|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 October, 2011

கை குலுக்கினால் காய்ச்சல்- தொற்று நோய் பரவும்!


கை குலுக்கினால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படும் என நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   இங்கிலாந்தில் உள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சி நிபுணர் நாதன்வோல்பே தி வைரஸ் ஸ்ட்ராம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றவை தோல் மூலம் மற்றவர்களுக்கு பரவுகின்றன.
 
அதை தடுக்க சில எளிய முறையை மேற்கொள்ளலாம்.   அன்பை பரிமாறிக் கொள்ள ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொள்கின்றனர். அதை தவிர்க்க வேண்டும். மாறாக தங்களின் முழங்கைகளால் ஒருவருக்கொருவர் இடித்து கொள்ளலாம். அவை தவிர ஜப்பானியர்களை போன்று ஒருவரை சந்திக்கும் போது தலையை குனிந்து மரியாதையுடன் வணக்கம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
 
இவை தவிர மாசுபட்ட சொதிகலன்கள், கதவு கைபிடி, பணிபுரியும் இடங்கள் ரிமோட் கண்ட்ரோல் போன்றவற்றில் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கிருமிகள் 24 மணி நேரமும் காத்திருக்கும். அவை மனிதர்களின் மூக்கு, நாக்கு போன்றவற்றின் மூலம் தொற்றிக் கொள்ளும். எனவே தினமும் கைகளை தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கர்கள் இருவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு!


அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் சார்ஜென்ட், கிறிஸ்டோபர் சிம்ஸ் ஆகிய பொருளியல் அறிஞர்களின் ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

"பொருளாதாரக் கொள்கைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, முதலீடுகள் போன்ற பேரியல் பொருளாதார மாறிகளுக்கும் (Macroeconomic variables) இடையேயான தொடர்புகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான செய்முறைகளை இவர்கள் இருவரும் உருவாக்கினார்கள்" என்று நோபல் பரிசுத் தேர்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கட்டமைப்பு பேரியல் பொருளாதாரம் (Structural Macroeconomics) தொடர்பான முறையை சார்ஜென்ட் உருவாக்கினார். பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படும் நிரந்தரமான மாற்றத்தை ஆய்வு செய்வதற்கு இவரது ஆய்வு பயன்பட்டது.

பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனங்களும், மக்களும் தங்களது எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்துக் கொள்ளும்போது பேரியல் பொருளாதார மாறிகளுக்கு இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்ய இவர் உருவாக்கிய முறை பயன்பட்டது என்று நோபல் பரிசுத் தேர்வுக் குழு குறிப்பிட்டிருக்கிறது.

சிம்ஸின் முறை வேறு மாதிரியானது. பொருளாதாரக் கொள்கையில் ஏற்படும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் உயர்வு போன்ற தாற்காலிக மாற்றங்களால் பொருளாதாரம் எப்படிப் பாதிக்கப்படுகிறது, எதிர்ப்பார்ப்புகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் என்னென்ன விளைவுகள் பொருளாதாரத்தில் ஏற்படுகின்றன என்பதை இவர் உருவாக்கிய முறை விளக்கியது. இது கீனிஸிய தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இருவரும் தனித்தனியே ஆய்வு செய்து பொருளாதார மாதிரிகளை உருவாக்கினாலும், இரண்டும் ஒன்றையொன்று முழுமையடைச் செய்வதாக உள்ளன. இவர்களின் கண்டுபிடிப்புகளை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் கொள்கை வகுப்பவர்களும் பின்பற்றி வருகின்றனர் என்றும் நோபல் குழு புகழாரம் சூட்டியிருக்கிறது.

தாமஸ் சார்ஜென்ட்: 1943-ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த சார்ஜென்ட், நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 1968-ம் ஆண்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி முடித்தார். பொருளாதாரம் சார்ந்த பல்வேறு தேசிய விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.
கிறிஸ்டோபர் சிம்ஸ்: 1942-ம் ஆண்டில் பிறந்த இவர், 1968-ல் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பட்டம் வென்றார். அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். பொருளாதாரம் சார்ந்த பல முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார். இப்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

வாழ்வில் வெற்றி தரும் புன்னகை!

ஒருவரின் தோற்றத்தை வசீகரமாக மாற்றக்கூடியது அவரது புன்னகையே. நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்தான். அதனால் தானோ என்னவே புன்னகை இருக்க பொன் நகை எதற்கு என்று நம்முன்னோர்கள் கூறியுள்ளனர். புன்னகையின் மூலம் எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.

வசீகரிக்கும் தோற்றம்: சிரிப்பானது நமது பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு பிறரிடம் உங்களை வசீகரமாகவும் காட்டும். சிரிப்பு என்பது வெறும் உதடுகளின் அசைவு மட்டுமல்ல, அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது எத்தனையோ பிரச்சினைகளையும் மீறி ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகின்றது. எப்படிப்பட்ட நபரையும் ஹேண்டில் செய்வதற்கு ஏற்ற மந்திரம் புன்னகை மட்டுமே. வீடாக இருந்தாலும் சரி பணியிடமாக இருந்தாலும் சரி புன்னகை பூத்திடுங்கள். கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக உங்கள் புன்னகை செயல்படும்.
உறவை வலுப்படுத்தும்: முசுடு உயரதிகாரியோ, அல்லது மூடியான கணவரோ எப்படிப்பட்டவராக இருந்தாலும் புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். சிரிப்பு வரவில்லை என்றாலும், நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும். பிறகு பாருங்கள் அவர்கள் உங்களை நடத்தும் விதமே வேறுமாதிரியாக இருக்கும்.

இடத்திற்கேற்ப சிரியுங்கள்: உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம். என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்னையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள்; அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனவே தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள். 

மனச்சோர்வா? ஷாப்பிங் போய்ட்டு வாங்க!






ஸ்ட்ரெஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அழுத்தம் என்று அறிஞர்கள் கூறுவர். ஆங்கில அகராதியில் ‘ஸ்ட்ரெஸ்’ என்பதற்கு இறுக்கும் விசை, சக்தியை உறிஞ்சும் விசை, ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் விசை என்ற பொருள்களைத் தருகிறது. டென்ஷனால் நமது உள்ளம் பல வழிகளில் பாதிப்படைகிறது. எப்பொழுதும் ஒரு திருப்தியில்லா மனநிலை. கவலை, தவிப்புடன் இருப்பது, போரடித்தல், எளிதில் கோபம் கொள்ளுதல் ஆகியவை மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளாகும்.

ஷாப்பிங் செல்லுங்கள்: மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஷாப்பிங் செல்வதன் மூலம் அழுத்தத்தை சற்று குறைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். `மனம் சோர்ந்துபோய் கிடக்கிறதா? `ஷாப்பிங்’ செல்லுங்கள், சந்தோஷம் மனதை நிறைக்கும்’ என்கிறார்கள் அவர்கள். `ஷாப்பிங்கில் உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மன நிலையில் நீடித்த ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இதுதொடர்பான ஆய்வில், ஷாப்பிங் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கேள்விகள் கேட்டுப் பதில்கள் பெறப்பட்டன.உற்சாகமான மனநிலை: அத்துடன், குறிப்பிட்ட நபர்கள் தங்களின் ஷாப்பிங் பழக்கம், வாங்கிய பொருட்கள், அப்போது தங்களுக்கு இருக்கும் மனநிலை பற்றியும் `டைரி’யில் குறித்து வரும்படி கூறினர். ஷாப்பிங் செல்லும்போது தாங்கள் நல்ல மனநிலையில் இல்லாவிட்டால், ஏதாவது ஒரு பொருளை பார்த்தவுடன் `ஆசையில்’ வாங்குவது வழக்கமாக இருக்கிறது என்று சிலர் தெரிவித்தனர்.தங்களின் சந்தோஷத்துக்காகவே `ஏதாவது’ ஒன்றை வாங்கி வருவதாக 62 சதவீதம் பேரும், கொண்டாட்டத்தின் ஒரு வழியாக ஒரு பொருளை வாங்குவதாக 28 சதவிகிதம் பேரும் கூறினர். ஷாப்பிங்கால் மகிழ்ச்சி அடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அது ஒருசில எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடும். தங்கள் ஆய்வில் பதிலளித்த சிலர் உற்சாகமான மனநிலையில் இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று முன்ஜாக்கிரதையோடு கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.மன அழுத்தம் குறைக்கும் வாசிப்பு: புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு குறைந்த அளவே மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆப் மெடிசின் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் பிரையன் ப்ரைமேக் தலைமையிலான குழு ஒன்று நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.பதின்பருவத்தை அடைந்த 106 பேரிடம் 6 முறை இருமாதங்களாக சோதனை நடத்தப்பட்டன. புத்தகங்கள் அதிகம் வாசிப்போர், குறைவாக புத்தகம் வாசிப்பவர்களுடன் ஒப்பிடும் போது பத்தில் ஒரு பங்கு அளவே மிக குறைவான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே வாசித்தல் என்பது மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. எனினும் வாசிப்பதை தவிர்த்து பிற ஊடகங்களிலேயே அதிகமானோர் கவனத்தை செலுத்துவது தற்போது அதிகரித்துள்ளது என்றும் ப்ரைமேக் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

நீராவியில் ஓடும் உலகின் மிகப் பழமையான கார் ரூ.22 கோடிக்கு ஏலம்!


Oldest Car
கடந்த 1884ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நீராவியில் இயங்கும் உலகின் மிகப் பழமையான கார் ரூ.22 கோடிக்கு ஏலம் போய் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டி டியோன் பூட்டன் இடி டிரிபார்டாக்ஸ் தாஸ் ஏ தாஸ் ஸ்டீம் ரன்எபவுட்(அப்பாடா...இப்பவே கண்ணை கட்டுதே) என்ற நீண்ட திருநாமத்தை கொண்ட இந்த கார் கடந்த 1884ம் ஆண்டு பிரான்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. நீராவியில் இயங்கும் எஞ்சின் கொண்ட இந்த கார் காலத்தை கடந்து வென்று நிற்கிறது.

ஆம், உலகின் மிகப்பழமையான கார் என்பது மட்டுமல்ல, ஓடும் நிலையில் உள்ள உலகின் ஒரே பழமையான கார் என்ற பெருமையும் அட நம்ம ... ரன்எபவுட்டுக்குத்தான் சொந்தம். கடந்த 1887ம் ஆண்டு நடந்த கார் பந்தயத்தில்(அப்போதைய பார்முலா 1 பந்தயமாம்) மணிக்கு 37 மைல்(60 கிமீ) என்ற அசுர வேகத்தில் ஓடி சாம்பியன் பட்டத்தை வென்றதாம் இந்த ...ரன்எபவுட்.

இந்த காரில் 4 பேர் எதிரெதிர் திசையில் அமர்ந்து பயணம் செய்யலாம். மேலும, காரில் உள்ள இருக்கைகள் அனைத்தும் 40 கேலன் கொள்ளளவு கொண்ட தண்ணீர்தொட்டியின் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி அல்லது சாதாரண கரிக்கட்டைகளை கொண்டு நீராவியை உருவாக்கி அதன் மூலம் செல்லும் இந்த காரை ஸ்டார்ட் செய்வதற்கு குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும். காரில் பொருத்தப்பட்டிருக்கும் தொட்டிகளில் உள்ள தண்ணீர் மூலம் நீராவியை உற்பத்தி செய்து 20 மைல் (32 கிமீ) வரை செல்ல முடியும்.

20 மைல் தூரம் சென்றவுடன் மீண்டும் தண்ணீர் நிரப்பிக்கொள்ள வேண்டும். இந்த காரை பிரபல ஆர்எம் ஏல நிறுவனம் சமீபத்தில் ஏலம் விட்டது. குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.2.40 கோடி நிர்ணயிக்கப்பட்டது.இந்த கார் அதிகபட்சம் ரூ.10 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்ப்பதாக ஆர்எம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால், கணிப்புகளை பொய்யாக்கி இந்த கார் ரூ.22 கோடிக்கு ஏலம் போய் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

காரை ஏலத்தில் எடுத்தவர் ரன்எபவுட்டின் 5 வது உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்ஸ் வெயிட்டாக இருந்தால் மட்டும் போதும், தங்களது பார்ட்னர்கள் ஓவர் வெயிட்டா இருந்தாலும் கவலையில்லை பெரும்பாலான பெண்கள் கருதுவதாக ஆய்வு !


அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பியரி-ஆன்ட்ரே 'ஃபேட்டர் அட்ராக்ஷன்' என்னும் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அதில் பெரும்பாலான பெண்கள், அதிகம் சம்பளம் வாங்கும் ஆண்களாக இருந்தால் போதும், அவர்கள் ஓவர் வெயிட்டுடன், குண்டாக இருந்தாலும் அதை பெரிதுபடுத்துவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் 667 அமெரி்க்க தம்பதிகளிடம் கணக்கெடுப்பு நடத்தினார். அதில் ஆண்களைப் போன்று பெண்களும் தாங்கள் டேட் செய்ய விரும்பும் நபர் ஸ்லிம்மாகவும், பணக்காரராகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தெரிய வந்தது. ஆண்களும் சரி, பெண்களும் சரி தனது வாழ்க்கைத் துணை அழகாகவும், பணம் படைத்தவர்களாகவும் இருப்பதைத் தான் விரும்புகிறார்கள். அவர்கள் நல்ல உள்ளத்தைப் பார்க்கத் தவறுகின்றனராம்.

ஆண்கள் தங்கள் உடல் எடை எவ்வளவு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். பர்ஸ் கனமாக இருந்தால் டேட் செய்யும் ஆள் குண்டாக இருந்தாலும் பரவாயில்லை என்று பெண்கள் நினைக்கின்றார்களாம். இதற்காக எடை கூடும் போதெல்லாம் அலுவலகத்தில் சம்பளத்தை உயர்த்தியா கொடுக்க முடியும். முடியாதல்லவா அதனால் ஒழுங்காக உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறது அந்த ஆய்வு.

பொண்ணுங்களுக்கு்ததான் எவ்வளவு தாராள மனசு, பாருங்க ....!

எமிரேட்டில் 2 இந்தியர்களுக்கு மரணத் தண்டனை!


2 இந்தியர்களை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து, துபாய் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.கடந்த 2009ம் ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை செய்த 2 இந்தியர்கள் காணாமல் போயினர். போலீசாரின் விசாரணையில் அவர்களை 12 இந்தியர்கள், 1 பாகிஸ்தானியர் என மொத்தம் 13 பேர் சேர்ந்து கடத்தி சென்றது தெரிந்தது.

சட்ட விரோதமான வர்த்தகத்தில் ஏற்பட்ட மோதலில் பழிவாங்க கடத்தப்பட்ட அந்த 2 பேரையும், 13 பேர் கொண்ட கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. பின்னர் கும்பலை சேர்ந்த 5 பேர் 2 பேரையும் நிர்வணப்படுத்தி பாலியல் சித்திரவதையையும் செய்தனர். அதிலும் கோபம் அடங்காத அந்த கொடூர கும்பல் இறுதியில் அந்த 2 பேரையும் ஒரு குழியில் போட்டு தீயிட்டு எரித்து கொலை செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில், 2 பேருக்கு தூக்கு தண்டனையும், மற்ற 2 பேருக்கு 15 ஆண்டு சிறைவாசமும், மீதமுள்ள 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்குள் இருந்ததாக, வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

நேரு டெபாசிட் இழக்க வேண்டும் முதல்வர் ஜெ!


திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி,மு,க., வேட்பாளர் நேரு, டெபாசிட் இழக்கும்வகையில் ஓட்டளித்து மக்கள் அ.தி.மு.க.,வுக்கு அமோக ஆதரவளிக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்தேன். அப்போது, உங்களின் அமோக ஆதரவோடு வெற்றி பெற்று முதல்வரானேன். இங்கு அப்போது போட்டியிட்ட மரியம்பிச்சையையும் வெற்றி பெறச்செய்தீர்கள். அவரும் அமைச்சராக பொறுப்பேற்ற பின், துரதிஷ்டவசமாக விபத்தில் மரணமடைந்தார். ஆகையால், நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் பரஞ்ஜோதிக்காக ஓட்டு கேட்டு உங்களிடம் வந்துள்ளேன். பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் திட்டம், மீனவர்களுக்கு உதவித்தொகை உயர்வு, இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவையும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்-டாப் என, பல்வேறு நலத்திட்டங்களை ஆட்சிப்பொறுப்பேற்ற நான்கே மாதத்தில் செயல்படுத்தி வருகிறோம். அவற்றின் பயனை வாக்காளர்கள் அடைந்துள்ளனர். உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எங்களின் லட்சியம்.முந்தைய மைனாரிட்டி தி.மு.க., ஆட்சியில், தமிழகமே சூறையாடப்பட்டது. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருந்தது. ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியுள்ளேன். மின்வெட்டு படிப்படியாக குறைந்து வருகிறது. அடுத்த ஆண்டுக்குள், மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் வரும்.இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்காக முன்னாள் அமைச்சர் நேரு போட்டியிடுகிறார். அவர் பெயருக்கு பொருத்தமில்லாதவர். நேர்மாறாக செயல்படக்கூடியவர் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பினாமிகள் பெயரில் ஆயிரக்கணக்கில் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளார். இவ்விஷயத்தில், தன்னுடைய தலைவர் கருணாநிதி வழியையே நேரு பின்பற்றியுள்ளார்.

"சென்னையில் உள்ள நான்கரை ஏக்கர் தி.மு.க., தலைமை அலுவலகம் இடம் எப்படி வந்தது?' என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த இடம், தண்டையார் பேட்டை ஜமீனுக்கு சொந்தமானது. அந்த இடத்தை, 1972ல் சொத்து வரி கட்ட தி.மு.க., அரசு நிர்பந்தித்தது. நில உச்சவரம்பு சட்டத்தை காட்டியும் மிரட்டியது.அப்போது, ஜமீனின் இளைய மகன் சுப்புரத்தினம் நாயுடு சென்னை வரவழைக்கப்பட்டு, அந்த இடத்தை தி.மு.க.,வுக்கு கொடுத்து விடுமாறு மிரட்டப்பட்டார். இல்லாவிட்டால் நில உச்சவரம்பு சட்டம் பாயும் என்று மிரட்டினர். இதையடுத்து, சுப்புரத்தினம் அந்த இடத்தை தி.மு.க., அறக்கட்டளைக்கு கடந்த 1972ல் எழுதிக் கொடுத்தார்.அதன்பின், நில உச்ச வரம்பு சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அந்த சொத்துக்கு உரிமையாளரான, 10 பேரில் ஒருவர் மட்டுமே அந்த பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார். கடைசியில் சுப்புரத்தினத்துக்கு கூட அந்த இடத்தில் உரிமையில்லை. இதை நான் சொல்லவில்லை. சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது. அதே வழியில், திருச்சியில் நில அபகரிப்பு நடந்து, தி.மு.க., அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின், நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு அமைக்கப்பட்டது. நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க, 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

இதுவரை தமிழகம் முழுவதும், 17 ஆயிரத்து 431 புகார்கள் வந்துள்ளது. அதன் பேரில், 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 28 வழக்குகளில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 755 பேர் கைது செய்யப்பட்டு, 624 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பர்.தமிழகம் சுபிட்சமான பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது. வேட்பாளர் பரஞ்ஜோதி, உங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றித் தருவார். ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் நாடே போற்றி புகழும் திட்டங்களை செயல்படுத்தியதை கருத்தில் கொண்டு, நேருவின் அராஜக, அட்டூழியங்களுக்கு முடிவு கட்டவேண்டும். நேருவை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும்.அதேபோல், தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலும், வரும் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அடிப்படை வசதிகளை பெற அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, எம்.ஜி.ஆரின் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க கேட்டுக் கொள்கிறேன்.திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஜெயா மற்றும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார். 

மருத்துக் கல்லூரி மாணவர்களுக்கான புதிய தேர்வு முறைக்கு இடைக்காலத் தடை மதுரை உயர் நீதிமன்றம்


தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் எம்.பி.பி.எஸ். படிப்பில் 2010ம் ஆண்டு சேர்ந்தேன். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதலாமாண்டு தேர்வில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது.


முதலாம் ஆண்டில் அனாடமி, பிசியாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய 3 பாடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடத்திலும் 2 விதமாக தேர்வு நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 2 எழுத்துத் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுகள் தனித்தனியாக 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
அதேப்போல ஒவ்வொரு பாடத்திற்கும் செய்முறைத் தேர்வு, இன்டர்நெட் தேர்வு, வாய்மொழித தேர்வு ஆகியவை நடத்தப்படும். இதற்கு 200 மதிப்பெண்கள் அளிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.


இதில் அனைத்து தேர்வுகளையும் சேர்த்து சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். அதாவது மொத்தமுள்ள 400 மதிப்பெண்களுக்கு 200 மதிப்பெண் பெற்றால் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.ஆனால் தற்போதைய புதிய முறைப்படி 2 எழுத்துத தேர்வுகளும், செய்முறைத தேர்வு, வாய்மொழித் தேர்வு, இன்டர்நெல் தேர்வு ஆகியவை தனிததனியாக நடத்தப்படுகின்றன. மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு தேர்விலும் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவர் என்று பல்கலை அறிவித்துள்ளது.


5 தேர்வுகளில் ஒரு தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெறாவிட்டாலும் அவர் அந்த பாடப்பிரிவில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படுவர். இதனால் அந்த மாணவர் அனைத்துத் தேர்வுகளையும் மீண்டும் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் இன்டர்நெல் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பல்கலைக்கழகம் நடத்தும் செய்முறைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் பல்கலைக்கழகம் நிபந்தனை விதித்துள்ளது.இந்த கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.


இந்தியாவில் உள்ள வேறு எந்த மருத்துவப் பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற புதிய நடைமுறையை பின்பற்றாத போது தமிழகத்தில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகம் மட்டும் புதிய நடைமுறையை அமல்படுத்தி இருப்பது பாரபட்சமானது. இந்திய மருத்துவ கவுன்சில் நிபந்தனைகளுக்கு புறம்பானது.எனவே மருத்துவப் பல்கலை பதிவாளரின் புதிய தேர்வு முறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை 2ம் ஆண்டு வகுப்பில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


இதேப்போன்று மேலும் 22 மாணவர்கள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி டி. ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.மனுக்களை விசாரித்த நீதிபதி, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான புதிய தேர்வு முறைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் மனுதாரர்கள் 23 பேரையும் 2ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?


நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும்,இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம், தேஜஸ் குறைந்து விடும்.

வாக்காளர்களுக்கு வைகோ கடிதம்!


மறுமலர்ச்சி திமுகவின் 18 வருட அரசியல் போராட்டத்தை இரண்டே பக்கங்களில் வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கிறோம். இதைப் படிக்கும் எந்தவொரு வாக்காளரும் தேர்தல் களத்தில் நம்மை அலச்சியப்படுத்திவிட முடியாது. அதனால் இந்த கடிதம் தமிழகத்தில் பட்டி தொட்டிகளில் இருந்து கிராமங்கள், நகரங்கள், பெரு நகரங்கள் என எங்கும் நிறைந்திருக்கும் வாக்காளர்களை சென்றடைய வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த கடிதத்தைப் படிக்கும் உணர்வுள்ள தமிழர்கள் அத்தனை பேரும், நமக்கே வாக்களிப்பார்கள்'' என்று தொண்டர்களை ஊக்கப்படுத்தினார். 

அவமானப்படுத்திய பட அதிபர்கள் தங்கர்பச்சான் உருக்கம்!

செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில், பார்த்திபன் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்த படம், வித்தகன்'. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் 10.10.2011 அன்று காலை நடந்தது. பாடல்களை, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் வெளியிட்டார். 


இந்த விழாவில், டைரக்டர் தங்கர்பச்சான் கலந்துகொண்டு பேசியதாவது: 
இதுவும் கூட பரவாயில்லை. இன்று கூட மிகப்பெரும் தயாரிப்பாளராக இருக்கக்கூடிய மற்றொருவருக்கு முதல் ஆளாக  அழகி' படத்தை திரையிட்டு காண்பித்தேன். அவர் என்னிடம் எந்த கருத்தும் சொல்லாமல், தயாரிப்பாளரை அழைத்தார்.   தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். செலவு செய்த பணம் இதோடு போகட்டும். இந்த படத்தை ரிலீஸ் செய்தால், மேலும் ரூ.50 லட்சம் தேவைப்படும். உங்களுக்கு போஸ்டர் காசு கூட திரும்பி வராது. இதை இப்படியே விட்டுவிட்டு ஊருக்கு ஓடிவிடுங்கள்'' என்று கூறிவிட்டு சென்றார்.
தயாரிப்பாளராகவும், மிகப்பெரிய இயக்குனராகவும் இருக்கக்கூடிய ஒருவர் படம் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை கூட பேச விரும்பாமல், முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார். 

நான் இயக்கிய அழகி' படம், ஒரு கோடியே எழுபது லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பாளர் பாதி விலைக்கு விற்க முன்வந்து, அந்த படத்தை 120 முறை திரையிட்டு காண்பித்தும் யாரும் வாங்க முன்வரவில்லை. அது கூட பரவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டும். என்னை அவர்கள் அவமானப்படுத்தியது போல், அவர்களின் பெயர்களை சொல்லி நானும் அவமானப்படுத்த விரும்பவில்லை. 


இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த துறையில் இருக்கிறார்கள். ஆனால் என்னை அவமானப்படுத்தியவர்களின் கணிப்பை எல்லாம் மீறி,  அழகி' படம் எவ்வளவு பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது என்று உங்களுக்கே தெரியும். 
தோல்வியை அனுபவித்தவனுக்குத்தான் வெற்றிகளை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது புரியும். வித்தகன் திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.'' இவ்வாறு தங்கர்பச்சான்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...