011

இதே நாள்...


அரை மணி நேரம் 'ஜாலி'-250 கலோரி 'காலி'!

வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதோ, டிரெட்மில்களில் ஏறி கால் வலிக்க வலிக்க ஓடுவதோ தேவையே இல்லை. உங்களது உடலில் கூடிப் போய் விட்ட கூடுதல் எடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும்- செக்ஸ் உறவுக்காக.

'எக்சர்ஸைஸை' விட 'செக்ஸர்ஸைஸ்' சிறந்த உடற் பயிற்சி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உடல் எடையைக் குறைக்க உடல் உறவே சிறந்த வழி என்ற எண்ணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருக்கிறதாம். நாள் முழுக்க கடுமையான வேலை பார்த்து விட்டு வந்தாலும் இரவில் உறவு கொள்வதற்கு பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக இருக்கிறார்களாம்- அது உடல் எடையைக் குறைத்து, மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் என்பதால்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 76 சதவீத பெண்கள், உடல் எடைக் குறைப்புக்கு செக்ஸர்ஸைஸ் சிறந்த வழி என்று கருதுகிறார்களாம்.

மூன்றில் இரண்டு பங்குப் பெண்கள், ஜிம்முக்குப் போய் உடற் பயிற்சி செய்வதை விட சிறந்தது செக்ஸ் உறவு என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக தினசரி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தாங்கள் தயார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கெர்ரி மெக்லோஸ்கி என்பவர் எழுதியுள்ள 'The Ultimate Sex Diet' என்ற புத்தகத்தில், அரை மணி நேர உடல் உறவின் மூலம் 150 முதல் 250 கலோரிகள் வரைக் குறைவதாக கூறியுள்ளார். உறவில் ஈடுபடுவோரின் செயல்பாடுகளைப் பொறுத்து சில நேரங்களில் இது 350 கலோரிகள் வரை கூட கூடுகிறதாம்.

முத்தமிடுவதன் மூலம் 200 கலோரிகள் வரை குறைகிறது என்ற தகவலையும் கெர்ரி தெரிவித்துள்ளார்.

எந்த ஜிம்முக்கும் போகாமலேயே இயற்கையான முறையிலேயே நமது உடல் எடையைக் குறைத்து நம்மை டிரிம்மாக வைத்துக் கொள்ள முடியும். செக்ஸ் என்பது உடல் ரீதியான இன்பத்துக்கு மட்டும் நமக்கு உதவுவதில்லை. மாறாக நம்மை புத்துணர்ச்சியுடனும், இளமையுடனும், வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது. எனவே செக்ஸ் என்பதை உடல் மகிழ்ச்சிக்கான விஷயமாக மட்டும் கருதாமல் அதை பல விதங்களிலும் நமக்கு உதவும் ஆசானாக கருதி அணுகினால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை என்பது கெர்ரியின் கருத்து.

உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய்!

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்
என்று சுண்டக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள், போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

உடல் சோர்வு நீங்கும்: சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

குடல்புண்களை ஆற்றும்: சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.

நீரிழிவுக்கு மருந்து: முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

வாந்தி மயக்கம் நீங்கும்: சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.

மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

அயோடின் உப்பு பயன்படுத்துவதில் கடைசி இடத்தில் தமிழகம்!

அயோடின் உப்பு பயன்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே கடைசி இடத்தில் உள்ளது என தூத்துக்குடியில் உப்பு கமிஷனர் சுந்தரேசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, இந்தியாவி்ல் 200 லட்சம் டன் உப்பு ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 55 லட்சம் டன் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. 30லட்சம் முதல் 40 லட்சம் டன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.400 கோடி அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மத்திய அரசு இந்தியாவில் 2009ம் ஆண்டு ஒரு பெரிய ஆய்வு மேற்கொண்டது. இதில் மக்கள் தொகையில் 71 சதவீதம் பேர் உணவில் அயோடின் சேர்த்து கொள்கின்றனர் என தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 50 சதவீதம் பேர் அயோடின் கலக்காத உப்பை உட்கொள்கின்றனர். இந்திய அளவில் அயோடின் உப்பை பயன்படுத்தாத மாநிலங்களில் தமிழகம் கடைசியில் உள்ளது.

2ல் 3 பங்கு குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இரும்பு சத்து குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு அயோடின் உப்புடன் இரும்பு சத்து ஏற்றப்பட்ட ஈருட்ட உப்பு தயாரித்து வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக இரும்பு சத்து கலக்கும் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கான தொழில்நுட்பம் குறித்து உப்பு உற்பத்தியாளர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழகம் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள தூத்துக்குடியில் நடத்தப்படுகிறது என்றார் அவர்.

மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க!

அன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் சுகமுண்டு. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் பெற்றோர்களுக்கு அதேபோல் நாமும் அன்பை கொடுக்கவேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது. மனைவி மட்டுமே பணிவிடை செய்ய வேண்டும். அன்பை பொழிய வேண்டும் என்று அநேக கணவன்மார்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் ரத்தமும் சதையும் நிறைந்த உணர்ச்சிகளைக் கொண்ட மனிதப்பிறவிதான் மனைவியும் என்பதை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாகவே குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு பிரிவு நேரிடுகிறது.

இல்லறத்தில் இனிமை நிறைய உளவியல் வல்லுநர்கள் தரும் சில யோசனைகள் :

எதிர்பார்ப்பில்லாத அன்பு: அனைத்து உறவுகளையும் விட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும். திருமணத்திற்கு முன்பு எத்தனையோ பேர் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு சுற்றிக்கொண்டிருப்பார்கள். வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு.

தாய்- குழந்தை, நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை. நாம் எந்தளவிற்கு எதிர்பார்க்கிறோமோ அதே அளவிற்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அன்பு உறுதியாகும்.

அரவணைப்பு அவசியம்: தாய் தந்தையரை பேணுதல், கணவனுக்கு பணிவிடை செய்தல், குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல சமூகக் கடமைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தவறாது செய்யும் பெண்கள் விரும்புவது எல்லாம் சாய்ந்து கொள்ள ஆதரவான ஒரு தோள் மட்டும்தான். மனைவியை அன்பாக அரவணைத்து அவளின் குறைகளை கேட்டும் கணவன் கிடைத்தால் அதை விட வேறு எந்த சுகமும் பெண்ணிற்கு பெரிதாய் தெரியாது. இல்லறத்துணையிடம் அன்பாய் ஒருபார்வை, ஆதரவாய் ஒரு பேச்சு, உள்ளன்போடு கேட்கும் கரிசனம், இவை இருந்தால் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும்.

கட்டிப்பிடி வைத்தியம்: ஒருவருக்கொருவர் அன்பாய் ஆதரவாய் கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு குறைய வாய்ப்புள்ளதாக அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை அன்பாக நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தமே எட்டிப்பார்க்காது. அலுவலகமோ, வீடோ எந்த பிரச்சினை என்றாலும் அதனை தங்களது படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், பார்த்துக்கொள்வதில்தான் வெற்றி உள்ளது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே, நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாக உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர் . வெறும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக் கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து, தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான் உண்மையான பலன் கிட்டும்.

நம்பிக்கைதான் நமக்கான வாழ்க்கை!

மண வாழ்க்கை என்பது புயல் காற்று வீசும் கடலில் பயணம் செய்வது போன்றது. காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப சமாளித்து கடலில் கப்பலை செலுத்தும் சிறந்த மாலுமி போல வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்களை சமாளித்து வெற்றி பெற வேண்டும்.

'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' என்பார்கள். கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி - மழை மிரட்டிப் பார்க்கும். இது போன்ற கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்... அவர் அனுபவம் மிக்க திறமையான மாலுமியாக உருவாகிவிடுவார். அதுபோலத்தான் திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும்போது இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வரும். அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

தொடக்க நிலையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை வெற்றிகரமாக தாண்டிவிட்டால் போதும் வசந்தம் வீசும் வாழ்க்கை உங்களை நோக்கி ஓடி வரும். அதற்கு சில புரிதல்கள் தேவை.

மன்னிக்கும் மனப்பக்குவம்: குடும்பம் என்பது கணவன் மனைவி இருவர் தொடர்புடையது மட்டுமல்ல இருவருடைய புகுந்த வீட்டு, பிறந்த வீட்டு சொந்தங்களும் அந்த குடும்பத்திற்குள் அடக்கம். எங்காவது ஒரு இடத்தில் சிறு நெருடல் ஏற்பட்டாலும் உட்கட்சி பூசல் போல கணவன் மனைவிக்கு இடையே விரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே தவறு யார் மீது என்று அலசி ஆராய்ந்து சண்டை போடுவதை விட்டு விட்டு மன்னிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கனியிருக்க காய் வேண்டாமே; ஒருவரை ஒரு புரிந்து கொள்வதற்கு ஓரளவிற்காவது பேசி புரிந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டையாக மாற்றிவிடக் கூடாது. சண்டையே ஏற்பட்டாலும் ஒருவரின் மீது ஒருவர் கடுஞ்சொற்களைப் பேசக் கூடாது.உடனே சமாதானக் கொடி உயர்த்த வேண்டும்

சமத்துவம் வேண்டும்:வீட்டு வேலைகளைச் செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மை கூடாது. எந்த நோக்கத்திற்காக வேலை செய்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் நீயா? நானா? போட்டி ஏற்பட வாய்ப்பே இல்லை.

கட்டுப்பாடான சுதந்திரம்: எதற்கும் ஓர் எல்லை உண்டு. யாரும் யார் மீதும் ஆதிக்க செலுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அங்குதான் விரிசலுக்கான விதை தோன்றுகிறது. அது வளர்ந்து விருட்சமாகி வளராமல் தடுப்பது அவரவர் கையில்தான் உள்ளது. அதே சமயம் கட்டுப்பாடான சுதந்திரமே குடும்பத்தை கட்டுகோப்பாக கொண்டு செல்ல உதவும்.

நகைக் சுவை உணர்வு: வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை: 'எந்நாளும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே உறவில் விரிசல் விழ வாய்ப்பே இல்லை.

வயிற்றுப் போக்கை விரட்டும் மாவடு!

மாமரம் சைவ சமயத்தில் ஒரு சில சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியா தான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.

இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.

கிருமிநாசினியான மாவிலை: கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

மாம்பூவும், பட்டையும்: மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

பித்த வெடிப்பு குணமாகும்: பித்த வெடிப்பினால் கால் வலி ஏற்படுவதோடு பாதங்கள் பார்ப்பதற்கே அறுவெருப்பாக காணப்படும். கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

மாங்காய்: மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும்: மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம். கோடைக்காலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.

உதிரப்போக்கு கட்டுப்படுத்தும்: மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

இந்திய மாணவர்கள், விசா மோசடி பல்கலைக் கழகங்களிடம் ஏமாற வேண்டாம்! அமெரிக்கா!!


அமெரிக்காவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள், விசா மோசடி பல்கலைக் கழகங்களிடம் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. விசா வழங்குவதில் பல்வேறு தவறுகளைச் செய்துள்ள மற்றொரு அமெரிக்க பல்கலைக்கழகத்தை கண்டுபிடித்திருப்பதன் மூலம், அமெரிக்கா இந்த விஷயத்தில் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது. ஏற்கனவே இவ்வாறு செய்து வரும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றி எச்சரிக்கை விடுத்து வருகிறோம். மாணவர்களும் இதுபோன்ற நிறுவனங்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் டோனர் கூறினார். விசா மோசடியில் ஈடுபட்ட மற்றொரு பல்கலைக் கழகத்தை வடக்கு விர்ஜினியாவில் கண்டுபிடித்துள்ளோம். இது குறித்து மத்திய அரசிடமும், தொடர்ந்து பேசி வருகிறோம்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் இந்த விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பல நல்ல கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயின்று சான்றிதழ்களை பெறுகின்றனர். இந்த ஆண்டும் அது தொடரும். எங்கள் நாட்டிற்கு வரும் இந்திய மாணவர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் செய்தித் தொடர்பாளர் டோனர் கூறினார்.

5000 பணியிடங்களை உருவாக்கும் ஃபோர்டு !

  அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு, ஒரு பில்லியன் டாலர் (ரூ.4000 கோடி)முதலீட்டில் குஜராத்தில் கார் மற்றும் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதில் புதிதாக 5000 பணியிடங்களை உருவாக்க ஃபோர்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக குஜராத் அரசுடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த இரு ஆலைகளுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014ம் ஆண்டுக்குள் இவ்விரு ஆலைகளின் பணிகளும் முழுமையாக நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைகளில் முதல் கட்டமாக 240,000 கார்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

கலைஞர் "டிவி' சொத்துக்களை பறிமுதல்! நடவடிக்கையில் அமலாக்கத் துறை!!


சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (பி.எம்.எல்.ஏ.,), கலைஞர் "டிவி'யின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை, அமலாக்கத் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது' என, அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:கலைஞர் "டிவி'க்கு, 215 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பது தெரியவந்துள்ளது.அதனால், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், அவற்றைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்காகவும், சிலருக்கு சலுகை காட்டியதற்காகவும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும், பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அந்த லஞ்சப் பணத்தை மீட்கும் வகையில், இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

கலைஞர் "டிவி'யில், கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழிக்கு, 80 சதவீத பங்குகளும், அந்த "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு, 20 சதவீத பங்குகளும் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற "டி.பி' ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்தது என்பது, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறி, 2,100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ஏற்கனவே "டிபி' குரூப், வெர்ஜின் மொபைல், மில்கிவே டெவலப்பர்ஸ் மற்றும் இடிஏ ஸ்டார் குரூப் ஆகிய நிறுவனங்களுக்கு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இவ்வாறு அமலாக்கத் துறை உயர் அதிகாரி கூறினார்

கிரைண்டர் இலவசமானாலும் தரம் இருக்கும் அரசு!

இலவசமாகக் கொடுத்தால், அதில் தரம் இருக்காது' என, பலரும் கருதலாம்; அதுவும் அரசு கொடுத்தால் எப்படியிருக்கப் போகிறது என, அலட்சியப்படுத்தலாம். ஆனால், தற்போது அரசு தரும் கிரைண்டர், மார்க்கெட்டில் உள்ள கிரைண்டர்களை விட தரம் வாய்ந்தாக இருக்கும். அதை உறுதி செய்ய, தொழிற்சாலைகளில் டெண்டருக்கு முன்பே அரசு அதிகாரிகள், நேரடியாக திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். அரசின் அதிரடியால், போலியாக டெண்டர் கொடுத்தோர், கலக்கத்தில் உள்ளனர்.

இலவச லேப்டாப், மிக்ஸி, மின்விசிறி வரிசையில் கிரைண்டரும் இடம் பிடித்தது. அடுத்த ஆறு மாதங்களுக்குள், 25 லட்சம் கிரைண்டர்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்தது. கிரைண்டர் கொள்முதல் செய்ய டெண்டர் விடும் முன், பல்வேறு விஷயங்களை தீவிர ஆய்வு செய்தது.கிரைண்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறுக்க, ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. இந்த ஆய்வுக்குழுவில் இடம் பெற்றுள்ள, முதுநிலை துணைத்தலைவர் பெருமாள், பொதுமேலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர், நேரடியாக தொழில் நிறுவனங்களை "விசிட்' செய்து தேர்வு செய்துள்ளனர்.

கிரைண்டர் மோட்டார்: கிரைண்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார், கிராமப்புறங்களில் வரும் ஏற்றத்தாழ்வு மின் அழுத்தங்களுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள டேபிள் டாப் கிரைண்டர்களில், பெரும்பாலும் 100 வாட் சக்தியில் இயங்குவதாக இருந்தால், இலவச கிரைண்டரில், 150 வாட் மின் சக்தியில் இயங்கும் மின்மோட்டார் இருக்க வேண்டும் என நிர்ணயித்தது. இத்தகைய தரம் வாய்ந்த மோட்டார், இந்திய தயாரிப்பில் மட்டுமே சாத்தியம்.

மின் ஒயர்: மின்மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் ஒயர், கட்டாயமாக ஐஎஸ்ஐ தரத்தில் இருக்க வேண்டும். எவ்விதத்திலும் மின்கசிவு இருக்கக் கூடாது.பிளாஸ்டிக் பாகங்கள்: கிரைண்டரில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாகங்கள், உறுதியாக இருக்க வேண்டும். மேல் மூடி, பாலிகார்பன் எனப்படும் உறுதித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். கீழே தவறி விழுந்தாலும் உடையக் கூடாது .தொழில்நுட்ப விளக்க கூட்டம் சென்னையில் நடந்தபோது, டெண்டரில் பங்கேற்க விண்ணப்பித்த, அனைத்து வெட்கிரைண்டர் தயாரிப்பாளருக்கும், மாதிரி கிரைண்டர்களை சமர்ப்பிக்கும்படி தெரிவித்திருந்தது.

இதில், அரசு கூறிய விதிமுறைகளின்படி தயாரான கிரைண்டரை, பரிசோதனைக் கூடத்தில் சோதனை செய்து, அதைச் சான்றிதழுடன் சமர்ப்பிக்கும்படி கூறியிருந்தது.அதோடு, தற்போது தயாரித்து வரும் கிரைண்டர் ஒன்றையும், இணைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. இந்த இரண்டு கிரைண்டர்களையுமே பெற்ற அதிகாரிகள், சான்று பெற்ற கிரைண்டரை விட்டு விட்டு, தற்போது நிறுவனங்கள் தயாரித்து வரும் கிரைண்டரை, பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.

திடீர் ஆய்வுகள்: சென்னையில் நடந்த டெண்டரில் பங்கேற்று விட்டு, அடுத்த நாள் கிரைண்டர் தயாரிப்பாளர்கள் ஊருக்குத் திரும்பும் முன்பே, அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். கோவையில் பல நிறுவனங்களில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டனர்.இந்த ஆய்வில், டெண்டரில் குறிப்பிட்டபடி, ஒரிரு லட்சம் கிரைண்டர்களை தயாரிக்கும் அளவுக்கு இந்த நிறுவனங்கள் உண்மையான விவரங்களைக் கொடுத்துள்ளனவா என ஆய்வு செய்தனர். இவற்றை அறிக்கையாக தயார் செய்து, உடனுக்குடன் "ஆன்லைன்' முறையில், சென்னைக்கு அனுப்பினர். நேரடியாக தொழிற்சாலைக்கே வந்து ஆய்வு செய்த குழுவால், தொழிற்சாலை இல்லாமல், வியாபார நோக்கில் பங்கேற்ற நிறுவனங்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், டெண்டரில் பங்கேற்ற பல வர்த்தகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தரத்தில் உயர்வு;விலையில் நியாயம்: அரசு அதிகாரிகளிடம், டெண்டரில் பங்கேற்ற உற்பத்தியாளர்கள் பலர், "அரசு கொடுத்திருந்த விதிமுறைகள், தர நிர்ணயத்தின்படி கிரைண்டர் தயாரித்தால், கூடுதலாகச் செலவாகுமே' என கேட்டுள்ளனர். பதிலளித்த அரசு அதிகாரிகள், "பொருள் எப்படியிருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துள்ளோம். இதற்கு ஆகும் செலவு உள்ளிட்ட நியாயமான விலையை நீங்கள் கேட்கலாம். விலை மலிவாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது' என பதில் அளித்துள்ளனர்.
தலையீடு கிடையவே கிடையாது: டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் உண்மையானவையா, குறிப்பிட்ட அளவுக்கு, வெட்கிரைண்டரை தயாரிக்கும் திறன் வாய்ந்தவையா என்பதையெல்லாம் ஆய்வு செய்ய, அதிகாரிகள் குழு ஈடுபட்டதால், எவ்வித தலையீடும் இல்லாமல் டெண்டர் வெளிப்படையாகவே நடக்கும் என, கோவையைச் சேர்ந்த கோயம்புத்தூர் வெட்கிரைண்டர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் நிர்வாகி தேவராஜ் நம்பிக்கை தெரிவித்தார். ""சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது நடைமுறைக்கு ஒவ்வாதது. அப்படியிருந்தாலும், கோவையில் தயாராகும் கிரைண்டரின் தரத்துக்கும் குறைவாகவே இருக்கும். அரசு தர நிர்ணயம் செய்திருப்பதால், கிரைண்டர் தொழில் நிறுவனங்கள் அச்சம் கொள்ளத்தேவை இல்லை

ராஜா சொன்னதைத் தான் நான் செய்தேன்: சந்தோலியா!

டாடா ஸ்கை டி.டி.எச்., குழுமத்தில், கலைஞர் "டிவி'யை கொண்டு வர முன்னாள் அமைச்சர் ராஜா முயன்றார். இது தொடர்பாக நடந்த ரகசிய ஒப்பந்தத்தில், ராஜாவுக்கும், அரசியல் புரோக்கர் நிரா ராடியாவுக்கும் பங்குள்ளது' என்று, ராஜாவிடம் உதவியாளராக இருந்த சந்தோலியா குற்றம் சாட்டினார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான வாதம், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், முதல் இரண்டு நாட்கள், முன்னாள் அமைச்சர் ராஜா சார்பில் வாதாடப்பட்டது. அப்போது, "மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, சாட்சியாகச் சேர்க்க வேண்டும்' என, ராஜா வழக்கறிஞர் வாதாடினார். மேலும், பிரதமருக்குத் தெரிந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தது என்று கூறியதோடு, வேறு சில குற்றச்சாட்டுகளையும் ராஜா கூறியிருந்தார்.இதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறையின் செயலர் சித்தார்த்த பெகுராவின் வாதம் துவங்கி, இரண்டு நாள் நீடித்தது. "அரசின் திட்டத்தை அமல்படுத்திய ஒரே காரணத்திற்காக, இவ்வழக்கில் தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்' என, தெரிவித்திருந்தார்.இதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவின் உதவியாளர் ஆர்.கே.சந்தோலியா தரப்பு வாதம் நேற்று முன்வைக்கப்பட்டது.

அப்போது, அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறியதாவது:டாடா ஸ்கை டி.டி.எச்., குழுமத்தில் கலைஞர் "டிவி'யைச் சேர்க்க, ராஜா முயன்றார். சந்தோலியா, ராஜாவிடம் உதவியாளராகத் தான் இருந்தார். எஜமானர் எடுக்கும் முடிவுக்கு எதிராக, உதவியாளரால் கேள்வி கேட்க முடியுமா என்ன? முடிவு எடுக்கும் அதிகாரம் சந்தோலியா கையில் இருந்ததில்லை.ஓராண்டு விசாரணைக்கு பின், சந்தோலியாவை சி.பி.ஐ., வழக்கில் சேர்த்தது. "2ஜி' விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் அவர் இல்லை. அவரது எஜமானர் (முன்னாள் அமைச்சர் ராஜா) பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்று செயல்படுத்துவது தான் அவரின் வேலை. ராஜாவின் அன்றாடப் பணிகளுக்கு உதவுவதே சந்தோலியாவின் வேலை.

ராஜா எடுக்கும் முடிவுகள் சரியா, தவறா என்று எவ்வித கவலையும் அவருக்கு இல்லை. சந்தோலியா ஒன்றும் பெரிய ஆளும் இல்லை. மேலும், ராஜா சார்ந்திருந்த தி.மு.க., கட்சியுடனோ, கலைஞர் "டிவி'யுடனோ, வேறு டெலிகாம் கம்பெனிகளுடனோ எவ்வித தொடர்பும் சந்தோலியாவுக்கு இல்லை.டாடா ஸ்கை டி.டி.எச்., குழுமத்தில் கலைஞர் "டிவி'யை கொண்டு வர, ராஜா முயன்றார்.

இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே நடந்த ரகசிய ஒப்பந்தத்தில், ராஜாவுக்கும், அரசியல் தரகர் நிரா ராடியாவுக்கும் பங்கு உள்ளது. இதற்கு பாலமாகச் செயல்பட்டவர் ராஜாவின் உதவியாளராக இருந்த ஆச்சாரியா. நிரா ராடியா, ஆச்சார்யா இடையேயான உரையாடலின் போது, ஆச்சார்யா என்ன பேசுகிறார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை. இதிலிருந்து, கலைஞர் "டிவி', டாடா இடையேயான ஒப்பந்தம் குறித்து ஆச்சார்யாவுக்கு தெரிந்திருப்பது தெளிவாகிறது. இதன் மூலம், டாடா, நிரா ராடியா, ஆச்சார்யா, கலைஞர் "டிவி' உட்பட அனைவரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட வேண்டும். டாடாவும், ராடியாவும் பெரிய மனிதர்கள் என்பதால், சி.பி.ஐ., அவர்களை விட்டுள்ளது. ஆனால், ஆச்சார்யா ஏன் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் சந்தோலியாவை கைது செய்துள்ளனர்.சந்தோலியா கையெழுத்து போட்ட ஒரு ஆவணத்தையாவது சி.பி.ஐ., காட்ட முடியுமா. எத்தனையோ பேர் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களை எல்லாம் சி.பி.ஐ., விட்டுவிட்டது.
டாடா - கலைஞர் "டிவி', ராடியா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த ஆச்சார்யாவுக்கு, கடந்த 12 ஆண்டுகளாக ராஜாவுடன் நெருக்கமான நட்பு இருந்துள்ளது.இவ்வாறு சந்தோலியா வழக்கறிஞர் கூறினார்.முன்னதாக சந்தோலியா வாதம் துவங்குவதற்கு முன், சந்தோலியா தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி சைனி அறிவித்தார். "தன்னிடம் விசாரணை நடத்துவதற்கு, சி.பி.ஐ., சரியான முறையில் அனுமதி பெறவில்லை' என, மனுவில் சந்தோலியா குறிப்பிட்டிருந்தார்.

கலைஞர் "டிவி' சொத்துக்களை பறிமுதல் செய்யநடவடிக்கையில் இறங்கியது அமலாக்கத் துறை:"சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (பி.எம்.எல்.ஏ.,), கலைஞர் "டிவி'யின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை, அமலாக்கத் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது' என, அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:கலைஞர் "டிவி'க்கு, 215 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பது தெரியவந்துள்ளது.அதனால், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், அவற்றைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்காகவும், சிலருக்கு சலுகை காட்டியதற்காகவும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும், பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அந்த லஞ்சப் பணத்தை மீட்கும் வகையில், இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

கலைஞர் "டிவி'யில், கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழிக்கு, 80 சதவீத பங்குகளும், அந்த "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு, 20 சதவீத பங்குகளும் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற "டி.பி' ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்தது என்பது, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறி, 2,100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ஏற்கனவே "டிபி' குரூப், வெர்ஜின் மொபைல், மில்கிவே டெவலப்பர்ஸ் மற்றும் இடிஏ ஸ்டார் குரூப் ஆகிய நிறுவனங்களுக்கு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இவ்வாறு அமலாக்கத் துறை உயர் அதிகாரி கூறினார்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...