|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 July, 2011

இலங்கைக்கு அமெரிக்கா புதிய நெருக்கடி!

இலங்கையின் உள்நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்ந்து வரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா, இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது.

இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் இதைத் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ராஜதந்திர கோரிக்கை கடிதம் ஒன்றை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. எனினும் வெளிநாட்டு அமைச்சகம் இதற்கான பதிலை இதுவரை அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 19 வது அமர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.


இதன்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை கலந்துரையாடலுக்காக சமாப்பிக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கேட்டுள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை இலங்கை நிராகரிக்கும் நிலையே உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு உடன்பட்டால் மனித உரிமைகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படலாம் என்பதே இதற்கான காரணம் என்று இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...